Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்காட்லாந்த் வாக்காளர்கள் பிரிவினையை நிராகரித்தனர்

Featured Replies

140919053811_scotland__624x351_ap.jpg

தம் தரப்பு வெற்றியை கொண்டாடும் வாக்காளர்கள்

ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.42% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.58% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன.

ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களில் 31 உள்ளூராட்சிப் பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளியாகிவிட்டன. இறுதி முடிவுகளின்படி ஸ்காட்லாந்த் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லக்கூடாது என்று 1,914,187 பேரும் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று 1,539,920 பேரும் வாக்களித்திருந்தனர்.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்ததைவிட, பிரிவினையை எதிர்ப்பவர்களின் வாக்கு சதவீதம் சுமார் 3 சதவீதம் அதிகரித்திருப்பதை இறுதிமுடிவுகள் காட்டுகின்றன.

நேற்று வியாழக்கிழமை ஸ்காட்லாந்து முழுவதும் நடந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குப்பதிவில் சுமார் 80 சதவீதத்துக்கு மேலானோர் வாக்களித்துள்ளனர் என்று முன்னதாக வந்த வாக்குப்பதிவு விவரங்கள் தெரிவித்தன.

கருத்தறியும் வாக்கெடுப்பு நடந்து முடிந்த பின்னர் வெளியான யுகவ் நிறுவன எக்ஸிட் வாக்கெடுப்பு ஒன்று பிரிந்து போகவேண்டாம் என்ற தரப்புக்கு 54 சதவீத ஆதரவும், சுதந்திரம் கோரும் தரப்புக்கு 46 சதவீத ஆதரவும் இருப்பதாகக் கூறியது.

http://www.bbc.co.uk/tamil/global/2014/09/140919_scotvotesfinal.shtml

  • தொடங்கியவர்

ஸ்காட்லாந்து பிரிவினை: தனது தோல்வியை ஏற்றுக்கொண்டார் அலெக்ஸ் சால்மண்ட்

 

 

140919053102_cn_indyref_salmond_defeat_6

அலெக்ஸ் சால்மண்ட்

பிரிட்டனிடமிருந்து பிரிந்து செல்லவேண்டும் என்பதற்கான தனது முயற்சிக்கு நடந்து முடிந்த பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தோல்வி கிடைத்திருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், ஸ்காட்லாந்தின் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்த சுமார் 16 லட்சம் வாக்காளர்கள், எதிர்காலத்தில் ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்கான வலுவான அடித்தளமாக அமைவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்காட்லாந்த் வாக்காளர்கள் பிரிவினைக்கு எதிராக வாக்களித்தால் ஸ்காட்லாந்துக்கு மேலதிகமாக கூடுதல் அதிகாரங்களை அளிப்போம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதியளித்திருக்கும் பிரிட்டனின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளும் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2014/09/140919_alexonscotvote.shtml

  • கருத்துக்கள உறவுகள்

கேம்ரூன் இது பற்றி கூறுகையில்..

 

இந்த வாக்கெடுப்பை நாங்கள் நடக்காமலே தடுத்திருக்க முடியும். ஆனால் ஸ்காட்லாந்து தேசிய கட்சிக்கு கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் வழங்கிய பெரும்பான்மைக்கு மதிப்பளித்து.. ஜனநாயக பெறுமதி காக்கும் நாம்.. இந்த தேர்தலுக்கு வழி சமைத்தோம். அதற்கு இப்போது ஸ்காட்லாந்து மக்கள் பதில் அளித்திருக்கிறார்கள். தொடர்ந்து நாம் ஐக்கிய இராச்சியமாக பயணிப்போம்.. சாதிப்போம் என்று கூறியுள்ளார்.

 

சராசரியாக.. 1.6 மில்லியன் மக்கள் சுதந்திர ஸ்காட்லாந்து ஆம் என்றும்.. 2 மில்லியன் மக்கள் இல்லை என்றும் சொல்லி வாக்களித்துள்ளனர்..!

 

--------------------

 

சிறீலங்காவில்.. பல தசாப்தங்களாக தமிழர்கள் தொடர்ந்து சிங்களப் பெரும்பான்மை கட்சிகளை நிராகரித்து.. பிராந்திய கட்சிகளை ஆதரித்து வாக்களித்து வருகின்ற போதும்.. சிங்கள அரசு வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின்  ஜனநாயக உரிமையை மதித்து.. ஒரு ஜனநாயக் கருத்துக் கணிப்பை சுதந்திரம் வேண்டுமா.. வேண்டாமா என்று நடத்த முன் வந்ததில்லை.

 

அந்த வகையில்.. கனடாவில் கியூபெக்.. ஐக்கிய இராச்சியத்தில் ஸ்காட்லாந்து.. போன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பை ஒத்த இன்றை இலங்கையின் வடக்குக் கிழக்கில் நடத்தி அங்குள்ள மக்களின் ஜனநாயக விருப்பை சர்வதேசம் அறிய அந்த மக்களுக்கும் இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க... சர்வதேசம் முன்வர வேண்டும்...! செய்யுமா..?????! :icon_idea:


மேலும் செய்திகள் மற்றும் தலைவர்களின் செய்திகள் இங்குள்ளன...

 

http://www.bbc.co.uk/news/uk-scotland-29270441

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறீலங்காவில்.. பல தசாப்தங்களாக தமிழர்கள் தொடர்ந்து சிங்களப் பெரும்பான்மை கட்சிகளை நிராகரித்து.. பிராந்திய கட்சிகளை ஆதரித்து வாக்களித்து வருகின்ற போதும்.. சிங்கள அரசு வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின்  ஜனநாயக உரிமையை மதித்து.. ஒரு ஜனநாயக் கருத்துக் கணிப்பை சுதந்திரம் வேண்டுமா.. வேண்டாமா என்று நடத்த முன் வந்ததில்லை.

 

அந்த வகையில்.. கனடாவில் கியூபெக்.. ஐக்கிய இராச்சியத்தில் ஸ்காட்லாந்து.. போன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பை ஒத்த இன்றை இலங்கையின் வடக்குக் கிழக்கில் நடத்தி அங்குள்ள மக்களின் ஜனநாயக விருப்பை சர்வதேசம் அறிய அந்த மக்களுக்கும் இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க... சர்வதேசம் முன்வர வேண்டும்...! செய்யுமா..?????! :icon_idea:

 

 

இன்னும் சிறிது காலத்தில், உங்கள் கோரிக்கையை சிறீலங்கா அரசு நிச்சயம் நிறைவேற்றும் அதில் சந்தேகமில்லை. ஏனெனில் இலங்கை சுதந்திரம் அடைந்தபின்னர் அரச, இராணுவ ஆதரவுடன் குடியேற்றப்பட்ட, குடியேற்றப்படும் அரசுக்கு ஆதரவானவர்கள் தொகை அங்குள்ள தமிழர்களை மிஞ்சிவிடும். :(  :o
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..! எப்படியோ நல்லா வாழ்ந்தால் சரி... :(

"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை" என நமக்கு நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். :icon_idea:

ம்ம்..! எப்படியோ நல்லா வாழ்ந்தால் சரி... :(

"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை" என நமக்கு நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். :icon_idea:

 

இந்திய இலங்கை நாடுகளோடு ஒப்பிட்டால் ஸ்கொட்லாந்து மக்கள் இப்போது பிரித்தானியாவுடன் சேரந்திருக்கும் போதே சுதந்திரமாகவே வாழ்கின்றனர். ஏன் சொல்லப்போனால் அவ்வாறு ஒப்பிடுவதே மகா  அபத்தம்.  இலங்கையை விடுங்கள் மேற்கு நாடுகளில் தேசிய இனங்களுக்கு அவர்கள் கொடுதிருக்கும் கெளரவத்தில் நூறில் ஒரு பங்கை கூட இந்திய சுயாட்சி கொடுக்கவில்லை. (சுதந்திரம் என்பது மற்றவரின் உரிமையை அங்கீகரிப்பது. எவராலும் கொடுக்கப்படுவதில்லை என்பதே உண்மை)

 

ஸ்கொட்லாந்து மக்கள் தம்  பூரண சுதந்திரத்தை பாது காத்து கொண்டு சுதந்திரமாக பிரிட்டனுடன் இணைந்திருக்க விரும்புகிறார்கள். தமது சுதந்திரத்தை அடகு வைத்து அடிமை வாழ்க்கை வாழ விரும்பவில்லை என்பதே உண்மை.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாண்ட் பிரிந்து செல்வதற்கான காரணங்கள் வலுவில்லாதவை.
பிரிந்து செல்ல வேண்டாம் என வாக்களித்தவர்களால் பிரித்தானியாவின்

பொருளாதார வீழ்ச்சி காப்பாற்றப்பட்டுள்ளது.

வேண்டாப் பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பது மாதிரி

இவர்களுடைய ஒற்றுமை பல காலம் நீடிக்குமா என்பது கேள்விக்குறியே

  • கருத்துக்கள உறவுகள்

சரியான தீர்ப்பாகவே தெரிகிறது

 

ஒற்றுமையே  பலமானது..

இது சிங்களத்துக்கு தெரிந்திருந்தால்

இலங்கை  இன்று சிங்கப்பூரிலும் வளமாக அழகாக இருக்கும்..

 

 

இந்த தேர்தல் மொழி / சமய அடிப்படையில் இல்லாமல் பொருளாதாரம் , வணிகம் , போன்ற நடைமுறையை வைத்து முன்வைக்க பட்ட ஒரு தேர்தல் ....Ireland இல் இப்படி நடக்குமா என்பது சந்தேகமே ......

  • கருத்துக்கள உறவுகள்
அந்த வகையில்.. கனடாவில் கியூபெக்.. ஐக்கிய இராச்சியத்தில் ஸ்காட்லாந்து.. போன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பை ஒத்த இன்றை இலங்கையின் வடக்குக் கிழக்கில் நடத்தி அங்குள்ள மக்களின் ஜனநாயக விருப்பை சர்வதேசம் அறிய அந்த மக்களுக்கும் இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க... சர்வதேசம் முன்வர வேண்டும்...! செய்யுமா..?????!
புலிகள் மட்டுமதான் ஜனநாயத்துடன் நடந்திருக்க வேண்டும் :D
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கு ஆதரவாக 16 இலட்சம் மக்களும் எதிராக 20 இலட்சம் மக்களும் வாக்களித்திருக்கிறார்கள். பிரித்தானியாவின் எதிர்கால நடவடிக்கைகள் ஆம் என்று வாக்களித்தவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய விட்டால் பிரிவினைக்கு ஆதரவானர்களின் கை ஓங்கும். எது எப்படியோ இப்படி ஒரு வாக்கெடுப்பை நடத்தத் துணிந்த பிரதமர் டேவிட் கமரோனின் அரசியல் நேர்மை பாராட்டுதற்குரியது.இது போன்ற ஒரு வாக்கெடுப்பை தமிழர் தாயகத்திலும் நடத்த சர்வதேசம் சிறிலங்காவுக்கு அ்உத்தம் கொடுக்க முன் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=LbJif7vISQg

சிறீலங்கன் ஸ்டைல் ஜனநாயகமா பிரித்தானியாவிலும்?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் நேர்மையாக நடந்திருக்கும் என தொடக்கத்தில் இருந்தே நம்பவில்லை. ஒரு கண்துடைப்பை நடாத்தியுள்ளார்கள் போலுள்ளதே.!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந்து வாக்கெடுப்பு மாதிரி....
ஸ்ரீலங்காவில் இருந்து.... ஈழம் பிரிய வேண்டுமா? இல்லையா? என்று வாக்கெடுப்பு நடத்த,

மகிந்த முன் வருவாராக.... இருந்தாலும், இல்லை என்றே... பலரும் வாக்களிப்பார்கள்.
 

ஆனபடியால்,  சூட்டோடு சூடாக...... உடனே வாக்கெடுப்பு நடத்த, மகிந்த தயாரா?

என்று..... "ஐஸ் பக்கெட்"  சாலஞ்ச் விடுகின்றேன்.  :icon_idea:

 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.