Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலால் தமிழருக்கு பயனில்லை! தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன்!!

Featured Replies

 

இலங்கையின் கடந்த கால வரலாறுகளின் படி ஜனாதிபதி தேர்தல்களில் அரசியல் தலைவர்களை மாற்றுவதும் அரசுகளை மாற்றுவதும் மட்டுமே தமிழ் மக்களிற்கு எஞ்சியிருந்ததேயன்றி வேறு எதுவுமே கிட்டியிருக்கவில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன்.

kumarakuruparan01.png

தமிழ் சிவில் சமூக அமையம் அமைப்பு வடிவம் பெற்றுள்ளமை தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றிருந்தது.

அங்கு ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் ஆனால் அதற்காக அரசாங்க மாற்றத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் எதிரானதென்று அர்த்தப்படமுடியாதென மேலும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் இது பற்றி தெரிவிக்கையில் ஆட்சி மாற்றத்தினாலோ அரசியல் தலைவர்களை மாற்றுவதினாலோ எமக்கு என்ன பலன் கிடைத்துவிடப்போகின்றதெனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

 

எம்மை பொறுத்தவரை முதன்மையானது பொறுப்புக்கூறலே. கடந்த காலங்களினில் இத்தகைய நேரங்களில் தான் எம்மீது மோசமான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது. இதனை மனதிலிருத்தி முதலில் எமது பிரச்சினைகளை நாம் முன்னிறுத்தி குரல்கொடுக்க வேண்டும். மன்னாரில் கூட்டுக்கொலை செய்யப்பட்ட முன்னாள் போராளி நகுலேஸ்வரனிற்கு நீதி கேட்பதனைவிட அடுத்த எதிர்கட்சி பொது வேட்பாளர் யாரென்பதிலேயே நாமும் எமது ஊடகங்களும் முனைப்பு காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை தமிழ் தரப்பு எவரிற்கு ஆதரவளிக்கின்றதோ அவர்கள் பெரும்பான்மை மக்களிடையே தோல்வி பெறுகின்ற அரசியல் போக்கே 2005ம் ஆண்டின் பின்னரான சூழலில் இருப்பதனையும் அவர் நினைவு கூர்ந்தார்.

 

இவ்வூடக மாநாட்டில் மற்றொரு ஊடக பேச்சாளரான எழில் ராஜனும் பிரசன்னமாகியிருந்தார்.

 

தமிழ் சிவில் சமூக அமையத்தின் அழைப்பாளராக மன்னார் ஆயர் அதிவண கலாநிதி இராயப்பு ஜோசப் மற்றும் இணை செயலாளர்களாக பொ.ந.சிங்கம் மற்றும் தியாகராஜன் ராஜன் மற்றும் பொருளாளராக பேராசிரியர் வி.பி.சிவநாதனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

கடந்த ஜந்து வருடங்களாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு வழிகளில் குரல்கொடுத்து வந்த தமிழ் சிவில் சமூக வலையமைப்பு தமிழ் சிவில் சமூக அமையம் எனும் பெயரில் அமைப்பு வடிவம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிற்குமான அமையத்தின் இணைப்பாளர்களும் வடக்கு கிழக்கிற்கு வெளியேயான மாவட்டங்களிற்கு ஒரு இணைப்பாளரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

http://www.pathivu.com/news/35522/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

குருபரன், சொன்னது சரி,
அவங்க, கச்சேரி நடத்துறாங்க,
நாம, ஆவெண்டு... பாக்க வேண்டியது தான்.

 

புலி, உயிர்ப்புடன்.. இருந்திருந்தால்.... இந்தக் கச்சேரியே.... நடந்திருக்காது.
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு இத்தேர்தலினால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை ஏற்ருக்கொள்ள முடியாது.

 

இத்தேர்தலில் தமிழர்கள் எப்படிச்செயற்படப்போகிறார்கள் என்பதை நாம் ஏற்கனவே தீர்மானிக்கவேண்டும்.

 

தமிழர்கள், இத்தேர்தலின்மூலம் உலகுக்கு ஒரு செய்தியைக் கூறவிரும்பினால் மகிந்தவுக்கு எதிராகத் தங்கள் வாக்குகளைப்பயன்படுத்துவதன்மூலமே அச்செய்தியக்கூறலாம்.

 

அது எதுவெனில் மகிந்த ராஜபக்ஸ போர்க்குறவாளி என்பதையும் அவர் தண்டிக்கப்படவேண்டியவர் என்பதையும் இத்தேர்தலின்மூலம் கூறலாம்.

 

மகிந்த இத்தேர்தலின்மூலம் தூக்கியெறியப்படுவாராகவிருந்தால் சர்வதேசத்தின்முன் எம்மால் முன்வைக்கப்படும் போர்க்குற்றம் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கான பிரதான பங்காளியை, அவருக்கான எதுவித சட்டப்பாதுகாப்பு இன்றியே எதிர்கொள்ளலாம்.

 

நாம் செல்லவேண்டியதூரம் மிகவும் நெடிது ஆனால் இவர் தற்போதையகாலகட்டத்தில் பதவியில் இல்லாதிருந்தால் ஒரு சிறிய தூரத்தையாவது இலகுவாக்கடந்துவிடலாம், இதன்மூலம் எதிர்காலத்தின் எமது பயணங்களின் சலிப்புத்தன்மையை எம்மால் குறைத்துக்கொள்ளமுடியும்.

 

மேலும் இவர்கள் பதிவியில் இல்லாதவேளை சிலசமயம் போர்க்குற்றத்துக்கான விசாரணைகளுக்கு முகம்கொடுப்பார்களேயானால் இவர்களே ஏனைய போர்க்குற்றம் மற்ரும் இனவழிப்பை முன்னின்று நடாத்தியவர்களை முன்மொழியக்கூடிய சந்தர்ப்பங்களும் வரலாம். 

தமிழர்களுக்கு இத்தேர்தலினால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை ஏற்ருக்கொள்ள முடியாது.

 

இத்தேர்தலில் தமிழர்கள் எப்படிச்செயற்படப்போகிறார்கள் என்பதை நாம் ஏற்கனவே தீர்மானிக்கவேண்டும்.

 

தமிழர்கள், இத்தேர்தலின்மூலம் உலகுக்கு ஒரு செய்தியைக் கூறவிரும்பினால் மகிந்தவுக்கு எதிராகத் தங்கள் வாக்குகளைப்பயன்படுத்துவதன்மூலமே அச்செய்தியக்கூறலாம்.

 

அது எதுவெனில் மகிந்த ராஜபக்ஸ போர்க்குறவாளி என்பதையும் அவர் தண்டிக்கப்படவேண்டியவர் என்பதையும் இத்தேர்தலின்மூலம் கூறலாம்.

 

மகிந்த இத்தேர்தலின்மூலம் தூக்கியெறியப்படுவாராகவிருந்தால் சர்வதேசத்தின்முன் எம்மால் முன்வைக்கப்படும் போர்க்குற்றம் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கான பிரதான பங்காளியை, அவருக்கான எதுவித சட்டப்பாதுகாப்பு இன்றியே எதிர்கொள்ளலாம்.

 

நாம் செல்லவேண்டியதூரம் மிகவும் நெடிது ஆனால் இவர் தற்போதையகாலகட்டத்தில் பதவியில் இல்லாதிருந்தால் ஒரு சிறிய தூரத்தையாவது இலகுவாக்கடந்துவிடலாம், இதன்மூலம் எதிர்காலத்தின் எமது பயணங்களின் சலிப்புத்தன்மையை எம்மால் குறைத்துக்கொள்ளமுடியும்.

 

மேலும் இவர்கள் பதிவியில் இல்லாதவேளை சிலசமயம் போர்க்குற்றத்துக்கான விசாரணைகளுக்கு முகம்கொடுப்பார்களேயானால் இவர்களே ஏனைய போர்க்குற்றம் மற்ரும் இனவழிப்பை முன்னின்று நடாத்தியவர்களை முன்மொழியக்கூடிய சந்தர்ப்பங்களும் வரலாம். 

 

போர் குற்ற விசாரணை என்பது மகிந்தவுக்கு எதிரானது அல்ல அது முழு சிங்கள தேசத்துக்கும் எதிரானது. எனவே மகிந்த இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன அது நடக்க வேண்டும், இதை நாம் மகிந்தவுக்கு எதிரானதாக மாற்றினால் இது ஏதோ தமிழனுக்கும் மகிந்தவுக்கும் எதிரான பிரச்சானையாக மாறி விடும், சிங்களவன் 66 வருடமாக செய்த அக்கிரம் எல்லாம் மறைந்து விடும்

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு சொல்வது 100% உண்மை.

பெரிய புத்திஜீவி என பீத்திகொள்ளும் குமரகுருபரனுக்கு இந்த சின்ன விடயம் புரியலியா?

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவை தோற்கடித்து மைத்திரிபாலா ஜனாபாதியாக வந்தால் முதல் வேலையாக ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பாரா? இதைத் தான் மகிந்தா முதலில் ஆட்சிக்கு வ்ரும் போது சொன்னார். மகிந்தாவை வென்ட பச்சை இனவாதி மைத்திரி.அவரது முகத்தைப் பார்த்தாலே சொல்லலாம்.அது மட்டும் இல்லாமல் குள்ள நரிகளான ரணிலும்,சந்திரிக்காவும் அவருடன் சேர்ந்திருப்பது தமிழ்ர்களுக்கு நல்லதில்லை என்பது எனது கருத்து.மகிந்தா திரும்பவும் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு எதிராக பெரிதாக ஒன்றும் செய்ய மாட்டார். செய்ய வேண்டியதெல்லாம் ஏறகனவே அவர் செய்திட்டார்.மைத்திரி அரசுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக தமிழர்கள் அவதானமாக இருப்பது நல்லது.

மகிந்தா பதவியில் இல்லா விட்டால் தான் அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்கலாம் என்பது சிலரின் கருத்து.அவருக்கு தண்டனை வாங்கி கொடுத்தவுடன் தமிழர்களது பிரச்சனை தீர்ந்து விடுமா?...திரும்பவும் மகிந்தா ஆட்சிக்கு வந்தால் சிங்கள் மக்களே அவர்களுக்கு எதிராக புரட்சி செய்யத் தொடங்குவார்கள்...அப்படி ஒரு நேரத்திற்காக தமிழர்கள் காத்திருப்பது நல்லது.

மைத்திரியை மகிந்தாவுக்கு எதிராக கொண்டு வந்ததன் பின்னனியில் நோர்வேயும்,சொல்கையும்,அமெரிக்காவும் இருக்கலாம்.அதனால் அவர்களுக்குத் தான் லாபவே தவிர தமிழர்களுக்கு அல்ல.என்னைப் பொறுத்த வரையில் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள் தான்.மு.வாய்க்கால் அழிவை தடுக்க கூடிய் வசதி இருந்தும் தாங்கள் இலங்கையில் காலுன்ற வேண்டும் என்பதற்காக வேடிக்கை பார்த்ததோடு,சிங்களவர்களுக்கு உதவியும் செய்தார்கள்.மகிந்தா இவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்டவுடன் ரனிலின் வாலைப் பிடிக்கிறார்கள்.

எது எப்படியுருந்தாலும் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம். மைத்திரி தேர்தலில் இருந்து விலகலாம்.யாராவது கொல்லப்படலாம்?.தேர்தல் நின்று போகலாம்...என்னைப் பொறுத்த வரை மைத்திரி தேர்தலில் வென்டாலும் கூட மகிந்தாவுக்கு போர்க் குற்றவாளி எனச் சொல்லி தண்டனை வாங்கி கொடுக்க விடவே மாட்டார்கள்.சிங்களவர்கள் இந்த விசயத்தில் எல்லாம் நல்ல ஒற்றுமை தமிழர்கள் மாதிரி இல்லை.

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

ராமன் ஆண்டான்ன ராவணன் அன்டான்னா நமோருக்கொரு கவலையில்லை .... தமிழர்களின் நிலை மாறபோவதில்லை என்பதுதானே நிதர்சனம்.  

இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு சில முன்னேற்றகரமான‌ மாற்றங்களைக் கொண்டுவரலாம். மைத்திரிபாலவை மேற்கு நாடுகளும் இந்தியாவும் மறைமுகமாக அங்கீகரித்ததன் மூலம் இலங்கையின் சிங்கள இனவாதத்தின் சக்தியை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது தெரிகிறது.
 
மகிந்த தோற்றுப் போனால் நிச்சியமாக ஓரளவுக்கேனும் தமிழருக்கு பயனுள்ள ஒரு தேர்தலாக அமையும்.  
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தோற்றால் மகிந்தமீது போர்க்குற்ற விசாரணையைத் துவக்க ஏதுவாக இருக்கலாம்.ஆனால் மகிந்த மட:டும்தான் போர்க்குற்றவாளி மகிந்தவை மாட்டிவிட்டு மற்றவர்கள் தப்ப நினைக்கிறார்கள். ஆனால் மகிந்த அவர்களையும் மாட்டி விடுவார்.சந்திரிகாவும் ,சர்தும் ஏன் ரணில் அரசாங்கத்தில் அங்கம்' வகித்த பொழுது கூட தமிழ்இனப்படுகொலைகள் நடந்தன அதற்கு உரிய பொறுப்பாளிகள் தப்பிக்கப் போகிறார்களா?மைத்திரிபால வந்தால் வடக்குக் கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படுமாஃ? நிச்சயமாக நடக்காது .இன்று மகிந்தவுக்கு எதிராக அணிசேர்ந்தவர்கள் மகிந்தவின் குடும்ப ஆட்சியை எதிர்த்து அரசியல் செய்கிறார்களே ஒழிய தமிழ்மக்களின் இனப்பிரச்சினை பற்றி யாராவது பேசுகிறார்களா?ஃஇதற்குள் ததே கூட்டமைப்பு தாங்ளும் அவர்களுடன் பேசி தாங்கள் யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிக்கப் போகிறார்களாம்.மகிந்தவின் எதிர்தரப்பில் உள்ளவர்கள் எல்லாம் பச்சை இனவாதிகள்.தமிழ்மக்களுக்கு(இருபகுதியாலும்)இவர்களால் எந்தப் பயனும் இல்லை.

அமெரிக்கா தீர்மானத்தை எதிர்த்த நபர்

எனது கட்டுரைகளுக்கு தேவையான தகவல்களை எப்பொழுதும் மிகவும் கவனமாக ஆராய்ந்து பெற்றுக் கொள்வது வழமை. இப்படியாக ஆராயும் வேளையில், கடந்த அமெரிக்கா தீர்மானத்தை எதிர்த்த சில நபர்கள் பற்றிய பல தகவல்களை பெற்றுக் கொண்டேன்.

தற்பொழுது, இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையில் பெரும் போட்டி காரணமாக, இவர்களை மாறி மாறி ஜனதிபதி ராஜபக்சவுடன் நெருங்கி வியாபாரம் செய்பவர்களாக குற்றம் சாட்டப்படுகிறது. என்னை பொறுத்த வரையில், இவர்கள் இருவரும் வியாபாரிகள், நிச்சயம் லாபம் பெரிதளவு காணப்படும் இடத்தில் தமது வியாபாரத்தை செய்வார்கள். இதை அரசியலாக மாற்றுவதற்கு முன், தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை பற்றி மிக தீவிரமாக பேசுபவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

சில தமிழர்கள், இவ் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றை, புலம்பெயர் வாழ் மக்கள் அறவே புறக்கணிக்க வேண்டுமென மிகவும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சி, இவ் தொடர்பு நிறுவனத்திடம் நிதி உதவி பெற்று செயற்படுவதாக அறியப்படுகிறது. அப்படியானால், “மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும்” காட்டும் இரட்டை நாக்கு, இரட்டை வேடம், இவ் அரசியல் கட்சிக்கு தேவையா?

இணையத் தளங்களில் பிரசுரமாகும் படங்களை, பலர் மிகவும் அவதானமாக பார்ப்பதில்லை! அப்படியானால், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள, முதலாவது படத்தில் காணப்படுபவர் யார்? என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும். (படம் இலக்கம் - 1)

kiruba-001.jpg

 

யாழ் சிவில் அரங்கு

யாழ்ப்பாணத்திலிருந்து இயங்குவதாக கூறப்படும் யாழ்ப்பாண சிவில் அரங்கு என்பது யாரால் எப்பொழுது எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?

இக்கேள்வியை கேட்பதற்கான முக்கிய காரணம், இவ் சிவில் அரங்கில் நூற்றுக்கு மேற்பட்ட அமைப்புக்கள் உள்ளதாக கூறப்பட்ட பொழுதிலும், வெளிநாடுகளில் நடைபெறும் மாகாநாடுகள், கூட்டங்களுக்கு, ஒரு நபர் மட்டுமே கலந்து கொள்கிறார்.

அது மட்டுமல்லாது, தமிழ் தேசிய கூட்டமைபிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர்கள் கலந்து கொள்ளும் மாகாநாடுகள், கூட்டங்களில் மட்டுமே சிவில் அரங்கின் பிரதிநிதி கலந்து கொள்வது மட்டுமல்லாது, அவர்களது அரசியல் நிலைப்பாட்டிற்கு, சிவில் அரங்கின் பிரதிநிதி வக்காளத்து வாங்குவதையும் நாம் பல இடங்களில் அவதானிதுள்ளோம்.

இவ் யாழ்ப்பாணத்து சிவில் அரங்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதா?

ஆகையால் இவ் விடயத்தில் ஓர் தெளிவான கருத்தை, நிலைப்பாட்டை மக்கள் தெரிந்து கொள்வதற்காக உரியவர்கள். தமிழ் தேசிய கூட்டமைபிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர், தமது மௌனத்தை கலைத்து உண்மைகளை கூறுவார்களா?;.

இதேவேளை ஓர் சிவில் அரங்கின் அங்கத்தவர், எப்படியாக ஒருவரது அரசியல் சிந்தனைக்கு வக்காளத்து வாங்க முடியும்? இப்படியான நடவடிக்கைகளால் தான் ராஜபக்சா அரசு> இன்று புலம் பெயர் நாட்டில் உள்ள, சாத்வீக சமாதான அமைப்புக்களை, பயங்கரவாத அமைப்புக்களென கூறி தடை செய்துள்ளதுடன் நியாயப்படுத்துகிறது.

இக்கட்டுரைக்கு ஆதாரமாக மேலும் இரு படங்களை இத்துடன் இணைத்துள்ளேன் - (இலக்கம் 2, இலக்கம் 3)

kiruba-002.jpg

kiruba-003.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர் இப்படங்களிற்கு, சளாப்பல் அற்ற, மக்கள் ஏற்க கூடிய சரியான விளக்கத்தை கொடுப்பார்களென நம்புகிறேன்.

இப்படியான பின்னணிகளை 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டிருந்த நபர்கள் தான், தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கும், தமிழ் தேசியத்திற்கும் குரல் கொடுக்கப் போகிறார்களா? இவர்கள் மக்களுக்கு சினிமா காட்டுகிறார்களா?.

தமிழ் தேசிய கூட்டமைப்பை யார் பிரித்தார்கள்? எதற்காக பிரிக்கப்பட்டது? என்பவற்றை மக்கள் இன்றுடன் மிக தெளிவாக விளங்கிக் கொள்வாரகளென நம்புகிறேன்.!

இதே இடத்தில் ஓர் முக்கிய கேள்வி மனதில் தோன்றுகிறது. யுத்தவேளையில், இவ் நபர் என்ன செய்தார்? இவருடைய சிந்தனை, கருத்து, செயற்பாடுகள் யாவும் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருந்தாரா என்பதை, மக்கள் இவர்களிடமிருந்து கேட்டு அறிய வேண்டும். இக் கேள்விகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர் பதில் கொடுப்பார்களா?

இவ் விடயத்தில், அடுத்த கட்டுரைக்கான போதிய தகவல்கள், ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளது என்பதை சகலருக்கும் அறியத் தருகிறேன்.

புலம்பெயர் வாழ் அமைப்புகளுக்கு தடை

கடந்த ஏப்ரல் மாதம், புலம்பெயர் தேசத்தில் இயங்கும் 16 தமிழ் அமைப்புகளும், 424 தனி நபர்களும், சிறிலங்கா அரசினால், ஐ. நா. பாதுகாப்பு சபை பிரேரணை, 1373க்கு கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாம்!

தடைசெய்யப்பட்ட 16 அமைப்புக்களில், ஐந்து அமைப்பு (தமிழீழ விடுதலை புலிகள், தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழர் புனர்வாழ்வு கழகம், உலகத் தமிழ் அமைப்பு, உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு) தவிர்ந்த மற்றைய அமைப்புக்கள் யாவும் மிக அண்மையில் உருவாக்கபட்டவை.

அடுத்து, தடைசெய்யப்பட்ட 16 அமைப்புக்களும், 424 தனி நபர்களும், வெளிநாடுகளிலேயே வாசிக்கிறார்கள் அல்லது அமைந்துள்ளது.

ஐ. நா. பாதுகாப்பு சபையின் பிரேரணை 1373 என்ன கூறுகின்றதென ஆராய்வோமானால், “எல்லா நாடுகளும்” இணைந்த நடவடிக்கையென கூறப்படுகிறது.

UN Document

அப்டியானால், இவ் அமைப்புக்களோ அல்லது நபர்களோ, ஏதாவது சர்வதேச பயங்கரவாதத்திற்கு துணை போயிருந்து, சர்வதேச சமாதானத்திற்கும் பாதிப்பை உண்டு பண்ணக்கூடியவர்களா இருந்திருந்தால், அவர்கள் நிலை கொண்ட நாடுகளினால் முதலில் இவர்கள் தடை செய்யப்பட்டிருப்பார்கள். அல்லது, இவ் அமைப்புக்களையோ அல்லது தனி நபர்களையோ தடை செய்யும் முன்னர், சிறிலங்கா அரசு, இவர்கள் நிலை கொண்டிருக்கும் நாடுகளை கலந்து ஆலோசிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்படியாக ஒன்றும் நடந்திருக்காத நிலையில், தடைசெய்யப்பட்ட அமைப்போ அல்லது தனி நபரோ, ஒழுங்கான சட்ட ஆலோசனைகளை பெற்று, இவ் தடை மீது நடவடிக்கை எடுக்க முன்வருவார்களெயானால், இவ்விடயத்தை தலைகீழாக மாற்றக் கூடிய நிலை உருவாகலாம்.

இவ் விடயத்தில், ஐ.நா.சாசனத்தின், அத்தியாயம் 7ல், சாரம் 39லிருந்து 51 வரை, கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். http://www.un.org/en.../chapter7.shtml

நீதிமன்றம் செல்ல விரும்பாதோர், இவ்விடயத்தை ஐ.நா.மனித உரிமை குழுவிடம், பாதிக்கப்பட்டவர்கள் (தடை செய்யப்பட்டவர்கள்) என்ற அடிப்படையில், முறையீடு செய்ய தகுதியுடையவர்கள். இதற்கு எந்தவித நிதியும் தேவையில்லை.

http://www.tchr.net/...information.pdf

(Model complaint form for communications under)

Optional Protocol to the International Covenant on Civil and Political Rights

சுவராசியமான செய்திகள்

சிறிலங்காவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடை பற்றி பல சுவராசியமான கதைகள் உண்டு.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட அமைப்புக்களில், ஒரு சில மட்டுமே கடுமையாக வேலை செய்பவை. மற்றவை, புலம்பெயர் வாழ் மக்களுக்கு சினிமா காட்டுபவை, தம்பட்டம் அடிப்பவை.

இவ் அமைப்புக்களுக்கு, புலம்பெயர் மக்களது ஆதரவோ அல்லது தமிழ் கல்விமான்கள் புத்திஜீவிகளது ஆதரவு அறவே அற்றவர்கள். இவர்கள் மிரட்டல் பணியில் வேலைகளை மேற்கொள்பவர்கள். தமது அமைப்புக்களின் பெயர் தடைசெய்யப்பட்டதையிட்டு இவர்களுக்கு எல்லையற்ற சந்தோசம்.

தடைசெய்யப்பட்ட தனிநபர் பட்டியலில் தமது பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதையிட்டு சில தனிநபர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் நடத்துகிறார்கள். வேறு சிலர் தமது பெயர் பட்டியலில் இணைக்கப்படாமையிட்டு மிகவும் கோபமும் சோகமும் அடைந்துள்ளார்கள்.

வேறு சிலர், தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளவர்களைவிட, தாம் பல மடங்கு கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் சிறிலங்காவின் காதுகளுக்கு இவை எட்டவில்லையென அதிசயப்படுகிறார்கள்.

ஒரு சில நபர், தாங்கள் வாழும் நாட்டில் உள்ள சிறிலங்கா தூதுவரலாயத்திற்கு தொலைபேசி செய்து, தாம் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு செய்துவந்த எதையும், நீங்கள் யாரும் அறிய முடியவில்லையெனவும், ஆகையால் உங்கள் புலனாய்வு உத்தியோகத்தர் கெட்டித்தனம் அற்ற சோம்பேறிகளென கூறப் போவதாகவும் கூறினார்கள்.

கடந்த 15ம் திகதி வியாழக்கிழமை, தொலைகாட்சி செவ்வி ஒன்றில் இவை பற்றி வெளிப்படையாக என்னால் கூறப்படும் வரை, இவ் அமைப்புக்களும் தனிநபர்களும், இந்த தடையினால் மிரண்டார்களோ என்னவோ, திடீரென அமைதியாகி விட்டார்கள். இவர்கள் யாரும் வெளிப்படையாக தம் மீதான தடையை எதிர்த்து எந்த கருத்தையும் கூற முன்வரவில்லை.

எம்மைப் பொறுத்தவரையில் சிறிலங்காவின், இவ் தடை என்பது ஒரு பூச்சாண்டி விளையாட்டு. இது, “நல்லூரில் குண்டுவிழும் வேளையில், ஊர்காவற்துறையில் துவக்கு தூக்கியதற்கு” சமமானது.

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துள்ளோம் எனக் கூறும் சிறிலங்கா அரசு, சர்வதேசத்திற்கு “புலி பூஞ்சாண்டி” காட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் வேலை திட்டங்களில் இதுவும் ஒன்று. இவற்றை கண்டு யாரும் பயப்பிட வேண்டிய அவசியமில்லை. “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா”. நாம் இவற்றை கண்டு அஞ்சாது தொடர்ந்து வீறு நடை போட வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரையில், இவ் தடையில் சேர்க்கப்பட்டுள்ள பெயர் வழிகளும், அமைப்புக்களின் தெரிவில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அமைப்பின் பிரதிநிதிகளும், இவர்களுடன் முக்கிய உரையாற்ற வந்த சில நபரின் பங்கு, பெரிதளவில் காணப்படுகிறது. இங்கு இணைக்கபட்டுள்ள படங்கள் 2, 3 ஆகியவற்றை சரியான முறையில் ஆராய்பவர்கள் இதற்கான விடையை பெற்றுக் கொள்வார்கள்.

மிக விரைவில், ஈ.பி.டி.பியும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அமைப்பும் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அதிசயப்படாதீர்கள்.

இவ் தடையினால் பிரதானமாக பாதிக்கப்படப் போவது சிறிலங்கா அரசே. எதிர்வரும் கோடை கால விடுமுறைக்கு, சிறிலங்காவிற்கு சென்று வரவுள்ள புலம்பெயர் வாழ் தமிழர்களது எண்ணிக்கை பாரியளவில் குறைந்தே காணப்படும்.

உண்மை என்னவெனில், இவ் தடையை காரணம் காட்டி, சிறிலங்காவிற்கு செல்லும் புலம்பெயர் வாழ் மக்கள் எவரையும், எந்தவித காரணம் காட்டாது கைது செய்து, காலவரையின்றி சிறையில் அடைப்பதற்கு இத் தடை வழி வகுக்கும். புலம்பெயர் வாழ் மக்கள், தங்களது எதிர்கால நடவடிக்கையை, சரியான முறையில் திட்டமிட்டு, மதிநுட்பமான முறையில் அணுகாத நிலையில், இவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.

தாயகத்திலும் புலத்திலும், தமிழர் தமிழர்களால் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்!

ச. வி. கிருபாகரன்

Edited by Gari

  • 4 weeks later...

ங்கு ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் ஆனால் அதற்காக அரசாங்க மாற்றத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் எதிரானதென்று அர்த்தப்படமுடியாதென மேலும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் இது பற்றி தெரிவிக்கையில் ஆட்சி மாற்றத்தினாலோ அரசியல் தலைவர்களை மாற்றுவதினாலோ எமக்கு என்ன பலன் கிடைத்துவிடப்போகின்றதெனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.[/size]

ஆட்சிமாற்றம் தமிழருக்கு நன்மையை கொண்டுவரும் என்று புலிகள் செயற்பட்டபோது குமரகுருபரன் எங்கை இருந்தவர் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிமாற்றம் தமிழருக்கு நன்மையை கொண்டுவரும் என்று புலிகள் செயற்பட்டபோது குமரகுருபரன் எங்கை இருந்தவர் .

அநேகமாக சுமந்திரன் மாதிரி கொழும்பில் கொட்டாவி விட்டபடி இருந்திருப்பார்.

அநேகமாக சுமந்திரன் மாதிரி கொழும்பில் கொட்டாவி விட்டபடி இருந்திருப்பார்.

நந்தன்

Advanced Member

கருத்துக்கள உறவுகள்

PipPipPip

4,586 posts

Gender:Male

Location:london

Interests:இசை,காதல் இரண்டிலும் அக்கறையுள்ள உங்களுக்கு ஏன் அரசியல் ,--கு என் போர்த் தேங்காய் :) 

ஐ நா விசாரணைக்கு எத்தனை சாட்சியங்களை சமர்ப்பித்துள்ளீர்கள் ,வாய்ச்சவடால் விட்ட எவராவது மாதிரி ஒன்றை இணையுங்கள் பார்க்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அ....கரி 2009க்கு முன்னர் நீங்க எங்க இருந்தியலோ அதுக்கு நேரெதிரான இடத்தில் இருந்தேன்.அண்ண எப்ப மேல போவார் திண்ணை எப்பகாலியாகும் எண்டு சம்பந்தருக்கு குடை பிடிக்க சும்மா சுமந்திரனோட சேர்ந்து வெளிக்கிட்ட உங்களுக்கு எங்களைப் போன்றோரைப் பற்றிக்கதைக்க எந்த அருகதையும் இல்லை,கனடாவில குளிருக்குள்ள கிடந்து எடுக்கிற வாந்திய ஊரில போய் எடுக்கலாமே.அங்குள்ள மக்களை ஒருமுறையாவது நேரே சந்திக்கலாமே ஒன்றுக்கும் வக்கில்லை எங்களுக்கு அரசியல் படிப்பிக்க வெளிக்கிடுறது மகா தப்பு

இலங்கையில் நடை பெற்ற தேர்தலில்...........எந்த 

தேர்தலில் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் அமைந்திருந்தது .இன்னுமா* நம்பிறீங்க ..................... :D  :lol:  :icon_idea:

 

 

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவை தோற்கடித்து மைத்திரிபாலா ஜனாபாதியாக வந்தால் முதல் வேலையாக ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பாரா? இதைத் தான் மகிந்தா முதலில் ஆட்சிக்கு வ்ரும் போது சொன்னார். மகிந்தாவை வென்ட பச்சை இனவாதி மைத்திரி.அவரது முகத்தைப் பார்த்தாலே சொல்லலாம்.அது மட்டும் இல்லாமல் குள்ள நரிகளான ரணிலும்,சந்திரிக்காவும் அவருடன் சேர்ந்திருப்பது தமிழ்ர்களுக்கு நல்லதில்லை என்பது எனது கருத்து.

 

 
  1. ஜனவரி 30 - சம்பளங்கள் அதிகரிக்கும்,. அத்தியாவசிய பொருட்களின் வரிகள் குறைக்கப்படும்.

    போரினால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் துன்பப்படும் மக்களின் பொருளாதார சுமை குறையும்.

     

  2. பெப்ருவரி - 20 தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று வாரங்களுள் சட்டமாக்கப்படும்.

    காணாமல் போனவர்கள் பற்றியும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் கைப்பற்ற பட்ட நிலங்கள் சொத்துக்கள் பற்றியும் அரசாங்கத்தை தகவல்களை தரும்படி நீதி மன்றங்கள் மூலம் பணிக்க இந்த சட்டம் வழி செய்யும்.

     

  3. ஏப்ரல் 23 - இருபத்தைந்து உறுப்பினர்களை மட்டுமே கொண்ட அமைச்சரவை அமைப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருந்து தெரியப்பட்ட அமைச்சர்களை கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்கப்படும். இந்த தேசிய அரசாங்கம் இரண்டு வருடங்களுக்கு பதவியில் இருக்கும். இந்த அரசாங்கம் நாட்டின் முக்கியமான சவால்கள் பற்றிய தேசிய கொள்கைகளை வகுத்து இந்த சவால்களுக்கான தீர்வுகளை நோக்கி நாட்டை வழிநடத்தும்.

    தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஒரு அமைச்சர் பதவியாவது வழங்கப்படும்.

     

  4. அனைத்து இனங்களையும் சேர்ந்த போரினால் விதவைகளானவர்களுக்கு பாதுகாப்பு  வழங்கப்படும்.

     

  5. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் குறைந்தது இருபத்தைந்து வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

    போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள செயற்திறன் மிக்க பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்ள வாய்ப்பு உருவாகும்.

     

  6. சட்டவிரோதமாக தமது வீடுகளில் இருந்தும் நிலங்களில் இருந்தும் அகற்றப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

     

  7. வீடு இல்லாதவர்களுக்கு புகலிடம் வழங்கப்படும்.

     

  8. வடக்கிலும் தெற்கிலும் பொதுமக்களின் ஜனநாயக நிருவாகம் அமைக்கப்படும்.

     

  9. ஏனைய இனங்களையும் மதங்களையும் பாதிக்கும் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளை தடுக்க சட்ட மற்றும் சமூக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆங்கில மூலம்: Island

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்டுக்கு  சிங்களவரை பற்றி தெரியவில்லை போல. :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்டுக்கு  சிங்களவரை பற்றி தெரியவில்லை போல. :)  :)

 
உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ  :rolleyes: 
  • கருத்துக்கள உறவுகள்

 

 
  1. ஜனவரி 30 - சம்பளங்கள் அதிகரிக்கும்,. அத்தியாவசிய பொருட்களின் வரிகள் குறைக்கப்படும்.

    போரினால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் துன்பப்படும் மக்களின் பொருளாதார சுமை குறையும்.

     

  2. பெப்ருவரி - 20 தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று வாரங்களுள் சட்டமாக்கப்படும்.

    காணாமல் போனவர்கள் பற்றியும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் கைப்பற்ற பட்ட நிலங்கள் சொத்துக்கள் பற்றியும் அரசாங்கத்தை தகவல்களை தரும்படி நீதி மன்றங்கள் மூலம் பணிக்க இந்த சட்டம் வழி செய்யும்.

     

  3. ஏப்ரல் 23 - இருபத்தைந்து உறுப்பினர்களை மட்டுமே கொண்ட அமைச்சரவை அமைப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருந்து தெரியப்பட்ட அமைச்சர்களை கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்கப்படும். இந்த தேசிய அரசாங்கம் இரண்டு வருடங்களுக்கு பதவியில் இருக்கும். இந்த அரசாங்கம் நாட்டின் முக்கியமான சவால்கள் பற்றிய தேசிய கொள்கைகளை வகுத்து இந்த சவால்களுக்கான தீர்வுகளை நோக்கி நாட்டை வழிநடத்தும்.

    தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஒரு அமைச்சர் பதவியாவது வழங்கப்படும்.

     

  4. அனைத்து இனங்களையும் சேர்ந்த போரினால் விதவைகளானவர்களுக்கு பாதுகாப்பு  வழங்கப்படும்.

     

  5. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் குறைந்தது இருபத்தைந்து வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

    போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள செயற்திறன் மிக்க பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்ள வாய்ப்பு உருவாகும்.

     

  6. சட்டவிரோதமாக தமது வீடுகளில் இருந்தும் நிலங்களில் இருந்தும் அகற்றப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

     

  7. வீடு இல்லாதவர்களுக்கு புகலிடம் வழங்கப்படும்.

     

  8. வடக்கிலும் தெற்கிலும் பொதுமக்களின் ஜனநாயக நிருவாகம் அமைக்கப்படும்.

     

  9. ஏனைய இனங்களையும் மதங்களையும் பாதிக்கும் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளை தடுக்க சட்ட மற்றும் சமூக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆங்கில மூலம்: Island

 

 

 

கருத்துக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட ஆய்வு அல்ல. ''எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்பது அறிவு'' [குறள்.423]   :wub:  :wub: 

  • கருத்துக்கள உறவுகள்

 

 
  1. ஜனவரி 30 - சம்பளங்கள் அதிகரிக்கும்,. அத்தியாவசிய பொருட்களின் வரிகள் குறைக்கப்படும்.

    போரினால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் துன்பப்படும் மக்களின் பொருளாதார சுமை குறையும்.

     

  2. பெப்ருவரி - 20 தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று வாரங்களுள் சட்டமாக்கப்படும்.

    காணாமல் போனவர்கள் பற்றியும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் கைப்பற்ற பட்ட நிலங்கள் சொத்துக்கள் பற்றியும் அரசாங்கத்தை தகவல்களை தரும்படி நீதி மன்றங்கள் மூலம் பணிக்க இந்த சட்டம் வழி செய்யும்.

     

  3. ஏப்ரல் 23 - இருபத்தைந்து உறுப்பினர்களை மட்டுமே கொண்ட அமைச்சரவை அமைப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருந்து தெரியப்பட்ட அமைச்சர்களை கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்கப்படும். இந்த தேசிய அரசாங்கம் இரண்டு வருடங்களுக்கு பதவியில் இருக்கும். இந்த அரசாங்கம் நாட்டின் முக்கியமான சவால்கள் பற்றிய தேசிய கொள்கைகளை வகுத்து இந்த சவால்களுக்கான தீர்வுகளை நோக்கி நாட்டை வழிநடத்தும்.

    தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஒரு அமைச்சர் பதவியாவது வழங்கப்படும்.

     

  4. அனைத்து இனங்களையும் சேர்ந்த போரினால் விதவைகளானவர்களுக்கு பாதுகாப்பு  வழங்கப்படும்.

     

  5. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் குறைந்தது இருபத்தைந்து வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

    போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள செயற்திறன் மிக்க பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்ள வாய்ப்பு உருவாகும்.

     

  6. சட்டவிரோதமாக தமது வீடுகளில் இருந்தும் நிலங்களில் இருந்தும் அகற்றப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

     

  7. வீடு இல்லாதவர்களுக்கு புகலிடம் வழங்கப்படும்.

     

  8. வடக்கிலும் தெற்கிலும் பொதுமக்களின் ஜனநாயக நிருவாகம் அமைக்கப்படும்.

     

  9. ஏனைய இனங்களையும் மதங்களையும் பாதிக்கும் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளை தடுக்க சட்ட மற்றும் சமூக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆங்கில மூலம்: Island

 

 

சிங்களம் சொல்லுது

தமிழன் நம்புகின்றான்

இதற்கு மேல்

எப்படியெடா என்னை உனக்கு புரியவைப்பேன் என சிங்களம் கலங்குகிறது :(  :(  :(

:(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.