Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில்தான் இருக்கிறேன்: குமரன் பத்மநாபன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில்தான் இருக்கிறேன்: குமரன் பத்மநாபன்

By dn, கொழும்பு

First Published : 12 January 2015 02:29 AM IST

"இலங்கையில் இருந்து நான் வெளியேறும் திட்டம் இல்லை' என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவரான "கே.பி' என அழைக்கப்படும் குமரன் பத்மநாபன் கூறினார்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வெளிநாட்டுக்கு அவர் தப்பிச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், "நான் இலங்கையில்தான் இருக்கிறேன்' என்று அவர் தெரிவித்தார்.

இலங்கை வடக்கு மாகாணத்தில், கிளிநொச்சியில் உள்ள தனது ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளருக்கு தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் ஆற்றி வரும் மனிதநேயப் பணிகள் தொடர்வதற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு அனுமதித்தால், இறைவனுக்கு நன்றி சொல்வேன். புதிய அரசின் நடவடிக்கைகள் எனக்கு எதிராக இருக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, எனக்கு வழங்கப்படும் ராணுவப் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று குமரன் பத்மநாபன் கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்காக, 2 ஆதரவற்றோர் இல்லங்களை கிளிநொச்சியில் குமரன் பத்மநாபன் நடத்தி வருகிறார். இதனிடையே, "ராஜபட்ச அரசுடன் குமரன் பத்மநாபன் மேற்கொண்ட ரகசிய ஒப்பந்தம், விடுதலைப் புலிகளின் பணம் எங்கே போனது ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும்' என்று சிறீசேனாவின் பிரசார மேலாளர் மங்கல சமரவீரா கூறினார்.

பின்னணி: இலங்கையில் உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் 2009ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட பிறகு, இலங்கை ராணுவத்தால் கோலாலம்பூரில் குமரன் பத்மநாபன் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, விடுதலைப் புலிகளின் பணம், ஆயுதங்கள் ஆகியவை இருக்கும் இடத்தை தெரிவிப்பது தொடர்பாக, பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபய ராஜபட்சவுடன் குமரன் பத்மநாபன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. அதற்குப் பிரதிபலனாக, புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து நிதி வசூலித்து, அதன் மூலம் இலங்கையில் ஆதரவற்றோர் இல்லம் நடத்த குமரன் பத்மநாபனுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

http://www.dinamani.com/

கேபி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தமிழ்மிரர் செய்தி வெளியிட்டிருந்தது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
கேபி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தமிழ்மிரர் செய்தி வெளியிட்டிருந்தது.

 

 

அதே தமிழ் மிரர் கே.பி நாட்டில் இருப்பதாக பேட்டி கொடுத்து இருந்தாரே!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

kp(6).jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி, அதிவிசேட பிரமுகர்கள் பயணிக்கும் நுழைவாயின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.   

 

http://www.tamilmirror.lk/137398

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரைத்தான் நம்புவதோ தமிழன் நெஞ்சம்...?????  :(

  • கருத்துக்கள உறவுகள்

"மலேசியாவில் கைது செய்யப்பட்டார் கே.பி" என்பதையும் நாங்கள் நம்பினோம் :D இதையும் நம்புவோமாக..... :D

வாலுகள்  தான்  வெளியில்  இருக்கு  தலை  எல்லாம்  நாட்டிலதான்  இருக்கு பொதுவா  சொல்கிறேன்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாலுகள்  தான்  வெளியில்  இருக்கு  தலை  எல்லாம்  நாட்டிலதான்  இருக்கு பொதுவா  சொல்கிறேன்  :icon_idea:

 

அதுதான் அவர்களை "தல" என அழைக்கிறோம்...:D

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் அவர்களை "தல" என அழைக்கிறோம்... :D

 

தல  எப்பவும்  தாயகத்தில் தான் இருக்கணும்

அதைவிட சந்தோசமேது தமிழருக்கு... :icon_idea:

அதுதான் அவர்களை "தல" என அழைக்கிறோம்... :D

அஜித் ரசிகர்  போல  தாங்கள்  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாலுகள்  தான்  வெளியில்  இருக்கு  தலை  எல்லாம்  நாட்டிலதான்  இருக்கு பொதுவா  சொல்கிறேன்  :icon_idea:

 

நானும் நாட்டில் போயிருக்க ஆசைப்படுகிறேன். அங்கு எங்கு புலித்தோல் மலிவாக வாங்கமுடியும்....?????  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நாட்டில் போயிருக்க ஆசைப்படுகிறேன். அங்கு எங்கு புலித்தோல் மலிவாக வாங்கமுடியும்....?????  :icon_idea:

 

பசுவிற்கு எதற்கு புலித்தோல்..? :o:lol::D

 

நானும் நாட்டில் போயிருக்க ஆசைப்படுகிறேன். அங்கு எங்கு புலித்தோல் மலிவாக வாங்கமுடியும்....?????  :icon_idea:

ஏன்  அண்ணே  இங்கதானே  சும்மாவே  தருவாங்க  போகும்  போது  வாங்கி  போறது புலி  தோலும் ,துரோகி  பட்டமும் இரண்டும்  முக்கியம் ஒன்று இல்லாவிட்டாலும்  வாழ  முடியாது  :D

  • கருத்துக்கள உறவுகள்

டம்மி கே.பி என்று சொல்லுறாங்கள் அது உண்மை போலதான் இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

மைதிரியும் டம்மியாம். உண்மையில் அது ராஜபக்சவாம். ராஜபக்ச வேடத்திலிருப்பது மாத்தையாவாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் வேசத்தில் இருப்பது டக்கியாம்

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில்தான் இருக்கிறேன்: குமரன் பத்மநாபன்

 

இனி வேறு வழியில்லை ............ அங்குதான் இருக்கணும்!

சில நாட்களுக்கு முன்னர் கேபி பற்றி நான் எழுதியதை மீண்டும் இங்கு நினைவுபடுத்துகின்றேன்

 

 

எனக்கு இருக்கும் கொஞ்சமே கொஞ்சமான அரசியல் அறிவை வைச்ச்சு யோசிச்சதில் (எல்லாத்திலயும் கொஞ்சம் தான் அறிவு) கேபி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை என்றுதான் படுகின்றது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், புலிகளை மீண்டும் தலையெடுக்க விடப்போவதில்லை. அதே போன்று போர்க்குற்ற விசாரணைகளுக்கும் ஒத்துழைக்கப் போவதில்லை எனவே கேபியை பாராட்டி சீராட்டி தாலாட்டி வைத்து இருப்பர். அத்துடன் அவர் அதிகாரப் போட்டிக்குள் இல்லை என்பதால் அவர் இருப்பதால் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளுக்கு பிரச்சனை இல்லை.

 

அவர் தப்பி ஓடிட்டார் இவர் தப்பி ஓடிவிட்டார் என்று வரும் கதைகளில் 90 வீதமானவை மீடியாக்கள் செய்யும் திருகுதாள விளையாட்டுக்கள்.

 

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=post&section=post&do=reply_post&f=40&t=151619&qpid=1071727

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இருவரும் மகிந்தவிடம் நக்கி பிழைத்தவர்களே ஆயினும். என்னை டக்கியோடு ஒப்பிடக்கூடாது.

அவர் ஒரு "மண்" பற்றாளர். பிள்ளை பிடிகாரன். ஆமிக்கெல்லாம் மாமா. எண்டு அமெரிக்காவே சொல்லுது. நான் ஒரு அற்ப புழு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.