Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லசந்த, ஜெயராஜ், ரவிராஜ், ஜோசப் கொலைகள் குறித்து மீள் விசாரணை

Featured Replies

லசந்த, ஜெயராஜ், ரவிராஜ், ஜோசப் கொலைகள் குறித்து மீள் விசாரணை  

JAN 22, 2015 | 0:19

by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

rajitha-senaratne-300x200.jpgமுன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்து புதிய விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும், சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்பு இருந்தது.

இதுதொடர்பாக கோத்தாபய ராஜபக்ச மீது மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் செய்த முறைப்பாடு உண்மையானது.

ஆனால், அந்தக் கொலையுடன் மேர்வின் சில்வாவும் தொடர்புபட்டிருந்தார்.

புதிய அரசாங்கம் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக புதிய விசாரணைகளை முன்னெடுக்கும்.

அதற்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே ஆகியோரின் கொலைகள் குறித்தும் மீள்விசாரணை நடத்தப்படும்.

ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளேயை விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை.

எம்மிடம் எல்லா தகவல்களும் உள்ளன. இவை எவ்வாறு இடம்பெற்றன, யார் இவற்றைச் செய்தது என்று அஎமக்குத் தெரியும்.

அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/01/22/news/3086

 

  • கருத்துக்கள உறவுகள்

அவன் அவன் தன்னுடைய அமைச்சின் வேலையை கவனித்தால் நல்லாயிருக்கும். அதை விட்டிட்டு மற்றவன்ரை அமைச்சின் வேலையைப்பற்றி அறிக்கைவிட்டு எல்லாத்தையும் இழுத்துப்போட்டு ஒட்டுமொத்தமா சொதப்பாமை இருந்தா சரிதான். சுகாதார அமைச்சருக்கு ஏன் இந்த வேலை? மைத்திரி வந்து தம்பிக்கு றக்கையை வெட்டப்போறார் கவனம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளேயை, விடுதலைப் புலிகள் கொலை செய்ததாகத் தான், இதுவரை நினைத்திருந்தேன்.
கோத்தா... செய்த கூத்துக்கு, அளவே இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

கனபேர் இப்ப துள்ளபோகினம்

  • கருத்துக்கள உறவுகள்

கனபேர் இப்ப துள்ளபோகினம்

 

பிரேமதாச, காமினி, லலித் அத்துலத் முதலி, ராஜீவ் காந்தி கொலைகளும்...

புலிகளால் செய்யப் பட்டிருக்காது என்பதே உண்மை.

 

சிங்களவனும், இந்தியனும், ஒட்டுக்குழுக்களும்...

 சும்மா... இருந்த புலிகளை, கொலைக் குற்றம்  சாட்டி, எத்தனை அழிவுகளை ஏற்படுத்தி விட்டார்கள்..... :o

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அமைச்சர் இவ்வாறு சொல்லி இருக்கின்றார் ஆக இலங்கையில் நடைபெற்ற பல அரசியல் கொலைகளை உள்ளிருந்தவர்களே தங்கள் தேவைகளுக்காக செய்துவிட்டு புலிகள் மேல் பலியை போட்டிருகின்றார்கள்..... பூனைக்குட்டி இப்ப தான் மெல்ல மெல்ல வெளிய வருது.......

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல், சிறீ... உங்களுக்கேன் இந்த வம்பு... சிவனே என்று wine ருசித்துக்கொண்டிருக்கும் அர்ஜுன், australia இன் கௌரவ விருந்தினர் சபேசன்###, கோஷான் எல்லோரையும் கோப்ப்பட்ட வைக்கப்போறியள். அதற்குப்பிறகு நடக்கும் அக்கப்போருக்கு இப்பவே தயாராக இருக்கவும் தகுந்த ஆதாரங்களுடன்......

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, அநுராதபுரத்தில் நடந்த, ஜானக பெரேரா கொலை யாரின் கணக்கில...?

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரன்... குமார் பொன்னம்பலம் கொலை தொடர்பிலும்.. விசாரிக்கனும். ஊடகவியலாளர்கள்.. நடேசன்.. சிவராம்.. நிமல்ராஜன்.. அற்புதன் கொலைகள் தொடர்பிலும் நீதியாக விசாரிக்கனும். :o  :icon_idea:  :rolleyes:

அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரரேருவின் கொலை தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் துறை போராளி.. கெளசல்யன் கொலை.. மற்றும்.. முள்ளிவாய்க்கால் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலும் நீதியான.. விசாரணைகள் வேண்டும். அதேபோல்.. முன்னாள் அதிபர் பிரேமதாச கொலையிலும் சந்தேகம்  உள்ளது. :icon_idea:

பண்டாரநாயக்க கொலையிலும் சந்தேகம் உள்ளது   :lol:
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஜான் எஃப் கெனடியின் கொலையில்தான் ஆகலும் சந்தேகம்.. :D

எனக்கு ஜான் எஃப் கெனடியின் கொலையில்தான் ஆகலும் சந்தேகம்.. :D

 

ஜயோ போறபோக்கைப்பார்த்தால் ஏபிரகாம் லிங்கன் முதல் காந்திவரை கேட்பீர்கள் போலிருக்கு. அவனுகள் ஏதோ ஒரு 4 கொலைகளையாவது விசாரிக்கட்டும். இது முறையாகவும் நேர்மையகவும் நடந்தால் பின்னர் பண்டாரவன்னியனிலிருந்து (வெள்ளைக்காரன் ஒழித்து நின்று கொலை செய்தது) ஆரம்பிக்கலாம்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

இது தான்

சிங்களவன் எம்மைக்கண்டு பயப்படுவதற்கு காரணம்

 

கொஞ்சம் இடம் கொடுத்தால்.....?

தன்னைத்தள்ளி  கடலுக்குள் விட்டுவிடுவார்கள் என்று......... :(

 

பாவம் தமிழன் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப யார் மகாத்மா காந்தியைக் கொன்றது? 

அப்ப யார் மகாத்மா காந்தியைக் கொன்றது? 

 

சத்தியமா நான் இல்லை.
அப்ப நான் பிறக்கவே இல்லை.
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கமலம் கொலை வழக்கு. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.