Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவனா? அவன்..?? - புல்லரிக்கும் தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக நன்றாகப் போகிறது கதை அனால் எனக்கும் கூடச் சந்தேகம் தான் நீங்கள் எழுதும் கதைதானா என்று அண்ணா. தொடருங்கள்

 

 

நன்றி சுமே

நானே தான்.. :icon_idea:

 

 

நன்றி 

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

ஏன் விசுகண்ணா இவ்வளவு நாளும் இப்படி எழுதவில்லை?  தொடர்ந்து வாசிக்கிறேன்.

 

நன்றி தம்பி  நுணா

எழுதுவதன் தாக்கத்தை நானே இதை எழுதத்தொடங்கிபின் தான் உணர்ந்தேன்..

இரண்டு நாட்கள் எனக்கே தூக்கம் போச்சு

அந்தளவுக்கு என்னைப்பாதித்த  கரு இது...

 

தொடர்ந்திருங்கள்

அதிர்ச்சி  இனித்தான் இருக்கு. :icon_idea:

 

நன்றி ஐயா

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

Edited by விசுகு

  • Replies 97
  • Views 10.1k
  • Created
  • Last Reply

விசுகு.. இதற்குள் அவர் இவர் எழுதுவதை விட்டுப்போட்டு நீங்கள் எழுதுவதுதான் முறை.. அதுவே கதையை பூரணப்படுத்தும் வல்லமையும்கூட!!

 

நன்றி!!  :o  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசகண்ணா பயங்கரமான துப்பறியும் கதை பாணியில் செல்கிறது, ஒரே மூச்சில் வாசித்தேன்...

 

எழுத்து நடையும், விவரணையும் இரத்தின சுருக்கமாய் அருமையாய் உள்ளது...

 

தொடருங்கோ ராசா :)

 

 

நன்றி  தம்பி

இதுவும் ஒர  இளவயதின் விருது எனக்கு.. :icon_idea:

 

 

நன்றி தம்பி

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

மக்களே.. நோட் திஸ் பாய்ண்ட்.. ஒரு நல்ல எழுத்தாளனை வெளிக்கொண்டுவந்துள்ளேன்.. :D

 

ஏணிகளை மறப்பதில்லை

அதைச்சொல்ல வெட்கமேன்  ராசா... :icon_idea:  :icon_idea:

இல்லை இல்லை இதை அருமையாக தொடங்கி சிறப்பாக நடத்தி கொண்டு போகின்றீர், நீங்களே தன இதை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும், ஒரு நல்ல கதையை நல்ல முறையாக முடித்து வையுங்கள். தம்பியின்  வேண்டுகோள்.... plss

 (டிஸ்கி : குரு கூட சேராதையுங்கோ கதையின் போக்கை மாற்றி விடுவார் :D )

 

நன்றி தம்பி

அப்ப

ஆரம்பிக்கவேண்டியது தான்..

விசுகு.. இதற்குள் அவர் இவர் எழுதுவதை விட்டுப்போட்டு நீங்கள் எழுதுவதுதான் முறை.. அதுவே கதையை பூரணப்படுத்தும் வல்லமையும்கூட!!

 

நன்றி!!  :o  :lol:

 

நன்றியண்ணா

இதோ

தொடர்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அவர்கள் சொன்னது தான் தாமதம் தனது TAXI இன்  திறப்பை காவல்த்துறையினரிடம் கேட்டு வாங்கியவன் 
அங்கிருந்து புறப்பட்டான்
இல்லை பறந்தான்...
அவனது GPS - 25 நிமிடங்கள் காட்டியது அவனது வீட்டை அவன் அடைய....
 
வீட்டுக்கு முன்னால் TAXI யை  நிறுத்தியவன்
வீட்டுக்கதவு திறந்தே கிடப்பதைக்கண்டான்....
ஓடி உள்ளே நுளைந்தவனுக்கு அதிர்ச்சி.....
வீடு அல்லோல கல்லோலப்பட்டுக்கிடந்தது...
பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன
அப்படியே தனது அறைப்பக்கம் போனவன் 
அதிர்ச்சியால் உறைந்து போனான்...
 
கட்டிலில் அவள் அலங்கோலமாக மயங்கிக்கிடந்தாள்
பக்கத்தில் கதிரையில் லாவகமாக சாய்ந்தபடி
அந்த உயர் அதிகாரி  சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார்..................
 
இவனைக்கண்டதும்
வந்திட்டியா?
ஒருத்தியைக்கடத்தி
அடைத்து வைத்திருந்ததற்கு என்ன தண்டனை தெரியுமா என்றவாறு இவனை அணுகினார்...
 
தொடரும்... :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பாராட்டதக்க வகையில் உங்கள் எழுத்து நடை உள்ளது அண்ணா.வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்வந்து பார்க்கத் தவறினேன். ஆனாலும்,

பின்வந்து நின்று பார்த்தேன்.

நடையா இது நடையா 

ஒரு நாடகம் அன்றோ நடக்குது.

நான் ஒரு பெண்ணின் நடையை ரசித்துச் சொல்லவில்லை 

விரல்கள் தட்ட எழுந்து நடக்கும்

விசுகரின் எழுத்து நடையை ருசித்துச் சொன்னேன்.

அதில்தான் எத்தனை நாடகங்கள்.

வாழ்த்துக்கள்! விசுகர் அவர்களே!!

நெஞ்சம் தவிக்கவிடாமல் தொடருங்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

 

முன்வந்து பார்க்கத் தவறினேன். ஆனாலும்,

பின்வந்து நின்று பார்த்தேன்.

நடையா இது நடையா 

ஒரு நாடகம் அன்றோ நடக்குது.

நான் ஒரு பெண்ணின் நடையை ரசித்துச் சொல்லவில்லை 

விரல்கள் தட்ட எழுந்து நடக்கும்

விசுகரின் எழுத்து நடையை ருசித்துச் சொன்னேன்.

அதில்தான் எத்தனை நாடகங்கள்.

வாழ்த்துக்கள்! விசுகர் அவர்களே!!

நெஞ்சம் தவிக்கவிடாமல் தொடருங்கள். :rolleyes:

 

பாஞ்ச் அண்ணையும், தொடர் கதைகள் எழுதுவதில் வல்லவர், என்பதை....

தனது "வாலிப வயது குறும்புகள்" மூலம் நிரூபித்தவர்.

இப்போது... ஏன், அமைதியாக இருக்கின்றார், என்று தெரியவில்லை.

ஏதாவது... ஒன்றை, ஆரம்பியுங்க சார்.

வாசிக்க... நாம, ரெடியாக உள்ளோம். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இந்த கதைக்கு உடனேயே கொப்பி ரைறஸ் எடுங்கோ.

 

இல்லாவிட்டால் விரைவில் இந்தியாவில் திரைப் படமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

 நான் வேலையில் வாசிப்பது அங்கு எழுவதற்கு வசதி இல்லை. இங்கை சிலர் சொன்ன மாதிரி இது உண்மையில் விசுகர்தான் எழுதிறாரோ என்னுமளவுக்கு இருக்குது.அநடதளவுக்கு அருமை.இப்ப என்டை கவலை என்னவென்டால் அந்த நேரம் விசுகரோட சோ்ந்து ஒரு புகைப்படம் எடுக்காமல் விட்டுட்டன் என்டு.

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் அண்ணையும், தொடர் கதைகள் எழுதுவதில் வல்லவர், என்பதை....

தனது "வாலிப வயது குறும்புகள்" மூலம் நிரூபித்தவர்.

இப்போது... ஏன், அமைதியாக இருக்கின்றார், என்று தெரியவில்லை.

ஏதாவது... ஒன்றை, ஆரம்பியுங்க சார்.

வாசிக்க... நாம, ரெடியாக உள்ளோம். :D  :lol:

 

கேள்வி ஞானத்தில் சங்கீதம் பாடுபவனைப்போல் நானும் ஏதோ குறும்புகளைக் கதை என்று எழுதினேன். குறும்புகளை எறும்பு கடித்துவிட்டது. பெண்களை அதிகமாக வருணித்ததால் வந்த வினை.  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கட்டிலில் அவள் அலங்கோலமாக மயங்கிக்கிடந்தாள்
பக்கத்தில் கதிரையில் லாவகமாக சாய்ந்தபடி
அந்த உயர் அதிகாரி  சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார்..................
 
இவனைக்கண்டதும்
வந்திட்டியா?
ஒருத்தியைக்கடத்தி
அடைத்து வைத்திருந்ததற்கு என்ன தண்டனை தெரியுமா என்றவாறு இவனை அணுகினார்...
 
தொடரும்...  :icon_idea:
 
வந்தவன்  கண்டபடி தாக்கத்தொடங்கினான்
அதிகாரமும்  பலமும் கொண்ட அவனை
முகமெட்டால் ஒன்றும் செய்யமுடியவில்லை....
 
அடியின் வலி  தாங்கமுடியாது கீழே விழுந்தவன்
அல்லா 
அறிவு தெரிந்ததிலிருந்து ஒரு நாளும்
ஒரு பொழுதிலும் உன்னை த்துதிக்க மறந்ததில்லையே
ஏன் இப்படி என்னை வதைக்கின்றாய் என அழத்தொடங்கினான்..
 
அல்லாவும் பார்த்தார்
அடப்பாவி மகனே நீ மட்டுமா என்னைக்கும்பிடுகிறாய்
அவனும் தானேயடா என்றவர்
முடிச்சை அவிழ்க்கும் தருணம் வந்ததாக முடிவெடுத்தார்........
 
முகமெட்டுக்கு முன்னால்  இருந்த சோடா மீது முகமெட்டின் பார்வையைப்படவைத்தார்.
அவளை எழுப்பினால் தான் தான் தப்பமடியும் என உணர்ந்த முகமெட்
சோடாவை எடுத்து அதை நன்றாக குலுக்கிவிட்டு மூடியைத்திறந்து அவள் முகத்தில் படவைத்தான்
மெல்ல கண் விழித்தவள்
ஓடிவந்து முகமெட்டின் பின்னால் ஒழிந்தபடி
இவனிடமிருந்து என்னைக்காப்பாற்று முகமெட் என கெஞ்சலானாள்...
அப்படியானால்  இவரை உனக்கு முன்பே தெரியுமா என அப்பாவியாக அழுதபடி கேட்டான்
ஆம்
இவன் தான் அவன்
என் புருசன் என்றாள்...........
:icon_idea:
தொடரும்............
 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இடியப்பச் சிக்கலாய்க் கிடக்கு....! அந்தச் சிக்கல்தான்  இடியப்பத்த ருசித்துச் சாப்பிட வைக்குது...!! :)

ஆகா.. விசுகர் எங்கயோ போவிட்டார்...  :D

சுப்பர்... தொடருங்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகர்! எனக்கு புல்லரிக்க வெளிக்கிடுது   :D .....தொடருங்கள்.  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பாராட்டதக்க வகையில் உங்கள் எழுத்து நடை உள்ளது அண்ணா.வாழ்த்துக்கள்.

 

நன்றி சகோதரி........

 

நேரத்துக்கும்   ஊக்கவிப்புக்கும்.....

முன்வந்து பார்க்கத் தவறினேன். ஆனாலும்,

பின்வந்து நின்று பார்த்தேன்.

நடையா இது நடையா 

ஒரு நாடகம் அன்றோ நடக்குது.

நான் ஒரு பெண்ணின் நடையை ரசித்துச் சொல்லவில்லை 

விரல்கள் தட்ட எழுந்து நடக்கும்

விசுகரின் எழுத்து நடையை ருசித்துச் சொன்னேன்.

அதில்தான் எத்தனை நாடகங்கள்.

வாழ்த்துக்கள்! விசுகர் அவர்களே!!

நெஞ்சம் தவிக்கவிடாமல் தொடருங்கள். :rolleyes:

 

 

நன்றி ஐயா

 

ஒரு சிறு கரு கிடைத்தது

அது புதுமையாகவும்

இதவரை கேள்விப்பட்டதற்கு  அப்பால்

சாதாரண வாழ்வில் நடைமுறையில் நடக்காத

கனவில் மட்டுமே  நடக்கும் சம்பவங்களின் உண்மைக்கதையாக இருந்தது

சும்மாவே அரைப்பம்

அவல் கிடைத்தால்..........

ஒரு முயற்ச்சி தான்

கொஞ்சம் மனிதன்

கொஞ்சம் மிருகம்  .... கலந்து........

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்

எல்லாம்  நீங்கள் இருக்கிறீர்கள் என்ற அடிப்படை ஊக்கம் தான் காரணம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இந்த கதைக்கு உடனேயே கொப்பி ரைறஸ் எடுங்கோ.

 

இல்லாவிட்டால் விரைவில் இந்தியாவில் திரைப் படமாகும்.

 

 

நன்றியண்ணா

 

உங்கள் வாழ்த்தும் ஒரு விருது எனக்கு...

ஆனால் அப்படியெல்லாம் ஆசையோ

படைப்பாளி ஆகணும் என்ற நினைப்போ இல்லை....

யாழ் மட்டுமே  எனது தளம்

அதில் உள்ளவர்கள் மட்டுமே எனது உலகம்

உறவுகள்...

 

அவர்களுடன் சேர்ந்து மட்டுமே எனது எழுத்து

ஆடல் பாடல்

கடிபடல்....  எல்லாமே....

அத்துடன் இவை அனைத்தும் நிறைவுபெறும்..

 

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்

 நான் வேலையில் வாசிப்பது அங்கு எழுவதற்கு வசதி இல்லை. இங்கை சிலர் சொன்ன மாதிரி இது உண்மையில் விசுகர்தான் எழுதிறாரோ என்னுமளவுக்கு இருக்குது.அநடதளவுக்கு அருமை.இப்ப என்டை கவலை என்னவென்டால் அந்த நேரம் விசுகரோட சோ்ந்து ஒரு புகைப்படம் எடுக்காமல் விட்டுட்டன் என்டு.

 

நன்றி சுவைப்பிரியன்

எனக்கு சயீவனைத்தான் பிடிக்கும் (வளர்ந்து விட்டாரா)

 

 

படம் எடுக்க ஏன் மறந்தோம் என்று இப்ப தான் நானும் நினைக்கின்றேன்

அதற்கென்ன  இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகல

நீங்க வாறீர்களா?

நான் வரட்டுமா??

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்...

கேள்வி ஞானத்தில் சங்கீதம் பாடுபவனைப்போல் நானும் ஏதோ குறும்புகளைக் கதை என்று எழுதினேன். குறும்புகளை எறும்பு கடித்துவிட்டது. பெண்களை அதிகமாக வருணித்ததால் வந்த வினை.  :(

 

தொடர்ந்து எழதுங்கள் ஐயா

நாங்கள் கடிக்காத பொருளா அது...??

 

ஆனால் இந்தக்கதையில் முழுமையான 100வீத மரக்கறி மட்டுமே...

முட்டை

பால் கூட தவிர்க்கப்பட்டுள்ளது

(சிலருக்கு ஏமாற்றத்தைத்தந்துள்ளது :D  :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

தொடராக இருந்தால் வாசிக்க ஆரம்பித்துக் காத்திருக்கமுடியாது என்று முன்னர் வாசிக்கவில்லை. இன்றுதான் வாசித்தேன்! Indie படம் பார்த்தது மாதிரி இருந்தது. தொடருங்கள் விசுகு ஐயா!

  • கருத்துக்கள உறவுகள்

-------

மெல்ல கண் விழித்தவள்
ஓடிவந்து முகமெட்டின் பின்னால் ஒழிந்தபடி
இவனிடமிருந்து என்னைக்காப்பாற்று முகமெட் என கெஞ்சலானாள்...
அப்படியானால்  இவரை உனக்கு முன்பே தெரியுமா என அப்பாவியாக அழுதபடி கேட்டான்
ஆம்
இவன் தான் அவன்
என் புருசன் என்றாள்...........
:icon_idea:
தொடரும்............

 

 

முக்கோண கதையாக.... அதிரடி, திருப்பங்களுடன் கதை நகர்கின்றது.

இதில் முகமட்டுக்கு... ஏழரைசனி உச்சத்திலை நிக்குது  போல் உள்ளது. :icon_idea:

 

அந்த காவல்துறை அதிகாரியின்  மனைவியை.... காலையில் இருந்து காணவில்லை,

அதை தேடுவதை விட்டு விட்டு... என்ன இழவுக்கு .... வேலைக்கு வந்தவர்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறை அலுவலகத்திலிருந்த முகமெட்டுக்கு மேலும் கவலை படரத்தொடங்கியிருந்தது..
அந்த உயர் அதிகாரியிடம் தான் உண்மை அனைத்தையும் சொன்னது சரியா?
ஆபத்தை விலைக்கு வாங்கிவிட்டேனா?
அதற்கொரு காரணம் இருந்தது
அந்த உயர் அதிகாரி புறப்படும் போது
இவனது உடமைகள் அனைத்தையும்  (தொலைபேசி பணம் சிகரெட் உட்பட) 
தன்னுடன் எடுத்தச்சென்றதும்
அவர் வாகனத்தில் புறப்படும் போது வாகனத்தின் நாலு ரயர்களும் சுற்றியவிதம்
புழுதியை வாரி எறிந்தவிதம்......
இவனுக்குள் ஒரு பயத்தை உருவாக்கியிருந்தது..

 

இந்த வரிகளை எழுதியவுடன் நான் ஊகித்துவிட்டேன் அதிகாரிதான் கணவன் என. :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இடியப்பச் சிக்கலாய்க் கிடக்கு....! அந்தச் சிக்கல்தான்  இடியப்பத்த ருசித்துச் சாப்பிட வைக்குது...!! :)

 

அப்படியானால்  வெற்றி தான்....

நன்றியண்ணா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும்.....

ஆகா.. விசுகர் எங்கயோ போவிட்டார்...  :D

சுப்பர்... தொடருங்கள்!!

 

எல்லாம் உங்கள் போன்ற ஈசன்கள் இங்கே இருக்கிறீர்கள் என்ற நாரதரின் விளையாட்டுக்களே....

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்....

விசுகர்! எனக்கு புல்லரிக்க வெளிக்கிடுது   :D .....தொடருங்கள்.  :)

 

 

இதுக்கே இப்படியென்றால்

நீங்க எழுதத்தொடங்கினால்... :icon_idea:

 

நன்றி  அண்ணா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்....

தொடராக இருந்தால் வாசிக்க ஆரம்பித்துக் காத்திருக்கமுடியாது என்று முன்னர் வாசிக்கவில்லை. இன்றுதான் வாசித்தேன்! Indie படம் பார்த்தது மாதிரி இருந்தது. தொடருங்கள் விசுகு ஐயா!

 

களம் கொஞ்சநாளாக தேவையில்லாத  விடயங்களில்

தேவையற்றவர்களுடன் முட்டுப்பட்டுக்கொண்டிருந்தது

நான் ஒரு பக்கம் ஒதுங்கி

என்னவரையும் இந்தப்பக்கம் இழுக்கும் முயற்சி...

 

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முக்கோண கதையாக.... அதிரடி, திருப்பங்களுடன் கதை நகர்கின்றது.

இதில் முகமட்டுக்கு... ஏழரைசனி உச்சத்திலை நிக்குது  போல் உள்ளது. :icon_idea:

 

அந்த காவல்துறை அதிகாரியின்  மனைவியை.... காலையில் இருந்து காணவில்லை,

அதை தேடுவதை விட்டு விட்டு... என்ன இழவுக்கு .... வேலைக்கு வந்தவர்.  :D

 

 

அந்த  கணவன் பற்றி  சில முடிச்சுக்களை போடவேண்டியிருந்தது...

ஆனால் ஒரு அளவுக்கு மேல் அவரைத்தூக்கி நிமிர்த்தி எழுதாமல் பார்த்துக்கொண்டேன்

சுவாரிசியம் குறைந்தவிடும் என்பதால்...

 

உங்களது கேள்விக்கு

ஒன்றில் அல்லா வழி காட்டுவார்தானே என நினைத்து வேலைக்கு வந்திருக்கலாம் :lol:

அல்லது

அவரது எல்லைக்கோட்டை

அவரது மனைவி கடக்கமுடியாது என்ற நம்பிக்கையாக இருந்திருக்கலாம்.. :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வரிகளை எழுதியவுடன் நான் ஊகித்துவிட்டேன் அதிகாரிதான் கணவன் என. :D

 

 

 

நன்றி

சுமே அல்லே....

 

அதற்காகத்தான் அதில் ஒருக்கா நிறுத்திகண்டுபிடித்தீர்களா எனக்கேட்டிருந்தேன்...

 

நன்றி  சுமே

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் ...

 

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மெல்ல கண் விழித்தவள்
ஓடிவந்து முகமெட்டின் பின்னால் ஒழிந்தபடி
இவனிடமிருந்து என்னைக்காப்பாற்று முகமெட் என கெஞ்சலானாள்...
அப்படியானால்  இவரை உனக்கு முன்பே தெரியுமா என அப்பாவியாக அழுதபடி கேட்டான்
ஆம்
இவன் தான் அவன்
என் புருசன் என்றாள்...........
:icon_idea:
தொடரும்........
 
முகமெட்டுக்கு தலை சுற்றியது.
ஒழிக்க இடமில்லாமல் விதானையிடம் ஒழித்துவிட்டேனோ??
இவனிடம் எல்லாவற்றையும் சொல்லமுடிவெடுத்தது எவ்வளவு முட்டாள்தனம்
அந்த முடிவுக்கு ஏன் வந்தேன்??
ஏன் இவ்வாறு தப்புக்கு மேல் தப்பாகவே எல்லாம் நடக்கிறது?
இதிலிருந்து தப்புவது எப்படி என யோசித்தபடி இருந்தானே ஒழிய 
அவள் தன் பின்னால் தன்னைக்கட்டிப்பிடித்தபடியிருப்பதை உணர மறந்தான்...
 
திடீரென முகமெட்டின் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது
அவளையும் யாரோ காலால் உதைத்துத்தள்ளுவது தெரிந்தது
வலியுடன் திரும்பிப்பார்த்தான்
அவனது மாமியார் காளி கோலத்தில் நின்றார்.....
பக்கத்தில் முகமெட்டின் மனைவி குழந்தை 
முகமெட்டின் தம்பியார் நின்றிருந்தனர்.....
முகமெட்டின் மனைவியின் முகத்தில் பெருங்கோபம்
அழுகை...
 
கவனித்த முகமெட்
மனைவியிடம் பேச முயன்றான்
சீ  என்றவள் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டாள்...
 
எல்லாமே போச்சு
என் வாழ்க்கை முடிந்தது
எல்லோருமே எனக்கெதிராக நிற்கின்றனர் என்பதை உணர்ந்தவன்
வாசலில் காவல்த்துறையினர் வருவதைக்கண்டு 
அப்படியே மயங்கிவிழுந்தான்.....
 
தொடரும்.......
 
  • கருத்துக்கள உறவுகள்

கௌரவமாய் மனிசிட்ட உதை வாங்கியிருக்கலாம், மாமியாரிட்ட உதை வாங்குவது கொஞ்சம் கேவலம் மாதிரி இல்லையா ....ம்...ம்... முழுக்க முழுகினாப் பிறகு முகமட்டுக்கு முக்காடு எதற்கு...!! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறாக மாமியாரிடம் உதைவாங்கிய முகமட் பிரான்சில் அகதியாக தஞ்சம் கோரினான்.. :unsure: 'என்னைப்போல் ஒருவன்' எனும் அடிப்படையில் விசுகு அண்ணாவிடம் கதை சொன்னான்.. :icon_idea::D

Edited by இசைக்கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.