Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பியஒன்றியம் விடுதலைப்புலிகள் மீது மீளவும் தடை! ரணிலின் கைங்கரியம்!!

Featured Replies

 

LTTE-LOGO.jpg?w=300

 

 

 

 

 

 

 

 

 

 

 

விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய தடை மீளவும் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.

தற்போதை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவினதும் முயற்சியினாலேயே இது சாத்தியமானது எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்திற்கொள்ளாது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளின் தடையை நீடித்துள்ளது என வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகளின் தடையை நீடிக்க முடிந்துள்ளது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்பு கொண்டு இந்த தடையை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த நவம்பரில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பெரட்ரிக்கா மொக்ஹெரன்னியுடன் தொடர்புகொண்டு இந்த தடையை நீடிக்குமாறு கோரியிருந்தார் என்றும் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

http://tamilleader.com/?p=47901

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

LTTE-LOGO.jpg?w=300

 

விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய தடை மீளவும் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.

தற்போதை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவினதும் முயற்சியினாலேயே இது சாத்தியமானது எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

 

இச் செய்தியை சிறிலங்கா அரசு மட்டுமே அறிவித்துள்ளது. இச்செய்தி உண்மையாக இருக்குமேயானால் இதன் பின்புலத்தில் மோடி விளையாட்டுகள் நிறையவே நடைபெற்றிருக்கும் என்பதும் உண்மை. :(  

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே.

செய்தி உண்மையாயின் - இதில் மோடி ரணிலின் பங்கு பெரிதாய் இல்லை.

நீதிமன்ற தீர்ப்பு வந்த போதே இதை இங்கே எதிர்வுகூறியிருந்தேன்.

ஆப்பை கேட்டு வாங்குவதற்கு எம்மை விட்டால் ஆக்களில்லை.

வருடம் வருடம் இதை செய்யாமல் நிரந்தரை தடை விதித்தால் பிரச்சனை தீர்ந்தது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருடம் வருடம் இதை செய்யாமல் நிரந்தரை தடை விதித்தால் பிரச்சனை தீர்ந்தது .

உமக்கு எங்கையும் முட்டுதே? 

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கை அரசுக்கும் புலிகாச்சலில் மூலக்கடுப்பு வந்து அவர்களால் இருக்கவும் முடியவில்லை நிற்கவும் முடியவில்லை. ஆட்சி மாற்றம் தமிழருக்கு புதிதாக ஒன்றையும் கொண்டுவந்துவிடவில்லை. இதே நிலைமை தொடர்ந்து இருந்தால் தான் சுமுக நிலை திரும்பாமல் பார்த்துக்கொள்ள அவர்களுக்கும்(ஸ்ரீலங்கா அரசு) வசதியாக இருக்கும். சர்வதேச விசாரணை தவிர்ப்பு, விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் ஆதரவாளர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய விபரம் வெளிவிடாமல் தாமதம் செய்தல், போர்குற்ற விசாரணை என்பதுபோன்ற விடயங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளை மறுதலிக்க வாய்ப்புகளும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

வருடம் வருடம் இதை செய்யாமல் நிரந்தரை தடை விதித்தால் பிரச்சனை தீர்ந்தது .

 

 

அண்ணை

அடக்கி  வாசிக்கின்றோம் என்று ஆடாதீர்கள்

பழி தீர்க்க உங்களுக்கு மட்டுமல்ல எமக்கும் தெரியும்

காலம் பதில் சொல்லும்

அதுவரை...............

  • கருத்துக்கள உறவுகள்

எமது கோடரிக்காம்புகளை திருத்தவே முடியாது.

எமது கோடரிக்காம்புகளை திருத்தவே முடியாது.

எதற்கும் ஒருக்கா கண்ணாடியை பாருங்கோ 

அப்பாவி பொது மக்களை பலி கொடுத்து விட்டு நாட்டைவிட்டு ஓடிய கோடரிகாம்பு ஒன்று தெரியும் .

தடை  ஒன்று  இருக்குவரை  புலி ஒன்று  வாழும்  உலகத்தில் மக்கள் மறந்தாலும் இவர்கள் வருடம் வருடம்  நினைவுக்கு  கொண்டு வருவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் ஒருக்கா கண்ணாடியை பாருங்கோ 

அப்பாவி பொது மக்களை பலி கொடுத்து விட்டு நாட்டைவிட்டு ஓடிய கோடரிகாம்பு ஒன்று தெரியும் .

 

நான் ஓடியது பிழையாக இருக்கலாம். ஆனால் நாட்டுக்காக போராடியவர்களை போராளிகள் என்று தான் சொல்கிறேன். ஆனால் நாட்டுக்காக போராட சென்று விட்டு சக இயக்கத்தை பயங்கரவாதி என்பதை ஆதரிப்பதால்  கண்ணாடியை பார்க்க வேண்டிய அவசியம் உங்களுக்கு தான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஓடியது பிழையாக இருக்கலாம். ஆனால் நாட்டுக்காக போராடியவர்களை போராளிகள் என்று தான் சொல்கிறேன். ஆனால் நாட்டுக்காக போராட சென்று விட்டு சக இயக்கத்தை பயங்கரவாதி என்பதை ஆதரிப்பதால்  கண்ணாடியை பார்க்க வேண்டிய அவசியம் உங்களுக்கு தான் உள்ளது.

 

 

இதில

இசுலாமியர்களது போராட்டத்தில் கருத்து முரண்பாடு இருக்கலாமாம்

ஆனால் நக்கலடிக்கக்கூடாதாம்..

அண்ணையின் அண்மைய உபச்சாரம்.... :( 

எனது இயக்கமோ சக இயக்கமோ கொலை செய்தால் அது கொலைதான் அதேபோல பயங்கரவாதம் செய்தால் பயங்கரவாதிகள் தான் .

 

இயக்கங்களில் இருந்த பலர் தாங்கள் விட்ட பிழைகளை அப்ப அறியாமல் செய்துவிட்டோம் என்று தமது பிழைகளை  ஒப்புகொள்ளுகின்றார்கள் ஓடிவந்து கொடிபிடிக்கும் வாலுகள் இப்பவும் ஒற்றை காலில் நிற்பதுதான் வேடிக்கை .

  • கருத்துக்கள உறவுகள்

எனது இயக்கமோ சக இயக்கமோ கொலை செய்தால் அது கொலைதான் அதேபோல பயங்கரவாதம் செய்தால் பயங்கரவாதிகள் தான் .

 

இயக்கங்களில் இருந்த பலர் தாங்கள் விட்ட பிழைகளை அப்ப அறியாமல் செய்துவிட்டோம் என்று தமது பிழைகளை  ஒப்புகொள்ளுகின்றார்கள் ஓடிவந்து கொடிபிடிக்கும் வாலுகள் இப்பவும் ஒற்றை காலில் நிற்பதுதான் வேடிக்கை .

உங்கள் அளவுக்கு முதுகை வளைத்து சொறிலங்காவின் காலை நக்க தன்மானம் இடம் குடுக்கவில்லை மகிந்த வந்தாலும் மைதிரி வந்தாலும் எங்களுக்கு செய்த கொடுமைக்கு எதிர்ப்பு காட்ட மழையோ குளிரோ போகின்ரம் என்ன செய்வது உங்களை விட அதிகமாகவே சோத்துல் உப்பு போட்டு சாப்பிட்டு விட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது இயக்கமோ சக இயக்கமோ கொலை செய்தால் அது கொலைதான் அதேபோல பயங்கரவாதம் செய்தால் பயங்கரவாதிகள் தான் .

 

இயக்கங்களில் இருந்த பலர் தாங்கள் விட்ட பிழைகளை அப்ப அறியாமல் செய்துவிட்டோம் என்று தமது பிழைகளை  ஒப்புகொள்ளுகின்றார்கள் ஓடிவந்து கொடிபிடிக்கும் வாலுகள் இப்பவும் ஒற்றை காலில் நிற்பதுதான் வேடிக்கை .

 

அப்படி எனில் அமெரிக்கனும் பயங்கரவாதி தான்.அதற்கு கொடி பிடிப்பீர்களா?

நீங்கள் ஒட்டுக்குழு வாலாக இருக்கும் போது ஏன் நாங்கள் புலி வாலாக இருக்க முடியாது??

  • கருத்துக்கள உறவுகள்

[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 06:22.31 AM GMT ]

மஹிந்த அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில நபர்கள் மீது விதித்திருந்த தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதன்படி 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு மைத்திரிபால அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இது தொடர்பிலான அறிவிப்பொன்றை அண்மையில் பாராளுமன்ற அமர்வின் போதும் தெரிவித்திருந்தார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் பரவுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் போலியான வதந்திகளை பரப்பியிருந்தது.

இதனாலேயே குறித்த புலம்பெயர் அமைப்புக்களுக்கு கடந்த கால அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அரசாங்கத்தின் தவறான நிலைப்பாட்டை நீக்குவதென தீர்மானித்து தற்போதைய அரசாங்கம் இதுமாதிரியான ஒரு தீர்மானத்தை எட்டியுள்ளது.

இதன் அடிப்படையிலேயே குறித்த புலம்பெயர் மற்றும் நபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் இத் தீர்மானத்தினால் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

அத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கம் சட்டபூர்வமாக்குவதற்கு தீர்மானித்துள்ளமை கனடிய வாழ் தமிழ் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது உலக தமிழர்கள் பேரவை இத்தடையுத்தரவை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlwyJ.html

 

எதற்கும் ஒருக்கா கண்ணாடியை பாருங்கோ 

அப்பாவி பொது மக்களை பலி கொடுத்து விட்டு நாட்டைவிட்டு ஓடிய கோடரிகாம்பு ஒன்று தெரியும் .

கண்ணாடியில் கோடரி காம்பு தெரியுதோ இல்லையோ அதை இன்னொரு கோடரிக்காம்பு சொல்லக்கூடாது.  :D

உங்கள் அளவுக்கு முதுகை வளைத்து சொறிலங்காவின் காலை நக்க தன்மானம் இடம் குடுக்கவில்லை மகிந்த வந்தாலும் மைதிரி வந்தாலும் எங்களுக்கு செய்த கொடுமைக்கு எதிர்ப்பு காட்ட மழையோ குளிரோ போகின்ரம் என்ன செய்வது உங்களை விட அதிகமாகவே சோத்துல் உப்பு போட்டு சாப்பிட்டு விட்டம்.

புளொட் சோத்து பாசலினால் உலக புகழ் பெற்றது எல்லோருக்கும் தெரியும். 
ஆனால் உப்பு போடாமல் சாப்பிட்டார்கள் என்பது இப்பதான் தெரியுது.  :D
புளொட்டுக்கு சோத்து பாசல் கட்டிய எங்கள் மக்கள்  ஏன் உப்பு போட
மறந்தார்கள் என்று புரியவில்லை. அவர்களுக்கு உப்பு போட்டும் பிரயோசனம் 
இல்லை என்று நினைத்தார்கள் போலும்.  :lol:  :icon_idea:

 

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் தமிழ் ஈழம் வழங்கவும் மைத்திரிபால தீர்மானித்துள்ளார்.

இப்படிக்கு தமிழ் வின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி எனில் அமெரிக்கனும் பயங்கரவாதி தான்.அதற்கு கொடி பிடிப்பீர்களா?

நீங்கள் ஒட்டுக்குழு வாலாக இருக்கும் போது ஏன் நாங்கள் புலி வாலாக இருக்க முடியாது??

 

அப்பிடிப்போடு அரிவாளை.....

எந்த ஓட்டு குழுவின் வாலை பிடித்தோம் ,ஓட்டு குழு வாலை பிடிக்க விரும்பியிருந்தால் நாட்டிற்கு போயிருப்போம் ..ஒன்றும் வேண்டாம் என்றுதான் வெளிநாடு வந்தோம் .

வால் பிடிப்பது எனது சரிதிரத்தில் இல்லை 

 

அது சிலருக்கு மட்டும் கை வந்த கலை.

 

அடி அப்படி அதுதான் பலர் இங்கு புசத்துகின்றார்கள்,வேறு  பிதற்றல் தொடருது

.

ஆழ்ந்த அனுதாபங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஓட்டு குழுவின் வாலை பிடித்தோம் ,ஓட்டு குழு வாலை பிடிக்க விரும்பியிருந்தால் நாட்டிற்கு போயிருப்போம் ..ஒன்றும் வேண்டாம் என்றுதான் வெளிநாடு வந்தோம் .

வால் பிடிப்பது எனது சரிதிரத்தில் இல்லை 

 

அது சிலருக்கு மட்டும் கை வந்த கலை.

 

அடி அப்படி அதுதான் பலர் இங்கு புசத்துகின்றார்கள்,வேறு  பிதற்றல் தொடருது

.

ஆழ்ந்த அனுதாபங்கள் .

 

de_zpsba8b3d1a.jpg

:icon_mrgreen:

இதை இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சுத்தான் சொல்லி இருக்கு, அதுவும் ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் இந்த தடை வந்திருக்காம். 

 

இந்த தடை ஆண்டு தோறும் நீடிக்கப்படுமாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத புலியை வைச்சுத்தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சிறீலங்காவில் தனது நலனை பார்த்துக்க வேண்டிய பலவீன சூழல். அது என்ன செய்யும் பாவம்...! எல்லாருக்கும் புலி மேல சவாரி செய்வது தான் அவர்களுக்கு தெரிந்த ஒரே ராஜதந்திரம். :D:lol:

அய்யா மார்களே இங்கு இருக்கும் உறுப்பினர்  எல்லோரும் vote  போடுவோம்   யார்க்கு கூடுதல்  வாக்கு வருகிரதின்று  பார்போம் ..

  • கருத்துக்கள உறவுகள்

காகங்கள் இறக்கும்வரை கா கா என்று கரைந்து கொண்டுதான் இருக்கும்
அதற்கெல்லாம் வாக்கெடுப்பு நடாத்தினால் ...
மக்களுக்கு தினமும் வாக்கு போடுவது ஒரு வேலை ஆகிவிடும்.

 

ஜீவ பிராணிகளை தொந்தரவு செய்தல் ஆகாது அதலால்
அவர்களை அவர்கள் பாட்டில் கரைய விடுவதுதான் நலம்.

 

விரத நாளில் வேண்டுமானால் கொஞ்ச சோறை அள்ளி எரிந்து விடலாம்.
சோறு காகங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

நன்றிகடனுக்கு அவை உங்கள் தலயில் கக்கா போயிட்டு போகும்
குளிச்சுட்டு போகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.