Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையை கோரும் - இரா.சம்பந்தன்

Featured Replies

ஐக்கிய இலங்கை என்றாலே ஒற்றையாட்சி , ஒற்றையாட்சி என்றாலே சுயநிர்ணயத்தை பற்றி கதைக்க முடியாது விஷயம் முடிஞ்சிது  .....அதுக்கு போய் ஏன் இப்படி மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகினம் .
எப்படியோ கடினமான புரியாத தமிழ் சொற்களை எடுத்து விட்டால் முட்டாள் தமிழ் மக்கள் நம்பிவிடுவினம் என்று நினைக்கிறார்கள் போலை  

ஐக்கிய ராட்சியம், அமெரிக்கா, கனடா, சுவிஸ், நோர்வே, ஏன் இந்தியாவே மட்டுப்படுத்தப்பட்ட சுய நிர்ணய அலகுகளைக் கொண்ட நாடுகள்தான். ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை கொண்ட அலகு இருக்க முடியாதென்று நீங்கள் கூறுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

Edited by ஜீவன் சிவா

  • Replies 54
  • Views 2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

அன்று அமிர் சொன்னதுக்கும் இன்று புலத்தில் இருந்து நாம் சொல்வதற்கும் வித்தியாசமில்லை.2077 இலும் எமது தாயகசந்ததியினர் சுயநிர்ணயத்தைப்பற்றி மேடைகளிலும் இணையத்திலும் கூவிகொண்டிருக்கலாம் ......அது தமிழ்மக்களின் ஜனநாயக உரிமை என்று சொல்லிகொண்டே சிங்களமும் ஏனையோரும் காலம் கடத்துவார்கள்

.....ஆயுதம் ஏந்திய போராளிகள் (சந்ததியார் போன்ற போராளிகள் உள்ளடங்களாக)சொன்னது வெகுசீக்கிரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கு......

அமிர்  இரண்டு இடங்களில் பேசினார்

தேர்தல் மேடைகளில்

மற்றது பாராளுமன்றத்தில்...

இரண்டும் வீரமிகு பேச்சுக்கள்

அத்துடன் முடிந்தது அவரது பணி

இவற்றை செயலாக்கவேண்டும் என்று அவர் சொல்லமாட்டார்

செயலாக்க முற்பட்ட போது தான் அவருடனேயே பிரச்சினை வந்தது

ஏனெனில் சுயநிர்ணய உரிமை என்ன என்பதை அவர் உணரவே இல்லை

உணர்ந்திருந்தால்

பொது மக்கள் மீது இராணுவம் அட்டூழியம் செய்தபோது

அவர்கள் அப்படிச்செய்யவில்லை

வெறும் ரவைகளைத்தான் பாவிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கமுடியாது..

கனடாவை வேறு மேற்கோள் காட்டினாராமே...

வெளியில் கனக்கத்தான் படித்திருக்கிறார்

உள்ளே தான்........................???

 

அதன் பலனைத்தான் இப்ப எல்லோருமாக அனுபவித்தார்கள் .

பாவம் மக்கள் பயங்கரவாதிகளுக்கு பயந்து எதுவும் செய்யமுடியாதநிலை .

புலிகள் பயங்கரவாதிகள் என்றால் இப்பொழுது சம்பந்தனும் சுமந்திரனும் செய்வது என்ன ? ஒரு வகை அடக்கு முறை அரசியல் தானே செய்கின்றார்கள் ... இது மட்டும் உங்கள் கண்களுக்கு ஜனநாயகமா ? ... 

புலிகள் பயங்கரவாதிகள் என்றால் இப்பொழுது சம்பந்தனும் சுமந்திரனும் செய்வது என்ன ? ஒரு வகை அடக்கு முறை அரசியல் தானே செய்கின்றார்கள் ... இது மட்டும் உங்கள் கண்களுக்கு ஜனநாயகமா ? ... 

ஒரு பெரிய வித்தியாசம் என்ன வென்றால் இவர்களை மக்கள தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். ஆனால் புலிகளை யாரும் தேர்ந்தெடுக்கவில்லை - தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்று தாமே தம்மை ழைத்துக் கொண்டார்கள். கூட்டமைப்புக்குள் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்பது சரியே. ஆனால் புலிகளுக்குள் உட்கட்சி ஜனநாயகம் மட்டுமில்லை வெளியேயும்  ஜனநாயகம் இருந்ததில்லை. இவர்களிற்கு எப்பவுமே ஜனநாயகவாதிகளை கண்டால் பயம். ஒன்றில் போட்டுத் தள்ளினார்கள் அல்லது கூப்பிட்டு கூட்டமைப்பாக்கினார்கள். ஏன் துணிவிருந்தால் தாங்கள் ஏற்கனவே பதிந்து வைத்திருந்த கட்சியில் தேர்தலில் நின்றிருக்கலாமே? என்ன இழவுக்கு கூட்டமைப்பை தமிழரசுக்கட்சியை மையமாக வைத்து உருவாக்கினார்கள். மக்களை சந்திப்பதில் அவ்வளவு பயம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிற்குறிப்பு

அன்புடன் ரணில், சந்திரிகா, மைத்திரி மற்றும் இந்திய தெற்கு மாடத்தினருக்கு,

 இது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மட்டுமே. மற்றப்படி நாம் இதையங்களால் இணைந்ததவர்கள் என வாசிச்சுக்கொள்ளவும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரிய வித்தியாசம் என்ன வென்றால் இவர்களை மக்கள தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். ஆனால் புலிகளை யாரும் தேர்ந்தெடுக்கவில்லை - தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்று தாமே தம்மை ழைத்துக் கொண்டார்கள். கூட்டமைப்புக்குள் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்பது சரியே. ஆனால் புலிகளுக்குள் உட்கட்சி ஜனநாயகம் மட்டுமில்லை வெளியேயும்  ஜனநாயகம் இருந்ததில்லை. இவர்களிற்கு எப்பவுமே ஜனநாயகவாதிகளை கண்டால் பயம். ஒன்றில் போட்டுத் தள்ளினார்கள் அல்லது கூப்பிட்டு கூட்டமைப்பாக்கினார்கள். ஏன் துணிவிருந்தால் தாங்கள் ஏற்கனவே பதிந்து வைத்திருந்த கட்சியில் தேர்தலில் நின்றிருக்கலாமே? என்ன இழவுக்கு கூட்டமைப்பை தமிழரசுக்கட்சியை மையமாக வைத்து உருவாக்கினார்கள். மக்களை சந்திப்பதில் அவ்வளவு பயம்.

ஜீவன், புலிகள் கட்சி அரசியல் செய்வதற்கு அமைப்பைத் தொடங்கவில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்கு தனியரசே ஒரேயொரு தீர்வு என்ற கொள்கையை இறுதிவரை கடைப்பிடித்தவர்கள். சும்மா சகட்டுமேனிக்கு புலிகள் மக்களால் தெரிவுசெய்யப்படாத அமைப்பு என்று சொல்வது ஏற்புடையதல்ல.

புலிகளின் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லையென்றால் ஏன் நோர்வே சமாதான நடவடிக்கைகளுக்கு புலிகளை நாடியது? பேசாமல் கூட்டமைப்பு (கூட்டணி) கட்சியோடு பேசியிருக்கலாமே!

89 இல் ஈரோஸ் புலிகளின் ஆசீர்வாதத்தோடு தேர்தலில் நின்றபோது மக்கள் பெருமளவில் வாக்களித்து அவர்களில் 13 பேரைத் தெரிவு செய்தார்கள். இந்திய இராணுவத்தின் ஆதரவோடு தேர்தலில் குதித்த கூட்டணியும், ஈபிஆர் எல் எவ்வும் 10 ஆசனங்களையே பெற்றிருந்தன. தளபதி அமிர் தேர்தலில் தோற்று பின்கதவால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.

2004 இல் புலிகளுக்கு இருந்த பேராதரவு காரணமாகவே கூட்டமைப்பு 22 ஆசனங்களை வெல்லமுடிந்தது என்பதை வசதியாக மறந்துவிடலாம்!

விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கான ஆதரவு இப்போதும் இருப்பதால்தான் புலிகளை வைத்துத்தான் கூட்டமைப்பும் மக்களை தங்களுக்கு வாக்களிக்கக் கோருகின்றது. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டு சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க உறுதியான ஆதரவு தேவை என்று கேட்கின்றார்கள்.

விரும்பினால் வெளிப்படையாக புலிகள் அரசியல் ரீதியாக தவறிழைத்துவிட்டார்கள். அவர்கள் பயணித்த பாதை பிழை என்று சொல்லி மக்களை தமக்கு வாக்களிக்க கூட்டமைப்பு முன்வந்தால் அவர்களின் அரசியல் நேர்மையை மெச்சலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். பாராளுமன்றக் கதிரைகளுக்கு மட்டும் புலிகள் வேண்டும் அவர்களுக்கு!!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரிய வித்தியாசம் என்ன வென்றால் இவர்களை மக்கள தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். ஆனால் புலிகளை யாரும் தேர்ந்தெடுக்கவில்லை - தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்று தாமே தம்மை ழைத்துக் கொண்டார்கள். கூட்டமைப்புக்குள் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்பது சரியே. ஆனால் புலிகளுக்குள் உட்கட்சி ஜனநாயகம் மட்டுமில்லை வெளியேயும்  ஜனநாயகம் இருந்ததில்லை. இவர்களிற்கு எப்பவுமே ஜனநாயகவாதிகளை கண்டால் பயம். ஒன்றில் போட்டுத் தள்ளினார்கள் அல்லது கூப்பிட்டு கூட்டமைப்பாக்கினார்கள். ஏன் துணிவிருந்தால் தாங்கள் ஏற்கனவே பதிந்து வைத்திருந்த கட்சியில் தேர்தலில் நின்றிருக்கலாமே? என்ன இழவுக்கு கூட்டமைப்பை தமிழரசுக்கட்சியை மையமாக வைத்து உருவாக்கினார்கள். மக்களை சந்திப்பதில் அவ்வளவு பயம்.

அப்படியாயின் கூட்டமைப்பு என்ற கட்சியை  இளைஞர்களுக்கு விட்டு விட்டு சுயேட்சையாக கூட்டமைப்பில் உள்ளவர்கள் வென்று காட்டட்டும் பார்க்கலாம். பிழைப்பு நடத்துவது புலிகளை வைத்து. அதற்குள் வீராப்பு வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரிய வித்தியாசம் என்ன வென்றால் இவர்களை மக்கள தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். ஆனால் புலிகளை யாரும் தேர்ந்தெடுக்கவில்லை - தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்று தாமே தம்மை ழைத்துக் கொண்டார்கள். கூட்டமைப்புக்குள் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்பது சரியே. ஆனால் புலிகளுக்குள் உட்கட்சி ஜனநாயகம் மட்டுமில்லை வெளியேயும்  ஜனநாயகம் இருந்ததில்லை. இவர்களிற்கு எப்பவுமே ஜனநாயகவாதிகளை கண்டால் பயம். ஒன்றில் போட்டுத் தள்ளினார்கள் அல்லது கூப்பிட்டு கூட்டமைப்பாக்கினார்கள். ஏன் துணிவிருந்தால் தாங்கள் ஏற்கனவே பதிந்து வைத்திருந்த கட்சியில் தேர்தலில் நின்றிருக்கலாமே? என்ன இழவுக்கு கூட்டமைப்பை தமிழரசுக்கட்சியை மையமாக வைத்து உருவாக்கினார்கள். மக்களை சந்திப்பதில் அவ்வளவு பயம்.

புலிகளுக்கு இலங்கையின் தேர்தலில் நம்பிக்கை இருக்கவில்லை, நேரடியாக தேர்தலில் ஈடுபட்டால் அமைப்பு உடைந்துவிடும் எதிரி சுலபமாக ஊடுருவிடலாம் என்ற காரணத்தாலேயே தமது அரசியல் கட்சியையும் தமது போராளிகளையும் தேர்தலில் ஈடுபடுத்தவில்லை. ஆனால் 2000ம் ஆண்டிற்கு பின்னர் ஏற்றபட்ட மாற்றம் , அழுத்தம் காரணமாக எல்லோரையும் அனுசரித்து போக முடிவெடுத்தார்கள். புலிகள் நேரடியாக தேர்தலில் நின்றிருந்தால் பாரியளவில் வென்றிருப்பார்கள். 

2004 தேர்தலில் கூட்டமைப்பு புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றிருந்தது. 

ஏற்கனவே நான் எழுதியதுதான் கூட்டமைப்பு 2001 தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியாக போட்டியிட்டது, பின்னர் ஆனந்த சங்கரி & உதய சூரியன் சின்னம் பிரச்சனை (நீதி மன்றில் ஆனந்த சங்கரி உதயசூரியன் சின்னத்தின் உரிமை வென்றதால்) காரணமாக தமிரசுக் கட்சியை 1970 இன் பின்னர் புலிகள் தூசு தட்டி உயிர்ப்பித்தனர். 

ஒரு பெரிய வித்தியாசம் என்ன வென்றால் இவர்களை மக்கள தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். ஆனால் புலிகளை யாரும் தேர்ந்தெடுக்கவில்லை - தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்று தாமே தம்மை ழைத்துக் கொண்டார்கள். கூட்டமைப்புக்குள் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்பது சரியே. ஆனால் புலிகளுக்குள் உட்கட்சி ஜனநாயகம் மட்டுமில்லை வெளியேயும்  ஜனநாயகம் இருந்ததில்லை. இவர்களிற்கு எப்பவுமே ஜனநாயகவாதிகளை கண்டால் பயம். ஒன்றில் போட்டுத் தள்ளினார்கள் அல்லது கூப்பிட்டு கூட்டமைப்பாக்கினார்கள். ஏன் துணிவிருந்தால் தாங்கள் ஏற்கனவே பதிந்து வைத்திருந்த கட்சியில் தேர்தலில் நின்றிருக்கலாமே? என்ன இழவுக்கு கூட்டமைப்பை தமிழரசுக்கட்சியை மையமாக வைத்து உருவாக்கினார்கள். மக்களை சந்திப்பதில் அவ்வளவு பயம்.

சுதந்திர வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை அவர்கள் தாமாகவே பிறப்பவர்கள் .அந்த வகையில் இறைவன் படைத்த பெரும் மகா வீரன் தான் எங்கள் தேசிய தலைவர் .அவர் உருவாக்கியவர்கள் தான் உலகமே வியர்ந்து பார்த்த புலிகள் என்ற பெரும் தமிழர் சேனை . இதனை யாரும் தேர்வு செய்ய முடியாது ...இந்த அடிப்படை விளக்கம் கூட இல்லாதவரா நீங்கள் .

தேர்வு செய்வதற்கு அவர்கள் கட்சி நடத்தவில்லை அது புனித போராட்டம் விடுதலைக்கான பயணம் .
தமிழர் ராட்சியத்திட்கனா போராட்டம் . கேவலம் கெட்ட இலங்கை அரசியல் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய ராட்சியம், அமெரிக்கா, கனடா, சுவிஸ், நோர்வே, ஏன் இந்தியாவே மட்டுப்படுத்தப்பட்ட சுய நிர்ணய அலகுகளைக் கொண்ட நாடுகள்தான். ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை கொண்ட அலகு இருக்க முடியாதென்று நீங்கள் கூறுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

அண்ணை ஜீவன் சிவா 
நீங்கள் இலங்கையை  ஐக்கிய இராட்சியம் ,அமெரிக்கா ,கனடா இத்தியாதிகள் என்று நினைத்து கொண்டா பேசுகிறீர்கள்....?
அண்ணன் இது சொறிலங்கா ...உலகிலே ஆக கேவலம்கெட்ட இனம் பெரும்பாண்மையாக வசிக்கும் நாடு ...யார் சுயநிர்ணய  அலகு வேண்டாமென்றார் 
எடுத்து காட்டுங்கள் என்பதே எனது சவால்....ஐம்பதுக்கு ஐம்பது , சமஷ்ட்டி , மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி ,13 ++ இப்படி கதைத்து  வாங்கி கட்டியது காணாதா ...? ஆயுதத்தை தூக்கிய பிறகு தான் நாங்கள் எல்லோரின் கண்களுக்கும் தெரிந்தோம் 
உந்த சுயநிர்ணய  அலகு எப்படி இருக்கும் அதற்க்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கும் என்பதையும் பார்க்க ஆவலாய் உள்ளது அண்ணை ...எப்படியும் எங்களிண்ட ஆயுள்காலத்திட்குள் எடுத்து தந்து விடுவீர்களா ...இல்லை கடைசி ஐநூறு வருடங்களாவது எடுக்குமா....எப்ப எடுத்து தருவீர்கள் என்று சரியாக சொல்லிவிடுங்கோ ...அதை விட்டு விட்டு அதோ அங்கே அலகு தெரிகிறது ..இதோ இங்கே அலகு தெரிகிறது ...அலகு ஏற்றுமதியாகி விட்டது
எப்படியும் வந்துவிடும் என்று கண்ட கண்ட  கரடிகளை எல்லாம்  விட்டு எங்களை பேயன்கள் ஆக்கி விட்டிடாதீங்கள்  

புலிகள் எப்பவுமே கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்கள் ... போராடினார்கள் ...சிங்களத்தையும் உலக வல்லாதிக்கத்தையும் எங்களுக்கு புரிய வைத்தார்கள் ... சிங்களத்தை அல்லது இந்தியா எவரையும் நம்பவில்லை ... ஆனால் இந்த கூத்தமைப்பு என்ன சொல்கின்றது ... சிங்களம் தர இணங்கி விட்டது ....என்றும் 
மனத்தால் இணைந்துள்ளோம் என்றும் ... என்ன இது வாலிப வயது காம விளையட்டா ...

தமிழ் மக்களின் தீர்வு உங்கள் எல்லாருக்கும் பம்மாத்து அரசியலகிவிட்டதா ? 

கேவலம் 13 இணையே தரமாட்டன் என்கிறான் உங்களுக்கு இப்ப இணக்க அரசியல் கேட்குது ... பச்சிளம் குழந்தைக்கும் புரியும் என்ன மன நிலையில் சிங்களம் 50 களில் இருந்து இப்பவரை உள்ளான் என்று ..இந்த கிழட்டு பழுத்த கோமாளி அரசியல் வாதிகளுக்கு இப்பவும் புரியவில்லையா அல்லது சித்தம் தெளியவில்லையா ? 

அவர்களின் கபட மற்றும் குழி தோண்டி புதைக்கும் வேலையை மட்டும் இங்க கொஞ்ச பேர் ராஜதந்திர அரசியலாம் 

பொறுங்கள் ஜனநாயக போராளிகள் கட்சியின் நடவடிக்கைகள் புலிகளை போன்று தெளிவாக உள்ளதாக மக்கள் உணரும் போது இந்த கோமாளிகள் கூத்தமைப்பு தலையில் மாமூடை சுமந்து விற்கும் நிலை வெகு விரைவில் உருவாகும் ....

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாக்கள்

முகங்கள் தெரியும் காலமிது

 

இங்கு எழுதப்படும் சிலரது கருத்துக்களைப்பார்த்தாலே தெரியும்

போராட்ட காலத்தில் எவ்வளவு தூரம் போராட்டத்திலிருந்தும்

மக்களிலிருந்தும் தள்ளியிருந்தார்கள் என்பது....

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன், புலிகள் கட்சி அரசியல் செய்வதற்கு அமைப்பைத் தொடங்கவில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்கு தனியரசே ஒரேயொரு தீர்வு என்ற கொள்கையை இறுதிவரை கடைப்பிடித்தவர்கள். சும்மா சகட்டுமேனிக்கு புலிகள் மக்களால் தெரிவுசெய்யப்படாத அமைப்பு என்று சொல்வது ஏற்புடையதல்ல.

புலிகளின் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லையென்றால் ஏன் நோர்வே சமாதான நடவடிக்கைகளுக்கு புலிகளை நாடியது? பேசாமல் கூட்டமைப்பு (கூட்டணி) கட்சியோடு பேசியிருக்கலாமே!

89 இல் ஈரோஸ் புலிகளின் ஆசீர்வாதத்தோடு தேர்தலில் நின்றபோது மக்கள் பெருமளவில் வாக்களித்து அவர்களில் 13 பேரைத் தெரிவு செய்தார்கள். இந்திய இராணுவத்தின் ஆதரவோடு தேர்தலில் குதித்த கூட்டணியும், ஈபிஆர் எல் எவ்வும் 10 ஆசனங்களையே பெற்றிருந்தன. தளபதி அமிர் தேர்தலில் தோற்று பின்கதவால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.

2004 இல் புலிகளுக்கு இருந்த பேராதரவு காரணமாகவே கூட்டமைப்பு 22 ஆசனங்களை வெல்லமுடிந்தது என்பதை வசதியாக மறந்துவிடலாம்!

விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கான ஆதரவு இப்போதும் இருப்பதால்தான் புலிகளை வைத்துத்தான் கூட்டமைப்பும் மக்களை தங்களுக்கு வாக்களிக்கக் கோருகின்றது. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டு சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க உறுதியான ஆதரவு தேவை என்று கேட்கின்றார்கள்.

விரும்பினால் வெளிப்படையாக புலிகள் அரசியல் ரீதியாக தவறிழைத்துவிட்டார்கள். அவர்கள் பயணித்த பாதை பிழை என்று சொல்லி மக்களை தமக்கு வாக்களிக்க கூட்டமைப்பு முன்வந்தால் அவர்களின் அரசியல் நேர்மையை மெச்சலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். பாராளுமன்றக் கதிரைகளுக்கு மட்டும் புலிகள் வேண்டும் அவர்களுக்கு!!

https://www.facebook.com/thinappuyal/videos/vb.1417588658492355/1590660987851787/?type=2&theater

 

Edited by Maruthankerny
same stuff twice

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன், புலிகள் கட்சி அரசியல் செய்வதற்கு அமைப்பைத் தொடங்கவில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்கு தனியரசே ஒரேயொரு தீர்வு என்ற கொள்கையை இறுதிவரை கடைப்பிடித்தவர்கள். சும்மா சகட்டுமேனிக்கு புலிகள் மக்களால் தெரிவுசெய்யப்படாத அமைப்பு என்று சொல்வது ஏற்புடையதல்ல.

புலிகளின் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லையென்றால் ஏன் நோர்வே சமாதான நடவடிக்கைகளுக்கு புலிகளை நாடியது? பேசாமல் கூட்டமைப்பு (கூட்டணி) கட்சியோடு பேசியிருக்கலாமே!

89 இல் ஈரோஸ் புலிகளின் ஆசீர்வாதத்தோடு தேர்தலில் நின்றபோது மக்கள் பெருமளவில் வாக்களித்து அவர்களில் 13 பேரைத் தெரிவு செய்தார்கள். இந்திய இராணுவத்தின் ஆதரவோடு தேர்தலில் குதித்த கூட்டணியும், ஈபிஆர் எல் எவ்வும் 10 ஆசனங்களையே பெற்றிருந்தன. தளபதி அமிர் தேர்தலில் தோற்று பின்கதவால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.

2004 இல் புலிகளுக்கு இருந்த பேராதரவு காரணமாகவே கூட்டமைப்பு 22 ஆசனங்களை வெல்லமுடிந்தது என்பதை வசதியாக மறந்துவிடலாம்!

விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கான ஆதரவு இப்போதும் இருப்பதால்தான் புலிகளை வைத்துத்தான் கூட்டமைப்பும் மக்களை தங்களுக்கு வாக்களிக்கக் கோருகின்றது. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டு சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க உறுதியான ஆதரவு தேவை என்று கேட்கின்றார்கள்.

விரும்பினால் வெளிப்படையாக புலிகள் அரசியல் ரீதியாக தவறிழைத்துவிட்டார்கள். அவர்கள் பயணித்த பாதை பிழை என்று சொல்லி மக்களை தமக்கு வாக்களிக்க கூட்டமைப்பு முன்வந்தால் அவர்களின் அரசியல் நேர்மையை மெச்சலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். பாராளுமன்றக் கதிரைகளுக்கு மட்டும் புலிகள் வேண்டும் அவர்களுக்கு!!

https://video-ord1-1.xx.fbcdn.net/hvideo-xtp1/v/t42.1790-2/11649792_1590664144518138_1346694603_n.mp4?efg=eyJybHIiOjQ4MCwicmxhIjo5MjB9&oh=2ab22bd83004d1f21cbda0ccb16c50a2&oe=559E7179

ஜீவன், புலிகள் கட்சி அரசியல் செய்வதற்கு அமைப்பைத் தொடங்கவில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்கு தனியரசே ஒரேயொரு தீர்வு என்ற கொள்கையை இறுதிவரை கடைப்பிடித்தவர்கள். சும்மா சகட்டுமேனிக்கு புலிகள் மக்களால் தெரிவுசெய்யப்படாத அமைப்பு என்று சொல்வது ஏற்புடையதல்ல.

புலிகளின் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லையென்றால் ஏன் நோர்வே சமாதான நடவடிக்கைகளுக்கு புலிகளை நாடியது? பேசாமல் கூட்டமைப்பு (கூட்டணி) கட்சியோடு பேசியிருக்கலாமே!

89 இல் ஈரோஸ் புலிகளின் ஆசீர்வாதத்தோடு தேர்தலில் நின்றபோது மக்கள் பெருமளவில் வாக்களித்து அவர்களில் 13 பேரைத் தெரிவு செய்தார்கள். இந்திய இராணுவத்தின் ஆதரவோடு தேர்தலில் குதித்த கூட்டணியும், ஈபிஆர் எல் எவ்வும் 10 ஆசனங்களையே பெற்றிருந்தன. தளபதி அமிர் தேர்தலில் தோற்று பின்கதவால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.

2004 இல் புலிகளுக்கு இருந்த பேராதரவு காரணமாகவே கூட்டமைப்பு 22 ஆசனங்களை வெல்லமுடிந்தது என்பதை வசதியாக மறந்துவிடலாம்!

விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கான ஆதரவு இப்போதும் இருப்பதால்தான் புலிகளை வைத்துத்தான் கூட்டமைப்பும் மக்களை தங்களுக்கு வாக்களிக்கக் கோருகின்றது. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டு சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க உறுதியான ஆதரவு தேவை என்று கேட்கின்றார்கள்.

விரும்பினால் வெளிப்படையாக புலிகள் அரசியல் ரீதியாக தவறிழைத்துவிட்டார்கள். அவர்கள் பயணித்த பாதை பிழை என்று சொல்லி மக்களை தமக்கு வாக்களிக்க கூட்டமைப்பு முன்வந்தால் அவர்களின் அரசியல் நேர்மையை மெச்சலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். பாராளுமன்றக் கதிரைகளுக்கு மட்டும் புலிகள் வேண்டும் அவர்களுக்கு!!

அரோகரா அரோகரா .

சதாம் ,கடாபி எல்லாம் தேர்தல் வைத்து 99% வீத வாக்குகளை அள்ளுவார்கள் .அதே அதே தான் புலிகள் பெற்ற வாக்குகளும் .ஏன் இப்படி ஈ பி டி பி யும் ஒருக்கா தேர்தலில் வென்றது .அது எப்படி நடந்து என்று அனைவருக்கும் தெரியும் .

மாத்தையா தலைமையில் தொடங்கிய அரசியல் கட்சிக்கு என்னாச்சு ? ஜனநாயகத்தில் என்றும் நம்பிக்கை அற்றவர்கள் புலிகள் இது உலகு அறிந்த உண்மை ஆனால் நாலு வாலுகளுக்கு அது புரியுதில்லை வாக்கு போட்டவர்களின் விரலை வெட்டியவர்கள் .

புலிகள் போனபின் புலிவால் கஜேந்திரனுக்கு கட்டுகாசும் கிடைக்கவில்லை .கூட்டமைப்பு எத்தனை தரம் புலிகள் பிழை விட்டார்கள் சொல்லி விட்டது .தேர்தல் காலத்தில் அரசியல் வாதிகள் எல்லா பக்க வாக்குகளையும் அள்ள எவரையும் எதிர்த்து பேச மாட்டார்கள் .

நோர்வே மட்டுமல்ல இந்தியாவும் சமாதானத்திற்கு புலிகளைத்தான் நாடியது புலிகள் தான் பலமான  சக்தியாக இருந்தார்கள் ஜனாயக ரீதியில் அல்ல ஆயுதத்தால் .கூட்டமைப்புடன் பேச்சை வைத்து விட்டு தீர்வை எப்படி அமுல் படுத்துவது .

நீங்கள் சர்வாதிகாரக் நாட்டில் போய் குடியேறவேண்டிய ஆட்கள் ஓடி வந்து குடியேறியது முழுக்க ஜனநாயக நாடுகளில் ஆனால் சர்வாதிகாரம் தான் சரி என்று அடம் பிடிகின்றீர்கள் .

தேர்தலுக்கு என்றுமே முகம் கொடுக்காதவர்களை நின்றால் வென்றிருப்பார்கள் பதுங்கினால் அடிப்பார்கள் என்று சுய இன்பம் காணுங்கோ .

யாழில் நாலு பேர்கள் பச்சை குத்த மட்டும் கருத்து எழுதலாம் ஆனால் சர்வதேசத்தில் பதிவாக அது மாறாது .

புலிகளின் கடைசி ஒரு வருட போரின் போதும் மக்கள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள் என்பதும் உலகிற்கு தெரியும் .கிரிக்கெட் மாட்சுகள் கூ ட ஒழுங்காக நடந்தது இதுதான் மக்களின் பிரதிநிதிகளின் நிலை .

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழில் நாலு பேர்கள் பச்சை குத்த மட்டும் கருத்து எழுதலாம் ஆனால் சர்வதேசத்தில் பதிவாக அது மாறாது .

அண்ணைக்கு பச்சை என்றாலே பிடிக்காது

அதைச்செய்வதே இல்லை என எழுதியவர்

இப்ப கொஞ்ச நாளா

எங்காவது வாந்தி எடுத்திருந்தா

ஓடிவந்து முதல் பச்சை அண்ணையுடையது தான்....

கொள்கையில் சூரர் அண்ணை.....

புலிகள் - வெற்றி வெற்றி மகாத்தான வெற்றி .

மக்கள் - என்ன வெற்றி 

புலிகள் -ஜனநாயக தேர்தலில் படு வெற்றி 

மக்கள் -எத்தனை பேர் போட்டியிட்டார்கள் 

புலிகள் -நாங்கள் மட்டும் தான் .

மக்கள் -அப்ப போட்டியிட வந்த மற்றவர்கள் 

புலிகள் -போட்டு தள்ளியாச்சு

மக்கள் -ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வாலுகள் -இதுவல்லோ மக்கள் சக்தி

யாழ் உறவுகள் -உந்த வெற்றிக்கு ஒரு பச்சையை குத்து . 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் - வெற்றி வெற்றி மகாத்தான வெற்றி .

மக்கள் - என்ன வெற்றி 

புலிகள் -ஜனநாயக தேர்தலில் படு வெற்றி 

மக்கள் -எத்தனை பேர் போட்டியிட்டார்கள் 

புலிகள் -நாங்கள் மட்டும் தான் .

மக்கள் -அப்ப போட்டியிட வந்த மற்றவர்கள் 

புலிகள் -போட்டு தள்ளியாச்சு

மக்கள் -ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வாலுகள் -இதுவல்லோ மக்கள் சக்தி

யாழ் உறவுகள் -உந்த வெற்றிக்கு ஒரு பச்சையை குத்து . 

பாவம்

அண்ணைக்கு என்னவோ ஆச்சுது....

தள்ளி நிற்பது நமக்கு நல்லது...

  • கருத்துக்கள உறவுகள்

 

பாவம்

அண்ணைக்கு என்னவோ ஆச்சுது....

தள்ளி நிற்பது நமக்கு நல்லது...

தேர்தல் நெருங்க நெருங்க கூத்தமைப்பிட்கு நடுக்கம் கூடி காற்சட்டை ஈரமாகிவிட்டது போல ....
தேர்தல் வர வர வாத்தியார் மாருக்கும்   சின்ன பிராப்ளம்....படிப்பித்த பாடங்களே ஆக்களுக்கு மறக்குது 
இப்போதைக்கு நாம்  வகுப்புகளுக்கு போகாமல் இருப்பதே நல்லது 
  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி இணைத்த வீடியோவில் தலைவர் பிரபாகரன் சொன்னதுதான் இப்பவும் நடக்கின்றது.

கடந்த 35 வருடங்களில் மிதவாதம், ஜனநாயகம் பேசும் கூட்டமைப்பு எதையும் கற்கவில்லை என்றுதான் சொல்லமுடியும்.

இப்போது இணக்க அரசியல் செய்வதுதான் நோக்கம். ஆனால் அதனை வெளிப்படையாக மக்களுக்குச் சொல்லிச் செய்யாமல் அரசியல் வசனங்களை அள்ளிவிடுகின்றார்கள். சரியான மாற்றுத் தலைமை இல்லாமல் இருக்கும்வரை கூட்டமைப்பு அதிக எம்பிக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பலாம்தான். ஆனால் தாயகத்தையும், தேசியத்தையும், சுயநிர்ணய உரிமையையும் அடகுவைக்கும்போது மக்கள் கண்மூடி வாக்களிக்கப்போவதில்லை.

கூட்டமைப்பின் பல்லில்லாத பொக்கை வாயர்களை வைத்து பொரி சாப்பிடமுடியாது என்பதை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

 

மருதங்கேணி உங்கள் கருத்துக்களையும் எழுதங்களேன்.

அரோகரா அரோகரா .

சதாம் ,கடாபி எல்லாம் தேர்தல் வைத்து 99% வீத வாக்குகளை அள்ளுவார்கள் .அதே அதே தான் புலிகள் பெற்ற வாக்குகளும் .ஏன் இப்படி ஈ பி டி பி யும் ஒருக்கா தேர்தலில் வென்றது .அது எப்படி நடந்து என்று அனைவருக்கும் தெரியும் .

மாத்தையா தலைமையில் தொடங்கிய அரசியல் கட்சிக்கு என்னாச்சு ? ஜனநாயகத்தில் என்றும் நம்பிக்கை அற்றவர்கள் புலிகள் இது உலகு அறிந்த உண்மை ஆனால் நாலு வாலுகளுக்கு அது புரியுதில்லை வாக்கு போட்டவர்களின் விரலை வெட்டியவர்கள் .

புலிகள் போனபின் புலிவால் கஜேந்திரனுக்கு கட்டுகாசும் கிடைக்கவில்லை .கூட்டமைப்பு எத்தனை தரம் புலிகள் பிழை விட்டார்கள் சொல்லி விட்டது .தேர்தல் காலத்தில் அரசியல் வாதிகள் எல்லா பக்க வாக்குகளையும் அள்ள எவரையும் எதிர்த்து பேச மாட்டார்கள் .

நோர்வே மட்டுமல்ல இந்தியாவும் சமாதானத்திற்கு புலிகளைத்தான் நாடியது புலிகள் தான் பலமான  சக்தியாக இருந்தார்கள் ஜனாயக ரீதியில் அல்ல ஆயுதத்தால் .கூட்டமைப்புடன் பேச்சை வைத்து விட்டு தீர்வை எப்படி அமுல் படுத்துவது .

நீங்கள் சர்வாதிகாரக் நாட்டில் போய் குடியேறவேண்டிய ஆட்கள் ஓடி வந்து குடியேறியது முழுக்க ஜனநாயக நாடுகளில் ஆனால் சர்வாதிகாரம் தான் சரி என்று அடம் பிடிகின்றீர்கள் .

தேர்தலுக்கு என்றுமே முகம் கொடுக்காதவர்களை நின்றால் வென்றிருப்பார்கள் பதுங்கினால் அடிப்பார்கள் என்று சுய இன்பம் காணுங்கோ .

யாழில் நாலு பேர்கள் பச்சை குத்த மட்டும் கருத்து எழுதலாம் ஆனால் சர்வதேசத்தில் பதிவாக அது மாறாது .

புலிகளின் கடைசி ஒரு வருட போரின் போதும் மக்கள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள் என்பதும் உலகிற்கு தெரியும் .கிரிக்கெட் மாட்சுகள் கூ ட ஒழுங்காக நடந்தது இதுதான் மக்களின் பிரதிநிதிகளின் நிலை .

அர்ஜுன் அண்ணா, 

89 தேர்தல் நடந்தபோது நான் சிறுவனாக ஊரில் இருந்தேன். இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் புலிகள் யாழில் தலைகாட்டமுடியாத நிலை. ஆனால் அவர்களின் ஆதரவோடு சுயேட்சையாக ஈரோஸ் சார்பில் இறங்கிய பிரபலமில்லாதவர்களைக்கூட மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். புலிகள் தமக்கு விடிவைப் பெற்றுத் தருவார்கள் என நம்பிக்கைகொண்டு மக்கள் சொன்ன அரசியல் செய்திதான் இது. தமிழ்த் தேசிய இராணுவம் என்ற பெயரில் ஈபிஆர் எல் எவ், ரெலோ, ஈ என் டி எல் எவ் போன்றவர்கள்தான் மக்களை வெருட்டி அரசியல் செய்தார்கள். ஆனால் அவர்களால் அதிக ஆசனங்களை எடுக்கமுடியவில்லை.

இன்று புலிகளின் ஆயுதப்போர் தோல்வியில் முடிந்து ஆறு வருடங்களாகிவிட்டன. ஆனால் போராட்டம் ஆரம்பித்ததற்கான அரசியல் காரணங்கள் அப்படியே உள்ளன. புலிகள் இல்லாத இக்காலத்தில் அவர்கள் முன்னெடுத்த கொள்கைகளை தமிழ்க் கூட்டமைப்பு முன்னெடுத்து அரசியல் உரிமைகளை வென்று தருவார்கள் என்னும் காரணத்தால்தான் மக்கள் கூட்டமைப்புக்கு நம்பி வாக்களிப்பார்கள். ஆனால் வழமைபோன்று அவர்களை ஏமாற்றும் கையாலாகதவர்களாகத்தான் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கேள்வி ,
இரு பதில்கள்:
---------------------------------------------------
திரு கஜேந்திரகுமார் அவர்களும் , திரு சுமந்திரன் அவர்களும் ஏறத்தாள ஒரே காலப்பகுதியில் இரண்டு ஆங்கில ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியின் சிலபகுதிகளை இங்கு ஒப்பிட்டு நோக்கலாம். ஆங்கில ஊடகங்களில் எவ்வாறு இவர்கள் தொழிற்படுகிறர்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

முடிவு உங்களிடம்.

{தி,பாலமுருகனின் முகநூலில் இருந்து பிரதி செய்யப்பட்டது }
------------------------------------------------------

1}Sunday Leader {19/04/2015} :-தமிழ் தேசியக்கூட்டமைப்பு புலிகளையும் அவர்களின் கொள்கைகளையும் ஆதரிக்கின்றது என்கிற‌ ஒரு குற்றச்சாட்டு உண்மையானதா??

சுமந்திரன் : இல்லை , விடுதலைப்புலிகளில் எங்களுக்கு எந்த வித விசுவாசமும் இல்லை.
அவர்களின் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவுமில்லை.
நாங்கள் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்றோம்.
நாங்கள் பயங்கரவதத்திற்கு ஆதரவானவர்களும் இல்லை அதை ஊக்குவிப்பவர்களும் இல்லை.

http://www.thesundayleader.lk/…/tna-has-no-loyalty-towards…/

///{ இவரின் இந்த பதிலைப் பார்த்தவுடன் "தமிழர்களின் பிரச்சினை வேறு புலிகளின் பிரச்சினை வேறு" என்கிற ஜே ஆர் ஜெயவர்தன , அத்துலத் முதலி, காமினி திஸநாயக்க, பிரேமதாஸ டி.பி விஜேதுங்க , சந்திரிக்கா, ரத்வத்த, மகிந்த ராஜபக்ஷ , கோத்தபாய ராஜபக‌ஷ, ரணில் விக்கிரமசிங்க , மங்கள சமரவீர , மைத்திரிபால சிரிசேன, நீலன் திருச்செல்வம், லக்ஷ்மன் கதிர்காமர், கருணா, டக்ளஸ் ஆகியோர் பாவிக்கின்ற மிகப்பிரபலமான கூற்று உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.}

இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில், புலிகளை ஆதரிக்கிறேன் என்று எவரும் சொல்லவேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த கேள்வியில் சண்டே லீடர் எந்த இடத்திலும் புலிகள் பயங்கரவாதிகளா இல்லையா என்று கேட்கவில்லை என்பதையும் சுமந்திரன் தானாக சென்று பயங்கரவாதம் பற்றி என்பதையும் கவனிக்கவும்.///

2} Ceylon Today {21/04/2015}:- 
நீங்கள் புலிகளினதும் புலமெபெயர் தமிழர்களினதும் அரசியலை { கோட்பாடுகளை} கொண்டு செல்கிறீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
அத்தோடு நீங்கள் கொள்கை ரீதியில் ஒரு அதிதீவிரவாதி (extremist) என்றும் அரசியலில் { கொள்கைகளில் } விட்டுக்கொடுப்பற்றவர் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ??

கஜேந்திரகுமார்:- சிறிலங்கா ஒரு பல்தேசமுள்ள ( multi national country )நாடாக இருக்க வேண்டும் என்பதில் என்ன அதி தீவிரம் இருக்கிறது??
கனடா போன்ற ஒரு அரசியலமைப்பை எதிர்பார்ப்பதில் என்ன அதி தீவிரம் இருகிறது???{அது - கனடா கியுபெக் ஆகிய } இரு தேசங்களை ஒரு நாட்டுக்குள் அங்கீகரிக்கிற‌து. TWO NATION IN ONE COUNTRY .
எண்ணிக்கையில் பெரும்பான்மையான ஒரு தேசிய இனம், எண்ணிக்கைக்கையில் சிறுபான்மையான ஒருதேசிய‌ இனத்தை அடக்கியாளாக்கூடாது என்று அது சொல்கிறது.
சிறிலங்கா ஒரு சிங்கள பெளத்த நாடு இல்லை என்று சொல்வதில் என்ன அதி தீவிரம் இருக்கிற‌து?
, அது சிங்களவர்களுக்கு மட்டுமானது இல்லை , அது தமிழர், முஸ்லிம்கள் மலையகத்தமிழர்கள் ஆகிய அனைவருக்கும் பொதுவானது என்றால் அது அதி தீவிரமா??

நாங்கள் தனியான ஒரு நாட்டைக் ( seperate state ) கேட்கவில்லை.
நாங்கள் தமிழர்களின் தனித்துவ இன அடையாளத்தை அங்கீகரித்து அவர்களை ஒரு தேசிய இனமாக ஒரு தேசமாக (nation) அங்கீகரிக்கும்படிதான் கேட்கிறோம்.
பல்தேசமுள்ள நாடாக இலங்கை பரிணமிக்கும்வரை எமது போராட்ட வழிமுறையை நாம் தொடருவோம்.

எங்களைப்பொறுத்தவரை இக்கோரிக்கைகள் அதி தீவிரவாதம் அல்ல.
ஆனால், இந்த கோரிக்கைகளுக்காக எம்மை நீங்கள் அதிதீவிரவாதிகள் என்று சொன்னால், பரவாயில்லை , நாங்கள் அந்த " லேபலையும் " ( label) ஏற்க தயாராக இருக்கிறோம்.

https://www.ceylontoday.lk/89-90497-news-detail-two-nations

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அவர்களின் கருத்துக்கள் சிங்கள அரசியல்வாதிகளின் மனதில் தேனை வார்த்ததுபோல இருக்கும். அவர் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டதன் நோக்கமே இணக்க அரசியல் செய்து தமிழர்களை இன்னும் சிங்கள் தேசத்திடம் அடிமைகளாக வைத்திருப்பதற்கே.
அவருடைய அரசியல் எப்போதும் சிங்களத்திற்கு ஆதரவாகவே இருக்கும்

தமிழ் மக்களை ஏமாற்ற தமிழர் பக்கம் மாவை அவர்களையும் சிங்களவர்களை ஆதரிக்க மறுபக்கம் சுமந்திரனையும் அறிக்கை விட வைப்பது தான்  சம்பந்தரின் ராஜதந்திரம்

  • தொடங்கியவர்

 

சதாம் ,கடாபி எல்லாம் தேர்தல் வைத்து 99% வீத வாக்குகளை அள்ளுவார்கள் .அதே அதே தான் புலிகள் பெற்ற வாக்குகளும் .ஏன் இப்படி ஈ பி டி பி யும் ஒருக்கா தேர்தலில் வென்றது .அது எப்படி நடந்து என்று அனைவருக்கும் தெரியும் .

 

சதாமும் ,கடாபியும் தாங்களே தேர்தல் நடாத்தி தாங்களே வாக்கும் போட்டு 99% வீதம் வென்றனர், புலிகளோ இலங்கை அரசாங்கம் நடாத்திய தேர்தலில் மக்கள் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று வாக்களித்துப் புலிகளை வெற்றி பெற வைத்தனர்.( புலிகளின் மூச்சுக் காற்று கூட வாக்குப் பெட்டிகளில் பட வில்லை என்பதைக் கவணத்தில் கொள்க)

  • கருத்துக்கள உறவுகள்

 

சதாமும் ,கடாபியும் தாங்களே தேர்தல் நடாத்தி தாங்களே வாக்கும் போட்டு 99% வீதம் வென்றனர், புலிகளோ இலங்கை அரசாங்கம் நடாத்திய தேர்தலில் மக்கள் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று வாக்களித்துப் புலிகளை வெற்றி பெற வைத்தனர்.( புலிகளின் மூச்சுக் காற்று கூட வாக்குப் பெட்டிகளில் பட வில்லை என்பதைக் கவணத்தில் கொள்க)

80 களில் ஓடி வந்தவர்களுக்கு இதெல்லாம் தெரியவா போகிறது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சதாமும் ,கடாபியும் தாங்களே தேர்தல் நடாத்தி தாங்களே வாக்கும் போட்டு 99% வீதம் வென்றனர், புலிகளோ இலங்கை அரசாங்கம் நடாத்திய தேர்தலில் மக்கள் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று வாக்களித்துப் புலிகளை வெற்றி பெற வைத்தனர்.( புலிகளின் மூச்சுக் காற்று கூட வாக்குப் பெட்டிகளில் பட வில்லை என்பதைக் கவணத்தில் கொள்க)

ஆதவன்!!!!
 எனக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை ஆனால் புலிக்கு ஒரு கண்ணாவது போகோணும் எண்டு நினைக்கிற சனத்துக்கு ஒரு நல்லகருத்து சொல்லியிருக்கிறியள்..... 
ஆனால் அது புறக்குடத்தில் வார்த்த நீர் மாதிரியே போய்விடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.