Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரம்பப் புள்ளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11898571_10206456280237267_4356364066056

என்னணை அப்பு?

இடிஞ்சு போய் இருக்கிறாய்!

 

எல்லாம் முடிஞ்சுது...!

அது தான் இப்படி!

 

என்னப்பு நடந்தது?

 

ஆரம்பப் புள்ளிக்கே..,

திரும்ப வந்திருக்கிறம்!

 

இல்லை...இல்லை..!

இன்னும் கொஞ்சம் சறுக்கியிருக்கிறம்!

 

என்னப்பு.. கள்ளுத் தத்துவமோ?

 

கள்ளில முன்னேற்றம் !

அதை விடு..!

பிளாவிலை குடிச்சனாங்கள்,

இப்ப...,

கிளாசில குடிக்கிறம்!

 

ஆயிரமாய்த் துலைச்சு...,

அலங்கோலங்கள் சுமந்து...,

விலாசங்கள் கலைந்து,,,

தலையில துண்டோட...!

 

என்னப்பு நடந்தது?

கொஞ்சம் விளக்கமாய் சொல்லணை!

 

அது தானே சொல்லிறன்..,

ஆரம்பப் புள்ளிக்கே..,

திரும்ப வந்திருக்கிறம்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை... அழகு புங்கை.
இதில்... அரசியல் உள்குத்து, கலப்படம்.. எதுவும்  இல்லை என நினைக்கின்றேன்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நகர்வுக்குள் அவன் ஆனையிறவு வரை வந்திடுவான்
அதன் பின்னர் நாங்கள் குடாவுக்குள் நின்றுகொண்டு கும்மியடிப்போம்.

அப்போதும்  சொல்லுவார்கள் இறுதித் தீர்வு இப்போது கைக்குள் என்று :grin:

அடுத்த நகர்வுக்குள் அவன் ஆனையிறவு வரை வந்திடுவான்
அதன் பின்னர் நாங்கள் குடாவுக்குள் நின்றுகொண்டு கும்மியடிப்போம்.

அப்போதும்  சொல்லுவார்கள் இறுதித் தீர்வு இப்போது கைக்குள் என்று :grin:

ஏற்கனவே பலாலியிலும் மின்னேரியாவிலும்  நின்ற ஆமியை  ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் கொண்டு வந்து விட்ட விண்ணர்கள் தானே நாங்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பலாலியிலும் மின்னேரியாவிலும்  நின்ற ஆமியை  ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் கொண்டு வந்து விட்ட விண்ணர்கள் தானே நாங்கள் :rolleyes:

ஒரு இனத்தின், உச்ச  போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் சனம் இருந்திருக்கும் ( 2016´ல் தீர்வு என்று சொல்லும்... தமிழ் அரசியல் வாதிகள் உட்பட) என்று தெரிந்திருந்தால்... தேயத் தலைவரே, போரட்டத்தை ஆரம்பித்திருக்க மாட்டார்.
யாருமே... எதிர்பாரத  அளவில், தமிழனுக்குள்... ஒட்டுக் குழுவும், ஓணான் குழுவும் இருந்திருக்கு.
இது.... காக்கை வன்னியன் கால தமிழனின்... சாபக்கேடு. இந்த இனம்.... இனி, உய்யப் போவதில்லை.

ஒரு இனத்தின், உச்ச  போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் சனம் இருந்திருக்கும் ( 2016´ல் தீர்வு என்று சொல்லும்... தமிழ் அரசியல் வாதிகள் உட்பட) என்று தெரிந்திருந்தால்... தேயத் தலைவரே, போரட்டத்தை ஆரம்பித்திருக்க மாட்டார்.
யாருமே... எதிர்பாரத  அளவில், தமிழனுக்குள்... ஒட்டுக் குழுவும், ஓணான் குழுவும் இருந்திருக்கு.
இது.... காக்கை வன்னியன் கால தமிழனின்... சாபக்கேடு. இந்த இனம்.... இனி, உய்யப் போவதில்லை.

சோகமான் உண்மை புங்கை என்ன செய்வது .

ஆயுதத்தால் ரிவேர்ஸ் கியரை மாறி தட்டிவிட்டோம் .

 

  • கருத்துக்கள உறவுகள்

சோகமான் உண்மை புங்கை என்ன செய்வது .

ஆயுதத்தால் ரிவேர்ஸ் கியரை மாறி தட்டிவிட்டோம் .

புலியை விட... முதலில் ஆயுதத்தை தூக்கியது... "புளட்" தான்.
ஆனால்.... ஒரு சிங்கள  ராணுவத்தையும் சுடாமல், தமிழனை மட்டுமே சுட்டு... பயிற்சி பெற்றும், 
"ரிவேர்ஸ் கியரை" தட்டினதும், சோகமான உண்மை.:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலியை விட... முதலில் ஆயுதத்தை தூக்கியது... "புளட்" தான்.
ஆனால்.... ஒரு சிங்கள  ராணுவத்தையும் சுடாமல், தமிழனை மட்டுமே சுட்டு... பயிற்சி பெற்றும், 
"ரிவேர்ஸ் கியரை" தட்டினதும், சோகமான உண்மை.:)

சிறித்தம்பி! இதுக்கை ஏன் புளட் புல்லாங்குழலுகளை இழுக்கிறீங்க.....அவர்கள் தீர்க்கதரிசுகள் அட்ட அவதானிகள் எங்கை அசூல் அடிச்சால் அந்தமாதிரி அள்ளலாம் என்ற நற்சிந்தனையுடையவர்கள்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ உண்மையாகவா?:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை... அழகு புங்கை.
இதில்... அரசியல் உள்குத்து, கலப்படம்.. எதுவும்  இல்லை என நினைக்கின்றேன்.  :grin:

சத்தியமாய் இல்லை, தமிழ் சிறி!

நாங்கள் பிளேன் டீ குடிச்ச தேத்தண்ணிக் கடையளில, வாசலில இரண்டு அறிவிப்புப் பலகைகள் இருக்கும்!

முதலாவது...' உறவுக்குப் பகை கடன்".

இரண்டாவது.. " இங்கே அரசியல் பேசாதீர்கள்"  :grin:

அடுத்த நகர்வுக்குள் அவன் ஆனையிறவு வரை வந்திடுவான்
அதன் பின்னர் நாங்கள் குடாவுக்குள் நின்றுகொண்டு கும்மியடிப்போம்.

அப்போதும்  சொல்லுவார்கள் இறுதித் தீர்வு இப்போது கைக்குள் என்று :grin:

இறுதித் தீர்வு.. சம்பந்தர் கூறியது போல விரைவில் வரும்!

அதுவும்... மாகாண சபை வடிவில்....!:love:

சரித்திரம் 'வட்டப் பாதையில்' பயணிக்கின்றது என்பது எவ்வளவு உண்மை.. வாத்தியார்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பலாலியிலும் மின்னேரியாவிலும்  நின்ற ஆமியை  ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் கொண்டு வந்து விட்ட விண்ணர்கள் தானே நாங்கள் :rolleyes:

தீர்க்க தரிசனமில்லாத 'நகர்வுகள்' எங்களுடையவை!

ஓட.. ஓடத் துரத்தப்பட்டு.. வளங்களற்ற ஒரு பாலைவனப் பிரதேசத்தில் ஒதுக்கப்பட்ட இனம் எம்முடையது!

தன்னம்பிக்கை என்பது முற்றாகத் தகர்க்கப்பட்டு... வலிந்து புகுத்தப்பட்ட 'வருணாச்சிரம தர்மத்தின்' மத நம்பிக்கைகளைத் துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் வாழும் ஒரு இனம்!

மாட்டிறைச்சி சாப்பிடுவதை வெளியில் சொன்னால் வெட்கமென்று கூறும் இனம்..! ஆனால் வெட்கமில்லாமல் மாட்டிறைச்சி சமைத்துச் சாப்பிடும் இனம்!

வளமற்ற நிலத்தில் வளர்ந்ததால்.. வெறும் சலுகைகளுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் பணிந்து போக வேண்டிய கட்டாயம் அந்த இனத்துக்கு உள்ளது!

அதுவே எமது போராட்டம் காட்டிகொடுக்கப் பட்டும், அழிக்கப்பட்டதுக்குமான முக்கியமான காரணமாகும்! 

கசப்பான உண்மை என்னவெனில்.. ஒரு விடுதலைப் போராட்டத்துக்கான பக்குவம் எமது இனத்துக்கு இன்னும் ஏற்படவில்லை!

பெரும்பான்மை இனத்தவரும்..எமது இனத்துக்கு ஏற்பட்ட அநியாயங்களின் 'ஆழத்தைச்' சரியாகப் புரிந்து கொள்ளவுமில்லை!

இழப்பு எமக்கு மட்டுமல்ல... அவர்களுக்கும் தான்.. ஏன் முழு இலங்கைக்கும் தான்!

 

எல்லோருமே தலைவராக வேண்டும் என்னும் மனநிலை.. ஆயிரம் பிளவுகளை எமக்குள் உண்டாக்கி விட்டது!

தமிழரசுக்கட்சி வென்ற பின்னும் கூட.. அதற்கு அட்வைஸ் சொல்லும் ஆனந்த சங்கரியின் அறிக்கை ஒரு தற்கால உதாரணமாகும்!

போராட்டங்களின் நல்ல விளைவுகளில் ஒன்று.. எமது சமூகத்தின் ஒரு பகுதி.. புலம் பெயர்ந்தது என்று கூறுவேன்!

அதனால் ஏற்படும் அனுகூலங்களை நாம் பயன்படுத்த வேண்டும்... இன்னும் கோவில்களும், பூசாரிகளும் தான்..எமது 'மேட்டுக்குடி' சிந்தனையைச் சாக விடாமல் வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்!

கோவில்கள் எமது கலாச்சாரத்தை வளர்க்கத் தேவை தான்... அதற்காகக் கும்மாளங்கள் தேவையில்லை!

ஆனால் எனக்குள்ள ஒரு ஆறுதல்..எமது இளைய தலைமுறை சுயமாகச் சிந்திக்கும் தன்மையைக் கொண்டிருப்பது தான்!

வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது மாதிரி ...மெல்ல மெல்லத் தாய் தந்தையரை மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள்!

காலப்போக்கில் 'சாறிப் பாட்டிகள்' கூட இல்லாமல் போய்விடும்! 

தீர்வுக்கான உண்மையான சந்தர்ப்பமொன்று ஏற்பட்டு வருகின்றது என்றே கருதுகின்றேன்!

ஒரு புத்த பிக்கு கூடத் தேர்தலில் வெற்றி பெறாததும்...ஒட்டுக் குழுக்களின் தோல்வியும்.. ஒரு சுமுகமான தீர்வுக்கான சந்தர்ப்பமொன்று நெருங்கி வருவதையே காட்டி நிற்கின்றது!

அந்த நாள் விரைவில் வரவேண்டும் என்பது தான் எங்கள் அனைவரதும் விருப்பமாகும்!

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... நடப்பவை நல்லவையாக அமையட்டும்!

நன்றி.. நிழலி..!

 

  • கருத்துக்கள உறவுகள்

 

மெல்ல மெல்லத் தாய் தந்தையரை மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள்!

காலப்போக்கில் 'சாறிப் பாட்டிகள்' கூட இல்லாமல் போய்விடும்!

நாங்கள் மாறமாட்டமல்ல:unsure:.....ஐயோ சாரி இல்லாமல் போய்விடுமா?....

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோகமான் உண்மை புங்கை என்ன செய்வது .

ஆயுதத்தால் ரிவேர்ஸ் கியரை மாறி தட்டிவிட்டோம் .

 

அந்தக் காலத்து நினைவுகளை மீட்டுப் பார்க்கிறேன், அர்ஜுன்!

எமது காலத்தில், எமது பொருளாதார நிலையில், தமிழீழம் சாத்தியம் தானா என்ற விவாதங்கள்.. கள்ளுக்கொட்டில் முதல் கொண்டு.. தேநீர்க்கடை ஈறாக நடந்தது முடிந்தன!

இன்று வரை சரியான விடை தெரியவில்ல..!

ஒரு வேளை தமிழீழம் கிடைத்தாலும்..அதை ஆழுகின்ற ஆழுமை எமதினத்திடம் இருக்கின்றதா எனினும் 'இல்லை' என்ற பதிலையே எமது கடந்த காலமும், தற்காலமும் எமக்கு அளிக்கின்றன!

திரும்பிப் பார்கையில் பல சந்தர்ப்பங்களை இழந்து விட்டோம் போல உள்ளது!

எம்மை வழி நடத்த ஒரு ஆளுமை மிக்க தலைமை தேவை..! உருவாகுமா என்ற ஏக்கம் மட்டுமே இப்போது உள்ளது!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! 

சிறித்தம்பி! இதுக்கை ஏன் புளட் புல்லாங்குழலுகளை இழுக்கிறீங்க.....அவர்கள் தீர்க்கதரிசுகள் அட்ட அவதானிகள் எங்கை அசூல் அடிச்சால் அந்தமாதிரி அள்ளலாம் என்ற நற்சிந்தனையுடையவர்கள்.:grin:

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. குமாரசாமியண்ணா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறந்த படம், "நறுக்"கென்ற எளிய கவிதை. வாழ்த்துகள் கவிஞரே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.