Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரு முக்கிய புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் - கோத்தபாய

Featured Replies

இரு முக்கிய புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் - கோத்தபாய

 
இரு முக்கிய புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் - கோத்தபாய



அரசாங்கம் விரைவில் விடுதலைசெய்யவுள்ள விடுதலைப்புலி உறுப்;பினர்களில் கொழும்பில் இடம்பெற்ற அனைத்து முக்கிய தாக்குதல்களையும் திட்டமிட்டு நடத்திய இரு முக்கிய புலி உறுப்பினர்கள் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


இவர்களில் ஒருவரின் பெயர் மொறிஸ்,விடுதலைப்புலிகளின் கொழும்பு திட்டத்தின் சூத்திரதாரி இவரே,முன்ளாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா மீதான தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி இவரே, மற்றைய நபர் ஜின் என்ற பெயரினால் இனம் காணப்படுபவர்.


சரத்பொன்சேகாவா மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை மோட்டார்சைக்கிளில் அழைத்து வந்தவர் மொறிசே. விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும்  என அழுத்தம் கொடுப்பவர்களிற்கு அவர்கள் என்ன சூழ்நிலையில் கைதுசெய்யப்பட்டார்கள் என தெரியாது,


புனர்வாழ்வு  அளிக்கப்பட்டவர்கள் உட்பட பலர் விடுதலைசெய்யப்பட்டனர் இவ்வாறு விடுவிக்கப்படாமலிருந்தவர்கள் தேசியபாதுகாப்பிற்கு கடும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவர்கள்,


இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் விடுதலைப்புலிகளின்  புலனாய்வு பொறுப்பாளர் பொட்டம்மானுடன் தொடர்பிலிருந்தனர்,சில விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொண்ட ஆய்வின் போது அவர்கள் இன்னமும் தங்கள்கொள்கையில் உறுதியாகயிருந்தது தெரியவந்தது.அவர்களால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் மீது செல்வாக்கை செலுத்தமுடியும்.புலனாய்வு பிரிவினர் இவர்களை கைதுசெய்வதற்கு மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126718/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா சுத்தக் கூடாது.

அவ்வளவு முக்கியமான ஆக்கள் எண்டால் எப்பவோ வெடி வைத்திருப்பியளே :unsure:

26 minutes ago, Nathamuni said:

கோத்தா சுத்தக் கூடாது.

அவ்வளவு முக்கியமான ஆக்கள் எண்டால் எப்பவோ வெடி வைத்திருப்பியளே :unsure:

ஒருவேளை அவருக்குத்தான் உண்மை தெரியுமோ என்னமோ?

புலிகள் பெயரில் வெடித்த குண்டுகளுக்கெல்லாம் யாராவது பொறுப்பு எடுக்க வேண்டாமா?

அப்பாடா கோத்தபாயாவைக் கன நாளைக்குப் பிறகு கண்டது சந்தோசம். அப்பப்ப இப்படி ஏதாவது அறிக்கையை விடுங்கோ. அப்பதான் நாங்களும் உங்களை மறக்காமல் இருப்பம். நாடும் நல்லா வரும்.

3 hours ago, Nathamuni said:

கோத்தா சுத்தக் கூடாது.

அவ்வளவு முக்கியமான ஆக்கள் எண்டால் எப்பவோ வெடி வைத்திருப்பியளே :unsure:

இவர்களில் பலர் மீது எந்த குற்றமும் தாக்கல் செய்யப்படவில்லை. ஏன் தாங்கள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கே புரியவில்லை. சும்மா சாட்டிற்காக இவர்களை வைத்திருக்கிறார்கள். அதுக்குள்ள வெளியே விட்டா ஏதோ பிரளயத்தை உருவாக்கி விடுவார்கள் என பீலா வேற. நல்லா வருவீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரமாக நடமாடும் கிரிமினல் கோத்தா புலிகள் உறுப்பினர்களுக்கு நீதிபதியானார்!

இனியொரு...

இன்றைய உலகின் மிகப்பெரும் கிரிமினல்களில் ஒருவரான கோத்தாபய ராஜபக்ச இரண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார். சாரிசாரியாக மனிதப்படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்திய கோத்தாபய ராஜபக்ச இன்னும் மனிதர்கள் மத்தியில் உலாவருவது மனிதகுலத்திற்கு ஆபத்தானதாகும். இவ்வாறான கிரிமினல்கள் மீதான கொலைக் குற்றங்கள் வெளிப்படையனதும் ஆதாரபூர்வமாகவும் நிறுவக்கூடிய நிலையிலும் இலங்கை பேரினவாத அரசு அவர்களைச் சுதந்திரமாக நடமாட அனுமதித்துள்ளது.
திட்டமிட்டு நடத்திய படுகொலைகளின் பின்னர் இலங்கை என்ற நாட்டையே தனது குடும்பச் சொத்தாக்க முற்பட்ட கோத்தாபய ராஜபக்ச என்ற சமூகவிரோதி இரண்டு அரசியல் கைதிகள் குறித்துப் பேசுவதற்கு எந்தத் தகுதியுமற்றவர்.

இலங்கைப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப் புலிகளின் அரசியல் தவறுகள் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவையே எனினும் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டம் இன்றும் தேவையான ஒன்றே.

புலிகள் அமைப்பிலுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால், ஆயுதமேந்துவதை இலங்கை அரசு ஊக்குவிக்கிறது என்பதே அதன் உள்ளர்த்தம்.

கோத்தாபாய கருத்துத் தெரிவிக்கையில், இவர்களில் ஒருவரின் பெயர் மொறிஸ், விடுதலைப்புலிகளின் கொழும்பு திட்டத்தின் சூத்திரதாரி இவரே, முன்ளாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா மீதான தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி இவரே, மற்றைய நபர் ஜின் என்ற பெயரினால் இனம் காணப்படுபவர். சரத்பொன்சேகா மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தவர் மொறிசே. விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என அழுத்தம் கொடுப்பவர்களிற்கு அவர்கள் என்ன சூழ்நிலையில் கைதுசெய்யப்பட்டார்கள் என தெரியாது என்கிறார்.

இலங்கையில் அரசியல் கைதிகள் தொடர்பாக நீதித்துறைக்கு முன்னதாக தானே தீர்மானிக்க வேண்டும் என கோத்தாபய போன்ற கிரிமினல்கள் கருதும் நிலையே இன்றும் காணப்படுகிறது.

கோத்தாபயவினால் சித்திரவதை முகாம்க்ளுக்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்பாக அவர் முதலில் கருத்துத் தெரிவிக்கட்டும்.

கோத்தாபய போன்ற கிரிமினல்கள் இவ்வாறெல்லாம் கருத்துத் தெரிவிக்கும் போது அதனை எதிர்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற இலங்கை அரசின் அடியாள் படை தயாராகவில்லை. இலங்கையிலோ வெளி நாடுகளிலோ பேரினவாதிகளின் மக்கள் விரோதக் கருத்துக்களை எதிர்கொள்ள அரசியலும் அரசியல் இயக்கங்களும் இல்லை என்பதே இன்றைய தமிழ்ப் பேசும் மக்களின் அவல நிலை.

 

http://inioru.com/criminal-gotas-concern-on-ltte-members/

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் விடுதலை என்ற கோத்தபாயவின்  அறிக்கை  சிங்கள மக்களுக்கானது.
முன்னாள் போராளிகள் விடுதலை  என்ற மைத்திரியின் அறிக்கை உலக நாடுகளுக்கானது

முன்னாள் போராளிகள் விடுதலை என்ற கூட்டமைப்பின் அறிக்கை தமிழருக்கானது

மொத்தத்தில் சிங்களவர்களுக்காகவே எல்லோரும் அயராது உழைக்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

இனியொருவின் கருத்துப்படி பயங்கரவாதம் (இதை இனியொரு நாகரிகமாக அரசியல் தவறுகள் என்கின்றது) மிகப்பெரியதொரு பயங்கரவாதியினால் அழிக்கப்பட்டு இருக்கின்றது. மீண்டும் பயங்கரவாதம் இலங்கையில் எந்தவகையிலும் தோன்றக் கூடாது என்ற அடிப்படையில் கோத்தாபய தண்டிக்கபட வேண்டும். அதே போன்று பயங்கரவாத நபர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை வெளியில் விடுவதும் ஆபத்தானது. மனிதகுலத்துக்கு எதிரான எவரையும் மன்னிக்கக்கூடாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிப்பயங்கரவாதிகளை விடுதலை செய்யேலாது எண்டு அரசாங்கம் ஒரேயடியாய் அறிவிச்சு விட்டுதெண்டால் பிரச்சனை முடிஞ்சுது.

சம்பந்தனுக்கும் சோலியில்லை....சுமந்திரனுக்கும் தலையிடியில்லை.

சிலோனிலை பிரச்சனை முடிஞ்சாப்பிறகும் புலத்திலையிருந்து போராடும் மாண்புமிகுந்த அதி உத்தம மாற்றுக்கருத்து மாணிக்கவாசகர்களுக்கு புலிக்காய்ச்சலும் வராது கண்டியளோ....

குளத்தோடை கோவிச்சுக்கொண்டு குண்டி கழுவாமல் விட்டமாதிரி......ஒருசில புலி நபர்கள் மேலுள்ள கோபத்தால் ஒட்டுமொத்த விடுதலைப்போராட்டத்தையும் மூழ்கவைத்த அட்டவதானிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கேவலமான கருத்து வாலி...தலைவரும் இல்லாத நிலையில் போராடப் போனதைத் தவிர, அவர்கள் செய்த குற்றம் என்ன?...அரசே அவர்களை விடுவிப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கும் நிலையில் உங்களைப் போன்ற ஆட்கள் ஏன் இப்படிப் பாதகமான கருத்துக்களை எழுதுகின்றீர்கள்?...ஒரு பக்கத்தால் உண்மையான போராட்டத்திற்கும்,புலிகளுக்கும் ஆதரவு என எழுதிக் கொண்டு இன்னொரு பக்கத்தால் இப்படி எழுத வெட்கமாயில்லையா?...அண்மைக் காலமாய் உங்கள் கருத்துக்கள் அநேகமானவை ஏட்டிக்கு,போட்டியாய் எழுத வேண்டும் என்டதை மட்டுமே நோக்கமாய் கொண்டதாகத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முகங்கள் தெரியட்டும்....

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

மிகவும் கேவலமான கருத்து வாலி...தலைவரும் இல்லாத நிலையில் போராடப் போனதைத் தவிர, அவர்கள் செய்த குற்றம் என்ன?...அரசே அவர்களை விடுவிப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கும் நிலையில் உங்களைப் போன்ற ஆட்கள் ஏன் இப்படிப் பாதகமான கருத்துக்களை எழுதுகின்றீர்கள்?...ஒரு பக்கத்தால் உண்மையான போராட்டத்திற்கும்,புலிகளுக்கும் ஆதரவு என எழுதிக் கொண்டு இன்னொரு பக்கத்தால் இப்படி எழுத வெட்கமாயில்லையா?...அண்மைக் காலமாய் உங்கள் கருத்துக்கள் அநேகமானவை ஏட்டிக்கு,போட்டியாய் எழுத வேண்டும் என்டதை மட்டுமே நோக்கமாய் கொண்டதாகத் தெரிகிறது.

ரதி, நான் என் கருத்துக்களை நியாயம் என நிறுவ உங்களுடன் வாதிடப்போவதில்லை. அரசியல் கைதிகள் முற்றிலும் விடுவிக்கப்படல் வேண்டும் கோத்தா தண்டிக்கப்படல் வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடில்லை. இங்கு புலிகளை வைத்துப் போலிகள் தங்களை தேசியவாதிகளாகவும், நாட்டுப்பற்றாளர்களாகவும், இன அபிமானிகளாகவும் காட்டமுனைந்து கொண்டுஇருக்கின்றார்கள். போலிகளுக்கு இருக்கும் ஒரே ஆய்தம் புலிகள். புலிகளின் தியாகத்தில் காய்ந்துகொண்டு தம்மையும் தியாகிகளகக் காட்டிக்கொண்டு வயிறுவளர்க்கும் இந்தக் கோஸ்டிக்கு, புலிச்சாயம் கலைந்து போனால் எதுவும் இல்லை. அதனால் தான் நான் எனக்கு விருப்பம் இல்லாததையே எழுதிக்கொண்டு இருக்கின்றேன். குறிப்பிட்ட ஒருசில போலிகளுக்காக உண்மையான பலரையும் எதிர்த்து எழுத நேரிடுகின்றது. புலிகளை போலிகள்தான் தொடர்ந்தும் அவமானப்படுத்தி வருகின்றார்கள். அந்தவகையில் எனது எழுத்துக்கள் பாதகமாக அமைந்தாலும் நிஜ வாழ்க்கையில் நான் போலிகளைப் போன்றவன் அல்ல என உறுதி எனக்கு இருக்கின்றது. மற்றும்படி நான் எப்படி எழுதவேண்டும் என்பதை அவர்களே தீர்மாணிக்கின்றர்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.