Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியக் கொடி ஏற்றினார் விக்கி!

Featured Replies

தேசியக் கொடி ஏற்றினார் விக்கி!
 
 
தேசியக் கொடி ஏற்றினார் விக்கி!
வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து, சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் புதிதாக  அமைக்கப்படவுள்ள ஆண் மாணவர் விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. 
 
கடந்த காலப் போர் நடை பெற்றவேளை பெற்றோரை இழந்த பொருளாதார ரீதியில் பாதிப்புற்ற வடக்கு - கிழக்கு - மலையக, தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் 
 
கருத்தில் கொண்டு சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் சர்வதேச பழைய  மாணவர் ஒன்றியத்தினால் 80 மில்லியன் ரூபா செலவில் ஆண்கள் விடுதி ஒன்று  நிர்மாணிக்கப்படவுள்ளது. 
 
இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன் ஆரம்பத்தில் இலங்கையின் தேசியக் கொடியை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து பாடசாலைக் கொடியை, பாடசாலை அதிபரும், வலயக் கொடியை வலயக் கல்விப் பணிப்பாளரும் ஏற்றி வைத்தனர். 
 
இந்த நிகழ்வு, கல்லூரி அதிபர் ந.ஜெயகுமாரன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மாகாண சபை உறுப்பினர் கேசவன்  சயந்தன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார், கல்லூரியின் முன்னாள் அதிபர்களான க.அருந்தவபாலன், மு.நாகேந்திரராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர். 
 
                                                      vicky222.jpg
 
 
தேசியக் கொடி ஏற்றினார் விக்கி!
தேசியக் கொடி ஏற்றினார் விக்கி!
வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து, சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் புதிதாக  அமைக்கப்படவுள்ள ஆண் மாணவர் விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. 
 
கடந்த காலப் போர் நடை பெற்றவேளை பெற்றோரை இழந்த பொருளாதார ரீதியில் பாதிப்புற்ற வடக்கு - கிழக்கு - மலையக, தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் 
 
கருத்தில் கொண்டு சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் சர்வதேச பழைய  மாணவர் ஒன்றியத்தினால் 80 மில்லியன் ரூபா செலவில் ஆண்கள் விடுதி ஒன்று  நிர்மாணிக்கப்படவுள்ளது. 
 
இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன் ஆரம்பத்தில் இலங்கையின் தேசியக் கொடியை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து பாடசாலைக் கொடியை, பாடசாலை அதிபரும், வலயக் கொடியை வலயக் கல்விப் பணிப்பாளரும் ஏற்றி வைத்தனர். 
 
இந்த நிகழ்வு, கல்லூரி அதிபர் ந.ஜெயகுமாரன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மாகாண சபை உறுப்பினர் கேசவன்  சயந்தன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார், கல்லூரியின் முன்னாள் அதிபர்களான க.அருந்தவபாலன், மு.நாகேந்திரராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர். 

vicky222.jpg

http://onlineuthayan.com/news/10092

நன்றி தலைவா

'சம்பந்தர் பிடித்தால் சிங்கக்கொடி!
விக்கி ஏற்றினால் அது புலிக்கொடி!

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் சிங்கக் கொடியை ஆட்டும் போது பாராளுமன்ற உறுப்பினர். ஆட்டிவிட்டு சிங்கம் பத்திரகாளியின் வாகனம் என்ற சாலாப்பு.

விக்கியர் வடமாகாண சபையின் முதலமைச்சர்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Gari said:

'சம்பந்தர் பிடித்தால் சிங்கக்கொடி!
விக்கி ஏற்றினால் அது புலிக்கொடி!

இந்த தலையங்கமே வில்லங்கமானது...

அதை நாம் புரிந்து கொண்டால் நல்லது...

பல வீராப்பு பேசுகின்ற விக்கி ,இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றினவர் ,எப்படி கவிழ்ந்தார் ?

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயர் வழங்கிய வடகிழக்கை கேட்பவர் எப்படி தேசியக் கொடியை ஏற்றலாம்? எப்படி எதிர்க் கட்சி தலைவராக இருக்கலாம்? 

ஸ்கொட்லாந்தின் சமஷ்டிக்கு நடந்தது என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Gari said:

பல வீராப்பு பேசுகின்ற விக்கி ,இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றினவர் ,எப்படி கவிழ்ந்தார் ?

பழி வாங்குதல்களும் ஆத்திரமூட்டல்களும் 

எதிர் எதிரான பேச்சுக்கள் வீராப்புக்கள் தமிழருக்கு எதுவித நலனையும் தரப்போவதில்லை

விக்கி ஐயா தமிழீழம்  கேட்டதாக எங்கும் கண்டதில்லை

 

எதிர்பார்த்ததுதான் 

எப்பவோ எழுதிவிட்டேன் அவர் அஈசியல் கத்துகுட்டி என்று 

அவர் இன்னமும் பல பாடங்கள் படிக்கவேண்டியிருக்கு .

விக்கி ஐயா கோடி ஏற்றியது ஸ்ரீலங்கா அரச பாடசாலையின் உத்தியோகபூர்வ நிகழ்வில் இலங்கை அரசின் முதலமைச்சராக , ஆனால் தமிழ் இன வியாபாரி சம்பந்தன் ஏற்றியது ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில்,அந் நிகழ்ச்சி 
உத்தியொகபூர்வமான  நிகழ்வல்ல அதே போல் சம்பந்தனும் இலங்கை அரசின் பிரதி நிதியாக கலந்து கொள்ளவும் இல்லை, அங்கு இலங்கை தேசிய கொடி உத்தியோகபூர்வமாக ஏற்றவும் இல்லை, அது சம்பந்தன் சிங்களவனின் எலும்புத்துண்டுக்காக வலிந்து போய் கொடி அசைத்தார் அதற்கு பரிசாக எதிர்கட்சித்தலைவர் என்ற எலும்புத்துண்டை கவ்விக்கிக்கொண்டு திரியிறார்,

இந்த இரண்டு சந்தர்ப்பங்களையும் தரம் பிரித்து அறிய முடியாத மொக்குக் கூட்டம் 
விக்கி ஐயா மீது சேறு பூச அலையுதுகள்.

பெற்ற மகளும் பெண் தான்,
மனைவியும் பெண் தான்

ஆனால் இங்கே கூட்டமைப்பு காவடிகள் கூறுவதைப் பார்த்தால் இருவரும் பெண் என்றபடியால் மனைவியிடம் எதிர்பார்ப்பதை மகளிடம் எதிர்பார்க்கலாம் என்பது போல் உள்ளது.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Dash said:

விக்கி ஐயா கோடி ஏற்றியது ஸ்ரீலங்கா அரச பாடசாலையின் உத்தியோகபூர்வ நிகழ்வில் இலங்கை அரசின் முதலமைச்சராக , ஆனால் தமிழ் இன வியாபாரி சம்பந்தன் ஏற்றியது ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில்,அந் நிகழ்ச்சி 
உத்தியொகபூர்வமான  நிகழ்வல்ல அதே போல் சம்பந்தனும் இலங்கை அரசின் பிரதி நிதியாக கலந்து கொள்ளவும் இல்லை, அங்கு இலங்கை தேசிய கொடி உத்தியோகபூர்வமாக ஏற்றவும் இல்லை, அது சம்பந்தன் சிங்களவனின் எலும்புத்துண்டுக்காக வலிந்து போய் கொடி அசைத்தார் அதற்கு பரிசாக எதிர்கட்சித்தலைவர் என்ற எலும்புத்துண்டை கவ்விக்கிக்கொண்டு திரியிறார்,

இந்த இரண்டு சந்தர்ப்பங்களையும் தரம் பிரித்து அறிய முடியாத மொக்குக் கூட்டம் 
விக்கி ஐயா மீது சேறு பூச அலையுதுகள்.

பெற்ற மகளும் பெண் தான்,
மனைவியும் பெண் தான்

ஆனால் இங்கே கூட்டமைப்பு காவடிகள் கூறுவதைப் பார்த்தால் இருவரும் பெண் என்றபடியால் மனைவியிடம் எதிர்பார்ப்பதை மகளிடம் எதிர்பார்க்கலாம் என்பது போல் உள்ளது.

சம்பந்தரையும் விக்கி ஐயாவையும் 

இரு கோடுகளாக நிலைத்து வைத்திருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் தமிழர்கள் கவனமாக இருக்கணும்..

சம்பந்தர் கொடி ஏற்றியமை அவரின் தனிப்பட்ட முடிவாக இருந்தமையே பிரச்சினையாகப்பார்க்கப்பட்டது

அவர் தனது கட்சியிடமோ

கூட்டமைப்பிடமோ

அதன் தோழமைக்கட்சிகளிடமோ இதற்கு அங்கீகாரம் பெறாததே பிரச்சினை.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விக்கி ஐயா சிங்கக் கொடியை ஏத்தமாட்டன் என்று ஏதாவது சபதம் எடுத்தவரே..

சிங்களவின் அரசியல் யாப்பில்.. முதலமைச்சராக இருக்கும்.. அவர் சிங்களவனின் கொடியை ஏற்ற வேண்டியது நிர்ப்பந்தம் என்பது இங்கு வரும் சிலருக்குப் புரியவில்லை.

ஆனால் ஒரு கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு சிங்கக் கொடியை பிடிச்சு ஆட்டனுன்னு ஒரு அரசியலமைப்பு.. நிர்ப்பந்தமும் கிடையாது. :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அம்பேத்கரால்-பெரியாரால் சாதியை ஒழிக்க முடிந்ததா என்று கேட்பது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் புலிகள் சாதிகளை ஒழித்துவிட்டார்களா என நினைப்பதும் கேட்பதும் அப்படி எவரும் சொல்லிவிட்டார்கள் என அங்கலாய்ப்பதும். அம்பேத்கரும் பெரியாரும் தோன்றிய இந்தியாவிலேயே சாதியை இன்னும் ஒழிக்க முடியவில்லை எனில் 30 ஆண்டு காலம் ஆயுதப் போராட்டத்தை முனைப்பாக முன்னெடுத்த புலிகளால் மட்டும் எப்படிச் சாதியை ஒழிக்க முடியும்? அவர்களென்ன மந்திரவாதிகளா? புலிகள் தீண்டாமையை குற்றச் சட்டத்தினுள் கொண்டு வந்தார்கள். சாதிவாதத்தையும் புலிகளையும் சமப்படுத்திப் பேசுவது அபத்தம். ரவிக்குமார் மீதான சாதி நிந்தனையை மேற்கில் கண்டித்தவர்களில் முதன்மையானவர்கள் சர்வே, சேரன், அசோக் யோகன்,மு.புஷ்பராஜன், குணா.கவியழகன்,ரூபன் சிவராஜா, தமிழ்நதி,இரவி அருணாசலம் போன்றவர்கள். சர்வே ஐபிசி விருது முடிவையும் மறுபரிசீலனை செய்யக் கோரினார்.இப்படிப் புகலிடத்தில் இதனைக் கண்டித்த புலித்துவேஷம் இல்லாதவர்கள் தொகையானவர்கள். புலிகள்-புலி அல்லாதவர்கள் என ரவிக்குமார் பிரச்சினையிலும் இருதுருவ அரசியலைச் செய்பவர்கள் வரலாற்றுக் குருடர்கள்..

முகப்புத்தகத்தில் பதியப்பட்டிருந்தது......நன்றி ஜமுனா ராஜேந்திரன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலபேருக்கு எதுவுமே பிரச்சனையல்ல, அவர்கள் பிரச்சனையே விக்கியர்தான். அவர் கால்பட்டா குற்றம், கைபட்டா குற்றம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2016 at 8:14 AM, MEERA said:

ஆங்கிலேயர் வழங்கிய வடகிழக்கை கேட்பவர் எப்படி தேசியக் கொடியை ஏற்றலாம்? எப்படி எதிர்க் கட்சி தலைவராக இருக்கலாம்? 

ஸ்கொட்லாந்தின் சமஷ்டிக்கு நடந்தது என்ன? 

அது தானே? அவர் இங்கிலாந்து அல்லது ஸ்காட்லாந்து கொடியை அல்லவா ஏற்றி இருக்க வேண்டும்? நியாயமான கேள்வி தான்!

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2016 at 8:12 AM, Gari said:

பல வீராப்பு பேசுகின்ற விக்கி ,இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றினவர் ,எப்படி கவிழ்ந்தார் ?

 

 

On 3/5/2016 at 9:18 AM, arjun said:

எதிர்பார்த்ததுதான் 

எப்பவோ எழுதிவிட்டேன் அவர் அஈசியல் கத்துகுட்டி என்று 

அவர் இன்னமும் பல பாடங்கள் படிக்கவேண்டியிருக்கு .

விக்கி சிறந்த அரசியல்வாதி என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள கொஞ்ச காலம் போக வேண்டும். அவர் தனது பாதையில் தவறாமல் போகிறார். 

தேசியவாதிகளின் பின்னால் பாதிக்கப்பட்ட மக்கள் போகாமல் தடுப்பதற்கே அவர்  வீராப்புகள் பேசினார். பின்னர் சரியான தருணத்தில் ரணிலுடனும் தனது உறவை உறுதியாக்கி கொண்டார். அமரிக்க அரசின் சமந்தா போவேர்ஸ் விக்னேஸ்வரனை சந்தித்து விட்டு அவரை விமரிக்குமாறு கேட்ட பத்திரிகையாளரிடம் விக்னேஸ்வரன் மக்கள் மீது மிகவும் பற்று கொண்டவர் என்றே கருத்து தெரிவித்து இருந்தார். 

சிங்கள மக்கள் ஒரு அடி போனால் நாங்கள் பத்து அடி போவோம் என்று சொல்லி நாகவிகாரையில் பத்திரிகையாளர் முன் வழிபாடு செய்தார். தமிழர் பேரவையின் அரசியல்சாசனத்துக்கான பிரேரணையில் தேசியம் மற்றும் பிரிவினை இடம் பெறாமல் பார்த்து கொண்டார். ஜனாதிபதி மைத்திரியை தமிழ் மக்களின் அபரீதமான வாக்குகள் மூலம் பதவிக்கு கொண்டு வந்ததில் இருந்து மைத்திரியுடன் சிறந்த உறவை பேணி வருகிறார். இருவரும் நல்ல மனிதர்களாகவே தெரிகிறார்கள். கொழும்பை இருப்பிடமாக கொண்டு சிங்களவர்களுடன் குடும்ப உறவும் நட்பும் கொண்ட விக்னேஸ்வரன் இலங்கைத் தேசியவாதியே அன்றி தமிழ் தேசியவாதி அல்ல. அவர் இலங்கை மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ சிங்களவர்களும் தமிழர்களும் ஏற்றுகொள்ள கூடிய தீர்வு ஒன்றுக்கு இன்றைய சிங்கள தலைவர்களுடன் இணைந்து செயல்ப்பட்டு வருவதாகவே தெரிகிறது. 

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அவருக்கு உள்ள பிரச்சினை இரண்டு காரணங்களை பின்னணியாக கொண்டது:

1. சுமேந்திரன் அவரை பயன்படுத்த அவர் விடவில்லை.

2. தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சில தீர்க்கப்பட வேண்டிய நேர்மை சம்பந்த பட்ட செயற்பாடுகள்.

இவற்றுக்கும் விக்னேஸ்வரனின் அரசியல் நிலைப்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை.

 

சம்பந்தர் சிங்கக் கொடி காட்டியது சரி எனில் விக்னேஸ்வரன் கொடியேற்றியதும் சரியே. அது பிழையென்றால் இதுவும் பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் கொடியென்னே சொல்ல வக்கில்லாது தேசியக் கொடின்னு எம் மக்களுக்கு சிங்களவனின் கொடியை இனங்காட்டுகிற செய்தி ஊடகத்தின் பிழைப்புவாதத்தை மறைச்சு.. எதுக்கு விக்கி ஐயா மீது இந்தப் பாய்ச்சல். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புடன் கூடிய.. ஆக்கிரமிப்பு.. நிர்வாகக் கட்டமைப்புக்குள்.. சிங்கக் கொடியை ஏத்தாமல்.. அதுக்காக..தமிழ் மக்களுக்கு ஈழம் கேட்டவையும்... சிங்கக் கொடியை தூக்கிப் பிடிக்கிறது போல கேலவம் எதுவுமில்லை. அதை தேசியக் கொடின்னு தலைப்புப் போட்டு செய்தி விக்கிற விபச்சார ஊடகங்களை முதலில் விரட்டி அடிக்கனும். விக்கி ஐயாவ அப்புறம் கேள்வி கேட்கலாம். tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Jude said:

 

 விக்னேஸ்வரன் இலங்கைத் தேசியவாதியே அன்றி தமிழ் தேசியவாதி அல்ல. அவர் இலங்கை மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ சிங்களவர்களும் தமிழர்களும் ஏற்றுகொள்ள கூடிய தீர்வு ஒன்றுக்கு இன்றைய சிங்கள தலைவர்களுடன் இணைந்து செயல்ப்பட்டு வருவதாகவே தெரிகிறது. 

 

 

இலங்கை தேசியவாதி த‌மிழருக்கு நல்ல தீர்வை சிங்கள்தேசியவாதிகளிடமிருந்து எடுத்து தருவாராயின் வரவேற்கப்பட வேண்டியதே......ஆனால் நடக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.