Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரன்ஸில் இருந்து நாடு திரும்பிய தந்தையும் மகளும் விமான நிலையத்தில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரன்ஸில் இருந்து நாடு திரும்பிய தந்தையும் மகளும் விமான நிலையத்தில்  கைது 

பிரான்ஸில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் நாடு திரும்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த  தந்தையும் மகளும் கட்டுநாயக்க  விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

g29FlJ3.png

கடந்த 25 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு சென்றிருந்த அ .தியாகராஜா வயது 52 மற்றும் அவரது மகளான தி .ஜனனி வயது  24 ஆகிய இருவருமே இவ்வாறு நேற்று மாலை  கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்ததுள்ளனர்.

இதேவேளை, அவர்கள் வந்திறங்கிய நிலையில் விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் கைதிற்கான காரணம் தெரியவில்லையெனசும் வெிமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்

http://www.virakesari.lk/article/17559

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ..... பொய்யான செய்தி, வசந்தியாக இருக்குமோ????

 

( காரணம் தெரியும் வரை பொறுமை காக்கவும் மக்களே! )

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

ஐயகோ..... பொய்யான செய்தி, வசந்தியாக இருக்குமோ????

 

எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தி அனுப்பிய தங்கள் முன்னாள் காதலியா வசந்தி....???? :shocked: :shocked:

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Paanch said:

எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தி அனுப்பிய தங்கள் முன்னாள் காதலியா வசந்தி....???? :shocked: :shocked:

71 தடவைகள் பார்க்கப்பட்டது, நீங்கள் ஒருவரே கண்டிருக்கிறீர்கள்.

முகக்குறியை போட மறந்துவிட்டேன்.

(??)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைநிலை இது தான்..

இனி  இங்க வருவினம்

இவர் ஏதோ செய்திருப்பார் என....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உண்மைநிலை இது தான்..

இனி  இங்க வருவினம்

இவர் ஏதோ செய்திருப்பார் என....

முழுமையான ஆடையில் காண்பதை விடவும் அரை குறை ஆடையில் காண்பதில்தான் கவர்ச்சி அதிகம்.... :grin:

வீரகேசரி தந்த செய்தியும் அரை குறைதான்.  உங்களையே கற்பனை உலகுக்கு கொண்டு சென்றுவிட்டதே  :shocked: :shocked:

 

விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட தந்தை மற்றும் மகளுக்கு பிணை

 

 

பிரான்ஸில் இருந்து நேற்று மாலை நாடு திரும்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த  தந்தையும் மகளும் கட்டுநாயக்க  விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

law-court_2900691b.jpg

இந்நிலையில் குறித்த இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 குறித்த இருவரும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 25 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு சென்றிருந்த அ .தியாகராஜா வயது 52 மற்றும் அவரது மகளான தி .ஜனனி வயது  24 ஆகிய இருவருமே இவ்வாறு நேற்று மாலை  கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/17576

எங்கயப்பா ஸ்ரீலங்கா ஏர்போர்ட்ல ஒரு பிரச்சினையும் இல்லை எண்ட ஆட்களை காணல????

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Surveyor said:

எங்கயப்பா ஸ்ரீலங்கா ஏர்போர்ட்ல ஒரு பிரச்சினையும் இல்லை எண்ட ஆட்களை காணல????

இவர்  திருட்டு  முழி  முழிச்சிருப்பார்  என்பார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, விசுகு said:

இவர்  திருட்டு  முழி  முழிச்சிருப்பார்  என்பார்கள்

தியாகராசா சிங்களத்திலையும் இங்கிலிசிலையும் இரண்டு கேள்வி கேட்டிருப்பார் எண்டால் சிங்களவன் வாயைப்பொத்திக்கொண்டு பயந்து ஓடியிருப்பான் எண்டும் சொல்லுவினம்.

எனக்குத்தெரிய யாழ் களத்தில் உள்ள உறவுகள் பத்து பேர் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் 2016 / 2017 இல் இங்கு வந்து போய் உள்ளார்கள் .

இங்கு வந்துபோன எனக்கு தெரிந்தவர்களின் எண்ணிக்கை எனக்கே தெரியாது.

அவர்களுக்கு நடக்காத ஒன்று இவர்களுக்கு நடக்குதென்றால் ஏன் என்ற  கேள்வியை கேட்கணும்.
ஏன் என்கிற கேள்வியை தூக்கி  போக்கெட்டுக்குள்ள போட்டுட்டு 

விண்ணாணம் பேசுபவர்களுக்கு விடை அளிப்பதே வீண்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஜீவன் சிவா said:

எனக்குத்தெரிய யாழ் களத்தில் உள்ள உறவுகள் பத்து பேர் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் 2016 / 2017 இல் இங்கு வந்து போய் உள்ளார்கள் .

இங்கு வந்துபோன எனக்கு தெரிந்தவர்களின் எண்ணிக்கை எனக்கே தெரியாது.

அவர்களுக்கு நடக்காத ஒன்று இவர்களுக்கு நடக்குதென்றால் ஏன் என்ற  கேள்வியை கேட்கணும்.
ஏன் என்கிற கேள்வியை தூக்கி  போக்கெட்டுக்குள்ள போட்டுட்டு 

விண்ணாணம் பேசுபவர்களுக்கு விடை அளிப்பதே வீண்.

இது  விண்ணாமன்று

ஒரு நாட்டின்  பாராபட்சம்

இங்க ஒரு பிரச்சினையுமில்லை வாருங்கள்என்று விட்டு

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சட்டம் என்றால்

எந்த விதத்தில் உங்கள்அழைப்பு????

கைது செய்யப்பட்டவுடன் உடனடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமையால் அனேகமாக குற்றப்புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டு இருக்க மாட்டார்கள் (செய்தியும் குற்றத்தடுப்பு பிரிவினர் என்றே சொல்கின்றது). அத்துடன் பிணையிலும் விடுவிக்கப்பட்டமையால் கைதுக்கான காரணம் சாதாரண குற்றம் ஒன்றுடன் தொடர்பு பட்டதாகத்தான் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

செய்தியை பிரசுரிக்கும் வீரகேசரி போன்ற தரமான பத்திரிகைகள் கூட ஒரு செய்தியை முழுமையாக பிரசுரிக்க எத்தனிக்கவில்லை. நீதிமன்றில் கண்டிப்பாக என்ன குற்றம் என்று கூறியிருப்பார்கள். குற்றத்தின் தன்மைக்கு ஏற்பத்தான் பிணையில் செல்ல அனுமதிப்பர். தீவிரவாத நடவடிக்கை தொடர்பாக எனின் இலகுவில் பிணையில் செல்ல விடமாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

கடந்த 25 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு சென்றிருந்த அ .தியாகராஜா வயது 52 மற்றும் அவரது மகளான தி .ஜனனி வயது  24 ஆகிய இருவருமே இவ்வாறு நேற்று மாலை  கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் பிறந்த பிள்ளையும் குற்றம் புரிந்துவிட்டுது போல் இருக்கு பொம்பிளை பிள்ளைகளின் தகப்பன்மார்களுக்கு இதன் வலி புரியும் 

1 hour ago, விசுகு said:

இது  விண்ணாமன்று

ஒரு நாட்டின்  பாராபட்சம்

இங்க ஒரு பிரச்சினையுமில்லை வாருங்கள்என்று விட்டு

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சட்டம் என்றால்

எந்த விதத்தில் உங்கள்அழைப்பு????

இவர் ஒரு தமிழர் என்பதால் கைது செய்யப்பட்டார் என்று சொல்ல வருகிறீர்கள்

ஆனால் இல்லை அது வேறு சட்டம் சம்பந்தமான விடயம் என்பது எனது நம்பிக்கை.

முடிந்தால் அவர்களை பற்றி தீர விசாரியுங்கள் + அதன் பின்னர் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு இலங்கையில் இனபோர் நடந்தது என்று எழுதினால் ......
தமிழர் எல்லோரும் அழிந்த பின்புதான் எழுதவேண்டும் என்று எண்ணுகிறார்கள் போல்.

வந்து விண்ணாணம் பேசுவார்கள் ....
இலங்கையில் இனப்போர் நடந்தது என்று சொல்கிறீர்கள் 
அங்கு இன்னமும் லட்ஷ கணக்கில் தமிழர் இருக்கிறார்களே என்று ?

கொழும்பில் தமிழர் என்ற காரணத்தால் கைது செய்து சிறையில் போட்டு 
அடித்து உதைத்துக்கொண்டு இருந்த அதே நேரம் 
கொழும்பில் இங்கும் இங்கும் ஒழித்து பிடித்து விளையாடி தப்பி 
வந்தவர்களே இங்கு எழுதிக்கொண்டு இருக்கும் 3/4 பங்கினர்.

அப்போ இனி என்ன எழுதுவது ...?
கொழும்பில் யாரையும் கைது செய்யவில்லை ...
குற்றம் செய்தவர்களை இலங்கை புனித போலீசு தண்டிச்சுது 

இலங்கையில் புலிகளின் இல்லாமையின் பின்பு அங்கு தமிழர் இல்லை 
ஒருவனும் தமிழனாக தலை நிமிர முடியாது இதுதான் நிதர்சனம்.
ஆனால் நீங்கள் தமிழ் பேசும் சிங்கள அடிமையாக யார் வேண்டுமானாலும் வரலாம் போகலாம். 
தமிழனை எப்படி துடைத்து எறிவது என்பது பற்றி ...
இன்று யாழ்ப்பாணத்தில் கட்டும் வரி பணத்தில் ஒரு பகுதியை எடுத்தே 
இலங்கை சிங்கள அரசும் அதன் புலனாய்வும் செயற்பட்டுக்கொண்டு இருக்கும்.
இது இலங்கையில்தான் நடப்பது அல்ல ... பாலஸ்தீனம் .. காஸ்மீர்  ... என்று ஒரு பட்டியல் ஒரு பக்கம் என்றால் 

இன்னொரு பக்கம் 
ஓட்டுமொத்த இலங்கையையும் எப்படி சுரண்டுவது அடிமை கொள்ளவது என்று 
முதலாம் தர நடுகள் இரவு பகலாக சிந்தித்து கொண்டுதான் இருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஜீவன் சிவா said:

இவர் ஒரு தமிழர் என்பதால் கைது செய்யப்பட்டார் என்று சொல்ல வருகிறீர்கள்

ஆனால் இல்லை அது வேறு சட்டம் சம்பந்தமான விடயம் என்பது எனது நம்பிக்கை.

முடிந்தால் அவர்களை பற்றி தீர விசாரியுங்கள் + அதன் பின்னர் எழுதுங்கள்.

நான்  100  ஆண்டுகால  சிங்களத்தின் வரலாற்றின்படிப்பினையிலிருந்து   எழுதுகின்றேன்

நீங்க?????

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன மீனை பிடித்து முழுங்கி 
உயிர்வாழ் என்பதே ...
பெரிய மீனின் விதியாகவும் நிதர்சன உண்மையாகவும் இருக்கிறது 

இதை இல்லை என்று இந்த உலகில் யாரும் வியாக்கினம் பேசினால் 
தள்ளி போவதே நல்லது 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

சின்ன மீனை பிடித்து முழுங்கி 
உயிர்வாழ் என்பதே ...
பெரிய மீனின் விதியாகவும் நிதர்சன உண்மையாகவும் இருக்கிறது 

இதை இல்லை என்று இந்த உலகில் யாரும் வியாக்கினம் பேசினால் 
தள்ளி போவதே நல்லது 

ஆனால் சின்ன மீனுகள்  ஒரு போதும் அதற்கு உடந்தையாவதில்லை...

அந்த மீனுகளுக்கே இந்த ஒற்றுமை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நவீனன் said:

விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட தந்தை மற்றும் மகளுக்கு பிணை

 

 

பிரான்ஸில் இருந்து நேற்று மாலை நாடு திரும்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த  தந்தையும் மகளும் கட்டுநாயக்க  விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

law-court_2900691b.jpg

இந்நிலையில் குறித்த இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 குறித்த இருவரும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 25 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு சென்றிருந்த அ .தியாகராஜா வயது 52 மற்றும் அவரது மகளான தி .ஜனனி வயது  24 ஆகிய இருவருமே இவ்வாறு நேற்று மாலை  கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/17576

கைது செய்ததையும்......பத்தாயிரம் ரூபா அபராதத்தையும்....சரீர பிணையையும் யோசிச்சு பாக்கேக்கை.... தியாகராசாவும் ஜனனியும் எங்கையோ சங்கிலி காப்பு களவெடுத்திருக்கினம் போலை கிடக்கு..tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் திரும்பி வரும் போது ஓர் தாயும் சிறிய வயது மகனும் குடியகல்வுப் பகுதியில் சிக்கல் பட்டுக்கொண்டிருந்தார்கள், கொஞ்ச நேரத்தில் நாங்கள் காத்திருந்த விமான Gate ற்கே வந்தார்கள்,

அவருடன் கதைத்தபோது தான் இலங்கைக்குள் உள்வரும் போது குடிவரவுப் பகுதியில் "தான் இலங்கையை விட்டு வெளியேறிய திகதியை காட்டுதில்லை, எப்படி இந்த கடவுச் சீட்டை எடுத்தாய் இலஞ்சம் என்று பல கேள்விகள் ஒருவாறு சமாளித்து போய்விட்டேன் இன்று திரும்பி வரும்போதும் அதே பிரச்சனை இலஞ்சம் கேட்டார்கள் சமாளித்துவிட்டேன்" என்றார். தனது பாஸ்போட் தொலைந்து பாரிசில் புதிதாக எடுத்ததாக கூறினார்.

அப்பெண்மணி கதைத்தது பாண்டிச்சேரி தமிழ். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விசுகு said:

ஆனால் சின்ன மீனுகள்  ஒரு போதும் அதற்கு உடந்தையாவதில்லை...

அந்த மீனுகளுக்கே இந்த ஒற்றுமை...

Image result for accenture commercial pics

எமது பலயீனம் புரிந்தால் 
நாம் சிந்திக்க வேண்டியது........

இந்த படம் சொல்லும் கதை ஆயிரம். 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, MEERA said:

ஒரு தடவை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் திரும்பி வரும் போது ஓர் தாயும் சிறிய வயது மகனும் குடியகல்வுப் பகுதியில் சிக்கல் பட்டுக்கொண்டிருந்தார்கள், கொஞ்ச நேரத்தில் நாங்கள் காத்திருந்த விமான Gate ற்கே வந்தார்கள்,

அவருடன் கதைத்தபோது தான் இலங்கைக்குள் உள்வரும் போது குடிவரவுப் பகுதியில் "தான் இலங்கையை விட்டு வெளியேறிய திகதியை காட்டுதில்லை, எப்படி இந்த கடவுச் சீட்டை எடுத்தாய் இலஞ்சம் என்று பல கேள்விகள் ஒருவாறு சமாளித்து போய்விட்டேன் இன்று திரும்பி வரும்போதும் அதே பிரச்சனை இலஞ்சம் கேட்டார்கள் சமாளித்துவிட்டேன்" என்றார். தனது பாஸ்போட் தொலைந்து பாரிசில் புதிதாக எடுத்ததாக கூறினார்.

அப்பெண்மணி கதைத்தது பாண்டிச்சேரி தமிழ். 

2009ம் ஆண்டு நாங்கள் போராட்டம் செய்து கொண்டு இருக்கையில் நிறைய தமிழ்நாட்டு தமிழர்கள் தாங்கள் ஈழத் தமிழர் என்று சொல்லி விசா எடுத்திருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

10.. 20 யூரோவைக் கொடுத்திருந்தா பிரச்சனை முடிஞ்சிருக்கும்.

அகதியாக தமிழகம் போன எம்மவர்களும் புதுச்சேரியில் வாழ்ந்து.. பிரான்ஸ் பாஸ்போட் எடுத்துக் கொண்டு.. பிறகு ஐரோப்பா வந்திருக்கினம்.

தமிழக மக்களை விட.. மலையாளிகள்.. ஈழத்தமிழர்கள் என்று சொல்லி அசைலம் அடிச்சது தான் அதிகம். ஏன் சிங்களவர்கள் அடிக்காத அசைலமா..?! இங்க சிலருக்கு.... உண்மை அப்பட்டமாக வெளியில் தெரிந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமற்று சொறீலங்காவின் அடாவடிகளை அங்கீகரிக்கும் அடாவடியைச் செய்து வருகினம். ஓர் நாள் அதற்கு தாங்களே விலைகொடுக்கும் போது தெரியும்.. மற்றவர்கள் அனுபவித்த வலிகள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் கண வருடத்திற்கு பிறகு ஊருக்குப் போறீங்கள்.அதுவும் புது பாஸ்போட்டில போறீங்கள் அட்லீஸ்ட் ஜடிக் காட்டையாவது கொண்டு போயிருக்க வேண்டும். வேற யாருடைய பாஸ்போட்டில் உங்கட போட்டோவை ஒட்டிப் போட்டும் நீங்கள் போயிருக்கலாம்?...நிற்க பிரச்சனை வேண்டாம் என்று காசை குடுத்து விசயத்தை முடிக்கிற உங்கள் மாதிரி ஆட்கள்:rolleyes: இருக்கும் மட்டும் அவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் இருப்பார்கள்?...உங்கள உள்ளுக்குள் போடாமல் அல்லது திருப்பி அனுப்பாமல் ஊருக்குப் போக விட்டார்களே என சந்தோசப்படுங்கள்tw_blush:..
எங்கட தமிழ்ச்சனம்,பாண்டிச்சேரி ஆட்கள் என சொல்லி அசேலம் அடித்ததை நான் கேள்விப்படவில்லை.அடித்தார்களோ தெரியாது :unsure:ஆனால் பக்கத்து நாட்டில் யுத்தம் நடந்து கொண்டு இருக்கும் போது அதை தடுத்து நிறுத்த நினைக்காமல் அதில் குளிர் காய தமிழ்நாட்டு தமிழர்களால் மட்டுமே முடியும்

ஏதாவது குற்றங்கள் செய்து போட்டு வெளிநாட்டுக்கு தப்பிப் போகின்ற ஆட்களை வரும் போது ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும் என்டு சொல்லுவினம் போல இருக்கு<_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.