Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் விளையாடும் வீடு

இது ஆனந்தம்  விளையாடும் வீடு

5 அன்றில்கள்  ஒன்றான கூடு

இது தான்   அவர்களால் அவர்கள்  வீட்டில்  அநேகம் பாடப்பட்ட பாடல்.

அன்பான அம்மா

அடித்தே இருக்காத அப்பா

வசதியான நாடு

திறமையான பிள்ளைகள்

மேல் படிப்புக்கள்...என எல்லாமே நன்றாகவே போய்க்கொண்டிருந்தன

 

பட்டப்படிப்பு முடிக்கும் தருணம் அவனுக்கு காதல் ஒன்று அரங்கேறியது

சாதி  வந்து குறுக்கிட்டது

குடும்பம் சின்னாபின்னமாகியது

தகப்பனார் கோமா நிலையில்  வைத்தியசாலையிலிருந்தார்

கோமா நிலையிலிருந்த தகப்பனை காட்டி 

அவர் பெற்ற பிள்ளை

பாசமாக  வளர்ந்த வளர்த்த

படித்த பிள்ளை சொன்னது

சாதி  வெறியன் ஒருவன் சாகக்கிடக்கிறார் என்று.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

காதல் கண்களைக் குருடாக்கி விட்டது. மட்டுமல்லாது பேச்சிலும் விஷத்தை விட்டிருக்கு....!  tw_blush:

எழுதுங்கள் விசுகு....!

  • கருத்துக்கள உறவுகள்

.  அதுசரி தமிழரை காதலித்தால்தான் சாதி. வேற்றினத்தவரை காதலித்தால் சாதி இல்லையா?  இந்தக் கேள்வி என்னிடம் அதிக நாளாக உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் தவறு தகப்பனையே சாரும்.

அதற்காக அவரை அப்படி திட்ட வேண்டியதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே

எதையும் நான் இங்கு தீர்மானமாக சொல்லவில்லை

ஒரு வார்த்தையோடு நிறுத்தியிருக்கின்றேன்

எந்தவித கலப்புமற்று

நடந்ததை  நடந்தது போல் எழுதியிருக்கின்றேன்

ஏனென்றால் நாம் அதிலும் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் எங்கு சறுக்குகின்றோம்

எங்கு தடுமாறகின்றோம்

எப்பொழுது எமக்குள் விரிசல் தொடங்குகிறது

பாசத்தோடு நாம் வளர்த்த  பிள்ளைக்கு நாம் எவ்வாறு (சாகக்கிடக்கும் நிலையிலும்) 

பைத்தியக்காறராக தெரிகின்றோம்??

பல காலமாக எனக்குள் கிடந்த விடயமிது

யாழின்  இந்த திரி

அதையும் கொட்ட வைத்திருக்கிறது

நல்லது  நடந்தால் அதுவே குறி.

 

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வந்த விடயம் முக்கியமானது. ஆனால் முகநூல் சுவரில் எழுதுவது மாதிரித்தான் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு குடியுரிமை வேண்டும்.இங்க வேலை வேண்டும்.இங்குள்ள பாதுகாப்பு வேண்டும்.இங்குள்ள மருத்துவ வசதி வேண்டும்.அப்படி சகல வசதிகளும் இங்கு வேண்டும்.ஆனால் கலியானம் என்டு வந்தால் மட்டும் அங்குள்ள சாதி வேண்டும்.:unsure:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி . இங்கு பிறந்த சில  பிள்ளைகளுக்கு சாதி என்றால் என்ன என்றே விளங்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்திரியை  பார்த்ததும் இதைத்தான் யோசித்தேன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சாதி திமிரை மிகவும்  சுருக்கமாக  எழுதியுள்ளீர்கள்.தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி...விசுகர்!

தந்தையின் 'தலையீடு' மகனை எவ்வளவுக்குப் பாதித்திருந்தால்...இப்படியான வார்த்தைகள் அவனது வாயிலிருந்து விழுந்திருக்கும் ?

இந்த வேளையில்....கீதை தான் நினைவுக்கு வருகின்றது!

எதைக் கொண்டு வந்தோம்....நாம் இழப்பதற்கு?

  • கருத்துக்கள உறவுகள்

"சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாரதியார் பாடலை பாலகன் படிக்கும்போது பரவசப்படுவதும் தந்தைதான்,

பாலகன் பருவ வயதுவந்து துணையைத் தேடும்போது சாதி வெறிபிடித்து அலைவதும் தந்தைதான்.

12 hours ago, Kavallur Kanmani said:

.  அதுசரி தமிழரை காதலித்தால்தான் சாதி. வேற்றினத்தவரை காதலித்தால் சாதி இல்லையா?  இந்தக் கேள்வி என்னிடம் அதிக நாளாக உண்டு.

அதிகமாக கையையே கழுவி விடுவார்கள். அங்கு சாதி இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன.....! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

-----

அன்பான அம்மா

அடித்தே இருக்காத அப்பா

------

தகப்பனார் கோமா நிலையில்  வைத்தியசாலையிலிருந்தார்

கோமா நிலையிலிருந்த தகப்பனை காட்டி 

அவர் பெற்ற பிள்ளை

பாசமாக  வளர்ந்த வளர்த்த

படித்த பிள்ளை சொன்னது

சாதி  வெறியன் ஒருவன் சாகக்கிடக்கிறார் என்று.

என்ன இருந்தாலும்.... பெற்ற தகப்பனை பார்த்து,
படித்த மகன் பாவித்த  வார்த்தையை.. ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விசுகு.

திருமணம் என்று வரும் பொழுது சாதி குறுக்கிடுவது சகஜம், ஏனெனில் நாம் பிறந்து வளர்ந்த காலம் இடம் அப்படியானது. 

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்று வரும்போது சாகக்கிடைக்கும் தகப்பனைப்பார்த்து பாசாமில்லாமல் சொல்பவனை, அந்த பெண் கட்டியிருந்தால் , அவள்  ஏண்டா இவனைக் கட்டினேன் என்று கவலைப்பட்டிப்பார்.  தன்னுடைய விருப்பத்தினை மட்டுமே சுயநலமாகக் கருதும் ஒருவனால் அந்தப் பெண் எப்படிக்குடும்பம் நடாத்துவாள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.