Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சம்பந்தனிடம் உடல் சோதனை செய்த மைத்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள்!


Recommended Posts

சம்பந்தனிடம் உடல் சோதனை செய்த மைத்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள்!

 

r-sampanthan-300-news2-300x245.jpg தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அவமரியாதையாக நடத்தியுள்ளனர் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய நிகழ்வு ஒன்றில் நாட்டின் பிரதான தமிழ் தலைவர் வருகை தரும் போது கௌரவமாக வரவேற்க வேண்டும் என்ற போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுபாப்பு அதிகாரிகளினால் சம்பந்தன் மீது உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் வெடி குண்டு சோதனையிடும் ஸ்கேனர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு அவர் சோதிக்கப்பட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் ஸ்கேன் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் உள்ளே சென்ற சம்பந்தன் இரண்டாவது முறையாக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். சம்பந்தனின் வயதினை கூட கருத்திற்கொள்ளாத ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர், அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பரிசோதனையை மேற்கொண்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தீபாவளி தினத்தில் இவ்வாறான சம்பவத்திற்கு முகம் கொடுத்த நாட்டின் மூத்த தமிழ் தலைவர் மனவருத்தமடைந்துள்ளார் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.etr.news/

உஷ்… இது ரகசியம் : இந்த தலைவருக்கே சோதனையா

Link to comment
Share on other sites

இரா.சம்பந்தர் என்ற மனிதர் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும். ஆனால் அவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ஒரு தமிழர். அவருக்கு ஏற்பட்ட அவமானம் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழருக்கும் ஏற்பட்ட அவமானமே.! :( 

Link to comment
Share on other sites

12 hours ago, Paanch said:

இரா.சம்பந்தர் என்ற மனிதர் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும். ஆனால் அவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ஒரு தமிழர். அவருக்கு ஏற்பட்ட அவமானம் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழருக்கும் ஏற்பட்ட அவமானமே.! :( 

குறிப்பாக அரசியல் முதிர்ச்சியற்ற அவரை தொடர்ந்து தெரிவு செய்யும் திருமலை மக்களுக்கு பாரிய அவமானம். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Paanch said:

இரா.சம்பந்தர் என்ற மனிதர் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும். ஆனால் அவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ஒரு தமிழர். அவருக்கு ஏற்பட்ட அவமானம் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழருக்கும் ஏற்பட்ட அவமானமே.! :( 

எதிர்க்கட்சி தலைவர் எண்டால் அதுக்குரிய தினாவெட்டு,அதிகாரத்தன்மை இருக்கவேணும். அந்த மனிசனிட்டை அதில்லை.....ஆளைப்பாத்தால் கூனிக்குறுகி கள்ளக்கோழி புடிக்கப்போறவனை மாதிரி இருக்கு....எவன் மதிப்பான்...எவன் பயப்பிடுவான்?

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

எதிர்க்கட்சி தலைவர் எண்டால் அதுக்குரிய தினாவெட்டு,அதிகாரத்தன்மை இருக்கவேணும். அந்த மனிசனிட்டை அதில்லை.....ஆளைப்பாத்தால் கூனிக்குறுகி கள்ளக்கோழி புடிக்கப்போறவனை மாதிரி இருக்கு....எவன் மதிப்பான்...எவன் பயப்பிடுவான்?

சம்பந்தர் முன்னால் கைகட்டிப் பவ்வியமாகப் பணிவுடன் இருக்கும் மோடி.:grin:   இது போதாதா சாமி அவர்களே....??

Bildergebnis für தலைவர் சம்பந்தர்

Link to comment
Share on other sites

ச்சிறிலங்கை - அலோ எச்சூச்சுமி, நாங்களும் ஆட்டையில இருக்கோம்... எம்பட கிட்டையும் வெடிகுண்டு ஸ்கேனர்லாம் இருக்குல... அதை காட்டணும்ல...

பாத்துக்கங்கபா நாங்களும் ஏதோ தெரியாத கருமாந்தரத்தலாம் யூஸ் பண்றோம்... எங்களையும் ஆட்டையில சேத்துக்கங்கப்பு... ப்ளீச்... ப்ளீச்... ப்ளீச்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

சம்பந்தர் முன்னால் கைகட்டிப் பவ்வியமாகப் பணிவுடன் இருக்கும் மோடி.:grin:   இது போதாதா சாமி அவர்களே....??

Bildergebnis für தலைவர் சம்பந்தர்

அப்ப இது மோடிக்கு இருமல் வந்தபோது எடுத்த படமே? :grin:

Bildergebnis für modi in germany

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே  கொழும்பில் 

தமது ஆயுதங்களின் பாதுகாப்புடன் சென்று இறங்கி

பேச்சுவார்த்தை  நடாத்திவிட்டு

அதே ஆயுதங்களுடன் திரும்பி  வந்தவர்கள் புலிகள்

அது ஒரு கனாக்காலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

இதே  கொழும்பில் 

தமது ஆயுதங்களின் பாதுகாப்புடன் சென்று இறங்கி

பேச்சுவார்த்தை  நடாத்திவிட்டு

அதே ஆயுதங்களுடன் திரும்பி  வந்தவர்கள் புலிகள்

அது ஒரு கனாக்காலம்

அது கனாக்காலம் இல்லை. பொற்காலம். அந்த பொற்காலத்தை சீரழித்தவர்கள் கூட மீண்டும் வருமா எனும் ஏங்கும் காலம்.
அன்றைய சுகத்திற்காக துணைபோனவர்கள் இன்று அதன் விளைவை மெதுவாக உணர்கின்றனர் என்பதுதான் யதார்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா சோதனைகள் முடிந்த பிறகு அந்த அவமானத்தோடு தீபாவளி நிகழ்வில் பங்கு பெறத் தான் விரும்பவில்லையென்று  உடனடியாகத் திரும்பிப்  போயிருக்க  வேண்டும்.  பங்கு பற்றியதால் தமிழரின் மாண்பு  இழிவடைந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

சம்பந்தர் முன்னால் கைகட்டிப் பவ்வியமாகப் பணிவுடன் இருக்கும் மோடி.:grin:   இது போதாதா சாமி அவர்களே....??

Bildergebnis für தலைவர் சம்பந்தர்

இப்படிக் கையைக் கட்டி இருப்பது ஒரு உடல் மொழியாகும்!

இதன் உண்மையான கருந்து...எனக்கும்...உனக்கும் இடையே எந்த விதமான நெருக்கமும் இல்லை என்பதாகும்!

ஆங்கிலத்தில் கூறுவதானால்...

I would like to keep you at distance. 

7 hours ago, குமாரசாமி said:

அப்ப இது மோடிக்கு இருமல் வந்தபோது எடுத்த படமே? :grin:

Bildergebnis für modi in germany

இந்தப் படத்தில் கைகளை வைத்திருக்கும்...உடல் மொழியின் கருத்து....

மோடி....ஆகா.நாம ரொம்ப நெருங்கிட்டோம்!

பெண்... I am not sure about you.....man..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் கால்மேற் கால்போட்டு நெருக்கி   கைளாலும் கட்டிக்கொண்டிருக்கிறா.  அதற்கும் ஏதாவது கருத்திருக்குமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, karu said:

அந்தப் பெண் கால்மேற் கால்போட்டு நெருக்கி   கைளாலும் கட்டிக்கொண்டிருக்கிறா.  அதற்கும் ஏதாவது கருத்திருக்குமோ? 

அடக்க...ஒடுக்கமான பெண் தான் என்று சொல்லிறா ..போல கிடக்கு!

அடிக்கடி...சாறித்தலைப்பால..இழுத்து மூடிற மாதிரித் தான். இதுவும் .!

கனக்க யோசிக்காதையுங்கோ..!<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் எப்பிடி மிதித்தாலும் அவனுக்குத்தான் சேவகம் செய்வேன் என்று அடம்பிடிக்கிறவையை யார் மதிப்பினம். அந்த ஆள் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவேயில்லை. தொடர்ந்து தன் பணியை செய்துபோட்டு வந்திட்டுது. இவையள் தான் தங்கட தலைவருக்கு ஏதோ நடக்கக் கூடாதது நடந்து போச்சென்று குத்தி முறியினம். அவருக்கு உதெல்லாம் புதிசே? அற நனைஞ்சவனுக்கு கூதலென்ன காய்ச்சலென்ன. எல்லாம் ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

20 hours ago, karu said:

சம்பந்தர் ஐயா சோதனைகள் முடிந்த பிறகு அந்த அவமானத்தோடு தீபாவளி நிகழ்வில் பங்கு பெறத் தான் விரும்பவில்லையென்று  உடனடியாகத் திரும்பிப்  போயிருக்க  வேண்டும்.  பங்கு பற்றியதால் தமிழரின் மாண்பு  இழிவடைந்துள்ளது.

முதுகெலும்பில்லாத மனிதர் எப்படி திரும்பிச் செல்வார்?
மான ரோஷத்தை விட கிடைக்கும் இலவச சிற்றுண்டிகளை பெரிதாக மதிக்கும் நபர் சம்பந்தன். இது 50 வருட அரசியல் சாதனை அவருக்கும் அவரின் விசிறிகளுக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, karu said:

அந்தப் பெண் கால்மேற் கால்போட்டு நெருக்கி   கைளாலும் கட்டிக்கொண்டிருக்கிறா.  அதற்கும் ஏதாவது கருத்திருக்குமோ? 

தனிய ஒரு கோணத்திலை நிண்டு யோசிக்காமல் பலகோணத்திலை யோசிச்சால் இந்தப்பாட்டு குறுக்காலை வந்து போகுது...

 

Link to comment
Share on other sites

On 25/10/2017 at 11:19 PM, விசுகு said:

இதே  கொழும்பில் 

தமது ஆயுதங்களின் பாதுகாப்புடன் சென்று இறங்கி

பேச்சுவார்த்தை  நடாத்திவிட்டு

அதே ஆயுதங்களுடன் திரும்பி  வந்தவர்கள் புலிகள்

அது ஒரு கனாக்காலம்

மறுபடி அதுபோல் உலகம் முழுதும் சுற்றும் பொற்காலம் வரும்...

ஆனால் அந்த காலம் நமது உரிமையை மீட்டெடுப்பதற்க்கு மட்டும் அல்ல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மியாவ் said:

மறுபடி அதுபோல் உலகம் முழுதும் சுற்றும் பொற்காலம் வரும்...

ஆனால் அந்த காலம் நமது உரிமையை மீட்டெடுப்பதற்க்கு மட்டும் அல்ல...

உங்கள்  வாக்கு  பலிக்கட்டும்  ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய மனிதர் என்றால் வாண்டடாட வந்து  நியுசில் அப்புடி இப்புடி அடிபடனும் இல்லையென்றாள் எல்லாரும் மறந்து போகினம் !! :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.