Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களின் பூர்வீகம் தமிழர்களின் வரலாற்றினைவிட பழமைவாய்ந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

23658871_1546065552146438_9072925128059782714_n.jpg?efg=eyJpIjoidCJ9&oh=6e9fc559eb15b615e0ac9382466798bf&oe=5A99EE1E

வடமாகணத்தில் அரங்கேறிய எழுக தமிழ் நிகழ்வில் வடக்கோடு கிழக்கை இணைத்தே தீரவேண்டும் என்ற நாழிலிருந்து இன்றுவரையான கோசங்களுக்கு  C V விக்னேஸ்வரன் கூறிய வரலாற்றை இன்னுமொருமுறை அவர் திரும்பி பார்க்க வேண்டும்.

 தமிழர்கள் எவ்வாறு வந்தேறுகுடிகள் இல்லாமல் இலங்கையின் பூர்வீகக் குடிகளில் ஒரு அங்கத்தவர் என்று நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை முஸ்லிம்களும் இந்நாட்டின் பூர்வீகமக்கள் என்பதனை வடக்கு முதலமைச்சர் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

 முதலமைச்சரின் உரையில் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதனை சிங்கள சமூகம் நிருபித்தால் வடகிழக்கு இணைப்பை நான் கைவிடுகிறேன் என அன்று அறைகூவல் விடுத்தார்இதன்மூலம் கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு சொந்தமானது என்றும் வந்தேறு குடிகளான முஸ்லிம்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது எனவும் மறைமுகமாக சொல்லி வைத்தார், ஆனால் இன்று அராபியாவிலிருந்து வந்தமுஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் எனக்கூறுகிறார்..

 வடக்கு முதலமைச்சர் வரலாறு பேசுவதற்கு தகுதியானவராஎன்பது எனது கேள்வியாகும்

 ஏனென்றால் விக்னேஸ்வரனும் அவரைப்போன்று வறலாறுகளை நுனிப்புல் மேய்ந்த ஒருசில தமிழ் தலைமைகளும் முஸ்லிம்கள் தமிழ் பேசுகின்றார்கள்இஸ்லாமிய மதம் கி பி 8ம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கிறதுஆகவே வர்த்தக நோக்கில்வந்த அரபியர்கள் தமிழ் பெண்களை திருமணம் முடித்ததன் விளைவாக தமிழ் பேசுகின்றார்கள் என்றும்  முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்றும் எண்ணுகின்றனர்இதுதான் இவர்களது அறியாமையாகும்.

 

 இலங்கையில் சோனகர் சமூகம் என்பது சைவமததுக்கு முந்திய வரலாறுகளை கொண்டுள்ளது என்பதனை வரலாற்று ஆசிரியர்கள் நிருபித்துள்ளார்கள். (சோனகர்கள் மலேமேமன்,போறா என்று பிரிந்திருப்பதனை தடுப்பதற்கு முஸ்லிம்கள் என்ற சொல்பிரயோகதுக்குள் ஒன்றுசேர்க்கப்பட்டார்கள்)  இந்தியாவின் ஒரிசா பகுதிகளில் இருந்து இலங்கைக்குள் வந்த திராவிடர்கள் பாண்டிய மன்னனின் ஆட்சிக்காலத்தில் வரி செலுத்தும் முறை கொண்டுவரப்பட்ட பின்னரே சைவ மதத்தினராக அடையாளம் காணப்பட்டனர்
ஆகவே சோனகர் சமூகம் சைவ மதத்துக்கும் முந்திய வரலாற்று பூர்வீகத்தைக்கொண்டுள்ளது.

 அதேபோன்று சோனகர்கள் தமிழ் பேசுவதற்கு காரணம் தமிழக பகுதிகளில் வாழ்ந்த சோனகர்கள் சங்கிலிய மன்னனின் கொடுங்கோலின் காரணமாக இலங்கைக்குள் (மரைக்கார்களும்,லெப்பைகளும்) குடிபெயர்கின்றபோது இங்குவாழ்ந்த சோனக உறவுகளோடு உரையாற்றுவதற்கான மொழியாக தமிழை மாற்றிக்கொண்டனர்.  ‘’இவ்விடத்தில் வரலாற்று ஆசிரியர்கள் ஒன்றை குறிப்பிடுகின்றார்கள் வடகிழக்கில் வாழ்ந்த தமிழ் பெண்களை வியாபாரத்துக்காக வந்த அரபியர்கள் திருமணம் முடித்தமையால் அவர்களது சந்ததிகள் தமிழ் பேசுகின்றார்கள் என்று திரிவுபடுத்தி கூற முற்படுகின்றனர்அப்படியானால் வடகிழக்குக்கு வெளியில் வாழுகின்ற 3/2 பங்கு முஸ்லிம் சமூகம் எவ்வாறு தமிழ் பேசக் கற்றுக்கொண்டது’’ எனும் சிந்தனை இவர்களுக்கு எழாதது ஏன்ஆகவே சோனகர்கள் எல்லோரும் தகவல் பரிமாறும் மொழியாக தமிழை தமிழ் இராஜ்ஜியம் இலங்கைக்குள் உருவாவதற்கு முன்னே பேசுகின்றனர் என்பது புலனாகிறது.

   ஆனால் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த சோனகர்கள் அர்வி என்ற மொழியை பாவனையில் கொண்டிருந்ததாகவும் ஒல்லாந்தர் படை எடுப்பின் பின் அர்வி மொழியை அவர்கள் அழித்துவிட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

  இஸ்லாம் மதம் கி பி 8ம் நூற்றாண்டுக்குப்பின்னர் வந்தாலும் சோனகர் சமூகம் சைவ மதத்தை பின்பற்றும் தமிழர்களுக்கு முந்திய வரலாறுகளை கொண்டது என்பதனை இப்போதுள்ள தலைமைகள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

  ஏனென்றால்.

 இஸ்லாம் மதம் பரவுவதற்கு முன்னால் அரபியர்கள் அரபியர்கள்தான், சீனர்கள் சீனர்கள்தான் ஆனால் அவர்களது மதம் மாறியுள்ளது அந்நிய படைஎடுப்புக்களின்மூலம் மதம் மாற்றமடைந்ததும் நன்னடத்தைகள்மூலம் மதம் மாறிய சந்தர்ப்பங்களும் வரலாறுகளில் அதிகம் காணப்படுகிறது.

 உதாரணமாக முக்குவர் குலத்தை சேர்ந்த சமூகத்தினர் அந்நிய படையெடுப்பில் தமது பெண்களை பாதுகாத்து கொடுத்தமையை இட்டும் சோனகர்களின் நன்னடத்தையின் பொருட்டும் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களாக மாறிய வரலாறுகள் இன்றும் சான்றாக உள்ளன இம்மக்கள் தற்போது புத்தளப்பகுதிகளில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

 குறிப்பாக ஜfனா  மாவட்டத்தில் காணப்படும் நெய்னா  தீவில் பின்பற்றப்பட்டுவந்த நாகவழிபாடு உலகில் நெய்னா தீவுக்கு அடுத்ததாக இன்னுமொரு நாட்டில்தான் காணப்படுகிறது இந்த வரலாற்றை விக்னேஸ்வரன் தேடி அறிந்தால் சோனகர்கள் யார்  என்பதனை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

 ஆகவே விக்னேஸ்வரன் வரலாறுகளை தெரிந்து கொள்வதன்மூலம் கிழக்கு வடக்கோடு இணைய வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட வேண்டும் என்பதனை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

 SM சபீஸ்

http://www.madawalanews.com

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாய்யா, சபீசு, கடைசீல தனி முஸ்லீம் மாகாணம், சரியா சட்டம்.... அப்படித்தானே போகப் போறீக....

தெளிவா சொல்லலாமே?

நீங்க இந்த வழில போகணும் என்னு முடிவு செய்து அதன் படியே, கதை சொல்லி, எழுதணும் என்னு முடிவு செய்தால், நாம ஒண்ணுமே பண்ண முடியாது. 

காலி நிலை, காவிகளினால்... மடவளவுக்கும், காத்தான்குடிக்கும் வரும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆராய்ச்சியா ள ரிடம் இன்னும் எதிர்பார்க்கிறம்tw_angry: 

  • கருத்துக்கள உறவுகள்
சபீசு நானா சிங்களர்பற்றி எதுவுமே கூறவில்லை. பயம்போல் இருக்கிறது.:shocked:
 
இதுவரை எழுதப்பட்ட சரித்திர ஆராச்சி நூல்களை எல்லாம் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, சபீசு நானா எழுதப்போகும் நூல்களைப் படிக்க எல்லோரும் தயாராகுங்கள். :grin:
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Paanch said:
சபீசு நானா சிங்களர்பற்றி எதுவுமே கூறவில்லை. பயம்போல் இருக்கிறது.:shocked:
 
இதுவரை எழுதப்பட்ட சரித்திர ஆராச்சி நூல்களை எல்லாம் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, சபீசு நானா எழுதப்போகும் நூல்களைப் படிக்க எல்லோரும் தயாராகுங்கள். :grin:

நானா தமிழில எழுதுவாரா இல்லை அரபில எழுதுவாரா எனக்கு டவுட்டு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் துரத்தியபோது நானும் அந்த இடத்தில் நின்றேன் 
ஒரு தாய் விம்மி விம்மி அழுதுகொண்டு இருந்தார் 
அவரை பார்க்கும்போது எனக்கும் என்னை அறியாமலே அழுகை 
வந்துவிட்டது.
நண்பர் ஒருவர் இருந்தார் அவருக்கு கொஞ்ச காசு கொடுத்து விடலாம் என்று 
நினைத்தேன் என்னிடம் வெறும் 100 ரூபா மட்டுமே இருந்தது 
அவருக்கு எனது கஸ்டம் தெரியும் ... இல்லை இல்லை வேண்டாம் என்று 
மறுத்து வாங்கவில்லை.
அப்போதெல்லாம் இது சும்மா ஒரு தற்காலிக நடவடிக்கைதான் 
என்று ஆறுதல் சொல்லி வந்தேன்

இப்போ வரலாறு வரையிறத பார்த்தா அப்பவே நிரந்தரம் ஆக்கி 
இருக்க வேண்டும் போல ஒரு எண்ணம் தோன்றுது.

முகப்புத்தகம் முழுக்க 
மியன்மார் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்காக எழுதி வருகிறேன் 
இப்போ இவர்கள் கதையை வாசிக்க கொஞ்சம் உறுத்தலா இருக்கு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, colomban said:

 

23658871_1546065552146438_9072925128059782714_n.jpg?efg=eyJpIjoidCJ9&oh=6e9fc559eb15b615e0ac9382466798bf&oe=5A99EE1E

முஸ்லிம்களின் பூர்வீகம் தமிழர்களின் வரலாற்றினைவிட பழமைவாய்ந்தது

"சீமான்" போன்ற ஒரு அரசியல்வாதி இலங்கை  தமிழர்களுக்கும் வேண்டும்.:cool:

சதாம் போட்டார், கடாபி போட்டார், இப்ப இவர்களின் அடி மடியிலை (சவூதி) கை வைபடுகிறது என விளங்காமல் துள்ளுறார்.  கன காலம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் பிறந்ததே...கிறிஸ்துவுக்குப் பின்னர்....ஆறாம் நூற்றாண்டு!

திருஞான சம்பந்தர் காலம்....கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்றாம் நூற்றாண்டு!

 

அவரது  காலத்தில் நிரை கழல் அரவம் சிலம்பொலி அலம்பும்...கோண மாமலையானைப் பாடியுள்ளார் எனின்.....ஆய்வாளர் உண்மையில் கனவுகாண்கிறார்ன் என்பதே உண்மை..!

கண்டியின் கடைசி மன்னன் சிறி விக்கிரம ராஜ சிங்கன்.....பாவம் பார்த்துக் கொஞ்ச முஸ்லிம்களுக்குக் கந்தாளாயில் வாழும்படி இடம் ஒதுக்கிக் கொடுத்தது தான் ..வரலாறு!

இண்டைக்கு இவ்வளவு பூதாகரமாக...வளர்ந்து ...அடி தலை விளங்காமல் துள்ளுது!

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:
சபீசு நானா சிங்களர்பற்றி எதுவுமே கூறவில்லை. பயம்போல் இருக்கிறது.:shocked:
 
இதுவரை எழுதப்பட்ட சரித்திர ஆராச்சி நூல்களை எல்லாம் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, சபீசு நானா எழுதப்போகும் நூல்களைப் படிக்க எல்லோரும் தயாராகுங்கள். :grin:

வாய்க்குள்ள போகக் கூடியதனைத் தானே ...கடிக்க முடியும்!

அது முடிய....முழுப் பலாப்பழததையும் விழுங்கிற பிளான் இருக்கலாம்!

 

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும் அதற்க்கு ஆதாரம்கள் வேணும் முதலில் ஆதரத்தை எடுத்து போட்டு விட்டு உளரனும் .

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நியோ_நக்கீரன் said:

சதாம் போட்டார், கடாபி போட்டார், இப்ப இவர்களின் அடி மடியிலை (சவூதி) கை வைபடுகிறது என விளங்காமல் துள்ளுறார்.  கன காலம் இல்லை.

அவர்கள் மட்டுமா போட்டார்கள்? அதற்குள் மே 18, 2019 ஐ மறந்து  விட்டீர்களே?

உலகை கொள்ளையடித்து, திருடி வாழும் முஸ்லிம்கள் வரலாற்றையும் கொள்ளையடிக்க முயல்கின்றனர்.

On 2017-11-21 at 6:11 PM, Jude said:

அவர்கள் மட்டுமா போட்டார்கள்? அதற்குள் மே 18, 2019 ஐ மறந்து  விட்டீர்களே?

இல்லை கலாநிதி சேர், இப்போது 2017ம் ஆண்டு எனக் கூறிக் கொண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2017 at 10:11 AM, Jude said:

அவர்கள் மட்டுமா போட்டார்கள்? அதற்குள் மே 18, 2019 ஐ மறந்து  விட்டீர்களே?

இன்னும் 2019 வரவில்லை :10_wink:நண்பரே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.