Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தமிழர்களும் டாக்டர் ஷாலினியும்

Featured Replies

This entire trip to Toronto was full of learning, observations and understanding. It will take me years to talk or write about all of this in detail. Some salient points were:
1) My flight neighbour was Czech- Her Hindu assigned name was Shalini and she was full of praise for Hindu religion. She was a vegetarian and wondered what I thought about eating meat- especially cows. If all life is equal, isn’t the cow equal to a fruit? I was too sleepy for a detailed discussion anyway. Some other time Czech Shalini. Advaita on hold!
2) On reaching Toronto, from every Tamil I met, I learnt a piece of new information. We in Tamilnadu know of only one narrative. But the Srilankan Tamils have several narratives. Most people felt it was an useless war that yielded no outcome. Many mothers felt the pent up rage- they had fled their country to protect their sons from being forced into warmongering, and daughters from being raped or murdered. They had no idea why they were put to so much suffering- the elders ache for their ancestral land, the youngsters with no idea about any of their pain felt it was way too much drama. 
As a culture we have been erecting hero stones and singing praises of suicidal warriors- but the youth just understand it in one line : It is glorious to commit suicide. That’s not what we want them to think!
War is Testosterone running amok. Peace is Oxytocin flowing like a life giving river. 
More on the psychodynamics of warring later
3) The Tamil women! Are so smart, dynamic and just so downright natural leaders. Only, they don’t seem to know their own self worth. They know of Bharathiyar- and his paper tiger Puthumai Penn. They don’t know of Periyar and his brand of Authentic Female Emancipation.
4) The men are well turned out. All flags of success flying high. But some are disillusioned, over worked, traumatised and torn apart with conflicting feelings, thoughts and options. Yet high functioning. Remarkably resilient. And the promise for the future. Some treat their women with heart warming chivalry. Some need help to get there.
5) The kids are trained in Bharathanatyam, Classical music and all of them imitate Kollywood to a T. They don’t realise it is not even their own culture, that Kollywood is itself a cheap copy of Bollywood! But apart from the cultural confusions, the kids are super smart and poised to take on the whole wide world. 
6) As a whole the Tamils are thriving, struggling and improving their fitness for survival. All they need is to choose smart memes and keep the long line of surviving genes going on forever.
7) We also are given to think that Fidel Castro is a great revolutionary. The people who have been to Cuba tell me this: Fidel was a fake hero too. His country is so poor that mothers pimp for their preadolescent girls - so bad is their poverty. And the Castros do nothing about it. And routinely Cubans spit on Fidel when he comes on TV
8) In Tamilnadu Ezha Tamilargal is an important election issue- But hey, let’s not take sides yet. Let’s first read up on this. There are so many perspectives to this. Let’s become knowledgeable before we even come to conclusions. 
9) The Labourers who emigrate to the Middle East are severely tortured, sexually and physically abused, and land up in India battered and broken. All for a paltry few thousands INR. The early morning flights are full of pathos, especially the women returning with burn wounds! 
10) And just as I land in Chennai-Kamal Hassan has started a new party. And Rajnikanth will soon do the same. 
Phew!! So much work for us Psychiatrists!

 

Doctor shalini fb page 

  • தொடங்கியவர்

கனடா வாழ் என் இனிய தமிழ் மக்களே!

உங்கள் நாட்டுக்கு அழைத்து வரும் விருந்தாளிகளுக்கு  இடியப்பம் பரிமாறும் போது  கொஞ்சம் கோணேஸ்வரிகளின் கதையையும், சொதியில் இடியப்பம் மிதக்கும் போது மணலாறுகள் வெலி ஓயாக்கள் ஆன வரலாற்றையும் நன்றாக உறைக்கும் 
செத்தல் மிளகாய்ச் சம்பலும் போட்டுச் சொல்லிக் கொடுங்கள் 

#எனிஹெல்ப்ஷாலினிஅபத்தங்கள்

 

Kana piraba in face book

தலைவர் வீட்டுக்கு  கூட்டிட்டு போங்க...

புதிய வெளிச்ச பேராசிரியர் , விவசாய குழுவினர் ஒரே ஒரு இடத்துக்கு மட்டும் அழைத்து போங்கள் என்று கேட்டார்கள் . அது தான் தலைவரின் வீடு

நான் அவர் படித்த பாடசாலையிலிருந்து அவரது வீட்டுக்கு நடத்தி கூட்டி சென்றேன் . இந்நிகழ்வும் புல்லரிக்கும் நினைவுகள் தான் . அங்குசென்றதும் அவர்கள் அந்த மண்ணை அள்ளி முத்தமிட்டார்கள் .அவர்களை அங்கிருந்து எனது வீட்டுக்கு நடத்தி சென்றேன் .

ஒன்றரை கிலோமீற்றர் தூர நீல அகலமுள்ள எனது கிராமத்தில் , வீட்டுக்கு வீடு பங்கர்களும் , வல்வை படுகொலை எனற பெயரில் இந்திய ராணுவ அழிப்பும் , இலங்கை படையில் நேவி , கடும் விமான , பலாலி செல் தாக்குதல்களையும், எனது வகுப்பு கூட பிறந்த மாணவர்கள் 26 நண்பர்கள் மாவீரர் ஆனதையும் காட்டி கூறினேன் . இதைவிட  என் வீட்டில் வைத்திருந்த ஆவணங்களையும் காட்டினேன் ,ஆர்வத்தில் ஒரு விவசாயி கிட்டன்னா கடைசியாக அப்பாவுக்கு எழுதிய கடிதத்தை செல் போனில் பிரதி எடுத்துக்கொண்டார் .

டொரோண்டோவில் 2015 ஆம் ஆண்டு 5 நாட்கள் இகுருவி விருது விழாவுக்கு விஜயம் வந்த பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலக்ரிஷ்ணன் அவர்களுடன்  , அந்த ஐந்து நாட்களும் எனது " கூட்டு பொருப்பு " பற்றியும் , 50, 0000 மேற்ப்பட விதவைகள் பற்றியும் , முன்னாள் போராளிகள் பற்றியும் மட்டுமே கதைதேன் . அதுவே அவரை என்னோடு என்  தாயாக ஈழ மண்ணுக்கு இரு முறை வர அழைத்தது .

எங்கள் வீட்டு விருந்தாளிகளுக்கு என்னால் என் தேசத்தை மட்டுமே காட்டமுடியும்.

என்னை காயப்படுத்தினார்கள் , நொந்தார்கள் . திருப்பி பார்க்கும் போது அதே இடத்தில காயப்படுத்தி அல்லது யாராலோ காயப்படுத்தப்படுகின்றார்கள்

சாக முதல் தப்பிவந்த பாவத்தை கரைக்க விரும்புகின்றேன்  .கூட்டு பொறுப்பு/பாவம்  வாருங்கள் ,...... என்/எங்கள் மகன் வேலில்  நம்பிக்கையில்லை .....தாய் நாட்டுக்கு எதாவது செய்வானென்று

ஷாலினி அடுத்தமுறை என் வீட்டுக்கும் விருந்தினராக வந்து போங்கள் !  I teach u 

http://ekuruvi.com/ecological-farming/

 

Navajeevan aanantharaj fb 

  • தொடங்கியவர்

"கனடா போனமாம் கருத்தரங்கில் பேசினமாம் இடியப்பம் சாப்பிட்டமாம் திரும்பி வந்தமாம் என்று இருங்க ஷாலினி மேம் ,கனடாவில் நீங்க சந்தித்தவர்களை வைத்து ஈழத்தமிழர்களையோ ஈழப்போராட்டத்தையோ எடைபோடாதீங்க"#எனிஹெல்ப்ஷாலினிஅபத்தங்கள்

  • தொடங்கியவர்

ஷாலினி என்ற மனநலமருத்துவர், ரொறன்ரோவுக்குச் சென்று, சிலரைச் சந்தித்துவிட்டு எழுதியிருந்த பதிவைப்  (அபத்தம்) வாசித்தேன். சிலரோடு உரையாடியதை வைத்துக்கொண்டு ஒரு இனத்தின் குணநலன்களைப் பொதுமைப்படுத்துவதும், ஈழத்து இனப்பிரச்சனையின் ஆழத்தை அறியாது உளறிக்கொட்டியிருப்பதும் சகிக்கவில்லை! 

இதில், "ராஜிவ்காந்தியால்தான்  நாங்கள் இன்று உயிரோடு இருக்கிறோம்' என்று வேறு சிலர் சொன்னார்களாம்.  போகிற போக்கில் பிடல் காஸ்ட்ரோவின் செவிட்டைப் பொத்தியும் ஒரு அறை!

ஏற்கெனவே, தொலைக்காட்சிகளில் அடிக்கடி முகங்காட்டுமளவு நல்ல பிரபலமானவர். இப்படி 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்றவகையிலான அதிரடிப் பதிவுகளை எழுதி விளம்பரம் தேடவேண்டியதில்லை. எங்கள் வாழ்வும் நாங்கள் பட்ட வாதைகளும் வீழ்ச்சியும் உங்களால் புரிந்துகொள்ளப்பட முடியாதவை. சில நாள் பயணத்தில், சிலரோடான சந்திப்பில் எல்லாம் அறிந்ததான அதிமேதாவித்தன சாரக்குறிப்பு அருவருப்பூட்டுகிறது.

இப்படியான 'உளவியலாளர்'களிடம் சிகிச்சை பெறச் செல்லும் நோயாளிகளை எண்ணினால் பரிதாபமாக இருக்கிறது.

 

 

தமிழ்ந்தி-முகநூல் 

டாக்டர் ஷாலினியை கனடா அழைப்பாளர்களில் எங்களின் முன்னைய அர்ஜுன் அண்ணாவும் ஒருவராம்.

நாய்கள் என்றால் கண்ட சுவரில் மூத்திரம் பெய்யும் என்றுதான் யாழை விட்டு விலகினேன் ஆனால் நாய்கள் பெய்துகொண்டே இருக்கின்றன .

  • கருத்துக்கள உறவுகள்

நல்வருகை அர்ஜூன் அவர்களுக்கு .

 

  • தொடங்கியவர்

திரும்ப வந்த்தில் மகிழ்ச்சி:D

நாய்கள் சுவரை கண்டால் காலை உயர்துவது இயற்கை மிஸ்டர் அர்ஜுன் மனிதர்களாகிய நீங்கள் அதை உணர்ந்து நாய்களின் குணத்திற்கு மதிப்பு கொடுக்கவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, arjun said:

நாய்கள் என்றால் கண்ட சுவரில் மூத்திரம் பெய்யும் என்றுதான் யாழை விட்டு விலகினேன் ஆனால் நாய்கள் பெய்துகொண்டே இருக்கின்றன .

அர்ஜுன்....உங்களை மீண்டும் கண்டதில்....மிகவும் மகிழ்ச்சி..!

என்னிட்டையும் ஒரு நாய் இருக்கு...!

எப்ப பார்த்தாலும்...நான் வைச்சிருக்கிற...ஊர் நந்தியாவட்டை..இருக்கிற...இடத்திலை போய்த்தான் 'உச்சா' இருக்கும்!

நானும்...மூண்டு ..இடத்திலை ...நந்தியாவட்டையை...மாத்தி...மாத்தி ...வைச்சுப் பார்த்தன்..!

நாயும்...நந்தியாவட்டை..போற...இடமெல்லாம்... தானும்..இடத்தை..மாத்துது!

இப்ப .கடைசியாய்...நானும்...நாயும்...ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம்!

நந்தியா வட்டை...ஒரு பெரிய...சீமெந்துத் தொட்டிக்குள்ளை ..இருக்கு!

இப்ப நானும்...சந்தோசம்.....நாயும் சந்தோசம்!

 

Edited by புங்கையூரன்
கூகிள் எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் எஸ்கேப் புதிதாய் வந்த நாய்கள் 3Dயில் மூத்துரம்  பெய்கின்றன  ஆள் பயந்திட்டார் போல் .

  • கருத்துக்கள உறவுகள்

ஏண்டாப்பா...கனடாவுக்கு இந்த டாக்டர்களை கூட்டி வாறியள்... இங்கு எல்லோருக்கும் சுகமில்லையோ...கூட்டித்தான் வாறியள்...கூட்டத்தோடை விடுங்கோவன்...விமானனநிலையம் போய் ஒரு அசடுவழிந்த சிரிப்போடை ஒரு போட்டோ..பிறகு பத்திரிகையாளர் சந்திப்பாம்...அதிலை ஒரு அசடுவழிவு....பின்னர் னிகழ்வில் ஒரு பெரும் அசடு வழிவு....கூட்டம் முடிந்தபிறகு காரைக்குடியில் ஒரு அசடு வழிவு...இதுக்கு தமிழ்க்கடையில் வாங்கிய ஜிகினா சாரியும் ...அதேகலர் சேர்ட்டும்.....ஆனால் சிரிப்புமட்டும் மாறாது......அப்படி பார்த்த தமிழ்நாட்டு  டாக்குத்தர்மார்  உங்களை இழப்பமாக நினைப்பதில்  என்ன தவறூ.....

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இதனை விட மோசமாக எழுதி இருந்தார். பின் அவரை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த ஒரு சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க எடிட் பண்ணினார். எடிட் பண்ண முதல் எடுத்த ஸ்கிரீன் ஷொட் இன் ஒரு படம். இறுதி எழுத்துகள் சரியாக வரவில்லையாயினும் தலைவரை பயங்கரவாதி என விளித்து எழுதியது தெரிகின்றது

1.jpg

வைத்தியர் ஷாலினி அவர்களின் பேஸ்புக் நேரடி இணைப்பை வழங்கமுடியுமா? நன்றி~!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கலைஞன் said:

வைத்தியர் ஷாலினி அவர்களின் பேஸ்புக் நேரடி இணைப்பை வழங்கமுடியுமா? நன்றி~!

முகநூல் கணக்கை தற்காலிகமாக முடக்கி விட்டார் போல தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, அபராஜிதன் said:

https://www.facebook.com/psrf.india

பதிவு மறைக்கப்பட்டுவிட்டது

 

இந்த account க்கு போய் Report பட்டனை அழுத்தி இது ஒரு Fake account  என்று முகநூல் அட்மின்களுக்கு முறையிட்ட பின் தான் மனம் அமைதியுறுகின்றது
 
மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் ஈழத்தமிழர்களின் அழைப்பில் (அழைத்த கூட்டம் கோபிநாத் போன்ற காப்பரேட் அடிமைகளை ஹீரோவாக கொண்டாடி பிரபாகரனை துரோகி எனும் கூட்டம்) வங்துவிட்டு அவர்களின் விடுதலை உணர்வை கொச்சைப்படுத்தும் ஒருவரை நடுநிலை என்ற போக்கில் அனுமதிக்க கூடாது.
 
நாம் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் எம்மால் எழ முடியும் எனும் நம்பிக்கை இருக்குது

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Dr.சாலினியை கனடாவிற்குத் தனது நிகழ்விற்கு அழைத்தவர் நினைவுகள் கணா, அவரை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றவர் ஜிவனீட்டா நாதன், நான் சாலினியை down town நாடகம் ஒன்று பார்க்கப் போயிருந்த போது ஜிவனீட்டா அவரை அழைத்து வந்திருந்த போது கண்டேன், அவரோடு கதைக்கும் சந்தர்ப்பம் அப்போது எனக்குக் கிடைக்கவில்லை, அடுத்த நாள் நினைவுகள் நிகழ்வில் Dr. சாலினியின் உரையின் பின்னால் அவரோடு இருக்கக் கிடைத்தது, நான் எனது திரைப்படம், பற்றியும் நான் அடுத்து எடுக்க இருக்கும் திரைப்படத்திற்கான ஸ்ரிப்டைப் பற்றியும் அவரோடு உரையாடினேன், அத்தோடு தமிழ்நாட்டு இன்றைய அரசியல் நிலை பற்றியும் நகைச்சுவையாக உரையாடினோம். உப்புச் சப்பற்ற புலிப் பிரச்சனை பற்றி தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கும் ஒருவருடன் உரையாடும் அளவிற்கு நான் ஒன்றும் தாழ்ந்து போகவில்லை, மாறாக இந்தியர்களை இங்கே எல்லா நிகழ்விற்கும் அழைக்கின்றார்கள் நான் அதற்கு எதிரானவள் அதுபற்றி நான் எழுதியும் இருக்கின்றேன் என்று அவருக்கு நேரடியாகச் சொன்னேன். அந்த அளவு துணிவு எனக்கிருக்கின்றது எனக்கு. அடுத்தநாள் நிகழ்வு முடிந்து எனது நண்பி அவரை மதிய உணவிற்க அழைத்துச் சென்றார், அப்போது அங்கிருந்த வேறு சிலரையும் அவர் அழைத்ததால் நானும் போனேன். அவ்வளவுதான் எனக்கும் Dr.சாலினிக்குமான தொடர்பு, நீங்கள் என்ன ஆதாரத்தை வைத்து இப்படி ஒரு பதிவைப் போட்டீர்கள், நீங்கள் இவ்வளவுதானா? இல்லாவிட்டால் எங்கோ விலைபோய் ஆதாயம் தேடுகின்றீர்களா?
அடுத்துக் கோணேஸ்வரிக் கவிதை, ஒரு கதை காலம் செல்லச் செல்ல எப்படியெல்லாம் தமக்கேற்றபடி மனிதர்களால் மாற்றப்படுகின்றது என்று ரசித்துச் சிரிக்க முடிகின்றது. 
பிற்குறிப்பு – நான் Dr. சாலினியின் பதிவைப் படிக்கவில்லை. ஆனால் முகப்புத்தகத்தைப் பார்த்த போது அவர் நிச்சயம் நேர்மையாக எதையோ எழுதியிருக்கின்றார் என்பது மட்டும் புரிகின்றது.

 

Karupy Sumathy in fb..

 

இது எந்த வகை?

 

Edited by செல்வி

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் முதல் தலைமுறைகள் மட்டுமே  ஈழத்தில் நடந்தது என்ன ...? என்பதை உண்மையாக கூறும் தகுதியுடையவர்கள் ..
பிறந்தது முதல் பீசாவும் ,பேர்கரும் மாக்டோனல்ட்சில் தின்று வளர்ந்த இரண்டாம் ,மூன்றாம் தலைமுறை ஈழ விடுதலை போராட்டம் பற்றி தங்கள் அனுபவங்களை சொல்லப்போனால் இதுதான் நடக்கும் 

இந்த கருத்து பரிமாற்றம் குறித்து துண்டுதுண்டாக படித்த செய்திகளை புரிந்தவரையில் பொல்லு கொடுத்து அடிவாங்கின மாதிரி உள்ளது. சிங்களப் பேரினவதக் ஒடுக்குமுறையும் கொடுமைகளும் முப்பது வருட ஆயுதப் போரும் அதன் அவலங்கள் உயிரிழப்புகள் குறித்தும் எல்லாத் தரப்பு ஈழத்தமிழர்களிடமும் ஒரே மாதிரியான புரிந்துணர்வோ பொதுக்கருத்தோ அது சார்ந்த அறிவோ இல்லை. தமிழர்களின் அவல நிலைக்கு பிரதானமான காரணமும் இதுவேயாகும். இந்த அடிப்படைக்குள் ஒரு தரப்பு மக்களிடம் உளவள மருத்துவரின் ஒரு சிறு சந்திப்பும் அதை அடிப்படையாக வைத்து முன்வைக்க முயலும் அரசியல் சார்ந்த கருத்துக்களும் எந்தவிதத்திலும் கவனத்துக்குரியவையோ முக்கியத்துவம் வாய்ந்ததோ இல்லை. . 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சண்டமாருதன் said:

...சிங்களப் பேரினவதக் ஒடுக்குமுறையும் கொடுமைகளும் முப்பது வருட ஆயுதப் போரும் அதன் அவலங்கள் உயிரிழப்புகள் குறித்தும் எல்லாத் தரப்பு ஈழத்தமிழர்களிடமும் ஒரே மாதிரியான புரிந்துணர்வோ பொதுக்கருத்தோ அது சார்ந்த அறிவோ இல்லை...

இவ்வளவு துயரங்கள், அவலநிலைக்குப் பின்னரும் பொதுக்கருத்தோ, புரிந்துணர்வோ வரவில்லையெனில் எப்பொழுது இனி மீட்சி..?  console.gif

தமிழ்நாடுதான் இலவசத்திற்கு ஏங்குது என்றால், குடுமிப்பிடி சண்டை, காலை வாருதலில் ஈழமும் மறைந்துவிடும் போலிருக்கே..?

8 minutes ago, ராசவன்னியன் said:

இவ்வளவு துயரங்கள், அவலநிலைக்குப் பின்னரும் பொதுக்கருத்தோ, புரிந்துணர்வோ வரவில்லையெனில் எப்பொழுது இனி மீட்சி..?  console.gif

தமிழ்நாடுதான் இலவசத்திற்கு ஏங்குது என்றால், குடுமிப்பிடி சண்டை, காலை வாருதலில் ஈழமும் மறைந்துவிடும் போலிருக்கே..?

எப்பொழுதும் மீட்சியில்லை. 

ஈழம் என்ற ஒரு இலக்கிற்காக போராட முற்பட்ட பல இயக்கங்கள் என்றும் இணைந்து ஒரு பலமான சக்தியாய் உருவானதில்லை

அதே ஈழத்துக்கான ஆதரவாக தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஒரு அணியாக திரண்டதில்லை

இன்று உள்ள ஈழ ஆதரவுக் குரல்களும் ஒரு சக்தியானதில்லை. (காணொளியில் 9: 8 நிமிடத்தில் இருந்து பார்க்கவும்)

சாதியச் சமூகத்தில் பொதுக் கருத்து அல்லது ஒருமித்த சக்தி என்ற மனோநிலைக்கு இடமே இல்லை. எந்த நெருக்கடியிலும் அறிவு இந்த ஐககியப்பாட்டிற்கு முரணான மனோ நிலையை வென்ற சரித்திரம் இல்லை. குறுக்கு வழியில் சிங்களவனிடம் இருந்து விடுதலை கிடைத்தால் உண்டு இல்லையேல் அதோ கதிதான். கசப்பாயினும் யதார்த்தம் இதுதான். 

 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, சண்டமாருதன் said:

எப்பொழுதும் மீட்சியில்லை. 

ஈழம் என்ற ஒரு இலக்கிற்காக போராட முற்பட்ட பல இயக்கங்கள் என்றும் இணைந்து ஒரு பலமான சக்தியாய் உருவானதில்லை

...

சாதியச் சமூகத்தில் பொதுக் கருத்து அல்லது ஒருமித்த சக்தி என்ற மனோநிலைக்கு இடமே இல்லை. எந்த நெருக்கடியிலும் அறிவு இந்த ஐககியப்பாட்டிற்கு முரணான மனோ நிலையை வென்ற சரித்திரம் இல்லை. குறுக்கு வழியில் சிங்களவனிடம் இருந்து விடுதலை கிடைத்தால் உண்டு இல்லையேல் அதோ கதிதான். கசப்பாயினும் யதார்த்தம் இதுதான்.

தற்பொழுது இத்தோற்றம், யதார்த்தமாக இருக்கலாம்.. ஆனால் காலம் ஒரே சுழலில் இருப்பதில்லை,  அரசியல், சமூக மாற்றங்கள் தேவைக்கேற்ப மாறவேண்டிய கட்டாயம் நிகழும்.

நிச்சயம் 'தமிழினம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்' என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது.

20 hours ago, பிழம்பு said:

முகநூல் கணக்கை தற்காலிகமாக முடக்கி விட்டார் போல தெரிகின்றது.

அபராஜன் வழங்கிய இணைப்பு மூலம் அவரது பதிவுகள் சிலவற்றை நேற்று பார்த்தேன். இன்று அந்த இணைப்பு வேலை செய்யவில்லை. வைத்தியர் ஷாலினியை விஜய் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

வாருஙகோ, அர்ஜுண்ணனா வாருங்க..

தண்ணிய போட்டமா, வேலிக்கிலால எட்டிப் பார்த்துட்டு ஓடிப்போய் பாய விரிச்சுப் படுத்தமா எண்டு கடும் விரதமிருந்த மனிசன், சாரத்த மடிச்சு கட்டிக்கொண்டு ரோட்டுள பாய, வைச்ச புண்ணியவான் யாரப்பா.

உங்க திரியிற தமிழ் மண்டப்பிழை வைத்தியர்மாரை பிடிச்சுக் கொண்டு போய் நல்ல மண்டப்பிழை வைத்தியர்களிடம் காட்டவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

வாருஙகோ, அர்ஜுண்ணனா வாருங்க..

தண்ணிய போட்டமா, வேலிக்கிலால எட்டிப் பார்த்துட்டு ஓடிப்போய் பாய விரிச்சுப் படுத்தமா எண்டு கடும் விரதமிருந்த மனிசன், சாரத்த மடிச்சு கட்டிக்கொண்டு ரோட்டுள பாய, வைச்ச புண்ணியவான் யாரப்பா.

உங்க திரியிற தமிழ் மண்டப்பிழை வைத்தியர்மாரை பிடிச்சுக் கொண்டு போய் நல்ல மண்டப்பிழை வைத்தியர்களிடம் காட்டவேணும்.

வில்லங்கமான..... ஆட்கள், விலகி இருப்பதே, நல்லது. நாதமுனி.  :)

  • தொடங்கியவர்
2 hours ago, தமிழ் சிறி said:

 

நேற்று பதிவை மறைத்திருந்தார் இன்று பார்த்தால் அவரின் பக்கத்தையே காணல 
அவர் டிஅக்ரிவேற் பண்ணிட்டாரா 
அல்லது அதிகமானோர் ரிப்போர்ட் பண்ணியதால் முடக்கப்பட்டதா தெரியவில்லை 

அந்த பதிவில் அதிகளவான புலம்பெயர்ந்தோர் தமது எதிர்ப்பை காட்டி இருந்தனர்.
எம்மிடையே மிமிகிரியேட்டர் அதிகளவில்இ ல்லாத குறையை நேற்று உணர்ந்தேன் இருந்திருந்தால் இன்னும்பரவலடைய செய்து நெருக்கடி கொடுத்திருக்கலாம,

குறைந்த பட்சம் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம் 

Edited by அபராஜிதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.