Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரொரண்டோவில் இசைஞானி அவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரொரண்டோவில் இசைஞானி அவர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யுறாங்கள் பேட்டி கொடுக்குறாங்களா என்ன நடக்கிறது ?

கலந்துரையாடல் போல உள்ளது; :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியுமிலலை...பூட்டியுமில்லை....எந்தவொரு தென் இந்திய............வந்தாலும் இதுதான் கூத்து...   நடிக    நடிகைமார் இவர்கள்தான்....காலில் விழுவதும்...கட்டிபிடித்து போட்டோ எடுப்பதும்.....அது சுப்பர் சிங்கர் விசிலடிச்சான் குஞ்சாக இருந்தாலும் இதுதான் காட்சி.....கனடாவில்...ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம்...

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

பேட்டியுமிலலை...பூட்டியுமில்லை....எந்தவொரு தென் இந்திய............வந்தாலும் இதுதான் கூத்து...   நடிக    நடிகைமார் இவர்கள்தான்....காலில் விழுவதும்...கட்டிபிடித்து போட்டோ எடுப்பதும்.....அது சுப்பர் சிங்கர் விசிலடிச்சான் குஞ்சாக இருந்தாலும் இதுதான் காட்சி.....கனடாவில்...ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம்...

தமிழினம் அல்லது இலங்கைத் தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கும். ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்பது தவறாகும். ஏனெனில் ஈழத் தமிழினம் என்பது உண்மையான தமிழர்களைக் குறிக்கும். அவர்கள் மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

தமிழினம் அல்லது இலங்கைத் தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கும். ஈழத்தமிழினத்தின் செயல்பாடு படு மோசம் என்பது தவறாகும். ஏனெனில் ஈழத் தமிழினம் என்பது உண்மையான தமிழர்களைக் குறிக்கும். அவர்கள் மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.

ஒத்துக்கொள்கிறேண்.....ஆனால்கனடாவில் எம்மினத்தின் பிரதிநிதிகள்போல் எந்தவொரு நிகழ்விலும் வேடமிடுவ்து...சிலரே...அந்தசிலரில் இருப்பவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.... காலில் விழுவதையும் அறிமுகம் செய்து இளம் சாந்ததியையும் நாசம் செய்கிறார்கள்....பதவிகளைப்பிடித்து.....போராட்ட வடிவையே செயல் இழக்கச் செய்பவர்களும் கூட..

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2018 at 1:27 PM, alvayan said:

ஒத்துக்கொள்கிறேண்.....ஆனால்கனடாவில் எம்மினத்தின் பிரதிநிதிகள்போல் எந்தவொரு நிகழ்விலும் வேடமிடுவ்து...சிலரே...அந்தசிலரில் இருப்பவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.... காலில் விழுவதையும் அறிமுகம் செய்து இளம் சாந்ததியையும் நாசம் செய்கிறார்கள்....பதவிகளைப்பிடித்து.....போராட்ட வடிவையே செயல் இழக்கச் செய்பவர்களும் கூட..

நிறைய வார்த்தைகளை அள்ளி  இறைத்து இருக்கிறீர்கள்...
எந்த நடிகன் , எந்த நடிகை வந்து;  இங்கே உள்ள தமிழன் அவர்கள் காலில் விழுந்தான்?
எந்த சூப்பர் சிங்கர் பாடகன் / பாடகி காலில் இங்கே உள்ள தமிழன் காலில் விழுந்தான்?

இந்த திரியின் தலைப்பு டொரோண்டோவில் இளையராஜா இசை நிகழ்ச்சி குறித்ததே ஒழிய, 
ஈழத்தமிழன் (கனடாத்தமிழன்) எவன் காலில் விழுந்தான் என்பது பற்றிய ஆராய்ச்சி அல்ல.

தவிர பெரியவர், மற்றவர்களால் போற்றப்படும் அறிஞர்கள், ஞானிகள், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், உறவுகள் இவர்கள் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்குவது ஒன்றும் இழிவானா செயலாக எந்த சமூகத்திலும், யாராலும் இதுவரையிலும் பார்க்கப்படவில்லை. உங்களை போன்ற ஒரு சிலரை தவிர!!!
ஒருவர் காலில் விழுந்து கிடப்பதற்கும், காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்குவதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் அறிந்து கொள்ளாதது கவலைக்குரிய விடயம்.

பாதநமஸ்காரம் ஒன்றும் பாவமான காரியம் இல்லை.
இதனை பற்றி நிறையவே எழுதலாம்.

1. குரு , ஞானி, பெரியவர் காலில் விழுந்து பாத நமஸ்காரம் செய்யும் போது நீங்கள் உங்களுக்குள் இருக்கும் அகந்தையை தெரிந்தோ தெரியாமலோ ஒரு கணம் இழந்து மனசுக்குள் பஞ்சாக லேசாக மாறுகின்றீர்கள். உங்கள் இறுமாப்பு, மன இறுக்கம் இங்கேஉடைக்கப்படுகிறது.

2. உங்களை ஆசீர்வதிப்பவர் கூட மனம் நிறைந்து உங்களை வாழ்த்தி, உங்கள் வாழ்க்கையின் நலன் விரும்பும் ஒரு மனிதராக மாறுகிறார். இங்கே பகை, காழ்ப்பு , குரோதம் இழந்து ஒரு பிணைப்பு நிகழ்கின்றது.
    
3. எல்லா மனிதர் உள்ளேயும் இரு வகை சக்திகள் ஊற்றெடுக்கின்றன மஹா சத்தி (Positive Energy  ) , மாய சக்தி (Negative Energy ).
இந்த இரு சக்திகளும் கூட உடம்பினுள்ளே குறிப்பிட்ட திசையில் தான் ஓடுகின்றன 
(இடம் வலம் , வலம் இடம்). 
பெரியவர், ஞானிகள் , அறிஞர்கள், குரு, ஆசான் போன்ற ஸ்தானத்தில் போற்றப்படுபவர்  பொதுவாகவே மஹா சக்தி நிறைந்த அம்சம் கொண்டவர்கள். இவர்கள் காலில் விழுந்தது , பாதம் தொட்டு ஆசீர்வாதம் பெறுகின்ற பொது அவர்களின் கையால் உங்கள் தலையை தொட்டு "தீர்காயுசாக இரு"  "நீ நல்லபடியாக இரு" "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ் " என்று மனமார வாழ்த்தும் பொது அவர்களின் அந்த மாஹா சக்தி (Positive Energy ) உங்கள் மாய சக்தியோடு  (Negative Energy ) கலக்க ஒரு சக்தி வலயம் உருவாகி நீங்கள் அவர்களின் அனுகிரகணம் பெறுவீர்கள்.
 இதை விஞ்ஞான  ரீதியிலும் கூட ஆராய்ந்து பார்க்கலாம். (Reiki Therapy)  ரெய்க்கி  தெரப்பி.

4. இது தமிழர் கலாச்சாரம் இல்லை என்று கூறுபவர்களுக்கு இந்த கதை...
நீங்கள் அறிந்தது தானே  மார்க்கண்டேயரின் கதை.
மிர்காந்த ரிஷிக்கும்  அவர் மனைவிக்கும் பல காலங்கள் புத்திர பாக்கியம் இல்லாமல் தவத்தின் பயனாய் ஒரு ஆண்  குழந்தை பிறந்தது. அதுவே மார்க்கண்டேயர். மார்க்கண்டேயரின் பிறப்பின் போதே பெற்றாருக்கு சொல்லப்பட்ட செய்தி, சிறுவன் 12 வயதில் இறந்து விடுவான். இது தெய்வ வாக்கு.
இதனை நன்கு புரிந்து கொண்ட மிகாந்த ரிஷி அவர் மகன் மார்க்கண்டேயருக்கு சொல்லிக்கொடுத்த ஒரே ஒரு பாடம் உன் வாழ்க்கையில் சந்திக்கும் எல்லாரிடமும் பாத நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெறு  என்பதேயாகும். மார்க்கண்டேயரும் இதையே செய்தார். ஆசீர்வாதம் கொடுத்தவர்கள் அனைவரும் கூறிய வார்த்தை "தீர்காயுஸோடு இரு /ஆயுஷ்மான் பவ ". மார்க்கண்டேயரை சப்த ரிஷிகள் முதல் , பிரம்ம தேவர் வரை ஆசீர்வதித்தனர். பிறப்பை அருளிய பிரம்மனே சிறுவனை தீர்காயுசோடு இரு என வாழ்த்தினார்.
மார்க்கண்டேயரின் 12 ஆவது வயதில், இயமதர்மனும் அவரின் உயிரை மீள எடுத்துச்செல்ல வந்தார். மார்கண்டேயரோ சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து இயமதர்மனோடு போராடினார். இறுதியில் சிவபெருமானே காட்சி தந்து இயம ராஜனிடம் இருந்து மார்க்கண்டேயரை காப்பாற்றி சாகா வரம் கொடுத்தார்.

இது உண்மையா, பொய்யா பித்தலாட்டமா தெரியவில்லை. இதை என் பெரியவர்கள் என் கலாச்சாரத்தின் வடிவமாக சமயத்தின் முறையாக சொல்லிக்கொடுத்தார். அதை நான் போற்றுகின்றேன்.
என் தந்தை , தாய், அண்ணா, அண்ணி, அக்கா, மற்றும் குடும்பத்து மூத்தவரின் காலில் விழுந்து வணங்குவதை புனிதமாய், புண்ணியமாய் நினைப்பவன் நான்.
இளையராஜா எனும் பெரும் இசை ஞானியின் முன் 
தமிழ் மேல் ஒரு வித ஈர்ப்பை , காதலை ஏற்படுத்தியவரின்  முன் 
என் சந்தோஷத்திலும், துக்கத்திலும் உள்ளூர தன்  இசையால் வியாபித்தவரின் காலில் 
ஒரு தடவை அல்ல ஓராயிரம் தடவை நான் சாஸ்டாங்கமாய் விழுவேன்.

அன்பால் அடிபணிதல் அதுவே தத்துவம்...
இந்த மகத்துவ சிந்தனையில் தெளிவு வந்தால் 
உன் அனுபவம் அனைத்தும் சுகமாகும்... 

கற்றுக்கொண்டால் குற்றமில்லை... சசி.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2018 at 11:50 PM, nunavilan said:

ரொரண்டோவில் இசைஞானி அவர்கள்

 

இசை ஞானி இளையராஜாவின் நிகழ்ச்சியை மிகவும் அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
நிகழ்ச்சி குறித்த நேரத்தில் ஆரம்பமானது.
ஞானியின் வெளிவந்த பாடல்களில் முத்தான பாடல்கள் பலதும் இடம்பெற்றது.
ஹங்கேரி புடாபெஸ்ட் ஆரக்கஸ்டரா Hungary Budapest symphony orchestra அணைத்து பாடல்களையும் இசைத்து ராஜாங்கம் நடத்தினார்கள்.
முழுவதும் அகோஸ்டிக் (Acoustic) வடிவத்தில் இசையை கலைஞர்கள் வாசித்தார்கள். 
அதை அனுபவிப்பதற்கு அவதானிப்பும், அமைதியும் முக்கியம். நம்மில் பெரும்பாலோரின் அது இல்லை!!
பிரபலமான பின்னணிப் பாடகர்கள் இல்லாமேயே அருமையான பாடல்களை தந்தார்கள். 
அவர்கள் பாடிய அணைத்து பாடல்களும் எந்த விதத்திலும் சோடை போகவில்லை.
நானிருந்த இடத்தில இருந்து கேட்க மிகவும் தெளிவான ஒலியாக இருந்தது.
மேடையில் வண்ண விளக்குகள், லேசர் சமாச்சாரங்கள், ஒளி வடிவங்கள் எதுவும் இருக்கவில்லை.
கூட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது. மற்றவர் வெறும் வார்த்தைகளை மட்டுமே கேட்டு வராதவர்கள் பாவம் துரதிஷ்டசாலிகள்.  
சில ஜந்துகள் நிகழ்ச்சியை குழப்பவே டிக்கெட் எடுத்து வந்திருப்பார்களோ.
பீர் பாட்டில், விசில் கடைசிவரை தொடர்ந்தது.
இடையில் போலீஸ் வேறு வந்து இந்த ஜந்துக்களை அப்புறப்படுத்த வேண்டி இருந்தது.
இசை ஞானியும் ஓரிரு தடவைகள் அது குறித்து குறிப்புணர்த்தினார்.  எவனுக்கு புறிய போகிறது.
நம்மவரிடம் கைதட்டல்களை கூட யாசித்து தானே வாங்கவேண்டி இருக்கிறது.
என்ன செய்ய இசைஞானியையும் அனிருத்தையும், இமானையும் ஒரே எடையில் போட்டு பார்க்கும் கூட்டத்தில் எதை எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் ரம்மியமான ஒரு இசை வேள்வியை தந்த என் ஆத்மார்த்த இசை ஞானி அவர்களுக்கு 
என் பாத நமஸ்காரங்கள்.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி...

Edited by alvayan

17 minutes ago, Sasi_varnam said:


என்ன செய்ய இசைஞானியையும் அனிருத்தையும், இமானையும் ஒரே எடையில் போட்டு பார்க்கும் கூட்டத்தில் எதை எதிர்பார்க்கலாம்.

 

இளையராசாவின் இசையினையும் அனிருத்தின், இமானின் இசையுடன் ஒரே எடையில் போட்டுப் பார்க்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் இளையராசா என்ற மனிதரை விட கங்கை அமரன், இரகுமான், இமான் என்ற மனிதர்கள் சிறந்தவர்கள்.  சிட்னியில் சிம்போனி என்ற அமைப்பின் ஊடாக தமிழகத்துப் பாடகர்களை  அழைத்து இசைவிருந்து வழங்குபவர் கதிர் . முதன்முறையாக புகழ் பெற்ற ஒபரா கவுஸில்நடைபெற்ற இந்திய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியை நடாத்தியவரும் கதிர்தான் . ஜேசுதாஸ், எஸ்பிபி, சித்ரா போன்ற கலைஞர்களை ஒபரா கவுஸில் அழைத்து நிகழ்ச்சிகளை  நடாத்தினார்.  கதிரின் நீண்ட ஆசை இளையராசவின் நிகழ்ச்சியை சிட்னியில்  நடாத்துவது.  2013ல் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டது.   75% பணம் முழுவதும் கிடைத்தால் தான் சிட்னிக்கு வருவேன் என்றார் இளையராசா. நுளைவுச்சீட்டுகள் விற்பனையில் பணத்தினைப் பெறலாம்  என்ற நம்பிக்கையில் 75000 வெள்ளிகளை இளையராசாவுக்கு குடுத்தார் கதிர்.  நிகழ்ச்சி தொடங்க ஒரு கிழமைக்கு முன்பு சன், கலைஞர் தொலைக்காட்சியுடன் இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் வெளியிட ஒப்பந்தம் செய்ய தாய் விமானத்தில் பயணிக்கும் போது எதிர்ப்பாராதநோயினால்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திட்டமிடப்பட்டநிகழ்வு நடைபெறவில்லை.நடக்காத நிகழ்ச்சிக்கு வாங்கிய 75000 வெள்ளிகளையும் பண ஆசை பிடித்த இளையராசா திருப்பி வழங்கவில்லை.   இதனால் வாழ்ந்த வீட்டினையும் விற்க வேண்டியநிலமைக்கு தள்ளப்பட்டார் கதிர். பல முறை பணத்தினைக் கேட்டும் இளையராசா பணத்தினை திரும்பி வழங்கவில்லை. இதனால் மேலும் வேதனைப்பட்ட கதிர் மேலும்நோய் வாய்ப்பட்டு 2015 சனவரியில் காலமானர். இப்படிப்பட்ட இளையராசாவின் காலில் விழுவது சரியா?.  ஈழத்தமிழர்கள்  காலில் விழும் பழக்கத்தினை ஈழத்தில் பார்த்திருக்கிறீர்களா?.  தமிழகத்தில் அப்பழக்கம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, sivakumaran said:

இளையராசாவின் இசையினையும் அனிருத்தின், இமானின் இசையுடன் ஒரே எடையில் போட்டுப் பார்க்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் இளையராசா என்ற மனிதரை விட கங்கை அமரன், இரகுமான், இமான் என்ற மனிதர்கள் சிறந்தவர்கள்.  சிட்னியில் சிம்போனி என்ற அமைப்பின் ஊடாக தமிழகத்துப் பாடகர்களை  அழைத்து இசைவிருந்து வழங்குபவர் கதிர் . முதன்முறையாக புகழ் பெற்ற ஒபரா கவுஸில்நடைபெற்ற இந்திய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியை நடாத்தியவரும் கதிர்தான் . ஜேசுதாஸ், எஸ்பிபி, சித்ரா போன்ற கலைஞர்களை ஒபரா கவுஸில் அழைத்து நிகழ்ச்சிகளை  நடாத்தினார்.  கதிரின் நீண்ட ஆசை இளையராசவின் நிகழ்ச்சியை சிட்னியில்  நடாத்துவது.  2013ல் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டது.   75% பணம் முழுவதும் கிடைத்தால் தான் சிட்னிக்கு வருவேன் என்றார் இளையராசா. நுளைவுச்சீட்டுகள் விற்பனையில் பணத்தினைப் பெறலாம்  என்ற நம்பிக்கையில் 75000 வெள்ளிகளை இளையராசாவுக்கு குடுத்தார் கதிர்.  நிகழ்ச்சி தொடங்க ஒரு கிழமைக்கு முன்பு சன், கலைஞர் தொலைக்காட்சியுடன் இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் வெளியிட ஒப்பந்தம் செய்ய தாய் விமானத்தில் பயணிக்கும் போது எதிர்ப்பாராதநோயினால்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திட்டமிடப்பட்டநிகழ்வு நடைபெறவில்லை.நடக்காத நிகழ்ச்சிக்கு வாங்கிய 75000 வெள்ளிகளையும் பண ஆசை பிடித்த இளையராசா திருப்பி வழங்கவில்லை.   இதனால் வாழ்ந்த வீட்டினையும் விற்க வேண்டியநிலமைக்கு தள்ளப்பட்டார் கதிர். பல முறை பணத்தினைக் கேட்டும் இளையராசா பணத்தினை திரும்பி வழங்கவில்லை. இதனால் மேலும் வேதனைப்பட்ட கதிர் மேலும்நோய் வாய்ப்பட்டு 2015 சனவரியில் காலமானர். இப்படிப்பட்ட இளையராசாவின் காலில் விழுவது சரியா?.  ஈழத்தமிழர்கள்  காலில் விழும் பழக்கத்தினை ஈழத்தில் பார்த்திருக்கிறீர்களா?.  தமிழகத்தில் அப்பழக்கம் இருக்கிறது.

நீங்கள் எழுதி இருப்பது முற்றிலும் நானோ அல்லது பெரும் பாலானோரே அறிந்திருக்காத விடயம்.
இப்படி ஒரு நிகழ்வு நடத்திருக்குமாயின் கவலைக்குரிய விடயமே. அது இசைஞானி இளையராஜா குறித்த என் மதிப்பையும் தடுமாற்றத்தான் செய்யும்.
* இது போன்ற சம்பவங்கள், அனுபவங்கள் (உண்மையாயின்) ஏன் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு நிமிர்த்தம் பரப்பப்பட்ட வில்லை?

* இவ்வளவு பண முதலீடோடு லாபம் பார்க்கும் நோக்கோடு திட்டமிடப்படும் பெரும் இசைக் கச்சேரிகளுக்குரிய காப்புறுதி பெறப்பட்டதா?

* கச்சேரி நடத்தாமலேயே அவ்வளவு பெரும் தொகை பணத்தை இளையராஜா கையாடினார் என்பது நம்பக்கூடியதா ? அதுவும் அவருக்கு சுகவீனம் உட்பட்டு அவர் வரமுடியாமல் போனதாக நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்!! இது குறித்து முறைப்படியான புகார்கள் கொடுக்கப்பட்டதா? குறைந்த பட்சம் ஊடகங்கள் , பத்திரிகை வாயிலாக பகிரப்பட்டதா? 

* மற்றைய இசைக்கலைஞர்கள் ரகுமான், அனிருத் , இமான் போன்றவர்கள் இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்/ கொள்வார்கள் என்பது குறித்து எதுவும் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
காலில் விழுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை...யாராவது 75% பணம்  முன்பணமாக வாங்கவும் மாடடார்கள். கொடுக்கவும் மாடடார்கள்...அரைவாசி பணைத்தினை திருப்பி கொடுக்கவிலை என்று சொன்னாலும் ஒரு வித நியாயம் இருக்குது.
 
  • கருத்துக்கள உறவுகள்

டானியல் ராஜா.....alias .......இளையராஜ என்பவர் யார்? சிறந்த இசையமைப்பாளர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதிக தலைக்கனம் / இறுமாப்பு /ஆணவம் கொண்டவர்.

சமீபத்தில் இவர் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக வெளியிட்ட ஒரு கருத்து கிறிஸ்தவர்களை மிகவும் புண்படுத்தியது. இதயே இவர் முஸ்லீம்களுக்கு எதிராக கூறுவாறா? அல்லான்னா சும்மா இல்லைடா அவன் இல்லைன்னா யாரும் இல்லைடா என பாடுவாரா?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சில நடிகர்களுடனும் பாடகர்களுடனும் நல்ல அனுபவம் இருக்கிறது.

பெரிய நடிகர்கள் பாடகர்கள்

1) 100% பணம் கொடுக்காமல் Airport ற்கே வர மாட்டார்கள்,

2) சொந்த காரில் Embassy & Airport வந்தாலும் taxi காசு கொடுக்க வேண்டும்

3) நாம் தான் அவர்களது வீட்டிற்கு சென்று passport வாங்கி எல்லா அலுவலும் பார்க்க வேண்டும், அவர்கள் கை அடையாளம் கொடுக்க மட்டும் வருவார்கள்

4) Business class ticket & 3 star hotel கட்டாயம், கூட வருபவருக்கும் (மனைவி கணவன் என்றால் double  room ok, இல்லாவிடின் Twin room)

சிறியவர்கள் & வளர்ந்து வருபவர்கள் சில விட்டு கொடுப்புகளை செய்வார்கள். சிலர் எமது வீடுகளிலேயே தங்குவார்கள்.

1) Economy ticket & decent hotel 

2) 50% முதலில் கொடுத்தால் போதுமானது.

 

என்னை பொறுத்தவரை இளசு 75% மட்டும் வாங்கியதே பெரிய விடயம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நடிகன் , எந்த நடிகை வந்து;  இங்கே உள்ள தமிழன் அவர்கள் காலில் விழுந்தான்?
எந்த சூப்பர் சிங்கர் பாடகன் / பாடகி காலில் இங்கே உள்ள தமிழன் காலில் விழுந்தான்?..

புதினம்...ஈ.குருவி....நினைவுகள்....சார்ல்ஸ்.... போட்டொக்களையும்  வரும்போது பாருங்கள்.. நான் இசைக்க்கோ  ராசாவுக்கோ எதிரானவன் அல்ல...அவர்களை வைத்து இங்கு நடைபெறும் அலப்பறைகள்  எனக்கு பிடிப்பதில்லை....என்னால் நிறய உதாரணங்களை பதிவிட முடியும்....விவாதத்தை தொடர நான் விரும்பவில்லை.......ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒரு கலைஞனை அவனது கலைத்திறமையை ரசிப்பதோடு சரி....
அவர்களுக்கு கோவில் கட்டுவது....காலில் விழுவது கட்டவுட் வைத்து பால் ஊத்துவது நமக்கு சரிப்பட்டு வராது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் ஒரு கலைஞனை அவனது கலைத்திறமையை ரசிப்பதோடு சரி....
அவர்களுக்கு கோவில் கட்டுவது....காலில் விழுவது கட்டவுட் வைத்து பால் ஊத்துவது நமக்கு சரிப்பட்டு வராது. :cool:

சில நேரங்களில் கலைஞனின் படைப்பு நமது சௌகரியமான சில கடந்தகால மணித்துளிகளை நம் மனதினுள் ஊடுருவச் செய்து அந்த கால கட்டத்திற்க்கே கூட்டிச் செல்லும்...

ஆனால் தங்களின் சரிப்பட்டு வராதவை சரியாக இருந்தாலும், அதற்க்கீடாக எது சரி என்று எனக்கு தெரியவில்லை...

Edited by மியாவ்

19 hours ago, MEERA said:

எனக்கு சில நடிகர்களுடனும் பாடகர்களுடனும் நல்ல அனுபவம் இருக்கிறது.

பெரிய நடிகர்கள் பாடகர்கள்

1) 100% பணம் கொடுக்காமல் Airport ற்கே வர மாட்டார்கள்,

2) சொந்த காரில் Embassy & Airport வந்தாலும் taxi காசு கொடுக்க வேண்டும்

3) நாம் தான் அவர்களது வீட்டிற்கு சென்று passport வாங்கி எல்லா அலுவலும் பார்க்க வேண்டும், அவர்கள் கை அடையாளம் கொடுக்க மட்டும் வருவார்கள்

4) Business class ticket & 3 star hotel கட்டாயம், கூட வருபவருக்கும் (மனைவி கணவன் என்றால் double  room ok, இல்லாவிடின் Twin room)

சிறியவர்கள் & வளர்ந்து வருபவர்கள் சில விட்டு கொடுப்புகளை செய்வார்கள். சிலர் எமது வீடுகளிலேயே தங்குவார்கள்.

1) Economy ticket & decent hotel 

2) 50% முதலில் கொடுத்தால் போதுமானது.

 

என்னை பொறுத்தவரை இளசு 75% மட்டும் வாங்கியதே பெரிய விடயம்.

 

அவர்களை அப்படியாயின் ஏன் அழைக்கின்றீர்கள்? அவர்களுக்கு டிமாண்ட் இருப்பதால்தானே நீங்களும் பிஸ்னஸ் கிளாஸ் ரிக்கெட் எல்லாம் எடுத்து கூப்பிடுறீங்கள். 

On 4/3/2018 at 8:57 PM, sivakumaran said:

இளையராசாவின் இசையினையும் அனிருத்தின், இமானின் இசையுடன் ஒரே எடையில் போட்டுப் பார்க்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் இளையராசா என்ற மனிதரை விட கங்கை அமரன், இரகுமான், இமான் என்ற மனிதர்கள் சிறந்தவர்கள்.  சிட்னியில் சிம்போனி என்ற அமைப்பின் ஊடாக தமிழகத்துப் பாடகர்களை  அழைத்து இசைவிருந்து வழங்குபவர் கதிர் . முதன்முறையாக புகழ் பெற்ற ஒபரா கவுஸில்நடைபெற்ற இந்திய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியை நடாத்தியவரும் கதிர்தான் . ஜேசுதாஸ், எஸ்பிபி, சித்ரா போன்ற கலைஞர்களை ஒபரா கவுஸில் அழைத்து நிகழ்ச்சிகளை  நடாத்தினார்.  கதிரின் நீண்ட ஆசை இளையராசவின் நிகழ்ச்சியை சிட்னியில்  நடாத்துவது.  2013ல் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டது.   75% பணம் முழுவதும் கிடைத்தால் தான் சிட்னிக்கு வருவேன் என்றார் இளையராசா. நுளைவுச்சீட்டுகள் விற்பனையில் பணத்தினைப் பெறலாம்  என்ற நம்பிக்கையில் 75000 வெள்ளிகளை இளையராசாவுக்கு குடுத்தார் கதிர்.  நிகழ்ச்சி தொடங்க ஒரு கிழமைக்கு முன்பு சன், கலைஞர் தொலைக்காட்சியுடன் இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் வெளியிட ஒப்பந்தம் செய்ய தாய் விமானத்தில் பயணிக்கும் போது எதிர்ப்பாராதநோயினால்  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திட்டமிடப்பட்டநிகழ்வு நடைபெறவில்லை.நடக்காத நிகழ்ச்சிக்கு வாங்கிய 75000 வெள்ளிகளையும் பண ஆசை பிடித்த இளையராசா திருப்பி வழங்கவில்லை.   இதனால் வாழ்ந்த வீட்டினையும் விற்க வேண்டியநிலமைக்கு தள்ளப்பட்டார் கதிர். பல முறை பணத்தினைக் கேட்டும் இளையராசா பணத்தினை திரும்பி வழங்கவில்லை. இதனால் மேலும் வேதனைப்பட்ட கதிர் மேலும்நோய் வாய்ப்பட்டு 2015 சனவரியில் காலமானர். இப்படிப்பட்ட இளையராசாவின் காலில் விழுவது சரியா?.  ஈழத்தமிழர்கள்  காலில் விழும் பழக்கத்தினை ஈழத்தில் பார்த்திருக்கிறீர்களா?.  தமிழகத்தில் அப்பழக்கம் இருக்கிறது.

தனிப்பட எங்களுக்கு ஒருவரையுமே தெரியாது. நாங்கள் அறிந்தது எல்லாம் கலைஞர்களின் படைப்புக்களை மட்டுமே. மரியாதை கொடுக்கப்படுவது அவர்களது கலைஞானத்திற்கே ஒழிய தனிப்பட்ட அவர்களது வாழ்க்கைக்கு அல்ல. உலக அழகியின் உடலிலும் மலம் உள்ளது. இங்கே எங்கள் கண்களுக்கு அழகியை மட்டுமே தெரியும், அழகையே ஆராதிக்கின்றோம், மலத்தை அல்ல. :29_smirk:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, மியாவ் said:

சில நேரங்களில் கலைஞனின் படைப்பு நமது சௌகரியமான சில கடந்தகால மணித்துளிகளை நம் மனதினுள் ஊடுருவச் செய்து அந்த கால கட்டத்திற்க்கே கூட்டிச் செல்லும்...

ஆனால் தங்களின் சரிப்பட்டு வராதவை சரியாக இருந்தாலும், அதற்க்கீடாக எது சரி என்று எனக்கு தெரியவில்லை...

கலைஞன் என்பவன் காசு வாங்கிக்கொண்டுதான் எதையுமே செய்கின்றான்.

அதற்கு பெயர் தியாகமில்லை.

திறமைக்கேற்ப பணம் சம்பாதிக்கின்றான்.

பிற தொழிலாளர்களைப்போல அவனும் தனக்கு தெரிந்த திறமையை பயன்படுத்தி சம்பாதிக்கின்றான்.

அவ்வளவே......

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

கலைஞன் என்பவன் காசு வாங்கிக்கொண்டுதான் எதையுமே செய்கின்றான்.

அதற்கு பெயர் தியாகமில்லை.

திறமைக்கேற்ப பணம் சம்பாதிக்கின்றான்.

பிற தொழிலாளர்களைப்போல அவனும் தனக்கு தெரிந்த திறமையை பயன்படுத்தி சம்பாதிக்கின்றான்.

அவ்வளவே......

நானும் தியாகம் என்று சொல்லவில்லை, நமது திருப்த்தியை பொருத்து அவனை அடுத்த தலை முறைக்கு சிபாரிசு செய்கிறோம் அல்லவா...

இது அவன் வாங்கும் கூலியை விஞ்சிய வெற்றி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, மியாவ் said:

நானும் தியாகம் என்று சொல்லவில்லை, நமது திருப்த்தியை பொருத்து அவனை அடுத்த தலை முறைக்கு சிபாரிசு செய்கிறோம் அல்லவா...

இது அவன் வாங்கும் கூலியை விஞ்சிய வெற்றி...

அடுத்த தலைமுறைக்கு சிபாரிசு செய்வது நமது கடமை. அதை செய்யும் வழி சரியானதாக நாகரீகமானதாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெகத் கஸ்பால் திருவாசகம் சிம்பொணி இசை எனும் பெயரில் உலகமெல்லாம் காசு சேர்த்து அடிச்சு ஒதுக்கிய பனம்போக மிகுதிக்காசைக்கொடுத்து இசையமைத்த இசைவடிவத்தின் மூலப்பிரதியை இன்னமும் ஜெகத் கஸ்பாலிடம் இளையராஜா கொடுக்கவில்லை என ஜெகதே ஒரு மேடையில் கூறியது நினைவில் வருகிறது.

இவரது மகன் யுவன்சங்கர் ராஜா முன்னம் ஒரு இலங்கைத் தமிழ்ப்பெட்டையைக் கலியானம்பண்ணி அவ்வேளையில்சிம்புவுடன் தய்லாந்து போய் அங்க கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் போனதால் மனஸ்தாபப்பட்டு பிரிஞ்சுபோயிட்டா இப்போ காரைகாலில் ஒரு இஸ்லாமியப் பெட்டையைக் கட்டி முஸ்லீமாக மாறிவிட்டார் மகன் ரம்ளான் நோண்பில் விருந்துவைக்க இளையராஜா பிரியாணியை ஒரு பிடி பிடித்ததாகச் செய்திவந்தது.

அந்தாளுக்கு இப்போஒ வயசு போயிட்டுது அண்மையில் ஒரு இந்திப்படத்துக்கு ஆசை அதிகம் வைத்து எனும் பாலுமகேந்திரா படப்பாடலை அப்படியே கொப்பி பேஸ்ட் பண்ணிட்டார் அதே போல் ஆனந்தராகம் எனும் பாடலையும் கிந்திப்படம் ஒண்டுக்கு தானே சேர்த்துப்போட்டார் இவைகள் எப்போவோ வந்தபாடல் ஆனால் அவர் அவற்றை இப்போதான் கிந்திக்குக்கொண்டுபோகிறார். ஆக அவருக்கு இப்போ சரக்குத் தீர்ந்துபோயிட்டுது என்பதுதானே அர்த்தம்

முன்னம் இவர் குடி கூத்து அனைத்திலும் கரை கண்டவர் இப்போ கடவுள் அது இது என ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அவர் ஒரு சைவ சமயத்தில் இருந்துகொண்டு இஸ்லாமியர்களது புரியாணியைப் பதம்பார்க்கிறார் எண்டால் மேலதிகமாக யோசிச்சுப்பாருங்கோவன்.

ஏ ஆர் ரகுமான் அண்மையில் கூறினார் வயதுபோகப்போக இப்போதைய இளைஞர்களுக்கான புதிய ராகங்களைத் தன்னால் கொண்டுவரமுடியாதுள்ளதென, வயசு போனால் எல்லோரும் இப்படித்தான்.

இப்போ அனிருத் என்பவர் அங்கொன்றும் இங்கொன்றுமாப்போறுக்கி இசை எனும் பெயரில் எங்களை எல்லாம் வருத்தாக்காரன் ஆக்கிறார்.

அனால் ஓய்வான நேரத்தில் இளையராஜாவையும் எம் எஸ் வி யையும் விட்டால் இப்போதைய இளசுகளுக்கும் ஆக்கள் இல்லை.

புலம்பெயர் தேசங்களில் இளையோர் கன்ஸ் சிம்மர் எனும் (Hans Florian Zimmer)  ஜேர்மனிய இசைச் சேர்க்கை செய்பவரை முழுவதுமாக அறிந்துள்ளார்கள்.

இவர் மடகஸ்கர், தி டாவின்சி கோட், மிஸ்ஸன் இம்பொசிபிள் ஆகிய படங்களுக்கு இசைக்கோர்ப்புச் செய்தவர்

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எழுஞாயிறு, சைவக்காரர்,முஸ்லிம்களிடம் பிரியாணி வாங்கி சாப்பிடக் கூடாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி ஊரில தங்களைப் பெரியாக்களாகக் காட்ட தமிழகத்தில் இருந்து சில தலைக்கனங்களை  கூட்டி வந்து நிகழ்ச்சிகள் செய்யுற கோயில்காரர்களின் எச்சங்கள் இப்ப உலக நாடுகள் எங்கும் அகதி அந்தஸ்துப் பெற்று வாழும் நிலையில்..இது ஒன்றும் புதிதல்ல.

எல்லாம் சுய விளம்பரத்தின் நோக்கமே தான். tw_angry:

சிட்னியில் இருக்கும் பலருக்கு தெரிந்த விடயம் இது. வேணுமென்றால் உங்களுக்கு தெரிந்தவர்களுடன் கேட்டுப்பாருங்கள்.  பணம் இளையராசாவிடம் இருப்பதினால் , அவரைப் பகைப்பதினால் பணத்தினை மீளப் பெற முடியாது என்பதினால் ஊடகங்களுக்கு கதிர் இச்செய்தியினைக் கொண்டு செல்லவில்லை. மிகுதி 25000ம் தந்து நிகழ்ச்சியை நடாத்த வேண்டும் என்று இளையராசாவின் வேண்டுகோல்.  கதிரின் இறப்பின் போது சிட்னியில் உள்ள இன்பத் தமிழ் வானொலியில் பலர் கருத்துக்களைப் பகிர்ந்தார்கள். தமிழக கலைஞர்களும் தங்களது கருத்துக்களைச் சொன்னார்கள்.  கங்க அமரன், தானும் எஸ் பி பியும் குறைந்த காசுக்கு கதிருக்காக நிகழ்ச்சியை செய்யத்தயாராக இருப்பதாகவும் சொன்னார்.  இப்பொழுது முகநூல் பெரிய ஊடகமாக இருக்கிறது. கதிருக்கு தெரிந்தவர்களில் சிலருக்கு 2000க்கு மேற்பட்ட தமிழக முகநூல் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த முகனூல் காரர்கள் பெரும்பாலும் புகழ்விரும்பிகள்.  அரசியல், இசை என எழுதி பலரை வாசகர்களாக வைத்திருக்கிறார்கள். தங்களுக்குப் பிடிக்காத கருத்துக்களை நீக்கிவிடுவார்கள். இளையராசாவைப் பற்றி புகழ்ந்து எழுதி வாசகர்களைக் கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள் . அவற்றைக் குறைக்க விரும்ப மாட்டார்கள்.  இந்திய இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட இவர்கள் , இந்திய இராணுவத்தினைப் பற்றியும் எழுத மாட்டார்கள் . எனென்றால் இந்திய வாசகர்களின் வெறுப்புக்களை ஏன் இழக்கவேண்டும் என்பதே.      இளையராசா சிட்னிக்கு இவ்வருடம்  வரவுள்ளதாக  இணையத்தில் செய்தி பார்த்தேன்.   இளையராசாவின் இசை எனக்குப்பிடிக்கும். ஆனால் இளையராசா என்ற மனிதரை  நான், எனது நண்பன் அமரர் கதிருக்காக  வெறுக்கிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.