Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பதற்றம்; வெடித்தது வன்முறை: பொலிஸாரின் கட்டுப்பாட்டில் 75 பேர்!

Featured Replies

யாழில் பதற்றம்; வெடித்தது வன்முறை: பொலிஸாரின் கட்டுப்பாட்டில் 75 பேர்!

 

 
 

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்ட சுமார் 75 க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

எனினும் மோதல் சம்பவத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

https://www.ibctamil.com/srilanka/80/105893?ref=imp-news

பருத்தித்துறைக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையிலுள்ள சக்கோட்டை ப் பகுதியில் இது போன்ற மோதல்கள் ஊர்மக்களின் பலத்தை குறைக்கும்! 

  • கருத்துக்கள உறவுகள்

காலம் காலமாக நடக்கும் சண்டையின் தொடர்ச்சியா??

3 minutes ago, nunavilan said:

காலம் காலமாக நடக்கும் சண்டையின் தொடர்ச்சியா??

70 களிலும் இவர்கள் சண்டித்தனம் செய்வதில் வல்லவர்கள் தான். 

விடுதலைப் புலிகள் காலத்தில் அமைதியாக இருந்தார்கள்! இப்போது தொடர நினைக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைத்தது சரி தான். குருநகர்  சண்டைகள், உடுப்பிட்டி சண்டைகள் என்பன நான் கேள்விப்பட்டவை. இன்னும் தொடர்வதை இட்டு மிக கவலையாக உள்ளது. ஒரு காலத்தில் கல்வியில் மிக உச்சத்தில் இருந்தவர்களுக்கு இந்நிலை எனில்????

  • தொடங்கியவர்

பருத்தித்துறையில் குழு மோதலில் ஈடுபட சென்ற 75 பேர் எச்சரித்து விடுதலை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

release-1.jpg?resize=655%2C371

 

யாழ்.பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து , குழு மோதலில் ஈடுபட சென்றார்கள் எனும் சந்தேகத்தில் 75 நபர்களை கைது செய்த பருத்தித்துறை காவல்துறையினர் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

பருத்துறை- உதயதாரகை மைதானத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு உள்ளது. பருத்துறை உதயதாரகை மைதானத்தில் பலாலி- விண்மீன் அணிக்கும், சக்கோட்டை- சென்சேவியர் அணிக்கும் இடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியின் போதே குறித்த முறுகல் நிலை தோன்றியது.

அதனை யடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பலாலி விண்மீன் அணியைச் சேர்ந்த இளைஞர் குழு இரண்டு பேருந்துக்களில் சக்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளது.இதனையடுத்து இரு குழுக்களுக்கிடையிலும் முறுகல் நிலை ஏற்ப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோதலில் ஈடுபட வந்தார்கள் என 75 பேரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வர்களையும் அவர்கள் பயணித்த பேருந்துக்களையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த காவல்துறையினர் கடுமையாக அவர்களை எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/2018/94998/

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா ஆசியா ஆபிரிக்கா எங்குமே உதை பந்தாட்ட கோஷ்டிகள் ,ரசிகர்கள் மோதிக்கொள்வது சட்டப்படி குற்றமென்றாலும் சாதாரணமாய் நடக்கும்  நடைமுறைதான். ஆனால் அதற்கு எமது ஊடகஙகள் கொடுக்கும் தலைப்பு..,..வெடித்தது வன்முறை...எல்லாமே போச்சு யாழ்ப்பாண்த்தில்  என்பனபோன்றவை அவர்கள் புரியும் வன்முறையைவிட கேவலமானது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, valavan said:

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா ஆசியா ஆபிரிக்கா எங்குமே உதை பந்தாட்ட கோஷ்டிகள் ,ரசிகர்கள் மோதிக்கொள்வது சட்டப்படி குற்றமென்றாலும் சாதாரணமாய் நடக்கும்  நடைமுறைதான். ஆனால் அதற்கு எமது ஊடகஙகள் கொடுக்கும் தலைப்பு..,..வெடித்தது வன்முறை...எல்லாமே போச்சு யாழ்ப்பாண்த்தில்  என்பனபோன்றவை அவர்கள் புரியும் வன்முறையைவிட கேவலமானது.

40 வ‌ருடத்திற்க்கு முதல் நானும் மானிப்பாயில் இப்படி ஒரு உதைபந்தாட்டத்தை பார்த்துவிட்டு வரும் பொழுது  வெற்றி பெற்ற பாடசாலையை சேர்ந்தவன் என்றமைக்காக‌ அடிவாங்கினேன்.

All part of game:11_blush:

முன்பு வல்வெட்டித்துறை ஆட்கள் கால்பந்தாண்ட  போட்டியின் முடிவில் சண்டித்தனம் செய்வார்கள்.

11 hours ago, Rajesh said:

முன்பு வல்வெட்டித்துறை ஆட்கள் கால்பந்தாண்ட  போட்டியின் முடிவில் சண்டித்தனம் செய்வார்கள்.

அது ரெண்டாவது கேம் ? அதிலையும் வெல்லனும் பாஸ் .?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2018 at 6:27 PM, நவீனன் said:

யாழில் பதற்றம்; வெடித்தது வன்முறை: பொலிஸாரின் கட்டுப்பாட்டில் 75 பேர்!

ஊர்ச் சண்டைகளுக்கெல்லாம் இப்பிடி தலையங்களைப் போட்டு தயவு செய்வது வயித்தை கலங்கடிக்காதீங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

ஊர்ச் சண்டைகளுக்கெல்லாம் இப்பிடி தலையங்களைப் போட்டு தயவு செய்வது வயித்தை கலங்கடிக்காதீங்கள் 

அது தானே......!

நாங்கள் காணாத....கொட்டடி...கோனான் தோட்டம்....நாவாந்துறைச் சண்டைகளா?

ஏதோ புதுசாய் நடக்கிற மாதிரி.....எடுப்பு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kavi arunasalam said:

ஊர்ச் சண்டைகளுக்கெல்லாம் இப்பிடி தலையங்களைப் போட்டு தயவு செய்வது வயித்தை கலங்கடிக்காதீங்கள் 

1 hour ago, புங்கையூரன் said:

அது தானே......!

நாங்கள் காணாத....கொட்டடி...கோனான் தோட்டம்....நாவாந்துறைச் சண்டைகளா?

ஏதோ புதுசாய் நடக்கிற மாதிரி.....எடுப்பு!

 

 அங்கை சும்மா கிளித்தட்டு விளையாட்டுக்கெண்டாலும் ஊரே இரண்டுபடும்....உந்த இன்ரநெற்காரருக்கு வேறை வேலையே இல்லை.....
வாடல் தேங்காய் தன்ரைபாட்டிலை கழண்டு விழுந்தாலும் பிரேக்கிங் நியூஸ் போடுவாங்கள் கண்டியளோ..... சும்மா சின்னச் சின்ன விசயத்தையெல்லாம் தூக்கிப்பிடிச்சு தங்களை பிரமிப்பாய் காட்டுற ஊடகங்கள் எக்கச்சக்கம்... tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

வாடல் தேங்காய் தன்ரைபாட்டிலை கழண்டு விழுந்தாலும் பிரேக்கிங் நியூஸ் போடுவாங்கள் கண்டியளோ

அண்ணோய்......உவமானம் ....எங்கேயோ போட்டுது!?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகளை  வாசிக்கவே எரிச்சலாக வருகிறது.

வாசகர்களைக் கவர் நன்றாக சோடிக்கி றார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை   வாசித்து 

தலைப்பை கிரகித்து

பதியணும்  என்று ஒரு  சிலர்  வரணுமே??

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2018 at 8:47 AM, putthan said:

40 வ‌ருடத்திற்க்கு முதல் நானும் மானிப்பாயில் இப்படி ஒரு உதைபந்தாட்டத்தை பார்த்துவிட்டு வரும் பொழுது  வெற்றி பெற்ற பாடசாலையை சேர்ந்தவன் என்றமைக்காக‌ அடிவாங்கினேன்.

All part of game:11_blush:

மகாஜனவிரடம் தானே.நானும் வாங்கியிருக்கிறேன்.??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/10/2018 at 8:47 AM, putthan said:

40 வ‌ருடத்திற்க்கு முதல் நானும் மானிப்பாயில் இப்படி ஒரு உதைபந்தாட்டத்தை பார்த்துவிட்டு வரும் பொழுது  வெற்றி பெற்ற பாடசாலையை சேர்ந்தவன் என்றமைக்காக‌ அடிவாங்கினேன்.

All part of game:11_blush:

 வாங்கினதுதான் வாங்கினியள் பொம்புளைப்புள்ளையளுக்கு முன்னாலை வைச்சு அடிக்கேல்லை தானே.... :(
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.