Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் நடந்த கண்டிக்கத்தக்க மத நிகழ்வு

Featured Replies

பற வே**, பறைச்சி என்றெல்லாம் சாதிய மற்றும் கேவலமான பிரயோகங்களுடன் நடக்கும் கிறிஸ்தவ நிகழ்வு.

இது மட்டக்களப்பில் நிகழ்ந்ததாகவும், இதை நடத்துகின்ற அந்த தரம் கெட்ட மனிதர் இயக்குநர் பாலுமகேந்திராவின் சகோதரர் என்றும், வெளிநாட்டில் இருந்து அண்மையில் தான் வந்து இந்தளவுக்கு சாதிவெறியையும் மதவெறியையும், மூட நம்பிக்கையையும் பரப்புகின்றார் என்றும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வருகின்றன.

இப்படியானவற்றை எம் மண்ணில் இருந்து ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

இந் நிகழ்வு தொடர்பான சரியான மற்றும் மேலதிகமான தகவல்கள் இருப்பின் பகிரவும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மன அமைதி வேண்டித்தான்... மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்கிறார்கள்.
ஆனால்... மேலே உள்ள காணொளியில், அந்த இளம் பெண்ணுக்கு இவர்கள் பேசும் பேச்சுக்களை பார்க்க,
இவர்கள் ஒரு மதத்  தலைவர்களாக இருப்பதற்கு  எள்ளளவும் தகுதி அற்றவர்கள்.
இப்படியான மதத்  தலைவர்களுக்கு வெளியில் வைத்து, (முதுகில்) நாலு தட்டு தட்டினால் தான்.... திருந்துவார்கள்.
அந்தப் பெண்... இனியும், அந்த வழிபாட்டு இடத்திற்கு செல்வார், என்று நான் நினைக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

மன அமைதி வேண்டித்தான்... மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்கிறார்கள்.
ஆனால்... மேலே உள்ள காணொளியில், அந்த இளம் பெண்ணுக்கு இவர்கள் பேசும் பேச்சுக்களை பார்க்க,
இவர்கள் ஒரு மதத்  தலைவர்களாக இருப்பதற்கு  எள்ளளவும் தகுதி அற்றவர்கள்.
இப்படியான மதத்  தலைவர்களுக்கு வெளியில் வைத்து, (முதுகில்) நாலு தட்டு தட்டினால் தான்.... திருந்துவார்கள்.
அந்தப் பெண்... இனியும், அந்த வழிபாட்டு இடத்திற்கு செல்வார், என்று நான் நினைக்கவில்லை. 

மத நிகழ்வு????

இது முழு செட் அப்...

பேச்சு அவயல பிடிச்ச ஆவிகள் மேல தான் விழுகுது.. அந்த மாதிரி தூசணத்தில பேசின தான் ஆவிக்கு புரியும் போல கிடக்குது....

பேச்சு வாங்கறவயல்.... கடைசில அவயல பிடிச்ச ஆவி ஓடி விடடமாதிரி நடிப்பினம்...

பிறகென்ன மிச்ச ஆக்கள்... எடுபடிவினம்... ?

********

Pariahs என்று (தமிழில் இருந்து வந்த) ஆங்கிலத்தில் சொல் இருப்பது தெரியுமா நிழலி?

ஊருக்கு ஒதுக்கி வைக்கப் பட்டவர்கள் என்று பொருள்... (ஒரு விபரத்துக்கு சொன்னேன். இவர்கள் சொல்வதை நியாய படுத்த அல்ல)
 

Edited by Nathamuni

இவரை பார்த்தால் மத சம்மந்தப்பட்டவர் போல் இல்லையே, நவீன குறளிவித்தைக்காரன் போல் உள்ளது. தர்ம அடிவாங்கத் தகுந்தவர். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலத்திலும் ஆவி இருக்கிறதென்று நம்புவோரை என்ன செய்வது ?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வின்சன்ட் பாலா என்று நினைக்கிறேன்...இவர் மட்டுவில் 90 களில் ஒரு கிறிஸ்தவ சபை வைத்திருந்தார் ...நல்லாய் கதைக்கத் தெரிந்தவர் ...அந்த நேரமே அங்குள்ள ஏழை மக்களை ஏமாத்தி நன்றாக உழைத்து ஒரே மகளை லண்டனில் நிறைய சீதனத்தோடு அப்பவே கட்டிக் கொடுத்தார்...நான் அங்கு இருக்கு மட்டும் அங்கே தான் இருந்தார்...பிறகு வெளிநாட்டுக்கு வந்தாரோ தெரியாது...பாலு மகேந்திராவின் சகோதரர் என்பதும் உண்மை தான் 

 

 

 


 

இப்பவும் சனம் அவரை நம்பி போகுது என்பதை நம்ப முடியாமல் உள்ளது ?

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலத்திலும் இத்தனை விசர்ச் சனம் இருப்பதை நம்ப முடியவில்லை. எல்லாரும் இப்படிப் பத்திவைப் போட்டுவிட்டுப் போக அவர் தன்ர பாட்டிலை தொடர்வார். அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ragunathan said:

இந்தக் காலத்திலும் ஆவி இருக்கிறதென்று நம்புவோரை என்ன செய்வது ?

இந்த உலகில் எந்த நாட்டில் ஆவி, பேய்கள் இல்லையென்று நம்பாதவர்கள் இருக்கின்றார்கள்?

நவீனமும் அணு குண்டும் என ஆர்ப்பரிக்கும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இல்லாத பேய்க்கதைகளா ஆசியாவிலும் மட்டக்களப்பிலும் இருக்கின்றது? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

இவர் வின்சன்ட் பாலா என்று நினைக்கிறேன்...இவர் மட்டுவில் 90 களில் ஒரு கிறிஸ்தவ சபை வைத்திருந்தார் ...நல்லாய் கதைக்கத் தெரிந்தவர் ...அந்த நேரமே அங்குள்ள ஏழை மக்களை ஏமாத்தி நன்றாக உழைத்து ஒரே மகளை லண்டனில் நிறைய சீதனத்தோடு அப்பவே கட்டிக் கொடுத்தார்...நான் அங்கு இருக்கு மட்டும் அங்கே தான் இருந்தார்...பிறகு வெளிநாட்டுக்கு வந்தாரோ தெரியாது...பாலு மகேந்திராவின் சகோதரர் என்பதும் உண்மை தான் 

 

 

 


 

இப்பவும் சனம் அவரை நம்பி போகுது என்பதை நம்ப முடியாமல் உள்ளது ?

 

நான் புளியந்தீவில் இருந்த காலங்களில் இவர்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவரைப் பார்த்தது கிடையாது. மக்களின் அறியாமையை மூலதனமாக வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை மதத்திற்குப் பின்னால் மாறடிக்கிறவர்கள் இறுதியில் கண்டது எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ragunathan said:

நான் புளியந்தீவில் இருந்த காலங்களில் இவர்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவரைப் பார்த்தது கிடையாது. மக்களின் அறியாமையை மூலதனமாக வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை மதத்திற்குப் பின்னால் மாறடிக்கிறவர்கள் இறுதியில் கண்டது எதுவுமில்லை.

தற்போது இவர் வெளிநாட்டிலிருந்து வந்ததாக தெரிகிறது ஆனால் இவர்கள் அனைவரும் வீடு , காசு , இதர சுகங்களுக்காக மதம் மாற்றப்பட்டவர்கள்  பல வருடங்களுக்கு முன் இந்துவாக இருந்தவர்கள் இது  மட்டக்களப்பு முகத்துவாரம் செல்லும் வீதியில் அமைந்துள்ளதாக சொன்னார்கள் இன்று சென்று பார்த்தன் அங்கு நடந்ததா தெரியல வேறு இடமாக இருக்கலாம் மட்டக்களப்பில் தான் வேற ஓர் அமைவிடத்தில் நடந்திருக்கலாம் இப்படி மாறியவர்கள் வீட்டில் அருகில் இருக்கும் மற்ற மக்கள் பயப்படுகிறார்கள் துன்பப்படுகிறார்கள் எந்த நேரமும் கூச்சலும்ம் குக்குரலும் தான் இவர்கள் பொழுது போக்கு 

ஆரம்ப காலத்தில் உள்ள  கிறிஸ்த்தவர்கள் இவர்களை போல் அல்ல ஆனால் இவர்கள் நோக்கம் வறுமையை  கண்டு பிடித்து மூளை சலவை செய்து மனம் , மதம் மாற்றி விடுதல் மற்றும் விடுதலை கொடுத்தல் என்ற பதாகைகள் பேனர்கள் மட்டும் தான் 

  • கருத்துக்கள உறவுகள்

பாலுமகேந்திராவின் சகோதரர்

அதே  அதட்டதல் தெரிகிறது

பெண்கள் சார்ந்து.....???

கவனம்  உறவுகளே

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள்மேல் அவநம்பிக்கை கொண்ட சமூகம் இருக்கும் வரை இப்படியானவை வளரத்தான் செய்யும். இந்தாளை கயித்தில் தலைகீழாக தொங்கக் கட்டிவிட்டு காவோலை கொளுத்தி அந்த நெருப்பில் மிளகாய்ப் பொடியை போட்டு மக்கள் தண்டனை கொடுப்பார்களாக. மதத்தின் பெயரால் ஏமாற்றுபவர்கள் பொதுவெளியில் மக்களால் தண்டிக்கப்படவேண்டும். மதம் மனிதகுலத்தை பண்படுத்த மாத்திரமே.... எல்லா மதத்திலும் இப்படியானவர்கள் ஏராளம். பக்தி என்ற பெயரால் கண்ணை மூடிக்கொண்டு பகுத்தறிவை தொலைத்தவர்கள் அதிகமான சமூகம் நம்முடையது... இதுவும் நடக்கும் இன்னமும்  நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அதிகமானவர்கள் இளம்பெண்களாகவே பங்குபற்றி  இருக்கின்றனர் .பக்தி என்ற பெயரால் பகுத்தறிவை   தொலைத்தவர் களா ?. நவீன உலகில் போலிகள் ஏராளம்    நம்பி ஏமாறாதீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

மேடையின் பின்புறத்தில் அமெரிக்கா இஸ்ரேல் உட்பட பல நாடுகளின் தேசியக்கொடிகள் தெரிகின்றன.
இந்துக்களை வெறிபிடித்த ஆவிக்கூட்டமாக மதமாற்றம் செய்வதற்கு சர்வதேச சதியோ?
சிங்கன் பெண்களுடன் செய்யும் அட்டகாசங்களுக்கு  MeToo இல் கோர்த்துவிட்டால் நல்லது.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிலாமதி said:

ஏன் அதிகமானவர்கள் இளம்பெண்களாகவே பங்குபற்றி  இருக்கின்றனர் .பக்தி என்ற பெயரால் பகுத்தறிவை   தொலைத்தவர் களா ?. நவீன உலகில் போலிகள் ஏராளம்    நம்பி ஏமாறாதீர்கள் 

வறிய குடும்பத்து பெண்கள் இலகுவாக ஏமாந்து போகிறார்கள் ஆசையென்ற மாயையில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.