Jump to content

சைக்கிள் கடை அப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“வந்துட்டான்யா வந்துட்டான்
எழுதியே கொல்லப் போறான் “
என்ற மைன்ட் வொய்ஸ் நல்லாவே கேட்குது.
சீ சீ அப்படி செய்வேனா என்ன?
இது ஒரு உண்மைக்கதை.சின்னக்கதை.
ஆனாலும் பிரபல்யமான கதை.
இது சுவியின் ஊரவர் என்றபடியால் அவரும் தெரிந்ததை விபரமாக எழுதலாம்.
இதை அறவே மறந்தே போனேன்.இருந்தாலும் சைக்கிள்கடை என்று சிறி கேள்வி எழுப்பத் தான் ஞாபகத்துக்கு வந்தது.

                                     யாழ் இந்துவில் மழைக்கொதுங்கிய வேளை எட்டாம் வகுப்பிலேயே ஒரு பாடம் இரண்டு பாடம் என்று நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது.யாரிடமாவது சைக்கிள் இரவல் வாங்கிறது.இரண்டு மூன்று பேர் சேர்ந்து கீரிமலை சேந்தாங்குளம் பண்ணை வெள்ளைக் கடற்கரை இப்படி எங்காவது திரிவது.

                                    ஒரு தடவை புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே சைக்கிள் முன்வளையம் வழைந்துவிட்டது.பாடசாலை முடிவதற்கிடையில் திருத்தி கொடுக்க வேண்டும்.யாரிடமும் திருத்த பணம் இல்லை.மதியநேரம் யாரிமாவது கடன் வாங்கலாம் என பொறுத்திருந்தோம்.சைக்கிளை தூக்கிவந்து மைதான வைரவகோவிலுக்கு பக்கத்தில் வைத்துவிட்டு இடைவேளை விட்டதும் ஆளாளுக்கு அலைந்து திரிந்தோம்.ஐஸ்பழத்துக்கும் கடலைக்கும் காசு சேர்ந்ததே தவிர போதுமான காசு சேரவில்லை.

                                    நீராவியடி கோவிலுக்கு பக்கத்திலுள்ளவர் எனது வகுப்பு.அவர் மதியம் வீடு போய் சாப்பிட்டு வர அவரிடம் யாரிடமாவது சொல்லி இந்த சைக்கிளைத் திருத்தி தா நாளை காசு தருகிறோம் என்று அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டோம்.

                                   சரி இந்து மகளீர் சந்தியில் எனது அண்ணன் சைக்கிள்கடை வைத்திருக்கிறார் பெயர் அப்பு நான் சொன்னதாக சொல்லுங்கோ என்றார்.அந்த நேரம் இந்த ராங்ஸ் நன்றி யார் தான் சொல்லுவது.தூக்கிக் கொண்டு அங்கே போய இஞ்சை அப்பு அண்ணை என்றதும் அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில வருவார் என்று நின்றவர் சொன்னார்.

                                  கொஞ்சநேரத்தில் அவரும் வந்து இறங்கினார்.உன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கினம் என்று நின்றவர் சொன்னார்.அப்பு அண்ணையும் வளைந்த ரிம்மையும் எங்களையும் பார்த்திட்டு 2-3 ரூபா வரப் போகுது என்ற சந்தோசத்தில உள்ளுக்கு கொண்டு வாங்கோ என்றார்.இப்போ ஆளையாள் பார்த்து முழுசாட்டம்.காசு இப்ப இல்லை என்று சொல்லித் தொலைக்க வேண்டுமே.

                                அப்புஅண்ணை எங்களை விட 6-7 வயது மூத்தவராக இருப்பார்.நான் தான் மெல்ல மெல்ல மசிந்து மசிந்து அண்ணை இப்ப காசில்லை உங்கடை தம்பி முத்துகுமாரு தான் இஞ்சை அனுப்பினவர்.கோபப்படப் போகிறார் என்று எதிர்பார்த்தா பெலத்து சிரித்துக் கொண்டு அதுதானே அங்கையிருக்கிற கடையெல்லாம் விட்டுட்டு இஞ்சை கொண்டாந்திருக்கிறாங்களே என்று பார்த்தேன்.

                               சரி சரி கொண்டு வாங்கோ என்று திருத்தித் தந்தார்.(கூலி சரியாக நினைவில்லை ஓரிரு ரூபா தான்) அடுத்த நாளே அவருக்கு காசைக் கொடுத்துவிட்டோம்.அங்கேயே சைக்கிள் வாடகைக்கு விடுவதாக சொன்னார்.பிற்பாடு தேவையான நேரங்களில் அவரிடமே வாடகைக்கு சைக்கிள் எடுப்போம்.இதுவே நாளடைவில் அங்கேயே ஒரு எக்கவுணட்டும் திறந்தாச்சு.

                                நாள் போகப் போக அண்ணையாக இருந்த அப்பு ஒருமையில் கதைக்கப் பழகிக் கொண்டேன்.எனது 90 வீதம் நண்பர்கள் என்னைவிட 2 வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருந்தனர்.எத்தனை வயது கூடு என்றாலும் எல்லோருடனும் ஒருமையிலேயே கதைக்கப் பழகிக் கொண்டேன்.இதை எனது தகப்பனார் பல முறை எச்சரித்திருந்தார்.

                              ஒருநாள் பாடசாலை போன போது சிஐடி வந்து நாலு பேரை பிடித்துக் கொண்டு போட்டாங்கள்.அதில ஒராள் லேடிஸ் கொலிச் சந்தியில் சைக்கிள்கடை வைத்திருக்கிறார்.சைக்கிள்கடைக்குள் கைக்குண்டுகள் இருந்தாம் என்று சொன்னார்கள்.பின்னர் தான் தெரிந்தது யாழ்ப்பாணமே இந்த கைதால் அதிர்ந்து போனது.

                             மெதுவாக முத்துக்குமாரிடம் அப்புவாடா என்று கேட்க கண் கலங்கிவிட்டார்.அண்ணை அண்ணை என்று அழைத்த அப்பு அண்ணை இப்போ வெறும் அப்பு என்றே அழைப்பேன்.இப்போது தான் அவரது முழுப்பெயர் அமரசிங்கம் என்று தெரியவந்தது.

                             இவர் வேறு யாருமல்ல மாவை சேனாதிராஜா வண்ணை ஆனந்தன் இன்னொருவர் பெயர் ஞாபகம் இல்லை இவர்களுடன் பிடிபட்ட அமரசிங்கம் என்ற அப்பு தான்.

                             இந்த நால்வரும் 6-7 வருடம் சிறையிருந்தார்கள்.பின்பு எப்படி விடுதலையானார்கள் என்று தெரியவில்லை.70 களின் பின்பகுதியில் கூட்டணி மேடைகளில் பார்த்தா வெள்ளை வேட்டி வெள்ளைச் சேட்டுடன் இவர்களை இருத்தி வைத்திருப்பார்கள்.இவருக்கு மேடைப் பேச்சு அறவே வராது.வண்ணை ஆனந்தன் தான் இலுப்பைப்பழம் பழுத்துவிட்டது.முன் வரிசையில் இருப்பவர்களிடம் இலுப்பைப்பழம் பழுத்தால் என்ன வரும் வெவ்வால் வரும்.வெவ்வால் வரும் போது சும்மா வராது காலில் துவக்கு கொண்டு தான் வரும் என்றால் விசிலடிச் சத்தம் நிற்கவே ஓரிரு நிமிடமாகும்.


                            மேடையில் இருக்கிற அமரசிங்கம் என்ற அப்பு என்னோடு வாடா போடா என்று நெருங்கி பழக என்னோடு சேர்ந்தவர் சேராதவர் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.அடுத்தடுத்த கூட்டம் எங்கே என்று கேட்டு என்னைக் கூட்டிக் கொண்டு போவார்கள்.

                             இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த நால்வரும் மேடைக்கு வந்ததும் இரண்டு மூன்று பேர் ஊசியுடன் நிற்பார்கள்.பின்னால் இரத்ததிலகம் இடுவதற்கு வரிசையில் நிற்பார்கள்.எனக்கு ஒரே சிரிப்பு.என்ன மாதிரி இருந்த அப்பு இப்ப பாரடா.அட சிறை சென்றவனுக்குத் தான் அந்த மரியாதை என்றால் அவருடன் நெருங்கி பழகியதால் எனக்கு வேறை.கூட்டம் என்றால் என்னைக் கூட்டிக் கொண்டு போகவென்றே அலைவார்கள்.

                               அந்த நால்வரில் நல்ல புத்திசாலித்தனமாக நடந்து மாவை சேனாதிராஜா நல்ல இடத்துக்கு வந்திட்டார்.மற்றவர் என்னவானார்களோ தெரியாது.
முற்றும்.
ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்  காசி ஆனந்தனுக்கும்   வண்ணை  ஆனந்தனுக்கும்  பொட்டு வைத்திருக்கின்றேன்

வண்ணை  ஆனந்தன்  யேர்மனியிலிருந்து ---------  பணியை  செய்து  கொண்டிருந்தார்

தற்பொழுது  எங்கே  என்று  தெரியவில்லை

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

வண்ணை  ஆனந்தன்  யேர்மனியிலிருந்து ------- ------  பணியை  செய்து  கொண்டிருந்தார்

ஜேர்மனியில் இருந்து யாழ் ஒற்றர்படை வந்தால் தெரிந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

நானும்  காசி ஆனந்தனுக்கும்   வண்ணை  ஆனந்தனுக்கும்  பொட்டு வைத்திருக்கின்றேன்

வண்ணை  ஆனந்தன்  யேர்மனியிலிருந்து ------ ------ பணியை  செய்து  கொண்டிருந்தார்

தற்பொழுது  எங்கே  என்று  தெரியவில்லை

தொடருங்கள்

நான் சம்பந்தனுக்கு இரத்தத்திலகம் வைச்சனான். பிளேட் எடுத்து விரலை கீறும் போது  ஏன் தம்பி என்னத்துக்கு இதெல்லாம் எண்டு சரியாய் கவலைப்பட்டவர்.☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

நான் சம்பந்தனுக்கு இரத்தத்திலகம் வைச்சனான். பிளேட் எடுத்து விரலை கீறும் போது  ஏன் தம்பி என்னத்துக்கு இதெல்லாம் எண்டு சரியாய் கவலைப்பட்டவர்.☹️

அப்பவே அவருக்கு தெரியும் உதெல்லாம் வீண்வேலை என்று.அதை நினைத்து தான் சொல்லியிருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

                             யாழ் இந்துவில் மழைக்கொதுங்கிய வேளை எட்டாம் வகுப்பிலேயே ஒரு பாடம் இரண்டு பாடம் என்று நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது.யாரிடமாவது சைக்கிள் இரவல் வாங்கிறது.இரண்டு மூன்று பேர் சேர்ந்து கீரிமலை சேந்தாங்குளம் பண்ணை வெள்ளைக் கடற்கரை இப்படி எங்காவது திரிவது.

அப்ப நாங்கள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா? 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

அப்ப நாங்கள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா? 😄

இல்லாட்டி அகதிகளா நாடுநாடா அலைவோமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

நான் சம்பந்தனுக்கு இரத்தத்திலகம் வைச்சனான். பிளேட் எடுத்து விரலை கீறும் போது  ஏன் தம்பி என்னத்துக்கு இதெல்லாம் எண்டு சரியாய் கவலைப்பட்டவர்.☹️

 

நீங்களும் அவருக்கு இரத்த பொட்டு இட்டு விட்டு இங்க ஓடி வந்து விட்டீங்கள்😂 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

-------இவர் வேறு யாருமல்ல மாவை சேனாதிராஜா வண்ணை ஆனந்தன் இன்னொருவர் பெயர் ஞாபகம் இல்லை இவர்களுடன் பிடிபட்ட அமரசிங்கம் என்ற அப்பு தான்.

 -------அந்த நால்வரில் நல்ல புத்திசாலித்தனமாக நடந்து மாவை சேனாதிராஜா நல்ல இடத்துக்கு வந்திட்டார்.மற்றவர் என்னவானார்களோ தெரியாது.

 

6 hours ago, விசுகு said:

வண்ணை  ஆனந்தன்  யேர்மனியிலிருந்து ------- --------பணியை  செய்து  கொண்டிருந்தார்

தற்பொழுது  எங்கே  என்று  தெரியவில்லை

ஈழப்பிரியன் எழுதிய  கதையின்... முழுப் பகுதியும், 
 மாணவப் பருவத்தில்  பழகிய நன்கு பரிச்சயமான இடங்கள்.
அதனால் இக்கதையை... ரசித்து வாசித்தேன். நன்றி.

வண்ணை ஆனந்தனை,  1981 களில் ...   ஜேர்மனியில் ----- என்ற இடத்தில், பலர் கண்டதாகவும்,
அதிக போதைப் பழக்கமும் இருந்ததாகவும் சொல்வார்கள்.
அதற்குப் பின்... அவரைப் பற்றிய தகவல்கள் ஒன்றும் கேள்விப் படவில்லை. 
இருக்கிறாரா..இல்லையா...  வேறு நாட்டிற்குப் போய் விட்டாரா தெரியாது.
இங்கு இருந்திருந்தால்... ஏதோ ஒரு வகையில், எப்படியும் செய்திகள் வந்திருக்கும்.
இல்லை என்றே நினைக்கின்றேன்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வண்ணை ஆனந்தன் தான் இலுப்பைப்பழம் பழுத்துவிட்டது.முன் வரிசையில் இருப்பவர்களிடம் இலுப்பைப்பழம் பழுத்தால் என்ன வரும் வெவ்வால் வரும்.வெவ்வால் வரும் போது சும்மா வராது காலில் துவக்கு கொண்டு தான் வரும் என்றால் விசிலடிச் சத்தம் நிற்கவே ஓரிரு நிமிடமாகும்.

வண்ணை ஆனந்தன்ரை பேச்சு கேக்கிறதுக்கெண்டே கூட்டம் அலைமோதும். அனல்,கனல் எல்லாம் பேச்சுலை பறக்கும்.

சிங்களவன்ரை பெயரை வாசிக்க கல்லு றோட்டிலை வண்டில் போற சத்தம் மாதிரி இருக்கும் எண்டு........அவர்ரை மேடைப்பேச்சுக்கள் இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

 

நீங்களும் அவருக்கு இரத்த பொட்டு இட்டு விட்டு இங்க ஓடி வந்து விட்டீங்கள்😂 
 

அந்த நேர பேச்சு எப்படி எல்லாம் இளைஞர்களை இரத்தம் சிந்த வைத்தது.
நல்லகாலம் நீங்க கேக்கல்ல.

5 minutes ago, குமாரசாமி said:

வண்ணை ஆனந்தன்ரை பேச்சு கேக்கிறதுக்கெண்டே கூட்டம் அலைமோதும். அனல்,கனல் எல்லாம் பேச்சுலை பறக்கும்.

சிங்களவன்ரை பெயரை வாசிக்க கல்லு றோட்டிலை வண்டில் போற சத்தம் மாதிரி இருக்கும் எண்டு........அவர்ரை மேடைப்பேச்சுக்கள் இருக்கும்...

உண்மை தான்.வண்ணையின் பேச்சுக்கென்றே கூட்டமும் விசிலடியும் இரத்தத் திலகமிட வரிசைகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன் எழுதிய  கதையின்... முழுப் பகுதியும், 
 மாணவப் பருவத்தில்  பழகிய நன்கு பரிச்சயமான இடங்கள்.
அதனால் இக்கதையை... ரசித்து வாசித்தேன். நன்றி.

நாங்கள் பழகிய இடங்கள்.
ஆனால் சுவியர் பிறந்து வளர்ந்த இடம்.

30 minutes ago, தமிழ் சிறி said:

வண்ணை ஆனந்தனை,  1981 களில் ...   ஜேர்மனியில் ----- என்ற இடத்தில், பலர் கண்டதாகவும்,

போன உடனேயே அகதி அந்தஸ்தும் கிடைத்திருக்கும்.நல்ல காசும் புழங்கியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரதி said:

 

நீங்களும் அவருக்கு இரத்த பொட்டு இட்டு விட்டு இங்க ஓடி வந்து விட்டீங்கள்😂 
 

 நீங்கள் சொன்ன விடயம் சம்பந்தமாக நீண்டகாலம் என் மனதை உறுத்தியதும் பெரிய கவலையுமாக இருந்தது.

ஆனால் இன்று ஈழத்தமிழர்களுக்கு இவ்வளவு நடந்தும் அல்லது ஒடுங்கியும்/ஒடுக்கப்பட்ட பின்னரும் சிங்களத்தின் கோரமுகம் அப்படியே அன்று போல் இன்றும் இருக்கின்றது. எமது அரசியல் தலைவர்களை ஏதோ ஒருவகையில் ஊதாசீனம் செய்த வண்ணமே இருக்கின்றார்கள்.அல்லது ஏதோ ஒரு வகையில் தமிழினம் சம்பந்தப்பட்ட ஒருவரை வளைத்துப்போட்டு சகலதையும்  உலகளாவிய ரீதியில் தாம் விரும்பியதை சாதித்து  முடிக்கின்றனர்.

கடந்த 30 நாட்களின் இலங்கை சம்பந்தப்பட்ட செய்திகளை பார்த்தாலே சிறு பிள்ளைக்கும் புரியும்.

இதை சேர்.பொன் ராமநாதன் காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டார்கள்.

நான் சொல்ல வருவது என்னவெனில்......

புலம்பெயர் தமிழர்களின் பலம் சிங்களத்திற்கு நன்றாகவே தெரியும். ஆதலால் இன்னொரு யூலை வந்தால் அதன் விளைவும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ஆகையால் இன்றைய இலங்கை அரசியலை பொறுத்த வரை புலம்பெயர் தமிழன் ஒரு வைரக்கல்.

பாதுகாப்பாக இருந்து பேசும் பலம் அவனிடம் நிறையவே வந்து விட்டது.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு அந்த அயலை சேர்ந்தவர்தான்.அவரது கடையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் வரை யாருக்கும் எதுவும் தெரியாது.பழகுவதற்கு இனிமையானவர்.பின்பு கட்சி கூட்டங்கள் என்று பிசியாகி விட்டார்.அப்போது நீராவியாடியில் ஒரு விளையாட்டு ரீம் இருந்தது.அவர்கள் எங்கள் ரீமுடன் வந்து மாட்ச் விளையாடுவார்கள். விளையாட்டு முடிந்ததும் எல்லோரும் இருக்கிற காசு போட்டு ரோஸ்சும் ரொட்டியும் பிளவ்ஸில் வாங்கி சாப்பிடுவோம். (அப்ப அதெல்லாம் வீட்டுக்கு தெரியாமல் மாட்டிறைச்சி சாப்பிட்டது).....!  😁

என்ன பழைய நினைவெல்லாம் கிண்டுறீங்கள் ஈழப்பிரியன்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

என்ன பழைய நினைவெல்லாம் கிண்டுறீங்கள் ஈழப்பிரியன்....!

உங்கள் கருத்துக்கு நன்றி சுவி.
இதைப்பற்றிய ஞாபகமே இல்லை.ஆனால் உங்களின் கதையில் சிறி பதிலெழுதும் போது ஏதோ ஒரு சைக்கிள்கடையைத் தெரியுமா என்று கேட்டார்.
அப்போது தான் அப்புவின் சைக்கிள்கடை ஞாபகம் வந்தது.
அந்த நால்வரின் கைதும் அந்தநேரம் பெரிதாக பேசப்பட்டதும் விடுதலையாகிவர அரசியலுக்குள் உள்வாங்கப்பட்ட விதமும் நினைத்தே எழுதினேன்.
மீண்டும் நன்றி.

4 hours ago, suvy said:

அப்பு அந்த அயலை சேர்ந்தவர்தான்.அவரது கடையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் வரை யாருக்கும் எதுவும் தெரியாது.பழகுவதற்கு இனிமையானவர்.பின்பு கட்சி கூட்டங்கள் என்று பிசியாகி விட்டார்.அப்போது நீராவியாடியில் ஒரு விளையாட்டு ரீம்

வேறு யாரோ கொண்டுவந்து வைத்த இடத்தில்த் தான் இவர் மாட்டுப்பட்டதாக தம்பியார் கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவில் நின்றதை வாசித்து மகிழ்ந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

நினைவில் நின்றதை வாசித்து மகிழ்ந்தேன்.

70 க்கு பின் பிறந்தவர்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை.இருந்தும் மாவை இன்னமும் பிரபல்யமாக இருப்பதால் முற்றாக ஒதுக்கிவிட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • ஈழப்பிரியன்அண்ணா ,இது போன்ற பல மலரும் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் 
21 hours ago, குமாரசாமி said:

 நீங்கள் சொன்ன விடயம் சம்பந்தமாக நீண்டகாலம் என் மனதை உறுத்தியதும் பெரிய கவலையுமாக இருந்தது.

ஆனால் இன்று ஈழத்தமிழர்களுக்கு இவ்வளவு நடந்தும் அல்லது ஒடுங்கியும்/ஒடுக்கப்பட்ட பின்னரும் சிங்களத்தின் கோரமுகம் அப்படியே அன்று போல் இன்றும் இருக்கின்றது. எமது அரசியல் தலைவர்களை ஏதோ ஒருவகையில் ஊதாசீனம் செய்த வண்ணமே இருக்கின்றார்கள்.அல்லது ஏதோ ஒரு வகையில் தமிழினம் சம்பந்தப்பட்ட ஒருவரை வளைத்துப்போட்டு சகலதையும்  உலகளாவிய ரீதியில் தாம் விரும்பியதை சாதித்து  முடிக்கின்றனர்.

கடந்த 30 நாட்களின் இலங்கை சம்பந்தப்பட்ட செய்திகளை பார்த்தாலே சிறு பிள்ளைக்கும் புரியும்.

இதை சேர்.பொன் ராமநாதன் காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டார்கள்.

நான் சொல்ல வருவது என்னவெனில்......

புலம்பெயர் தமிழர்களின் பலம் சிங்களத்திற்கு நன்றாகவே தெரியும். ஆதலால் இன்னொரு யூலை வந்தால் அதன் விளைவும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ஆகையால் இன்றைய இலங்கை அரசியலை பொறுத்த வரை புலம்பெயர் தமிழன் ஒரு வைரக்கல்.

பாதுகாப்பாக இருந்து பேசும் பலம் அவனிடம் நிறையவே வந்து விட்டது.


 

இப்படித் தான் புலிகள் இருக்கும் போது அவர்கள் தலையில் பொறுப்பை இறக்கி வைத்து விட்டு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்டார்கள்...இப்ப புலம் பேர் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறீர்கள் 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இப்படித் தான் புலிகள் இருக்கும் போது அவர்கள் தலையில் பொறுப்பை இறக்கி வைத்து விட்டு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்டார்கள்...இப்ப புலம் பேர் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறீர்கள் 🤔

பார்த்துக் கொள்வார்கள் என்று விட்டாலே போதும்.வெளியே இருந்து கொண்டு எவ்வளவு நையாண்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு சைக்கிள் கடைக்கு பக்கத்தில், சிவலோகநாதன் என்பவர் பலசரக்கு கடை வைத்திருந்தார்....

நல்ல மனிதர்.... வேறு விடயங்களில் பலவீனமானவர்.... ஒரு வடிக்கையாளரான பெண்ணுக்கும் அவருக்கும் தொடுப்பு.... கடைக்கு பின்னால் ஒதுங்க, வந்த பெடியள் கடை, திறந்திருக்கு, ஆளைக் காணவில்லை என்று தேட, பெடியள் பின்னால வரபோகினம் எண்டு, பின்னால் இருந்து அவர் ஓடி வர, பின்னால் பெண்ணும் வர... பெடியளுக்கு விளக்கீட்டுது..

பிறகென்ன.... இனிப்பு போத்தலுக்க கையை போடுவதும், சாமானை எடுக்கிறதும், அண்ணை, கணக்கில போடுங்கோ... எண்டு கடைசீல, கடையை பூட்டி, சொந்த மனிசியின்ர கண்ட்ரோலில் கந்தர்மடம் சந்தில கடையை மூவ் பண்ணி,  குடும்பம் கடை பின்னால் இருந்ததால், அப்பாவி மாதிரி குந்தி இருந்தார்.

மனிசி கல்லாவில் விறைப்பாக நிக்க, பெடியள் அங்க கணக்கு வைக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

இப்படித் தான் புலிகள் இருக்கும் போது அவர்கள் தலையில் பொறுப்பை இறக்கி வைத்து விட்டு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்டார்கள்...

6 hours ago, ரதி said:

இப்ப புலம் பேர் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறீர்கள் 🤔

இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அப்பு சைக்கிள் கடைக்கு பக்கத்தில், சிவலோகநாதன் என்பவர் பலசரக்கு கடை வைத்திருந்தார்....

நல்ல மனிதர்.... வேறு விடயங்களில் பலவீனமானவர்.... ஒரு வடிக்கையாளரான பெண்ணுக்கும் அவருக்கும் தொடுப்பு.... கடைக்கு பின்னால் ஒதுங்க, வந்த பெடியள் கடை, திறந்திருக்கு, ஆளைக் காணவில்லை என்று தேட, பெடியள் பின்னால வரபோகினம் எண்டு, பின்னால் இருந்து அவர் ஓடி வர, பின்னால் பெண்ணும் வர... பெடியளுக்கு விளக்கீட்டுது..

பிறகென்ன.... இனிப்பு போத்தலுக்க கையை போடுவதும், சாமானை எடுக்கிறதும், அண்ணை, கணக்கில போடுங்கோ... எண்டு கடைசீல, கடையை பூட்டி, சொந்த மனிசியின்ர கண்ட்ரோலில் கந்தர்மடம் சந்தில கடையை மூவ் பண்ணி,  குடும்பம் கடை பின்னால் இருந்ததால், அப்பாவி மாதிரி குந்தி இருந்தார்.

மனிசி கல்லாவில் விறைப்பாக நிக்க, பெடியள் அங்க கணக்கு வைக்க முடியவில்லை.

நன்றி நாதம்.
கந்தர்மட சந்தியில் இருந்து இந்து மகளீர் பாடசாலைப் பக்கம் செல்லத்துரை மாஸ்ரர் என்பவர் பெரியதொரு ரியூசன் வகுப்பு நடாத்தியவர் தெரியுமா?
69-70 களில் அவரிடமும் வீட்டார் அனுப்பியிருந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நன்றி நாதம்.
கந்தர்மட சந்தியில் இருந்து இந்து மகளீர் பாடசாலைப் பக்கம் செல்லத்துரை மாஸ்ரர் என்பவர் பெரியதொரு ரியூசன் வகுப்பு நடாத்தியவர் தெரியுமா?
69-70 களில் அவரிடமும் வீட்டார் அனுப்பியிருந்தனர்.

கேள்விப்பட்டிருக்கிறேன், பெரியண்ணர் போனவர். நான் சொன்ன கதை, அவற்ற சிநேகிதர் சொன்னது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

70 களில் இந்த இரத்தத்திலகம் இடுவது ஒரு பெரிய புரட்சியாக இருந்திருக்கு. இஞ்ச பார்றா எங்கட யாழ்க்கள செம்பட்டைகளும் கியூவில நிண்டதை🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 4:45 AM, வல்வை சகாறா said:

70 களில் இந்த இரத்தத்திலகம் இடுவது ஒரு பெரிய புரட்சியாக இருந்திருக்கு. இஞ்ச பார்றா எங்கட யாழ்க்கள செம்பட்டைகளும் கியூவில நிண்டதை🤣

அந்த நேரம் கூட்டங்களுக்கு பெண்களையே காணமுடியாது.இல்லை என்றால் நீங்களும் அடித்துபிடித்து வந்திருப்பீர்கள்.

என்ன நம்ம தலைவன் வரல்லை என்றால் இன்னமும் அடுப்பு ஊதலோ தெரியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.