Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தாக்குதலிற்கு உரிமை கோரியது ஐஎஸ்

Featured Replies

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட்  செய்தி வெளியிட்டுள்ளது

ஐஎஸ் அமைப்பின் அமாக்  பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ் அமைப்பின் போர்வீரர்கள் என அமாக் தெரிவித்துள்ளது

அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரஜைகளையும் இலக்குவைத்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/54510

’நாமே இலங்கையில் குண்டுகளால் தாக்கினோம்’ உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ்! கடும் அதிர்ச்சியில் உலக நாடுகள்!!

இலங்கையில் தாமே தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியது.

இந்த தகவலை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ செய்தி முகவரமைப்பான AMAQ அறிவித்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் அந்த செய்து அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் இதனை ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரங்களை இன்னமும் வெளியிடவில்லை என்றும் ரொய்டர் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவர்களின் மிக முக்கிய நாளான உயிர்த்த ஞாயிறு அன்று சிறிலங்கா தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து ஆறு தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

இந்தத் தாக்குதல்களில் இதுவரை 321 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில், தேசிய தாவீத் ஜமாத் என்ற உள்ளூர் கடும்போக்கு முஸ்லீம் அமைப்பொன்றே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டதாக சிறிலங்கா அரசாங்கமும், படையினரும் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஐ.எஸ் என்ற சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் சில பிரதேசங்களை இஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தி இயங்கிவரும் ஐ.எஸ் என்ற இஸ்லரிய ஆயுதக் குழு தாங்களே சிறிலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாக உரிமை கோரியிருக்கின்றது.

ஐ.எஸ் ஆயுததாரிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளமாக ஹமாக் இதனை அறிவித்துள்ளது. எனினும் இந்தத் தாக்குதல்களை அவர்கள் எவ்வாறு மேற்கொண்டனர் என்பதை உறுதிப்படுத்தப்படுத்தக் கூடிய எந்தவொரு தகவல்களும் வெளியிடப்படவில்லை.

எவ்வாறாயினும் நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களை இலக்கு வைத்து நடத்தப்படட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பழி தீர்க்கும் வகையிலேயே சிறிலங்காவில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச்சிலுள்ள இஸ்லாமியர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும் கிறைஸ்சேர்ச் தாக்குதலுக்கும் – சிறிலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கக்கூடிய எந்தவொரு விபரங்களையும் சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/118437?ref=bre-news

  • தொடங்கியவர்

"இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது" - அமைச்சர் ரூவன் விஜயவர்த்தனே

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாகவே நடத்தப்பட்டிருக்கிறது என்று இலங்கையின் பாதுகாப்பு துணை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத்தும், மற்றொரு இஸ்லாமியவாதக் குழுவான ஜே எம் சி-யும் இணைந்து இத்தாக்குதலை தாக்குதலை நடத்தியிருக்கின்றன என்று அவர் தமது நாடாளுமன்ற உரையில் தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பான மேற்கொண்டு எந்தவித தகவலையும் அவர் அளிக்கவில்லை.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில், பாதுகாப்புத் துறை ராஜீய அமைச்சரும், பிரதமருமே பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள். ஆனால், இத்தகைய தாக்குதல் நடக்க இருப்பது தொடர்பாக கிடைத்த தகவல்கள் பாதுகாப்புத் துறை துணை அமைச்சரான (ராஜீய அமைச்சர்) தம்மிடமும், பிரதமரிடமும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை என்று அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனிடையே இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குழு (ஐ.எஸ். குழு) இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தமது ஊடகப் பிரிவு மூலம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்றிருப்பதை சற்று கவனமாக அணுகவேண்டும் என்று இலங்கையில் உள்ள ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார். "வழக்கமாக தாக்குதல் நடந்த உடனே, தாக்குதல் நடத்தியவரின் புகைப் படத்தை தமது ஊடகத் தளமான 'அமாக்'கில் வெளியிட்டு பொறுப்பேற்பதே ஐ.எஸ். குழுவின் வழக்கம்" என்று அவர் கூறுகிறார்.

தற்போது இந்த தாக்குதல் தொடர்பாக மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிரியாவை சேர்ந்தவர் ஒருவரும் அடக்கம். உள்ளூர் சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்பு

இலங்கையில் அவசர நிலை அமலில் இருக்கும் நிலையில் இன்று மதியம் நாடாளுமன்றம் கூடியது.

அப்போது பேசிய சபாநாயகர் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

பாதுகாப்பு தரப்பில் இருந்து இந்த தகவல்கள் வந்ததாகவும், நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்லாது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு தேவை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48023635

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐ எஸ் இஸ்லாமிய மதப் பயங்கரவாதிகளின் படங்களை ஐ எஸ் பயங்கரவாத அமைப்பு அதன் பிரச்சார ஊடகம் ஊடாக வெளியிட்டுள்ளதாக.. பிரித்தானிய மிரர் ஊடகம் படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.mirror.co.uk/news/world-news/breaking-isis-release-picture-sri-14478035

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

 

ஆளுக்கு  72 பேரோட, சரியான பிஸியா இருப்பினம்....
 

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் நடத்தியோரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்

தலைநகர் கொழும்பு உட்பட  நாட்டில் நடத்தப்ப்ட்ட  8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ள நிலையில் அந்த அமைப்பினர் குறித்த தாக்குதலை மேற்கொண்ட 7 ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

isis.jpg

அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது.

5108534479431379201.jpg

4263086595842077274.jpg

http://www.virakesari.lk/article/54536
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

ஆளுக்கு  72 பேரோட, சரியான பிஸியா இருப்பினம்....
 

அதெல்லாம் இருக்கட்டும் உதில பின்னுக்கு ஒருத்தர் மறைந்து இருக்கிறார். வீடியோவில் அவர் தெரியவில்லை. ஆனால் படத்தில நிக்கிறார் 8 வது ஆள் ஒருத்தர்...அவர் உப்ப எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

அதெல்லாம் இருக்கட்டும் உதில பின்னுக்கு ஒருத்தர் மறைந்து இருக்கிறார். வீடியோவில் அவர் தெரியவில்லை. ஆனால் படத்தில நிக்கிறார் 8 வது ஆள் ஒருத்தர்...அவர் உப்ப எங்கே?

ஜெர்மனி போய் அசைலம் அடிக்கப் போறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, போல் said:

’நாமே இலங்கையில் குண்டுகளால் தாக்கினோம்’ உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ்! கடும் அதிர்ச்சியில் உலக நாடுகள்!!

உந்த ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தை ஆரம்பிச்சு வைச்சதே அமெரிக்கா எண்டுதானே முந்தி கனபேர் கதைச்சவையள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

உந்த ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தை ஆரம்பிச்சு வைச்சதே அமெரிக்கா எண்டுதானே முந்தி கனபேர் கதைச்சவையள்.

சிஐஏ யின் வேலை தான் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

சிஐஏ யின் வேலை தான் என்ன?

ஏன் சிஐஏ யே ஐஎஸ்சை துவக்கி வைச்சது?

  • கருத்துக்கள உறவுகள்

58381805_10211331910573272_4151893147867

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nunavilan said:

58381805_10211331910573272_4151893147867

இவர்கள் அவ‌ர்கள் அல்ல என்று யாராவது வந்து சொன்னாலும் சொல்லுவினம்

2 hours ago, putthan said:

இவர்கள் அவ‌ர்கள் அல்ல என்று யாராவது வந்து சொன்னாலும் சொல்லுவினம்

 

இவர்கள் அவர்கள் அல்ல என்று ஐஎஸ் அறிக்கை விடும்வரை மழுப்பியத சிங்கள அரசுதான்.. உள்ளுர் இஸ்லாமிய அமைப்புகள் தான் செய்தது என்றும் வெளியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்கு தெடர்பிருப்பதாக தெரியவில்லை என்றுதான் இங்கை அரசு முடிந்தவரை இந்த தாக்குதல் குறித்து மழுப்பப்  பார்த்தது. ஆனால் இப்போது அறிக்கையும் வீடியோவும் வெளியிட்டு விட்டார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தாக்குதலில் தெடர்புடைய இஸ்லாமிய அமைப்பினர் இலங்கை இராணுவத்தில் இருந்தமை, புலனாய்வுதுறையில் இருந்தமை, இலங்கை அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்தமை. என பல இருக்கலாம். இந்த இஸ்லாமிய தீவிராதத்துடன் சிங்கள பேரினவாதம் ஏதோ ஒரு விதத்தில் சம்மந்தப்படுகின்றது. அதுதான் இங்கு மிகப் பிரதானமானது.  தாக்குதலோடு தொடர்புடையவர்களின் பெயர் முகவரி தொலைபேசி இலக்கம் மேலும்  அவர்கள் எங்கு தாக்கப் போகின்றார்கள் என்ற இலக்கு உட்பட அனைத்தும் ஏற்கனவே தெரிந்திருந்தும் இந்த தாக்குதலை ஏன் சிங்களம் தடுக்கவில்லை என்பதுதான் தற்போதைய கேள்வி.   ஒரு வேளை இந்திய தூதரக தாக்குதலை உள்ளால கதைத்து தடுத்துவிட்டார்களோ தெரியாது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, சண்டமாருதன் said:

இஸ்லாமிய அமைப்பினர் இலங்கை இராணுவத்தில் இருந்தமை, புலனாய்வுதுறையில் இருந்தமை, இலங்கை அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்தமை. என பல இருக்கலாம். இந்த இஸ்லாமிய தீவிராதத்துடன் சிங்கள பேரினவாதம் ஏதோ ஒரு விதத்தில் சம்மந்தப்படுகின்றது.

ஐக்கிய இலங்கை என்ற சொல்லை பாவித்தே பல தீவிரவாத செயல்களை செய்துள்ளனர்...சிங்களம் பிரிவினை என்றால் கசக்கும் ஐக்கியம் என்றால் இனிக்கும் என கனவு கண்டு கொண்டிருக்கும் பொழுது...மதவாதிகள் ஆப்பை இருக்கிவிட்டனர்... 

இந்த பேரினவாதிகள் இன்னும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களையோ எனையோரை விசாரிக்க முன்வரவில்லை .....அப்பாவிகளை பிடித்து விசாரித்து போட்டுத்தள்ளுவார்கள்....அந்த அமைப்பை கூட தடை செய்யவில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

Image result for mccain with isis leader

 

Image result for mccain with isis leader

ஐஸ்ஸ் என்பது மழைக்கு வந்த ஈசல் அல்ல ...
அப்படித்தான் திடீரென வந்தாலும் பல  அரசுகளின் 
குறிப்பாக இஸ்ரேல் நாட்டின் நீண்ட வடிவைப்பில் வந்ததாகும்.

இதில் சேரும் முஸ்லீம் இளைஞர்களும் பலியாடுகள்தான் 
நாடுகளில் பஞ்சம் பொருளாதார தடை போன்றவற்றை உருவாக்கி 
இளைஞர்களை வேலை இல்லாதவர்கள் ஆக்குவது பின்பு சவூதி மூலம் 
குன்டுகள் வீசி அவர்களை கொடிய கோபத்துக்கு ஆள் ஆக்குவது 
பின் பெருத்த இஸ்லாமிய மத போதகர்கள்போல் உருவாக்கி வைத்திருக்கும் 
ஆட்களை அனுப்பி மூளையை தற்கொலைதாரியாகும் வரை கழுவி ஊதுவது. 

யார் மிக தீவிர இஸ்லாமிய போக்கு மன அழுத்தம் போன்றவர்களாக 
இருக்கிறார்கள் என்ற விபரங்களை பேஸ்புக்   கூகிள்  ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் 
சி ஐ எ வுக்கு தகவல் கொடுக்கும். 
நான் இங்கு எழுதி பதியும் ஒவ்வரு கருத்தும் உடனடியாகவே ஆங்கிலத்தில் மொழியாக்கி 
கூகிளால் சேமிக்கபடுகிறது. ஓவருவருவரின் அசைவுகளும் நகர்வுகளும் நீங்கள் தொலைபேசி 
கையில் வைத்த்திருந்தால் ஜிபிஸ் மூலம் கண்காணித்து சேமிக்க படுகிறது. 
சில வருடம் முன்பு நான் இங்கு ஒரு பதிவை எழுதினேன் ..... நீங்கள் ஒரு ஸ்மார்ட் போனை கையில் 
வைத்திருந்தால் உங்களுக்கு தெரியாமலே உங்கள் போனில் இருக்கும் மைக்கை ஆன் செய்து நீங்கள் 
இருக்கும் அறையில் நடக்கும் சம்பாஷணையை அப்படியே கேட்க்கிறார்கள் என்று. அதுக்கு அவுசில் இருக்கு 
ஒருவரும் இன்னும் சிலரும் பல் இளித்தனனர் ..... நான் என்க்ரிப்ட் பண்ணி வைத்திருக்கிறேன் கிளிக்கிறேன் என்று  பதில் எழுதினார்கள். டெக்னாலஜி எங்கு இருக்கிறது இவர்கள் என்ன சிறுபிள்ளைத்தனமாக 80ஆம் ஆண்டுபோல்  என்க்ரிப்ட் பற்றி பேசுகிறார்கள் என்று யோசித்தேன். பின்பு சில வருடம் கழித்து யாரோ அதை செய்தியாக  இங்கே இணைத்திருந்தார். 

இப்போது நீங்கள் டிவி வாங்க போனால் குப்பை மலிவில் மிகவும் தரம் வாய்ந்த டிவிகளை 
வாங்க முடியும் ... டிவி தயாரிப்பாளர்களுக்கு எப்படி கட்டுப்படி ஆகிறது? என்று யாரவது யோசித்து 
இருக்கிறீர்களா? இப்போ சம்சுங் ல்ஜி போன்ற நிறுவனங்களுக்கு உங்களுக்கு இலவசமாக தந்தாலே 
கட்டுப்படியாகும் ஆனால் மக்கள் ஊர்வலம் அது இது என்று அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்றுதான் மலிவு விலையில் தருகிறார்கள். அவர்களது இலக்கு தமது டிவியை உங்கள் லிவிங் அறைக்கு அனுப்பி வைப்பதுதான். டிவி விற்பனையில் பணம் பார்ப்பது கடினம் சேகரிக்கும் டேட்டாவில் கோடி  கோடியாக சம்பாதிக்கிறார்கள். 

இனி தலைப்புக்கு வருவோம் ...
இந்த தாக்குதல் இந்திய ராவின் உள் வீட்டு வேலை உதவியவர் மூத்தவரும் மொஸாட்டும் 
இலங்கைக்கு கிடைத்த தகவல் இப்போ வரும் ஐஸ்ஸ் உரிமை கோரல் எல்லாம் ஒரே திட்டத்தின் கீழ் 
வந்தவைதான். இலங்கைக்கு தகவல் இப்படி நடக்கலாம் இது பற்றி மேலும் அறியும்போது தெளிவாக 
தெரிவிக்கிறோம் என்றுதான் தகவல் வந்திருக்கும். இலங்கையின் ஆளுமைக்கு அவர்கள் அறியும்போது 
கூறுவர்கள்தானே என்றுதான் இருக்க முடியும். இங்கே மூன்றாவது மாங்காய் தான் இலங்கை போலீசு 
இவர்களுக்கு உதவத்தான் ..... உதவி என்ற பெயரில் அவர்கள் காலம் இறங்க போகிறார்கள். இலக்கு சீனா 
ஈரான் மீது முழுமையான பொருளதாதர தடை வரும் மே முதலாம் திகதி அமுல் ஆகிறது. சீனா எவ்ளவு எண்ணையை  பெறுகிறது எவ்வாறு கொண்டு செல்கிறது போன்ற தகவல் சேகரிக்க இலங்கை துறைமுகம் சார்ந்த அனைத்து தகவலும் தேவை ...... இப்போ உதவ வந்தவர்களுக்கு என்ன கொடுக்கிறோம் என்று தெரியாது எல்லாவற்றையும் தூக்கி கொடுக்க இலங்கை போலீஸ் தயார். 
இங்கு சிக்கல் சீனாவுக்கு எல்லாமே தெரியும் எண்பத்துதான் .... அவர்களுக்கு சிங்கள போலீசின் ஆளுமையும் 
தெரிந்துதான் செயல்படுவார்கள்.

எங்கோ யாருக்கோ ஏகாபத்திய போட்டி 
பாவம் அப்பாவிகள் சாகிறார்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

இந்த தாக்குதல் இந்திய ராவின் உள் வீட்டு வேலை உதவியவர் மூத்தவரும் மொஸாட்டும் 
இலங்கைக்கு கிடைத்த தகவல் இப்போ வரும் ஐஸ்ஸ் உரிமை கோரல் எல்லாம் ஒரே திட்டத்தின் கீழ் 
வந்தவைதான்.

வேறு ஒருவர் பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து செய்த சதி திட்டம் என்று சொல்கிறார் ....எதை நாங்கள் நம்புவது... 

எது எப்படியோ புலிகளுக்கு பிறகு நாடு அந்த மாதிரி இருக்கு போகலாம் என்று சொன்ன எங்களுக்கு ....நாடு அந்தமாதிரி இல்லை எதுவும் எப்பவும் நடக்கலாம் ....விரும்பினால் போங்கோ என்ற செய்தியை செல்லி நிற்குதுவா.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்.. முஸ்லீம்  பெண்களின் உடைக்குள்... ஆண் கைது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, putthan said:

வேறு ஒருவர் பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து செய்த சதி திட்டம் என்று சொல்கிறார் ....எதை நாங்கள் நம்புவது... 

எது எப்படியோ புலிகளுக்கு பிறகு நாடு அந்த மாதிரி இருக்கு போகலாம் என்று சொன்ன எங்களுக்கு ....நாடு அந்தமாதிரி இல்லை எதுவும் எப்பவும் நடக்கலாம் ....விரும்பினால் போங்கோ என்ற செய்தியை செல்லி நிற்குதுவா.

கேள்விகள் தான் விடைகளை நோக்கி நகர்த்தும் ....

ஏன் செய்தார்கள்?

ஏன் இப்போது செய்கிறார்கள்?

இதனால் அடையப்போகும் நன்மை தீமை?

சேர்ச்சில் குண்டு வெடிப்பதால் சீனாவுக்கு என்ன லாபம்? 

ஐஸ்ஸ் யார் வீட்டு பிள்ளை?

காணொளிகளை பரப்புவார்கள் யார்? ஏன் பேஸ்புக் யூடூப் தடை செய்வதில்லை? 

இப்படியே நிறைய இருக்கு.... 

 

இன்னும் இரு கிழமையில் உலகில் முக்கிய விடயம் 
ஈரான் மீதான தடை.
யாரும் ஈரானிடம் இருந்து எண்ணெய்  வாங்க முடியாது 
அப்படி மீறினால்? என்ன ஆகும் என்பதையும் 
அமேரிக்க அடாவடிதனத்துக்கு வேறு விடிவே இல்லையா 
என்பதையும் வரும் கிழமை நிர்ணயிக்க போகிறது.

உலகின் எரிபொருள் விலை அதிகரிக்க போகிறது .... அதை சவூதி 
நிர்ணயிக்கும் பல பில்லியன் டொலர்களை சவூதி சம்பாதிக்க போகிறது 
இவர்களுக்கு பல பில்லியன் டொலருக்கு ஆயுத ஒப்பந்தம் செய்த அமெரிக்க 
நிறுவனங்களின் வங்கி கணக்குகள் நிறைய போகிறது. 

சீன - ரசிய - இந்தியாவில் பொருளாதார மந்தம் தோன்ற சாத்தியம் உண்டு.

சீனா பெரும்பலாலும் இலங்கை போன்ற ஒரு ரிஸ்க் ஆனா நாடுகளில்தான் முதலீடுகளை 
செய்கிறது இதில் இரண்டு லாபம் உண்டு ஒன்று வேறு யாரும் போட்டிக்கு வர மாட்டார்கள் என்பதால் 
போட்டி இல்லை ..... மற்றது வேறு யாரும் போக முடியாது என்பதால் குறித்த நாட்டு அரசுடன் பேசி மிக தூர நோக்கு லாபாத்தை குத்தகை அடிப்படையில் பெற முடிகிறது.

இதுக்கும் ஐஸ்ஸ் சை வைத்து எந்த நாட்டிலும்  ஒரு குழப்ப நிலையை எம்மால் உருவாக்க முடியும் 
என்ற செய்தி சீனாவுக்கு கொழும்பில் இருந்து அனுப்பிவைக்க பட்டிருக்கிறது.  
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

சீனா பெரும்பலாலும் இலங்கை போன்ற ஒரு ரிஸ்க் ஆனா நாடுகளில்தான் முதலீடுகளை 
செய்கிறது இதில் இரண்டு லாபம் உண்டு ஒன்று வேறு யாரும் போட்டிக்கு வர மாட்டார்கள் என்பதால் 
போட்டி இல்லை ..... மற்றது வேறு யாரும் போக முடியாது என்பதால் குறித்த நாட்டு அரசுடன் பேசி மிக தூர நோக்கு லாபாத்தை குத்தகை அடிப்படையில் பெற முடிகிறது.

ஆனால் சிறிலங்கா வல்லர‌சுகள் வந்து போகக்கூடிய நாடு என்று சீனா வுக்கு நன்றாக தெரியும் தானே....

மேற்குலகு சீனாவுக்கு செய்தி அனுப்பியிருக்கா அல்லது
சீனா மேற்குலகுக்கு செய்தி அனுப்பியிருக்கா ....

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

ஆனால் சிறிலங்கா வல்லர‌சுகள் வந்து போகக்கூடிய நாடு என்று சீனா வுக்கு நன்றாக தெரியும் தானே....

மேற்குலகு சீனாவுக்கு செய்தி அனுப்பியிருக்கா அல்லது
சீனா மேற்குலகுக்கு செய்தி அனுப்பியிருக்கா ....

சீனா ஒருபோதும் நான் ரவுடி என்று ஜெயிலுக்கு போகும் வேலையை பார்ப்பதில்லை 
அவர்கள் பொருளாதார வளர்ச்சியைத்தான் பார்க்கிறார்கள். யுத்தத்தில் பொருள் பணம் 
இழக்கும் குறுகிய எண்ணம் அவர்களுக்கு இல்லை 

அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்க அரசு இஸ்திரேல் சியோனிஸ்ட்டுக்களால் கட்டுப்படுத்த பட்டு 
வருவதால் கடந்த 30 வருட காலமாக பெரும் பொருள் இழப்பில் அமெரிக்கா யுத்தம் செய்து வருகிறது 

ஐஸ்ஸ் க்கும் சீனாவுக்கும் எந்த தொடப்பும் இல்லை 

அடுத்த வார உலக மாற்றத்தை நோக்கியே சீனா இப்போது சிந்திக்கும் 
ரசியாவுக்கு பெருத்த தலையிடி ஒருபக்கம்  எண்ணெய் விற்பனையில் இலாபம் 
மறுபக்கம்  என்பதால்  ரசியாவின் போக்கு எப்படி இருக்கும் என்பது இங்கு முக்கியம்.

குண்டுவைத்து இலங்கைக்கு வரவேண்டிய தேவை இப்போ சீனாவுக்கு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

 

குண்டுவைத்து இலங்கைக்கு வரவேண்டிய தேவை இப்போ சீனாவுக்கு இல்லை. 

போர்ட் சிற்றியை கையகப்படுத்த  ராஜாபக்ச கோஸ்டியினர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் சீனாவுக்கு இருக்கும்தானே...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

போர்ட் சிற்றியை கையகப்படுத்த  ராஜாபக்ச கோஸ்டியினர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் சீனாவுக்கு இருக்கும்தானே...

 

 
 

 

  •  
  •  
 
 

The construction of Port Cityis being funded via the largest single foreign direct investment in Sri Lankan history.  The construction of Port Cityis being funded via the largest single foreign direct investment in Sri Lankan history. Photograph: Atul Loke/Bloomberg via Getty Images

Iron cannons installed by the Dutch to ward off colonial rivals still line Galle Face Green, a grassy, mile-long promenade along the Colombo seafront. Further out to sea, within range of the guns, a new world power is leaving its mark on Sri Lanka’s capital.

Currently, Port City is just a flat expanse of blank land jutting out into the ocean, growing a fraction larger each day, as dredging ships pour what will eventually amount to 65 million cubic metres of sand.

Within a few years, however, Port City will be the site of glass skyscrapers, a busy financial district, hospitals, hotels and even a theme park. Across the world, Chinese companies are developing President Xi Jinping’s Belt and Road Initiative by building new roads, ports and bridges – but in Sri Lanka they are building a whole new metropolis.

Q&A

Cities of the New Silk Road: what is China's Belt and Road project?

Show

“It is a completely new city that will nearly double the size of Colombo right now,” says Janaka Wijesundara, a former director at Sri Lanka’s Urban Development Authority. “It is going to drastically change the entire landmass.”

Built on 665 acres (2.6 sq km) of land being reclaimed from the Indian Ocean, the city is designed to be a smaller Singapore, with its own business-friendly tax regime and regulations – and possibly a different legal system to the rest of Sri Lanka.

About 80,000 people are expected to live in the city, with another quarter of a million commuting in every day.

 

நீங்கள் தமிழ் (அரைகுறை) ஆய்வாளர்களின் கட்டுரைகளை வாசித்து 
குழம்பி இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன் 

ஸ்ரீலங்கா இப்போது சீனாவுக்கு வட்டி கூட கொடுக்க கூடிய நிலைமையில் இல்லை 
இப்போ புதிதாக ஐஎம்எப் வங்கிக்கு பொறுப்பத்திரியாக தமிழ் பெண் கீதா கோபிநாத்தை 
கொண்டுவரும்போது இவர் மூலம் சில ப்ரொஜெக்ட்டுக்களை தெற்கு ஆசியாவில் கொண்டுவர 
ஐரோப்பா முனையும் என்று எண்ணினேன் ... ஸ்ரீலங்கா கடனை பார்த்துவிட்டு அங்கு வரும் எண்ணம் இல்லை 
ஆனால் போர்ட் சிட்டியில் பல முதலீடுகளை நிச்சயம் ஐஎம்எப் முதல்கொண்டு எச்ஸ்பி போன்ற தனியார் வங்கிகள் கூட முன்னின்று செய்யும் காரணம் வரி ஏய்ப்பு (ஐஎம்எவ் க்கு அந்த தேவை இல்லை என்றாலும் 
தெற்கு ஆசியாவில் கால் ஊன்ற ஐரோப்பியா வுக்கு நல்ல சந்தர்ப்பம் தழுவ விட மாடார்கள்.

போர்ட் சிட்டி ஒப்பந்தம் 2014லேயே முடிந்து விட்ட்து 
சில குத்தகை கொடுக்கல் வாங்கலில்தான் இழுபறி இருந்து வந்தது.

இவை எமது அரைகுறை தமிழ் ஆய்வாளர் எழுத்துவதுபோல் அங்கும் இங்கும் மாறுவது அல்ல 
பல பில்லியன் டொலர் ப்ரொஜெக்ட்டுக்கள் பெரும்பாலும் (சீன) தனியார் நிறுவனங்களால் நிர்ணயிக்க படுபவை சரியான வகையில் கையெழுத்து இட்ட பின்னர்தான் ஒரு செங்கல் என்றாலும் நடுவார்கள். 

இது சிசிசிசி என்ற சீன தனியார் நிறுவனத்தால் நிறுவப்பட இருக்கிறது 
(சீன கொமேனிக்கேஷன் கொன்ஸ்ரக்சன் கொம்பனி) 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.