Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாம் தமிழர் - தேர்தல் 2019

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இல்லையே,

கடந்த முறை ஜெயலலிதா வென்ற 37, அணைத்துமே அதிமுகவினது.

இம்முறை கூட்டணி சேர்ந்த வெற்றி. தனியானதல்ல.

ஸ்ராலின் வெற்றி முதல்வராவதில் தானே உள்ளது. அதில் கோட்டை விட்டார் அல்லவா?

கடந்த முறை வெற்றியின் போதே மோடிக்கு ஜெயலலிதா தேவைப்படவில்லை. இந்த முறை அசுரவெற்றியால், ஸ்ராலின் தேவையே இல்லை.

ஆக.... வெற்றியாளர் ஸ்ராலின் அல்ல, எடப்பாடி.

ஸ்டாலின் கூட இந்த 22 இடைத் தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க முடியும் என்று நம்பியிருக்க மாட்டார், எந்த பேச்சிலும் அப்படிச் சொல்லவும் இல்லை.

ஆட்சியை கலைத்துவிட்டு அல்லது கலையவைத்து தேர்தலுக்கு போவதே ஸ்டாலினின் வியூகம்.

எனக்கு தெரிய தமிழ்நாட்டில், இடைத்தேர்தலில் வென்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக நியாபகம் இல்லை.

ஆனால் ஆட்சியை கலைப்பதில் ஸ்டாலின் ரொம்ப பிந்தங்குகிறார் என்பது உண்மையே.

இதுவே கிழவனாக இருந்தால் இப்போ எடப்பாடி அரசு கவிழ்ந்து 1 வருடம் ஆகி இருக்கும்.

ஆனால் அதிமுக வாக்கு வங்கிக்கு இந்த முறை செம அடி. நானறிய இரு பெரும் கட்சிகள் 25% க்கு கீழே போனதே இல்லை.

1991 கருணாநிதி மட்டுமே வென்ற போதே 30 வீததுக்கு மேல்தான் திமுக எடுத்தது.

19% சதவீதம் எல்லாம் எவ்வளோ அவமானம் தெரியுமா😂

  • Replies 161
  • Views 17.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரஞ்சித் said:

அப்படி ஏன் நினைக்கிறீர்கள். இங்கே பல விடயங்கள் தெரிந்த பலரும் இருக்கிறார்கள். நீங்கள் இங்கும் பேசலாம்.😊

அப்படி இல்லை, இங்கே பல விண்ணர்கள் உள்ளனர் என்பது உண்மையே, ஆனால் இங்கே அப்படிப் பட்ட விசயங்களை அலசுவது அரிதே. அதைத்தான் சொன்னேன்.

மற்றும்படி யாழ் தளம் மாமேதைகள் வந்துலாவும் இடம் என்பதில் எனக்கு கிஞ்சித்தும் மாற்றுக் கருத்தில்லை.

தவிர இஸ்ரேலை பற்றி கதைச்சா கோசான் மொசாட்காரன் என்று கிளப்பி விட்டுவாங்களோ என்ற பயமுமிருக்கு 😂.

நாதம்ஸ் கவனிக்க: கிஞ்சித்து இன்னொரு யாழ்பாணச் பேச்சு நடை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nedukkalapoovan said:

சினிமாப் பிரபல்யம் உலக நாயகன்.. காசு நாயகன்கள் எல்லாம்... தங்கள் சில பல செல்வாக்குகளை இந்தத் தேர்தலில் காட்டியும்.. தி மு க.. அதிமுக என்பன வலுவான கூட்டணிகளோடு நின்றும்..

   கமலகாசனின் திரைப்படங்களை பார்த்து வீணீர் வடிக்கும் கூட்டம் அவருக்குத்தானே வாக்களிக்கும். கமலுக்கு ஒரு கூட்டம் ரஜனிக்கு ஒரு கூட்டம் விஜய் அஜித் என்று கட்டவுட்டுக்கு பால் ஊத்தும் கூட்டதை பல வலைத்தளங்களில் அதிகமாக பார்த்திருப்பீர்கள் தானே.....அதில் கொஞ்சமாவது இங்கும் இருக்கத்தானே செய்யும்.......🤣

2 hours ago, கிருபன் said:

 ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்🤣😂

 

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

சீமான் கூடாது....வரவே கூடாது.........ஆனால் அந்தநாள்   தொடக்கம்  மூக்கு முட்ட கொள்ளையடிச்சு....கொள்ளையடிச்சு...ஜெயிலுக்கு போய் வந்தும் உத்தமர்களாக தெரிவது உங்களைப்போன்ற கண்களுக்குத்தான்.
வாழ்க ஊழல் கொள்ளை.

13 minutes ago, goshan_che said:

அப்படி இல்லை, இங்கே பல விண்ணர்கள் உள்ளனர் என்பது உண்மையே, ஆனால் இங்கே அப்படிப் பட்ட விசயங்களை அலசுவது அரிதே. அதைத்தான் சொன்னேன்.

மற்றும்படி யாழ் தளம் மாமேதைகள் வந்துலாவும் இடம் என்பதில் எனக்கு கிஞ்சித்தும் மாற்றுக் கருத்தில்லை.

தவிர இஸ்ரேலை பற்றி கதைச்சா கோசான் மொசாட்காரன் என்று கிளப்பி விட்டுவாங்களோ என்ற பயமுமிருக்கு 😂.

நாதம்ஸ் கவனிக்க: கிஞ்சித்து இன்னொரு யாழ்பாணச் பேச்சு நடை.

மாமேதைகள் உலாவும் தளத்தில் பட்டிக்காட்டானுக்கு என்ன வேலை??????

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

ஸ்டாலின் கூட இந்த 22 இடைத் தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க முடியும் என்று நம்பியிருக்க மாட்டார், எந்த பேச்சிலும் அப்படிச் சொல்லவும் இல்லை.

ஆட்சியை கலைத்துவிட்டு அல்லது கலையவைத்து தேர்தலுக்கு போவதே ஸ்டாலினின் வியூகம்.

எனக்கு தெரிய தமிழ்நாட்டில், இடைத்தேர்தலில் வென்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக நியாபகம் இல்லை.

ஆனால் ஆட்சியை கலைப்பதில் ஸ்டாலின் ரொம்ப பிந்தங்குகிறார் என்பது உண்மையே.

இதுவே கிழவனாக இருந்தால் இப்போ எடப்பாடி அரசு கவிழ்ந்து 1 வருடம் ஆகி இருக்கும்.

ஆனால் அதிமுக வாக்கு வங்கிக்கு இந்த முறை செம அடி. நானறிய இரு பெரும் கட்சிகள் 25% க்கு கீழே போனதே இல்லை.

1991 கருணாநிதி மட்டுமே வென்ற போதே 30 வீததுக்கு மேல்தான் திமுக எடுத்தது.

19% சதவீதம் எல்லாம் எவ்வளோ அவமானம் தெரியுமா😂

அவர், மோடி கவிழ்வார், காங்கிரஸ் மேலே வரும் எடப்பாடி அரசு டிஸ்மிஸ், அப்புறம் தேர்தல் என்று கணக்கு போட்டிருந்தார்.

ஆகவே இடைத்தேர்தலை விட, பாராளுமன்ற தேர்தலை நம்பினார். 

அரசனை நம்பி புரிசனை விட்ட கதை.

மாறாக, மிக துல்லியமாக, எவ்வளவு பணமும் இறைத்தாவது, இவ்வளவு சீட் வெல்ல வேணும் என திட்டம் போட்டு, சரியான தொகுதிகளை தெரிவு செய்து வென்றார் எடப்பாடி.

அவரை அசைக்முடியாது, அதேவேளை தனது வெற்றி வெறுமையானது என ஸ்ராலின் விரைவில் உணர்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் வெற்றி வெறுமையானதா இல்லையா என்பதை வெற்றிக்கு பின்னான வெற்றியாளரினதும், தோல்வியாளரினதும் அணுகுமுறையே தீர்மானிக்கும்.

மத்தியில், காங், சமாஜ்வாடி, பிஜேடி, பகுஜன்சமாஜ், மதச்சார்பற்ற ஜேடி, திரினாமூல், தெலுங்குதேசம் இப்படி பல கட்சிகளை இணைத்து தொகுதி உடன்பாடு கண்டு போட்டியிட வேண்டும் என்பதே ஸ்டாலின் போன்றோரின் நிலையாக இருந்தது. இதற்காக ராகுலே பிரதமர் என்ற அளவுக்கு விட்டுக் கொடுக்க தயாராய் இருந்தார் ஸ்டாலின். ஆனால் உபியில் காங்கிரசுக்கு 2 சீட் ஒதுக்கியது, மம்தாவின் பிரதமர் கனவு,என சில விடயங்களால் இந்த முயற்சி பலிக்கவில்லை.

கனிமொழி, திருமா, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி, ராஜ்யசபாவுக்கு வைகோ(?) என ஒரு பெரும் ஆற்றல் உள்ள படையே டெல்லிக்குப் போகிறது. கிட்டத்தட்ட மத்தியில் பிஜேபி எதிர் அரசியலின் இணைத்தலைமைய திமுக ஏற்கும் நிலை.

தமிழ்நாட்டில் பிஜேபிக்கு இருக்கும் மவுசு (!),  பிஜேபி சொல்லும் சொல்லுக்கு எடப்பாடி அரசு ஒத்தூதும் போக்கு, அத்தனையும் தமிழகத்தை அடுத்த 2 ஆண்டில் ஸ்டாலின் பக்கம் திருப்பவே வாய்ப்பு அதிகம்.

அதை ஸ்டாலின் லாவகமாக கையாள்வாரா என்பதே கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

பலரும் நினைப்பது போல் தமிழக களம் கிடையாது. இந்த தேர்தலில் வென்று பிரதமர் ஆகும் எண்ணம் நாம் தமிழருக்கு இருக்கவில்லை. அவ்வளவு ஏன். வாக்கு எண்ணப்படும் முன்னரே 5% என நாம் தமிழர் கட்சிக்காரர்களே கணித்துவிட்டார்கள். யாருக்கும் ஏமாற்றம் இல்லை. இது ஒரு நீண்டதூர ஓட்டம். பலனை அறுவடை செய்யும் காலத்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் அது நன்மை பயப்பதாக அது அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற ஆண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றார். அந்த தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகள் 3864.

அதே தொகுதியில் இந்த தேர்தலில் 13,687 வாக்குகள் நாம் தமிழருக்கு விழுந்து இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

கனிமொழி, திருமா, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி, ராஜ்யசபாவுக்கு வைகோ(?) என ஒரு பெரும் ஆற்றல் உள்ள படையே டெல்லிக்குப் போகிறது. கிட்டத்தட்ட மத்தியில் பிஜேபி எதிர் அரசியலின் இணைத்தலைமைய திமுக ஏற்கும் நிலை.

ஆஆஆஆஆஆஆஆ.ராசா கூட போகலியா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

பலரும் நினைப்பது போல் தமிழக களம் கிடையாது. இந்த தேர்தலில் வென்று பிரதமர் ஆகும் எண்ணம் நாம் தமிழருக்கு இருக்கவில்லை. அவ்வளவு ஏன். வாக்கு எண்ணப்படும் முன்னரே 5% என நாம் தமிழர் கட்சிக்காரர்களே கணித்துவிட்டார்கள். யாருக்கும் ஏமாற்றம் இல்லை. இது ஒரு நீண்டதூர ஓட்டம். பலனை அறுவடை செய்யும் காலத்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் அது நன்மை பயப்பதாக அது அமையும்.

 

25 minutes ago, இசைக்கலைஞன் said:

சென்ற ஆண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றார். அந்த தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகள் 3864.

அதே தொகுதியில் இந்த தேர்தலில் 13,687 வாக்குகள் நாம் தமிழருக்கு விழுந்து இருக்கு.

 

உங்கள் வரவிற்கு நன்றி.
இனி இங்கும் முகநூலிலும் விஷ ஜந்துக்கள் அண்டாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தவிர இஸ்ரேலை பற்றி கதைச்சா கோசான் மொசாட்காரன் என்று கிளப்பி விட்டுவாங்களோ என்ற பயமுமிருக்கு 😂.

நான் நம்பீட்டன் !!!😄

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

ஆஆஆஆஆஆஆஆ.ராசா கூட போகலியா??

போறாரே...அவர் இல்லாமலா?

 

1 hour ago, இசைக்கலைஞன் said:

பலரும் நினைப்பது போல் தமிழக களம் கிடையாது. இந்த தேர்தலில் வென்று பிரதமர் ஆகும் எண்ணம் நாம் தமிழருக்கு இருக்கவில்லை. அவ்வளவு ஏன். வாக்கு எண்ணப்படும் முன்னரே 5% என நாம் தமிழர் கட்சிக்காரர்களே கணித்துவிட்டார்கள். யாருக்கும் ஏமாற்றம் இல்லை. இது ஒரு நீண்டதூர ஓட்டம். பலனை அறுவடை செய்யும் காலத்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் அது நன்மை பயப்பதாக அது அமையும்.

பிரதமர் ஆகும் எண்ணம் ராகுல் காந்திக்கே இருக்கவில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

பிரதமர் ஆகும் எண்ணம் ராகுல் காந்திக்கே இருக்கவில்லை. 

அட்ரா..........அட்ரா.........அட்ரா.........அடி சக்கை அம்மன் கோயில் புக்கை எண்டானாம்.....:cool:

6 hours ago, கிருபன் said:

 

 

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

அட இந்த கூட்டம் இன்னும் இருக்கா? முன்பு சிலர் சில உண்மைத்தன்மையற்ற செய்திகைளை சொல்லி அதை உண்மை என்று வாதிட்டுக் கொண்டு இருப்பார்கள் .எப்படி இதை உண்மை என்று சொல்கிறாய் என கேட்டால் அவர்கள் சொல்வது இன்ரர் நெற்றில் பார்த்தது என்று அதுவும் எந்த இணையத்தளதில் இருந்து என்றும் தெரியாது ஆக அவர்களுக்கு இன்ரர் நெற்றில் இருக்கிறதெல்லாம் உண்மை என்று நம்பினார்கள். அதே மாதிரி இப்போ வாட்சப்பில் வருகிறது எல்லாம் உண்மை என்று நம்பவும் ஒரு கூட்டம் இருக்கிறது.

Edited by மறுத்தான்
பதிவு விடுபட்டு விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

தி மு க இப்படி வெல்லும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை 

வாக்குகளை களவாடி என்றாலும் 3 பா ஜா க கார்கள் தமிழகத்தில் 
வெல்லுவார்கள் என்றும் எதிர்பார்த்தேன்.

நாம் தமிழர் கட்சி முடிவு இந்தளவுக்கு நான் எதிர்பார்க்கவே இல்லை 
இது பெருத்த வெற்றியாக நான் பார்க்கிறேன்.

ராகுல் காந்தி ... இந்த நேரு குடும்பம் தோத்து தோத்து 
அரசியலை விட்டே ஓட வேண்டும் என்று எதிர்பார்த்தேன் 
கொஞ்சம் என்றாலும் நடந்தது மகிழ்ச்சி.
பிரியங்கா என்பவர் கொழுத்த அடாவடி காரி சாதாரண 
மனிதர்களை மதிக்க கூட தெரியாதவர் இந்த தேர்தலுக்கு போட்ட 
நாடங்களை பார்த்து பார்த்து வயிறு எரிந்துகொண்டு இருந்தேன்.
நேரு குடும்பத்தை புறம் தள்ளிய காங்கிரஸ் உருவாக வேண்டும் என்பதே எனது ஆசை. 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

நாம் தமிழர் கட்சியினர்  4.34 வீதமான வாக்குகளை பெற்றுக் கொண்டமையே..  வெற்றி தான்.
சீமான் முன்பு குறிப்பிட்டது போல்... தனது வாக்காளர்கள், பாடசாலையில் படித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு வாக்குப் போடும் வயது வரும் போது... தமது கட்சி ஆட் சியை பிடிக்கும் என்றார்.  அது உண்மையாகி வருகின்றது போலுள்ளது.

Edited by தமிழ் சிறி

இங்கு இருக்கும் சிலர் நாம் தமிழர் மீது திமுக காரர் அளவுக்கான காழ்ப்புணர்வை கொண்டிருக்கிறார்கள் என கருத்துக்களை பார்க்கும் போது தெரிகிறது.. நான் கூட சீமானை  நண்பர்களிடத்தில் ஓட்டோ ஓட்டென ஓட்டுவேன்..அதற்காக கண்முன் தெரியும்  அவரின் கட்சியின் வளர்ச்சியினை மறுதலிப்பது நேர்மையற்ற அணுகுமுறை ..சீமான் கட்சி வெற்றி பெறவில்லை வளர்ச்சி இருக்கிறது ..இது அவர்களின் இரண்டாவது தேர்தல் ..கமலின் ஜனவசியத்துடன் சீமானை ஒப்பிட முடியாது இருந்தும் கமலின் கட்சி வாங்கிய மொத்த ஓட்டுகளை விட சீமானின் கட்சியினர் கிட்டத்தட்ட 1 லட்சம. வாக்குகள் அதிகம் 

சீமான் கட்சியில் நின்றோர் எவரும் 10ஆயிரத்திற்கு குறைவான வாக்குகள் இல்லை கமல்கட்சியில்  ஆக்க்குறைந்த வாக்கு எண்ணிக்கை இருக்கு..

சீமானிற்கு முட்டும் கொடுக்க வேண்டாம் அவர்மேல் காழ்ப்பணர்வும் வேண்டாம் நாங்கள் பார்வையாளர்கள் தானே அவர்களின் அரசியலில் பங்காளர்கள் இல்லையே.. ஆரம்பத்தில் எல்லோரும் பிழை விடுவது உண்டு காலம்செல்ல செல்ல அவர்களாகவே திருந்தவும் சந்தர்ப்பம் உண்டு தானே..

சீமானையோ அவரின் கட்சியினையோ தவிர்த்து அல்லது தோற்கடித்து விட்டு தமிழக மக்கள் என்ன ஆபிரகாம் லிங்கனையோ அல்லது லீ குவான் யூ வையா கொண்டுவரப்போறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி தீவிர வலதுசாரிக் கட்சி. Mainstream கட்சியாக வரவேண்டுமென்றால் நடுவுக்கு வரவேண்டும். பலரை அனுசரித்துப்போகவேண்டும். அப்படி சீமான் ஒரு நிலை எடுப்பாரா தெரியாது. தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவு கொடுக்கும் கூட்டம் ஒருபோதும் ஐந்து வீதத்தைத் தேறாது!

விகிதாசார வாக்குமுறை இருக்குமட்டும் அதிமுக, திமுக போன்ற கட்சிகளுடன் கூட்டுச் சேராமல் நாம் தமிழர் கட்சி MP களையோ MLA களையோ கொண்டுவரமுடியாது.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்த 2009இல் இலண்டனில் மாவீரர் நாள் நடந்தபோது, சீமான் வானலையூடாக உரையாற்ற வர நம்ம வாலுகள் அப்ப இருந்த சோகத்திலும் அடித்த விசில் இருக்கே. அது என்னால் மறக்கமுடியாது. இந்த விசிலடிச்சான் கூட்டங்கள் மக்களின் அவலங்களைத் தீர்க்க கடந்த பத்து வருடங்களில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்தமுறை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவுக்குப் போனபோதும், அங்கு கோஷம் வைத்த ஒரு சிலர் சீமானுக்குப் பின்னால் ஒன்றுதிரளவேண்டும் என்றனர். அப்படியானவர்கள் யாழ் களத்திலும் இருக்கத்தானே வேண்டும்.😃

 

9 hours ago, கிருபன் said:

 புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான வாட்சப் பதிவை நீங்கள் இங்கு இணைத்து மேற்கோள் காட்டுவதுதான் நம்ப முடியாமல் உள்ளது. புலம்பெயர் தமிழர் வாழ்வாதராத்துக்காக பிச்சை எடுக்கும் முன்னாள் போராளிகளுக்கு கூட  பணம் அனுப்ப மறுக்கும் நிலையில் சீமானுக்கு அனுப்பினார்கள் என்று ஒரு துத்தேறி வாட்சப்பில் எழுதினால் அதை நம்புறதுக்கும் ஒரு கூட்டம் இருக்கு என்றால் இதை எல்லம் எப்படி புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை. 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சண்டமாருதன் said:

என்றுரு துத்தேறி வாட்சப்பில் எழுதினால்

அவர் என்னுடன் படித்தவார்தான்😀

ஆதாரம் இருக்கு என்று வேறு சொல்லியுள்ளார். கேட்டிருக்கின்றேன்.

8 hours ago, ரஞ்சித் said:

ஈழத்தமிழராகிய நாம், உள்நாட்டுத் தேர்தல்களைக் காட்டிலும், இந்திய - தமிழகத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்துவது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

உள்நாட்டுத் தேர்தல் முடிவுகள் எமது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கத்தை விட, இந்தியத் தேர்தல் எமது வாழ்வில் அதிக ஆதிக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு சக்தியாக கடந்த 40 வருடங்களாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா? எமது தலைவிதியை அந்நிய நாட்டு .... தீர்மானிப்பதற்கு நாம் செய்த தவறுதான் என்ன?

 

ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே.  ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து  பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்றோம். அதிகமான நிலப்பரப்பும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட தமிழகமே ஈழத்தமிழருக்கு தெரியும் நம்பிக்கை. தமிழகமும் இந்தியத்துக்குள் சிக்குப்பட்டிருப்பதால் அங்குள்ள அரசியலில் ஆர்வம் ஏற்படுகின்றது. நாம் ஈழத் தமிழர் என்பது ஒரு ஒப்பனைப் பேச்சு தவிர அதில் எந்த தனித்துவமும் கிடையாது. சற்று தனித்துவத்தை சுரண்டினால் யாழ்பாணி மட்டக்கிளப்பான் அந்த சாதி இந்த சாதி அந்த மதத்தவன் இந்த மதத்தவன் அல்லது அந்த இயக்கம் இந்ந இயக்கம் என்று வேறு எல்லைகளுக்குள் தனித்துவம் சென்றுவிடும். அதனால் இனத்துக்கென்று பொது அரசியல் கிடையாது.  ஈழத்துக்கான அரசியல் என்பது ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் என்பது மட்டும் தான். அது ஒல்லாந்தரை அண்டிப் பிழத்தாலும் சரி பின்னர் ஆங்கிலேயர்  இன்று சிங்களவர்களளை அண்டிப்பிழைத்தாலும் சரி இதுவே பாரம்பரிய அரசியல். புலிகள் இதற்கு விதி விலக்கு. அதனால் தான் புலிகளின் முடிவு இனத்துக்கான அரசியலின் முடிவாகின்றது. புலிகளின் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இனத்துக்கான அரசியலையும்  நில வளங்களை பாதுகாக்கும் பரப்புரைகளையும் முடிந்தளவு செய்வதால் அதன் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. 

சோ கால் புத்திஜீவிகள் , தேசீயத்தை குத்தகைக்கு எடுத்துவர்கள் தேசீயத் தலைவரை குத்தகைக்கு எடுத்தவர்கள் சொட்டை  நொட்டை  நையாண்டிகள் செய்துகொண்டே இருப்பார்கள் தவிர யார் சரியானவர் அல்லது எது சரியான திசை என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள் ஏனெனில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு எதுவும் இல்லை.

(இது உங்களுக்கான பதில் இல்லை, எனது கருத்துக்கு உங்கள் கருத்து வலிந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, சண்டமாருதன் said:

 

ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே.  ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து  பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்றோம். அதிகமான நிலப்பரப்பும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட தமிழகமே ஈழத்தமிழருக்கு தெரியும் நம்பிக்கை. தமிழகமும் இந்தியத்துக்குள் சிக்குப்பட்டிருப்பதால் அங்குள்ள அரசியலில் ஆர்வம் ஏற்படுகின்றது. நாம் ஈழத் தமிழர் என்பது ஒரு ஒப்பனைப் பேச்சு தவிர அதில் எந்த தனித்துவமும் கிடையாது. சற்று தனித்துவத்தை சுரண்டினால் யாழ்பாணி மட்டக்கிளப்பான் அந்த சாதி இந்த சாதி அந்த மதத்தவன் இந்த மதத்தவன் அல்லது அந்த இயக்கம் இந்ந இயக்கம் என்று வேறு எல்லைகளுக்குள் தனித்துவம் சென்றுவிடும். அதனால் இனத்துக்கென்று பொது அரசியல் கிடையாது.  ஈழத்துக்கான அரசியல் என்பது ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் என்பது மட்டும் தான். அது ஒல்லாந்தரை அண்டிப் பிழத்தாலும் சரி பின்னர் ஆங்கிலேயர்  இன்று சிங்களவர்களளை அண்டிப்பிழைத்தாலும் சரி இதுவே பாரம்பரிய அரசியல். புலிகள் இதற்கு விதி விலக்கு. அதனால் தான் புலிகளின் முடிவு இனத்துக்கான அரசியலின் முடிவாகின்றது. புலிகளின் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இனத்துக்கான அரசியலையும்  நில வளங்களை பாதுகாக்கும் பரப்புரைகளையும் முடிந்தளவு செய்வதால் அதன் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. 

சோ கால் புத்திஜீவிகள் , தேசீயத்தை குத்தகைக்கு எடுத்துவர்கள் தேசீயத் தலைவரை குத்தகைக்கு எடுத்தவர்கள் சொட்டை  நொட்டை  நையாண்டிகள் செய்துகொண்டே இருப்பார்கள் தவிர யார் சரியானவர் அல்லது எது சரியான திசை என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள் ஏனெனில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு எதுவும் இல்லை.

(இது உங்களுக்கான பதில் இல்லை, எனது கருத்துக்கு உங்கள் கருத்து வலிந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)

சண்டமாருதன்,

வெகு எதார்த்தமான பார்வை உங்களது । 

இந்திரா காந்தி ரேபரேலியில் தோற்ற சமயம் - முடிவு வந்தது பின்னிரவில் - நான் சிறு வயது - நன்கு தூங்கிக் கொண்டிருந்த மூத்த தமயனாரை எழுப்பி இந்த விடயத்தை பகிர்ந்து கொண்டேன் । அந்தளவு இந்திய அரசியல் இரத்தத்தில்  ஊறிக் கிடக்கு.

ஆம் இலங்கை அரசியலை போல இந்திய அரசியலும்   இலங்கைத்   தமிழருக்கு முக்கியமானது  தான் । எமது அடிப்படைப் பிரச்சனையின் தோற்றப்பாடே  இந்த அம்சத்திலிருந்து தானே எழுந்தது !.

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

ம்க்கும்😁 சீமான் படமெடுத்து அது ஓடி தயாரிப்பாளர்களும் அவரும் கோடீஸ்வரர்களாகி விடுவார்களாக்கும்🤣😂

தமிழ்நாட்டில் தேர்தல்களில் தொடர்ந்தும் சீமானின் நாம் தமிழர் நிற்கவேண்டும். 5 வீதம் வாக்கு வாங்கி கிச்சுகிச்சு மூட்டவேண்டும். வாலுகள் அதை பெருமையாகக் கொண்டாடவேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும், ஆதி மூலர்களையும், எங்கபாட்டன் முருகப்பெருமானையும் வேண்டிக்கொள்கின்றேன்😆

 

சிலருக்கு  ஒருவரை பிடிக்காவிட்டால் அவர் எது செய்தாலும் தவறுதான் என்று முட்டையில் மயிர் புடுங்குவதே வேலையாகி விட்டது. பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமராகவர 22 வருடங்கள் எடுத்தது. அதுவரை அவர் மிக பொறுமையாகவே தனது அரசியலை மிகவும் அடிமட்டத்தில் இருந்து வளர்த்தெடுத்தார் . அது சிலருக்கு புரியவில்லை போல. சிலருக்கு தாங்கள் மட்டும்தான் பெரிய அரசியல் விற்பன்னர்கள் மற்றவர்கள் எல்லாம் மடையர்கள் என்றநினைப்பு. சீமான் செய்வது எல்லாம் சரியென்று இங்கு நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவருக்கிருக்கும் அரசியல் அறிவு (சுத்தமான) இங்கு குத்திமுறியும் பலருக்கு 1% கூட இல்லை. அதில் நக்கல் வேறை.

அதுசரி தமிழனை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலாவது வேற்று மாநிலத்தவர் முதலமைச்சராக வரமுடிந்ததா அல்லது முடியுமா? தமிழன்தான் இளிச்சவாய் கூட்டம் அவன் தலையில்தான் எல்லோரும் மிளகாய் அரைக்க வெளிக்கிடுகிறார்கள். இங்கும் சில கள உறவுகள் உட்பட.

தமிழகத்தில் பிரச்சனை சீமானின் பேச்சுக்களால் மட்டும் மாறிவிடப்போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எப்போது ஒவ்வொரு தமிழனும் கிடைக்கும் இலவசங்களும் திறக்கப்படும் டாஸ்மார்க்குகளும் தங்கள் இனத்தை ஒரு உறங்கு நிலையில் வைத்திருக்க திராவிடக் காட்சிகள் செய்யும் மாயாஜாலமே என்று புரிந்து கொண்டு விழித்தெழுகிறார்களோ அன்றுவரை  தமிழக தமிழனை  அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நாதம்ஸ்,

எனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.

நீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.

உடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.

ரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.

 

 

கோசான் மக்களவை தேர்தலில் ஸ்டாலின் வென்றது BJP க்கு  எதிரான தமிழக மக்களின் உணர்வலையே ஒழிய DMK யின் பெரும் வளர்ச்சியல்ல. சட்டமன்ற தேர்தலில் அவர்களால் அந்தளவு வெற்றியை பெறமுடியவில்லையே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.