Jump to content

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Nallur-1-720x450.jpg

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

நல்லூர் முருகன் ஆலயத்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் நுழைவதற்கான எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் பருத்தித்துறை வீதியூடாக பிரவேசித்து செட்டித்தெரு வரையிலேயே வரமுடியும் எனவும் குறித்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியுடன் தூக்குக் காவடியுடன் வரும் உழவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்படும் எனவும் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் உற்சவ காலத்தின் தேர்த்திருவிழா, தீர்த்த திருவிழாவின்போது அடியவர்கள் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவது வழக்கமாக காணப்படுவதுடன், தூக்குக் காவடிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் நல்லூர் கோயிலின் முன்முகப்பு வரையிலும் அனுமதிக்கப்பட்டு வந்தன.

எனினும் கடந்த 3 ஆண்டுகளாக தூக்குக் காவடிகள் தெற்கு வாசல் கோபுரம் வரையே அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தெற்கு வாசல் கோபுரத்தடியில் வைத்து தூக்குகாவடிகள் இறக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆலயச் சுற்றாடலுக்குள் தூக்குக்காவடிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்தினரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக செட்டித்தெரு வாயில் வரையிலேயே தூக்குக் காவடிகள் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/நல்லூர்-ஆலய-வளாகத்துக்கு/

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply

வரவேற்கப்பட வேண்டிய விடயம். இத்துடன் நின்றுவிடாது விடாது எதிர்காலத்தில்  தூக்குக்காவடி  மட்டுமல்ல செடில்  குத்தி காவடி  எடுப்பது, பிரதட்டை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள்  முற்றாக தடை செய்ய வேண்டும். 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

வரவேற்கப்பட வேண்டிய விடயம். இத்துடன் நின்றுவிடாது விடாது எதிர்காலத்தில்  தூக்குக்காவடி  மட்டுமல்ல செடில்  குத்தி காவடி  எடுப்பது, பிரதட்டை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள்  முற்றாக தடை செய்ய வேண்டும். 

தூக்குக்காவடி, செடில்  குத்தி காவடி  எடுப்பது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் கொண்டதல்ல பிரதட்டை. அது உடலுக்குப் பயிற்சி அளிப்பதோடு, பக்தியுடன் செய்வதால் மனதுக்கும் பயிற்சி அளிக்கிறது. 

Link to comment
Share on other sites

10 minutes ago, Paanch said:

தூக்குக்காவடி, செடில்  குத்தி காவடி  எடுப்பது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் கொண்டதல்ல பிரதட்டை. அது உடலுக்குப் பயிற்சி அளிப்பதோடு, பக்தியுடன் செய்வதால் மனதுக்கும் பயிற்சி அளிக்கிறது. 

இப்படியே எம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படியான மூடப்பழக்கங்களை கட்டிக்காக்க போகிறீர்களோ தெரியாது. கடவுளை நம்புகின்றீர்களோ அல்லது  இப்படியான மூடக கொளைகைகளை நம்புகின்றீர்கோ என்ற வித்தியாசமே தெரியவில்லை. 

நீங்கள் கூறியபடி உடற்பயிற்சியை இது அளிக்கிறது என்றால் நம்மவர்கள்  பல தங்க, வெள்ளிப்பதக்கங்களை சர்வதேச விளையாட்டுத்துறைகளில் பெற்றிருக்க வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்கள் கூறியபடி உடற்பயிற்சியை இது அளிக்கிறது என்றால் நம்மவர்கள்  பல தங்க, வெள்ளிப்பதக்கங்களை சர்வதேச விளையாட்டுத்துறைகளில் பெற்றிருக்க வேண்டும்.  

சார்? உடற்பயிற்சி செய்வது தங்கப்பதக்கம் எடுக்கவா? 
நீங்கள் சொல்லும் மூடக்கொள்கைகைகளை வெள்ளைக்காரன் கொஞ்சம் மோடேர்ன் ஆக செய்கிறான் அவ்வளவுதான்.
நாங்கள் வெள்ளைக்காரன் எது சொன்னாலும் தலை ஆட்டுற ஆக்களாச்சே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்குக்காவடி தடை பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

சார்? உடற்பயிற்சி செய்வது தங்கப்பதக்கம் எடுக்கவா? 
நீங்கள் சொல்லும் மூடக்கொள்கைகைகளை வெள்ளைக்காரன் கொஞ்சம் மோடேர்ன் ஆக செய்கிறான் அவ்வளவுதான்.
நாங்கள் வெள்ளைக்காரன் எது சொன்னாலும் தலை ஆட்டுற ஆக்களாச்சே.

வெள்ளைக்காரன் என்ன சொன்னாலும் தலைநாட்டுகிறீர்கள்  என்ற என்ற ஒற்றை வார்ததைக்குள் எல்லா அறிவு பூர்வமான விவாதங்களையும் முடித்து வைக்கும் உங்களைப் போன்றவர்கள் எமது முன்னோர்கள்  என்ற ஒரே காரணத்திற்காக எல்லா  முட்டாள்தனங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்  உள்ளவர்கள். 

தூக்குகாவடியில் காட்டுமிராண்டித்தனமாக தொங்குவது  நிலத்தில் புரண்டு உருளுவது போன்றன காட்டுவாசிகள் காலத்தில் ஏதோ காரணத்திற்காக செய்யப்பட்டிருக்கலாம். இப்போதைய அறிவியல் வளர்சியடைந்த காலத்தில் சிந்தக்கும்  திறன் இன்றி இவற்றை செய்ய வேண்டிய தேவை உள்ளதா? சிந்தித்து பாருங்கள். 

ஒரு காலத்தில் பருவமெய முதலே பெண்பிள்ளைகளை திருமணம் செய்யது வைக்கும் பழக்கம், உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை போன்ற இந்து பாரம்பரியங்கள்  ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட போதும் உங்களை போன்றவர்கள் எமது முன்னோர்கள், எமது பாரம்பரியம் எற்று புராணம் பாடினார்கள். அவர்கள்  சொல்லை அன்று கேட்டிருந்தால்  நாங்கள் இன்னும் ஆயிரம் வருடம் பின்னோக்கி இருந்திருப்போம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இப்படியே எம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படியான மூடப்பழக்கங்களை கட்டிக்காக்க போகிறீர்களோ தெரியாது. கடவுளை நம்புகின்றீர்களோ அல்லது  இப்படியான மூடக கொளைகைகளை நம்புகின்றீர்கோ என்ற வித்தியாசமே தெரியவில்லை. 

நீங்கள் கூறியபடி உடற்பயிற்சியை இது அளிக்கிறது என்றால் நம்மவர்கள்  பல தங்க, வெள்ளிப்பதக்கங்களை சர்வதேச விளையாட்டுத்துறைகளில் பெற்றிருக்க வேண்டும்.  

உடற்பயிற்சி செய்யிறம் என்ற பெயரில் வீதிகளிலும்,மைதானங்களிலும் ஓடுபவர்களும், ஜிம்முக்கு போகிறவர்களும் எத்தனை பதக்கங்களை எடுத்துக் கிழித்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

வெள்ளைக்காரன் என்ன சொன்னாலும் தலைநாட்டுகிறீர்கள்  என்ற என்ற ஒற்றை வார்ததைக்குள் எல்லா அறிவு பூர்வமான விவாதங்களையும் முடித்து வைக்கும் உங்களைப் போன்றவர்கள் எமது முன்னோர்கள்  என்ற ஒரே காரணத்திற்காக எல்லா  முட்டாள்தனங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்  உள்ளவர்கள். 

 

என்னது நீங்கள் சொல்வது அறிவுபூர்வமான  விவாதமா? அப்படியொன்றும் அறிவுபூர்வமாக நீங்கள் விவாதத்தித்ததாக  நான் எந்த திரியிலும் கண்டதில்லை. எப்ப பார்த்தாலும் சமய சம்பந்தமான சடங்குகளையும் நடைமுறைகளையும் நக்கலடிப்பதை விட என்ன அறிவு பூர்வமாக சொன்னீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடற்பயிற்சி பற்றி மட்டுமே இந்தப் பதில், இந்த சமய சம்பிரதாயங்கள் பழக்கங்கள் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை:

வாரத்தில் சில நாட்கள் கிரமமாகச் செய்தால் மட்டுமே உரிய பயனைத் தருவது உடற்பயிற்சி. வருடத்தில் ஒரு நாள் விரதம் இருந்து உருண்டால் தொங்கினால் அது உடற்பயிற்சியல்ல! அதனால் உடற்பயிற்சியின் பயனும் இல்லை! மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களை சும்மா பாயில் படுத்திக் கிடந்து கொண்டு எங்கள் சமய நம்பிக்கைகளுக்கு முண்டு கொடுக்கப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது! "நம்புகிறேன் செய்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போவது வேறு! மற்றவனின் உழைப்பில் வருவதை எடுத்து சப்பை கட்டு கட்டுவது வேறு, அது கயமைத் தனமும் கூட! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

வரவேற்கப்பட வேண்டிய விடயம். இத்துடன் நின்றுவிடாது விடாது எதிர்காலத்தில்  தூக்குக்காவடி  மட்டுமல்ல செடில்  குத்தி காவடி  எடுப்பது, பிரதட்டை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள்  முற்றாக தடை செய்ய வேண்டும். 

 

ஒருவரின் வழிபாட்டுமுறை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கித்தான்  நிற்கலாம்,அதைவிட்டு  அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை  காட்டுமிராண்டிதனம் என்று கூறும் அதிகாரம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிவரும் காலங்களில் நல்லூர் ஆலய வளாகத்திலும் சுற்றாடலிலும் யாரும் வேட்டியுடணோ சேலையுடணோ வரக்கூடாது ஜீன்ஸ் சேட் டெனிம் வட இந்ந்திய உடைகளை அணிந்தே வரவேண்டும் எனச் சொன்னாலும் சொல்வார்கள் நல்லூர் ஆலயத்தின் உரிமையாளருக்குப் பாரம்பரியம் என்றால் என்னவென்று புரியவில்லைப்போல் இருக்கு. 

உண்மையில் எனது குடும்பத்தினதும் எனதும் குலதெய்வம் நல்லூர் முருகந்தான் ஆனால் தற்போதைய நடவடிக்கைகள் மனதுக்குச் சங்கடமாக இருக்கு. தவிர உலகின் எந்தப்பகுதியில் வாழ்ந்தாலும் திருவிழாக்காலத்தில் மச்சம் மாமிசம் பாவிக்காமல் நல்லூரானை அனுட்டிப்பவன் நான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

வெள்ளைக்காரன் என்ன சொன்னாலும் தலைநாட்டுகிறீர்கள்  என்ற என்ற ஒற்றை வார்ததைக்குள் எல்லா அறிவு பூர்வமான விவாதங்களையும் முடித்து வைக்கும் உங்களைப் போன்றவர்கள் எமது முன்னோர்கள்  என்ற ஒரே காரணத்திற்காக எல்லா  முட்டாள்தனங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்  உள்ளவர்கள். 

நீங்கள் மத சம்பந்தமாக எழுதிய கருத்துக்களை மீண்டுமொருமுறை அசைபோட்டு பாருங்கள். அங்கே எத்தனை தடவைகள் மதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எவ்வித விளக்கங்களும் அளிக்காமல் மோட்டுக்கூட்டம்,அறிவில்லாதவர்கள்,பிற்போக்குவாதிகள் என ஒற்றை வார்த்தைக்குள் அடக்கியிருப்பீர்கள்.
அதிலும் இந்தத்திரி வேறு விடயம் சம்பந்தப்பட்டது.அங்கேயும் உங்கள் காழ்ப்புணர்வை வாந்தியெடுத்திருக்கின்றீர்கள்.
நீங்கள் யெகோவா இனத்தை சேர்ந்தவர் என்பது எனது அனுமானம்.😄

Link to comment
Share on other sites

"நல்லூர் முருகன் ஆலயத்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது."

நிர்வாகத்திற்கு முடிவுகளை எடுக்க உரிமை உண்டு, அதை மக்கள்/பக்தர்கள் ஏற்றும் நடக்க வேண்டும். அது அவர்களின் கடமை.

ஆனால், ஏன் தடை செய்தொம் என்பதை நிர்வாகம் அறிவிக்க வேண்டும், அதுவே அவர்கள் பக்தர்களுக்கு கொடுக்கும் மரியாதை. அதை அவர்கள் இன்னும் செய்யவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை பாருங்கோ இந்த லூசுகள் செய்யிற வேலையை!!!!!!!!! 🤣

 

 

Link to comment
Share on other sites

இந்து மதத்தில் அல்லது ஏதாவது ஒரு மதத்தில் தன் உடலை வருத்தி, இரத்தம் சிந்தி, ஊசிகளை ஏற்றிக் கொண்டு வழிபட்டால் கடவுள் அனுக்கிரகம் செய்வார் என்று சொல்லப்பட்டு இருக்கா? தன்னை வருத்தி (உண்ணாமல் இருப்பது,  தோப்பு கரணம் இடுவது.,..) இறைவனுக்கு தன்னை அர்ப்பணிப்பது வேறு, தன்னை சித்திரவதை செய்து அதன் வலியை இறைவனுக்கு அர்ப்பணிப்பது வேறு. தன்னை சித்திரவை செய்வது காட்டுமிராண்டித்தனம்.

எல்லா மதங்களிலும் இப்படியான காட்டுமிராண்டித்தங்கள் இருக்கின்றன. இஸ்லாமியர்கள் பெண்களை முழுக்க மூடும் ஆடைகளை அணியச் செய்வதில் இருந்து, சிறுமிகளை மணம் முடித்து வைப்பது வரை பல காட்டுமிராண்டித்தங்கள் உள்ளன.

அதே போன்று இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியதை ஏனைய கிறிஸ்தவர்களின் பாவங்களை கழுவுவதற்காகவும் என நம்பப்படுவதும் காட்டுமிராண்டித்தனமே. பாவத்தில் இருந்து பிறந்த மதமாக கிறீஸ்தவம் இருக்கின்றது.

அஹிம்சை மதம் என சொல்லப்படும் பெளத்தத்திலும் சிறுவர்களை புத்த பிக்குகள் ஆக்குவதில் இருந்து இனவழிப்பை நியாயப்படுத்தும் காரணிகளை கொண்டு இருப்பது வரைக்கும் காட்டுமிராண்டித்தனங்களே.

என்னைக் கேட்டால் குகைகளில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனித இனம் நாகரீகமடைந்த ஒரு இனமாக முற்றிலும் மாறுவதை தடுப்பது இப்படியான மத செயல் முறைகளே

Link to comment
Share on other sites

45 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் மத சம்பந்தமாக எழுதிய கருத்துக்களை மீண்டுமொருமுறை அசைபோட்டு பாருங்கள். அங்கே எத்தனை தடவைகள் மதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எவ்வித விளக்கங்களும் அளிக்காமல் மோட்டுக்கூட்டம்,அறிவில்லாதவர்கள்,பிற்போக்குவாதிகள் என ஒற்றை வார்த்தைக்குள் அடக்கியிருப்பீர்கள்.
அதிலும் இந்தத்திரி வேறு விடயம் சம்பந்தப்பட்டது.அங்கேயும் உங்கள் காழ்ப்புணர்வை வாந்தியெடுத்திருக்கின்றீர்கள்.
நீங்கள் யெகோவா இனத்தை சேர்ந்தவர் என்பது எனது அனுமானம்.😄

ஒருவர் கூறும் கருத்துக்கு எதிர்கருத்து எழுதவேண்டுமென்றால் அவருக்கு ஒரு முத்திரை குத்தி அவமதிப்பது உங்கள் வாடிக்கை. உங்களுக்காக நான் ஜெகோவா, அல்லலூயா லூசுக்கூட்டங்கள் செய்யும் வேலைகளை அறிய அங்கு செல்ல முடியாது. நான் பிறந்த மத முட்டாள்தனங்களை தான் கேள்வி கேட்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உடற்பயிற்சி பற்றி மட்டுமே இந்தப் பதில், இந்த சமய சம்பிரதாயங்கள் பழக்கங்கள் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை:

வாரத்தில் சில நாட்கள் கிரமமாகச் செய்தால் மட்டுமே உரிய பயனைத் தருவது உடற்பயிற்சி. வருடத்தில் ஒரு நாள் விரதம் இருந்து உருண்டால் தொங்கினால் அது உடற்பயிற்சியல்ல! அதனால் உடற்பயிற்சியின் பயனும் இல்லை! மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களை சும்மா பாயில் படுத்திக் கிடந்து கொண்டு எங்கள் சமய நம்பிக்கைகளுக்கு முண்டு கொடுக்கப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது! "நம்புகிறேன் செய்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போவது வேறு! மற்றவனின் உழைப்பில் வருவதை எடுத்து சப்பை கட்டு கட்டுவது வேறு, அது கயமைத் தனமும் கூட! 

தூக்குகாவடி, செடில் காவடி, அங்கப்பிரதட்சணம்  என்பன அவரவர் தாம் விருப்பப்பட்டு நேர்த்திக்காகவோ அல்லது வேறு அவர்களது சொந்தக்காரணங்களாலோ செய்வது. அதில் என் உங்கள் மூக்கை நுழைக்கிறீர்கள். அவர்கள் ஒன்றும் உங்களை வந்து துடைத்துவிட சொல்லவில்லையே.

மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களையும் பாயில படுத்தபடிதான் பலரும் செய்யினம். என்ன அது கொஞ்சம் சொகுசான பாய்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

தூக்குகாவடி, செடில் காவடி, அங்கப்பிரதட்சணம்  என்பன அவரவர் தாம் விருப்பப்பட்டு நேர்த்திக்காகவோ அல்லது வேறு அவர்களது சொந்தக்காரணங்களாலோ செய்வது. அதில் என் உங்கள் மூக்கை நுழைக்கிறீர்கள். அவர்கள் ஒன்றும் உங்களை வந்து துடைத்துவிட சொல்லவில்லையே.

மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களையும் பாயில படுத்தபடிதான் பலரும் செய்யினம். என்ன அது கொஞ்சம் சொகுசான பாய்!!

எ.த, உங்கள் சுகப் படுத்த முடியாத மூலக்கொதி இங்கே எல்லாருக்கும் தெரிந்தது தான்! ஆனால் அந்த மூலக்கொதி தமிழ் வாசிப்பு கிரகிப்பிலும் கூட உங்களை அரைகுறைத் தமிழனாக மாற்றி விட்டது. கீழே மீளவும் நான் எழுதியதை கோடிகாட்டியிருக்கிறேன்!

2 hours ago, Justin said:

உடற்பயிற்சி பற்றி மட்டுமே இந்தப் பதில், இந்த சமய சம்பிரதாயங்கள் பழக்கங்கள் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை:

வாரத்தில் சில நாட்கள் கிரமமாகச் செய்தால் மட்டுமே உரிய பயனைத் தருவது உடற்பயிற்சி. வருடத்தில் ஒரு நாள் விரதம் இருந்து உருண்டால் தொங்கினால் அது உடற்பயிற்சியல்ல! அதனால் உடற்பயிற்சியின் பயனும் இல்லை! மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களை சும்மா பாயில் படுத்திக் கிடந்து கொண்டு எங்கள் சமய நம்பிக்கைகளுக்கு முண்டு கொடுக்கப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது! "நம்புகிறேன் செய்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போவது வேறு! மற்றவனின் உழைப்பில் வருவதை எடுத்து சப்பை கட்டு கட்டுவது வேறு, அது கயமைத் தனமும் கூட! 

மற்ற படி உங்களுக்கு விஞ்ஞானிகள் எப்படி வேலை செய்கிறார்கள் என்று விளக்கும் நோக்கம் எனக்கில்லை!

Link to comment
Share on other sites

"எனினும் கடந்த 3 ஆண்டுகளாக தூக்குக் காவடிகள் தெற்கு வாசல் கோபுரம் வரையே அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தெற்கு வாசல் கோபுரத்தடியில் வைத்து தூக்குகாவடிகள் இறக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆலயச் சுற்றாடலுக்குள் தூக்குக்காவடிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்தினரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக செட்டித்தெரு வாயில் வரையிலேயே தூக்குக் காவடிகள் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது."

ஒருவேளை சம்பந்தர் ஐயாவும் மாவை சேனாதிராசாவும் தமது பாவங்களை கழுவ தூக்கு காவடி எடுக்க முயல்வதாக நிர்வாகத்திற்கு செய்தி கிடைத்திருக்கலாம் 😂

Link to comment
Share on other sites

3 hours ago, valavan said:

 

ஒருவரின் வழிபாட்டுமுறை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கித்தான்  நிற்கலாம்,அதைவிட்டு  அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை  காட்டுமிராண்டிதனம் என்று கூறும் அதிகாரம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

தெருவில் ஒருவன் பைத்தியக்கரமான வேலைகளை செய்தால் அவனை பைத்தியக்காரன் என்று சொல்வது மனித வழமை. அதற்கு யாரும்  அதிகாரம் அளிக்க வேண்டியதில்லை. 

Link to comment
Share on other sites

கண்டியில் தற்பொழுது நடக்கும் எசல பெரகராவில் யானைகளை வதைக்கிறார்கள் என்ற கருத்தை நீண்ட காலமாக செவிமடுக்கும் அஸ்கிரிய மற்றும் மால்வைத்தை பீடங்கள் கூட நல்லூர் நிர்வாகத்தை முன்மாதிரியாக முன்மாதிரியாக கொண்டு தடை விதிப்பார்கள் என்று எல்லாளன் நம்பலாம். ஆனால் கைமுனு நம்ப மாட்டான். அதனால் தான் அவன் மக்களுக்கு நாடு, எல்லாளன் மக்களுக்கு வேண்டுமானால் ஒரு சின்ன நினைவுச்சின்னம் (அதுவும் காலப்போக்கில் அழிக்கப்படும்). 

 

எசல பெரஹரா வௌி வீதி ஊர்வலம் இன்று ஆரம்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Me too இயக்கம் வந்த பின்னர் எல்லாப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களையும் பிற்போக்கு என்று முத்திரை குத்துகின்றார்கள்!

அலகு குத்தி தூக்குக்காவடி எடுப்பது அதைவிட கடுமையான சூழலில் இருந்து காத்த கடவுளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஒரு காணிக்கையாகவும் இருக்கலாம்தானே.

Link to comment
Share on other sites

காட்டு மிராண்டித்தனம் என்பதன் வரைவிலக்கணம் தெரியாது. ஏதோ காடும் மிரட்டும் வன்முறையையும் கொண்டாதான ஒரு கூட்டுச்சொல் மாதிரி தெரிகின்றது.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்தமைக்கு முதன்மை காரணம் : சிங்கள காண்டுமிராண்டித்தனம்? அதற்காக சிங்கள இனமோ இல்லை சர்வதேசமோ வருத்தப்படுவதில்லை. தப்ப வலிமை கொண்டிருந்த உறவுகளில், பெரும்பான்மையாக ஈழ தமிழர்கள் ஏதிலிகளாக புலம்பெயர்ந்து வாழுவதும் காட்டுமிராண்டித்தனம் கொண்ட நாடுகளில் தான், நானும் தான்.

தமிழர்கள் தம் இதிகாசங்கள், புராணங்கள், கலாச்சாரங்களில் இருந்த இந்த காலத்திற்கு ஒவ்வாத காண்டுமிராண்டித்தனங்களை விட்டு ஒரு பண்பாட்டில் உயர்ந்த சமூகமாக வந்து கொண்டிருக்கின்றது. எனக்கும் நூறு வீதம் நாம் அப்படிப்பட்ட ஒரு சமூகமாக, இனமாக மாறுவதில் மகிழ்ச்சியே.

ஆனால், ஒரு பல்லின மதங்கள், சமூகம் கொண்ட நாட்டில் ஒரு சிறுபான்மை மத, இனத்தவர்கள் மட்டும் செய்வது தற்கொலைக்கு சமனானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, tulpen said:

தெருவில் ஒருவன் பைத்தியக்கரமான வேலைகளை செய்தால் அவனை பைத்தியக்காரன் என்று சொல்வது மனித வழமை. அதற்கு யாரும்  அதிகாரம் அளிக்க வேண்டியதில்லை. 

ஒருவனை பைத்தியக்காரன் என்பதற்கும், ஒருவன் பலகோடிபேரை  பைத்தியக்காரர்கள் என்பதற்கும் நிறைய வித்தியாசமுண்டு.

அடுத்தவரை தொந்தரவு செய்யாமலும் சட்டத்தை மீறாமலும் அவரவர் வழிபாட்டு கடமைகளை அவர்கள் விரும்பிய வகையில் ஈடேற்றுவது அவரவர் பிரச்சனை.

அதனால்தான்  அடுத்தவர் மூக்கு நுனியில் உங்கள் விரல் பட்டால்கூட குற்றம் என்று சட்டம் வைத்துள்ள மேற்குலகங்களில்கூட நீங்கள் சொன்ன காட்டுமிராண்டிதன வழிபாடுகளில் அந்நாட்டு அரசுகள் கை வைப்பதேயில்லை.

சாவின் விளிம்பிலிருந்து தப்பிய  தன் குழந்தைக்காக அலகுகுத்தி காவடி எடுப்பவர்களும் உண்டு , அது அவரவர்களின்  நம்பிக்கை நேர்த்திக்கடன், 

அவர்களின் முன்னால் போய் நின்று நீங்கள் செய்தது காட்டுமிராண்டிதனம் பைத்தியக்காரமான செயல்  செயல் என்று  சொல்லும் துணிவு உங்களுக்கிருக்கா?

நான் வேண்டுமென்றால் எனக்கு பிடிக்காத பைத்தியக்காரதனம்,காட்டுமிராண்டி தனங்களிலிருந்து என்னையும் எனது நெருங்கிய உறவுகளையும் ஒதுங்கியிருக்க சொல்லலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.