Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா? – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-Airport-2-720x450.jpg

யாழில் விமான நிலையத்தை அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா? – ஜனாதிபதி வேட்பாளர் சந்தேகம்

யாழில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை பிரித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர்  பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கில் விமான நிலையம் ஒன்றை அமைக்கத் தொடங்கி விட்டார்.

இதன் மூலம் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்க முடியும். அவர்கள் ஏற்கனவே நாட்டைப் பிரித்துவிட்டார்களோ என்ற தீவிரமான சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக வந்தவர்கள், இனி பலாலி விமான நிலையம் வழியாக செல்வார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/யாழில்-விமான-நிலையத்தை-அ/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 வழமை போல தேர்தல் பிரச்சாரத்திற்கு இனவாதம்/பிரதேசவாதம் தேவைப்படுது.

அதேவேளை, தெற்கில் திறந்த விமான நிலையத்தில் நெல்லு சேகரிக்கப்பட்டது / களஞ்சியப்படுத்தப்பட்டது !


Airport officials gave green light to store paddy at Mattala Airport - Daya Gamage

Primary Industries and Social Empowerment Minister Daya Gamage informed the Presidential Commission that the Paddy Marketing Board (PMB) had decided to store paddy at Mattala Airport after the airport officials had given them permission to execute this decision in 2015.

Image result for Mattala Airport paddy

http://www.dailymirror.lk/top_story/Airport-officials-gave-green-light-to-store-paddy-at-Mattala-Airport-Daya-Gamage/155-176397

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

 வழமை போல தேர்தல் பிரச்சாரத்திற்கு இனவாதம்/பிரதேசவாதம் தேவைப்படுது.

இனவாதம் இல்லையென்றால் நாடு எங்கயோ போயிருக்கும் இந்த நாட்டில் இனவாதம் இருக்கும் அது பல ஆண்டுகளுக்கு ஏன் யுகங்களுக்கும் தொடரும் சாமியோவ்

3 hours ago, ampanai said:

அதேவேளை, தெற்கில் திறந்த விமான நிலையத்தில் நெல்லு சேகரிக்கப்பட்டது / களஞ்சியப்படுத்தப்பட்டது !

மத்தலவில் ஆரம்பமே பிழைத்து விட்டது. 😀

17 மார்ச் 2013 செய்தி.

A test flight of SriLankan Airlines from Colombo to Mattala on the 14th has come under attack by birds near the Mattala airport. The flight had been surrounded by massive group of birds, but the senior, experienced pilot, Keminda Yahampath had managed to land the flight amidst difficulty. Had the flight been flown by a young pilot, the aircraft would have crash landed at the Mattala airport. A large number of birds had died after knocking on the front windscreen of the aircraft.

The Rajapaksa International Airport in Mattala has been constructed in a bird and wildlife sanctuary and is faced with many difficulties as a result. A person was killed by a wild elephant near the fourth mile post on the road to the Mattala airport on the 13th.

http://www.srilankaguardian.org/2013/03/bird-attack-on-srilankan-flight-to.html?m=1

Edited by Lara

3 hours ago, தமிழ் சிறி said:

யாழில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை பிரித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர்  பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

இப்பிடி புலம்பி நேரம் தான் வீண்!
எப்பிடியோ பிரியப்போற நாடு தானே!

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Rajesh said:

இப்பிடி புலம்பி நேரம் தான் வீண்!
எப்பிடியோ பிரியப்போற நாடு தானே!

 

அப்படியா? எப்போது பிரியும் என்றும் சொல்லிவிடலாமே? பிரிந்த நாட்டில் உள்ள கிறீஸ்தவர்களை எல்லாம் என்ன செய்யும் உத்தேசம்? சங்ஙிலியன் போல வெட்டி கொல்ல போகிறீர்களா? அல்லது முஸ்லிம்களை கலைத்தது போல 24 மணித்தியாலத்தில் உடுத்த உடையுடன் கலைக்க போகிறீர்களா?

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இனவாதம் இல்லையென்றால் நாடு எங்கயோ போயிருக்கும் இந்த நாட்டில் இனவாதம் இருக்கும் அது பல ஆண்டுகளுக்கு ஏன் யுகங்களுக்கும் தொடரும் சாமியோவ்

எந்த நாட்டில் இனவாதம் இல்லை?

அமெரிக்காவில் இல்லையா? அல்லது ஜேர்மனியில் இல்லையா?

Edited by Jude

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் விமான நிலைய பெயர்ப்பலகையில் தமிழ்மொழி முதலிடத்தில் இருந்ததைக் கூட... 
சகித்துக்கொள்ள முடியாத  இனவாதிகள்.
இவர்கள் தானாம் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகின்றனர். விமல் வீரவன்ச போன்ற கடைந்தெடுத்த இனவாதிகளின் வாய்களுக்கு கடிவாளமிடக் கூட முடியாத, கோத்தபாய அணி தீர்வையா தூக்கித் தந்து விடுவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Jude said:

அப்படியா? எப்போது பிரியும் என்றும் சொல்லிவிடலாமே? பிரிந்த நாட்டில் உள்ள கிறீஸ்தவர்களை எல்லாம் என்ன செய்யும் உத்தேசம்? சங்ஙிலியன் போல வெட்டி கொல்ல போகிறீர்களா? அல்லது முஸ்லிம்களை கலைத்தது போல 24 மணித்தியாலத்தில் உடுத்த உடையுடன் கலைக்க போகிறீர்களா?

எந்த நாட்டில் இனவாதம் இல்லை?

அமெரிக்காவில் இல்லையா? அல்லது ஜேர்மனியில் இல்லையா?

அவர்களின் குலதொழிலை தொடர வேண்டியது தான்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

அவர்களின் குலதொழிலை தொடர வேண்டியது தான்

எதை விட்டாலும் இந்த சாதி அடக்குமுறையை விடமாட்டீர்கள் என்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மத மாற்றிகளுக்கு அதுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:
லகையில் தமிழ்மொழி முதலிடத்தில் இருந்ததைக் கூட... 

சகித்துக்கொள்ள முடியாத  இனவாதிகள்.
இவர்கள் தானாம் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகின்றனர். விமல் வீரவன்ச போன்ற கடைந்தெடுத்த இனவாதிகளின் வாய்களுக்கு கடிவாளமிடக் கூட முடியாத, கோத்தபாய அணி தீர்வையா தூக்கித் தந்து விடுவார்கள்?

இன்னும் எவ்வளவு காலத்துக்கு மற்றவர்கள் தீர்வு தரவேண்டும் என்று பார்த்து கொண்டு இருக்க போகிறீர்கள்?

5 minutes ago, Jude said:

எதை விட்டாலும் இந்த சாதி அடக்குமுறையை விடமாட்டீர்கள் என்கிறீர்கள்.

 

2 minutes ago, MEERA said:

மத மாற்றிகளுக்கு அதுதான் 

அது தான் காரணம்.

2 hours ago, தமிழ் சிறி said:

யாழ் விமான நிலைய பெயர்ப்பலகையில் தமிழ்மொழி முதலிடத்தில் இருந்ததைக் கூட... 
சகித்துக்கொள்ள முடியாத  இனவாதிகள்.
இவர்கள் தானாம் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகின்றனர். விமல் வீரவன்ச போன்ற கடைந்தெடுத்த இனவாதிகளின் வாய்களுக்கு கடிவாளமிடக் கூட முடியாத, கோத்தபாய அணி தீர்வையா தூக்கித் தந்து விடுவார்கள்?

யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்திலும் தமிழ் தான் முதலில் உள்ளது. அது விமல் வீரவன்சவுக்கு தெரியாது போல.

EHLcLoxUEAAyaMe?format=jpg&name=900x900

இத்தேர்தலில் தனி சிங்கள வாக்குகளால், முதல் சுற்றிலேயே 50% இற்கு மேல் பெற்று வெற்றிபெற கோத்தபாய அணி முயல்கிறது. 

அதற்கு இனவாதத்தை கையிலெடுக்கிறார்கள். விமல் வீரவன்சவும் மகிந்த & கோ அணியில் என்பதால் அவரது இனவாத பேச்சுகளை வைத்து வாக்குகளை பெற தான் கோத்தபாய முயல்வார்.

யாரும் தமிழர்களுக்கு தீர்வு தருவார்கள் என மக்கள் இன்னுமா நம்புகிறார்கள்?

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

எந்த நாட்டில் இனவாதம் இல்லை?

அமெரிக்காவில் இல்லையா? அல்லது ஜேர்மனியில் இல்லையா?

எல்லா நாடுகளிலும் இருக்கு

 ஆனால் இலங்கையில் நாங்கள் அதிகம் எதிர்நோக்குறோம் அண்மையில் ஓர் காணொளி ஒரு பாதரியார் வெள்ளையர் வெள்ளையர்கள் அனைவருக்கும் ஒரு இனிப்பு பண்டம் என நினைக்கிறன் வாயில் ஊட்டிவிடுவார் அந்த நேரத்தில் ஓர் கறுப்பின பெண் வரும் போது அந்த பெண் வாயை திறக்க கையில் அந்த இனிப்பை கொடுத்து அனுப்புகிறார்  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Jude said:

இன்னும் எவ்வளவு காலத்துக்கு மற்றவர்கள் தீர்வு தரவேண்டும் என்று பார்த்து கொண்டு இருக்க போகிறீர்கள்?

அதுதான் வெண்ணை திரண்டு வரும்போது கூட்டாக கூடி  நின்று சட்டியை உடைத்து விட்டாச்சே....இனியென்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, Jude said:

எந்த நாட்டில் இனவாதம் இல்லை?

அமெரிக்காவில் இல்லையா? அல்லது ஜேர்மனியில் இல்லையா?

இந்த உலகம் முழுவதும் இனவாதம் சாதியம் பிரதேசவாதம் எல்லாம் இருக்கின்றது.
ஆனால்.....
உங்கள் அன்பு சிறிலங்காவைப்போல் அரசியல் சாசனமே இனவாதத்தை  வாந்தியாக எடுக்கவில்லை. :cool:

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அனைவருக்கும் ஒரு இனிப்பு பண்டம் என நினைக்கிறன் வாயில் ஊட்டிவிடுவார்

எனக்கு தெரிந்த வரையில் சிறிய வெள்ளை நிற அப்பம், யேசுவின் ரத்தத்தில் நனைத்து தருகிறோம் என கூறி திராட்சை ரசத்தில் நனைத்து வாயில் வைத்து விடுவார்கள். அதை தான் இனிப்பு பண்டம் என சொல்கிறீர்கள் போலும். அல்லது திராட்சை ரசத்தில் நனைக்காத அப்பமாகவும் இருக்கலாம். 

On ‎10‎/‎20‎/‎2019 at 8:40 AM, தமிழ் சிறி said:

யாழில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை பிரித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர்  பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

விருப்பும் இல்லாமல் இணைந்த இரு உறவுகள் ஒரு நாள் பிரிவது தானே முறை, சனநாயகம், அறிவியல், நாகரீகம், பண்பாடு , மதம்  😃

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Lara said:

எனக்கு தெரிந்த வரையில் சிறிய வெள்ளை நிற அப்பம், யேசுவின் ரத்தத்தில் நனைத்து தருகிறோம் என கூறி திராட்சை ரசத்தில் நனைத்து வாயில் வைத்து விடுவார்கள். அதை தான் இனிப்பு பண்டம் என சொல்கிறீர்கள் போலும். அல்லது திராட்சை ரசத்தில் நனைக்காத அப்பமாகவும் இருக்கலாம். 

அதை சப்பிரசாதம் என்று சொல்வார்கள்....... திராட்சைரசம்  எனப்படும் சிகப்பு வைனை அங்கு நிக்கும் பாதர்களும் ஊழியர்களும் தமக்குள்ளேயே ஒவ்வொரு வாய் குடித்து விட்டு வெள்ளைத் துணியால் துடைத்து அடுத்தவரிடம் கொடுப்பார்கள்......!

இந்த சப்பிரசாதம் ஞானஸ்நானம் பெற்றவர்கள் மட்டுமே போய் எடுத்து கொள்வார்கள்......!

ஒரு விடயம் , பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் சனாதனதர்மக் குழந்தைகளாகவே பிறக்கின்றன. பின்பு சில வருடங்கள் சென்றபின் ஞானஸ்நானம் கொடுத்து கிறிஸ்தவர்களாகவும், சுன்னத்து செய்து இஸ்லாமியர்களாகவும் மாற்றப் படுகின்றார்கள்......!    😁

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இந்த உலகம் முழுவதும் இனவாதம் சாதியம் பிரதேசவாதம் எல்லாம் இருக்கின்றது.
ஆனால்.....
உங்கள் அன்பு சிறிலங்காவைப்போல் அரசியல் சாசனமே இனவாதத்தை  வாந்தியாக எடுக்கவில்லை. :cool:

நீங்கள் மலேசியாவின் அரசியல் சாசனத்தை அறியவில்லை இல்லையா? மலேசிய பூமி புத்திரர்களை பற்றி அவர்கள் அரசியல் சாசனத்தில் படித்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"யாழ்ப்பாணம் சர்வதேச விமான, நிலையத்தில் இப்படியும் நடந்தது"

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா விமானப்படைத் தளபதி ஒத்துழைக்கவில்லை என்றும், இந்திய தொழில்நுட்ப குழுவுக்கு தேநீர் கூட வழங்க மறுத்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், ‘கொழும்பு ரெலிகிராப்’ இணையத்தில் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.
 
அந்தக் கட்டுரையிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். அவரது கட்டுரையில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளதாவது,
 
“யாழ்ப்பாண விமான நிலையத்தை ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதற்குப் பதிலாக, அந்த திட்டம் இனவாத பொறாமைக்கு உள்ளானது.
 
விமானப்படைத் தளபதி ஒத்துழைக்க தவறிவிட்டார்.
 
2019 செப்ரெம்பர் 16ஆம் நாள், வந்திருந்த இந்திய தொழில்நுட்ப குழுவினர் கடுமையான வேலைகளின் பின்னர், தேநீர் கேட்டனர்.
 
அதற்கு அவர், “இந்தியர்கள் இதனை தமிழர்களுக்காக செய்கிறார்கள். நீங்கள் என்னிடம் தேநீர் பரிமாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?“ என்று கேள்வி எழுப்பினார்.
 
இதையடுத்து, சோர்ந்து இந்திய குழுவினர், பிற்பகல் 2 மணியளவில் தமக்குப் புத்துணர்ச்சியைப் பெறுவதற்காக ஜீப்பை காங்கேசன்துறைக்கு அனுப்பினர்” என்று அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, suvy said:

ஒரு விடயம் , பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் சனாதனதர்மக் குழந்தைகளாகவே பிறக்கின்றன. பின்பு சில வருடங்கள் சென்றபின் ஞானஸ்நானம் கொடுத்து கிறிஸ்தவர்களாகவும், சுன்னத்து செய்து இஸ்லாமியர்களாகவும் மாற்றப் படுகின்றார்கள்......!

இது பற்றி நிறைய கேள்விகள் இருந்தாலும்.............
நல்ல காலம் சைவசமயத்தில் சுன்னத்து செய்வதில்லை.  அப்படியொரு நடைமுறை இருந்தால் சிறுவர் துன்புறுத்தல் எனும் பட்டியலில் கொண்டுவந்திருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இது பற்றி நிறைய கேள்விகள் இருந்தாலும்.............
நல்ல காலம் சைவசமயத்தில் சுன்னத்து செய்வதில்லை.  அப்படியொரு நடைமுறை இருந்தால் சிறுவர் துன்புறுத்தல் எனும் பட்டியலில் கொண்டுவந்திருப்பார்கள். 

இப்போதும் அது அந்த பட்டியலில்தான்  இருக்கிறது 
மருத்துவர்களின் ஆதாரங்களை வைத்து தொடர்ந்தும் கோர்டில் அவர்கள் 
வென்றுகொண்டு இருக்கிறார்கள்.
நங்கள் நல்ல வழக்கறிஞரோடு காலம் இறங்கினால் வெல்லலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

தேரர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு முழுத் தடை கொண்டு வர வேண்டும். ஆன்மீக மற்றும் சமூகப் பணிகள் தவிர்த்து தேரர்கள் நாட்டின் இதர அலுவல்களில் ஈடுபடுவது.. இலங்கைக்கு ஆபத்தாகும்.

தேரர்களின் செயற்பாடும்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் செயற்பாடும் வெவ்வேறல்ல. எல்லாம் ஒன்றே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.