Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிசில் இடம்பெற்ற எம்.ஏ.சுமந்திரனின் இரகசியக் கூட்டம்!

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ். நகர மேயர் ஆர்னோல்ட் இருவரது பாரிஸ் கூட்டம் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன.

தேர்தலில் நிற்கின்ற பெரிய பேயை விட சிறிய பேயை தேர்வு செய்ய வேண்டிய கட்டம் என மறைமுகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வேண்டி அவர் கூறிய கருத்தே சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பில் தமது 13 அம்சக் கோரிக்கையுடன் ஒப்பமிட்ட ஐந்து கட்சிகளின் கூட்டு முடிவு வரும் நாட்களில் அறிவிக்கப்பட இருப்பதோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரும் 31ம் திகதி அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னராகவே இவ்வாறு சுமந்திரன் எம்.பி கருத்து தெரிவித்திருப்பதே சர்ச்சைகளை கிளப்பியுள்ளன

மக்கள் சந்திப்புக்கான பொதுஅழைப்போ, ஊடகங்களுக்கான அறிவித்தலோ ஏதுமின்றி, பாரிசின் புறநகர் பகுதியான செவ்ரோன் எனும் இடத்தில் இரகசியமான முறையில் சனிக்கிழமை கூட்டம் இடம்பெற்றுள்ளது.

யாழ். நகர மேயர் ஆர்னோல்ட் ஊர் மக்களுடனான சந்திப்பு என்ற பெயரில், அப்பகுதி மக்கள் மட்டும் சந்திப்புக்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரான்சை சேர்ந்த வெளிச்சம் எனும் அமைப்பு சந்திப்புக்கான ஏற்பாட்டை கடந்த வாரம் இரகசியமான முறையில் செய்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் சத்தியலிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் யாழ். மேயர் ஆர்னோல்ட்டுடன் புலம்பெயர் அமைப்புக்களுக்கான சந்திப்பு என்ற பெயரில் சனிக்கிழமை கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது.

கூட்டம் நடைபெறுகின்ற இடம், நேரம் ஆகியன தொடர்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என அமைப்புக்களுக்கு தெரிவித்திருந்த ஏற்பாட்டாளர்கள், பின்னராக தேர்வு செய்த அமைப்பினருடன் சந்திப்பினை செய்து முடித்துள்ளனர்.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் சத்தியலிங்கமோ, தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவோ பங்கெடுக்கருக்கவில்லை.

கனேடிய தமிழ் காங்கிரஸ் பிரதிநிதி டன்ரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா ஒருங்கிணைப்பாளர் வின் மகாலிங்கம் உட்பட, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ். மேயர் ஆர்னோல்ட் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.

தமிழ்த்தேசிய கருத்தியலில் எம்.ஏ.சுமந்திரனிடம் கருத்து மோதல்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தினாலேயே பல அமைப்புக்கள் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, யாழ். மேயருடன் ஊர் மக்கள் சந்திப்பு இரகசியமாக இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பொது மக்களுக்கான பொது அழைப்போ, ஊடகங்களுக்கான அறிவித்தலோ ஏதுமின்றி நடந்த இச்சந்திப்பில், 1 மணி நேரத்துக்கு பின்னராக வருகை தந்திருந்த எம்.ஏ.சுமந்திரன் எம்பி, தனது கருத்துரையினை வழங்கியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவினை தமிழ் மக்கள் ஒரு பெருங்கொலையாளியாகவே பார்க்கின்றனர் என குறிப்பிட்ட அவர், இருக்கின்ற பேய்களில் நல்ல பேயை தேர்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து ஒரு சிலரது கேள்விகளுக்கு பதில் அளித்த எம்.ஏ.சுமந்திரன், கேள்விகள் கூர்மைப்பட்ட நிலையில், ஏற்பாட்டாளர்களால் 1 மணி நேரத்தில் அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து கூட்டத்தினை யாழ்.மேயர் நடத்தியுள்ளார்.

மேயர் என்ற வகையில் யாழில் முதற் குடிமகனாகிய நீங்கள், யாழ் மக்கள் அனைவரையும், யாழ். ஊர் சங்கங்களையும் அழைத்து பேசாமல், இவ்வாறு உங்களின் ஊர் மக்களோடு மட்டும் சந்திப்பினை நடத்துவது பொருத்தமா என ஒருவர் கேட்டதற்கு, நிலைமை அவ்வாறு இல்லை. காலப்போக்கில் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேர்தல் ஒன்றினைச் சந்தித்திருக்கும் இவ்வேளையில் மக்களின் பிரதிநிதிகள் எனச் சொல்லப்படுவோர், பொதுமக்களையும், ஊடகங்களையும் வெளிப்படையாக சந்திக்காமல் இரகசியமான முறையில் பின் கதவுகளால் கூட்டங்களை நடத்துவது என்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புவதோடு, மக்களுக்காக அல்லாமல் யாருக்காக இவர்கள் வேலை செய்கின்றார்கள் என்ற கேள்வியும் மக்களிடம் எழுந்துள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/politics/01/229982?ref=archive-feed

  • கருத்துக்கள உறவுகள்

எசமான் ரணிலுக்காக ஐந்து கட்சி கூட்டணியை உதறிவிட்டு நாடு நாடாகப் பிரச்சாரம் பண்ணும் தமிழரசுக்கட்சி.தபால் மூல வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வாக்களிக்கத் தகுதியான தாயாக மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவிக்கத் தைரியமில்லாமல் வாக்களிக்கத்தக்க தகுதியற்ற(வெளிநாட்டு வதிவிட உரிமம்பெற்ற)மக்களிடம் பிரச்சாரம் செய்வதை அதுவும் இரகசியமாக ஒரு ஊர்மக்களிடம் மட்டும் பிரச்சாரம் செய்வதை என்ன பெயர் கொண்டு அழைப்பது?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வின்னின் சேதியை நம்பி கடுத்துக்கூற முடியாது. செய்தியை பொறுப்பற்ற முறையில்,  தெளிவற்ற,  பிழையான தலைப்புடன் வெளியிட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கூட்டம் சிறு சச்சரவு  வாக்குவாதங்களுடன் முடிவுற்றதாக கேள்விப்பட்டேன். உண்மை பொய் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்த கூட்டம் சிறு சச்சரவு  வாக்குவாதங்களுடன் முடிவுற்றதாக கேள்விப்பட்டேன். உண்மை பொய் தெரியவில்லை.

இதை நாங்கள் எதிர்பார்க்காவிட்டால் பிழை எங்களுடையதே. 

  • கருத்துக்கள உறவுகள்

datastore?id=5032979042664448

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கள்

ஒரு  பாராளுமன்ற  உறுப்பினர்

தமிழரின்  மாநகர  மேயர்

இவர்கள்  கலந்து கொண்ட  கூட்டம்??

ஒரு  ஊர்ச்சங்க  கூட்டம்  என விளம்பரப்படுத்தப்பட்டு

செயற்பாட்டாளர்களைத்தவிர்த்து

முகநூலில்  அவர்களுக்கு சார்பாக  எழுதுபவர்களை  இனம் கண்டு

தனி  அழைப்பு விடுக்கப்பட்டு  நடாத்தப்பட்டிருப்பதே 

இவர்களின்  உள் நோக்கத்தையும் 

மக்களை  சந்திப்பதிலுள்ள நேர்மையீனத்தையும்  காட்டுகிறது

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

மக்களை  சந்திப்பதிலுள்ள நேர்மையீனத்தையும்  காட்டுகிறது

புலம்பெயர் தமிழ் மக்களை நேரில் சந்தித்தால் பிறகு tom ஜெர்ரி கதையாகியிடும் சுமத்திர னுக்கு. இழுத்து வைச்சு கும்மி போட்டு விடுங்கள் .

ஈழத்தை பெற்று கொடுங்கள் என்றா கேட்டம் குறைந்த பட்சம் தம் இனத்தை நேசிக்கும்  முஸ்லீம் அரசியல் தலைவர்கள் போல் கொஞ்சமாவது தமிழ் இனத்துக்கு விசுவாசமாய் இருங்கள் என்று தானே கேட்கிறம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

புலம்பெயர் தமிழ் மக்களை நேரில் சந்தித்தால் பிறகு tom ஜெர்ரி கதையாகியிடும் சுமத்திர னுக்கு. இழுத்து வைச்சு கும்மி போட்டு விடுங்கள் .

ஈழத்தை பெற்று கொடுங்கள் என்றா கேட்டம் குறைந்த பட்சம் தம் இனத்தை நேசிக்கும்  முஸ்லீம் அரசியல் தலைவர்கள் போல் கொஞ்சமாவது தமிழ் இனத்துக்கு விசுவாசமாய் இருங்கள் என்று தானே கேட்கிறம் .

இவர்களை விட்டால் வேறு  வழியில்லை  என்றநிலையில்

தாயகத்தை  வைத்திருப்பது.....???

அதற்கு முன்னேற்பாடாக ஏதாவது செய்பவர்களை

செய்ய  முற்படுபவர்களை 

போர் மீது நாட்டம்  கொண்டோர்  என  வசைபாடுவது....??

இவர்களால் தமிழினம் தன்னை  இழந்து

மரத்தை  சுற்றிப்படர்ந்த  சிறு  கொடியாக......???

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

இவர்களை விட்டால் வேறு  வழியில்லை  என்றநிலையில்

தாயகத்தை  வைத்திருப்பது.....???

அதற்கு முன்னேற்பாடாக ஏதாவது செய்பவர்களை

செய்ய  முற்படுபவர்களை 

போர் மீது நாட்டம்  கொண்டோர்  என  வசைபாடுவது....??

இவர்களால் தமிழினம் தன்னை  இழந்து

மரத்தை  சுற்றிப்படர்ந்த  சிறு  கொடியாக......???

தமிழ்மக்கள் மீது கரிசனை உள்ள விக்கியர்போன்றவையளையும் இல்லாத பழியெல்லாம் சொல்லி அரசியலையே வெறுக்கபண்ணியே ஒதுக்க வைத்தவர்கள்  அதுக்குத்தான் இங்கு வர செருப்பால் அடிக்கணும் .

கொஞ்சம் எல்லைமீறினால் அடுத்த பிரபாகரன் என்று இவர்களே சிங்களவருக்கு உசுப்பிவிட்டு குளிர் காய்வது 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

தமிழ்மக்கள் மீது கரிசனை உள்ள விக்கியர்போன்றவையளையும் இல்லாத பழியெல்லாம் சொல்லி அரசியலையே வெறுக்கபண்ணியே ஒதுக்க வைத்தவர்கள்  அதுக்குத்தான் இங்கு வர செருப்பால் அடிக்கணும் .

கொஞ்சம் எல்லைமீறினால் அடுத்த பிரபாகரன் என்று இவர்களே சிங்களவருக்கு உசுப்பிவிட்டு குளிர் காய்வது 

 

மாகாணசபையை செயற்படவிடாது தடுத்ததில்

அரசைவிட  இவர்களது  பங்கு  மிகமிக  அதிகம்..

தமிழர்கள் இவர்கள் சார்ந்து சரியான  முடிவு  எடுக்கவில்லையெனில்

தமிழினம் பெரும்பான்மையுடன்  சாய்ந்துவிடும்

அநேகமாக  கிழக்கு  இன்று  அந்த  நிலைக்கு  வந்துவிட்டது

புலத்திலும்  இவர்களை  வெருட்டத்தொடங்கி  விட்டார்கள்

முடிவு?????

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

 

மாகாணசபையை செயற்படவிடாது தடுத்ததில்

அரசைவிட  இவர்களது  பங்கு  மிகமிக  அதிகம்..

தமிழர்கள் இவர்கள் சார்ந்து சரியான  முடிவு  எடுக்கவில்லையெனில்

தமிழினம் பெரும்பான்மையுடன்  சாய்ந்துவிடும்

அநேகமாக  கிழக்கு  இன்று  அந்த  நிலைக்கு  வந்துவிட்டது

புலத்திலும்  இவர்களை  வெருட்டத்தொடங்கி  விட்டார்கள்

முடிவு?????

இவர்களின் விருப்பங்களுக்கு தமிழ்மக்கள் கட்டுப்படும் நிலை வராதபோது சவுத்புளக்கும்  . கொழும்பும் கையை விட்டு விடும் ஒருவேளை சம்பந்தனுக்கு கொடுக்கபட்ட வீடு கூட திருப்பி எடுக்கபட்டாலும் அதிசயம் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

இவர்களின் விருப்பங்களுக்கு தமிழ்மக்கள் கட்டுப்படும் நிலை வராதபோது சவுத்புளக்கும்  . கொழும்பும் கையை விட்டு விடும் ஒருவேளை சம்பந்தனுக்கு கொடுக்கபட்ட வீடு கூட திருப்பி எடுக்கபட்டாலும் அதிசயம் இல்லை .

அது நடக்கும்போது

தமிழர்கள்  முழுமையாக சிங்களவர் வசமாகி   இருப்பார்கள்

இவர்களது  தெவை  சிங்களத்துக்கு  இராது

  • கருத்துக்கள உறவுகள்

0-E862-BF4-471-A-4035-91-FA-B08-ACF86-F4

6 hours ago, விசுகு said:

பாருங்கள்

ஒரு  பாராளுமன்ற  உறுப்பினர்

தமிழரின்  மாநகர  மேயர்

இவர்கள்  கலந்து கொண்ட  கூட்டம்??

ஒரு  ஊர்ச்சங்க  கூட்டம்  என விளம்பரப்படுத்தப்பட்டு

செயற்பாட்டாளர்களைத்தவிர்த்து

முகநூலில்  அவர்களுக்கு சார்பாக  எழுதுபவர்களை  இனம் கண்டு

தனி  அழைப்பு விடுக்கப்பட்டு  நடாத்தப்பட்டிருப்பதே 

இவர்களின்  உள் நோக்கத்தையும் 

மக்களை  சந்திப்பதிலுள்ள நேர்மையீனத்தையும்  காட்டுகிறது

100க்கு 100 உண்மை!

சுமந்திரன், ஆர்னால்ட் இருவருமே கைதேர்ந்த சதிகாரங்கள்!

இந்த சதிகாரர்கள் வெளிச்சம் சதிகாரர்களோட சேர்ந்து மேற்கொள்ளவிருந்த பாரிய அரசியல் சதிமுயற்சி வெற்றி பெறவில்லை.

ஆனாலும், போன கையோட கிடைத்த காசை எல்லாம் சுருட்டிக்கொண்டுள்ளதாக சொல்றாங்க!

13 hours ago, Rajesh said:

ஆனாலும், போன கையோட கிடைத்த காசை எல்லாம் சுருட்டிக்கொண்டுள்ளதாக சொல்றாங்க!

இதுக்கு கணக்கு வழக்கு காட்டுற பழக்கம் இல்லையோ?

எல்லாம் ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் முகநூல் செம்புகள் இதில் யாழ் கள முன்னைய உறுப்பினரும் இருக்கிறமாதிரி இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின்  ஊடக பேச்சாளராக இருக்கும் ஒருவர் ஏன் பொட்டுக்கால் ஒழித்து கூட்டம் நடாத்த வேண்டும். மடியில் கனம் இருப்பதால் என எடுக்கலாமா??

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

தமிழ் மக்களின்  ஊடக பேச்சாளராக இருக்கும் ஒருவர் ஏன் பொட்டுக்கால் ஒழித்து கூட்டம் நடாத்த வேண்டும். மடியில் கனம் இருப்பதால் என எடுக்கலாமா??

அதான் இன்றைக்கு வவுனியாவில் செருப்ப எடுத்துட்டு போனா ஓர் அம்மா தமிழரசுக்கட்சிக் காரர்களுக்கு எறிய  காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாய்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதான் இன்றைக்கு வவுனியாவில் செருப்ப எடுத்துட்டு போனா ஓர் அம்மா தமிழரசுக்கட்சிக் காரர்களுக்கு எறிய  காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாய்

செருப்பு எறி வாங்கின சம்பந்தன் சுமத்திரன் கூட்டத்துக்கு கூட ரோசம் வரவில்லை வழக்கமான இணைய செம்புகளுக்கு மட்டும் ரோசம் பிச்சுகிட்டு ஓடுது இன்னும் விளக்கம் கெட்டதுகளா இருக்கினம். இன்றைய இந்த வெறுப்பு எப்பவோ தமிழ்மக்களிடம் உருவாகிவிட்டது என்பதை ஏற்றுகொள்ள முடியவில்லை இணைய செம்புகளால் .

முக்கியமா ஒரு கட்சியோ அல்லது தலைமையோ அழிந்து போவதுக்கு முக்கிய காரணம் முசலுக்கு மூணுகால் எனும் செம்புகூட்டம்கள்தான் முக்கிய காரணம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முக்கியமா ஒரு கட்சியோ அல்லது தலைமையோ அழிந்து போவதுக்கு முக்கிய காரணம் முசலுக்கு மூணுகால் எனும் செம்புகூட்டம்கள்தான் முக்கிய காரணம் .

மிகவும் சுவாரசியமான தத்துவம். இலங்கை தமிழரசு கட்சி விடுதலை புலிகளுக்கு முற்பட்ட காலத்திலும் இருந்தது, இன்றும் இருக்கிறது. விடுதலைப்புலிகள் அழிந்து போனதுக்கு “முக்கிய காரணம் முசலுக்கு மூணுகால் எனும் செம்புகூட்டம்கள்தான் முக்கிய காரணம்” . சத்தியமான வார்த்தைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

மிகவும் சுவாரசியமான தத்துவம். இலங்கை தமிழரசு கட்சி விடுதலை புலிகளுக்கு முற்பட்ட காலத்திலும் இருந்தது, இன்றும் இருக்கிறது. விடுதலைப்புலிகள் அழிந்து போனதுக்கு “முக்கிய காரணம் முசலுக்கு மூணுகால் எனும் செம்புகூட்டம்கள்தான் முக்கிய காரணம்” . சத்தியமான வார்த்தைகள்.

புலிகளுக்கு இலட்ச கணக்கான தமில் மக்கள் இங்கு வீதிகளில் இறங்கி போராடினார்கள் கடைசி நேரத்தில் பல  முன்னணி  மாற்று கருத்தாளர்கள் கூட குடும்பம் குடும்பமாய் மனம் மாறி வீட்டுக்கு கூட போகாது லன்ட ன் போராட்ட களத்தில் இருந்தார்கள் காரணம் புலியின் அப்பழுக்கற்ற தியாகமும் இறுதிக்கணம் வரை மாறாத நெறிமுறைகள்  நீங்கள் அப்படியா முப்பதுவருட போராட்டத்தை ஒரு கொழும்பு வீட்டுக்கும் பஜிரோ இறக்குமதி செய்வதுக்கும்  காட்டிகொடுத்தும் இல்லாமல் அந்த காலத்தில் காணமல் போனவர்களை பார்த்து நக்கலடிப்பது செம்புகள் உங்களுக்கே இப்படி என்றால் தலைகள் பற்றி சொல்லவே தேவையில்லை .

 

 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

செருப்பு எறி வாங்கின சம்பந்தன் சுமத்திரன் கூட்டத்துக்கு கூட ரோசம் வரவில்லை வழக்கமான இணைய செம்புகளுக்கு மட்டும் ரோசம் பிச்சுகிட்டு ஓடுது இன்னும் விளக்கம் கெட்டதுகளா இருக்கினம். இன்றைய இந்த வெறுப்பு எப்பவோ தமிழ்மக்களிடம் உருவாகிவிட்டது என்பதை ஏற்றுகொள்ள முடியவில்லை இணைய செம்புகளால் .

முக்கியமா ஒரு கட்சியோ அல்லது தலைமையோ அழிந்து போவதுக்கு முக்கிய காரணம் முசலுக்கு மூணுகால் எனும் செம்புகூட்டம்கள்தான் முக்கிய காரணம் .

அண்ணை கவனம் 
செருப்பெடுத்து ஏறியப்போன அம்மாவை எல்லாம் பெரிசா எடுக்காதீங்கோ ,அவா அடுத்த தேர்தலிலும் 
கூத்தமைப்பிற்கு கீறிப்போட்டு தெருக்கோடியில் நின்று கத்தப்போறது தான் நடக்கப்போகுது , 
முடிஞ்சவரை தொழில்தகுதி கொண்ட  ,வெளிநாடுகளில் தொழில் எடுக்கக்கூடிய தமிழர்கள் அங்கிருந்து கிளம்பி விடுங்கள், இலங்கையில் இனி புடுங்க எதுவுமே இல்லை  

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அத்தனையும் முகநூல் செம்புகள் இதில் யாழ் கள முன்னைய உறுப்பினரும் இருக்கிறமாதிரி இருக்கு 

ம்ம்ம்

அதிலும் தமக்கு  தனி  அழைப்பு வந்தே  தாம் கலந்து கொண்டதாக 

முகநூலில் தமக்குத்தாமே  புகழாரம்  வேறு  செய்கிறார்கள்

முகநூல் போராளிகள்  அல்லவா??

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.