Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா?

Featured Replies

சரி..நேரடியாக கேள்விக்கே வருகின்றேன்.

வாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா?

அண்மையில் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கதைத்துக் கொண்டு இருக்கும் போது பிள்ளைகளுக்கு  தமிழ் படிப்பித்தல் பற்றி எம் உரையாடல் திரும்பியது. அப்போது அங்கு இருந்த தமிழறிவுள்ள தாத்தா "தம்பி வாய்க்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா" எனக் கேட்டார்.

நான் இவர் ஏன் இப்படிக் கேட்கின்றார் என நினைத்து விட்டு, ஊரில் வீட்டு கிணற்றடியில் இருந்து பின் வளவில் உள்ள சிறு வீட்டுத் தோட்டத்துக்கு வெட்டப்பட்ட வாய்க்காலில் தண்ணீர் ஓடிய காட்சியை மனத்திரையில் கொண்டு வந்து பார்த்தேன். தண்ணீர் சலசலவென ஓடின மாதிரி நினைவு வர "ஓம் அப்படித்தானே ஓடும்" என கேள்விக் குறியுடன் அவரை பார்த்தேன்.

"இப்படித்தான் இங்குள்ள சிறுவருக்கான தமிழ் சொல்லிக் கொடுக்கும் புத்தகத்தில் எழுதி இருக்கு... அது பிழை. ஆற்றில் தான் தண்ணீர் சலசலவென ஓடும். வாய்க்காலில் மெதுவாகத்தான் போகும். இப்படி வாய்க்காலில் தண்ணீர் சலசலவென ஓடுகின்றது தவறான வர்ணணை" என்றார்.

பின் அவரே "இங்குள்ள  இங்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது ...ஆனால் கொஞ்சம் இலக்கண சுத்தமாகவும் படிப்பித்தால் தான் இங்கும் தமிழ் செழுமை அடையும் என்றார்.

இவ்வளவு நாளும் எனக்கு தமிழ் மட்டும் தான் ஓரளவுக்கேனும் தெரியும் என நான் எண்ணிக் கொண்டு இருந்தன்.. இப்ப பார்த்தால் அதுவும் தகராறு போல் இருக்கு என மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.

உண்மையில் அவர் சொன்னது சரியா? வாய்க்காலில் தண்ணீர் சலசலவென ஓடுகின்றது என சொல்வது தவறா? வேறு எப்படி அதைச் சொல்ல முடியும்?

ஆராவது என் சந்தேகத்தை கிளியர் பண்ணுங்கள்..

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன தவறு என்று விளங்கவில்லை.  எனக்குத் தெரிந்து, வாய்க்காலில் தண்ணீர் சல சல என ஓடியது என்று தான் சொல்வது. 

இதுக்கும் இலக்கணத்திற்கும் என்ன தொடர்பாம்? 

ஆனால், என்னுடைய கேள்வி, இங்குள்ள பிள்ளைகளுக்கு வாய்க்கால் தெரியுமா? 

தமிழ் கற்பிப்பார்கள் இங்கத்தைய நடைமுறைப் பயன்பாட்டில் உள்ள விடயங்களைக் கற்பித்தால், பிரயோசனமாக இருக்கும்.  மாணவர்களுக்கும் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்

சலசல என்பது தமிழ் இலக்கணத்தில் இரட்டைக்கிளவி என்று அழைக்கப்படும். இரு சொற்கள் சேர்ந்தே வரும். தனித்து நின்றால் அச்சொல் பொருள் தராது. வினைச்சொல்லுக்கு அடைமொழியாய் முன்னால் அச் சொல்லியதை அழகுபடுத்தும். தமிழில் இப்படிப்பல சொற்கள் உள்ளன. ஆற்று நீர் அல்லது வாய்க்கால் நீரை இப்படிக்கு கூறுவர். அதன் வேகத்துக்குக் கூறுவதல்ல. நீரை நாம்கால்களால் லல்லது கைகளால் அளைந்தால்  ஏற்படும் ஒலிதான் அது.

தண்ணீர் ஆற்றில் ஓடிக்கொண்டிருக்கும் போதும் இதை உணரலாம்

ஆற்றின் கரையில் நின்று பாருங்கள் சலசல என்றுதான் கேட்கும்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Sabesh said:

இதில் என்ன தவறு என்று விளங்கவில்லை.  எனக்குத் தெரிந்து, வாய்க்காலில் தண்ணீர் சல சல என ஓடியது என்று தான் சொல்வது. 

இதுக்கும் இலக்கணத்திற்கும் என்ன தொடர்பாம்? 

ஆனால், என்னுடைய கேள்வி, இங்குள்ள பிள்ளைகளுக்கு வாய்க்கால் தெரியுமா? 

தமிழ் கற்பிப்பார்கள் இங்கத்தைய நடைமுறைப் பயன்பாட்டில் உள்ள விடயங்களைக் கற்பித்தால், பிரயோசனமாக இருக்கும்.  மாணவர்களுக்கும் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.  

இங்கு கற்பிக்கும் போது மாணவர்களுக்கு உதாரணங்கள் கூறி, விளக்கம் கூறிப் படம் காட்டித்தான் கற்பிப்பது. 

25 minutes ago, Sabesh said:

தமிழ் கற்பிப்பார்கள் இங்கத்தைய நடைமுறைப் பயன்பாட்டில் உள்ள விடயங்களைக் கற்பித்தால், பிரயோசனமாக இருக்கும்.  மாணவர்களுக்கும் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.  

எனது மகளைத் தமிழ் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி வீட்டில் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கக் காரணம் திக்கித் திக்கித் தமிழ் பயின்றவளைத் திருக்குறள் பாடமாக்க வைத்ததுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இணையவன் said:

எனது மகளைத் தமிழ் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி வீட்டில் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கக் காரணம் திக்கித் திக்கித் தமிழ் பயின்றவளைத் திருக்குறள் பாடமாக்க வைத்ததுதான்.

நாங்களும் அறிவகத்திலிருந்து நிப்பாட்டியதற்கான காரணமும் இது போல..... வாய்க்குள் நுழையாத, பாவனையில் இல்லாத, கருத்து தெரியாத சொற்களைத் தமிழ் வளர்க்கிறோம் என்ற பெயரில் வியாபாரபடுத்தியதே. 

இப்போது இங்குள்ள local school board இல், உலக மொழிகள் கற்பிக்கும் பகுதியினூடாக கற்பிக்கும் தமிழ் வகுப்புக்கு அவர்களும் விரும்பிப் போடுறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, இணையவன் said:

எனது மகளைத் தமிழ் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி வீட்டில் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கக் காரணம் திக்கித் திக்கித் தமிழ் பயின்றவளைத் திருக்குறள் பாடமாக்க வைத்ததுதான்.

உங்கள் மகளுக்குக் கற்பித்த ஆசிரியர் அரைகுறையானவராக இருக்கலாம். அல்லது பட்டம் பெற்றும் கற்பித்தல் அணுகுமுறை தெரியாதவராக இருக்கலாம். அல்லது புதிய ஆசிரியராகக் கூட உங்கள் மகளின் இடர் அறியாது இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் அவசரப்பட்டு பள்ளியை விட்டு நிறுத்தாது ஆசிரியருடனோ அல்லது தலைமையாசிரியரிடமோ கதைத்திருக்கலாம். கோபித்துக்கொண்டு உடனே பள்ளியை விட்டு நிறுத்திவிதிட்டீர்கள் எனில் தவறு உங்கள் பேரிலும் தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Sabesh said:

நாங்களும் அறிவகத்திலிருந்து நிப்பாட்டியதற்கான காரணமும் இது போல..... வாய்க்குள் நுழையாத, பாவனையில் இல்லாத, கருத்து தெரியாத சொற்களைத் தமிழ் வளர்க்கிறோம் என்ற பெயரில் வியாபாரபடுத்தியதே. 

இப்போது இங்குள்ள local school board இல், உலக மொழிகள் கற்பிக்கும் பகுதியினூடாக கற்பிக்கும் தமிழ் வகுப்புக்கு அவர்களும் விரும்பிப் போடுறார்கள். 

பயன்பாட்டில் இல்லாத பழைய தமிழ்ச் சொற்களை மீண்டும் பாடநூல்களில் சேர்த்து தமிழ் நூல்களை தனித்த தமிழாக்க கொண்டுவரும் முயற்சி பல இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாம் வடசொற்களை தமிழ்ச் சொல் என்று நினைத்துக் கற்றவர்கள். எமக்கு மனதில் பதிந்துள்ள சொற்களின் தமிழ் சொல்லை பார்க்கும்போது இது என்ன கடினமான புதிய சொல் என்று எமக்குத்தான் தோன்றுமேயன்றி புதிதாகத் தமிழைக் கற்கும் ஒரு மாணவருக்கு அல்ல. இந்தத் தெளிவு பல பெற்றோரிடம் இல்லாதகாரணத்தால் எதோ தங்கள் பிள்ளைகள் கொடுமைப்படுத்தப்படுவதான கற்பிதத்துடன் பிள்ளைகளை உடனே பள்ளியை விட்டு நிறுத்திவிடுவார்.

இதுவே அவர்களின் ஆரம்பப் பள்ளியில் எந்தக் கடினமான சொல்லை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தாலும் அத்திப்பற்றிக் கவலை கொள்வதுமில்லை. பள்ளியை விட்டு நிப்பாட்டுவதுமில்லை.  😃

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sabesh said:

இதில் என்ன தவறு என்று விளங்கவில்லை.  எனக்குத் தெரிந்து, வாய்க்காலில் தண்ணீர் சல சல என ஓடியது என்று தான் சொல்வது. 

இதுக்கும் இலக்கணத்திற்கும் என்ன தொடர்பாம்? 

ஆனால், என்னுடைய கேள்வி, இங்குள்ள பிள்ளைகளுக்கு வாய்க்கால் தெரியுமா? 

தமிழ் கற்பிப்பார்கள் இங்கத்தைய நடைமுறைப் பயன்பாட்டில் உள்ள விடயங்களைக் கற்பித்தால், பிரயோசனமாக இருக்கும்.  மாணவர்களுக்கும் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.  

சல சல என ஓடுவதற்கு நிலம் மேடு பள்ளத்துடன் இருக்க வேண்டும். பொதுவாக வாய்க்கால் அவ்வாறு இருப்பதில்லை.

ஆனால் கடைசிப் பந்தியில் நீங்கள் கூறியது 100% சரியானது. தொலைக் காட்சி வருவதற்கு முன்னர் பருவகாலங்கள் நான்கில் (Winter and Fall) என்னவென்றே விளங்கவில்லை.  ஊசியிலைக் காடு என்பதும் மற்றொன்று.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

எனது மகளைத் தமிழ் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி வீட்டில் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கக் காரணம் திக்கித் திக்கித் தமிழ் பயின்றவளைத் திருக்குறள் பாடமாக்க வைத்ததுதான்.

நம்மட கதையும் அதுவே இப்படித்தான் இரட்டை கிழவிகள் பற்றி அறியாத ஒன்று பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க அன்றே நிப்பாட்டி பிரைவேட்டா சோதனை எழுதவைக்க அதிவிசேட சித்தியுடன் பாஸ் பண்ணியுள்ளார்கள் என்னை பொறுத்தவரை தமிழ் பள்ளிகள் என்பது பலரின் தன்மான பிரச்சனைகளின் வடிகால் அங்கு செல்லும் பிள்ளைகளை கேட்டு பாருங்கள் தமிழை விட கஷ்ட்டமான மொழி ஸ்பெயினும் பிரான்சும் படிக்க விருப்ப படுங்கள் தமிழ் வேண்டாம் என்று அழுது கொள்ளுங்கள் காரணம் எப்படி இலகுவாக தமிழ் படிப்பிப்பது என்பது தெரியாமல் போனது துரதிர்ஷ்டவசமாக அமைந்த ஒன்று .

தமிழ் சொல்லிகொடுப்பதும் ஒரு கலை 

ஊரில் ஒவ்வொரு பாட வாத்தியும் மாணவர்களின் மனதில் தங்களின் பாடம் நிக்கணும் என்பதுக்காக விதம் விதமாய் யோசித்து பாடம் நடத்துவார்கள் .

இங்கு தமிழ் படிக்க விரும்பாத பிள்ளையை ஏன் என காரணம் கேட்டபோது அது சொல்கிறது தமிழில் மாத்திரம் தண்டனைகள் கடுமையாக உள்ளது அதனால் விளங்கி கொள்வது கஷ்ட்டமாக உள்ளது . தமிழ் பாடம் எடுக்கும் முன் மாணவர்களை விளங்கி கொள்ளனும் ஆசிரியர்கள் .

7 hours ago, நிழலி said:

சரி..நேரடியாக கேள்விக்கே வருகின்றேன்.

வாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா?

அண்மையில் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கதைத்துக் கொண்டு இருக்கும் போது பிள்ளைகளுக்கு  தமிழ் படிப்பித்தல் பற்றி எம் உரையாடல் திரும்பியது. அப்போது அங்கு இருந்த தமிழறிவுள்ள தாத்தா "தம்பி வாய்க்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா" எனக் கேட்டார்.

நான் இவர் ஏன் இப்படிக் கேட்கின்றார் என நினைத்து விட்டு, ஊரில் வீட்டு கிணற்றடியில் இருந்து பின் வளவில் உள்ள சிறு வீட்டுத் தோட்டத்துக்கு வெட்டப்பட்ட வாய்க்காலில் தண்ணீர் ஓடிய காட்சியை மனத்திரையில் கொண்டு வந்து பார்த்தேன். தண்ணீர் சலசலவென ஓடின மாதிரி நினைவு வர "ஓம் அப்படித்தானே ஓடும்" என கேள்விக் குறியுடன் அவரை பார்த்தேன்.

"இப்படித்தான் இங்குள்ள சிறுவருக்கான தமிழ் சொல்லிக் கொடுக்கும் புத்தகத்தில் எழுதி இருக்கு... அது பிழை. ஆற்றில் தான் தண்ணீர் சலசலவென ஓடும். வாய்க்காலில் மெதுவாகத்தான் போகும். இப்படி வாய்க்காலில் தண்ணீர் சலசலவென ஓடுகின்றது தவறான வர்ணணை" என்றார்.

பின் அவரே "இங்குள்ள  இங்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது ...ஆனால் கொஞ்சம் இலக்கண சுத்தமாகவும் படிப்பித்தால் தான் இங்கும் தமிழ் செழுமை அடையும் என்றார்.

இவ்வளவு நாளும் எனக்கு தமிழ் மட்டும் தான் ஓரளவுக்கேனும் தெரியும் என நான் எண்ணிக் கொண்டு இருந்தன்.. இப்ப பார்த்தால் அதுவும் தகராறு போல் இருக்கு என மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.

உண்மையில் அவர் சொன்னது சரியா? வாய்க்காலில் தண்ணீர் சலசலவென ஓடுகின்றது என சொல்வது தவறா? வேறு எப்படி அதைச் சொல்ல முடியும்?

ஆராவது என் சந்தேகத்தை கிளியர் பண்ணுங்கள்..

 

வாய்க்கால் ஆறுகளில் நீர் சலசலவென்று ஓடுவது பொருத்தமற்ற வர்ணணை தான். கிழை ஆறுகளில் தான் இவ்வாறான சத்தம் வரும். ஒரு ஆற்றில் இருந்து பிரிந்து சொல்லும் சிறிய நீரோடை  அல்லது ஆற்றுக்கு வந்நு சேரும் சிறிய நீரோடை களுக்கு பொருத்தமான வர்ணணை. பெரும் நீர்பாசன வய்க்கால்களில் நீர் அமைதியாக ஓடும் அதிலிருந்து வயலுக்கு செல்லும் சிறிய கால்வாயில் அதிக சத்தம் வரும். நீரோடைக்கு பொருத்தமான வர்ணணை. 

  • கருத்துக்கள உறவுகள்

"இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்பார்கள்......தமிழில் "ல" வில் பல, "ன"  வில் பல ,என பல ஒலிகளுடன் கூடிய எழுத்துக்கள் உள்ளன.திருக்குறள்,தேவாரங்கள் போன்றவற்றில் அவை சந்தத்துடன்,எதுகை மோனையுடன்  சேர்ந்து வரும்.அவைகளை சத்தமாய் படிக்கும் போதுதான் பிள்ளைகளுக்கு நாக்கு அதற்கேற்றவாறு புரளும். இதில வடமொழி இருக்கு அதில மதம் இருக்கு என்று எல்லாவற்றிலும் நுனுக்கம் பார்த்தால் நட்டம் குறளுக்கோ தேவாரத்துக்கோ அல்ல .........!

நான் பிரான்ஸ் வந்து இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்றுவரை பிரெஞ்சில்  "R ",  "U", "O" "é", " è" "ç" "à" போன்ற எழுத்துக்கள் என்னால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. இங்கேயும் பாடசாலைகளில் இப்படி சரியாக உச்சரிக்காத பிள்ளைகளை விசேஷமாக பயிற்சி பெற்ற ஆசிரியரிடம் ( orthophonique) அனுப்பி வைக்கிறார்கள்.பெரிய வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகள் கூட அங்கு வருகிறார்கள்.இதில் சிறப்பாம்சம் என்னவென்றால் அந்த ஆசிரியர் ஒரு நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு மாணவனுக்கு மட்டுமே வகுப்பு எடுக்கிறார்.அதுவும் பாடசாலை நேரத்திலேயே.இணையவனுக்கும் இவை தெரிஞ்சிருக்கும்.

பாடசாலைகளில் பாடநூல்களை வைத்து அதன் பிரகாரம்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள்.சந்தேகம் இருந்தால் ஆசிரியர்களுடன் கதைத்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.அதுதான் நல்லது.....!

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரை உங்கள் நண்பர் சொன்னது சரியும் பிழையும்.

என்ன குழப்பமாக இருக்கிறதா?

சலசலப்பு என்றால் என்ன? சத்தம். ஆங்கிலத்தில் சொல்வதானால் commotion.

சலசலப்பு என்ற சொல்லிற்கு அண்ணித்த, ஒலியை குறிக்கும் இரெட்டை கிளவியே சலசல.

வீட்டில் கிணற்றடியில் இருந்து தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு ஓடும் சின்ன வாய்க்காலில் நீர் சலசலத்து ஓடாது.

ஆனால் யாழில் வழுக்கை ஆறு பாயும் வாய்கால்களில், வன்னியில் குளங்களில் இருந்து வெளியேறும் வாய்கால்களில், மாரி காலத்தில் வெள்ளம் சலசலத்து மட்டும் இல்லை, கரைபுரண்டும் ஓடும்.

ஆகவே வாய்காலில் ஓடும் நீர் சல, சல என்று ஓடுகிறது, நிசப்தமாக ஓடுகிறதா என்பது, வாய்காலின் அளவு, நீரின் பெருக்கை வைத்து வாய்க்காலுக்கு, வாய்க்கால் வேறுபடும். 

சில வாய்காலில் நீர் சலசல என ஓடாது, ஆனால் சிலதில் ஓடும்.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சல சல  என்பது காரணப்பொருள்  அல்ல

சல  சல என்ற  சத்தத்தை காரணமாகக்கொண்டதல்ல

அதன் அழகை  அல்லது நெளிவு சுளிவின் தன்மையை  விளக்குவதாக  இருக்கலாம்

எனது தகப்பனார் பாத்தி கட்டி வழி  மறித்து  விடும் போது தண்ணீர் சல சலவென்று  ஓடுவதைக்கண்டிருக்கின்றேன்.

அப்புறம் தமிழ் இலக்கியவாதிகள்  சொல்லட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

சல சல  என்பது காரணப்பொருள்  அல்ல

சல  சல என்ற  சத்தத்தை காரணமாகக்கொண்டதல்ல

அதன் அழகை  அல்லது நெளிவு சுளிவின் தன்மையை  விளக்குவதாக  இருக்கலாம்

எனது தகப்பனார் பாத்தி கட்டி வழி  மறித்து  விடும் போது தண்ணீர் சல சலவென்று  ஓடுவதைக்கண்டிருக்கின்றேன்.

அப்புறம் தமிழ் இலக்கியவாதிகள்  சொல்லட்டும் 

சத்தத்தைக் காரணமாகக் கொண்டதல்ல என்று சொல்லிவிட்டு உடனேயே பாத்திகட்டிய தண்ணீர் சலசலத்து ஓடுவதைக் கண்டிருக்கின்றேன் என்று முரண்படுகின்றீர்கள் விசுகு ஐயா😂🤣

நீங்கள் சலசலத்து ஓடுவதைக் காதால்தான் கண்டிருக்கின்றீர்கள்!!😬

இரட்டைக்கிளவியை விளங்க அழகுராணி ஐஸ்வர்யா ராய் சொல்வதைக் கேளுங்கள்😀

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக
இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால்
பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ”

 

 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விசுகு said:

சல சல  என்பது காரணப்பொருள்  அல்ல

சல  சல என்ற  சத்தத்தை காரணமாகக்கொண்டதல்ல

அதன் அழகை  அல்லது நெளிவு சுளிவின் தன்மையை  விளக்குவதாக  இருக்கலாம்

எனது தகப்பனார் பாத்தி கட்டி வழி  மறித்து  விடும் போது தண்ணீர் சல சலவென்று  ஓடுவதைக்கண்டிருக்கின்றேன்.

அப்புறம் தமிழ் இலக்கியவாதிகள்  சொல்லட்டும் 

சலசல என்பது பெயர்ச்சொல் இல்லை. எனவே காரணப்பெயரா, இடுகுறி பெயரா என்ற கோணத்தில் இதை அணுக முடியும் என நான் நினைக்கவில்லை.

“பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” என்ற பழமொழியில் சலசலப்பு என்பது யாது? பனங்காட்டில், பற்றைகளுக்கு இடையா எழும் சலசல எனும் இனம்புரியா ஒலியை கேட்டு அந்த காட்டிலேயே தினமும் வாழும் நரி அஞ்சாது என்பதே.

ஆகவே சலசல என்பது எழும்பும் ஒலியின் அடிப்படையில் அமைந்த ரெட்டைகிளவியே. 

ஆனால் இரெட்டைகிளைவிகள் எப்போது ஒலியின் அடிப்படையில் மட்டுமே அமைவனவும் அல்ல.

பாம்பு சரசர என ஓடியது, என்பதில் சரசர வின் அடிப்படை ஒலி.

பிரியாணி கமகம என மணந்தது என்பதில் கமகம வின் அடிப்படை மணம்.

அவளின் தொடுகை எனக்கு கிளுகிளுப்பாக இருந்தது என்பதில் அடிப்படை தொடுகை உணர்ச்சி,

மக்கள் திபுதிபு என உள்வந்தனர் என்பதில் எந்த உணர்சியும், உணர்வையும் அடிப்படையாக கொள்ளாமல் - கண்களால் காணும் விபரணம் திபுதிபுவின் அடிப்படையாகிறது.

நிழலியின் நண்பர் கால்வாயில் நீர் சலசலத்து ஓடாது என கூறியமைக்கு காரணம் -அவர் மனதில் தோன்றியது தோட்டத்தின் சின்ன கால்வாய்.

ஆறைவிட, ஓடையைவிட, நதியை விட ஆக்ரோசமாக நீர் ஓடும் கால்வாய்களும் உள்ளனவே? ஓடையில் ஓடும் நீர் சலசலக்கும் ஆனால் அதை விட பெரிய கால்வாயில் ஓடும் நீர் சலசலக்காது என்பது சரியாகப்படவில்லலை.

 

  • தொடங்கியவர்

ஆகவே வாய்க்காலில் நீர் சலசலவென ஓடுவது சரியான வர்ணனை என புலப்படுகின்றது. அத்துடன் இது ஒலியின் அடிப்படையில் அமைந்த இரட்டைக் கிளவி என்பதும் தெளிவாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நினைத்துப்பார்த்தால், ரெட்டைகிளவிகள் எல்லாம் ஏதோ ஒரு புலனுணர்வின் அடிப்படையில் அமைவதாகவே படுகிறது.

குசுகுசு/ சலசல/சரசர/ நறநற ....ஒலி

கசகச (வேர்வை), சிலுசிலு (காற்று), கிளுகிளு..... -தொடுகை

திபுதிபு (கூட்டம்) /புஸுபுஸு (என அழகான நாய்குட்டி)/ செவசெவ (நிறம்) , மொழுமொழு......பார்வை

சுவைக்கும், மணத்துக்கும்தான் அதிகம் இரெட்டைகிளவிகள் இல்லை? 

கமகம ஒன்றை மட்டுமே யோசிக்க முடிகிறது.

சிச்சுவேசன் சாங் கீழே👇

 

 

 

  • தொடங்கியவர்
21 minutes ago, goshan_che said:

நினைத்துப்பார்த்தால், ரெட்டைகிளவிகள் எல்லாம் ஏதோ ஒரு புலனுணர்வின் அடிப்படையில் அமைவதாகவே படுகிறது.

குசுகுசு/ சலசல/சரசர/ நறநற ....ஒலி

கசகச (வேர்வை), சிலுசிலு (காற்று), கிளுகிளு..... -தொடுகை

திபுதிபு (கூட்டம்) /புஸுபுஸு (என அழகான நாய்குட்டி)/ செவசெவ (நிறம்) , மொழுமொழு......பார்வை

சுவைக்கும், மணத்துக்கும்தான் அதிகம் இரெட்டைகிளவிகள் இல்லை? 

கமகம ஒன்றை மட்டுமே யோசிக்க முடிகிறது.

சிச்சுவேசன் சாங் கீழே👇

 

 

பிரித்துப் பார்த்தால் பொருள் இல்லாமல் இருப்பது தான் இரட்டைக் கிளவி என்றால் குசுகுசு இரட்டைக்கிளவியிற்குள் அடங்காது தானே 😄

  • கருத்துக்கள உறவுகள்

கலகல என்டு சிரித்தாள்😄

Quote
Quote

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அவள் – இரட்டைக்கிளவி

சலசல எனவரும் சலங்கைகள்
கலகல கவரும் பேச்சுகள்
துறுதுறு செல்லும் விழிகள்
படபட படக்கும் இமைகள்
கமகம மணக்கும் மல்லிகைகள்
மினுமினு மின்னும் கன்னம்
பளபள இருக்கும் கண்ணும்
கிளுகிளு கிளம்பும் உருவம்
சிலுசிலு அடிக்கும் காத்தும்
குடுகுடு வரும் கிழவனுக்கும்
தடதட அடிக்கும் இதயம்
தைதை தாளத்தில் மனசும்
சுடசுட நெஞ்சம் கொதிக்கும்
திபுதிபு இளையர் கூட்டம்
சரசர எண்ணிக்கை கூடும்
மசமச அவள்பின்னே நிற்கும்
வழவழ பலவும் பேசும்
திருதிரு சிலவிழிகள் பிதுங்கும்
கிறுகிறு தலையும் சுற்றும்
முணுமுணுக்கும் அவள் பெயரும்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

சத்தத்தைக் காரணமாகக் கொண்டதல்ல என்று சொல்லிவிட்டு உடனேயே பாத்திகட்டிய தண்ணீர் சலசலத்து ஓடுவதைக் கண்டிருக்கின்றேன் என்று முரண்படுகின்றீர்கள் விசுகு ஐயா😂🤣

நீங்கள் சலசலத்து ஓடுவதைக் காதால்தான் கண்டிருக்கின்றீர்கள்!!😬

இரட்டைக்கிளவியை விளங்க அழகுராணி ஐஸ்வர்யா ராய் சொல்வதைக் கேளுங்கள்😀

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக
இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால்
பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ”

 

 

முதலில் எழுதியிருப்பதை  வாசியுங்களப்பா

கண்டிருக்கின்றேன்  என்று  தானே எழுதியிருக்கின்றேன்

 

கீழே  கோசாண் விரிவாக  தந்துள்ளார்

ஆறைவிட, ஓடையைவிட, நதியை விட ஆக்ரோசமாக நீர் ஓடும் கால்வாய்களும் உள்ளனவே? ஓடையில் ஓடும் நீர் சலசலக்கும் ஆனால் அதை விட பெரிய கால்வாயில் ஓடும் நீர் சலசலக்காது என்பது சரியாகப்படவில்லலை.

நன்றி  சகோ

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை கிளவி சொற்களும் அதன் பொருள்களும்

01. கத கத - விரைவாக
02. கடகட - விரைவாக, ஒலிக்குறிப்பு
03. கரகர - காய்ந்து இருத்தல்
04. கம கம - மணம் வீசுதல்
05. கண கண - உடம்புச் சூடு
06. கலகல - சிரிப்பு
07. கடுகடு - போபமாக பேசுதல்
08. கறகற - தொந்தரவு
09.கலீர் கலீர் - சலங்கையொலி
10. கணீர் கணீர் - மணி ஒலி
11. கிணு கிணு - மெல்ல இரைதல்
12. கிறுகிறு - விரைவாக /சுற்றுதல்
13.  கிளு கிளு - சிரித்தல் / மகிழ்ச்சி
14. கிடுகிடு - விரைவாக /அச்சம்
15. கீச்சுகீச்சு - ஒலிக்குறிப்பு (பறவைகளின் ஒலி)
16. கீர்கீர் - ஒலிக்குறிப்பு (கத்துதல்)
17. குடுகுடு - விரைந்தோடித் திரிதல், நடத்தல்
18. குளுகுளு - தென்றல் காற்று / குளிர்
19. குபீர் குபீர் - குருதி பாாய்தல்
20. குறு குறு - மனம் உறுத்துதல்
21. குசுகுசு - ரகசியம் பேசுதல்
22. குமுகுமு - மிக மணத்தல்
23. குபுகுபு - புகை கிளம்புதல்
24. கொழு கொழு - பருத்தல்
25. சட சட - ஒலிக்குறிப்பு (பரபரத்தல்), சிறகுகளை அடித்துக் கொள்ளல், முறிதல்
26. சடார் சடார் - பொருட்கள் மோதுதல்/விழுதல்
27. சரசர - ஒலித்தல் ,உரசல் ஒலி
28. சலசல - ஒலிக்குறிப்பு , நீரின் ஓசை
29. சளசள - ஓயாத இரைச்சல் பேச்சு
30. சிலீர் சிலீர் - குளிர்தல்
31. சிடுசிடு - எரிச்சல் கலந்த கோபம்
32.  சுள்சுள் - வலித்தல்
33. சுறு சுறு - கோபம்
34. டாங்டாங் - ஒலிக்குறிப்பு (மணி ஒலி)
35. தடதட - நாத்தட்டுதல், முரட்டுத்தனமாக
36.  தரதர - தரையில் உராயும் வகையில் இழுத்தல்
37. தளதள - இளக்கம், சோபை
38. தழுதழு - நாத்தடுமாறுதல்
39. தகதக - ஜொலிப்பு ,எரிதல் , மின்னுதல்
40. திருதிரு - அச்சம் ,முழித்தல்
41. திடு திடு - விரைவான ஓட்டம்
42. துடு துடு - ஒலிக்குறிப்பு
43. துருதுரு - சுறுசுறுப்பு
44. துடி துடி - இரங்குதல் ,வலியால் அவதியுறல்
45. தொளதொள - இறுக்கமின்மை
46.  தொண தொண - இடைவிடாது பேசுதல்
47. நறு நறு - கோபம்
48. நற நற - பல்லைக் கடித்தல்
49. நெருநெரு - உறுத்தல்
50. நொளுநொளு - குழைவு
51. பள பள - மினுங்குதல்
52. பரபர - நிதான இழப்பு ,அவசரம் ,வேகமாக செயற்படல்
53. பகபக - வேக குறிப்பு
54. பளிச் பளிச் - மின்னுதல்
55. படபட - இதயத்துடிப்பு
56. பளார் பளார் - கன்னத்தில் அறைதல்
57. பளீர் பளீர் - மின்னல்
58. பிசுபிசு - பசைத்தன்மை
59. புறு புறு - முணுமுணுத்தல்
60. பொல பொல - கண்ணீர் வடிதல்
61. பொலுபொலு - உதிர்தல்
62. மடமட - வேகமாக நீர் குடித்தல்
63. மளமள - முறிதல்
64. மினுமினு - பிரகாசித்தல், மிளிர்தல்
65. மெது மெது - மென்மை
66. மொழு மொழு - வளர்ச்சி
67. மொறமொற - மிகக் காய்தல்
68. மொர மொர - கடித்தல்
69. வழவழ - உறுதியின்மை
70. வளவள - பயனின்றி பேசுதல்
71. வளுவளு - நொளு நொளுத்தல்
72. விதிர்விதிர் - அச்சம்
73. விசுக் விசுக் - வேகநடை
74. விண் விண் - வலித்தல்
75. விடுவிடு - வேகமாக
76. விறுவிறு - வேகமாக, பரபரப்புடன்
77. வெடுவெடு - கோபமான பேச்சு்
78. வெதுவெது - இளஞ்சூடு
79. வெலவெல - நடுங்குதல், பதறுதல்

இணையத்தில் எடுத்தது

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சடார், சிலீர், கலீர், கணீர் போன்றன இரட்டை சொற்களாய் பாவிக்கப்பட்டாலும், தனித்தும் பொருள் தருவதால் அவை இரட்டை கிளவிகள் அல்ல என்றே நினைக்கிறேன்.

உ+ம்

பெரும் காற்றில் ஆல மரம் சடாரெனெ முறிந்தது 

ஓடையின் நீர் அந்த அதிகாலையில் அவன் முகத்தில் பட்டபோது, சிலீரென்றிருந்தது

நிசப்தமாய் இருந்த அந்த அறையில் அவளின் ஒற்றை சலங்கை மட்டும் கலீர் என்ற ஒலியை ஏற்படுத்தியது

சிறுவயது முதலே அவன் கணீரென்ற குரலில் தேவாரம் பாடுவது வழக்கம்.

 

7 hours ago, நிழலி said:

பிரித்துப் பார்த்தால் பொருள் இல்லாமல் இருப்பது தான் இரட்டைக் கிளவி என்றால் குசுகுசு இரட்டைக்கிளவியிற்குள் அடங்காது தானே 😄

இரெட்டைகிளவிக்குள் மட்டு அல்ல ஐயா, இது எங்கேயும், எப்போதும் அடங்காது 😅

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

 

 

இரெட்டைகிளவிக்குள் மட்டு அல்ல ஐயா, இது எங்கேயும், எப்போதும் அடங்காது 😅

பறிஞ்சிடும்......வெட  வெட என தொடைகளும் நடுங்கிடும்.....!  😂 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.