Jump to content

வாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா?


Recommended Posts

சரி..நேரடியாக கேள்விக்கே வருகின்றேன்.

வாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா?

அண்மையில் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கதைத்துக் கொண்டு இருக்கும் போது பிள்ளைகளுக்கு  தமிழ் படிப்பித்தல் பற்றி எம் உரையாடல் திரும்பியது. அப்போது அங்கு இருந்த தமிழறிவுள்ள தாத்தா "தம்பி வாய்க்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா" எனக் கேட்டார்.

நான் இவர் ஏன் இப்படிக் கேட்கின்றார் என நினைத்து விட்டு, ஊரில் வீட்டு கிணற்றடியில் இருந்து பின் வளவில் உள்ள சிறு வீட்டுத் தோட்டத்துக்கு வெட்டப்பட்ட வாய்க்காலில் தண்ணீர் ஓடிய காட்சியை மனத்திரையில் கொண்டு வந்து பார்த்தேன். தண்ணீர் சலசலவென ஓடின மாதிரி நினைவு வர "ஓம் அப்படித்தானே ஓடும்" என கேள்விக் குறியுடன் அவரை பார்த்தேன்.

"இப்படித்தான் இங்குள்ள சிறுவருக்கான தமிழ் சொல்லிக் கொடுக்கும் புத்தகத்தில் எழுதி இருக்கு... அது பிழை. ஆற்றில் தான் தண்ணீர் சலசலவென ஓடும். வாய்க்காலில் மெதுவாகத்தான் போகும். இப்படி வாய்க்காலில் தண்ணீர் சலசலவென ஓடுகின்றது தவறான வர்ணணை" என்றார்.

பின் அவரே "இங்குள்ள  இங்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது ...ஆனால் கொஞ்சம் இலக்கண சுத்தமாகவும் படிப்பித்தால் தான் இங்கும் தமிழ் செழுமை அடையும் என்றார்.

இவ்வளவு நாளும் எனக்கு தமிழ் மட்டும் தான் ஓரளவுக்கேனும் தெரியும் என நான் எண்ணிக் கொண்டு இருந்தன்.. இப்ப பார்த்தால் அதுவும் தகராறு போல் இருக்கு என மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.

உண்மையில் அவர் சொன்னது சரியா? வாய்க்காலில் தண்ணீர் சலசலவென ஓடுகின்றது என சொல்வது தவறா? வேறு எப்படி அதைச் சொல்ல முடியும்?

ஆராவது என் சந்தேகத்தை கிளியர் பண்ணுங்கள்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன தவறு என்று விளங்கவில்லை.  எனக்குத் தெரிந்து, வாய்க்காலில் தண்ணீர் சல சல என ஓடியது என்று தான் சொல்வது. 

இதுக்கும் இலக்கணத்திற்கும் என்ன தொடர்பாம்? 

ஆனால், என்னுடைய கேள்வி, இங்குள்ள பிள்ளைகளுக்கு வாய்க்கால் தெரியுமா? 

தமிழ் கற்பிப்பார்கள் இங்கத்தைய நடைமுறைப் பயன்பாட்டில் உள்ள விடயங்களைக் கற்பித்தால், பிரயோசனமாக இருக்கும்.  மாணவர்களுக்கும் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சலசல என்பது தமிழ் இலக்கணத்தில் இரட்டைக்கிளவி என்று அழைக்கப்படும். இரு சொற்கள் சேர்ந்தே வரும். தனித்து நின்றால் அச்சொல் பொருள் தராது. வினைச்சொல்லுக்கு அடைமொழியாய் முன்னால் அச் சொல்லியதை அழகுபடுத்தும். தமிழில் இப்படிப்பல சொற்கள் உள்ளன. ஆற்று நீர் அல்லது வாய்க்கால் நீரை இப்படிக்கு கூறுவர். அதன் வேகத்துக்குக் கூறுவதல்ல. நீரை நாம்கால்களால் லல்லது கைகளால் அளைந்தால்  ஏற்படும் ஒலிதான் அது.

தண்ணீர் ஆற்றில் ஓடிக்கொண்டிருக்கும் போதும் இதை உணரலாம்

ஆற்றின் கரையில் நின்று பாருங்கள் சலசல என்றுதான் கேட்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Sabesh said:

இதில் என்ன தவறு என்று விளங்கவில்லை.  எனக்குத் தெரிந்து, வாய்க்காலில் தண்ணீர் சல சல என ஓடியது என்று தான் சொல்வது. 

இதுக்கும் இலக்கணத்திற்கும் என்ன தொடர்பாம்? 

ஆனால், என்னுடைய கேள்வி, இங்குள்ள பிள்ளைகளுக்கு வாய்க்கால் தெரியுமா? 

தமிழ் கற்பிப்பார்கள் இங்கத்தைய நடைமுறைப் பயன்பாட்டில் உள்ள விடயங்களைக் கற்பித்தால், பிரயோசனமாக இருக்கும்.  மாணவர்களுக்கும் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.  

இங்கு கற்பிக்கும் போது மாணவர்களுக்கு உதாரணங்கள் கூறி, விளக்கம் கூறிப் படம் காட்டித்தான் கற்பிப்பது. 

Link to comment
Share on other sites

25 minutes ago, Sabesh said:

தமிழ் கற்பிப்பார்கள் இங்கத்தைய நடைமுறைப் பயன்பாட்டில் உள்ள விடயங்களைக் கற்பித்தால், பிரயோசனமாக இருக்கும்.  மாணவர்களுக்கும் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.  

எனது மகளைத் தமிழ் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி வீட்டில் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கக் காரணம் திக்கித் திக்கித் தமிழ் பயின்றவளைத் திருக்குறள் பாடமாக்க வைத்ததுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இணையவன் said:

எனது மகளைத் தமிழ் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி வீட்டில் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கக் காரணம் திக்கித் திக்கித் தமிழ் பயின்றவளைத் திருக்குறள் பாடமாக்க வைத்ததுதான்.

நாங்களும் அறிவகத்திலிருந்து நிப்பாட்டியதற்கான காரணமும் இது போல..... வாய்க்குள் நுழையாத, பாவனையில் இல்லாத, கருத்து தெரியாத சொற்களைத் தமிழ் வளர்க்கிறோம் என்ற பெயரில் வியாபாரபடுத்தியதே. 

இப்போது இங்குள்ள local school board இல், உலக மொழிகள் கற்பிக்கும் பகுதியினூடாக கற்பிக்கும் தமிழ் வகுப்புக்கு அவர்களும் விரும்பிப் போடுறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, இணையவன் said:

எனது மகளைத் தமிழ் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி வீட்டில் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கக் காரணம் திக்கித் திக்கித் தமிழ் பயின்றவளைத் திருக்குறள் பாடமாக்க வைத்ததுதான்.

உங்கள் மகளுக்குக் கற்பித்த ஆசிரியர் அரைகுறையானவராக இருக்கலாம். அல்லது பட்டம் பெற்றும் கற்பித்தல் அணுகுமுறை தெரியாதவராக இருக்கலாம். அல்லது புதிய ஆசிரியராகக் கூட உங்கள் மகளின் இடர் அறியாது இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் அவசரப்பட்டு பள்ளியை விட்டு நிறுத்தாது ஆசிரியருடனோ அல்லது தலைமையாசிரியரிடமோ கதைத்திருக்கலாம். கோபித்துக்கொண்டு உடனே பள்ளியை விட்டு நிறுத்திவிதிட்டீர்கள் எனில் தவறு உங்கள் பேரிலும் தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Sabesh said:

நாங்களும் அறிவகத்திலிருந்து நிப்பாட்டியதற்கான காரணமும் இது போல..... வாய்க்குள் நுழையாத, பாவனையில் இல்லாத, கருத்து தெரியாத சொற்களைத் தமிழ் வளர்க்கிறோம் என்ற பெயரில் வியாபாரபடுத்தியதே. 

இப்போது இங்குள்ள local school board இல், உலக மொழிகள் கற்பிக்கும் பகுதியினூடாக கற்பிக்கும் தமிழ் வகுப்புக்கு அவர்களும் விரும்பிப் போடுறார்கள். 

பயன்பாட்டில் இல்லாத பழைய தமிழ்ச் சொற்களை மீண்டும் பாடநூல்களில் சேர்த்து தமிழ் நூல்களை தனித்த தமிழாக்க கொண்டுவரும் முயற்சி பல இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாம் வடசொற்களை தமிழ்ச் சொல் என்று நினைத்துக் கற்றவர்கள். எமக்கு மனதில் பதிந்துள்ள சொற்களின் தமிழ் சொல்லை பார்க்கும்போது இது என்ன கடினமான புதிய சொல் என்று எமக்குத்தான் தோன்றுமேயன்றி புதிதாகத் தமிழைக் கற்கும் ஒரு மாணவருக்கு அல்ல. இந்தத் தெளிவு பல பெற்றோரிடம் இல்லாதகாரணத்தால் எதோ தங்கள் பிள்ளைகள் கொடுமைப்படுத்தப்படுவதான கற்பிதத்துடன் பிள்ளைகளை உடனே பள்ளியை விட்டு நிறுத்திவிடுவார்.

இதுவே அவர்களின் ஆரம்பப் பள்ளியில் எந்தக் கடினமான சொல்லை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தாலும் அத்திப்பற்றிக் கவலை கொள்வதுமில்லை. பள்ளியை விட்டு நிப்பாட்டுவதுமில்லை.  😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sabesh said:

இதில் என்ன தவறு என்று விளங்கவில்லை.  எனக்குத் தெரிந்து, வாய்க்காலில் தண்ணீர் சல சல என ஓடியது என்று தான் சொல்வது. 

இதுக்கும் இலக்கணத்திற்கும் என்ன தொடர்பாம்? 

ஆனால், என்னுடைய கேள்வி, இங்குள்ள பிள்ளைகளுக்கு வாய்க்கால் தெரியுமா? 

தமிழ் கற்பிப்பார்கள் இங்கத்தைய நடைமுறைப் பயன்பாட்டில் உள்ள விடயங்களைக் கற்பித்தால், பிரயோசனமாக இருக்கும்.  மாணவர்களுக்கும் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.  

சல சல என ஓடுவதற்கு நிலம் மேடு பள்ளத்துடன் இருக்க வேண்டும். பொதுவாக வாய்க்கால் அவ்வாறு இருப்பதில்லை.

ஆனால் கடைசிப் பந்தியில் நீங்கள் கூறியது 100% சரியானது. தொலைக் காட்சி வருவதற்கு முன்னர் பருவகாலங்கள் நான்கில் (Winter and Fall) என்னவென்றே விளங்கவில்லை.  ஊசியிலைக் காடு என்பதும் மற்றொன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

எனது மகளைத் தமிழ் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி வீட்டில் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கக் காரணம் திக்கித் திக்கித் தமிழ் பயின்றவளைத் திருக்குறள் பாடமாக்க வைத்ததுதான்.

நம்மட கதையும் அதுவே இப்படித்தான் இரட்டை கிழவிகள் பற்றி அறியாத ஒன்று பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க அன்றே நிப்பாட்டி பிரைவேட்டா சோதனை எழுதவைக்க அதிவிசேட சித்தியுடன் பாஸ் பண்ணியுள்ளார்கள் என்னை பொறுத்தவரை தமிழ் பள்ளிகள் என்பது பலரின் தன்மான பிரச்சனைகளின் வடிகால் அங்கு செல்லும் பிள்ளைகளை கேட்டு பாருங்கள் தமிழை விட கஷ்ட்டமான மொழி ஸ்பெயினும் பிரான்சும் படிக்க விருப்ப படுங்கள் தமிழ் வேண்டாம் என்று அழுது கொள்ளுங்கள் காரணம் எப்படி இலகுவாக தமிழ் படிப்பிப்பது என்பது தெரியாமல் போனது துரதிர்ஷ்டவசமாக அமைந்த ஒன்று .

தமிழ் சொல்லிகொடுப்பதும் ஒரு கலை 

ஊரில் ஒவ்வொரு பாட வாத்தியும் மாணவர்களின் மனதில் தங்களின் பாடம் நிக்கணும் என்பதுக்காக விதம் விதமாய் யோசித்து பாடம் நடத்துவார்கள் .

இங்கு தமிழ் படிக்க விரும்பாத பிள்ளையை ஏன் என காரணம் கேட்டபோது அது சொல்கிறது தமிழில் மாத்திரம் தண்டனைகள் கடுமையாக உள்ளது அதனால் விளங்கி கொள்வது கஷ்ட்டமாக உள்ளது . தமிழ் பாடம் எடுக்கும் முன் மாணவர்களை விளங்கி கொள்ளனும் ஆசிரியர்கள் .

Link to comment
Share on other sites

7 hours ago, நிழலி said:

சரி..நேரடியாக கேள்விக்கே வருகின்றேன்.

வாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா?

அண்மையில் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கதைத்துக் கொண்டு இருக்கும் போது பிள்ளைகளுக்கு  தமிழ் படிப்பித்தல் பற்றி எம் உரையாடல் திரும்பியது. அப்போது அங்கு இருந்த தமிழறிவுள்ள தாத்தா "தம்பி வாய்க்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா" எனக் கேட்டார்.

நான் இவர் ஏன் இப்படிக் கேட்கின்றார் என நினைத்து விட்டு, ஊரில் வீட்டு கிணற்றடியில் இருந்து பின் வளவில் உள்ள சிறு வீட்டுத் தோட்டத்துக்கு வெட்டப்பட்ட வாய்க்காலில் தண்ணீர் ஓடிய காட்சியை மனத்திரையில் கொண்டு வந்து பார்த்தேன். தண்ணீர் சலசலவென ஓடின மாதிரி நினைவு வர "ஓம் அப்படித்தானே ஓடும்" என கேள்விக் குறியுடன் அவரை பார்த்தேன்.

"இப்படித்தான் இங்குள்ள சிறுவருக்கான தமிழ் சொல்லிக் கொடுக்கும் புத்தகத்தில் எழுதி இருக்கு... அது பிழை. ஆற்றில் தான் தண்ணீர் சலசலவென ஓடும். வாய்க்காலில் மெதுவாகத்தான் போகும். இப்படி வாய்க்காலில் தண்ணீர் சலசலவென ஓடுகின்றது தவறான வர்ணணை" என்றார்.

பின் அவரே "இங்குள்ள  இங்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது ...ஆனால் கொஞ்சம் இலக்கண சுத்தமாகவும் படிப்பித்தால் தான் இங்கும் தமிழ் செழுமை அடையும் என்றார்.

இவ்வளவு நாளும் எனக்கு தமிழ் மட்டும் தான் ஓரளவுக்கேனும் தெரியும் என நான் எண்ணிக் கொண்டு இருந்தன்.. இப்ப பார்த்தால் அதுவும் தகராறு போல் இருக்கு என மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.

உண்மையில் அவர் சொன்னது சரியா? வாய்க்காலில் தண்ணீர் சலசலவென ஓடுகின்றது என சொல்வது தவறா? வேறு எப்படி அதைச் சொல்ல முடியும்?

ஆராவது என் சந்தேகத்தை கிளியர் பண்ணுங்கள்..

 

வாய்க்கால் ஆறுகளில் நீர் சலசலவென்று ஓடுவது பொருத்தமற்ற வர்ணணை தான். கிழை ஆறுகளில் தான் இவ்வாறான சத்தம் வரும். ஒரு ஆற்றில் இருந்து பிரிந்து சொல்லும் சிறிய நீரோடை  அல்லது ஆற்றுக்கு வந்நு சேரும் சிறிய நீரோடை களுக்கு பொருத்தமான வர்ணணை. பெரும் நீர்பாசன வய்க்கால்களில் நீர் அமைதியாக ஓடும் அதிலிருந்து வயலுக்கு செல்லும் சிறிய கால்வாயில் அதிக சத்தம் வரும். நீரோடைக்கு பொருத்தமான வர்ணணை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்பார்கள்......தமிழில் "ல" வில் பல, "ன"  வில் பல ,என பல ஒலிகளுடன் கூடிய எழுத்துக்கள் உள்ளன.திருக்குறள்,தேவாரங்கள் போன்றவற்றில் அவை சந்தத்துடன்,எதுகை மோனையுடன்  சேர்ந்து வரும்.அவைகளை சத்தமாய் படிக்கும் போதுதான் பிள்ளைகளுக்கு நாக்கு அதற்கேற்றவாறு புரளும். இதில வடமொழி இருக்கு அதில மதம் இருக்கு என்று எல்லாவற்றிலும் நுனுக்கம் பார்த்தால் நட்டம் குறளுக்கோ தேவாரத்துக்கோ அல்ல .........!

நான் பிரான்ஸ் வந்து இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்றுவரை பிரெஞ்சில்  "R ",  "U", "O" "é", " è" "ç" "à" போன்ற எழுத்துக்கள் என்னால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. இங்கேயும் பாடசாலைகளில் இப்படி சரியாக உச்சரிக்காத பிள்ளைகளை விசேஷமாக பயிற்சி பெற்ற ஆசிரியரிடம் ( orthophonique) அனுப்பி வைக்கிறார்கள்.பெரிய வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகள் கூட அங்கு வருகிறார்கள்.இதில் சிறப்பாம்சம் என்னவென்றால் அந்த ஆசிரியர் ஒரு நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு மாணவனுக்கு மட்டுமே வகுப்பு எடுக்கிறார்.அதுவும் பாடசாலை நேரத்திலேயே.இணையவனுக்கும் இவை தெரிஞ்சிருக்கும்.

பாடசாலைகளில் பாடநூல்களை வைத்து அதன் பிரகாரம்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள்.சந்தேகம் இருந்தால் ஆசிரியர்களுடன் கதைத்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.அதுதான் நல்லது.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரை உங்கள் நண்பர் சொன்னது சரியும் பிழையும்.

என்ன குழப்பமாக இருக்கிறதா?

சலசலப்பு என்றால் என்ன? சத்தம். ஆங்கிலத்தில் சொல்வதானால் commotion.

சலசலப்பு என்ற சொல்லிற்கு அண்ணித்த, ஒலியை குறிக்கும் இரெட்டை கிளவியே சலசல.

வீட்டில் கிணற்றடியில் இருந்து தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு ஓடும் சின்ன வாய்க்காலில் நீர் சலசலத்து ஓடாது.

ஆனால் யாழில் வழுக்கை ஆறு பாயும் வாய்கால்களில், வன்னியில் குளங்களில் இருந்து வெளியேறும் வாய்கால்களில், மாரி காலத்தில் வெள்ளம் சலசலத்து மட்டும் இல்லை, கரைபுரண்டும் ஓடும்.

ஆகவே வாய்காலில் ஓடும் நீர் சல, சல என்று ஓடுகிறது, நிசப்தமாக ஓடுகிறதா என்பது, வாய்காலின் அளவு, நீரின் பெருக்கை வைத்து வாய்க்காலுக்கு, வாய்க்கால் வேறுபடும். 

சில வாய்காலில் நீர் சலசல என ஓடாது, ஆனால் சிலதில் ஓடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சல சல  என்பது காரணப்பொருள்  அல்ல

சல  சல என்ற  சத்தத்தை காரணமாகக்கொண்டதல்ல

அதன் அழகை  அல்லது நெளிவு சுளிவின் தன்மையை  விளக்குவதாக  இருக்கலாம்

எனது தகப்பனார் பாத்தி கட்டி வழி  மறித்து  விடும் போது தண்ணீர் சல சலவென்று  ஓடுவதைக்கண்டிருக்கின்றேன்.

அப்புறம் தமிழ் இலக்கியவாதிகள்  சொல்லட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

சல சல  என்பது காரணப்பொருள்  அல்ல

சல  சல என்ற  சத்தத்தை காரணமாகக்கொண்டதல்ல

அதன் அழகை  அல்லது நெளிவு சுளிவின் தன்மையை  விளக்குவதாக  இருக்கலாம்

எனது தகப்பனார் பாத்தி கட்டி வழி  மறித்து  விடும் போது தண்ணீர் சல சலவென்று  ஓடுவதைக்கண்டிருக்கின்றேன்.

அப்புறம் தமிழ் இலக்கியவாதிகள்  சொல்லட்டும் 

சத்தத்தைக் காரணமாகக் கொண்டதல்ல என்று சொல்லிவிட்டு உடனேயே பாத்திகட்டிய தண்ணீர் சலசலத்து ஓடுவதைக் கண்டிருக்கின்றேன் என்று முரண்படுகின்றீர்கள் விசுகு ஐயா😂🤣

நீங்கள் சலசலத்து ஓடுவதைக் காதால்தான் கண்டிருக்கின்றீர்கள்!!😬

இரட்டைக்கிளவியை விளங்க அழகுராணி ஐஸ்வர்யா ராய் சொல்வதைக் கேளுங்கள்😀

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக
இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால்
பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ”

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விசுகு said:

சல சல  என்பது காரணப்பொருள்  அல்ல

சல  சல என்ற  சத்தத்தை காரணமாகக்கொண்டதல்ல

அதன் அழகை  அல்லது நெளிவு சுளிவின் தன்மையை  விளக்குவதாக  இருக்கலாம்

எனது தகப்பனார் பாத்தி கட்டி வழி  மறித்து  விடும் போது தண்ணீர் சல சலவென்று  ஓடுவதைக்கண்டிருக்கின்றேன்.

அப்புறம் தமிழ் இலக்கியவாதிகள்  சொல்லட்டும் 

சலசல என்பது பெயர்ச்சொல் இல்லை. எனவே காரணப்பெயரா, இடுகுறி பெயரா என்ற கோணத்தில் இதை அணுக முடியும் என நான் நினைக்கவில்லை.

“பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” என்ற பழமொழியில் சலசலப்பு என்பது யாது? பனங்காட்டில், பற்றைகளுக்கு இடையா எழும் சலசல எனும் இனம்புரியா ஒலியை கேட்டு அந்த காட்டிலேயே தினமும் வாழும் நரி அஞ்சாது என்பதே.

ஆகவே சலசல என்பது எழும்பும் ஒலியின் அடிப்படையில் அமைந்த ரெட்டைகிளவியே. 

ஆனால் இரெட்டைகிளைவிகள் எப்போது ஒலியின் அடிப்படையில் மட்டுமே அமைவனவும் அல்ல.

பாம்பு சரசர என ஓடியது, என்பதில் சரசர வின் அடிப்படை ஒலி.

பிரியாணி கமகம என மணந்தது என்பதில் கமகம வின் அடிப்படை மணம்.

அவளின் தொடுகை எனக்கு கிளுகிளுப்பாக இருந்தது என்பதில் அடிப்படை தொடுகை உணர்ச்சி,

மக்கள் திபுதிபு என உள்வந்தனர் என்பதில் எந்த உணர்சியும், உணர்வையும் அடிப்படையாக கொள்ளாமல் - கண்களால் காணும் விபரணம் திபுதிபுவின் அடிப்படையாகிறது.

நிழலியின் நண்பர் கால்வாயில் நீர் சலசலத்து ஓடாது என கூறியமைக்கு காரணம் -அவர் மனதில் தோன்றியது தோட்டத்தின் சின்ன கால்வாய்.

ஆறைவிட, ஓடையைவிட, நதியை விட ஆக்ரோசமாக நீர் ஓடும் கால்வாய்களும் உள்ளனவே? ஓடையில் ஓடும் நீர் சலசலக்கும் ஆனால் அதை விட பெரிய கால்வாயில் ஓடும் நீர் சலசலக்காது என்பது சரியாகப்படவில்லலை.

 

Link to comment
Share on other sites

ஆகவே வாய்க்காலில் நீர் சலசலவென ஓடுவது சரியான வர்ணனை என புலப்படுகின்றது. அத்துடன் இது ஒலியின் அடிப்படையில் அமைந்த இரட்டைக் கிளவி என்பதும் தெளிவாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைத்துப்பார்த்தால், ரெட்டைகிளவிகள் எல்லாம் ஏதோ ஒரு புலனுணர்வின் அடிப்படையில் அமைவதாகவே படுகிறது.

குசுகுசு/ சலசல/சரசர/ நறநற ....ஒலி

கசகச (வேர்வை), சிலுசிலு (காற்று), கிளுகிளு..... -தொடுகை

திபுதிபு (கூட்டம்) /புஸுபுஸு (என அழகான நாய்குட்டி)/ செவசெவ (நிறம்) , மொழுமொழு......பார்வை

சுவைக்கும், மணத்துக்கும்தான் அதிகம் இரெட்டைகிளவிகள் இல்லை? 

கமகம ஒன்றை மட்டுமே யோசிக்க முடிகிறது.

சிச்சுவேசன் சாங் கீழே👇

 

 

 

Link to comment
Share on other sites

21 minutes ago, goshan_che said:

நினைத்துப்பார்த்தால், ரெட்டைகிளவிகள் எல்லாம் ஏதோ ஒரு புலனுணர்வின் அடிப்படையில் அமைவதாகவே படுகிறது.

குசுகுசு/ சலசல/சரசர/ நறநற ....ஒலி

கசகச (வேர்வை), சிலுசிலு (காற்று), கிளுகிளு..... -தொடுகை

திபுதிபு (கூட்டம்) /புஸுபுஸு (என அழகான நாய்குட்டி)/ செவசெவ (நிறம்) , மொழுமொழு......பார்வை

சுவைக்கும், மணத்துக்கும்தான் அதிகம் இரெட்டைகிளவிகள் இல்லை? 

கமகம ஒன்றை மட்டுமே யோசிக்க முடிகிறது.

சிச்சுவேசன் சாங் கீழே👇

 

 

பிரித்துப் பார்த்தால் பொருள் இல்லாமல் இருப்பது தான் இரட்டைக் கிளவி என்றால் குசுகுசு இரட்டைக்கிளவியிற்குள் அடங்காது தானே 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலகல என்டு சிரித்தாள்😄

Quote
Quote

 

 

 

Link to comment
Share on other sites

அவள் – இரட்டைக்கிளவி

சலசல எனவரும் சலங்கைகள்
கலகல கவரும் பேச்சுகள்
துறுதுறு செல்லும் விழிகள்
படபட படக்கும் இமைகள்
கமகம மணக்கும் மல்லிகைகள்
மினுமினு மின்னும் கன்னம்
பளபள இருக்கும் கண்ணும்
கிளுகிளு கிளம்பும் உருவம்
சிலுசிலு அடிக்கும் காத்தும்
குடுகுடு வரும் கிழவனுக்கும்
தடதட அடிக்கும் இதயம்
தைதை தாளத்தில் மனசும்
சுடசுட நெஞ்சம் கொதிக்கும்
திபுதிபு இளையர் கூட்டம்
சரசர எண்ணிக்கை கூடும்
மசமச அவள்பின்னே நிற்கும்
வழவழ பலவும் பேசும்
திருதிரு சிலவிழிகள் பிதுங்கும்
கிறுகிறு தலையும் சுற்றும்
முணுமுணுக்கும் அவள் பெயரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

சத்தத்தைக் காரணமாகக் கொண்டதல்ல என்று சொல்லிவிட்டு உடனேயே பாத்திகட்டிய தண்ணீர் சலசலத்து ஓடுவதைக் கண்டிருக்கின்றேன் என்று முரண்படுகின்றீர்கள் விசுகு ஐயா😂🤣

நீங்கள் சலசலத்து ஓடுவதைக் காதால்தான் கண்டிருக்கின்றீர்கள்!!😬

இரட்டைக்கிளவியை விளங்க அழகுராணி ஐஸ்வர்யா ராய் சொல்வதைக் கேளுங்கள்😀

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக
இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால்
பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ”

 

 

முதலில் எழுதியிருப்பதை  வாசியுங்களப்பா

கண்டிருக்கின்றேன்  என்று  தானே எழுதியிருக்கின்றேன்

 

கீழே  கோசாண் விரிவாக  தந்துள்ளார்

ஆறைவிட, ஓடையைவிட, நதியை விட ஆக்ரோசமாக நீர் ஓடும் கால்வாய்களும் உள்ளனவே? ஓடையில் ஓடும் நீர் சலசலக்கும் ஆனால் அதை விட பெரிய கால்வாயில் ஓடும் நீர் சலசலக்காது என்பது சரியாகப்படவில்லலை.

நன்றி  சகோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை கிளவி சொற்களும் அதன் பொருள்களும்

01. கத கத - விரைவாக
02. கடகட - விரைவாக, ஒலிக்குறிப்பு
03. கரகர - காய்ந்து இருத்தல்
04. கம கம - மணம் வீசுதல்
05. கண கண - உடம்புச் சூடு
06. கலகல - சிரிப்பு
07. கடுகடு - போபமாக பேசுதல்
08. கறகற - தொந்தரவு
09.கலீர் கலீர் - சலங்கையொலி
10. கணீர் கணீர் - மணி ஒலி
11. கிணு கிணு - மெல்ல இரைதல்
12. கிறுகிறு - விரைவாக /சுற்றுதல்
13.  கிளு கிளு - சிரித்தல் / மகிழ்ச்சி
14. கிடுகிடு - விரைவாக /அச்சம்
15. கீச்சுகீச்சு - ஒலிக்குறிப்பு (பறவைகளின் ஒலி)
16. கீர்கீர் - ஒலிக்குறிப்பு (கத்துதல்)
17. குடுகுடு - விரைந்தோடித் திரிதல், நடத்தல்
18. குளுகுளு - தென்றல் காற்று / குளிர்
19. குபீர் குபீர் - குருதி பாாய்தல்
20. குறு குறு - மனம் உறுத்துதல்
21. குசுகுசு - ரகசியம் பேசுதல்
22. குமுகுமு - மிக மணத்தல்
23. குபுகுபு - புகை கிளம்புதல்
24. கொழு கொழு - பருத்தல்
25. சட சட - ஒலிக்குறிப்பு (பரபரத்தல்), சிறகுகளை அடித்துக் கொள்ளல், முறிதல்
26. சடார் சடார் - பொருட்கள் மோதுதல்/விழுதல்
27. சரசர - ஒலித்தல் ,உரசல் ஒலி
28. சலசல - ஒலிக்குறிப்பு , நீரின் ஓசை
29. சளசள - ஓயாத இரைச்சல் பேச்சு
30. சிலீர் சிலீர் - குளிர்தல்
31. சிடுசிடு - எரிச்சல் கலந்த கோபம்
32.  சுள்சுள் - வலித்தல்
33. சுறு சுறு - கோபம்
34. டாங்டாங் - ஒலிக்குறிப்பு (மணி ஒலி)
35. தடதட - நாத்தட்டுதல், முரட்டுத்தனமாக
36.  தரதர - தரையில் உராயும் வகையில் இழுத்தல்
37. தளதள - இளக்கம், சோபை
38. தழுதழு - நாத்தடுமாறுதல்
39. தகதக - ஜொலிப்பு ,எரிதல் , மின்னுதல்
40. திருதிரு - அச்சம் ,முழித்தல்
41. திடு திடு - விரைவான ஓட்டம்
42. துடு துடு - ஒலிக்குறிப்பு
43. துருதுரு - சுறுசுறுப்பு
44. துடி துடி - இரங்குதல் ,வலியால் அவதியுறல்
45. தொளதொள - இறுக்கமின்மை
46.  தொண தொண - இடைவிடாது பேசுதல்
47. நறு நறு - கோபம்
48. நற நற - பல்லைக் கடித்தல்
49. நெருநெரு - உறுத்தல்
50. நொளுநொளு - குழைவு
51. பள பள - மினுங்குதல்
52. பரபர - நிதான இழப்பு ,அவசரம் ,வேகமாக செயற்படல்
53. பகபக - வேக குறிப்பு
54. பளிச் பளிச் - மின்னுதல்
55. படபட - இதயத்துடிப்பு
56. பளார் பளார் - கன்னத்தில் அறைதல்
57. பளீர் பளீர் - மின்னல்
58. பிசுபிசு - பசைத்தன்மை
59. புறு புறு - முணுமுணுத்தல்
60. பொல பொல - கண்ணீர் வடிதல்
61. பொலுபொலு - உதிர்தல்
62. மடமட - வேகமாக நீர் குடித்தல்
63. மளமள - முறிதல்
64. மினுமினு - பிரகாசித்தல், மிளிர்தல்
65. மெது மெது - மென்மை
66. மொழு மொழு - வளர்ச்சி
67. மொறமொற - மிகக் காய்தல்
68. மொர மொர - கடித்தல்
69. வழவழ - உறுதியின்மை
70. வளவள - பயனின்றி பேசுதல்
71. வளுவளு - நொளு நொளுத்தல்
72. விதிர்விதிர் - அச்சம்
73. விசுக் விசுக் - வேகநடை
74. விண் விண் - வலித்தல்
75. விடுவிடு - வேகமாக
76. விறுவிறு - வேகமாக, பரபரப்புடன்
77. வெடுவெடு - கோபமான பேச்சு்
78. வெதுவெது - இளஞ்சூடு
79. வெலவெல - நடுங்குதல், பதறுதல்

இணையத்தில் எடுத்தது

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சடார், சிலீர், கலீர், கணீர் போன்றன இரட்டை சொற்களாய் பாவிக்கப்பட்டாலும், தனித்தும் பொருள் தருவதால் அவை இரட்டை கிளவிகள் அல்ல என்றே நினைக்கிறேன்.

உ+ம்

பெரும் காற்றில் ஆல மரம் சடாரெனெ முறிந்தது 

ஓடையின் நீர் அந்த அதிகாலையில் அவன் முகத்தில் பட்டபோது, சிலீரென்றிருந்தது

நிசப்தமாய் இருந்த அந்த அறையில் அவளின் ஒற்றை சலங்கை மட்டும் கலீர் என்ற ஒலியை ஏற்படுத்தியது

சிறுவயது முதலே அவன் கணீரென்ற குரலில் தேவாரம் பாடுவது வழக்கம்.

 

7 hours ago, நிழலி said:

பிரித்துப் பார்த்தால் பொருள் இல்லாமல் இருப்பது தான் இரட்டைக் கிளவி என்றால் குசுகுசு இரட்டைக்கிளவியிற்குள் அடங்காது தானே 😄

இரெட்டைகிளவிக்குள் மட்டு அல்ல ஐயா, இது எங்கேயும், எப்போதும் அடங்காது 😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

 

 

இரெட்டைகிளவிக்குள் மட்டு அல்ல ஐயா, இது எங்கேயும், எப்போதும் அடங்காது 😅

பறிஞ்சிடும்......வெட  வெட என தொடைகளும் நடுங்கிடும்.....!  😂 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.