Jump to content

மத வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடுவதை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்!


Recommended Posts

கொரோனா தொற்றை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய சகல வழிபாட்டு நிகழ்வின் போது பக்தர்கள் பெருமளவில் கூடுவதை தவிர்த்துக்கொள்வதற்கு முடிந்த வரையில் முயற்சிக்குமாறு அனைத்து மத தலைவர்களிடமும் நாம் கேட்டுக்கொண்டுள்ளோம் என்று புத்தசாசன, கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மத தலைவர்களுக்கும் நாம் அறிவித்துள்ளோம். இது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தகளையும் நடத்தியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் சுகாதார நலனை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் முன்னெடுக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்துக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கையை அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார். இதேபோன்று திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடுவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நாம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.

மறு அறிவித்தல் வரை இது நடைமுறையில் இருக்கும். கொரோனா தொற்று மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் இடம்பெறக்கூடும் என்பதினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் 187 திரையரங்குகள் உண்டு, இவற்றில் 170 மாத்திரமே செயற்படுகின்றன. விசேடமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு போன்ற திரையங்குகளில் தமிழ் சினிமாப் படங்கள் திரையிடப்படும் இடங்களில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுவர்.

இதேபோன்று ஆங்கில திரைப்படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகளிலும் இரசிகர்கள் கூடுகின்றனர். மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்த முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/77820
<p></p>

Link to comment
Share on other sites

ஞாயிறு திருப்பலி, ஆராதனைகள் குறித்து பேராயரின் வேண்டுகோள் !

அனைத்து ஆலயங்களிலும் ஆராதனைகள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சுறுத்தலையடுத்தே பேராயர் இவ்வாறு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அனைத்து தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் மற்றும் பிற ஆராதனைகள் முன்னெடுப்பதை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை தவிர்க்குமாறு பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் ஏனைய தினங்களில் இடம்பெறும் பிரார்த்தனைகள் மற்றும் ஆராதனைகளை தவிர்க்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 10 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/77825

 

Link to comment
Share on other sites

தலதா மாளிகையில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடு

தலதா மாளிகைக்கு வரும் உள்நாட்டு,வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,  விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தளதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

அதன்படி முதற் காரணியாக, மாளிகைக்குள் வருவோர் முகம்,கை,கால் கழுவிட்டு தூய்மையாக உள்வருவதற்கான ஏற்பாடுகளும், விஷக்கிருமிகளை அழிப்பதற்கான மருந்து வகையொன்றை பெற்றுக்கொடுத்த பின்னர் உள்நுழைய முடியுமெனவும் தெரிவித்துள்ளார். 

அத்தோடு விஷக் கிருமிகளை ஒழிப்பதற்காக மேறகொள்ளப்பட்டுள்ள சில பாதுகாப்பு ஏற்பாடுகள்  காரணமாக மாளிகைக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி அந்த சூழலில் நடமாட முடியுமெனவும் தெரிவித்துள்ளார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/தலத-மளகயல-வஷட-பதகபப-ஏறபட/175-246871

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

தலதா மாளிகையில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடு

தலதா மாளிகைக்கு வரும் உள்நாட்டு,வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,  விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தளதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

அதன்படி முதற் காரணியாக, மாளிகைக்குள் வருவோர் முகம்,கை,கால் கழுவிட்டு தூய்மையாக உள்வருவதற்கான ஏற்பாடுகளும், விஷக்கிருமிகளை அழிப்பதற்கான மருந்து வகையொன்றை பெற்றுக்கொடுத்த பின்னர் உள்நுழைய முடியுமெனவும் தெரிவித்துள்ளார். 

அத்தோடு விஷக் கிருமிகளை ஒழிப்பதற்காக மேறகொள்ளப்பட்டுள்ள சில பாதுகாப்பு ஏற்பாடுகள்  காரணமாக மாளிகைக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி அந்த சூழலில் நடமாட முடியுமெனவும் தெரிவித்துள்ளார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/தலத-மளகயல-வஷட-பதகபப-ஏறபட/175-246871

 

நல்லதே நடக்கும்.....கும்பலாக போங்க...கும்பலாக குடுங்க....2009 ..எங்களால் மறக்க முடியாதது தானே...கடவுள் எம்பக்கம் இருந்தால்..

Link to comment
Share on other sites

பள்ளிவாசல்களில் மறுஅறிவித்தல் வரை தொழுகைகள் நிறுத்தம்

 

மறுஅறிவித்தல் வரை ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ தொழுகைகளை இடைநிறுத்துமாறு சகல மக்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ.முபாரக் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படல் வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனமும்,இலங்கை சுகாதார அமைச்சும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.இதற்கு அமைவாக மஸ்ஜித்களில் ஜும்ஆ, ஐவேளை, ஜமாஅத் தொழுகைகள் உட்படஏனைய எல்லா வகையான ஒன்றுகூடல்களையும் உடன்அமுலுக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரும்வரை இடைநிறுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல்உலமா நாட்டு முஸ்லிம்களை அன்பாக வேண்டிக் கொள்கின்றது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறும், அதனை அமுல்படுத்துவதில் பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் கண்டிப்போடு நடந்துகொள்ளுமாறும் வேண்டுகோள்விடுக்கிறது எனவும அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து முன் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுமாறும் உலமா சபை கோரியுள்ளது.

பொதுவாக அனைத்து நோய்களுக்குரிய நிவாரணியை அல்லாஹுத்தஆலா இறக்கி வைத்திருக்கின்றான். அல்லாஹுத்தஆலா எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என்று தெரிவித்துள்ள அந்த அமைப்பு,

தற்பொழுது பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதனால், அதனைக் கட்டுப்படுத்த ஒவ்வவொரு நாடும் தற்பாதுகாப்பு முயற்சிகளைச் செய்து வருகின்றன. அதேபோன்று எமது நாட்டிலும் இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு அரசாங்கம் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது விடயமாக அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கும் வழிகாட்டல்களை பின்பற்றி இந்த நோய் இலங்கையில் பரவாமல் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும் எனவும் கோரியுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத்தடுப்பது சம்பந்தமாக, உலமா சபை பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ஜும்ஆ மற்றும் ஜவேளைத்தொழுகை உட்படஅனைத்து ஒன்றுகூடல்களையும் மஸ்ஜித் மற்றும் பொதுஇடங்களில் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

உரியநேரத்திற்கு ஒவ்வொரு மஸ்ஜிதிலும் அதான் சொல்ல வேண்டும். அதானின் முடிவில் “ஸல்லூ பீ ரிஹாலிகும்” (நீங்கள்இருக்கும் இடங்களில் தொழுதுகொள்ளுங்கள் என்றுஅறிவிக்க வேண்டும்.

மஸ்ஜிதில் இருக்கும்இமாம் மற்றும்முஅத்தின் போன்றவர்கள் மஸ்ஜிதிலேயே ஜமாஅத்தாகத் தொழுதுகொள்ள வேண்டும்.

வீட்டில்உள்ளவர்கள் ஐவேளைத்தொழுகைகளை உரியநேரத்தில் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும். முன்பின் சுன்னத்தானதொழுகைகள் மற்றும்ஏனைய தஹஜ்ஜுத், ழுஹா, சதகா, நோன்பு போன்ற நபிலானவணக்கங்களில் கூடியகவனம் செலுத்துவதோடு பாவமான காரியங்களிலிருந்து விலகிநிற்றல்.

பிள்ளைகள் விடுமுறையில் இருப்பதனால், அவர்கள் சுற்றுலா செல்லுதல், பாதையில்கூடிவிளையாடுதல் போன்ற விடயங்களைத்தவிர்த்து, குர்ஆன்ஓதுதல், துஆ, மற்றும்கற்றல், கற்பித்தல் போன்றநல்ல விடயங்களில்ஈடுபடுத்து வதில்பெற்றோர் கூடுதல்கவனம் செலுத்தல்.

ஒருவர்மற்றவரை சந்தித்தால்ஸலா கூறுவதும்முஸாபஹாசெய்வதும்சுன்னத்தாகும். எனினும், COVID19என்ற நோய்கைகள்மூலம் அதிகமாகப்பரவ வாய்ப்புள்ளது என்றுவைத்திய நிபுணர்கள் கருதுவதால், ஒருவர்மற்றவரை சந்திக்கும்பொழுது முஸாபஹாசெய்வதைத் தவிர்த்து ஸலாம்சொல்வதுடன் போதுமாக்கிக் கொள்ளுதல்.

ஜனாஸாவின் கடமைகளைமார்க்க விதிமுறைகளைப் பேணி நிறைவேற்றுவது எம்மீதுள்ள கடமையாகும். இக்கால சூழ்நிலையை கவனத்திற்கொண்டு அடக்கம்செய்யும் விடயத்தில் ஜனாஸாவிற்கு செய்யவேண்டிய முக்கியகடமைகளுடன் சுருக்கிக் கொள்ளல். சமூகவலைத்தளங்களில் மார்க்கத்திற்கு முரணானமற்றும் ஊர்ஜிதமற்ற தகவல்களைப் பரப்பு வதைத்தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.

https://www.thinakaran.lk/2020/03/16/உள்நாடு/49614/பள்ளிவாசல்களில்-மறுஅறிவித்தல்-வரை-தொழுகைகள்-நிறுத்தம்

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

பள்ளிவாசல்களில் மறுஅறிவித்தல் வரை தொழுகைகள் நிறுத்தம்

முசுலீம்களின் மதவெறித் தொழுகைகளை நிறுத்துவதில் கொரோனா வைரஸ் வெற்றிகண்டுள்ளது.

இப்ப ஆவது மனித இனம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்டதை உணர்ந்தா சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயங்களில் பெருமளவில் திரண்டு வழிபடுவதை தவிர்த்து வீடுகளில் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்யுங்கள் – ஆதீன குரு முதல்வர்கள் கோரிக்கை

உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா தாக்கம் குறித்து நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தென்கயிலை ஆதீன முதல்வர் சிவத்திரு அகத்தியர் அடிகளார், மெய்கண்டார் ஆதீன முதல்வர் தவத்திரு உமாபதி சிவம் அடிகளார் ஆகியோர் இணைந்து ஆலயங்களில் பெருமளவில் திரண்டு வழிபடுவதை தவிர்த்து வீடுகளில் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்வதன் மூலம் கொரோனாவின் பிடியில் இருந்து பாதுகாப்புப் பெறுவதுடன் அது பரவுவதையும் கட்டுப்படுத்த உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆலயத் திருவிழாக்களை இயன்றளவு எளிமையாக மக்கள் நெரிசல் இல்லாமல் நிகழ்த்த ஏற்பாடு செய்யுங்கள். விசேட நிகழ்வுகளைத் தவிர்ப்பதுடன் அன்னதானம் வழங்குவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.புலம்பெயர் தேசங்களில் இருந்து இரு வாரங்களுக்குள் நாட்டிற்குத் திரும்பியவர்கள் ஆலயங்களிற்குச் செல்வதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கொடிய நோயிலிருந்து உலக மக்களைக் காப்பாற்ற இறைவனை மனமுருகி பிரார்த்திப்போம்.

இன்று உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா அபாயத்திற்கு எமது நாடும் உட்பட்டுள்ளது. இதற்கான தடுப்பு நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு சைவ மக்களையும் ஆலயங்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.ஆலயங்களில் பெருமளவில் திரண்டு வழிபடுவதை தவிர்த்து வீடுகளில் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்வதன் மூலம் கொரோனாவின் பிடியில் இருந்து பாதுகாப்புப் பெறுவதுடன் அது பரவுவதையும் கட்டுப்படுத்த உதவுங்கள் என சைவ மக்களிடம் ஆதீன குரு முதல்வர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/ஆலயங்களில்-பெருமளவில்-தி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொர்னோவை  பார்த்து புத்தனும் ,அல்லாவும் ,யேசுவும் ,சிவனும் ஓடியே போய் விட்டனர் .

Link to comment
Share on other sites

26 minutes ago, பெருமாள் said:

கொர்னோவை  பார்த்து புத்தனும் ,அல்லாவும் ,யேசுவும் ,சிவனும் ஓடியே போய் விட்டனர் .

உண்மை தான் கொராணாவுக்கு மனிதன்  தனது அறிவின் மூலம் மருந்து கண்டு பிடித்து அதை கட்டுப்படுத்தி சுகாதார வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியபின்னர் மதவாதிகள் ஒடிய இந்த நால்வரையும்  அழைத்துவந்து தமது வியாபாரத்தையும் மற்ற அடுத்த  மத வெறுப்பையும் தொடர்வார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

உண்மை தான் கொராணாவுக்கு மனிதன்  தனது அறிவின் மூலம் மருந்து கண்டு பிடித்து அதை கட்டுப்படுத்தி சுகாதார வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியபின்னர் மதவாதிகள் ஒடிய இந்த நால்வரையும்  அழைத்துவந்து தமது வியாபாரத்தையும் மற்ற அடுத்த  மத வெறுப்பையும் தொடர்வார்கள். 

-ஊரில் சியா மாசெட்டி வந்தவுடன் சாதி பார்த்து வாழ்ந்த கூட்டம் மறந்த கதை போல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, tulpen said:

உண்மை தான் கொராணாவுக்கு மனிதன்  தனது அறிவின் மூலம் மருந்து கண்டு பிடித்து அதை கட்டுப்படுத்தி சுகாதார வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியபின்னர் மதவாதிகள் ஒடிய இந்த நால்வரையும்  அழைத்துவந்து தமது வியாபாரத்தையும் மற்ற அடுத்த  மத வெறுப்பையும் தொடர்வார்கள். 


 

மனிதனைப் படைத்த அதே கடவுள், நோயையும் படைத்திருக்கிறான்.

நோய் வந்தால் மருத்துவம் செய், என்பதையும் அதே கடவுள்தான் சொல்கிறார்.

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தன்னை தாக்காது என்றும், பரமசிவன் எங்களை பாதுகாக்கிறார் எனவும் நித்யானந்தா டுவிட்டரில் கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் என்னை தாக்காது. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களை பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார்".

https://www.bbc.com/tamil/india-51903285

Link to comment
Share on other sites

இறைவனை எங்கிருந்தும் தேடலாம்। ஆலயத்தில் போய் பங்குபற்றவிடடாலும் பரவயில்லை, வீட்டிலிருந்தும் கடவுளை வணங்கலாம்। நாடடை ஆளும் அதிகாரிகளுக்கும், சட்ட்திட்கும் மக்கள் மதிப்பளிக்க வேண்டும்।

24 minutes ago, ampanai said:

கொரோனா வைரஸ் தன்னை தாக்காது என்றும், பரமசிவன் எங்களை பாதுகாக்கிறார் எனவும் நித்யானந்தா டுவிட்டரில் கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் என்னை தாக்காது. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களை பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார்".

https://www.bbc.com/tamil/india-51903285

அந்த பொம்பிளை பொருக்கி சாமி பிறந்த , வளர்ந்த இடம் தெரியும்தானே। அதே கள்ள புத்தி, தந்திர பேச்சுக்கள்। அந்த பொறுக்கியை பின்பற்றும் எருமை மாடுகள்  இருக்கும் வரைக்கும் இப்படித்தான் பேசுவான்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

பள்ளிவாசல்களில் மறுஅறிவித்தல் வரை தொழுகைகள் நிறுத்தம்

எல்லாவற்றிலும் பெரிய இறைவன் என்று சொல்லபடுகிற அல்லா தொடங்கி எல்லா இறைவன்களுமே வெறும் வெற்று வேட்டுகள் என்பதை கொறொனாவைரஸ் நிருபித்துள்ளது.

Link to comment
Share on other sites

1 minute ago, விளங்க நினைப்பவன் said:

எல்லாவற்றிலும் பெரிய இறைவன் என்று சொல்லபடுகிற அல்லா தொடங்கி எல்லா இறைவன்களுமே வெறும் வெற்று வேட்டுகள் என்பதை கொறொனாவைரஸ் நிருபித்துள்ளது.

நாத்திகனையும் அல்லவா விட்டுவைக்கவில்லை ? 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கொர்னோவை  பார்த்து புத்தனும் ,அல்லாவும் ,யேசுவும் ,சிவனும் ஓடியே போய் விட்டனர் .

எனக்கொரு வ்ச்சப் மெசேச் வந்தது '" கொறோனாவிலிருந்து பாதுகாப்பதற்கு  இந்த ஜெபத்தைக் கூறுங்கள் "" என.

நான் கேட்டேன் "" சாப்பட்டிற்கு முன்பா பின்பா ?"" என .

இன்னும் பதிலைக் காணோம்.

 

1 hour ago, மாங்குயில் said:


 

மனிதனைப் படைத்த அதே கடவுள், நோயையும் படைத்திருக்கிறான்.

நோய் வந்தால் மருத்துவம் செய், என்பதையும் அதே கடவுள்தான் சொல்கிறார்.

சைவக் கடவுளா வேதக் கடவுளா அல்லது அல்லாவா ?

எந்தக் கடவுள் ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, ampanai said:

நாத்திகனையும் அல்லவா விட்டுவைக்கவில்லை ? 🙂 


கோரோனோ வைரஸ் பொசிட்டிவ் ஆக இருக்கும் நாத்திகர்களின் நாவுகள் அவர்களையறியாமலே இறைவனைத் துதிக்க ஆரம்பிப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

 

Link to comment
Share on other sites

26 minutes ago, மாங்குயில் said:


கோரோனோ வைரஸ் பொசிட்டிவ் ஆக இருக்கும் நாத்திகர்களின் நாவுகள் அவர்களையறியாமலே இறைவனைத் துதிக்க ஆரம்பிப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

 

அப்படி என்றால் எல்லோருடைய நாவும் இறைவனை துதிக்கப்போகிறதென்று சொல்லுகிறீர்கள்। Good.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, ampanai said:

நாத்திகனையும் அல்லவா விட்டுவைக்கவில்லை ? 🙂 

நாத்திகன் என்றால் ஏதோ இறைவனினின் அவதாரம் ஒரு சாமி  அதனால் நோய் வராது  என்று நினைத்துவிட்டீர்கள்.மனிதர்களுக்கு நோய் வருவது இயற்கை என்று நம்புபவர்கள் அவர்கள். அவர்களுக்கு நோய் வந்தால் டொக்டரிடம் போய் மருந்து எடுத்து கொள்வார்கள்

இறைவா எனக்கு நோய் வராமல் காப்பாற்று என்று இறைவனிடம் மன்றாடுபவர்கள் பக்தர்கள்.
பக்தர்களுக்கு நோய் வந்தால் இறைவனிடம் நோயை குணப்புடுத்தும் படி காசும் கொடுத்து மன்றாடி பிரார்த்தனை செய்து விட்டு பின்பு டொக்டரிடமும் சென்று மருந்து வாங்கி குடிப்பார்கள். டொக்டரின் கொடுத்த மருந்தால் நோய் மாறினால் இறைவனுக்கு நன்றி என்பார்கள்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞானம் விண்ணை முட்டினாலும் இயற்கை மூலம் தன்னை நிரூபிக்கின்றான் .
அவனின்றி அணுவும் அசையாது.
கடவுள் இல்லை...இல்லை எனும் போதுதான் இயற்கை அழிவுகளும் கூடிக்கொண்டே போகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

விஞ்ஞானம் விண்ணை முட்டினாலும் இயற்கை மூலம் தன்னை நிரூபிக்கின்றான் .
அவனின்றி அணுவும் அசையாது.
கடவுள் இல்லை...இல்லை எனும் போதுதான் இயற்கை அழிவுகளும் கூடிக்கொண்டே போகின்றது.

என்ன உங்கடை வெடி நநைந்து போச்சுது போல.ஒரு அசுமாத்ததையும் கானோம்.நானும் அங்கால ஒன்டு போட்டிருக்கறன் பாப்போம்😂

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

விஞ்ஞானம் விண்ணை முட்டினாலும் இயற்கை மூலம் தன்னை நிரூபிக்கின்றான் .
அவனின்றி அணுவும் அசையாது.
கடவுள் இல்லை...இல்லை எனும் போதுதான் இயற்கை அழிவுகளும் கூடிக்கொண்டே போகின்றது.

இயற்கையை அறிவதுதான் விஞ்ஞானம். அந்த அணுவும் அது சொல்லித்தான் தொியும். விஞ்ஞானத்தை புரிந்து கொள்ள முயற்சியும், பயிற்சியும், தைரியமும் இல்லாமல் குறுக்கு வழியில் செல்ல எத்தனிப்பவர்களின் விளக்கம் அல்லது கட்டுக் கதையே கடவுள். அப்படியொன்று இருந்தாலும் அது எமக்கு விஞ்ஞானம் அறித்தந்த இந்த பூமியையும் சூரியக் குடும்பத்தை மட்டுமின்றி இது போன்ற எல்லா நட்சத்திரங்கள் மற்றும் அதை சுற்றும் பூமி போன்ற கிரகங்கள் மற்றும் அதில் வாழும் ஏனைய உயிரிகளையும் சோ்த்தே படைத்திருக்கும். தற்போது எமக்கிருக்கும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அறிவை கொண்டு அதை "அவன்" என்றும் "அவள்" என்றும் உருவகப்படுத்தி அதனுடன் இருவழி தொடர்பு கொள்வது போன்று நடப்பது அல்லது நடிப்பது மனிதனின் மனத்தில் உள்ள ஒருவகை தன்மை அல்லது குறைபாடு. நோவிற்கு எப்படி வலிநிவாரணி உதவுகின்றதோ அது போன்றே இயலாமையின் போது இந்த இறைநம்பிக்கை உருவாகிறது. இது பிரச்சனையை தீர்க்க உதவாது ஆனால் காலத்தை கடத்த உதவும்.

இயற்கை அழிவுகள் கூடுகின்றமைக்கான ஒப்பீட்டு தரவுகள் இல்லை. இயற்கை அன்றும் இன்றும் அப்படியே இருக்கிறது. மனித இனப்பெருக்கமும் அதன் செயற்பாடுகளால் இயற்கையில் ஏற்படும் மாற்றமும் செயற்கையானவையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, சாணக்கியன் said:

 தற்போது எமக்கிருக்கும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அறிவை கொண்டு அதை "அவன்" என்றும் "அவள்" என்றும் உருவகப்படுத்தி அதனுடன் இருவழி தொடர்பு கொள்வது போன்று நடப்பது அல்லது நடிப்பது மனிதனின் மனத்தில் உள்ள ஒருவகை தன்மை அல்லது குறைபாடு. நோவிற்கு எப்படி வலிநிவாரணி உதவுகின்றதோ அது போன்றே இயலாமையின் போது இந்த இறைநம்பிக்கை உருவாகிறது. 


 

உலகில் வாழும் பெரும்பாலான செல்வந்த மக்களும் இறை நம்பிக்கையோடுதான் வாழ்கிறார்கள்.

இயலாமையின்  வெளிப்பாடுதான், இறைநம்பிக்கை உருவாக காரணம்  என்ற கற்பிதம் பிழையானது.

மனிதனின் இயலாமை, முதுமை, தொய்வு நிலை, குடும்பத்தால் தனித்து விடப்படல் போன்றவற்றால், இறை நம்பிக்கை இயற்கையாகவே அதிகரிக்கும்.

செல்வந்தர்களின் நிலையும் அப்படித்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சாணக்கியன் said:

இயற்கையை அறிவதுதான் விஞ்ஞானம். அந்த அணுவும் அது சொல்லித்தான் தொியும். விஞ்ஞானத்தை புரிந்து கொள்ள முயற்சியும், பயிற்சியும், தைரியமும் இல்லாமல் குறுக்கு வழியில் செல்ல எத்தனிப்பவர்களின் விளக்கம் அல்லது கட்டுக் கதையே கடவுள். அப்படியொன்று இருந்தாலும் அது எமக்கு விஞ்ஞானம் அறித்தந்த இந்த பூமியையும் சூரியக் குடும்பத்தை மட்டுமின்றி இது போன்ற எல்லா நட்சத்திரங்கள் மற்றும் அதை சுற்றும் பூமி போன்ற கிரகங்கள் மற்றும் அதில் வாழும் ஏனைய உயிரிகளையும் சோ்த்தே படைத்திருக்கும். தற்போது எமக்கிருக்கும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அறிவை கொண்டு அதை "அவன்" என்றும் "அவள்" என்றும் உருவகப்படுத்தி அதனுடன் இருவழி தொடர்பு கொள்வது போன்று நடப்பது அல்லது நடிப்பது மனிதனின் மனத்தில் உள்ள ஒருவகை தன்மை அல்லது குறைபாடு. நோவிற்கு எப்படி வலிநிவாரணி உதவுகின்றதோ அது போன்றே இயலாமையின் போது இந்த இறைநம்பிக்கை உருவாகிறது. இது பிரச்சனையை தீர்க்க உதவாது ஆனால் காலத்தை கடத்த உதவும்.

இயற்கை அழிவுகள் கூடுகின்றமைக்கான ஒப்பீட்டு தரவுகள் இல்லை. இயற்கை அன்றும் இன்றும் அப்படியே இருக்கிறது. மனித இனப்பெருக்கமும் அதன் செயற்பாடுகளால் இயற்கையில் ஏற்படும் மாற்றமும் செயற்கையானவையே.

👍மிகவும் அருமையான விளக்கம்.

Link to comment
Share on other sites

On 3/16/2020 at 11:51 AM, மாங்குயில் said:


 

மனிதனைப் படைத்த அதே கடவுள், நோயையும் படைத்திருக்கிறான்.

நோய் வந்தால் மருத்துவம் செய், என்பதையும் அதே கடவுள்தான் சொல்கிறார்.

அப்படி சோன்னாரா? யாருக்கு சொன்னார்?  திரு நீறு சர்வ ரோக நிவாரணி, கந்தன் திருநீரணிந்தால்  கண்ட பிணி நீங்கும் என்று அவர் கூறியதாகவும் பாண்டியனின் வெப்பு நோய் வைத்தியம் பார்காமலே திரு நீறால் சுகமடைந்ததாகவும்  சமய ஆசிரியர் எனக்கு சொன்னார். இப்போது திரு நீறை கையால் எடுக்க வேண்டாம் கரண்டியால் எடுக்க சோல்லி  கோவில்களில் வலியுறுத்துகிறார்கள். கொரோனா வைரசின் சக்தியின் முன்னால் திருநீறால் தாக்கு பிடிக்க முடியாது என்று கோவில்களில் கூறுகிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.