Jump to content

என்னை உணரவைக்க வந்ததா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னை உணரவைக்க வந்ததா?
-------------------------------------------------------------------
இறுமாப்பில் எழுந்தாய்  
நீ மானிடனே 
என்னை வென்றதாய்
என்னைப் புறந்தள்ளி
இமயத்தையும் கடந்தாய்
ஈரேழு உலகும் பறந்தாய்
மறந்தாய் உன்னை;
உன்னை மட்டுமல்ல
என்னையும் மறந்தாய்
எங்கெங்கோ பறந்தாய்
என்னைப் பாதுகாக்க
என்னோடு இணைந்து செல்ல
சிந்திக்கவும் மறந்தாய்
காணும் பொருளெங்கும்
கண்கள் அலைபாய
விண்ணையும் மண்ணையும்
உன் எண்ணப்படி கடந்தாய்
உன்னை அளப்பாய்
என்னையும் அளப்பாய்
ஆனால் அழிக்காதே! 
முன்னோர் சொன்னவற்றை
உதறித் தள்ளவிட்டு
உன் போக்கில் போகின்றாய்
எனக்காக எல்;லாம் 
என்று சொன்னாய்
உனக்காக ஏதும் இல்லை
என்று சொல்லி வந்தது கொறொனா!
பணமருக்கும் பொருளிருக்கும் 
ஊர்சேர்ந்த உறவிருக்கும்
உயிர்த்துணையாள் மனையிருக்க
உனக்கு ஏதும் இல்லையடா
என்று சொல்ல வந்ததுவோ கொறொனா!
சிந்தை கொள்வாய்
சிறகு விரித்தெழும் மானிடனே
பற பற எதற்காகப் பறக்கின்றாய்
என்றொருமுறை உன்னைக் கேட்பாயா?

உறவுகளே  
நட்புடன்
நொச்சி
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது கவிதை

யாழ்கள 22 வது அகவைப் பகுதியில் பதிந்திருக்கலாமே நீங்கள் இக் கவிதையை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்கத் தூண்டும் சிறப்பான கவிதை நொச்சி....பாராட்டுக்கள்.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றாக இருக்கிறது கவிதை

யாழ்கள 22 வது அகவைப் பகுதியில் பதிந்திருக்கலாமே நீங்கள் இக் கவிதையை

பாராட்டி ஊக்குவிக்கும் தங்களுக்கு எனது நன்றி.

நீங்கள் சுட்டியபடி  22ஆவது அகவை நிறைவுச் சுய ஆக்கப் பகுதிக்கு மாற்றிய நிர்வாகத்தினருக்கும் நன்றி.

29 minutes ago, suvy said:

சிந்திக்கத் தூண்டும் சிறப்பான கவிதை நொச்சி....பாராட்டுக்கள்.....!  👍

பாராட்டி ஊக்குவிக்கும் சுவியவர்களுக்கு எனது நன்றி. என்றாலும் உங்கள் சிந்தனையை விடவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, nochchi said:

பணமருக்கும் பொருளிருக்கும் 
ஊர்சேர்ந்த உறவிருக்கும்
உயிர்த்துணையாள் மனையிருக்க
உனக்கு ஏதும் இல்லையடா
என்று சொல்ல வந்ததுவோ கொறொனா!

உண்மை தான் நொச்சி.
தனியே வந்த மாதிரி தனியே போக வேண்டியது தான்.
கடைசி வழிக்கு கண்ணால் பார்க்கவும் கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை. கொரோனா போக மீண்டும் மரத்தில் ஏறி விடுவோம். 
பாராட்டுக்கள்  நொச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதம் இயற்கையை வைத்து பாடம் படிக்க வேண்டும்.
மாறக இயற்கைக்கு பாடம் படிப்பிக்கக்கூடாது.
பாராட்டுக்கள் நொச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான் நொச்சி.
தனியே வந்த மாதிரி தனியே போக வேண்டியது தான்.
கடைசி வழிக்கு கண்ணால் பார்க்கவும் கிடையாது.

நன்றி . எனது கவிதையை விட உங்கள் கருத்தின் வரிகள் வலிக்கிறது. கடந்த சில வாரங்களாக மக்கள் ஓடும் ஓட்டம்.தேடும் தேடல்கள். நீர் மற்றும் பொருட்களின் கொள்வனவு. மலகூடக்காகிதம் உட்பட காலியான பெருவணிக நிலையங்கள்.....................என்று இந்த உலகுபடும் பாடு. என்ன கரணியம்  புரியாத உலகல்ல. புரிந்தும் அடங்காத உலகு. அடக்க முயலும் இயற்கை............. மீண்டும் நன்றி.

7 minutes ago, Kavallur Kanmani said:

நல்லதொரு கவிதை. கொரோனா போக மீண்டும் மரத்தில் ஏறி விடுவோம். 
பாராட்டுக்கள்  நொச்சி.

உண்மை.தங்களின் பாராட்டுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி.  
மரங்களையாவது மனிதர் பாதுகாத்தால் மட்டுமே இந்த உலகு வாழும். செய்வோமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

மனிதம் இயற்கையை வைத்து பாடம் படிக்க வேண்டும்.
மாறக இயற்கைக்கு பாடம் படிப்பிக்கக்கூடாது.
பாராட்டுக்கள் நொச்சி.

உண்மை.தங்களின் பாராட்டுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி. 

எப்போது உணரும் இந்த உலகு. இயற்கையோடு ஒத்துவாழும் உலகு  தொலைந்து தொலைவுக்குப் போக மனிதரை நோக்கி அழிவு நெருங்கிவந்து அப்பப்போ உணர்த்தகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

என்னை உணரவைக்க வந்ததா?

எங்களை உணர வைக்கவே வந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

எங்களை உணர வைக்கவே வந்தது

தங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் உணர்ந்துகொள்ளுமா உலகு என்பதே விடைகாணமுடியாத வினா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளான

சண்டமாருதன்

குமாரசாமி

காவலூர் கண்மணி

ஈழப்பிரியன்

நுணாவிலான் ஆகியோருக்கு பாராட்டியதோடு படித்துப் பிடித்துப் புள்ளிகளையும் வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

சிந்திக்க வைக்கும் உங்கள் கவிதை பதிவில் இந்த காணொளியையும் இணைப்பது பொருத்தமானது  என நினைக்கின்றேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னோர் சொன்னவற்றை
உதறித் தள்ளவிட்டு
உன் போக்கில் போகின்றாய்
எனக்காக எல்;லாம்
என்று சொன்னாய்
உனக்காக ஏதும் இல்லை
என்று சொல்லி வந்தது கொறொனா!


மீண்டும் கவி வரிகளோடு உங்கள் காணபதில் மகிழ்ச்சி ,பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

முன்னோர் சொன்னவற்றை
உதறித் தள்ளவிட்டு
உன் போக்கில் போகின்றாய்
எனக்காக எல்;லாம்
என்று சொன்னாய்
உனக்காக ஏதும் இல்லை
என்று சொல்லி வந்தது கொறொனா!


மீண்டும் கவி வரிகளோடு உங்கள் காணபதில் மகிழ்ச்சி ,பாராட்டுக்கள்

வணக்கம் நிலாமதி
நீண்ட காலத்தின் பின் உங்களைக் கண்டது மிக்க மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

On 3/23/2020 at 7:02 AM, nochchi said:

உனக்காக ஏதும் இல்லை
என்று சொல்லி வந்தது கொறொனா!
பணமருக்கும் பொருளிருக்கும் 
ஊர்சேர்ந்த உறவிருக்கும்
உயிர்த்துணையாள் மனையிருக்க
உனக்கு ஏதும் இல்லையடா
என்று சொல்ல வந்ததுவோ கொறொனா!

உலக மகாயுத்தங்கள், பிரளயத்துக்கு நெருங்கிய காலங்களுக்கு ஒப்பானது இன்றைய கொறோனா வைரஸ் உலகெங்கும் பரவிய நிலை. பலரையும் சுயபரிசோதனை செய்ய வைத்திருக்கும் நீங்கள் இந்த அழகிய கவிதை மூலம் வெளிக்காட்டியது போல். 

நோய் ஒழிந்து உலக ஒழுங்கு மாறும் போது, மனித மனங்களில் நல்லபடியான மாற்றங்கள் ஏலவே ஏற்பட்டிருக்கும் என நம்புவோம். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2020 at 9:02 PM, nochchi said:

பணமருக்கும் பொருளிருக்கும் 
ஊர்சேர்ந்த உறவிருக்கும்
உயிர்த்துணையாள் மனையிருக்க
உனக்கு ஏதும் இல்லையடா
என்று சொல்ல வந்ததுவோ கொறொனா!
சிந்தை கொள்வாய்
சிறகு விரித்தெழும் மானிடனே
பற பற எதற்காகப் பறக்கின்றாய்
என்றொருமுறை உன்னைக் கேட்பாயா?

உறவுகளே  
நட்புடன்
நொச்சி
 

இந்த நோயை.. நினைத்து, வீதியில்... காண்பவர் முகங்களில் எல்லாம்.. 
மிகப் பெரிய சோகம்  குடி கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சித்திக்க வைத்த... அருமையான கவிதை. நொச்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சண்டமாருதன் said:

சிந்திக்க வைக்கும் உங்கள் கவிதை பதிவில் இந்த காணொளியையும் இணைப்பது பொருத்தமானது  என நினைக்கின்றேன்

 

 சண்டமாருதன் அவர்களே  பொருத்தமாக இணைத்துள்ளீர்கள்
.
நன்றி.

6 hours ago, நிலாமதி said:

முன்னோர் சொன்னவற்றை
உதறித் தள்ளவிட்டு
உன் போக்கில் போகின்றாய்
எனக்காக எல்;லாம்
என்று சொன்னாய்
உனக்காக ஏதும் இல்லை
என்று சொல்லி வந்தது கொறொனா!


மீண்டும் கவி வரிகளோடு உங்கள் காணபதில் மகிழ்ச்சி ,பாராட்டுக்கள்

நிலாமதியவர்களே

பாராட்டி மகிழும் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. படித்துப் பதிவிட்டமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

உலக மகாயுத்தங்கள், பிரளயத்துக்கு நெருங்கிய காலங்களுக்கு ஒப்பானது இன்றைய கொறோனா வைரஸ் உலகெங்கும் பரவிய நிலை. பலரையும் சுயபரிசோதனை செய்ய வைத்திருக்கும் நீங்கள் இந்த அழகிய கவிதை மூலம் வெளிக்காட்டியது போல். 

நோய் ஒழிந்து உலக ஒழுங்கு மாறும் போது, மனித மனங்களில் நல்லபடியான மாற்றங்கள் ஏலவே ஏற்பட்டிருக்கும் என நம்புவோம். 🙂


மல்லிகை வாசம்  அவர்களே படித்துக் கருத்தை பதிவுசெய்தமைக்கு நன்றி.

 மக்கள் முகங்களில்  ஒருவித அமைதியும் கேள்வியுமான தோற்றம் தெரிவதுபோல் மாற்றங்களும் தோன்றும் என்று நம்புவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்த நோயை.. நினைத்து, வீதியில்... காண்பவர் முகங்களில் எல்லாம்.. 
மிகப் பெரிய சோகம்  குடி கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சித்திக்க வைத்த... அருமையான கவிதை. நொச்சி. 

தமிழ்சிறிஅவர்களே படித்துப் பாராட்டிக் கருத்தை பதிவுசெய்தமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2020 at 8:02 PM, nochchi said:

சிறகு விரித்தெழும் மானிடனே
பற பற எதற்காகப் பறக்கின்றாய்
என்றொருமுறை உன்னைக் கேட்பாயா?

சிறகு விரிப்பதால்தானே சிகரம் தொடமுடிகின்றது. கொரோனாவுக்கு அடிபணியாமல் உலகம் வெல்லும்தான். ஆனால் கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

சிறகு விரிப்பதால்தானே சிகரம் தொடமுடிகின்றது. கொரோனாவுக்கு அடிபணியாமல் உலகம் வெல்லும்தான். ஆனால் கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும்.

முதலில் படித்து கருத்திட்டமைக்கு நன்றி. 

உண்மை. தனியே இருந்து யோசித்தால் அச்சமூட்டுவதாக நிலமை இருக்கிறது. ஆனால் இந்த உலகு இன்னும் உணர்வதாகத் தெரியவில்லை. சில காணொளிகளைப் பார்த்தேன் இளைய தலைமுறையினர் கூட உணராதநியைைக் காண்கின்றேன்.  இந்த அவலத்தில் இருந்து உலகம் விடுபட வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பம். நீங்கள் கூறியதுபோல் உலகு கொடுத்துக் கொண்டிருக்கும் விலை தாங்கமுடியாததாக இருக்கிறது. 

கிருபன், தமிழ் சிறி, தமிழினிஆகியோரே உங்கள் அனைவருக்கும் பச்சைப்புள்ளிகளை வழங்கி உற்சாகமூட்டியமைக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவி அருணாசலம் மற்றும் இணையவன் ஆகியோரே உங்கள் இருவருக்கும் பச்சைப்புள்ளிகளை வழங்கி உற்சாகமூட்டியமைக்கும் நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பஞ்சாப்: இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் முன்னிலை! பஞ்சாப் மாநில நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோண்மணி, பாஜக எனப் பெரும் கட்சிகளின் வேட்பாளர்களையே பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கிறார்கள் இரண்டு சுயேச்சைகள்! ஒருவர் சிறையிலிருக்கும் காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங் என்றால்... மற்றொருவர் இந்திரா காந்தியைப் படுகொலைசெய்த மெய்க்காப்பாளரின் மகனான சரப்ஜித் சிங் கால்சா!         அம்ரித்பால் சிங்   பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பலமுனைப் போட்டியில் களமிறங்கியிருந்தன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், காதூர் சாகிப் (Khadoor Sahib) தொகுதியில் காலிஸ்தான் ஆதரவு போராளி தலைவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருந்துவருபவருமான அம்ரித் பால் சிங் சுயேச்சையாகப் போட்டியிட்டார். பஞ்சாப் (காலிஸ்தான்) தனிநாடு கோரிக்கை விடுத்துவரும் அம்ரித்பால் சிங், இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் `ஆபரேஷன் புளூ ஸ்டார்' மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் கிளர்ச்சியாளர் பிந்தரன் வாலேவை அடியொற்றி வளர்ந்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.     அதேபோல, 1984-ல் ஆபரேஷன் புளூ ஸ்டார் மூலம் சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலை சேதப்படுத்தி, பிந்தரன் வாலே உள்ளிட்ட காலிஸ்தான் போராளிகளை சுட்டுக்கொன்றதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மெய்க்காப்பாளர்களில் ஒருவரான பீன்ட் சிங்கின் மகன்தான் தற்போது பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட்(Faridkot) தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் சரப்ஜித் சிங் கால்சா.     சரப்ஜித் சிங் கால்சா   இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் முன்னிலை வகித்து வருகின்றனர். குறிப்பாக, காதூர் சாகிப் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் காலிஸ்தான் ஆதரவு போராளி தலைவர் அம்ரித்பால் சிங், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோண்மணி அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களைக் காட்டிலும் சுமார் 1,84,088 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதாவது தற்போதுவரை சுமார் 3,84,507 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதேபோல, இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற மெய்க்காப்பாளர் பீன்ட் சிங்கின் மகனான சரப்ஜித் சிங் மற்ற வேட்பாளர்களைவிட அதிகமாக சுமார் 2,96,922 வாக்குகள் பெற்று, சுமார் 70,246 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.   பஞ்சாப்: இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் முன்னிலை! | Son Of Indira Gandhi's Assassin Set To Win Punjab Lok Sabha Seat - Vikatan
    • தூத்துக்குடியில் எதிர் வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்த கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கனிமொழி 5,37,879 வாக்குகள் பெற்று 3,90,472 வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அதோடு, கனிமொழியைத் தவிர போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். 2. சிவசாமி வேலுமணி (அதிமுக)-1,47,407 3. எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தமாகா) - 1,21,680 4. ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர்)- 1,19,374 Election 2024: தமிழ்நாடு வேட்பாளர்களின் முன்னணி வெற்றி நிலவரம்... உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்! | Lok sabha election 2024 live updates of tamilnadu - Vikatan
    • கடவுள் என்ற ஒரு சக்தியை  நம்ப ஆரம்பித்தால், எதுவும் எப்போதும் முடியும் தானே என்று சொல்வார்கள் என்று நினைக்கின்றேன்..........😜
    • அப்படியென்றால் நீங்கள் முதலாவதாக வாருங்கள் நான் இரண்டாவது........ எமக்கு அடுத்ததாக மற்றவர்கள் எப்படிப் போனால் எமக்கென்ன...........!  😂
    • இந்திய மக்களைவைத் தேர்தல் – இறுதி கட்டத்தை எட்டியுள்ள வாக்கு எண்ணிக்கை ! இந்திய மக்களை தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளியாகிவரும் நிலையில், இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளுக்கு இணங்க பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது. மேலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியாக் கூட்டணி இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், தமிழ் நாட்டின் 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பா.ஜ.க.வின் வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த மக்களவை தேர்தலில் 64.2 கோடி மக்கள் வாக்களித்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதல், மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம், பா.ஜ.க. தலையிமையான தேசிய ஜனநாயக கூட்டணி 239 இடங்களிலும், காங்ரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, 7 இலட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றுள்ளார். இதேவேளை, தமிழகத்தில் 40 தொகுகளையும் கைப்பற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் பா.ஜ.க. ஒரு ஆசனத்தையேனும் கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள்கூட இந்தத் தேர்தலில் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளனர். இதனிடையே, ஆந்திராவில் அதிக வாக்குளை பெற்று முன்னிலையில் உள்ள, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவத்துள்ளார். ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளநிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி இன்று மாலை 4 மணிக்கு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரளாவின், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி 3,64,422 வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, ராகுல் காந்தி 647,445 வாக்குகளை பெற்றுள்ளார். மக்களவையிள்ள 543 ஆசனங்களுக்காக தேர்தல் நடைபெற்றநிலையில், 272 ஆசனங்களை கைப்பற்றும் கட்சி அல்லது கூட்டணியே இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386101
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.