Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கொரோனா தாண்டவமாடினால் வடக்கைத் தொடர்ந்து முடக்குவதே தீர்வு! இராணுவத் தளபதி

Featured Replies

“யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே,

இங்கு மேலும் பலர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தை ஓரிரு வாரங்களுக்குத் தொடர்ந்து முடக்கி வைப்பதே ஒரே வழியாகும்.

ஏனெனில் அப்போதுதான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.” என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில்தான் ஊரடங்குச் சட்டத்தை வடக்கில் நீடித்துள்ளோம். ஏனெனில் வடக்கில் மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள்.

அவர்கள் வெளியில் திரியும்போது நோய்த் தொற்று அதிவேகத்துடன் பரவும். எனவே, அவர்கள் தேவையற்று வெளியில் வராமல் சில நாட்களுக்கு வீட்டுக்குள் இருப்பதே நல்லம்.

சுவிஸிலிருந்து கடந்த 10ம் திகதி கடுமையான காய்ச்சலுடன் இலங்கை வந்திருந்த மதப் போதகர் ஒருவர் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் விசேட ஆராதனை நடத்தியுள்ளார்.

அவர் சுவிஸ் திரும்பியதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அவருடன் தனிமையில் இருந்து உரையாடியவருக்கே கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் குறித்த போதகருடன் 180 பேர் நெருக்கமான தொடர்பைப் பேணியுள்ளனர் என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, அவர்களை அடையாளம் காண்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அவர்கள் தாமாகவே முன்வந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைகளை மேற்கொண்டு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் நோயால் மேலும் பலர் பாதிக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தை ஓரிரு வாரங்களுக்குத் தொடர்ந்து முடக்கி வைப்பதே ஒரே வழியாகும். ஏனெனில் அப்போதுதான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்" - என்றார்.

https://www.tamilwin.com/special/01/241690

  • தொடங்கியவர்

திட்டமிட்ட தமிழின அழிப்பை மேற்கொண்ட மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளில் ஒருவனும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள ஆளுமாகிய  சவேந்திர சில்வா தெற்கில் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தென்பகுதியை முடக்காமல் வடபகுதியை முடக்குவோம் என்று இந்தப் பயங்கரவாதி கூறுவதன் மூலம் அவனின் தமிழின விரோத மனநிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதி சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட காலம் முதல் வடக்கில் இராணுவப் பயங்கரவாதிகளின் கெடுபிடிகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த பலமாதங்களாக தமிழர் பகுதி எங்கும் இந்த மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதி சவேந்திர சில்வாவினால் இராணுவ சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டு, கடும் வெயிலில் தமிழ் மக்கள் பலவந்தமாக இறக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

திட்டமிட்ட தமிழின அழிப்பை மேற்கொண்ட மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளில் ஒருவனும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள ஆளுமாகிய  சவேந்திர சில்வா தெற்கில் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தென்பகுதியை முடக்காமல் வடபகுதியை முடக்குவோம் என்று இந்தப் பயங்கரவாதி கூறுவதன் மூலம் அவனின் தமிழின விரோத மனநிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதி சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட காலம் முதல் வடக்கில் இராணுவப் பயங்கரவாதிகளின் கெடுபிடிகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த பலமாதங்களாக தமிழர் பகுதி எங்கும் இந்த மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதி சவேந்திர சில்வாவினால் இராணுவ சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டு, கடும் வெயிலில் தமிழ் மக்கள் பலவந்தமாக இறக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

முழு இலங்கைக்கும் பரவட்டும்...நோயால் அழியட்டும் என்றுறியல்...நாம இங்க தானே இருக்கம் 😠

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

திட்டமிட்ட தமிழின அழிப்பை மேற்கொண்ட மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளில் ஒருவனும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள ஆளுமாகிய  சவேந்திர சில்வா தெற்கில் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தென்பகுதியை முடக்காமல் வடபகுதியை முடக்குவோம் என்று இந்தப் பயங்கரவாதி கூறுவதன் மூலம் அவனின் தமிழின விரோத மனநிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதி சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட காலம் முதல் வடக்கில் இராணுவப் பயங்கரவாதிகளின் கெடுபிடிகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த பலமாதங்களாக தமிழர் பகுதி எங்கும் இந்த மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதி சவேந்திர சில்வாவினால் இராணுவ சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டு, கடும் வெயிலில் தமிழ் மக்கள் பலவந்தமாக இறக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

 

அடப்பாவிகளா  ஆட்டுக்க மாட்ட கொண்டாந்து ஓட்டுறியள்.. இது எங்கட சனத்தின்ர உயிர்ப்பிரச்சினை அப்பு..

எதுக்குரதுக்கு  ஒரு  காரணமேஇல்லைன்னா அதையே ஒரு காரணாமாவச்சு எதிர்க்கணும்.. அப்படித்தான..?

நம்மள் நிம்மதியா இருக்கணும்

அடுத்தவன் நிம்மதியா இருக்க கூடாது கோஸ்டிதான நீங்க..?

உங்க கட்ட வேகனுங்கரதுக்காக எங்க கவட்டைய வேக வச்சுக்க முடியாது சார்..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

திட்டமிட்ட தமிழின அழிப்பை மேற்கொண்ட மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளில் ஒருவனும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள ஆளுமாகிய  சவேந்திர சில்வா தெற்கில் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தென்பகுதியை முடக்காமல் வடபகுதியை முடக்குவோம் என்று இந்தப் பயங்கரவாதி கூறுவதன் மூலம் அவனின் தமிழின விரோத மனநிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதி சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட காலம் முதல் வடக்கில் இராணுவப் பயங்கரவாதிகளின் கெடுபிடிகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த பலமாதங்களாக தமிழர் பகுதி எங்கும் இந்த மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதி சவேந்திர சில்வாவினால் இராணுவ சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டு, கடும் வெயிலில் தமிழ் மக்கள் பலவந்தமாக இறக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

உங்கள் வாதம் தவறு. தென்பகுதி பெருமளவு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் வடபகுதி மக்கள் இன்னமும் நோயின் தாக்கத்தை உணரவில்லை என்பதே உண்மை.ஊரடங்கு நேரத்தில் கூட்டமாக இருந்து காட்ஸ் , கரம் விளையாடுவதும் அதைப் பார்க்க ஒருகூட்டம் அவர்களைச் சுற்றி நிற்பதும் வடபகுதி மக்களின் மனநிலைக்குச் மிகச்   சிறிய உதாரணம் மட்டுமே. வடக்கில் நோய் பரவத் தொடங்கினால் கட்டுப்படுத்துவது மிகக் கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

வசதி படைத்த நாடுகளினாலேயே கொரோனாவின் அகோரத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லை. கொத்து கொத்தாக மடிகின்றார்கள். இலங்கையில் வியாதிபரவினால் உயிரிழப்பு பாரியளவில் ஏற்படலாம். அத்துடன் நோய்த்தாக்கம்  கட்டுப்பாடின்றி போகலாம். வழமைபோல் ஐயோ போட்டு கத்தினாலும்  உதவிக்கு அயல் நாடுகளோ உலகமோ வரப்போவதும் இல்லை. அவனவனுக்கு தன்தன் நாட்டில் தலைபோகும் பிரச்சனை இப்போது.  

சனங்கள் சொல்வழி கேட்கப்போவதும் இல்லை, வியாதியின் பேராபத்து தெரிந்தாலும் மனதை கட்டுப்படுத்தி இருக்கப்போவதும் இல்லை. இங்கு ஊரடங்கு சட்டம், கைது நடவடிக்கைகள், அசட்டை செய்து திரிபவர்கள் குண்*யில் பச்சைமட்டையால் அடிகள் கொடுப்பதன் மூலமே அவர்களுக்கு பயத்தினை உருவாக்கி ஆட்களை வியாதியின் பரம்பலில் இருந்து தடுக்க முடியும்.  

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இப்பவும் கலியான நிகழ்வுகுள் நடக்குது.கடும் சட்டம் இல்லாவிட்டால் எங்கடையளை சமாளிக்க ஏலாது;

  • கருத்துக்கள உறவுகள்

சவேந்திர சில்வாவை பிடிக்காது என்றாலும் , கொரோனா தொடர்பில் சவேந்திர சில்வாவின் வடக்கை முடைக்கி வைக்கும் திட்டம் பிடித்திருக்கிறது.

கொரோனா பரம்பல் வடக்கில் அதிகரித்தால் ஓரிரு வாரங்கள் என்ன இன்னும் ஓரிரு வாரங்கள் மேலதிகமாக வேண்டுமென்றாலு,ம் எடுத்துக்கொள்ளுங்கள்.

வடக்கின் மக்கள் அடர்த்திக்கு கொரோனா சகட்டுமேனிக்கு அதிகரிச்சுது என்றால், வடக்கில் உள்ள மருத்துவ வசதிக்கும் பொருளாதார நிலைக்கும் பல ஆயிரம் மக்கள் உயிரிழப்பார்கள்.

பல ஆயிரம்பேரை ஒரே நேரத்தில் வைத்து சிகிச்சை அளிக்கும் வசதிகள் வடக்கின் சக்திக்கு கற்பனைக்கே அப்பாற்பட்ட விஷயம், ஏற்கனவே யுத்தம், சுனாமியில்  பெரும் தொகை மக்களை இழந்துவிட்டோம், கொரோனாவும் வந்து கூட்டியள்ளிக்கொண்டுபோனால்  சிங்களவனும் முஸ்லீமும் தெற்கில் இருந்து வந்து வடக்கில் ஆட்சி செய்ய வசதியாக இருக்கும்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் கண்டிப்பாக இந்த தடையால் பாதிக்கப்படுவார்கள்தான், ஆனால் கொடும் யுத்ததை வசதியுள்ளவர்கள்கூட வறுமைகோட்டுக்குகீழ் சென்று மூன்று தசாப்தங்களாக வாழ்ந்து அனுபவம் நிறைய பெற்றவர்கள் நாங்கள்,

இனத்தின் நன்மை கருதி இந்த பேரிடரையும் ஓரிரு வாரங்கள்  சமாளிச்சுதான் ஆகவேண்டும் வேறு வழியே இல்லை, இல்லாவிட்டால் ஒட்டுமொத்தமாக நாங்கள் காலி.

 

  • தொடங்கியவர்
6 hours ago, Kapithan said:

உங்கள் வாதம் தவறு. தென்பகுதி பெருமளவு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் வடபகுதி மக்கள் இன்னமும் நோயின் தாக்கத்தை உணரவில்லை என்பதே உண்மை.ஊரடங்கு நேரத்தில் கூட்டமாக இருந்து காட்ஸ் , கரம் விளையாடுவதும் அதைப் பார்க்க ஒருகூட்டம் அவர்களைச் சுற்றி நிற்பதும் வடபகுதி மக்களின் மனநிலைக்குச் மிகச்   சிறிய உதாரணம் மட்டுமே. வடக்கில் நோய் பரவத் தொடங்கினால் கட்டுப்படுத்துவது மிகக் கடினம்.

உங்கள் வாதம் மிகவும் தவறு.

எதிர் பார்ப்புகளுக்கு  மாறாக வடபகுதி மக்கள் கூடிய சுய கட்டுப்பாடுகளுடன் இருக்கிறார்கள். நேற்றும் அதற்கு முந்தின தினமும் தென்பகுதி மக்கள் கடைபிடித்த கட்டுப்பாடுகளை விட அதிகமாகவே வடபகுதி மக்கள் கடைபிடித்துள்ளனர்.

ஏற்கனவே ஏற்பாடு செய்த சில கல்யாணங்கள் கூட 10 - 15 நபர்களுடன் தான் நடந்துள்ளது.

அவசர தேவைகளுக்கு தெற்கில் அனுமதிக்கப்பட்ட சுதந்திரம் வடபகுதி மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

எனவே உங்கள் கற்பனையில் எழுந்த வாதங்கள் தவறு.

வடக்கை விட தென்பகுதிகளில் கொரோனா வைரசுகளால் பாதிக்கப்பட்டவர்கள் பல மடங்குகள் அதிகம். வடக்கில் கொரோனா வைரஸ் தாகத்திற்கு, பரவலுக்கு சிங்கள போலீசாரே காரணம் என்பதை வடக்கு ஆளுநர் தெளிவாக கூறியுள்ளார்.

Edited by போல்

  • தொடங்கியவர்

திட்டமிட்ட தமிழின அழிப்பை மேற்கொண்ட மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளில் ஒருவனும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள ஆளுமாகிய  சவேந்திர சில்வாவிற்கு ஆதரவாளர்கள், தமிழின அழிப்புக்கு துணை போகிறவர்கள் தங்கள் சுயரூபங்களை இங்கே வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அதனால் தான் அவர்கள் வடபகுதியில் மட்டும் பல சோதனைச் சாவடிகளை அமைத்து அதைக் கடந்து செல்லும் தமிழர்களை பொதிகள் அனைத்தையும் சுமந்தபடி, (சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரையும்) கடும் வெயிலில் இறக்கி பலநிமிடங்கள் நிற்கவைத்து சித்திரவதை செய்வதை ஆதரிக்கின்றனர். இதன் மூலம் கொரோனா வைரஸை தடுக்க முடியாது, ஆனால் மேலும் பரவும் சந்தர்பங்களையே ஏற்படுத்த முடியும் என்பது சிறிது சிந்திக்கும் ஆற்றல் உடையவர்களுக்கும் விளங்கும். எனவே கொரோனா வைரஸை வைத்து பூச்சாண்டி காட்டி தமிழர் மீது அனாவசியமாக கட்டவிழ்த்து விடப்படும் சித்திரவதைகளை நியாயப்படுத்தி, தமிழின அழிப்புக்கு துணை போகிறவர்கள் தங்கள் சுயரூபங்களை இங்கே வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

ஏற்கனவே பல சமூக ஆர்வலர்களும் இந்த சோதனைச் சாவடிகளையும் 5 km தூரத்துக்குள் இரண்டு இடங்களில் மக்கள் இறக்கி ஏற்றப்படுவதையும் கண்டித்துள்ளனர். இது பலமாதங்களாக வடக்கில் மட்டுமே நடந்து வருகிறது. வடபகுதிக்கு சென்றுவரும் சிங்களவர்களோ, சிங்கள யாத்திரீகர்களோ இறக்கி சோதனைக்கு உள்ளாக்கப்படுவதில்லை.

  • தொடங்கியவர்

வட பகுதியில் நேற்று மக்கள் பரவலாக வெளிப்படுத்திய சுய ஒழுக்கம்:

Curfew-Release-Time-Mullaitivu-Situation

Curfew-Release-Time-Kilinochchi-Situatio

Curfew-Release-Time-Kilinochchi-Situatio

Curfew-Release-Time-Mannar-Situation-Cor

Curfew-Release-Time-Jaffna-Situation-Cor

Curfew-Release-Time-Jaffna-Situation-Cor

  • கருத்துக்கள உறவுகள்

இவரு தமிழினத்தை ஒழிக்க வென்றே...பதவி ஏற்றவர்....இப்ப கொரனா ஒரு சாட்டாக உதவி செய்யிது....இது விளங்காமல் சனம் கோத்தாவையும் சிங்களத்தையும் சில்வாவையும் தலையில தூக்கி  கொண்டாடுது....அதுவும்  யாழிலையும் நடக்குது..

Edited by alvayan

  • தொடங்கியவர்

அரச புள்ளிவிபரம்:

பிரதேசம்

தொற்று சுகமடைந்தவர் மரணம்
கொழும்பு          26 3 0
கம்பஹா                  19 0 0
பொலநறுவை    18 1 0
களுத்துறை             11 1 0
புத்தளம்                    9 0 0
மட்டக்களப்பு           3 0 0
இரத்தினபுரி             3 0 0
காலி                          2 0 0
பதுளை                     1 0 0
கண்டி                        1 0 0
கேகாலை                1 0 0
குருநாகல்                1 0 0
வவுனியா                1 0 0
யாழ்ப்பாணம்   1 0 0
ஏனைய                    5 0 0
       
  102 5 0

 

இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்

இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று(புதன்கிழமை) காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் அனுரத்த பாதனிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒருவரிடமிருந்து ஏனையவர்களுக்கு கொரோனா பரவுகின்ற விகிதத்தினை அடிப்படையாக கொண்டே அவர் இவ்வாறு அச்சம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், இந்த கொரோனா வைரஸ் குறித்து நாளாந்தம் ஆய்வு நடாத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸினை குறைத்து மதிப்பிட்டமை காரணமாக சில வைத்தியவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கச தலைவர் அனுரத்த பாதனிய தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/இலங்கையில்-500-இற்கும்-மேற்/

13 hours ago, போல் said:

“யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே,

இங்கு மேலும் பலர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தை ஓரிரு வாரங்களுக்குத் தொடர்ந்து முடக்கி வைப்பதே ஒரே வழியாகும்.

ஏனெனில் அப்போதுதான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.” என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஒரு இனவழிப்பாளன் இப்படித்தான் சொல்லியாக வேண்டும்.

ஒரு கையால், தான் தான் உங்களை காப்பாற்றும் கருணை தேவதையாக கூறி மறு பக்கம் தமது நிகழ்சி நிரலை அரங்கேற்றுதல். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

உங்கள் வாதம் மிகவும் தவறு.

எதிர் பார்ப்புகளுக்கு  மாறாக வடபகுதி மக்கள் கூடிய சுய கட்டுப்பாடுகளுடன் இருக்கிறார்கள். நேற்றும் அதற்கு முந்தின தினமும் தென்பகுதி மக்கள் கடைபிடித்த கட்டுப்பாடுகளை விட அதிகமாகவே வடபகுதி மக்கள் கடைபிடித்துள்ளனர்.

ஏற்கனவே ஏற்பாடு செய்த சில கல்யாணங்கள் கூட 10 - 15 நபர்களுடன் தான் நடந்துள்ளது.

அவசர தேவைகளுக்கு தெற்கில் அனுமதிக்கப்பட்ட சுதந்திரம் வடபகுதி மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

எனவே உங்கள் கற்பனையில் எழுந்த வாதங்கள் தவறு.

வடக்கை விட தென்பகுதிகளில் கொரோனா வைரசுகளால் பாதிக்கப்பட்டவர்கள் பல மடங்குகள் அதிகம். வடக்கில் கொரோனா வைரஸ் தாகத்திற்கு, பரவலுக்கு சிங்கள போலீசாரே காரணம் என்பதை வடக்கு ஆளுநர் தெளிவாக கூறியுள்ளார்.

இது எனது கற்பனையல்ல. எனது நண்பர்கள் வடபகுதியில் மிகவும் பொறுப்புமிக்க பதவியிலுள்ளவர்கள் நேற்று பங்குனி 25, 2020 கூறியது.

உங்கள் வாதத்தைப் பார்த்தால் வடபகுதி மக்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் என்பதைப் போலல்லவா இருக்கிறது. 😜

1) தமிழர் கட்டுப்பாட்டுடன் இருந்து அழிவிலிருந்து தங்களைப் பாதுகாப்பது

அல்லது

2) கடுப்பாட்டைத் தளர்த்தி மக்களை அழிய விடுவது.

போல்,

இதில் எது உங்களுக்குப் பிடிக்கும் ? 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

திட்டமிட்ட தமிழின அழிப்பை மேற்கொண்ட மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளில் ஒருவனும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள ஆளுமாகிய  சவேந்திர சில்வாவிற்கு ஆதரவாளர்கள், தமிழின அழிப்புக்கு துணை போகிறவர்கள் தங்கள் சுயரூபங்களை இங்கே வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அதனால் தான் அவர்கள் வடபகுதியில் மட்டும் பல சோதனைச் சாவடிகளை அமைத்து அதைக் கடந்து செல்லும் தமிழர்களை பொதிகள் அனைத்தையும் சுமந்தபடி, (சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரையும்) கடும் வெயிலில் இறக்கி பலநிமிடங்கள் நிற்கவைத்து சித்திரவதை செய்வதை ஆதரிக்கின்றனர். இதன் மூலம் கொரோனா வைரஸை தடுக்க முடியாது, ஆனால் மேலும் பரவும் சந்தர்பங்களையே ஏற்படுத்த முடியும் என்பது சிறிது சிந்திக்கும் ஆற்றல் உடையவர்களுக்கும் விளங்கும். எனவே கொரோனா வைரஸை வைத்து பூச்சாண்டி காட்டி தமிழர் மீது அனாவசியமாக கட்டவிழ்த்து விடப்படும் சித்திரவதைகளை நியாயப்படுத்தி, தமிழின அழிப்புக்கு துணை போகிறவர்கள் தங்கள் சுயரூபங்களை இங்கே வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

ஏற்கனவே பல சமூக ஆர்வலர்களும் இந்த சோதனைச் சாவடிகளையும் 5 km தூரத்துக்குள் இரண்டு இடங்களில் மக்கள் இறக்கி ஏற்றப்படுவதையும் கண்டித்துள்ளனர். இது பலமாதங்களாக வடக்கில் மட்டுமே நடந்து வருகிறது. வடபகுதிக்கு சென்றுவரும் சிங்களவர்களோ, சிங்கள யாத்திரீகர்களோ இறக்கி சோதனைக்கு உள்ளாக்கப்படுவதில்லை.

ஒரு படத்தில் கவுண்டர் கூறுவார், 

"டேய் நான் SSLC படிச்சவன்டா " என

அதற்கு செந்தில் கூறுவார்

"அண்ண.. ... நான் எட்டாங்கிளாஸ் (?) பாஸ்.. நீங்க SSLC பெயில், 

சொல்லுங்க Mr. Paul, இப்ப எது பெருசு ?

எட்டாங்கிளாஸ் பாஸ்  பெருசா SSLC பெயில் பெருசா ? 😂

(கவுண்டரும் செந்திலும் என்னை மன்னித்தருள்க - இப்படியோரு இக்கட்டான இடத்தில உங்களிருவரையும் நிறுத்தியதற்கு)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

இவரு தமிழினத்தை ஒழிக்க வென்றே...பதவி ஏற்றவர்....இப்ப கொரனா ஒரு சாட்டாக உதவி செய்யிது....இது விளங்காமல் சனம் கோத்தாவையும் சிங்களத்தையும் சில்வாவையும் தலையில தூக்கி  கொண்டாடுது....அதுவும்  யாழிலையும் நடக்குது..

யோவ் அல்வாயன்😜

நான் பள்ளக்கூடம் போனனான், நீர் என்ன மாதிரி ?😡

இங்க யாரையா இவங்கள தூக்கிப் பிடிச்சது.

பொறுப்பாக எழுதுங்கோ.

காமாளைக் கண்ணன் ரேஞ்சில எல்லாத்தையும் பார்க்கப் படாது.😀

2 hours ago, ampanai said:

ஒரு இனவழிப்பாளன் இப்படித்தான் சொல்லியாக வேண்டும்.

ஒரு கையால், தான் தான் உங்களை காப்பாற்றும் கருணை தேவதையாக கூறி மறு பக்கம் தமது நிகழ்சி நிரலை அரங்கேற்றுதல். 

அட நீருமா ...?

ப்பூ....

தாங்ககல .....😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

யாழில் இப்பவும் கலியான நிகழ்வுகுள் நடக்குது.கடும் சட்டம் இல்லாவிட்டால் எங்கடையளை சமாளிக்க ஏலாது;

இப்ப விளங்குதெல்லே.....
இதுக்குத்தான் நான் இஞ்சை அடிக்கடி சொல்லுறது.எங்கடை சனத்துக்கு கட்டுப்பாடு அதிகம் வேணுமெண்டு. அதிக வசதிகள் இருந்தாலும் அதை துஷ்பிரயோகம் செய்வதில் வல்லவர்கள்.சுதந்திரங்களையும் வசதிகளையும் மாற்று வழிகளுக்கு பயன்படுத்த கூடியவர்கள்.முக்கியமாக் எங்கள் தமிழ் அரசியல்வாதிகள்.
எங்கடை தமிழ் சனத்துக்கு வசதிகளையும் சுதந்திரத்தையும் கொடுத்தாலும் வடகொரியா போன்ற சட்டங்கள் அவசியம் வேண்டும்.
கொரோனா விடயத்தில் வைரஸ் அவலங்கள் முடியும் மட்டுமாவது.எங்கடை சனங்கள் கட்டுப்பாடாக இருக்க வேணுமெண்டது என்ரை விருப்பம்.
உலகநாடுகளே கொரோனா இருக்கொ இல்லையோ இனிமேல் யாருக்கும் புதிதாக தொற்றக்கூடாது என்ற முனைப்பில் தான் கட்டுப்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
இன்றைய ச்ழ்ழ்நிலையில் ஒவ்வொருமனிதனுக்கும் தனிமைப்படுத்தல் அவசியமாகி விட்டது.
உலகமே  quarantine மயமாகிக்கொண்டிருக்கின்றது.

Bildergebnis für quarantine

Bildergebnis für quarantine

  • கருத்துக்கள உறவுகள்

கடும் சட்டங்கள் அமுல்படுத்தி கொரோனா பிரச்சினை முடியும் வரை மக்களை கட்டுப்பாட்டிட்குள் வைக்க வேண்டும். ஊரடங்கு நேரத்தின் போதும் வாள்வெட்டு நடந்ததாக செய்தி வந்தது. 

17 hours ago, போல் said:

திட்டமிட்ட தமிழின அழிப்பை மேற்கொண்ட மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளில் ஒருவனும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள ஆளுமாகிய  சவேந்திர சில்வா தெற்கில் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தென்பகுதியை முடக்காமல் வடபகுதியை முடக்குவோம் என்று இந்தப் பயங்கரவாதி கூறுவதன் மூலம் அவனின் தமிழின விரோத மனநிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதி சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட காலம் முதல் வடக்கில் இராணுவப் பயங்கரவாதிகளின் கெடுபிடிகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த பலமாதங்களாக தமிழர் பகுதி எங்கும் இந்த மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதி சவேந்திர சில்வாவினால் இராணுவ சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டு, கடும் வெயிலில் தமிழ் மக்கள் பலவந்தமாக இறக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

 

6 hours ago, போல் said:

திட்டமிட்ட தமிழின அழிப்பை மேற்கொண்ட மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளில் ஒருவனும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள ஆளுமாகிய  சவேந்திர சில்வாவிற்கு ஆதரவாளர்கள், தமிழின அழிப்புக்கு துணை போகிறவர்கள் தங்கள் சுயரூபங்களை இங்கே வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அதனால் தான் அவர்கள் வடபகுதியில் மட்டும் பல சோதனைச் சாவடிகளை அமைத்து அதைக் கடந்து செல்லும் தமிழர்களை பொதிகள் அனைத்தையும் சுமந்தபடி, (சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரையும்) கடும் வெயிலில் இறக்கி பலநிமிடங்கள் நிற்கவைத்து சித்திரவதை செய்வதை ஆதரிக்கின்றனர். இதன் மூலம் கொரோனா வைரஸை தடுக்க முடியாது, ஆனால் மேலும் பரவும் சந்தர்பங்களையே ஏற்படுத்த முடியும் என்பது சிறிது சிந்திக்கும் ஆற்றல் உடையவர்களுக்கும் விளங்கும். எனவே கொரோனா வைரஸை வைத்து பூச்சாண்டி காட்டி தமிழர் மீது அனாவசியமாக கட்டவிழ்த்து விடப்படும் சித்திரவதைகளை நியாயப்படுத்தி, தமிழின அழிப்புக்கு துணை போகிறவர்கள் தங்கள் சுயரூபங்களை இங்கே வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

ஏற்கனவே பல சமூக ஆர்வலர்களும் இந்த சோதனைச் சாவடிகளையும் 5 km தூரத்துக்குள் இரண்டு இடங்களில் மக்கள் இறக்கி ஏற்றப்படுவதையும் கண்டித்துள்ளனர். இது பலமாதங்களாக வடக்கில் மட்டுமே நடந்து வருகிறது. வடபகுதிக்கு சென்றுவரும் சிங்களவர்களோ, சிங்கள யாத்திரீகர்களோ இறக்கி சோதனைக்கு உள்ளாக்கப்படுவதில்லை.

மிக மிக யதார்த்தமான கருத்துக்கள்.

புரிந்துகொள்ளும் திறன், பகுத்தறியும் திறன் குறைஞ்ச ஆட்கள் இதை புரியாமல் சம்பந்தம் இல்லாம கதையளக்கலாம்.

அல்லது தமிழின கொலைகாரர்களுக்கு முண்டு கொடுப்பவர்கள் வேணும் என்டே பிழையான கருத்துக்களை குதர்க்கமா எழுதி உண்மைகளை மூடிமறைக்க முயலலாம்.

23 minutes ago, colomban said:

கடும் சட்டங்கள் அமுல்படுத்தி கொரோனா பிரச்சினை முடியும் வரை மக்களை கட்டுப்பாட்டிட்குள் வைக்க வேண்டும். ஊரடங்கு நேரத்தின் போதும் வாள்வெட்டு நடந்ததாக செய்தி வந்தது. 

கொழும்பன் இப்போது இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் கொரோனாவுக்கு தான் பொருந்தும்.

வாள் வீச்சு ( வெட்டு) எங்கள் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்று அதற்கு தடை போட ்டு எங்கள. அடையாளங்களை அழிக்க வேண்டாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, Rajesh said:

 

மிக மிக யதார்த்தமான கருத்துக்கள்.

புரிந்துகொள்ளும் திறன், பகுத்தறியும் திறன் குறைஞ்ச ஆட்கள் இதை புரியாமல் சம்பந்தம் இல்லாம கதையளக்கலாம்.

அல்லது தமிழின கொலைகாரர்களுக்கு முண்டு கொடுப்பவர்கள் வேணும் என்டே பிழையான கருத்துக்களை குதர்க்கமா எழுதி உண்மைகளை மூடிமறைக்க முயலலாம்.

எது எப்படியோ....அங்கிருப்பவர்களுக்குத்தான் உண்மை நிலவரங்கள் தெரியும்.

17 hours ago, போல் said:

“யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே,

இங்கு மேலும் பலர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தை ஓரிரு வாரங்களுக்குத் தொடர்ந்து முடக்கி வைப்பதே ஒரே வழியாகும்.

ஏனெனில் அப்போதுதான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.” என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஆரம்பத்தில், ஒரு இராணுவ வீரரை சிங்கள யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தது. ஏன்?, என விளக்கம் தரவில்லை. 

ஆக, வட க்கில் அதிகளவில் இருக்கும் அடக்குமுறை இராணுவம் பற்றியே இவனுக்கு கவலை.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இது எனது கற்பனையல்ல. எனது நண்பர்கள் வடபகுதியில் மிகவும் பொறுப்புமிக்க பதவியிலுள்ளவர்கள் நேற்று பங்குனி 25, 2020 கூறியது.

உங்கள் வாதத்தைப் பார்த்தால் வடபகுதி மக்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் என்பதைப் போலல்லவா இருக்கிறது. 😜

1) தமிழர் கட்டுப்பாட்டுடன் இருந்து அழிவிலிருந்து தங்களைப் பாதுகாப்பது

அல்லது

2) கடுப்பாட்டைத் தளர்த்தி மக்களை அழிய விடுவது.

போல்,

இதில் எது உங்களுக்குப் பிடிக்கும் ? 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

வடக்கிலும் தெற்கிலும் இருவேறு மாதிரியான முடக்கம் ஏன் 
தெற்கிலேதானே கொரோனா பாதிப்பு இன்னும் அதிகம்?

தெற்கில் இல்லாத இராணுவ கெடுபிடி 
ஏன் வடக்கில் இருக்கவேண்டும்?

உங்களின் வாதம் என்ன?
தெற்கு மக்களை அப்படியே அழியட்டும் என்று விட்டு விடார்கள் 
வடக்கு மக்களை மட்டும் காப்பாற்ற இப்போ சில்வா வெளிக்கிட்டு இருக்கிறார்? 

செய்தி :  "கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை ஆகிய மாவட்டங்கள் கூடுதல் பாதிப்புடைய மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன."

வடக்கில் உள்ள இராணுவத்தை இந்த இடங்களுக்கு எடுத்து நிலைமையை கட்டுப்படுத்தலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.