Jump to content

எனது குடும்பத்திற்கு, கொரோனா ஏற்படுத்திய மரண பயம். - தமிழ் சிறி.-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 எனது குடும்பத்திற்கு, கொரோனா ஏற்படுத்திய  மரண பயம். - தமிழ் சிறி.- 

2019´ம்  ஆண்டு விடை பெற்று, செல்லும் போது..... 
2020´ம் ஆண்டை வரவேற்க உற்சாகமாக இருந்த நேரம்.

இப்படியான... ஆண்டு மாற்றங்கள், நடக்கும் தருணங்களில்....
எனது பிள்ளைகள்... சிறுவர்களாக இருக்கும் போது.. 
அவர்களுக்கும், எனக்கும்..  உற்சாகமாக இருப்பதற்காக,
நிறைய... வாண வேடிக்கைகள் செய்து, புத்தாண்டை வரவேற்போம்.

இப்பிடி,  "காசை கரியாக்தேங்கோ... " என்று, மனைவி சொன்னாலும்,   
வழக்கம் போல்... ஒரு காதால்.. வாங்கி, மறு  காதால், வெளியே விட்டு விடுவேன்.
அதை நான்... கணக்கில் எடுப்பதில்லை. (அதுதான்... காதல், என்பார்கள்)

ஆனால்.... கடந்த சில ஆண்டுகளாக, பிள்ளைகளுக்கு
படிப்பில்... கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் அந்த, ஆசையே வரவில்லை.

2020 பிறக்கும் போது.....   எனக்கு, இன்ப அதிர்ச்சி  ஊட்டுவதற்காக...
மூன்று  பிள்ளைகளும், "அப்பா.... வாங்கோ... வெடி கொளுத்துவோம்" என்றார்கள் 
அண்டைக்கு..... சரியான குளிராக இருந்த படியால்...

நீங்கள்.... கொளுத்துங்கோ...
நான்... "யன்னலாலை..." எட்டிப் பாக்கிறன், என்று சொல்லி விட்டேன். 
அவர்கள்.....  வெடித்த,  "சீனா"  வெடிகளை மனைவியும் ரசித்தார்.

வெடி கொழுத்தப் போன... ஆட்களுக்கு, சாம்பிராணி குச்சி 

மனைவியின் அனுமதி இல்லாமல், அங்கு இருந்து...
ஒரு பொருளும்.... நகர முடியாது. என்பது.. நமக்கு... நன்கு தெரியும். 
அப்படி இருந்தும்....

(தொடரும்)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள்.... கொளுத்துங்கோ...
நான்... "யன்னலாலை..." எட்டிப் பாக்கிறன், என்று சொல்லி விட்டேன். 
அவர்கள்.....  வெடித்த,  "சீனா"  வெடிகளை மனைவியும் ரசித்தார்.

அன்று வெள்ளிக்கிழமை என்றபடியால் சிறிக்கு எழும்பி போக இயலாமல் இருந்திருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள்  படித்து,  சென்ற ஆண்டில்.... இருந்து வேலை செய்யத் தொடங்கியவர்கள்.
தகப்பனாக, இருந்து.... அதைப் பார்க்க சந்தோசமாக இருந்து 
அந்த நேரம்....
மகனும், இளைய  மகளும்.... சென்ற  மாசி மாதம்   20 ம் திகதி, (20.02.20)
இத்தாலி நாட்டில், நான்கு நாள்..... 
சரித்தர பூர்வமான இடங்களை பார்க்க போய் இருந்த போது,
சீனாவில்..... தொடங்கிய "கொரோனா" 
இத்தாலி மட்டும்... வரும் என்று, யாருமே எதிர் பார்க்கவில்லை. 

வடக்கு இத்தாலியில் ஆரம்பித்த  கொரோனா....
மத்திய, தெற்கு  இத்தாலி வரை, வந்து  கொண்டிருப்பதை....
உலகத்தில், ஒருத்தரத்தாலும்  ..... ஊகிக்க  முடியவில்லை.

ஒரு, அருந்தப்பில், தப்பிய பிள்ளைகள் வீட்டிற்கு  வந்த திகதி.(24.02.20)
சாமம்... 10 மணி.  

அடுத்த... ஆறுமணித்தியாலத்தில், எனது மகள்.....  வேலை நிமித்தமாக 
இந்தியாவில்  உள்ள பெங்களூர் நகரத்திற்கு செல்ல.....
அதே... விமான நிலையத்திற்கு... செல்ல வேண்டும்.

ஏற்கெனவே... என்ன உடுப்புகளை, 
எந்த நாட்டில் பாவிப்பது என்ற விபரம் தெரிந்த படியால்....  
பெட்டியை மாத்திக்.... கொண்டு, 
அம்மாவுக்கு.... ஒரு முத்தம்,  அப்பாவுக்கு.... ஒரு முத்தம்  தந்து ..
விடை பெறும்  போது... கண்ணீர் வந்தது. 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இளையவர்கள் திடகாத்திரமானவர்களாக இருந்தாலும் பயமே ஆளை போட்டுத் தள்ளிவிடும்.

தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போட்டுது.

சரி இந்தியா போனவவின் நிலைப்பாடு என்ன தான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில்  இருந்து, இந்தியா செல்பவர்கள்,
குடிக்கின்ற நீரில், கக்கூசு தண்ணீர்  கலந்து இருந்திருப்பார்கள்.
மிக கவனமாக இருக்க வேண்டும்.. என்று... 
ஏற்கெனவே... மகளுக்கு கூறி, இருக்கின்றேன்   

அதனால்..... அவ, பல்லு  விளக்குவதும், போத்தில் தண்ணீரில் தான் என்ற போது,
மனம்... பதை பதைத்தது.   

இது, அவவின், இரண்டாவது பயணம்...
ஏற்கெனவே.... நாங்கள் கூறிய புத்தி மதிகள் இருந்திருக்கும்.

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் இளையவர்கள் திடகாத்திரமானவர்களாக இருந்தாலும் பயமே ஆளை போட்டுத் தள்ளிவிடும்.

தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போட்டுது.

சரி இந்தியா போனவவின் நிலைப்பாடு என்ன தான்?

 

2 hours ago, ஏராளன் said:

தொடருங்கோ.

ஈழப்பிரியன், ஏராளன் ....
அங்கு தான்..... கொரோனா என்ற வைரஸ்,  பரவ ஆரம்பித்த நேரம்.

மகள்.... பெங்களூரிந்து , தொலைபேசி ... எடுத்து, 
தனக்கு... மூச்சு  எடுக்க கஸ்ரமாய் இருக்கு,  வயித்ததாலை போகுது...எண்டும், 
அங்குள்ள.... இந்தியா, மருத்துவர்களிடம் , 
"பொடி  செக்கப்"  செய்யப் போகின்றேன். என்றா.....

அதுக்கு.... நான், உனக்கு என்ன.... விசரோ...
பல்லைக்  கடிக்சுக் கொண்டு,   ஜேர்மனிக்கு, வாடி...
இங்கு வைத்தியம் செய்யலாம்... உறுக்கமாக, சொல்லி விட்டேன்.

எனது.... செல்ல மகளும்,  இங்கு வந்து....
தனது  குடும்ப வைத்தியருடன் கலந்து... ஆலோசித்து,
அவவுக்கு.... கொரோனா இல்லையாம். :)

மனப் பயம் என்கிறார்கள். 
நாம் தைரியமாக இருப்போம்.

Link to comment
Share on other sites

பெற்றோராக எங்களுக்கு உள்ள பயம் தான் தமிழ்சிறி. ஆனால் பிள்ளைகள் உங்களோடு அருகில் இருப்பது ஆறுதலே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கு தெரிந்த எதிரி என்றால் மோதிப்பார்க்கலாம் அல்லது ஓடித்தப்பலாம்..... கொரோனாவுக்கு என்ன செய்வது..... அவர்கள் நலமாக வந்தது நல்லதே.....!  

தொடருங்கள் தமிழ்சிறி......!

Link to comment
Share on other sites

இது கதையா தொடர சொல்ல ஒரு தகப்பனின் நெருப்பு தவிப்புக்கள் என்ன இருந்தாலும் என்னருகில வா மகளே என்று துடிக்கும்மனதை புரிகிறது நண்பா அதே தவிப்பில இருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தும்... ஊக்கமும் தந்த,
பெருமாள், நில்மினி, ஏராளன், ஈழப்பிரியன், சாந்தி,  
கவி அருணாசலம், சுவி அண்ணா, காவலூர் கண்மணி அக்கா, குமாரசாமி அண்ணா, 
மார்த்தாண்டன்.... ஆகியோரின் அக்கறைக்கு நன்றி.

உண்மையில்... எனக்கு, இதனை மீட்டிப் பார்க்கவே... ஒருவித பயமாக உள்ளது.
ஆனாலும்... சென்ற வெள்ளிக்கிழமை எழுத ஆரம்பித்ததை...
இடையில்... நிறுத்தி விடக் கூடாது என்பதற்காக... தொடர்கின்றேன்.

இந்த விடயத்தை... நண்பர் பாஞ்ச்  அண்ணைக்கோ...
வீட்டிற்கு அருகில் இருக்கும், நண்பர்களுக்கோ.. தெரிவிக்காமல்...
எம்மை... நாமே தனிமைப் படுத்திக் கொண்டோம்.
நிச்சயம்... அவர்கள் கோவிக்க மாட்டார்கள் என நம்புகின்றேன்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகள்.... வேலை செய்யும் இடம், 
வீட்டிலிருந்து.... 35 கிலோ மீற்றர் தொலைவில்  இருந்தாலும்....
அவர், பிரயாணம் செய்யும்,  பாதை, சுவிற்சலாந்து, ஒஸ்ரியா.... 
எல்லைகளுக்கு... அண்மையில் இருப்பதால் வேலை நாட்களில்,
பலரும்... இங்கிருந்து அங்கு வேலைக்கு சென்று வருபவர்கள் என்பதாலும்,
மலைப்  பிரதேசம்  என்பதாலும்... வாகன நெரிசல்  அதிகமாக இருக்கும்.

அதற்காக... அவர் வேலை செய்யும் இடத்திற்கு, கிட்ட  (15 கி. மீ . தொலைவில்)
ஓரு,  தனியறை எடுத்து, தங்கி வசிப்பவர்.
அது, 25 சதுர மீற்றர் மட்டுமே வரும்.  ஒரு படுக்கை அறையுடன் கூடிய.. வரவேற்பறை.
ஒரு தனிக்  குசினி, பல்கனி. அதற்கு... 750  €  வாடகை.

அதில்  படுக்கறையுடன் சேர்ந்து... அவரின்...  வேலை அறையும்... 
வரவேற்பு அறையும்... ஒன்றாகவே இருக்கும்.

வேலை நாட்களில்...  எமது  வீட்டிலிருந்து, அந்த  35 கிலோ மீற்றர் தூரத்தை கடப்பதற்கு...
இரண்டு மணித்தியாலத்திற்கு மேலும்... எடுக்கலாம் என்பதற்காக..
அந்த இடத்தை... அவர் தெரிவு செய்திருந்தார்.  

கொரோனாவுக்கும்... இதுக்கும், என்ன சம்பந்தம்?
என்று நீங்கள் கேட்பீர்கள்... என்று, எனக்கு நன்கு  தெரியும்.

அந்தக்  கட்டிடத்தில் வசிப்பவர்கள்.... பலர்,வயோதிகர்கள்.
அவர்கள்... ஏற்கெனவே, மகள்  வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து ஒய்வு பெற்றவர்கள்.
அவர்களுக்கு.. மகள் இத்தாலி, இந்தியா.... சென்று வந்த விடயமும் தெரியும்.

ஜேர்மனியில்....  பென்ஷன், எடுத்த... கிழவன்/ கிழவிகள்  சும்மா.... இருக்க மாட்டாதுகள்.
சும்மா... ஜன்னலாலை எட்டிப் பார்த்து,  கொண்டே... நிண்டு, அலுவல் பார்ப்பார்பார்கள்.
(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகள் இப்பவும் வேலைக்கு போகிறாவா அல்லது working from ஆ ? எதற்கும் மாஸ்க்கை போட்டு  Sunglass யும் போட்டுகொண்டு திரிந்தால் ஜேர்மன் கிழவர்  கிழவிகளிடம் விடுப்பில் இருந்து இருந்து தப்பலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nilmini said:

மகள் இப்பவும் வேலைக்கு போகிறாவா அல்லது working from ஆ ? எதற்கும் மாஸ்க்கை போட்டு  Sunglass யும் போட்டுகொண்டு திரிந்தால் ஜேர்மன் கிழவர்  கிழவிகளிடம் விடுப்பில் இருந்து இருந்து தப்பலாம் 

மகள், கடந்த இரண்டு கிழமையாக...  வீட்டில் இருந்து தான்... வேலை செய்கிறார்.

பகிடி விடாதேங்கோ... நில்மினி.
ஜேர்மன் கிழவன், கிழவிகளுக்கு.... 
ஜன்னலில் நின்று, விடுப்பு பார்ப்பது தான்... முழு உத்தியோகம்.
எந்தக் கார்க்காரன், ஆரிண்டை காருக்கு இடிச்சு.... பெயிண்ட் கழண்டது...
அந்த இருவரின்... இலக்கத்தையும்... 110 க்கு அடித்து விட்டு,
அமுசடக்கமாக... இருந்து விடுவார்கள். :grin:

சிலதுகள்... அந்த இடத்தைப் பார்க்க,  நாய்🦮/ பூனையுடன்🐈... 
"வாக்கிங்"  வந்து,  நோட்டமிடுவார்கள்.     😎

இதனால்... பல, போலீஸ்காரனுக்கு... வேலை  குறைவு. 🤣

பாவம்... "பென்ஷன்"  எடுத்தவர்களுக்கும்... பொழுது போக வேணுமே.....  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை இல்லாததுகள் உங்கள் மகள் இத்தாலி இந்தியா போய் வந்ததை போட்டுக் கொடுத்து விட்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kavallur Kanmani said:

வேலை இல்லாததுகள் உங்கள் மகள் இத்தாலி இந்தியா போய் வந்ததை போட்டுக் கொடுத்து விட்டார்களா?

கண்மணி அக்கா... பென்சன் எடுத்தவர்களுக்கு, 
அப்படி போட்டுக் கொடுக்க வேண்டிய... அவசியமோ, அதனால் லாபமோ  இல்லை.

ஆனால்... கொரோனா பயம்,  தங்களையும் பீடித்து விடுமோ என்று, யோசித்திருக்கலாம்.
ஆனால்... அதனை, உறுதியாக சொல்ல முடியவில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தமிழ்சிறி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி கட்டுரைகள் எழுதுவார், பயணக் கட்டுரைகள் எழுதுவார். பயக் கட்டுரையும் வாசகர்களைக் கவரும்படி எழுவார் என்று இன்றுதான் கண்டறிந்தேன். வாசித்ததும் அவரைத் தொடர்புகொள்ள எண்ணினேன், ஆயினும் அவர் பயமின்றி இருக்கும் அந்த ஒருநாள் இன்றில்லாதபடியால் பொறுமைகாக்கிறேன். 😌

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாக் காலத்தில் பெங்களூர் போய் திரும்பி வந்ததே போதும். கொஞ்சம் பிந்தியிருந்தாலும் அங்கிருந்து வெளியேற முடியாமல் அவதிப்பட்டிருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க காத்திருக்கிறேன்...தொடருங்கள்

Link to comment
Share on other sites

On 27/3/2020 at 10:17, தமிழ் சிறி said:

குடிக்கின்ற நீரில், கக்கூசு தண்ணீர்  கலந்து இருந்திருப்பார்கள்.

என்ன இருந்தாலும் மகளை இப்படியா மிரட்டுறது?
அதுசரி இது உண்மையோ?

வாசிக்க ஒரு திரில்லா இருக்கு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு பாரம்பரிய பத்திரிகையாம் வீரகேசரி இப்படி தமிழை  வதைக்குது .
    • இந்தப் போட்டியில் என்னை ஒருத்தரும் வெல்லமாட்டினம் போல இருக்கு! வென்றால் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் நன்றி!
    • 4 ஜூன் 2024, 10:50 GMT புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள்இந்திய தேர்தல் 2024 பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை       என்டிஏ* 295   என்டிஏ (பாஜக கூட்டணி) 295 seats இந்தியா** 231   இந்தியா (எதிர்க்கட்சிகளின் கூட்டணி) 231 seats மற்றவை 17   மற்றவை 17 seats *பாஜக கூட்டணி **எதிர்க்கட்சிகளின் கூட்டணி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 5:11 PM அண்மைத் தகவலைப் பார்க்க பக்கத்தைப் புதுப்பிக்கவும் முழு முடிவுகளையும் பார்க்க  தற்போது வரை வெளியாகியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் மொத்தம் 40 தொகுதிகளில் வேட்பாளர்களின் நிலவரம் என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.   பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES 1. திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சசிகாந்த் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பாலகணபதி, வி.பொன் (பாஜக) மூன்றாம் இடம்: நல்லதம்பி (தேமுதிக) 2. வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கலாநிதி வீராசாமி (திமுக) இரண்டாம் இடம்: ஆர். மனோகர் (அதிமுக ) மூன்றாம் இடம்: ஆர்.சி. பால் கனகராஜ் (பாஜக) படக்குறிப்பு,தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), ஜெயவர்தன் (அதிமுக), தமிழிசை சௌர்ந்தரராஜன் (பாஜக) 3. தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) இரண்டாம் இடம்: தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) மூன்றாம் இடம்: ஜெ. ஜெயவர்தன் (அதிமுக) 4. மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தயாநிதிமாறன் (திமுக) இரண்டாம் இடம்: வினோஜ் (பாஜக) மூன்றாம் இடம்: எல் . பார்த்தசாரதி (தேமுதிக) 5. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.ஆர் பாலு (திமுக) இரண்டாம் இடம்: ஜி பிரேம்குமார் (அதிமுக) மூன்றாம் இடம்: வி.என் வேணுகோபால் (தமிழ் மாநில காங்கிரஸ்) 6. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வம் ஜி (திமுக) இரண்டாம் இடம்: ராஜசேகர் இ (அதிமுக) மூன்றாம் இடம்: ஜோதி. வி (பாமக) 7. அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜெகத்ரட்சகன் (திமுக) இரண்டாம் இடம்: எல். விஜயன் (அதிமுக) மூன்றாம் இடம்: கே.பாலு (பாமக) 8. வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.எம் கதிர் ஆனந்த் (திமுக) இரண்டாம் இடம்: ஏசி சண்முகம் (பாஜக) மூன்றாம் இடம்: எஸ் பசுபதி (அதிமுக) 9. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கோபிநாத் கே (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: ஜெயப்பிரகாஷ் வி (அதிமுக) மூன்றாம் இடம்: நரசிம்மன் சி (பாஜக)   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்பு படம் 10. தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மணி. எ (திமுக) இரண்டாம் இடம்: சௌமியா அன்புமணி (பாமக) மூன்றாம் இடம்: அசோகன். ஆர் (அதிமுக) 11. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அண்ணாதுரை சி.என். (திமுக) இரண்டாம் இடம்: களியபெருமாள் எம் (அதிமுக) மூன்றாம் இடம்: அஸ்வத்தாமன் எ (பாஜக) 12. ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தரணிவேந்தன் எம்.எஸ் (திமுக) இரண்டாம் இடம்: கஜேந்திரன் ஜி.வி (அதிமுக) மூன்றாம் இடம்: கணேஷ்குமார் எ (பாமக) 13. விழுப்புரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ரவிக்குமார் டி (விசிக) இரண்டாம் இடம்: பாக்கியராஜ். ஜெ (அதிமுக) மூன்றாம் இடம்: முரளி சங்கர். எஸ் (பாமக) 14. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மலையரசன் டி (திமுக) இரண்டாம் இடம்: குமரகுரு ஆர் (அதிமுக) மூன்றாம் இடம்: ஜெகதீசன் (நாம் தமிழர் கட்சி) 15. சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வகணபதி டிஎம் (திமுக) இரண்டாம் இடம்: விக்னேஷ் பி (அதிமுக) மூன்றாம் இடம்: அண்ணாதுரை என் (பாமக) 16. நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மதீஸ்வரன் வி எஸ் (திமுக) இரண்டாம் இடம்: தமிழ்மணி எஸ் (அதிமுக) மூன்றாம் இடம்: ராமலிங்கம் கே பி (பாஜக) 17. ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கே.இ. பிரகாஷ் (திமுக) இரண்டாம் இடம்: அசோக் குமார் (அதிமுக) மூன்றாம் இடம்: கார்மேகம் எம் (நாம் தமிழர் கட்சி ) 18. திருப்பூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுப்பராயன் கே (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) இரண்டாம் இடம்: அருணாச்சலம் பி (அதிமுக) மூன்றாம் இடம்: முருகானந்தம் எ.பி. (பாஜக) 19. நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஆ.ராசா (திமுக) இரண்டாம் இடம்: எல். முருகன் (பாஜக) மூன்றாம் இடம்: டி.லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக)   படக்குறிப்பு,கோயம்புத்தூர் வேட்பாளர்கள், அண்ணாமலை (பாஜக), சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக), கணபதி ராஜ்குமார் (திமுக) 20. கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கணபதி ராஜ்குமார் பி (திமுக) இரண்டாம் இடம்: அண்ணாமலை கே (பாஜக) மூன்றாம் இடம்: சிங்கை ஜி ராமச்சந்திரன் (அதிமுக) 21. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஈஸ்வரசாமி கே (திமுக) இரண்டாம் இடம்: கார்த்திகேயன் எ (அதிமுக) மூன்றாம் இடம்: வசந்தராஜன் கே (பாஜக) 22. திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சச்சிதானந்தம் ஆர் (திமுக) இரண்டாம் இடம்: முகமது முபாரக் எம் எ (அதிமுக) மூன்றாம் இடம்: திலக பாமா எம் (பாமக) 23. கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜோதிமணி. எஸ் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: தங்கவேல். எல் (அதிமுக) மூன்றாம் இடம்: செந்தில்நாதன்.வி.வி (பாஜக) 24. திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: துரை வைகோ (மதிமுக) இரண்டாம் இடம்: கருப்பையா. பி (அதிமுக) மூன்றாம் இடம்: செந்தில்நாதன். பி (அமமக) 25. பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அருண் நேரு (திமுக) இரண்டாம் இடம்: சந்திரமோகன் என்.டி (அதிமுக) மூன்றாம் இடம்: பாரிவேந்தர் டி.ஆர் (பாஜக) 26. கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: எம்.கே. விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பி. சிவக்கொழுந்து (தேமுதிக) மூன்றாம் இடம்: தங்கர் பச்சான் (பாமக) படக்குறிப்பு,சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள், திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), மா.சந்திரகாசன் (அதிமுக), கார்த்தியாயினி (பாஜக) 27. சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தொல் திருமாவளவன் (விசிக) இரண்டாம் இடம்: சந்திரஹாசன் எம் (அதிமுக) மூன்றாம் இடம்: கார்த்தியாயினி பி (பாஜக) 28. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுதா ஆர் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பாபு பி (அதிமுக) மூன்றாம் இடம்: ஸ்டாலின் எம் கே (பாமுக) 29. நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வராஜ் வி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) இரண்டாம் இடம்: சுர்ஷித் சங்கர் ஜி (அதிமுக) மூன்றாம் இடம்: கார்த்திகா எம் (நாம் தமிழர் கட்சி) 30. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: முரசொலி எஸ் (திமுக) இரண்டாம் இடம்: சிவநேசன் பி (தேமுதிக) மூன்றாம் இடம்: முருகானந்தம் எம் (பாஜக) 31. சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: சேவியர் தாஸ் எ (அதிமுக) மூன்றாம் இடம்: தேவநாதன் யாதவ் டி (பாஜக)   பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும் பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 32. மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: வெங்கடேசன் எஸ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) இரண்டாம் இடம்: ராம ஸ்ரீனிவாசன் (பாஜக) மூன்றாம் இடம்: சரவணன் பி (அதிமுக) 33. தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தங்க தமிழ்செல்வன் (திமுக) இரண்டாம் இடம்: டிடிவி தினகரன் (அமமக) மூன்றாம் இடம்: நாராயணசாமி விடி (அதிமுக) 34. விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மாணிக்கம் தாகூர் பி (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: விஜயபிரபாகரன் வி (தேமுதிக) மூன்றாம் இடம்: ராதிகா ஆர் (பாஜக) படக்குறிப்பு,ராமநாதபுரம் வேட்பாளர்கள் நவாஸ் கனி (திமுக கூட்டணி), ஜெய பெருமாள் (அதிமுக), ஓ.பன்னீர் செல்வம் (சுயேச்சை) 35. இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: நவாஸ்கனி கே (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்) இரண்டாம் இடம்: ஓ. பன்னீர்செல்வம் (சுயேச்சை) மூன்றாம் இடம்: ஜெயப்பெருமாள் பி (அதிமுக) 36. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கனிமொழி கருணாநிதி (திமுக) இரண்டாம் இடம்: சிவசாமி வேலுமணி ஆர் (அதிமுக) மூன்றாம் இடம்: ரோவெனா ரூத் ஜேன் ஜே (நாம் தமிழர் கட்சி) 37. தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராணி ஸ்ரீ குமார் (திமுக) இரண்டாம் இடம்: கே கிருஷ்ணசாமி (அதிமுக) மூன்றாம் இடம்: பி ஜான்பாண்டியன் (பாஜக)   படக்குறிப்பு,திருநெல்வேலி வேட்பாளர்கள், நயினார் நாகேந்திரன் (பாஜக), ஜான்சி ராணி (அதிமுக), ராபர்ட் ப்ரூஸ் (காங்கிரஸ்) 38. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராபர்ட் பிரூஸ் சி (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: நயினார் நாகேந்திரன் (பாஜக) மூன்றாம் இடம்: சத்யா (நாம் தமிழர் கட்சி) 39. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஜய் வசந்த் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: ராதாகிருஷ்ணன் பி (பாஜக) மூன்றாம் இடம்: மரிய ஜெனிஃபர் கிளாரா மைக்கேல் (நாதக) 40. புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஇ வைத்திலிங்கம் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: என் நமச்சிவாயம் (பாஜக) மூன்றாம் இடம்: ஆர் மேனகா (நாம் தமிழர் கட்சி) https://www.bbc.com/tamil/articles/c51137wpdpvo
    • இவ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் திமுக்கா கூட‌ தொங்காம‌ இருந்தால் இவ‌ர்க‌ளுக்கும் பிஜேப்பி நிலை தான்.............என்ன‌ பிஜேப்பிய‌ விட‌ இவ‌ர்க‌ளுக்கு கூடுத‌லான‌ ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இருக்கு அம்ம‌ட்டும் தான்   த‌னித்து நின்று இருந்தால் சில‌ தொகுதிக‌ளை இவ‌ர்க‌ள் வெல்வ‌தே சிர‌ம‌ம்...................................................
    • உங்களால் எப்போதும் தமிழர்களை ஆள முடியாது.. வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ 04 JUN, 2024 | 04:18 PM   பா.ஜ.க.-வால் தமிழ்நாட்டை, தமிழர்களை எப்போதும் ஆளவே முடியாது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். கடந்த சில மாதங்களுக்மாதங்களுக்கு முன் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இன்று (ஜூன் 4) தமிழ்நாட்டில், தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். பல தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் பா.ஜ.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், "பா.ஜ.க.-வால் தமிழகத்தை ஆளவே முடியாது" என்று பேசிய ராகுல் காந்தியின் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/185310
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.