Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவைப் பகைத்தால் பேராபத்தைச் சந்திக்க நேரிடும் - அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவைப் பகைத்தால் பேராபத்தைச் சந்திக்க நேரிடும் - அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை.!

_85341030_hi028832986.jpg

"ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிப்பதால் எவ்வித பயனையும் பெறாது. மாறாக பாதகமான பின்விளைவுகளையே சந்திக்கும். எனவே, ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முட்டிமோதுவதை இந்த அரசு நிறுத்த வேண்டும்.

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லையேல் பேராபத்தை அரசும் நாடு சந்திக்கும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வின் ஆரம்பக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரித்துள்ள இலங்கை அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த ஆணையாளரின் கருத்துக்கள் தேவையற்றவை எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டுக்களையும், அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான அவரின் கரிசனையையும் நாம் மனதார வரவேற்கின்றோம்.

ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்று இலங்கை அரசு கூறியுள்ளமை பெரிய விடயமல்ல. ஏனெனில், சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களையும், அறிவுரைகளையும் இந்த அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிளுக்கு இராணுவத்தில் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை, இப்படியான குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகிய ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் சிவில் நிர்வாகத்துறையில் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மிருசுவிலில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் மீதான இராணுவக் கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மறுபுறம் துன்புறுத்தல்களும் தொடர்கின்றன. இலங்கையின் இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை. அது தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புக்கூறவும் இல்லை. இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றாமல் அவற்றை இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது.

இந்த உண்மைச் சம்பவங்களையே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குற்றச்சாட்டுக்களாக இலங்கை மீது முன்வைத்துள்ளார். ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கள் நியாயமானவை.

அதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்த்துள்ளார். அதிலுள்ள பாதகங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிப்பதால் எவ்வித பயனையும் பெறாது. மாறாக பாதகமான பின்விளைவுகளையே சந்திக்கும். எனவே, ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முட்டிமோதுவதை இந்த அரசு நிறுத்த வேண்டும்.

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை இந்த அரசு நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லையேல் பேராபத்தை அரசும் நாடும் சந்திக்கும்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/09/18/16887/

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.... நம்ம சிங்கம், கிளம்பிடிச்சு... 🦁

தலையகத்தை பார்த்திட்டு சரியான நடுங்கிபோனன். பிறகு வந்து செய்தியை வாசிப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரமாதித்த்னிண் சோகக் கதையைக் கேட்டு மனம் தளராத வேதாளம் ...மீண்டும் முருங்கைமரத்தில் ஏறியது... 😫

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போப்பு அங்கால ...
வயசு போன காலத்தில வாங்கிக்கட்டாமலுக்கு,   

மனித உரிமை பேரவையிலிருந்து விலகும் எண்ணமில்லை- அரசாங்கம்

மனித உரிமை பேரவையிலிருந்து விலகுவதுகுறித்து எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அரசாங்கம்அறிவித்துள்ளது.
அமைச்சர் கெஹெலியரம்புக்வெல தெரிவித்த விடயத்தினை ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்தியுள்ளன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் மாநாட்டின் போது அமைச்சர் ஐக்கிய நாடுகள்மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை விலகவுள்ளதாககுறிப்பிடவில்லை,மனித உரிமைபேரவையின் தீர்மானத்திலிருந்து விலகுவதற்கான அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்றே அவர் குறிப்பிட்டார் என தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

http://thinakkural.lk/article/69738

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஐ.நாவைப் பகைத்தால் பேராபத்தைச் சந்திக்க நேரிடும் - அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை.!

_85341030_hi028832986.jpg

"ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிப்பதால் எவ்வித பயனையும் பெறாது. மாறாக பாதகமான பின்விளைவுகளையே சந்திக்கும். எனவே, ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முட்டிமோதுவதை இந்த அரசு நிறுத்த வேண்டும்.

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லையேல் பேராபத்தை அரசும் நாடு சந்திக்கும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

ஐயா

சிறீலங்கா அரசுக்கு எச்சரிக்கை  தான் விடுகிறார்

நாங்க  உங்க  காலடியில  கிடக்கும் போது

ஏனப்பா  அவங்களோட முண்டி பெயரைக்கெடுத்து கொள்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

ஐயா

சிறீலங்கா அரசுக்கு எச்சரிக்கை  தான் விடுகிறார்

நாங்க  உங்க  காலடியில  கிடக்கும் போது

ஏனப்பா  அவங்களோட முண்டி பெயரைக்கெடுத்து கொள்கிறீர்கள்

முண்டினால் எமக்குத்தானே நல்லது என்று புரியாமல், இவர் ஏன் புத்திமதி சொல்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஆஹா.... நம்ம சிங்கம், கிளம்பிடிச்சு... 🦁

  வாங்கிய அடி கிளப்பிடிச்சு.

 

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லையேல் பேராபத்தை அரசும் நாடு சந்திக்கும்."

குரைக்கிற நாய் கடிக்காது என்பது அவர்கள் கண்ட அனுபவம். உப்பிடி எத்தனை எச்சரிக்கையை கண்டவனுகள் அவனுகள். சட்டையில் ஏறிய எறும்பை தட்டுவதுபோல் தட்டிப்போட்டு போய்க்கொண்டே இருப்பானுகள்.

 

23 minutes ago, Nathamuni said:

முண்டினால் எமக்குத்தானே நல்லது என்று புரியாமல், இவர் ஏன் புத்திமதி சொல்கிறார்?

எள்ளேன் காயுது? எண்ணெய்க்காக, எலிப்புழுக்கை ஏன் காயுது? கூட இருந்த குற்றத்துக்காக. 

தன்னினத்தை, அதன் அழிவை விட, கூட இருந்த பாசம் அதன் அழிவைக் காண விரும்பவில்லை. அதுதான் தலீவர், சிங்கள மக்கள் விரும்பாத தீர்வை ஒருநாளும்  ஏற்க மாட்டார் எங்கட தலீவர். வாழ்க!

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் அறிக்கை மட்டும் தான் இவரால் விடமுடிகிறது

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் அறிக்கை மட்டும் தான் இவரால் விடமுடிகிறது

தீபாவளிக்கு... தீர்வு கிடைக்கும் என்று, அறிக்கை விட்டு...
எமக்கு, கடுப்பு ஏத்தாமல் இருக்கிறார் என்று.. சந்தோசப் படுங்கோ. :)

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா விலகும் என்ற  அறிக்கையை வாசித்தவுடன் ஐ.நா சபை நடுங்கி போய்விட்டதாம் .....முக்கியமாக ஐ.நா சபையின் அமைத்திப்படையிலிருந்து சிறிலங்கா விலகினால் உலக சமாதானத்திற்கே பேரிழப்பாக போய்விடும் என ...

  • கருத்துக்கள உறவுகள்

ஐநாவை விரட்டி விட்டிட்டு தமிழ் மக்கள் மீது யுத்தம் செய்த போது கூட சம் இப்படி குமுறவில்லை. இப்போ எல்லாம் கைமீறிப் போய்விட்ட பின் ஐநாவுக்குப் பின்னால் பதுங்கி இருந்து கத்திப் பார்க்கிறார்.. மகிந்த கும்பல்.. சம் சும் கும்பலை எப்படி சமாளிக்கனும் என்று நன்கே கற்றுத் தேறிவிட்டார்கள். கற்றுக் கொடுத்ததும்.. சம் சும் கும்பல் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

எழுபது வருடங்களாக கூட இருந்து தோள்கொடுத்து சிங்களவரை காத்த பெருந்தகை இப்போ,  தன் கையை மீறி சிங்களவனை ஐ .நா . தண்டித்துவிடுமோ என்கிற ஆதங்கத்தில் எச்சரிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வீட்டை கோத்தா பறித்து விடுவானோ என்ற கலக்கத்தில்  கண்டபடி உளறுது .

ஐயா உங்கள் வயதிற்கு இப்படியெல்லம் அதிர்ந்து கதைக்க கூடாது. கவனமையா.. இன்னும் நீங்கள் தமிழருக்கு செய்ய பல இருக்கு, இதுவரை செய்திருந்தாலும் பரவாயில்லை.

இன்னும் உங்களுக்கு ஏன் இந்த அரசியல் கதிரை. இதுவரை இதை வைத்து என்ன செய்தீர்கள் தீபாவளி தைப்பொங்கலை மக்களுக்கு ஞாபக படுத்தியதை தவிர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.