Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடும் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத்தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலுக்கே இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வேண்டுகோளை அடுத்து, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகள் ஏற்பாடு செய்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் கடந்த சனிக்கிழமை (26-09-20) சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் நடைபெற்றது.

தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்தானது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரின் முயற்சியையும், அவரது அழைப்பை ஏற்று பங்குபற்றிய அனைத்து 10 தேசிய கட்சித் தலைவர்களினதும் உணர்வுபூர்வமான பங்களிப்பை கொச்சைப்படுத்தியுள்ளதுடன், தமிழ் மக்களின் உணர்வலைகளை தொடர்ந்தும் புண்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது.

தமிழரசுக் கட்சியில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் சுமந்திரன், ‘தமிழ் மக்களுக்கு திலீபனின் நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பெரிதாக இல்லை” எனக்கூறியமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

தமிழ் மக்களின் மீது கடுமையான அடக்கு முறையை ஏவி கோவில்களில் பூசை செய்வதையே கூட தடுத்துள்ள நிலையிலும், மக்கள் உண்ணாவிரதத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதையும் வெற்றிகரமாக சாதித்துள்ளனர்.

இந்நிலையில்,அஹிம்சை வழியில் போராடிய அஹிம்சாவாதியை நினைவு கூர்வது தமிழ் மக்களின் தார்மீக உரிமையும் கடமையும் என்பது தெளிவாக புலப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது தமிழ் தலைவர்கள் ஒன்றிணைவதில் அவதானம் தேவை என அறிக்கை வெளியிட்ட சுமந்திரன் தமிழ் தலைமைகளின் ஒற்றுமையை விரும்புகிறாரா?. இல்லையா? அல்லது தமிழர்கள் பலமடைவது சுமந்திரனின் இருப்பில் ஏதாவது பின்னடைவு ஏற்படும் என கருதுகிறாரா?

சுமந்திரன் யாருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்படுகின்றார்?சுமந்திரன் வடக்கு மக்களின் பிரதிநிதியா அல்லது தென்னிலங்கை மக்களின் பிரதிநிதியா?

தியாகி திலீபனின் நினைவு நாட்களை உணர்வுபூர்வமாக அனுசரிக்கும் புனித வாரத்தில் அதனைக் கொச்சைப்படுத்தும் வேண்டும் என்ற அடிப்படையிலேயே சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ள கருத்தானது இந்த காலப் பகுதியில் வெளியிடப்பட்டிருப்பது மிகவும் வேதனைகுரிய விடயம்.

திலீபனின் நினைவு நாட்களில், திலீபன் தொடர்பில் ஆறுதலான வார்த்தைகளை கூறாவிட்டாலும், சிங்கள ஆட்சியாளர்களே உச்சரிக்காத வார்த்தையான நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற பெரிய உணர்வு மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் கூறுவதை எவராலும் ஏற்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது.

அரச அடக்கு முறைக்கு எதிராக தமிழ் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்திரனிற்கு இருக்கின்றது.

எனினும் மக்களாகவே முன் வந்து தமது ஜனநாயக உரிமையை நிலை நிறுத்திய நடவடிக்கையை கொச்சைப்படுத்தியது என்பது தமிழினத்திற்கு செய்யும் துரோகமாகும்.

தமிழ் தேசியக் கருத்துக்களை உச்சரிக்கும் தகுதி சுமந்திரனுக்கு இல்லை அல்லது அவரது தென்னிலங்கை அரசியல் உறவுகளிற்கு இடைஞ்சலாக இருக்கும் எனக் கருதினால், அவர் தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி தென்னிலங்கை அரசியலுடன் ஒன்றிணைந்து செயற்படுவது சாலச் சிறந்தது எனவும் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/257181?ref=home-top-trending

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

சிங்கள ஆட்சியாளர்களே உச்சரிக்காத வார்த்தையான நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற பெரிய உணர்வு மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் கூறுவதை எவராலும் ஏற்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது.

தமிழ்த் தேசியம் என்னும் சாயத்தைப் பூசிக்கொண்டு திரியும்   அரசாங்கத்தின் ஊதுகுழல் சுமந்திரன் அப்படிப் பேசினாற்தான், சிங்கள மக்களின் பாராட்டையும், அரசின் வெகுமதியையும் பெறமுடியும். அதே நேரம் அரசுக்கெதிரான செல்லத்தட்டும் அப்பப்ப தட்டி, தான் ஒரு தமிழ்த்  தேசியவாதியெனக் காட்டி, தனக்கென ஒரு ஏமாளிக்கூட்டத்தை உருவாக்கி வாக்கு மோசடி செய்ய முடியும். தன் இனத்தை அழிப்பவனுக்கு, இப்படி தன் மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி விளக்கமளித்து முண்டுகொடுப்பதன்மூலம்  தனது சந்ததியையும் அழிவுக்கு உட்படுத்துகிறார் என்பதை தெரியாமலே செய்கிறார்.  "நாங்கள் கொழும்பு வாசிகள்" என்று நினைக்கலாம். காலகாலமாய் கொழும்பையே பிறப்பிடமாகக் கொண்டவர்களே விரட்டியடிக்கப்பட்ட வரலாறுகளையும் சுமந்திரன் அறிந்து வைத்திருப்பது அவருக்கு நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலுக்கே

தல,
மூலத்தை தரலாம் தானே. அல்லாவிட்டால்  சுமந்திரன் டக்லஸ்சை பாராளமன்றத்தில் திட்ட, அவர் புகழ்த்தார் என்ற மாதிரி இருக்க கூடாது.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

சரியான ஆதாரம் இல்லாமல் இதற்கு கருத்துக் கூற முடியாது. ஏற்கனவே பல தடவை சூடு கண்டாயிற்று 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பத்திரிகைப் பேட்டியில், முள்ளி வாய்க்கால் அழிவிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும்,  தூண்டியதாகவும், போனவருடம் நீதிமன்றம் நினைவேந்தல் செய்ய அனுமதி அளித்தது என்றும், தானே நீதிமன்றத்தில் முன்னிலையாகி அனுமதியைப் பெற்றதாகவும், இந்த முறை தன்னை யாரும் நீதிமன்றம் செல்ல நாடவில்லை என்றும், போனவருடம் கொடுக்கப்பட்ட தீர்ப்பை நீதிபதிக்கு  நினைவுபடுத்தியிருந்தாலே அனுமதியைப் பெற்றிருக்கலாம் என பேட்டி அளித்திருந்தாராம் பொறுப்புள்ள தமிழ் மக்களின் பேச்சாளர். தனது  முக நூலிலும் பகிர்ந்திருந்தாராம். இது நான் அறிந்த செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கில் ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள் -எம்.ஏ சுமந்திரன் MP

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றம் அனுமதி மறுத்த பின் சம்பந்தப்பட்டவர்கள் தன்னை நாடி வந்தார்கள் என்றும், ஆனால் காலம் கடந்து விட்டது, அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது என்றாராம். தானே ஆஜர் ஆகி இருந்தாலும் அனுமதி கிடைக்காது என்று ஒதுங்கி இருந்து விட்டு, பின்னர் தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக அப்படிக் கூறி இருக்கலாம். அஷ்ரபின் மறைவு  நினைவுக்கு போன அவருக்கு, நம் இனத்தின் விடியலுக்காய் தன்னை உருக்கி இறந்த ஒருவரை நினைவு கூர மறந்து போய்விட்டதா? அல்லது நினைவு கூர விரும்பவில்லைலையா?   நீதிமன்றம் அனுமதி  மறுத்தபோது போது, யாரும் தேடி வரட்டும் என்று காத்திருக்கும்  ஒருவர் நம் இனத்தின் சார்பாய் தானாக பேசுவாரா?   வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் சாதாரண வக்கீலாகவே அவரை நான் காண்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

நீதிமன்றம் அனுமதி மறுத்த பின் சம்பந்தப்பட்டவர்கள் தன்னை நாடி வந்தார்கள் என்றும், ஆனால் காலம் கடந்து விட்டது, அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது என்றாராம். தானே ஆஜர் ஆகி இருந்தாலும் அனுமதி கிடைக்காது என்று ஒதுங்கி இருந்து விட்டு, பின்னர் தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக அப்படிக் கூறி இருக்கலாம். அஷ்ரபின் மறைவு  நினைவுக்கு போன அவருக்கு, நம் இனத்தின் விடியலுக்காய் தன்னை உருக்கி இறந்த ஒருவரை நினைவு கூர மறந்து போய்விட்டதா? அல்லது நினைவு கூர விரும்பவில்லைலையா?   நீதிமன்றம் அனுமதி  மறுத்தபோது போது, யாரும் தேடி வரட்டும் என்று காத்திருக்கும்  ஒருவர் நம் இனத்தின் சார்பாய் தானாக பேசுவாரா?   வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் சாதாரண வக்கீலாகவே அவரை நான் காண்கிறேன்.

முகம் அடிபட விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்தது ஹர்த்தாலைப்பற்றியது, தவராசா கூறுவது தியாகி திலீபனின் நினைவு கூரல், 
நீதிமன்ற அனுமதி மறுப்பு பற்றியது.

2 hours ago, பெருமாள் said:

திலீபனின் நினைவு நாட்களில், திலீபன் தொடர்பில் ஆறுதலான வார்த்தைகளை கூறாவிட்டாலும், சிங்கள ஆட்சியாளர்களே உச்சரிக்காத வார்த்தையான நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற பெரிய உணர்வு மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் கூறுவதை எவராலும் ஏற்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நீங்கள் இணைத்தது ஹர்த்தாலைப்பற்றியது, தவராசா கூறுவது தியாகி திலீபனின் நினைவு கூரல், 
நீதிமன்ற அனுமதி மறுப்பு பற்றியது.

தயவு செய்து சுமந்திரன்  சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வழங்கியதாக கூறப்படும் நேர்காணலை இணையுங்கள்.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

தமிழர்களின் உணா்வுகளை கொச்சைப்படுத்துவது தமிழினத்திற்கு செய்யும் துரோகம்! சுமந்திரனின் கருத்துக்கு கே.வி தவராசா கண்டனம் .

அரச அடக்கு முறைக்கு எதிராக நம் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் திரு.சுமந்திரனிற்கு இருந்த போதிலும் மக்களாகவே முன் வந்து தமது ஜனநாயக உரிமையை நிலை நாட்டியதை கொச்சைப்படுத்தியது தமிழினத்திற்கு செய்யும் துரோகமாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத்தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய கே.வி.தவராசா தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தொிவித்ததாவது,

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வேண்டுகோளையடுத்து “தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அரசு நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் (26-09-2020) நடாத்தியது .

தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு அந்த அளவிற்கு மக்களிடையே காணப்படவில்லை என திரு.சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலில் கூறியமையானது தமிழரசுக் கட்சியின் தலைவரின் முயற்சியையும் அவரது அழைப்பை ஏற்று பங்குபற்றிய அனைத்து 10 தமிழ்த் தேசிய கட்சித் தலைவர்களினதும் உணர்வு பூர்வமான பங்களிப்பை கொச்சைப்படுத்தியதாக அமைவதோடு தமிழ் மக்களின் உணர்வலைகளை தொடர்ந்தும் புண்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது.

தமிழ் அரசுக் கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்து கொண்டு ‘தமிழ் மக்களுக்கு திலீபனின் நினைவேந்தலை செய்யவேண்டும் என்ற உணர்வு அந்த அளவிற்கு இல்லை’ என்று திரு. சுமந்திரன் கூறியமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். தமிழ் மக்களின் மேல் கடுமையான அடக்கு முறையை பாவித்து கோவில்களில் பூசை செய்வதையே தடுத்துள்ள நிலையிலும் மக்கள் உண்ணாவிரதத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பிலும் வெற்றிகரமாக சாதித்துள்ளனர். இந்நிலையில் அஹிம்சை வழியில் போராடிய அஹிம்சாவாதியை நினைவு கூர்வது தமிழ் மக்களின் தார்மீக கடமை என்பது தெளிவாக தெரிகிறது.

என தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

https://newuthayan.com/தமிழர்களின்-உணா்வுகளை-கொ/

  • கருத்துக்கள உறவுகள்

தவராசாவுக்கு தேசிய பட்டியலில் பாராளுமன்ற கதிரை கிடைப்பதற்கு சுமந்திரன் தடையாக இருந்ததனால் சுமந்திரனை அரசியலில் இருந்து ஒதுக்க தான் முயற்சிப்பதாக தவராசாவே எழுதி எங்கேயோ படித்த நினைவு - யாராவது இதை படித்த ஞாபகம்?

சிங்களவரை விட கொடூரமான வர்ணிப்பு-திரிபுபடுத்தப்படும் திலீபனின் போராட்டம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:

தயவு செய்து சுமந்திரன்  சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வழங்கியதாக கூறப்படும் நேர்காணலை இணையுங்கள்.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

உங்க ஆள் நேரத்துக்கு ஒன்று கதைப்பவர் உங்கள் ஸ்ரைலில் சொல்கிறம்  தேடி பார்த்து எடுத்து கொள்ளுங்க .

கனடாவில் இருந்து வந்த 21 கோடி எங்கு என்று கணக்கு கேட்ட ஆட்களை கேஸ் போட்டு வெருட்டும் ஆள் இப்படி சொல்லாத ஒன்றை தமிழ் ஊடகங்கள் வெளியிட்டன என்றால் அவருக்கு அல்வா கிடைத்தது போல் கிளம்பிடுவார் கேஸ் போட 😁

3 hours ago, கற்பகதரு said:

தவராசாவுக்கு தேசிய பட்டியலில் பாராளுமன்ற கதிரை கிடைப்பதற்கு சுமந்திரன் தடையாக இருந்ததனால் சுமந்திரனை அரசியலில் இருந்து ஒதுக்க தான் முயற்சிப்பதாக தவராசாவே எழுதி எங்கேயோ படித்த நினைவு - யாராவது இதை படித்த ஞாபகம்?

இங்கு தீபனை சுமத்திரன் தன் எழும்புநக்கி அரசியலுக்கு அவதூறு செய்தமையே திரி இதுக்குள் தவராசா என்ன செய்தார் என்பதல்ல முக்கியம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, zuma said:

முகம் அடிபட விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.

அதனால் தான் மீசையை வழித்து விட்டு சுமத்திரன் திரிகிறார் ஆக்கும் .

சிங்களவரே திலீபனை தவறாக சொல்லவில்லை இவருக்கு ஏன் இந்த வேண்டா வேலை வசந்த புறத்தில் கக்கூசு கட்டுவதுடன்  வாயை  வைத்துக்கொண்டு இருக்க சொல்லுங்க .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நினைவேந்தலும் ஒரு அமைப்பு ஒழுங்கு செய்தால் தான் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் ....மகாத்மா காந்திக்கே அப்படி தான் எதாவது அமைப்பு தான் ஒழுங்கு செய்யும்...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

தவராசாவுக்கு தேசிய பட்டியலில் பாராளுமன்ற கதிரை கிடைப்பதற்கு சுமந்திரன் தடையாக இருந்ததனால் சுமந்திரனை அரசியலில் இருந்து ஒதுக்க தான் முயற்சிப்பதாக தவராசாவே எழுதி எங்கேயோ படித்த நினைவு - யாராவது இதை படித்த ஞாபகம்?

முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு அடுத்து, தவராசாவை  தனக்கு சவாலாக சுமந்திரன் நினைக்கிறார். அப்படி தவராசா சுமந்திரன் மேல் இல்லாத ஒரு குற்றச்சாட்டை சுமத்த முடியாது. அவரும் ஒரு சட்டத்தரணி.  ஒரே நேரத்தில் பலவாறு பேசி எஜமானரை குளிர்விப்பதும், மக்களை குழப்புவதும் குழப்பிகளின், சுயநலவாதிகளின் தந்திரம். தம்மை மக்கள்  அடையாளம் கண்டுபிடிக்காதபடி இப்படி மாற்றி, மழுப்பி பேட்டியளிப்பார்கள். இது சுமந்திரனுக்கு ஒன்றும் புதிதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

சுமந்திரனுக்கு காவடி ஆடியவர்களை 
மீண்டும் வேறொரு திரியில் காணலாம் 
மீண்டும் சிந்திப்போம்  சொறி சந்திப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயல்; கே.வி.தவராசா கடும் கண்டனம்

 

“தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என திரு.சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். அவரது இந்த கருத்தானது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரின் முயற்சியையும் அவரது அழைப்பை ஏற்று பங்குபற்றிய அனைத்து 10 தேசிய கட்சித் தலைவர்களினதும் உணர்வு பூர்வமான பங்களிப்பை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் தமிழ் மக்களின் உணர்வலைகளை தொடர்ந்தும் புண்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது” தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வேண்டுகோளை அடுத்து, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகள் ஏற்பாடு செய்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் நடைபெற்றது.

தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என திரு.சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்தானது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரின் முயற்சியையும் அவரது அழைப்பை ஏற்று பங்குபற்றிய அனைத்து 10 தேசிய கட்சித் தலைவர்களினதும் உணர்வு பூர்வமான பங்களிப்பை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் தமிழ் மக்களின் உணர்வலைகளை தொடர்ந்தும் புண்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது.

தமிழரசுக் கட்சியில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் சுமந்திரன், ‘தமிழ் மக்களுக்கு திலீபனின் நினைவேந்தலை செய்யவேண்டும் என்ற உணர்வு பெரிதாக இல்லை” எனக்கூறியமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். தமிழ் மக்களின் மீது கடுமையான அடக்கு முறையை ஏவி கோவில்களில் பூசை செய்வதையே கூட தடுத்துள்ள நிலையிலும் மக்கள் உண்ணாவிரதத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதையும் வெற்றிகரமாக சாதித்துள்ளனர்.

இந்நிலையில் அஹிம்சை வழியில் போராடிய அஹிம்சாவாதியை நினைவு கூர்வது தமிழ் மக்களின் தார்மீக உரிமையும் கடமையும் என்பது தெளிவாக புலப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது தமிழ் தலைவர்கள் ஒன்றிணைவதில் அவதானம் தேவை என அறிக்கை வெளியிட்ட சுமந்திரன் தமிழ் தலைமைகளின் ஒற்றுமையை விரும்புகிறாரா?. இல்லையா? அல்லது தமிழர்கள் பலமடைவது சுமந்திரனின் இருப்பில் ஏதாவது பின்னடைவு ஏற்படும் என கருதுகிறாரா?. சுமந்திரன் யாருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்படுகின்றார்?. சுமந்திரன் வடக்கு மக்களின் பிரதிநிதியா அல்லது தென்னிலங்கை மக்களின் பிரதிநிதியா?

தியாகி திலீபனின் நினைவு நாட்களை உணர்வு பூர்வமாக அனுசரிக்கும் புனித வாரத்தில் அதனைக் கொச்சைப்படுத்தும் வேண்டும் என்ற அடிப்படையிலேயே சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ள கருத்தானது இந்த காலப் பகுதியில் வெளியிடப்பட்டிருப்பது மிகவும் வேதனைகுரிய விடயம்.

திலீபனின் நினைவு நாட்களில், திலீபன் தொடர்பில் ஆறுதலான வார்த்தைகளை கூறவிட்டாலும் சிங்கள ஆட்சியாளர்களே உச்சரிக்காத வார்த்தையான நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற பெரிய உணர்வு மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் கூறுவதை எவராலும் ஏற்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது.

அரச அடக்கு முறைக்கு எதிராக தமிழ் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்திரனிற்கு இருக்கின்றது. எனினும் மக்களாகவே முன் வந்து தமது ஜனநாயக உரிமையை நிலை நிறுத்திய நடவடிக்கையை கொச்சைப்படுத்தியது என்பது தமிழினத்திற்கு செய்யும் துரோகமாகும்.

தமிழ் தேசியக் கருத்துக்களை உச்சரிக்கும் தகுதி சுமந்திரனுக்கு இல்லை அல்லது அவரது தென்னிலங்கை அரசியல் உறவுகளிற்கு இடைஞ்சலாக இருக்கும் எனக் கருதினால், அவர் தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி தென்னிலங்கை அரசியலுடன் ஒன்றிணைந்து செயற்படுவது சாலச் சிறந்தது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத்தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.ilakku.org/தியாகி-திலீபனை-கொச்சைப்ப/

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, zuma said:

தயவு செய்து சுமந்திரன்  சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வழங்கியதாக கூறப்படும் நேர்காணலை இணையுங்கள்.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

 

3 hours ago, குமாரசாமி said:

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 

சிலருக்கு நாக்கில் சனி.

சுமந்திரனுக்கு நாக்கே சனி.

இது மமதையால் விளையும் பேச்சு.

 

  • கருத்துக்கள உறவுகள்

இது "உசார் ரீம்" ஒருவர் கேட்கும் போது பல உணர்வுகளை ஏற்படுத்தும். "அந்த அளவுக்கு இருப்பதாக தெரியவில்லை!" என்று ஒப்பீட்டு ரீதியில் பேசுகிறார். வழக்கம் போல இது உசார் ரீமின் பிரச்சினை, சும் எப்போதும் போல தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Justin said:

இது "உசார் ரீம்" ஒருவர் கேட்கும் போது பல உணர்வுகளை ஏற்படுத்தும். "அந்த அளவுக்கு இருப்பதாக தெரியவில்லை!" என்று ஒப்பீட்டு ரீதியில் பேசுகிறார். வழக்கம் போல இது உசார் ரீமின் பிரச்சினை, சும் எப்போதும் போல தான்!

 முதலாவது வக்காலத்து.😎

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 

அண்ணை மிச்சம் எங்கை, சும்மா வெட்டி, ஒட்டி கயிறு திரிக்கின்ற விளையாட்டு வேண்டாம் 

 

Edited by zuma

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.