Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த பல்கலை மாணவர்கள்; கைது செய்யப்படுவீர்கள்- எச்சரிக்கை விடுத்த பொலிஸார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த பல்கலை மாணவர்கள்; கைது செய்யப்படுவீர்கள்- எச்சரிக்கை விடுத்த பொலிஸார்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.

அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.

எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.

தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/155233?ref=imp-news

 

கொழும்பில் எல்லா வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றி இருக்கிறார்கள். அவர்களும் கைது செய்யப்படுவார்களா? அங்குள்ளவர்களுக்கு யாராவது விளங்கப்படுத்தி சொல்லுங்கப்பா இது அந்த கார்த்திகை தீபம் இல்லை எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளையும் கார்த்திகை தீபத்தையும் போட்டு குழப்பி கொள்கிறார் கள் போலும்.இரண்டும் அடுத்து.அடுத்து வருவதால்...

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் சொறீலங்கா நீதித்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு கிழக்கு நீதிமன்ற நீதிபதி அதிபுத்திசாலிகள் தடை விதிச்சிருப்பினமோ..??!

வரவர நீதிபதிகளும் நீதியும் சொறீலங்கா... ஆட்சியாளர்களின் சொறீலங்கா இராணுவ, பொலிஸின் ஏவல் இயந்திரங்கள் போல.. மாற்றமடைந்து வருகின்றன.

எல்லாம் காலக்கேடு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, Robinson cruso said:

கொழும்பில் எல்லா வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றி இருக்கிறார்கள். அவர்களும் கைது செய்யப்படுவார்களா? அங்குள்ளவர்களுக்கு யாராவது விளங்கப்படுத்தி சொல்லுங்கப்பா இது அந்த கார்த்திகை தீபம் இல்லை எண்டு.

15 minutes ago, யாயினி said:

மாவீரர் நாளையும் கார்த்திகை தீபத்தையும் போட்டு குழப்பி கொள்கிறார் கள் போலும்.இரண்டும் அடுத்து.அடுத்து வருவதால்...

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்....😎

Ghost

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்....😎

Ghost

 

ஆ.. இது என்ன புது வேடிக்கை.😆

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிறந்த நாளுக்கு கேக் வெட்டியவர்கள் 10 மேற்பட்டவர்கள் கைது , சிலர் இன்னமும் பொலிசாரால் தேடப்பட்டு வருகிறார்கள்  ( சிலருக்கு சந்தோசமாக இருக்கலாம் ஓடி ஒளித்தவர்கள் பிடிபடாத பிறகு அவர் குடும்பம் சார்ப்பில் ஒரு கைது செய்யப்படலாம் ) 🤔

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தலைவர் பிறந்த நாளுக்கு கேக் வெட்டியவர்கள் 10 மேற்பட்டவர்கள் கைது , சிலர் இன்னமும் பொலிசாரால் தேடப்பட்டு வருகிறார்கள்  ( சிலருக்கு சந்தோசமாக இருக்கலாம் ஓடி ஒளித்தவர்கள் பிடிபடாத பிறகு அவர் குடும்பம் சார்ப்பில் ஒரு கைது செய்யப்படலாம் ) 🤔


 

Just now, Sasi_varnam said:


யாருக்கு சந்தோசமாக இருக்கலாம்? இதை இன்னும் தெளிவாக எழுதலாமே?
தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் அவ்வளளவு தான் 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Sasi_varnam said:

யாருக்கு சந்தோசமாக இருக்கலாம்? இதை இன்னும் தெளிவாக எழுதலாமே?
தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் அவ்வளளவு தான் 

உசுப்பேற்றுபவர்களைத்தான் களத்தில் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

எல்லாம் காலக்கேடு. 

கலிகாலம் 🙃

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பது பல்கலைக்கழகத்தில். மோட்டுக்கூட்டம். பிழைக்கத்தெரியாத சொல் கேட்டு ஆடும் காவாலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ மாணவ மாணவிகள் இருக்குமிடத்தில் ஒரேஒரு மாணவன் மட்டும் போய் கார்த்திகைத் தீபம் ஏற்றுவது மிகுந்த வேதனையாக உள்ளது.
அதுவே பாதுகாப்பு படையினருக்கும் கைது செய்ய வசதியாக உள்ளது.

9 minutes ago, Paanch said:

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உசுப்பேற்றுபவர்களைத்தான் களத்தில் 

தனி இங்கிருந்து யாரும் தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடும்படி வற்புறுத்தவில்லையே? அப்படி வற்புறுத்தினாலும் உங்கள் அபிவிருத்தியை நாடும் கூட்டம் கேக் வெட்டீட்டாலும்? நீங்கள் கருணா, பிள்ளையானின் பிறந்தநாளுக்காவது கேக் வெட்டி கொண்டாடுங்கள். யாரும் உங்களை விமர்சிக்கப்போவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Eppothum Thamizhan said:

தனி இங்கிருந்து யாரும் தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடும்படி வற்புறுத்தவில்லையே? அப்படி வற்புறுத்தினாலும் உங்கள் அபிவிருத்தியை நாடும் கூட்டம் கேக் வெட்டீட்டாலும்? நீங்கள் கருணா, பிள்ளையானின் பிறந்தநாளுக்காவது கேக் வெட்டி கொண்டாடுங்கள். யாரும் உங்களை விமர்சிக்கப்போவதில்லை!

யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் மகிந்த ராஜபக்சேக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியும் பூசை நடக்கும் போது எங்கு இருந்தியள் சிங்கம் நீங்கள். 

என் பிறந்த நாளையே நான் கொண்டாடினதில்லை இதில் கர்ணா, பிள்ளையானுக்கு வேறா ஒரே சிரிப்பா கிடக்கு 😉😉😝😝

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் மகிந்த ராஜபக்சேக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியும் பூசை நடக்கும் போது எங்கு இருந்தியள் சிங்கம் நீங்கள். 

என் பிறந்த நாளையே நான் கொண்டாடினதில்லை இதில் கர்ணா, பிள்ளையானுக்கு வேறா ஒரே சிரிப்பா கிடக்கு 😉😉😝😝

அபிவிருத்தியின்  பின்னால் அலையும் கூட்டம் ராஜபக்சேக்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லையே. பதிவு மேலேயுள்ள உங்கள் நக்கல் நையாண்டிக்கானது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

அபிவிருத்தியின்  பின்னால் அலையும் கூட்டம் ராஜபக்சேக்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லையே. பதிவு மேலேயுள்ள உங்கள் நக்கல் நையாண்டிக்கானது.

ஹாஹா வடக்கில் பூசை நடக்கும் போது வேற இடத்தில் கொண்டாட்டம் நடக்கிறது . அப்ப வடக்கில் எது நடந்தாலும் பிரச்சினை இல்லை ஆனால் கிழக்கில் எதுவுமே நடக்கப்படாது நல்லா இருக்கே உங்க டிசைன் 🤔🤣

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் கார்த்திகை தீப திருநாள் சிறப்பாக நடைபெற்றது!

கார்த்திகை தீபத் திருவிழா நேற்று (29) அம்பாறையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி இரவு பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் தத்தமது வீடுகள், தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி ஆனந்தமடைந்தனர்.

  • DR-60.jpg?189db0&189db0
  • DR-56.jpg?189db0&189db0
  • DR-34.jpg?189db0&189db0
  • DR-18.jpg?189db0&189db0
  • DR-24.jpg?189db0&189db0
  • DR-5.jpg?189db0&189db0
  • DR-12.jpg?189db0&189db0
  • DR-7.jpg?189db0&189db0
  • DR-1.jpg?189db0&189db0
  • DR-2.jpg?189db0&189db0
 
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா வடக்கில் பூசை நடக்கும் போது வேற இடத்தில் கொண்டாட்டம் நடக்கிறது . அப்ப வடக்கில் எது நடந்தாலும் பிரச்சினை இல்லை ஆனால் கிழக்கில் எதுவுமே நடக்கப்படாது நல்லா இருக்கே உங்க டிசைன் 🤔🤣

மகிந்தவிற்கு சிறப்பு பூஜை நடந்தது கொழும்பு மயூராவதி அம்மன் ஆலயத்தில்!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Eppothum Thamizhan said:

மகிந்தவிற்கு சிறப்பு பூஜை நடந்தது கொழும்பு மயூராவதி அம்மன் ஆலயத்தில்!

இலங்கை கப்பிட்டல் டீவி என்று வேலை செய்கிறது அநேகமாக இலங்கையில் உள்ளவர்களை கேட்டுப்பாருங்கள் அதில் காட்டினார்கள் சில வேளை அங்கு பூசைக்கு சென்று இருக்கலாம் கொழும்பில

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.