Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

ஆட்சிக்கு வந்தால்  இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்-  கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

 

சென்னை,
 
காஞ்சீபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்  தான் நிறைவேற்ற இருக்கும் 7 அம்ச திட்டத்தை  மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் அறிவித்தார்.
 
அதன் விவரம் வருமாறு:-
 
1. இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம்:
 
 
வீடுகளில் இல்லத்தரசிகள் செய்யும் பணிகள் மதிப்பிடவே முடியாதவை. எனவே அவர்களை கணக்கெடுத்து வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
 
2. நவீன தற்சார்பு கிராமங்களை உருவாக்குதல்:
 
தமிழக மக்கள் சாக்கடையோரங்களிலும், நதிக்கரையோரங்களிலும் அவதிப்பட்டுக்கொண்டு வசிப்பதை தடுக்கும் வகையில் தற்சார்பு கிராமங்கள் உருவாக்கப்படும். சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணிக்காக்கும் வகையில் நவீனமாக அக்கிராமங்கள் அமையும்.
 
3. துரித நிர்வாகம்:
 
சாதாரண பஞ்சாயத்து அலுவலகம் முதல் முதல்வர் அலுவலகம் வரை காகிதங்களே இல்லாமல் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு உடனுக்குடன் அரசுக் கோப்புகள் நகரும் வகையில் துரித நிர்வாகம் அமைக்கப்படும். லஞ்ச ஒழிப்புத் துறையை மேம்படுத்தி லஞ்சமே இல்லாமல் இருக்கும் வகையில் கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 
4. சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்:
 
மக்கள் எதற்கும் வரிசையில் நிற்காமல் அவர்களது உரிமைகளை அவர்களாகவே பெறுவதற்காக மக்களைத் தேடி அரசுத் திட்டங்கள் சென்றடையும் வகையில் சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்.
 
5. மின்னணு இல்லங்களாக மாற்றுதல்:
 
குடிசை வீடுகள் முதல் அனைத்து வீடுகளுக்கும் மிக அதிவேக இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் திறமையையும் தகுதியையும் கண்டறிந்து அவர்களை கல்வி, பொருளாதாரம் உள்பட அனைத்திலும் முன்னேற்றமடைய செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
6. இயற்கை வேளாண்மையுடன் கூடிய பசுமைப்புரட்சியை உருவாக்குதல்:
 
இயற்கை வேளாண்மைக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நோக்கிலும் பசுமைப் புரட்சி ஏற்படுத்தப்படும். இதற்கென தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
 
7. தொழில்களை அதிகளவில் உருவாக்கி பொருளாதாரத்தில் புரட்சி ஏற்படுத்துதல்:
 
பெரு தொழிற்சாலைகள் பலவற்றை உருவாக்குவதை விட ஒவ்வொரு வட்டாரம் வாரியாக 5லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில்களை உருவாக்கி இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி அவர்களது பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களை முதலாளிகளாக மாற்ற முழு முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் கமலஹாசன் தெரிவித்தார்
 
 
 

எப்படியும் ஒரு போதும் ஆட்சிக்கு வரமாட்டேன் என்ற நம்பிக்கைய்யில் சும்மா அடிச்சு விடவேண்டியது தான். காசா பணமா...

  • கருத்துக்கள உறவுகள்

இல்லத்தரசிகளின்.... வாக்குகள் எல்லாம் கமலுக்கு விழுகுது. 😁

அடுத்த முதலமைச்சர் ஆகிறார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே அவ்வை சண்முகியில் இல்லத்தரசி போல் நடித்த அனுபவம் இருக்குத் தானே பாவம் அதை வைச்சாவது ஊதியம் கொடுக்கலாம்.😀யாரும் திட்டாதீங்கோ இது தான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இல்லத்தரசிகளின்.... வாக்குகள் எல்லாம் கமலுக்கு விழுகுது. 😁

அடுத்த முதலமைச்சர் ஆகிறார். 🤣

தமிழ் நாட்டில்  இல்லத்தரசிகளின் வாக்கு மட்டும் போதுமா முதலமைச்சரைதெரிவுசெய்ய....😁👍

  • கருத்துக்கள உறவுகள்

 

131977125_1314088652300603_1888462325868

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, உடையார் said:

ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

மூண்டு,நாலு பொண்டாட்டிக்காரன் எண்டது நல்லவடிவாய் தெரியுது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

 

131977125_1314088652300603_1888462325868

நீங்க உள் வீட்டுக் காறியாச்சே ஊதியம் எல்லாம் எதிரபார்க் கூடாது..முடிஞ்சால் உங்கள் வாக்கும் எண்ணிக்கையில் சேரட்டும்..😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, யாயினி said:

நீங்க உள் வீட்டுக் காறியாச்சே ஊதியம் எல்லாம் எதிரபார்க் கூடாது..முடிஞ்சால் உங்கள் வாக்கும் எண்ணிக்கையில் சேரட்டும்..😁

இப்போ அவர் கமலோடு இல்லை. அது தான் எனது, உனது என பிரிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, உடையார் said:
ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு
 
1. இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம்:
 
 
வீடுகளில் இல்லத்தரசிகள் செய்யும் பணிகள் மதிப்பிடவே முடியாதவை. எனவே அவர்களை கணக்கெடுத்து வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

இது நல்லதொரு திட்டம். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹான் திருமணம் முடித்தும் முடிக்காமலும் நான்கு அல்லது அய்ந்து பெண்களுடன் வாழ்ந்தவர் அல்லது வாழ்ந்துகொண்டிருப்பவர். எனவே அவருக்கு தமிழக இல்லத்தரசிகளின் பணிச்சுமை நன்கு தெரியும். எனவே இத்திட்டத்துக்கு இல்லத்தரசிகளிடம் பெரு வரவேற்பு இருக்கும்.

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

தமிழ் நாட்டில்  இல்லத்தரசிகளின் வாக்கு மட்டும் போதுமா முதலமைச்சரைதெரிவுசெய்ய....😁👍

சட்டசபை தேர்தல் முதல்கட்ட பிரசாரம் - கமல்ஹாசன் மதுரையில் இன்று தொடக்கம் ||  Tamil News Kamal to launch MNM poll campaign from Madurai today

கமலஹாசனின்  இந்த அபாரமான திட்டத்துக்கு... 
தமிழகத்தில் உள்ள அனைத்து இலத்தரசிகளுமே,
ஓரணியில் திரண்டு... கமலுக்கு வாக்களிப்பார்கள். 👍

அத்துடன்... அவரின் சினிமா ரசிகர்களின் வாக்கும்,
அவர் நடத்தும்....
"பிக் பாஸ்" நிகழ்ச்சி ரசிகர்களின்  வாக்கும்...
கொத்தாக.. கமலுக்கு விழும்.

பிறகென்ன...  அவர்  முதலமைச்சர் தானே....   :grin: 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்


இது EU Parliament  இல், EU இல் உள்ள வறுமை கோட்டை களைவதற்கான கொள்கையின் அங்கமாக   Universal Basic Income பற்றிய கொள்கை கலந்துரையாடலில் முதலில் முன்மொழியப்பட்டது.

சில அரசாங்ககங்கள் Universal Basic Income  என்பதை குறிப்பிட்ட பிரதேசத்தில் பரீட்சித்தமாக நடைமுறைப்படுத்தின.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:


இது EU Parliament  இல், EU இல் உள்ள வறுமை கோட்டை களைவதற்கான கொள்கையின் அங்கமாக   Universal Basic Income பற்றிய கொள்கை கலந்துரையாடலில் முதலில் முன்மொழியப்பட்டது.

சில அரசாங்ககங்கள் Universal Basic Income  என்பதை குறிப்பிட்ட பிரதேசத்தில் பரீட்சித்தமாக நடைமுறைப்படுத்தின.  

இந்தமாதிரியான கொடுப்பனவு ஓரளவிற்கு வறுமைக்கோட்டை களைவதற்கு உதவியாக இருந்தாலும், இதற்கு ஒதுக்கப்படும் பணத்தினை பெறுவதற்காக மற்றைய சேவைகளை( உதாரனத்திற்கு மின்சாரம், கல்வி, சுகாதார சேவைகளை) தனியாருக்கு கொடுத்துவிடலாம் இல்லையா?  பின்பு எப்படி இது வறுமைகோட்டை குறைக்கும்?

இங்கேயும் இதைப்பற்றி ஒரு ஆய்வு நடைபெற்றது, ஆனால் முடிவு தெரியவில்லை.. 

 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்தமாதிரியான கொடுப்பனவு ஓரளவிற்கு வறுமைக்கோட்டை களைவதற்கு உதவியாக இருந்தாலும், இதற்கு ஒதுக்கப்படும் பணத்தினை பெறுவதற்காக மற்றைய சேவைகளை( உதாரனத்திற்கு மின்சாரம், கல்வி, சுகாதார சேவைகளை) தனியாருக்கு கொடுத்துவிடலாம் இல்லையா?  பின்பு எப்படி இது வறுமைகோட்டை குறைக்கும்?

இங்கேயும் இதைப்பற்றி ஒரு ஆய்வு நடைபெற்றது, ஆனால் முடிவு தெரியவில்லை.. 

 

அவுஸ்திரேலியா போன்ற தீவு நாடுகளுக்கு அது சாரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன் 
அரசு திட்டம் வகுத்து இறக்குமதி பொருள்களுக்கு வரியை கூட்டினால் .. உள்ளூர் உற்பத்தி 
பெருகும் ஏனெனில் கொள்வனவு கூடும். பொருளாதாரம் இஸ்திரம் அடையும்.
சரியான கணக்கீடு இல்லாமல் போனால் inflation  வழி வகுக்கும் 
சரியாக கணக்கு எடுத்து எத்தனை பேர் பெறுநர்? எவ்வளவு கொடுத்தால் 
அடிப்படை தேவைக்கு போதுமானது போன்ற கணிப்பீடு அவசியம். 

ஆடம்பரத்துக்கு $1 கூட மிஞ்சாது பார்த்துக்கொண்டால் 
வேலைசெய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே 
இருக்கும் ஆதலால் மக்களை சோம்பேறி ஆக்கும் எனும் வாதம் மீது 
எனக்கு நம்பிக்கை இல்லை 

சுவிஸில் இப்படி ஒரு திட்டம் வகுத்து 
அங்கு நேரடி மக்கள் தீர்ப்பு ஜனநாயக அரசியல் முறைமை இருப்பதால் 
தேத்தல் வைத்தார்கள் மக்கள் நிராகரித்து வாக்களித்தார்கள். 
காரணம் மக்களுக்கு பொருளாதாரம் விளங்காது மற்றும் அடுத்தவன் 
சும்மா இருந்து பணம் பெறுவதா? எனும் பொறாமை எண்ணங்கள் ஆகும் 
சுவிஸை பொறுத்தவரை அது தேவையான ஒன்று. மக்கள் அன்றாட பொருட்களையே 
சுற்றி இருக்கும் ஜேர்மன் பிரான்ஸ் இத்தாலி ஆஸ்திரியா போன்ற நாடுகளில் சென்று 
மலிவாக வாங்கி வருகிறார்கள். அதனால் தரத்தில் கூடிய சுவிஸ் உற்பத்தி பொருளுக்கு 
உள்ளூரிலேயே சந்தை வாய்ப்பு குறைவு ..... சுவிஸ் நாட்டு பொருளாதாரம் கடந்த 15 வருடமாக மந்தமாக 
இருக்கிறது  முச்சுவல் பண்ட்ஸ் எல்லாம் நெகடீவ் வருமானம் தருபவையாக இருக்கும்போது 
புதிய முதலீடுகள் அருகி கொண்டு வருகின்றன. 
சுவிஸ் வங்கியான யுபிஸ்  எந்த லாபமும் இன்றி செல்கிறது  கடந்தமாதம் 50 கிளைகளை மூட போவதாக எங்கோ வாசித்தேன். சுவிஸில் இல்லாத எம்மை போன்றவர்கள் அந்த வங்கியில் 5லட்ஷம் சுவிஸ் பிராங் வைப்பில்  வைத்திருப்பதுக்கு எங்களிடம் மாதம் 300 சுவிஸ் பிராங்குகள் வசூலிக்கிறார்கள். 
அருனாச்சலம் படத்தில் வருவதுபோல யாருக்காவது காசை செல்வழித்தே ஆகவேண்டும் என்று ஒரு இக்கட்டு நிலை இருந்தால் மட்டுமே அங்கு சென்று வைப்பில் இட முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

Automation அதிகரிக்க, அதிகரிக்க Universal Basic Income மேலை நாடுகளில் தவிர்கமுடியாத அம்சமாகிவிடும் என்றே படுகிறது.

24 minutes ago, Maruthankerny said:

அவுஸ்திரேலியா போன்ற தீவு நாடுகளுக்கு அது சாரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன் 
அரசு திட்டம் வகுத்து இறக்குமதி பொருள்களுக்கு வரியை கூட்டினால் .. உள்ளூர் உற்பத்தி 
பெருகும் ஏனெனில் கொள்வனவு கூடும். பொருளாதாரம் இஸ்திரம் அடையும்.
சரியான கணக்கீடு இல்லாமல் போனால் inflation  வழி வகுக்கும் 
சரியாக கணக்கு எடுத்து எத்தனை பேர் பெறுநர்? எவ்வளவு கொடுத்தால் 
அடிப்படை தேவைக்கு போதுமானது போன்ற கணிப்பீடு அவசியம். 

ஆடம்பரத்துக்கு $1 கூட மிஞ்சாது பார்த்துக்கொண்டால் 
வேலைசெய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே 
இருக்கும் ஆதலால் மக்களை சோம்பேறி ஆக்கும் எனும் வாதம் மீது 
எனக்கு நம்பிக்கை இல்லை 

சுவிஸில் இப்படி ஒரு திட்டம் வகுத்து 
அங்கு நேரடி மக்கள் தீர்ப்பு ஜனநாயக அரசியல் முறைமை இருப்பதால் 
தேத்தல் வைத்தார்கள் மக்கள் நிராகரித்து வாக்களித்தார்கள். 
காரணம் மக்களுக்கு பொருளாதாரம் விளங்காது மற்றும் அடுத்தவன் 
சும்மா இருந்து பணம் பெறுவதா? எனும் பொறாமை எண்ணங்கள் ஆகும் 
சுவிஸை பொறுத்தவரை அது தேவையான ஒன்று. மக்கள் அன்றாட பொருட்களையே 
சுற்றி இருக்கும் ஜேர்மன் பிரான்ஸ் இத்தாலி ஆஸ்திரியா போன்ற நாடுகளில் சென்று 
மலிவாக வாங்கி வருகிறார்கள். அதனால் தரத்தில் கூடிய சுவிஸ் உற்பத்தி பொருளுக்கு 
உள்ளூரிலேயே சந்தை வாய்ப்பு குறைவு ..... சுவிஸ் நாட்டு பொருளாதாரம் கடந்த 15 வருடமாக மந்தமாக 
இருக்கிறது  முச்சுவல் பண்ட்ஸ் எல்லாம் நெகடீவ் வருமானம் தருபவையாக இருக்கும்போது 
புதிய முதலீடுகள் அருகி கொண்டு வருகின்றன. 
சுவிஸ் வங்கியான யுபிஸ்  எந்த லாபமும் இன்றி செல்கிறது  கடந்தமாதம் 50 கிளைகளை மூட போவதாக எங்கோ வாசித்தேன். சுவிஸில் இல்லாத எம்மை போன்றவர்கள் அந்த வங்கியில் 5லட்ஷம் சுவிஸ் பிராங் வைப்பில்  வைத்திருப்பதுக்கு எங்களிடம் மாதம் 300 சுவிஸ் பிராங்குகள் வசூலிக்கிறார்கள். 
அருனாச்சலம் படத்தில் வருவதுபோல யாருக்காவது காசை செல்வழித்தே ஆகவேண்டும் என்று ஒரு இக்கட்டு நிலை இருந்தால் மட்டுமே அங்கு சென்று வைப்பில் இட முடியும். 

சுவிஸ் தமிழர் கழுத்து கை எல்லாம் தங்கமாய் ஜொலிப்பதும் இதனால்தான்🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

எந்த வேலைக்கு?
 

எந்த வேலைக்கு?
இவன் ஒரு கிறுக்கன் எதுக்கும் கேட்டு வைக்கிறது நன்று 
ஒரு வீடை பிக்பாஸ்சாக வைத்திருக்காமல் எல்லா வீட்டையும் 
பிக்பாக்ஸ் ஆக்கும் எண்ணம் கூட இந்த தலைக்குள் இருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில்...வைக்கப்பட்டதேர்தல் ...எல்லாருக்கும்  ஊதியமென்பதற்க்கு...மக்கள்

விரும்பவில்லை...காலம்செல்ல..சுவிஸ் அரசு..தங்களிடம் பணமில்லையெனக்கூறி

கூடுதல்.  வரியையறவிடலாம்...என்ற பயம்...

கமல்...கூறியது...தனிய..இல்லத்துயரசிகளுக்குமட்டும்...😁🙏

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குள்ள கேள்வி..

தமிழ்நாட்டிற்கு வேலை தேடிவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தோர், 6 (?) மாதங்கள் தமிழ்நாட்டில் குடியிருந்தால் குடும்ப அட்டை வழங்கப்படும் நிலையில், முதலமைச்சர் கமலஹாசன் எந்த அடிப்படையில் யார் யாருக்கெல்லாம் எப்படி மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் சம்பளம்(?) வழங்குவார்...?

🤔

இதெல்லாம் நடக்கிற காடியமாப்பா..... 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

எனக்குள்ள கேள்வி..

தமிழ்நாட்டிற்கு வேலை தேடிவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தோர், 6 (?) மாதங்கள் தமிழ்நாட்டில் குடியிருந்தால் குடும்ப அட்டை வழங்கப்படும் நிலையில், முதலமைச்சர் கமலஹாசன் எந்த அடிப்படையில் யார் யாருக்கெல்லாம் எப்படி மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் சம்பளம்(?) வழங்குவார்...?

🤔

இதெல்லாம் நடக்கிற காடியமாப்பா..... 😂

 

🤣 கமல்ஹாசன் திட்டபடி வேலையே செய்யாமல் இல்லத்து அரசர்களை (அடிமைகளை) வேலை வாங்கும் அரசிகளுக்கும் ஊதியம் உண்டா என்றும் கேட்டு சொல்லுங்கோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எனக்குள்ள கேள்வி..

தமிழ்நாட்டிற்கு வேலை தேடிவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தோர், 6 (?) மாதங்கள் தமிழ்நாட்டில் குடியிருந்தால் குடும்ப அட்டை வழங்கப்படும் நிலையில், முதலமைச்சர் கமலஹாசன் எந்த அடிப்படையில் யார் யாருக்கெல்லாம் எப்படி மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் சம்பளம்(?) வழங்குவார்...?

🤔

இதெல்லாம் நடக்கிற காடியமாப்பா..... 😂

 

முதலில்..நிங்கள்..இந்த.கேள்விக்கு பதிலாளிக்கவும்...நடிகர் கமலஹாசனை..எப்படி..முதலமைச்சர் கமலஹாசன் என எழுதினீகள்.?😜👍

யார் அவரை முதலமைச்சராக தெரிவு செய்தர்கள்?😇

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kandiah57 said:

முதலில்..நிங்கள்..இந்த.கேள்விக்கு பதிலாளிக்கவும்...நடிகர் கமலஹாசனை..எப்படி..முதலமைச்சர் கமலஹாசன் என எழுதினீகள்.?😜👍

யார் அவரை முதலமைச்சராக தெரிவு செய்தர்கள்?😇

இதெல்லாம் ஒரு கேள்வியா கந்தையர்..😂

முதலமைச்சர் என்று போடும்போதே உங்களுக்கு விளங்கியிருக்க வேண்டும்..😂

உங்களுக்கு புரியாவிட்டால் யான் என் செயும்... 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  கபிதன்...நான்..தவறுதலாய் ..எழுதிவிட்டிர்களென..நினைந்தேன்.

ஆகவே..சுட்டிக்காட்டினேன்..உங்களுக்கு..நடிகர்..முதலமைச்சர்..இரண்டும்

ஒரேமாதிரியிருந்தல்...எனக்கு..எதுவித. பிரச்சனையுமில்லை..😁🤝

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Maruthankerny said:

அவுஸ்திரேலியா போன்ற தீவு நாடுகளுக்கு அது சாரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன் 
அரசு திட்டம் வகுத்து இறக்குமதி பொருள்களுக்கு வரியை கூட்டினால் .. உள்ளூர் உற்பத்தி 
பெருகும் ஏனெனில் கொள்வனவு கூடும். பொருளாதாரம் இஸ்திரம் அடையும்.

அவுஸ்ரேலியாவில் கூட நிரந்தரமாக இதை வழங்குமாறு ஆய்வில் கூறவில்லை.. இந்த கொடுப்பனவு நீங்கள் வேலை தொடங்கி உங்களது வருமானம் $180k(வருடாந்த) அடையும் பட்ச்சத்தில் நிறுத்தப்படும்.. 

மேலும் நீங்கள் கூறியபடி இறக்குமதி வரியை அதிகரித்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கு உள்ளூரில் உள்ள வளங்கள்( மனித வலு உட்பட) சரியாகப்பயன்ப்படுத்தப்படவேண்டும்..

உதாரணத்திற்கு இங்கே தோட்டங்களில், பண்ணைகளில் வேலை செய்யவதற்கு மனிதவளம் பற்றாக்குறை, வழமையாக வரும் seasonal workers இம்முறை வரமுடியவில்லை, உள்ளூரில் இருப்பவர்களுக்கு பண்ணைகளில் வேலைசெய்ய முடியாதாம்.. அரச உதவிப்பணத்துடன் வாழ்கிறார்கள்.. இந்த மாதிரியான சூழ்நிலையில் ABI வந்தால் சோம்பல்தான் கூடுமே தவிர கேள்வி/வழங்கல் சமநிலை அடையாது.. 

இரண்டாவது வரி அதிகரிப்பை இலகுவில் எந்த அரசியல்கட்சியுமே விரும்பாது.. 

கையில் பணம் இலகுவில் கிடைத்தால் செலவழிக்கவிரும்புவார்கள் ஆனால் எங்கே அதை செலவழிக்கிறார்கள் என்பதில்தான் இதன் பலனும் உள்ளது.. 

போதாக்குறைக்கு இவர்களது ஏற்றுமதிப்பொருட்களான நிலக்கரி, பார்லி, வைன், மாட்டிறைச்சிக்கு அதிகமாக வாங்கும் சீனா, தலையிடியை கொடுக்கத்தொடங்கிவிட்டார்கள்.. 

 

  • கருத்துக்கள உறவுகள்

கமலை கண்டாலே இல்லத்தரசிகள் தலைதெறிக்க ஓடுவினம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இசைக்கலைஞன் said:

கமலை கண்டாலே இல்லத்தரசிகள் தலைதெறிக்க ஓடுவினம் 😁

மீண்டும், கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.