Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எத்துறை போனாலும் வடமராட்சி போகாதே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி வாசிகளின் புத்திசாலித்தனத்தை உணர்த்தும் நகைச்சுவைக் கதை

பின்னிரவு விடுப்பு பார்க்கும் நோக்கில் பருத்தித்துறை கடலில் ஒரு படகில் மூன்று பெண்கள் பயணம் செய்திருக்கிறார்கள். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் பகுதிகளை சேர்ந்த இந்த மூன்று பெண்களும் பயணித்த குறித்த படகில் திடீரென்று ஒரு பேய் வந்து குதித்துள்ளது. மூன்று பெண்களும் பயந்து நடுங்கிப் போனார்கள். பேய் தன் கோரமான பற்களைக் காட்டிச் சிரித்தது.

'உங்கள் மூன்று பேரையும் விழுங்கப் போகிறேன்' என்று பேய் கூறியது. மூன்று பெண்களும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளப் பேயிடம் கெஞ்சினார்கள். அதனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. 'உங்களில் ஒருத்தியாவது புத்திசாலியாக இருந்தால்! உயிர்ப் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை.....நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கிப் போட வேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்றுப் போனதாய் அர்த்தம்.' சோதனைக்கு மூன்று பெண்களும் ஒப்புக்கொண்டனர்.

தென்மராட்சி பெண் தன் கையில் இருந்த மோதிரத்தை கழட்டி கடலில் வீசினாள். பேய் உடனே கடலில் குதித்து அதை தேடி எடுத்து வந்தது. அடுத்து வலிகாம பெண் தன் காதிலிருந்த மிகச் சிறியதான தோடுகளில் ஒன்றைக் கழட்டிக் கடலில் வீசினாள். பேய் அதையும் தேடிப் பிடித்து கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சிரித்தது ... ' இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ ஒருத்தி மட்டும் தான். நீ எதை வீசப் போகின்றாய்? ' என்று வடமராச்சிப் பெண்ணிடம் கேட்டது. உடனே வடமராட்சி பெண் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் போத்தலை எடுத்து, அதற்குள் இருந்த நீரைக் கடலில் ஊற்றி விட்டு, ' இப்போ நான் ஊற்றிய அந்த குடிதண்ணீரை கொண்டு வா' என்று கூறினாள். திகைத்துப் போன பேய் அவ்விடத்திலிருந்து ஓட்டம் பிடித்து மறைந்தது.

இதற்காகத்தான், யாழ்பாண பேச்சு வழக்கில் பெரியவர்கள்... ' எத்துறை போனாலும் வடமராட்சி போகாதே. அப்பிடியே போனாலும் பணிந்து போ. பேய்க்கே தண்ணி காட்டுபவர்கள் வடமராட்சி வாசிகள் ' என்று அழகாகக் கூறுவார்கள்.

 

படித்ததில் பிடித்தது.

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு கதைகள் .

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Paanch said:

வடமராட்சி வாசிகளின் புத்திசாலித்தனத்தை உணர்த்தும் நகைச்சுவைக் கதை

பின்னிரவு விடுப்பு பார்க்கும் நோக்கில் பருத்தித்துறை கடலில் ஒரு படகில் மூன்று பெண்கள் பயணம் செய்திருக்கிறார்கள். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் பகுதிகளை சேர்ந்த இந்த மூன்று பெண்களும் பயணித்த குறித்த படகில் திடீரென்று ஒரு பேய் வந்து குதித்துள்ளது. மூன்று பெண்களும் பயந்து நடுங்கிப் போனார்கள். பேய் தன் கோரமான பற்களைக் காட்டிச் சிரித்தது.

'உங்கள் மூன்று பேரையும் விழுங்கப் போகிறேன்' என்று பேய் கூறியது. மூன்று பெண்களும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளப் பேயிடம் கெஞ்சினார்கள். அதனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. 'உங்களில் ஒருத்தியாவது புத்திசாலியாக இருந்தால்! உயிர்ப் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை.....நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கிப் போட வேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்றுப் போனதாய் அர்த்தம்.' சோதனைக்கு மூன்று பெண்களும் ஒப்புக்கொண்டனர்.

தென்மராட்சி பெண் தன் கையில் இருந்த மோதிரத்தை கழட்டி கடலில் வீசினாள். பேய் உடனே கடலில் குதித்து அதை தேடி எடுத்து வந்தது. அடுத்து வலிகாம பெண் தன் காதிலிருந்த மிகச் சிறியதான தோடுகளில் ஒன்றைக் கழட்டிக் கடலில் வீசினாள். பேய் அதையும் தேடிப் பிடித்து கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சிரித்தது ... ' இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ ஒருத்தி மட்டும் தான். நீ எதை வீசப் போகின்றாய்? ' என்று வடமராச்சிப் பெண்ணிடம் கேட்டது. உடனே வடமராட்சி பெண் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் போத்தலை எடுத்து, அதற்குள் இருந்த நீரைக் கடலில் ஊற்றி விட்டு, ' இப்போ நான் ஊற்றிய அந்த குடிதண்ணீரை கொண்டு வா' என்று கூறினாள். திகைத்துப் போன பேய் அவ்விடத்திலிருந்து ஓட்டம் பிடித்து மறைந்தது.

இதற்காகத்தான், யாழ்பாண பேச்சு வழக்கில் பெரியவர்கள்... ' எத்துறை போனாலும் வடமராட்சி போகாதே. அப்பிடியே போனாலும் பணிந்து போ. பேய்க்கே தண்ணி காட்டுபவர்கள் வடமராட்சி வாசிகள் ' என்று அழகாகக் கூறுவார்கள்.

 

படித்ததில் பிடித்தது.

நல்ல கதை பாஞ்ச்  அண்ணே...
ஆனால் இதுக்கு கருத்து எழுதப் போனால்... 
வலிகாமம், தென்மராட்சி.... பெண்கள், 
காய்ச்ச்சி... எடுத்து விடுவார்கள் என்று பயமாக இருக்கண்ணே...    🤣

18 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல கதை பாஞ்ச்  அண்ணே...
ஆனால் இதுக்கு கருத்து எழுதப் போனால்... 
வலிகாமம், தென்மராட்சி.... பெண்கள், 
காய்ச்ச்சி... எடுத்து விடுவார்கள் என்று பயமாக இருக்கண்ணே...    🤣

அந்த பயம் இருக்கவேணும் .🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, appan said:

அந்த பயம் இருக்கவேணும் .🤣

அப்பன், எல்லாம்.... யாழ். களம்  தந்த முன் அனுபவம்...  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சா......அருமந்த தண்ணீரை பிள்ளை வீணாக்கி போட்டுது......அழுத கண்ணீரை கொட்டி இருக்கலாம்........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

சா......அருமந்த தண்ணீரை பிள்ளை வீணாக்கி போட்டுது......அழுத கண்ணீரை கொட்டி இருக்கலாம்........!  👍

பேய் தண்ணீரைத் தேடி எடுக்க முயற்சியாவது செய்திருக்கும். ஆனால் தன்னைவிடக் கொடிய பயங்கரமான பேய்களின் ஆட்சியில் வருந்தி வாழும் அந்தப் பிள்ளைகளை மேலும் வருத்த விரும்பாமல் போய்விட்டதாகவே தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

நல்ல கதை பாஞ்ச்  அண்ணே...
ஆனால் இதுக்கு கருத்து எழுதப் போனால்... 
வலிகாமம், தென்மராட்சி.... பெண்கள், 
காய்ச்ச்சி... எடுத்து விடுவார்கள் என்று பயமாக இருக்கண்ணே...    🤣

இனி காய்ச்சினா காச்சாட்டி என்ன?!
நான் தண்ணிய சொன்னன்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவு பிரதேசவாதத்தைத் தூண்டும் பதிவு என்று வடமராட்சி நண்பர்கள் குழுமம் (வேறு இடத்து ஆட்களை சேர்ப்பதில்லை!) வாட்ஸப்பில் சொன்னார்கள்!! 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

நல்ல கதை பாஞ்ச்  அண்ணே...
ஆனால் இதுக்கு கருத்து எழுதப் போனால்... 
வலிகாமம், தென்மராட்சி.... பெண்கள், 
காய்ச்ச்சி... எடுத்து விடுவார்கள் என்று பயமாக இருக்கண்ணே...    🤣

தமிழ்சிரியண்ணை இதில் நீங்கள் எழுதியிருப்பது  கருத்து இல்லையா?

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

நல்ல கதை பாஞ்ச்  அண்ணே...
ஆனால் இதுக்கு கருத்து எழுதப் போனால்... 
வலிகாமம், தென்மராட்சி.... பெண்கள், 
காய்ச்ச்சி... எடுத்து விடுவார்கள் என்று பயமாக இருக்கண்ணே...    🤣

அப்படிக் காச்சி எடுக்கக்கூடிய ஆட்கள் யாழ்களத்தில் யாரும் இல்லையே.... 🤔

ஒருவேளை இந்தச்    வல்வை சகாறா.jpg   சோதரியை நினைத்துப் பயந்துவிட்டாரோ....😩

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

நல்ல கதை பாஞ்ச்  அண்ணே...
ஆனால் இதுக்கு கருத்து எழுதப் போனால்... 
வலிகாமம், தென்மராட்சி.... பெண்கள், 
காய்ச்ச்சி... எடுத்து விடுவார்கள் என்று பயமாக இருக்கண்ணே...    🤣

வலிகாமம் உள்ளேன் சிறி ஐயா. 😀

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

தமிழ்சிரியண்ணை இதில் நீங்கள் எழுதியிருப்பது  கருத்து இல்லையா?

கந்தையா அண்ணை, அது.... “கழுவிற மீனிலை, நழுவிற மீனாக” எழுதிய கருத்து.

நான் மனதில் நினைத்த கருத்து... படு பயங்கரமாக இருந்தது. 🤣

7 hours ago, Paanch said:

அப்படிக் காச்சி எடுக்கக்கூடிய ஆட்கள் யாழ்களத்தில் யாரும் இல்லையே.... 🤔

ஒருவேளை இந்தச்    வல்வை சகாறா.jpg   சோதரியை நினைத்துப் பயந்துவிட்டாரோ....😩

 

 

6 hours ago, shanthy said:

வலிகாமம் உள்ளேன் சிறி ஐயா. 😀

பாத்தீங்களா... பாஞ்ச் அண்ணை,

இரண்டு  பெண்கள்... தலையை காட்டி விட்டுப் போயிருக்கிறார்கள். 🤣

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/4/2021 at 10:31, Paanch said:

எத்துறை போனாலும் வடமராட்சி போகாதே. அப்பிடியே போனாலும் பணிந்து போ. பேய்க்கே தண்ணி காட்டுபவர்கள் வடமராட்சி வாசிகள் ' என்று அழகாகக் கூறுவார்கள்.

வடமராட்சிக்கு வாழ்க்கைப்பட்டு போன என்னை கேட்டால் டெய்லி ஒரு கதை சொல்லுவன். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2021 at 03:31, Paanch said:

உங்கள் மூன்று பேரையும் விழுங்கப் போகிறேன்' என்று பேய் கூறியது. மூன்று பெண்களும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளப் பேயிடம் கெஞ்சினார்கள். அதனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. 'உங்களில் ஒருத்தியாவது புத்திசாலியாக இருந்தால்! உயிர்ப் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை.....நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கிப் போட வேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்றுப் போனதாய் அர்த்தம்.' சோதனைக்கு மூன்று பெண்களும் ஒப்புக்கொண்டனர்

இதைப் பேய் கேட்டிருக்க தேவையில்லை.தமிழ் பெண்களென்றபடியால் ஆளாளுக்கு வித்தியாசமாக யோசித்து தப்பியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

வடமராட்சிக்கு வாழ்க்கைப்பட்டு போன என்னை கேட்டால் டெய்லி ஒரு கதை சொல்லுவன். :cool:

குமாரசாமி அண்ணை, சொல்லுங்கோ.... பம்பலாக  கேட்பம். :grin:

On 17/4/2021 at 10:36, பெருமாள் said:

ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு கதைகள் .

ஏழாலையை பற்றியும், என்னிடம், ஒரு கதை இருக்கு. 😂
ஆரும்,  ஏழாலை ஆக்கள் இங்கை  இருந்தால்...  கையை, உயத்துங்கோ பாப்பம். 🤣

3 hours ago, குமாரசாமி said:

வடமராட்சிக்கு வாழ்க்கைப்பட்டு போன என்னை கேட்டால் டெய்லி ஒரு கதை சொல்லுவன். :cool:

அண்ணை, நானும் வடமராச்சிதான் .உங்கள் புகுந்த வீட்டு கதையை எடுத்து விடுங்கோ  பாப்பம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜெகதா துரை said:

அண்ணை, நானும் வடமராச்சிதான் .உங்கள் புகுந்த வீட்டு கதையை எடுத்து விடுங்கோ  பாப்பம்.

சிறித்தம்பி! உங்கள் தலை தப்பினது தம்பிரான் புண்ணியம். மூன்றாவது ஆளும் வந்திட்டா....😲

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த வலிகாமத்து மற்றும் தென்மராட்சிப் பெண்கள் வெறும் பேய்களாக இருந்திருக்குதுகள். முதல்லயே அந்த வடமராட்சி பெண்ணின் தண்ணிப் போத்தல்ல இருந்த தண்ணிய அவட முகத்தில் எத்திவிட்டிருந்தா முகத்தைப் பார்த்தே ஒரிஜினல் பேய் தலைதெறிக்க ஓடியிருக்கும். சும்மா பேய்த்தனமா  மோதிரத்தையும் சங்கிலியையும் எறிஞ்சிருக்குதுகள். 👿 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு கதையும் பழமொழிகளும் அனுபவ முதுமொழிகளும் இருக்கும்

ஆனால் அந்த மண்ணை விரும்புபவர்களை அவை காயப்படுத்தாமல் இருப்பது நல்லது ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை, சொல்லுங்கோ.... பம்பலாக  கேட்பம். :grin:

ஏழாலையை பற்றியும், என்னிடம், ஒரு கதை இருக்கு. 😂
ஆரும்,  ஏழாலை ஆக்கள் இங்கை  இருந்தால்...  கையை, உயத்துங்கோ பாப்பம். 🤣

முதல்லை கிணறு காவின ஏழாலை கதை வரட்டும். அதுக்கு பிறகு பாருங்கோ வல்லிபுரக்கோவில் வடக்குவீதி  தவில் கச்சேரியை...:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஜெகதா துரை said:

அண்ணை, நானும் வடமராச்சிதான் .உங்கள் புகுந்த வீட்டு கதையை எடுத்து விடுங்கோ  பாப்பம்.

  அட நீங்களும் வடமராட்சியே!!!!!!! 😮அய்யையொ....😁

இனி அடக்கித்தான் வாசிக்க வேணும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2021 at 10:31, Paanch said:

வடமராட்சி வாசிகளின் புத்திசாலித்தனத்தை உணர்த்தும் நகைச்சுவைக் கதை

பின்னிரவு விடுப்பு பார்க்கும் நோக்கில் பருத்தித்துறை கடலில் ஒரு படகில் மூன்று பெண்கள் பயணம் செய்திருக்கிறார்கள். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் பகுதிகளை சேர்ந்த இந்த மூன்று பெண்களும் பயணித்த குறித்த படகில் திடீரென்று ஒரு பேய் வந்து குதித்துள்ளது. மூன்று பெண்களும் பயந்து நடுங்கிப் போனார்கள். பேய் தன் கோரமான பற்களைக் காட்டிச் சிரித்தது.

'உங்கள் மூன்று பேரையும் விழுங்கப் போகிறேன்' என்று பேய் கூறியது. மூன்று பெண்களும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளப் பேயிடம் கெஞ்சினார்கள். அதனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. 'உங்களில் ஒருத்தியாவது புத்திசாலியாக இருந்தால்! உயிர்ப் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை.....நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கிப் போட வேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்றுப் போனதாய் அர்த்தம்.' சோதனைக்கு மூன்று பெண்களும் ஒப்புக்கொண்டனர்.

தென்மராட்சி பெண் தன் கையில் இருந்த மோதிரத்தை கழட்டி கடலில் வீசினாள். பேய் உடனே கடலில் குதித்து அதை தேடி எடுத்து வந்தது. அடுத்து வலிகாம பெண் தன் காதிலிருந்த மிகச் சிறியதான தோடுகளில் ஒன்றைக் கழட்டிக் கடலில் வீசினாள். பேய் அதையும் தேடிப் பிடித்து கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சிரித்தது ... ' இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ ஒருத்தி மட்டும் தான். நீ எதை வீசப் போகின்றாய்? ' என்று வடமராச்சிப் பெண்ணிடம் கேட்டது. உடனே வடமராட்சி பெண் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் போத்தலை எடுத்து, அதற்குள் இருந்த நீரைக் கடலில் ஊற்றி விட்டு, ' இப்போ நான் ஊற்றிய அந்த குடிதண்ணீரை கொண்டு வா' என்று கூறினாள். திகைத்துப் போன பேய் அவ்விடத்திலிருந்து ஓட்டம் பிடித்து மறைந்தது.

இதற்காகத்தான், யாழ்பாண பேச்சு வழக்கில் பெரியவர்கள்... ' எத்துறை போனாலும் வடமராட்சி போகாதே. அப்பிடியே போனாலும் பணிந்து போ. பேய்க்கே தண்ணி காட்டுபவர்கள் வடமராட்சி வாசிகள் ' என்று அழகாகக் கூறுவார்கள்.

 

படித்ததில் பிடித்தது.

பேயும் தமிழா?. வடமாரச்சிப் பெண். மோதிரம்.  தோடு. எறியமுடியாது. காரணம். அவை முதல் எறியப்பட்டுவிட்டது  வடமாரச்சிப்பெண்ணிடம்  தோடு..மோதிரமுமிருத்திருக்கலாம். ஆனால் வேறு பொருட்கள் அவாவிடமில்லை... இருந்தது தண்ணீர்ப்பேத்தல் மட்டும்  அதை  எறிந்தார். இந்தச்செயலை வைத்து அவர் மற்றபெண்களைவிட. புத்திசாலி என்ற முடிவுக்கு வர முடியாது. மூன்று பெண்களும் புத்திகூர்மை...தைரியம்..கொண்டாவார்கள். அப்படா தப்பிவிட்டேன். ஒருவரும் என்னைக்  காச்சி யெடுக்கமாட்டார்கள்....😎😎

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kandiah57 said:

பேயும் தமிழா?. வடமாரச்சிப் பெண். மோதிரம்.  தோடு. எறியமுடியாது. காரணம். அவை முதல் எறியப்பட்டுவிட்டது  வடமாரச்சிப்பெண்ணிடம்  தோடு..மோதிரமுமிருத்திருக்கலாம். ஆனால் வேறு பொருட்கள் அவாவிடமில்லை... இருந்தது தண்ணீர்ப்பேத்தல் மட்டும்  அதை  எறிந்தார். இந்தச்செயலை வைத்து அவர் மற்றபெண்களைவிட. புத்திசாலி என்ற முடிவுக்கு வர முடியாது. மூன்று பெண்களும் புத்திகூர்மை...தைரியம்..கொண்டாவார்கள். அப்படா தப்பிவிட்டேன். ஒருவரும் என்னைக்  காச்சி யெடுக்கமாட்டார்கள்....😎😎

பெண் என்றால் பேயும் இரங்கும்.

4 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை, சொல்லுங்கோ.... பம்பலாக  கேட்பம். :grin:

ஏழாலையை பற்றியும், என்னிடம், ஒரு கதை இருக்கு. 😂
ஆரும்,  ஏழாலை ஆக்கள் இங்கை  இருந்தால்...  கையை, உயத்துங்கோ பாப்பம். 🤣

என்னது கிணறு காவிய கதையோ?

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

முதல்லை கிணறு காவின ஏழாலை கதை வரட்டும். அதுக்கு பிறகு பாருங்கோ வல்லிபுரக்கோவில் வடக்குவீதி  தவில் கச்சேரியை...:grin:

இந்த கதையை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்

எழுதுங்கள் ஞாபகப்படுத்திக் கொள்வோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.