Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - முடிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாடியோவ்,

தமிழக அரசியலில் உங்களுக்கு எந்த பங்கும் இல்லாத போதும், நீங்கள் இவ்வளவு தூரம் ஈடுபாடு கொள்வது உண்மையில் ஆச்சரியமான விடயம்தான்.

இந்த மாற்றத்தை உங்களில் அண்ணன் சீமானின் அரசியல் வருகையும் கருத்துகளும்தான் ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறேன். 

புலம் பெயர்ந்த மக்கள் கூட்டங்கள் பொதுவாக அரசியல் விழிப்புணர்வு அற்ற மந்தைகளாக இருப்பர் என்பார்கள்.

ஆனால் உங்களில் இப்படி ஒரு மந்ற்றத்தை அண்ணன் ஏற்படுத்தி இருப்பது ஆக்சிறந்த சாதனை.

தேர்தல் முடிவு பற்றி கலங்க வேண்டாம் ஒறவுகளே.

அடுத்த தேர்தலில் அண்ணன் அதிமுக கூட்டணியில் பேரங்கம் வகிப்பார் என்பது என் நம்பிக்கை. தேர்தலின் பின் இணைந்த அதிமுக, பாஜக, இவற்றுடன் நாம் தமிழரும் இணைய வேண்டியது அவசியம்.

திமுக உங்களை அழித்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் புலம் பெயர் சொந்தங்களே.

திமுக வை ஒழிக்க நீங்கள் அண்ணன் பக்கம் நிற்கவேண்டும்.

இந்த தேர்தலில் எமது வாக்கு வங்கி உயர நீங்கள் கொடுத்த பிரச்சார வாகனம் பெரிதும் உதவியது.

இது போல் உங்கள் பங்களிப்பு கட்சிக்கு தொடர்ந்தால் மட்டுமே உங்கள் எதிரியான திமுகவை வீழ்த்த முடியும்.

  • Replies 152
  • Views 14.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழகன் said:

அம்மாடியோவ்,

தமிழக அரசியலில் உங்களுக்கு எந்த பங்கும் இல்லாத போதும், நீங்கள் இவ்வளவு தூரம் ஈடுபாடு கொள்வது உண்மையில் ஆச்சரியமான விடயம்தான்.

இந்த மாற்றத்தை உங்களில் அண்ணன் சீமானின் அரசியல் வருகையும் கருத்துகளும்தான் ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறேன். 

புலம் பெயர்ந்த மக்கள் கூட்டங்கள் பொதுவாக அரசியல் விழிப்புணர்வு அற்ற மந்தைகளாக இருப்பர் என்பார்கள்.

ஆனால் உங்களில் இப்படி ஒரு மந்ற்றத்தை அண்ணன் ஏற்படுத்தி இருப்பது ஆக்சிறந்த சாதனை.

தேர்தல் முடிவு பற்றி கலங்க வேண்டாம் ஒறவுகளே.

அடுத்த தேர்தலில் அண்ணன் அதிமுக கூட்டணியில் பேரங்கம் வகிப்பார் என்பது என் நம்பிக்கை. தேர்தலின் பின் இணைந்த அதிமுக, பாஜக, இவற்றுடன் நாம் தமிழரும் இணைய வேண்டியது அவசியம்.

திமுக உங்களை அழித்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் புலம் பெயர் சொந்தங்களே.

திமுக வை ஒழிக்க நீங்கள் அண்ணன் பக்கம் நிற்கவேண்டும்.

இந்த தேர்தலில் எமது வாக்கு வங்கி உயர நீங்கள் கொடுத்த பிரச்சார வாகனம் பெரிதும் உதவியது..

இது போல் உங்கள் பங்களிப்பு கட்சிக்கு தொடர்ந்தால் மட்டுமே உங்கள் எதிரியான திமுகவை வீழ்த்த முடியும்.

மன்னிக்கவும்..எங்களுக்கு  தமிழகமககள் அனைவரும்...உறவுகள்....நண்பர்கள்.....எம்மினத்தவர்கள். ..எம்தாய்தமிழர்கள்..குறிப்பாக ..எமக்கு எதிரிகள்.தமிழகத்தில் இல்லை. நன்றி வணக்கம்..🙏🙏🙏🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழகன் said:

தமிழக அரசியலில் உங்களுக்கு எந்த பங்கும் இல்லாத போதும், நீங்கள் இவ்வளவு தூரம் ஈடுபாடு கொள்வது உண்மையில் ஆச்சரியமான விடயம்தான்.

அரசியலில் பங்கில்லாதபோதும் தமிழக மக்களும் தமிழீழ மக்களும் தொப்பூழ் கொடிகளால் இணைந்தவர்கள். உறவு விட்டுப் போகாது. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை தமிழகனே.! 🙌🕺💃 

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம்.
 
- மாவை சேனாதிராஜா.-
 
யாருக்கு தளபதி??? 😊
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

மன்னிக்கவும்..எங்களுக்கு  தமிழகமககள் அனைவரும்...உறவுகள்....நண்பர்கள்.....எம்மினத்தவர்கள். ..எம்தாய்தமிழர்கள்..குறிப்பாக ..எமக்கு எதிரிகள்.தமிழகத்தில் இல்லை. நன்றி வணக்கம்..🙏🙏🙏🙏🙏🙏

வருத்தம் இல்லை உறவுகளே.

மகிந்தா இராஷபக்சாவை கூட உறவு என அழைக்கும் தேவாநந்தன், சுனந்திரன் போன்ற தமிழர்கள் உள்ளார்கள் அன்றோ?

அதைப்போன்று கருநாதி குடும்பத்தை உறவு என்றைழைக்கும் மனிதர்களும் ஈழத்தமிழரில் இருத்தல் கூடும்.

ஆனால் பெரும்பாலான உறவுகள் தீம்காவை எதிரிகளாக கொண்டுள்ளார்கள் என்பதும் அண்ணணை மேதகுவின் மறு அவதாரமாகவே கொண்டுள்ளார்கள் என்பதும் இங்கே எழுதும் பல உறவுகளின் உணர்வை அவதானித்ததில் தெரிகிறது.

இனப்படுகொலையில் தீம்காவின் பங்களிப்பை அறிந்த மானம் ரோசமுள்ள எந்த தமிழ் மகனும் அப்படித்தான் இருப்பார்கள்.

 

1 hour ago, தமிழ் சிறி said:
தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம்.
 
- மாவை சேனாதிராஜா.-
 
யாருக்கு தளபதி??? 😊

ஹா.ஹா… சரியான தத்தி… தெலுங்கு சேனாவின் தானைத் தளபதி.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

அதிமுக-திமுக...

இந்த இரண்டு அணிகளை தவிர்த்து மூன்றாவது அணியொன்று தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது ஒருபோதும் சாத்தியமில்லை.

இரண்டு கட்சிகளுக்கும் உள்ள பலமான வாக்கு வங்கிகள் ஒருபோதும் மாறபோவதில்லை.

அந்த கட்சியின் தலைமைகள் அநியாயம் பண்ணுகிறார்கள் என்று தெரிந்தால்கூட அதன் ஆதரவாளர்கள் தொண்டர்கள் அதனை தூக்கியெறிந்து இன்னொரு கட்சிக்கு லட்சக்கணக்கில்/கோடிகணக்கில்  ஒருபோதும் தாவபோவதில்லை ஆதரவளிக்கபோவதில்லை.

ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத நாம் தமிழர் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள் என்றால் ..

பல தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் அதிமுக,திமுக தவிர்ந்த  ஏனைய கட்சிகள் எத்தனையாவது இடம்?

ஒருதொகுதியைகூட முழுசா கைப்பற்ற முடியாத நிலை இருக்கும்போது 130 தொகுதிகளுக்கு மேல் கைபற்றினால்தான் ஆட்சியை அமைக்கலாம் என்ற கற்பனைக்கெட்டாத நிலமையை திராவிட கட்சிகளை தோற்கடித்து எட்டுவது எங்கனல் சாத்தியபாடானது?

இரு பெரும் திராவிட கட்சிகள் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான  கண்மூடிதனமான தொண்டர்கள் அவர்கள் சார்ந்த கட்சிகளை தூக்கியெறிந்துவிட்டு மூன்றாவது ஒரு கட்சிக்கு வாக்களித்தால்தான் இன்னொரு அணி  தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம், ஆனால் அது ஒருபோதும் நடக்கபோவதில்லை

சிறு உதாரணமாக...

அதிமுக,திமுக உட்பட எந்த கட்சியை சேர்ந்தவரை கேட்டாலும் விஜயகாந்த் மிக சிறந்த மனிதன்,த்ய்ய்மையானவர்/நேர்மையானவர்/உதவும் குணம் கொண்டவர்/எம்ஜிஆருக்கு அடுத்ததா ஒரு வள்ளல்  என்று புகழ்வார்கள், ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் அவர்கள் எவருமே விஜயகாந்துக்கு வாக்களிப்பதில்லை,

அதன் பிரதிபலிப்பே தேமுதிக தலைமையில் கடந்த தேர்தலில் வைகோ வழிகாட்டலில் தேர்தலில் நின்று படுதோல்வியை அந்த அணி சந்தித்ததும்.

இதே நிலமைதான் நாம்தமிழருக்கும்..

சீமானின் கருத்துக்களையும் விழிப்புணர்வுகளையும் சரியென்று ஏற்றுக்கொள்ளும் மனநிலையை கொண்ட பிற கட்சியை சேர்ந்தவர்களும் தேர்தல் என்று வந்துவிட்டால் தாம் சார்ந்த கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பார்கள்.

அது காலம் காலமாக தொடரும்.

அந்த நிலவரத்தை புரிந்துகொள்ள விரும்பாதவரை ..

நாம்தமிழர் தமிழகத்தில் ஆட்சியை  பிடிக்குதோ இல்லையோ,, நண்பர்களாக யாழ்களத்தில் இருந்தவர்கள் சீமானுக்காக சண்டைபோட்டு தமக்குள் பிளவுபடுவார்கள்.

ச‌ரி உற‌வே உங்க‌ளின் விவாத‌த்துக்கே வ‌ரும்

தின‌க‌ர‌ன் கூட‌ கூட்ட‌னி வைச்ச‌ தேமுதிக்கா 
 2011ம் ஆண்டு எதிர் க‌ட்சியாய் இருந்த‌து

இந்த‌ தேர்த‌லில் அம‌முக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு ப‌டுதோல்வி

க‌ம‌ல் கூட‌ ச‌ர‌த்குமார் கூட்ட‌னி வைச்சார் இவ‌ர்க‌ளால் கூட‌ ஒன்னும் சாதிக்க‌ முடிய‌ வில்லையே 

த‌னித்து இவை நின்று இருந்தா இவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌ வீத‌ம் எப்ப‌டி இருந்து இருக்கும்

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி த‌னியாக‌ நின்று ம‌க்க‌ள் 23ல‌ச்ச‌ ஓட்டுக்கு மேல் போட்டு இருக்கின‌ம் 

க‌ம‌லுக்கு அதிக‌ ஊட‌க‌ ப‌ல‌ம் இருந்த‌து  , 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை தேர்த‌ல் நேர‌ம் ஊட‌க‌ங்க‌ளில் பெரிசா காட்டுவ‌தில்லை , க‌ம‌லுக்கு கொடுத்த‌ ஊட‌க‌ வெளிச்ச‌த்தை நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கொடுத்து இருக்க‌னும் க‌ட்சிக்கு இன்னும் கூடுத‌ல் ப‌ல‌ம் சேர்த்து இருக்கும்

க‌ம‌ல்
தின‌க‌ர‌ன் எல்லாம் கூட்ட‌னி வைச்சும் கூட‌ இவ‌ர்க‌ளால் இந்த‌ தேர்த‌லில் சாதிக்க‌ முடிய‌ வில்லை

திமுக்கா கூட்ட‌னியில் எத்த‌னை க‌ட்சிக‌ள்........திமுக்கா த‌னிய‌ நின்று இருந்தா அவ‌ர்க‌ளின் ப‌ல‌ம் ப‌ல‌வீன‌ம் என்ன‌ என்று தெரிந்து இருக்கும்

த‌னித்து போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ந‌ல்ல‌ எதிர்கால‌ம் இருக்கு................க‌ட்சி இப்ப‌டியே ப‌ய‌ணித்தால் 2024 பாராள‌மன்ற‌ தேர்த‌லில் இன்னும் வ‌ள‌ந்திடும்............க‌ல்யான‌சுந்த‌ர‌ம் ராஜிவ் காந்தி போன்ற‌ குள்ள‌ ந‌ரிக‌ள் வெளி ஏறியும் க‌ட்சி முன்பை விட‌ வ‌ள‌ந்து விட்ட‌து.........

2016 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பாமாகா த‌னித்து போட்டியிட்டு 20ல‌ச்ச‌ ஓட்டுக‌ளை தான் பெற்றார்க‌ள்

வைக்கோ
திருமாள‌வ‌ன்
வேல்முருக‌ன்.........இவ‌ர்க‌ள் த‌னித்து போட்டியிட்டால் கூட‌ இவ‌ர்க‌ள் ஒன்றும் ப‌ல‌ ல‌ச்ச‌ம் ஓட்டு வாங்கியோ ப‌ல‌ தொகுதிக‌ளில் யெயிக்க‌வோ போர‌தில்லை........இவ‌ர்க‌ளின் க‌ட‌ந்த‌ கால‌ கூட்ட‌னி ம‌ற்றும் திமுக்காவுட‌ன் நிக்கும் போது ஆதிமுக்காவை விம‌ர்ச‌ன‌ம் செய்வ‌து......... ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னியில் இருக்கும் போது த‌டிச்ச‌ வார்த்தையில் அறிக்கை விடுவ‌து........இவ‌ர்க‌ள் த‌னிய‌ நின்றால் இவ‌ர்க‌ளின் ப‌ருப்பு வேகாது........

அண்ண‌ன் சீமான் ஏதாவ‌து கூட்ட‌னிக்கு போக‌னும் அவ‌ரின் அர‌சிய‌ல் வாழ்க்கை அந்த‌ கூட்ட‌னியோட‌டையே முடிந்து விடும்..........

தொட‌ர்ந்து த‌னித்து நிப்ப‌த‌னால் தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி நாளுக்கு நாள் வ‌ள‌ந்து வ‌ருது.....2024த‌னித்து தான் போட்டி 2026த‌னித்து தான் போட்டி என்று இப்ப‌வே சொல்லி விட்டார்...........இதுக்கு பெய‌ர் தான் கொள்கை உள்ள‌ அர‌சிய‌ல்.........வைக்கோ ராம‌தாஸ் விட்ட‌ பிழைக‌ளை அண்ண‌ன் சீமான் விட‌ மாட்டார்

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அதுதான் வந்தேறி வடுகர்களை விரட்டியடிக்க மேதகு ஸிம்மான் புரஜெக்ட்டுகு ஃபைனான்ஸ் பண்றோம்🤪

அட நீங்கள் இருக்கும் நாட்டில் நீங்களும் வந்தேறி வடுகர்தானே. அதுதான் உங்களுக்குக் கோபம் புட்டுக்கொள்ளுகிறதோ.. 

😜

6 hours ago, Justin said:

எல்லோருமே கள்ளர் தான், என்ன இனவாதம் பரப்பி வடமாநிலங்கள் போல தமிழகத்தை ஆக்காத கள்ளர் வந்தால் தமிழகம் தப்பும்!

எல்லோரும் கள்ளர் என்கிறீர்கள். ஆனாலும்  தமிழகம் தப்பும் என்கிறீர்கள்..🤦🏼‍♂️

எப்படித் தப்பும்

🤦🏼‍♂️

1 hour ago, கற்பகதரு said:

மேதகுவை சொல்கிறீர்களா? அதாவது ... மேதகு ஜனாதிபதி அவர்களை!

உலகெங்கும் உள்ள தமிழர்கள் மேதகுவை நேசிப்பதால் தங்களுக்கு இத்தனை காழ்ப்புணர்வு...

🤮

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:
6 hours ago, Justin said:

எல்லோருமே கள்ளர் தான், என்ன இனவாதம் பரப்பி வடமாநிலங்கள் போல தமிழகத்தை ஆக்காத கள்ளர் வந்தால் தமிழகம் தப்பும்!

எல்லோரும் கள்ளர் என்கிறீர்கள். ஆனாலும்  தமிழகம் தப்பும் என்கிறீர்கள்..🤦🏼‍♂️

எப்படித் தப்பும்

அவர் விளக்கமாகவே சொல்லியுள்ளாரே    இனவாதம் பரப்பி வடமாநிலங்கள் போல தமிழகத்தை ஆக்காத கள்ளர் வந்தால் தமிழகம் தப்பும்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

அவர் விளக்கமாகவே சொல்லியுள்ளாரே    இனவாதம் பரப்பி வடமாநிலங்கள் போல தமிழகத்தை ஆக்காத கள்ளர் வந்தால் தமிழகம் தப்பும்

அட, 

நீங்கள் இன்னமும் விளங்க நினைத்துக்கொண்டேதான் இருக்கிறீர்களா..

போச்சுடா.. 🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

மன்னிக்கவும்..எங்களுக்கு  தமிழகமககள் அனைவரும்...உறவுகள்....நண்பர்கள்.....எம்மினத்தவர்கள். ..எம்தாய்தமிழர்கள்..குறிப்பாக ..எமக்கு எதிரிகள்.தமிழகத்தில் இல்லை. நன்றி வணக்கம்.

கந்தையா அண்ணா  விரும்ப புள்ளி முடிவடைந்து விட்டது நன்றாக சொன்னீர்கள் 👍

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பையன்26 said:

ச‌ரி உற‌வே உங்க‌ளின் விவாத‌த்துக்கே வ‌ரும்

தின‌க‌ர‌ன் கூட‌ கூட்ட‌னி வைச்ச‌ தேமுதிக்கா 
 2011ம் ஆண்டு எதிர் க‌ட்சியாய் இருந்த‌து

இந்த‌ தேர்த‌லில் அம‌முக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு ப‌டுதோல்வி

க‌ம‌ல் கூட‌ ச‌ர‌த்குமார் கூட்ட‌னி வைச்சார் இவ‌ர்க‌ளால் கூட‌ ஒன்னும் சாதிக்க‌ முடிய‌ வில்லையே 

த‌னித்து இவை நின்று இருந்தா இவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌ வீத‌ம் எப்ப‌டி இருந்து இருக்கும்

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி த‌னியாக‌ நின்று ம‌க்க‌ள் 23ல‌ச்ச‌ ஓட்டுக்கு மேல் போட்டு இருக்கின‌ம் 

க‌ம‌லுக்கு அதிக‌ ஊட‌க‌ ப‌ல‌ம் இருந்த‌து  , 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை தேர்த‌ல் நேர‌ம் ஊட‌க‌ங்க‌ளில் பெரிசா காட்டுவ‌தில்லை , க‌ம‌லுக்கு கொடுத்த‌ ஊட‌க‌ வெளிச்ச‌த்தை நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கொடுத்து இருக்க‌னும் க‌ட்சிக்கு இன்னும் கூடுத‌ல் ப‌ல‌ம் சேர்த்து இருக்கும்

க‌ம‌ல்
தின‌க‌ர‌ன் எல்லாம் கூட்ட‌னி வைச்சும் கூட‌ இவ‌ர்க‌ளால் இந்த‌ தேர்த‌லில் சாதிக்க‌ முடிய‌ வில்லை

திமுக்கா கூட்ட‌னியில் எத்த‌னை க‌ட்சிக‌ள்........திமுக்கா த‌னிய‌ நின்று இருந்தா அவ‌ர்க‌ளின் ப‌ல‌ம் ப‌ல‌வீன‌ம் என்ன‌ என்று தெரிந்து இருக்கும்

த‌னித்து போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ந‌ல்ல‌ எதிர்கால‌ம் இருக்கு................க‌ட்சி இப்ப‌டியே ப‌ய‌ணித்தால் 2024 பாராள‌மன்ற‌ தேர்த‌லில் இன்னும் வ‌ள‌ந்திடும்............க‌ல்யான‌சுந்த‌ர‌ம் ராஜிவ் காந்தி போன்ற‌ குள்ள‌ ந‌ரிக‌ள் வெளி ஏறியும் க‌ட்சி முன்பை விட‌ வ‌ள‌ந்து விட்ட‌து.........

2016 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பாமாகா த‌னித்து போட்டியிட்டு 20ல‌ச்ச‌ ஓட்டுக‌ளை தான் பெற்றார்க‌ள்

வைக்கோ
திருமாள‌வ‌ன்
வேல்முருக‌ன்.........இவ‌ர்க‌ள் த‌னித்து போட்டியிட்டால் கூட‌ இவ‌ர்க‌ள் ஒன்றும் ப‌ல‌ ல‌ச்ச‌ம் ஓட்டு வாங்கியோ ப‌ல‌ தொகுதிக‌ளில் யெயிக்க‌வோ போர‌தில்லை........இவ‌ர்க‌ளின் க‌ட‌ந்த‌ கால‌ கூட்ட‌னி ம‌ற்றும் திமுக்காவுட‌ன் நிக்கும் போது ஆதிமுக்காவை விம‌ர்ச‌ன‌ம் செய்வ‌து......... ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னியில் இருக்கும் போது த‌டிச்ச‌ வார்த்தையில் அறிக்கை விடுவ‌து........இவ‌ர்க‌ள் த‌னிய‌ நின்றால் இவ‌ர்க‌ளின் ப‌ருப்பு வேகாது........

அண்ண‌ன் சீமான் ஏதாவ‌து கூட்ட‌னிக்கு போக‌னும் அவ‌ரின் அர‌சிய‌ல் வாழ்க்கை அந்த‌ கூட்ட‌னியோட‌டையே முடிந்து விடும்..........

தொட‌ர்ந்து த‌னித்து நிப்ப‌த‌னால் தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி நாளுக்கு நாள் வ‌ள‌ந்து வ‌ருது.....2024த‌னித்து தான் போட்டி 2026த‌னித்து தான் போட்டி என்று இப்ப‌வே சொல்லி விட்டார்...........இதுக்கு பெய‌ர் தான் கொள்கை உள்ள‌ அர‌சிய‌ல்.........வைக்கோ ராம‌தாஸ் விட்ட‌ பிழைக‌ளை அண்ண‌ன் சீமான் விட‌ மாட்டார்

உங்கள் பதிவுகளை படித்தேன் உறவே. பணியை தொடருங்கள்.

அடுத்த 5 வருடம் அண்ணனுக்கு கடினமாக இருக்கும். அதற்காக அண்ணன் பிஜேபி பக்கம் தந்திரோபாயமாக சார வேண்டியும் வரலாம்.

இந்த சந்தர்பங்களில் அண்ணன் மீதும், கட்சி மீதும் ஈழ உறவுகள் மனவருத்தம் கொள்ளாமல் கட்சிப் பரப்புரைய நீங்கள், புலவர், நிலவன், நாதமுனி போன்ற உறவுகள் மேலும் முனைப்போடு முன்னெடுக்க வேண்டும்.

இந்த தளத்தில் மட்டும் அல்லாமல், சமூக வலைதளங்களிலும் இதை செய்யுங்கள்.

கட்சிக்கும் அண்ணனுக்கும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புலம்பெயர் மக்களின் பொருளாதார, பரப்புரை உதவி தேவைப்படும் காலம் இது.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா...

தோன்றோர், வெல்வதும், வெல்பவர் தோற்பதும்  ஜனநாயகமப்பா.

வீட்டுக்கு அனுப்பப்பட்ட, மகிந்தர், ஐந்தே வருடத்தில், தம்பியையும் அரியணை ஏத்தி, தானும் மீண்டது பார்த்தோம். அதுக்கும், சீனாக்காரன் காசு தேவைப்பட்டது.

காசு கொடுக்காமல், வெல்ல, நேரமெடுக்கும்.... எடுக்காமலும் போகலாம். ஆனால் கொடுக்க கூடாது என்ற உறுதி, வென்றது சிறப்பு.

கிருபன் அய்யா, நல்ல சண்டை போட்டோம், தொடர்ந்தும் போடுவோம். பொழுது போகவேண்டும், கொரோனா காலம் முடியும் வரையாவது.

தேர்தல் முடிவுகள், கோசனை இழுத்து வரும் என்று பார்த்தேன், ஜஸ்டின் அய்யா வந்திருக்கிறார். வாருங்கோ.

சந்திப்போம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

எல்லோருமே கள்ளர் தான், என்ன இனவாதம் பரப்பி வடமாநிலங்கள் போல தமிழகத்தை ஆக்காத கள்ளர் வந்தால் தமிழகம் தப்பும்!

சாதியக்கட்சிகளின் கூட்டு உங்களுக்கு  சரி என நினைக்கிறேன்.🙃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Nathamuni said:

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா...

தோன்றோர், வெல்வதும், வெல்பவர் தோற்பதும்  ஜனநாயகமப்பா.

வீட்டுக்கு அனுப்பப்பட்ட, மகிந்தர், ஐந்தே வருடத்தில், தம்பியையும் அரியணை ஏத்தி, தானும் மீண்டது பார்த்தோம். அதுக்கும், சீனாக்காரன் காசு தேவைப்பட்டது.

காசு கொடுக்காமல், வெல்ல, நேரமெடுக்கும்.... எடுக்காமலும் போகலாம். ஆனால் கொடுக்க கூடாது என்ற உறுதி, வென்றது சிறப்பு.

கிருபன் அய்யா, நல்ல சண்டை போட்டோம், தொடர்ந்தும் போடுவோம். பொழுது போகவேண்டும், கொரோனா காலம் முடியும் வரையாவது.

தேர்தல் முடிவுகள், கோசனை இழுத்து வரும் என்று பார்த்தேன், ஜஸ்டின் அய்யா வந்திருக்கிறார். வாருங்கோ.

சந்திப்போம். 

 

மெய்யே நாதமுனியர்! தமிழ்நாட்டு பிரியாணிக்கடை,போண்டாக்கடை முதலாளிமார் கெடிக்கலக்கத்திலை  இருக்கினமாம் அறிஞ்சனீங்களே? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

மெய்யே நாதமுனியர்! தமிழ்நாட்டு பிரியாணிக்கடை,போண்டாக்கடை முதலாளிமார் கெடிக்கலக்கத்திலை  இருக்கினமாம் அறிஞ்சனீங்களே? 

அதுமட்டுமே,

செவ்வாய் கிழமை பதவி பிரமாணம், இப்பவே, செந்தில் பாலாஜியின் மாட்டு வண்டில்கள் ரெடி. அடுத்த ஐந்தாவது நிமிசத்தில், அள்ள, ஆத்துக்கு போவினமாம்.

ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதேவேளை, தேப்பன் கருணாநிதிக்கு உள்ள, நிர்வாக திறமைகள் இவருக்கு இல்லை என்பதுடன் இவர் ஒரு high temper ஆள்.

இவரது ஆட்சி தவறுகள், திமுக மீண்டும் வருவதை தடுக்கும்.

அதேவேளை, அடுத்த எதிர் தரப்பின் முக்கியஸ்தராக, வர  எடப்பாடி, பன்னீர், தினகரனுக்கு இடையே கடும் போட்டி நிலவப்போகிறது. பதவி, இல்லாமல் போனால், கடினம். அதவேளை, கிடைத்த நான்கு உறுப்பினர்கள் உடன், பிஜேபி, தன்னை முன்னிறுத்திக்கொள்ளும். இந்த வகையில், அதிமுகவின் உறுப்பினர்களை தனக்கு பின்னே திரள வைத்து, கர்நாடகா, வட மாநிலங்களில் செய்தது போல, திமுக கூட்டணியில் இருந்து ஆட்களை கிளப்பும். 

கனிமொழி, அ ராசா, தயாநிதிமாறன், கலாநிதிமாறன்  ஊழல் வழக்குகள் மத்திய அரசின் கையில் உள்ளதாலும், இதனை எதிர்க்க முடியாமல் போகலாம். 

இறுதியாக, தமிழக ஆட்சியினை குறுக்கு வழியில் பிடிக்கும்.

சுப்பிரமணியசாமி ஆளுனராகலாம் என்ற பேச்சு அடிபடுவதால், ஸ்டாலின் ஆட்சி, இலகுவானதாக இருக்க போவதில்லை.  ஆளுனர் மூலமாக குடைச்சல் கொடுத்தே, புதுசேரியினை இன்று மடக்கி விட்டார்கள். அங்கே பிஜேபி ஆட்சி அமைகிறது, தாமரை மலர்ந்தே விட்டது.

உண்மையில் அங்கு தான், மெசினில் ஜில்மாறு வேலை செய்துள்ளனர் போல தெரிகிறது. அதே போல தமிழகத்தில், தமது திட்டத்துக்கு நீண்டகால குந்தகம் விளைவிக்க கூடிய ஒரு கட்சியின் வாக்குகளும், மெசினுள் ஜில்மாறு செய்யப்பட்டிருக்கலாம், யாருக்கு தெரியும். 

பார்ப்போம்.... 
 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் எல்லாக் கட்சிகளுக்கும்   சாதகமாகவே அமைந்துள்ளன.
மிகப்பெரிய தோல்வியை எதிர்பார்த்த அதிமுக..
இக்கட்டான வெற்றியை எதிர்பார்த்த திமுக..
தங்களைத் தக்க வைக்க முனைந்த

அமமுக ,
ம நீ மய்யம்,

நாதக

என எல்லோரும் இந்தத் தேர்தலைத் தங்கள் வெற்றியாகக் கொண்டாடலாம்
ஆனால் தி முக மட்டும் ஆடசியமைக்க முடியும்
யார் விரும்பியோ விரும்பாமலோ ஸ்ராலினின்
அரசியல் வாழ்வில் அவர் எதை தேடினாரோ அது இன்று அவருக்குக் கிடைத்துவிட்டது
வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Nathamuni said:

அதுமட்டுமே,

செவ்வாய் கிழமை பதவி பிரமாணம், இப்பவே, செந்தில் பாலாஜியின் மாட்டு வண்டில்கள் ரெடி. அடுத்த ஐந்தாவது நிமிசத்தில், அள்ள, ஆத்துக்கு போவினமாம்.

ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதேவேளை, தேப்பன் கருணாநிதிக்கு உள்ள, நிர்வாக திறமைகள் இவருக்கு இல்லை என்பதுடன் இவர் ஒரு high temper ஆள்.

இவரது ஆட்சி தவறுகள், திமுக மீண்டும் வருவதை தடுக்கும்.

அதேவேளை, அடுத்த எதிர் தரப்பின் முக்கியஸ்தராக, வர  எடப்பாடி, பன்னீர், தினகரனுக்கு இடையே கடும் போட்டி நிலவப்போகிறது. பதவி, இல்லாமல் போனால், கடினம். அதவேளை, கிடைத்த நான்கு உறுப்பினர்கள் உடன், பிஜேபி, தன்னை முன்னிறுத்திக்கொள்ளும். இந்த வகையில், அதிமுகவின் உறுப்பினர்களை தனக்கு பின்னே திரள வைத்து, கர்நாடகா, வட மாநிலங்களில் செய்தது போல, திமுக கூட்டணியில் இருந்து ஆட்களை கிளப்பும். 

கனிமொழி, அ ராசா, தயாநிதிமாறன், கலாநிதிமாறன்  ஊழல் வழக்குகள் மத்திய அரசின் கையில் உள்ளதாலும், இதனை எதிர்க்க முடியாமல் போகலாம். 

இறுதியாக, தமிழக ஆட்சியினை குறுக்கு வழியில் பிடிக்கும்.

சுப்பிரமணியசாமி ஆளுனராகலாம் என்ற பேச்சு அடிபடுவதால், ஸ்டாலின் ஆட்சி, இலகுவானதாக இருக்க போவதில்லை.  ஆளுனர் மூலமாக குடைச்சல் கொடுத்தே, புதுசேரியினை இன்று மடக்கி விட்டார்கள். அங்கே பிஜேபி ஆட்சி அமைகிறது, தாமரை மலர்ந்தே விட்டது.

உண்மையில் அங்கு தான், மெசினில் ஜில்மாறு வேலை செய்துள்ளனர் போல தெரிகிறது. அதே போல தமிழகத்தில், தமது திட்டத்துக்கு நீண்டகால குந்தகம் விளைவிக்க கூடிய ஒரு கட்சியின் வாக்குகளும், மெசினுள் ஜில்மாறு செய்யப்பட்டிருக்கலாம், யாருக்கு தெரியும். 

பார்ப்போம்.... 
 

அதாகப்பட்டது......திமுக எப்பிடித்தான் துள்ளிக்குதிச்சாலும் ஞாணயக்கயிறு பிஜேபியிட்டைதான் கிடக்கு எண்டுறியள்?

ஹா ஹா ஹா ஹா ஹா பிரமாதம் .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

கனிமொழி, அ ராசா, தயாநிதிமாறன், கலாநிதிமாறன்  ஊழல் வழக்குகள் மத்திய அரசின் கையில் உள்ளதாலும், இதனை எதிர்க்க முடியாமல் போகலாம். 

இறுதியாக, தமிழக ஆட்சியினை குறுக்கு வழியில் பிடிக்கும்.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி ஸ்ராலின் கூட்டும் அமையலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, வாத்தியார் said:

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி ஸ்ராலின் கூட்டும் அமையலாம்

களவுக்கும் பொய்யுக்கும் உரியவர்கள் தாம் தப்ப எதையும் செய்வார்கள். எல்லா தலைவர்களிடமும் நீங்கள் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அதாகப்பட்டது......திமுக எப்பிடித்தான் துள்ளிக்குதிச்சாலும் ஞாணயக்கயிறு பிஜேபியிட்டைதான் கிடக்கு எண்டுறியள்?

ஹா ஹா ஹா ஹா ஹா பிரமாதம் .

நான்கு சீட்டுக்கள் உடன் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது. அதுவே மிகவும் மோசமான நிலைமை. கேரளாவில் துடைத்து எறிந்து விட்டார்கள்.

வானதி அல்லது நயினார் நாகேந்திரன், பிஜேபி தலைமைக்கு வரக்கூடும். பிஜேபி புதிய வேகம் எடுக்கப்போகிறது.

இதுவே தமிழகத்தின் பெரும் தலைவலியாக மாறும். அனேகமாக, எல்லோரும் திமுகவின் வெற்றியினை, இயந்திரம் மூலம் தடுக்கும் என்று நினைக்க, அவர்களோ, வேறு வகையில் கில்லாடித்தனமாக விளையாடி உள்ளனர். ஒன்று புதுசேரி வெற்றி. இரண்டாவது, தமிழகத்தில் சில இடங்களை வெல்வதை உறுதிப்படுத்திக் கொண்டமை. கமல் வெற்றி பறிக்கப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

1 நபர் மற்றும் , ’வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி தொடரும் எங்கள் முயற்சி இது எளிய மக்களின் அரசியல் புரட்சி.! A 5 2021 மனம்தக்க நூ தமிர் புரட்சி எப்போதும் வெல்லும்..! அதை நாளை மலரும் நாம் தமிழர் அரசு சொல்லும்.’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

களவுக்கும் பொய்யுக்கும் உரியவர்கள் தாம் தப்ப எதையும் செய்வார்கள். எல்லா தலைவர்களிடமும் நீங்கள் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.

தமிழ் நாடு மட்டுமல்ல.. இந்திய அரசியலிலும்..   நேர்மை என்பதையோ ..மக்கள் நலன் என்பதையோ... நான் எதிர்பாத்ததில்லை (இந்திரா காந்தியைத் தவிர). எல்லோருமே ஒரே குட்டையில் ஊறியவர்கள் தான்.

சீமானைக் கூட நான் நம்பவில்லை.... ஆனால் அவருடைய தம்பிகளிடம்... நிறையவே எதிர்பார்க்கின்றேன். அதற்கு அடுத்த தலைமுறைதான் பதில் சொல்ல வேண்டும் .
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, வாத்தியார் said:

தமிழ் நாடு மட்டுமல்ல.. இந்திய அரசியலிலும்..   நேர்மை என்பதையோ ..மக்கள் நலன் என்பதையோ... நான் எதிர்பாத்ததில்லை (இந்திரா காந்தியைத் தவிர). எல்லோருமே ஒரே குட்டையில் ஊறியவர்கள் தான்.

சீமானைக் கூட நான் நம்பவில்லை.... ஆனால் அவருடைய தம்பிகளிடம்... நிறையவே எதிர்பார்க்கின்றேன். அதற்கு அடுத்த தலைமுறைதான் பதில் சொல்ல வேண்டும் .
 

நேர்மைக்கு விலையும் அதிகம். தடங்கல்களும் அதிகம். காலமும் அதிகம்.அழிவும் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நேர்மைக்கு விலையும் அதிகம். தடங்கல்களும் அதிகம். காலமும் அதிகம்.அழிவும் அதிகம்.

நாதக வாக்குக்கு பணம் கொடுக்காத நேர்மையினை கடை பிடிக்கும் வரை நமது ஆதரவு இருக்கும், இல்லாவிடில் நின்று போகும். அவ்வளவுதான். அவர்கள் முன்பே 2026 தான் இலக்கு என்று வைத்துள்ளார்கள், இன்றய உடனடி எதிர்பார்ப்பு, 6% பெற்று சின்னத்தினை காத்துக் கொள்வதுதான்.

முக்கியமாக அடுத்த தேர்தல், பிஜேபியின் வேலைகளினால், விரைவில் வரும். புதுசேரியில், ஆட்சியை கலைக்கவில்லை, பதவி இழக்க வைத்தார்கள். தொடர்ந்து, தேர்தல் நடாத்தி வென்றுள்ளார்கள். 

தமிழக அரசியலை, நாதக பெறுபேறினை வைத்துக்கொண்டு பாராமல், பிஜேபியின் பெறுபேறினை வைத்து பார்த்தால் பல சூட்சுமங்கள் புரியும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, Nathamuni said:

நாதக வாக்குக்கு பணம் கொடுக்காத நேர்மையினை கடை பிடிக்கும் வரை நமது ஆதரவு இருக்கும், இல்லாவிடில் நின்று போகும். அவ்வளவுதான். அவர்கள் முன்பே 2026 தான் இலக்கு என்று வைத்துள்ளார்கள், இன்றய உடனடி எதிர்பார்ப்பு, 6% பெற்று சின்னத்தினை காத்துக் கொள்வதுதான்.

முக்கியமாக அடுத்த தேர்தல், பிஜேபியின் வேலைகளினால், விரைவில் வரும். புதுசேரியில், ஆட்சியை கலைக்கவில்லை, பதவி இழக்க வைத்தார்கள். தொடர்ந்து, தேர்தல் நடாத்தி வென்றுள்ளார்கள். 

தமிழக அரசியலை, நாதக பெறுபேறினை வைத்துக்கொண்டு பாராமல், பிஜேபியின் பெறுபேறினை வைத்து பார்த்தால் பல சூட்சுமங்கள் புரியும். 

காசுக்கு வாக்கு என்ற நிலையில் இருக்கும் இந்தியாவை வைத்து நாம்  வீரம் பேச முடியாது.

நாட்டுக்கு  மண்ணுக்கு உலகிற்கு  மக்களுக்கு நல்ல கருத்தை சொல்லும் திரைப்படங்களே தோல்வியடையும் நாடு அது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.