Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - முடிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல் ....

அடிமை அ  தி மு க  ஆட்சி கலைந்தது புதிய திருப்பம் 
அடுத்தது 6 வருடத்துக்குள் ஆளை ஆள் காட்டி கொடுத்து மாட்டி விட்டு 
தலைவர் பொறுப்புக்கு சண்டை பிடித்து ஊழல் பணத்தை பிரித்து என்று 
அதில் இனி யார் யார் மிஞ்சுவார்கள் யார் யார் தொடருவார்கள் என்பதே 


தி மு க வெற்றி எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று 
குடும்ப ஆட்ச்சிக்கு முடிவு கட்டி ஒரு ஆளுமை உள்ள ஒருவர் 
முதலமைச்சர் ஆகி இருப்பின் சந்தோச பட்டிருக்கலாம் 
பாஜக தோல்வி என்பது தான் முக்கிய விடயம் .. தமிழராக கொஞ்சம் தலை நிமிர கூடிய ஒன்று. 

நா த க 
என்னை பொறுத்தவரை அதீத வெற்றி 
இதே வேகம் இருப்பின் 2034 பெரும் திருப்பத்தை கொடுக்கும். 

எல்லாவற்றையும் விட வங்கத்தில் பெண் சிங்கம் மம்தா (கட்சி) வென்றது 
என்பதுதான் எல்லா மனிதருக்கும் வெற்றியான ஒன்று. 

  • Replies 152
  • Views 14.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாம் த‌மிழ‌ர் க‌ச்சி இந்த‌ ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 30ல‌ச்ச‌ ஓட்டை பெற்று மூன்றாவ‌து பெரிய‌ க‌ட்சியாய் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ள‌ந்து நிக்குது 6.85 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழகன் said:

இந்த தேர்தலுக்கு பின் அதிமுக இருக்காது அப்போ அவர்களை எம் கூட்டணியில் சேர்ப்போம் என கூறியுள்ளார். ஆனால் முடிவுகள் எதிர்பார்த்த வகையில் இல்லை. 

யார் எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு அடிக்கிச்சுவாங்க. அப்படியே பிஜேபி சொல்லுவதற்கெல்லாம் பெட்டிப்பாம்பாய் அடங்கிக் கேட்டுக்குவாங்க. அண்ணன் சீமான் கிடைத்த  5-6 வீதம் வாக்குகளை வைத்து அடுத்த தேர்தலில் தொகுதி உடன்பாட்டுக்கு  சசிகலா, அம்மா திமுக எல்லாம் பழையபடி சேர்ந்த அதிமுக, பிஜேபியுடன் பேரம்பேசி அரசியல் அதிகாரங்களைச் சுவைக்கவேண்டும். இல்லாவிட்டால், எதுவித வருமானமும் இல்லாமல் இருக்கும் இடைநிலை தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு கிளம்பிவிடுவார்கள்..

அண்ணனை பாத்து சூதானமாக நடந்துக்கச் சொல்லுங்க.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழகன் said:

அண்ணனின் அரசியல் நெகிழ்வுதன்மையை பாவிக்க வேண்டிய தருணம் இது. அண்ணன் மீதுள்ள வழக்குகள் இதர விடயங்களை கருதும் போது - அடுத்த ஐந்து வருடம் தீம்காவை எதிர்ப்பது மிகசிக்கலாகவே இருக்கும்.

அண்ணன் பிஜேபி ஆதரவு நிலை எடுத்தாலும் நம் ஆதரவு தொடரவேண்டும்.

ஏனென்றால் எங்கள் இனத்தின் முதல் எதிரி தீம்காதான்.

ஆரப்பு நீங்கள்?
இலங்கையில் எந்த இடம்?

Edited by பிரபா
Missing words

  • கருத்துக்கள உறவுகள்

அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிட ஆட்சியில் வறுமையே வாழ்வென்று ஆகிப்போன தமிழகத்தில் கிராமப் புற தமிழர்களின் வாக்கை கொள்ளையடிக்க.. போலித் திராவிடங்கள் பல மஜாயாலங்களைக் கற்று வைத்துள்ளன.

உதாரணத்துக்கு..

மிஸ்டர் ஸ்ராலின்.. பெண்களுக்கு மாதம் 1000 ரூபா கொடுப்பனவு. 4000 ரூபா கொரோனா நிவாரணம்.

மிஸ்டர் ஈ பி எஸ் - 6 காஸ் சிலின்டர் இலவசம்.

இதை இலகுவாகப் புரிந்து கொண்டுள்ள..  தமிழக ஏழை மக்கள்..

சீமான் சொன்ன.. கல்வி.. குடிநீர்.. மருத்துவம் இலவசம்.. விவசாயம்.. ஆடுமாடு மேய்தல் அரச தொழில் என்பதை நம்பத்தயார் இல்லை.

ஏனெனில்.. ஒரு ரீவியில் தோன்றிய தமிழகத்தின் பராமரன் சொல்கிறார்.. ஸ்ராலின்(தளபதியாம்) சொன்னது நடக்கச் சாத்தியம். ஈ பி எஸ் சொன்னது நடக்கும் ஆனால் அறிவிப்பு பெரும் காலதாமதம். இப்ப காஸை விட காசு தான் முக்கியம். சீமான் சொன்னது எந்த நாட்டில் நடந்திருக்குது..??!

அடப்பாவிகளா சீமான் சொன்னது இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரை இருக்கடா.. என்பது தமிழகத்தில்.. மக்கள் வருமானத்தில் மட்டுமன்றி.. பொது அறிவிலும் வறுமையில் வைத்திருக்கப்பட்டிருப்பதையே இனங்காட்டுகிறது.

புரையோடிப்போயுள்ள திராவிடச் சூழ்ச்சிகளை முறையடிக்க ஒரு தசாப்தக் கட்சியான நாம் தமிழருக்கு காலம் போதாது.

சீமானும்.. 1000 ரூபா மருத்துவம் இலவசம்.. 10000  ரூபா கல்வி இலவசம்.. 1000 தண்ணி இலவசம்.. ஆடு மாடு இலவசம் என்று சொல்லி இருந்தால்.. தமிழக பாமர மக்களுக்கு அது கூடிய அளவு விளங்கி இருக்கலாம். ஏனெனில்.. அப்படியான சிந்தனை ஓட்டத்தை தான் திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக கிராமங்களில் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

ஆனால்.. தேர்தலுக்கு தேர்தல் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது என்பது மட்டும்.. நிஜ யதார்த்தம். குறிப்பாக.. தமிழகத்தில் படித்த வாக்காளர்களை இளைய நகர்ப்புற வாக்காளர்களைக் கவர்ந்து வருகிறது. அறிவூட்டி வருகிறது. இது கிராமங்களிலும் நிகழும் போது.. நாம் தமிழர் சாதிக்கும். தமிழகம் அன்று தான் ஒரு உருப்படியான அபிவிருத்தி.. வளர்ச்சி நோக்கி 21ம் நூற்றாண்டில் பயணிக்க முடியும்.

அதுவரை திராவிட மண்குதிரைகளை நம்பி சவாரி செய்து தொடர்ந்து வறுமையும் வள இழப்பும் கண்ணீரும்.. கம்பலையும் என்று வாழ்வது தான் தமிழகத்திற்கு அமைந்த மிஸ்டர் வைகோ ஐயா சொன்னது போலான பொற்கால ஆட்சிகளின் பெறுதிகளாக அமைய முடியும்.

தமிழக மக்கள் சிந்திக்கவும் செயற்படவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அது இளையோர் மட்டத்தில் நகர்ப்புறத்தில் இருக்கிற அளவுக்கு.. கிராமங்களில்.. வளர்ந்தோரில் இல்லை. அவர்கள் இன்னும் திராவிட மாயைகளுக்குள் கட்டுண்டு கிடக்கின்றனர். அற்ப இலவசங்களுக்கு ஏங்கிக் கிடக்கும் வாழ்க்கை நிலவரம் அவர்களுக்கு அங்கு.

TN Election Results: NTK’s performance springs a surprise

In the run up to the elections, Kamal Haasan’s MNM and TTV Dhinakaran’s AMMK were billed as the alternative which voters would prefer.

Published: 03rd May 2021 05:22 AM  |   Last Updated: 03rd May 2021 05:22 AM  |  A+A-

Naam Tamilar Katchi (NTK) party chief coordinator Senthamizhan Seeman. (Photo | Debadatta Mallick, EPS)

Naam Tamilar Katchi (NTK) party chief coordinator Senthamizhan Seeman. (Photo | Debadatta Mallick, EPS)

Express News Service

TIRUCHY: In the run up to the elections, Kamal Haasan’s MNM and TTV Dhinakaran’s AMMK were billed as the alternative which voters would prefer. But Seeman’s Naam Thamizhar Katchi (NTK) proved political observers wrong and has come second runner-up in several constituencies, especially in urban areas.

STEHSTH.jpgFor instance at Tiruvottriyur in Chennai, party chief Seeman secured the third place with over 48,000 votes behind AIADMK and DMK. Also, NTK put up a strong show in urban areas like Thiruverumbur, Tiruchy East, Tambaram, Sriperumbudur, Alandur, Avadi. In rural pockets the party secured sizeable number of votes in Thiruvaiyaru, Kallakurichi, Thiruvadanai, Kunnam, Jayankondam among others.  

NTK’s performance is significant as pundits were of the view that the party’s  pro-Tamil culture would gain traction in rural pockets, but its candidates bagged decent votes in urban constituencies.  The penetration of internet and availability of smart phones endeared Seeman to youth who followed his fiery speeches on social media platforms, opine pundits.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/03/tn-election-results-ntks-performance-springs-a-surprise-2297740.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

30 ல‌ச்ச‌ம் வாக்குக‌ளை க‌ட‌ந்து
30,17 ,812 தொட‌ர்கிற‌து 💪

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, nedukkalapoovan said:

அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிட ஆட்சியில் வறுமையே வாழ்வென்று ஆகிப்போன தமிழகத்தில் கிராமப் புற தமிழர்களின் வாக்கை கொள்ளையடிக்க.. போலித் திராவிடங்கள் பல மஜாயாலங்களைக் கற்று வைத்துள்ளன.

உதாரணத்துக்கு..

மிஸ்டர் ஸ்ராலின்.. பெண்களுக்கு மாதம் 1000 ரூபா கொடுப்பனவு. 4000 ரூபா கொரோனா நிவாரணம்.

மிஸ்டர் ஈ பி எஸ் - 6 காஸ் சிலின்டர் இலவசம்.

இதை இலகுவாகப் புரிந்து கொண்டுள்ள..  தமிழக ஏழை மக்கள்..

சீமான் சொன்ன.. கல்வி.. குடிநீர்.. மருத்துவம் இலவசம்.. விவசாயம்.. ஆடுமாடு மேய்தல் அரச தொழில் என்பதை நப்பத்தயார் இல்லை.

ஏனெனில்.. ஒரு ரீவியில் தோன்றிய தமிழகத்தின் பராமரன் சொல்கிறார்.. ஸ்ராலின்(தளபதியாம்) சொன்னது நடக்கச் சாத்தியம். ஈ பி எஸ் சொன்னது நடக்கும் ஆனால் அறிவிப்பு பெரும் காலதாமதம். இப்ப காஸை விட காசு தான் முக்கியம். சீமான் சொன்னது எந்த நாட்டில் நடந்திருக்குது..??!

அடப்பாவிகளா சீமான் சொன்னது இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரை இருக்கடா.. என்பது தமிழகத்தில்.. மக்கள் வருமானத்தில் மட்டுமன்றி.. பொது அறிவிலும் வறுமையில் வைத்திருக்கப்பட்டிருப்பதையே இனங்காட்டுகிறது.

புரையோடிப்போயுள்ள திராவிடச் சூழ்ச்சிகளை முறையடிக்க ஒரு தசாப்தக் கட்சியான நாம் தமிழருக்கு காலம் போதாது.

சீமானும்.. 1000 ரூபா மருத்துவம் இலவசம்.. 10000  ரூபா கல்வி இலவசம்.. 1000 தண்ணி இலவசம்.. ஆடு மாடு இலவசம் என்று சொல்லி இருந்தால்.. தமிழக பாமர மக்களுக்கு அது கூடிய அளவு விளங்கி இருக்கலாம். ஏனெனில்.. அப்படியான சிந்தனை ஓட்டத்தை தான் திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக கிராமங்களில் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

ஆனால்.. தேர்தலுக்கு தேர்தல் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது என்பது மட்டும்.. நிஜ யதார்த்தம். குறிப்பாக.. தமிழகத்தில் படித்த வாக்காளர்களை இளைய நகர்ப்புற வாக்காளர்களைக் கவர்ந்து வருகிறது. அறிவூட்டி வருகிறது. இது கிராமங்களிலும் நிகழும் போது.. நாம் தமிழர் சாதிக்கும். தமிழகம் அன்று தான் ஒரு உருப்படியான அபிவிருத்தி.. வளர்ச்சி நோக்கி 21ம் நூற்றாண்டில் பயணிக்க முடியும்.

அதுவரை திராவிட மண்குதிரைகளை நம்பி சவாரி செய்து தொடர்ந்து வறுமையும் வள இழப்பும் கண்ணீரும்.. கம்பலையும் என்று வாழ்வது தான் தமிழகத்திற்கு அமைந்த மிஸ்டர் வைகோ ஐயா சொன்னது போலான பொற்கால ஆட்சிகளின் பெறுதிகளாக அமைய முடியும்.

தமிழக மக்கள் சிந்திக்கவும் செயற்படவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அது இளையோர் மட்டத்தில் நகர்ப்புறத்தில் இருக்கிற அளவுக்கு.. கிராமங்களில்.. வளர்ந்தோரில் இல்லை. அவர்கள் இன்னும் திராவிட மாயைகளுக்குள் கட்டுண்டு கிடக்கின்றனர். அற்ப இலவசங்களுக்கு ஏங்கிக் கிடக்கும் வாழ்க்கை நிலவரம் அவர்களுக்கு அங்கு.

 

தேர்த‌லுக்கு முத‌ல்பொய்யான‌ வாக்குறுதி

தேர்த‌ல் நேர‌ம் 500 இருந்து ஆயிர‌ம் ரூபாய் வ‌ர‌ ம‌க்க‌ளுக்கு கொடுத்து தான் திமுக்கா வென்ற‌து

கொரோனாவால் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு என்ன‌ உத‌வியை செய்ய‌ போகின‌ம் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க‌னும்


திமுக்காவின் பொய்யான‌ தேர்த‌ல் பிர‌ச்சார‌ அறிக்கையை கேட்டு ஏமாந்து போக‌ போற‌து திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் தான் , க‌ர‌ன் வெட்டு அங்கை த‌ண்ணீர் இல்லை இங்கை த‌ண்ணீர் இல்லை , உண‌வு இல்லை கொரோனாவால் உத‌விக‌ள் இல்லை என்று இவ‌ர்க‌ளுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் புல‌ம்பும் கால‌ம் வ‌ரும் ,

ச‌ல்லி காசு கொடுக்காம‌ 30ல‌ச்ச‌ ஓட்டுக்கு மேல் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைச்ச‌ ஓட்டு கூடுத‌லா இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் ஓட்டும் அவ‌ர்க‌ளின் பெற்றோர் உற‌வின‌ர்க‌ள் போட்ட‌ ஓட்டுக்க‌ள் , 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ஓட‌ ஒப்பிடும் போது இந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ இடை வெளியில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு 13ல‌ச்ச‌ ஓட்டு கூடி இருக்கு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனியாக நின்று ஈட்டிய வெற்றி.
இனாம் அறிக்கைகளை அள்ளி வீசாமல், வாக்குக்கு பணம் கொடுக்காமல் தலை நிமிர்ந்து நிற்கும் கட்சி.

Bild

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை தான் தேய்த்து போட்டு குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்..
179279745_2188911457932417_7160181045980
"அது " போகிற இடத்திற்குத்தான் போகும் என்டு ஊரில ஒரு பழமொழி சொல்வார்கள்..😢

டிஸ்கி

இவ்வளவு மாநிலத்தை பார்த்தும் தெரியல என்டா ரங்கசாமிக்கு எங்கயோ ஊழல் /தப்பு பண்ணி இருக்கார் என்டு அர்த்தம்..👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தனியாக நின்று ஈட்டிய வெற்றி.
இனாம் அறிக்கைகளை அள்ளி வீசாமல், வாக்குக்கு பணம் கொடுக்காமல் தலை நிமிர்ந்து நிற்கும் கட்சி.

Bild

இந்த தேர்தலில் நான் எதிர்பார்த்த பெறுபேறு இது தான்.

தேசிய கட்சிகள், பல காலாண்டு மக்களுக்கு பழக்கமான கட்சிகள் மற்றும் சாதிய கட்சிகள் அனைத்தையும் தாண்டி 3 இடத்துக்கு அதிலும் தனித்து பணம் மற்றும் இலவசங்களை பரிந்துரைக்காது 

படித்த பண்பான சமுதாய நலன் கொண்ட இளைஞர் இளைஞிகளை மட்டுமே களமிறக்கி இந்த நிலையை அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை. அதிலும் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி.

இவ்வளர்ச்சி எவரை கவருமோ மகிழ்ச்சி அளிக்கிறதோ நிச்சயமாக முதலாவது இரண்டாவது இடத்தில் உள்ளவர்களுக்கு பயத்தை உண்டு பண்ணும்.

https://photos.app.goo.gl/5qZDBUsEnfq52v9W8

டொட். 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வரை 5% என்று கூறப்பட்டது இன்று ஏறத்தாழ 7% என்றாகியது இனிப்பான செய்தி.

ஆனால் ஒரு கட்சி பாக்கி இல்லாமல் அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒரு கூட்டணியில் வாக்கு கேட்கும் போது, நாம் மட்டும் தொடர்ந்து தனித்தே போட்டி என்பது உசிதமான முடிவல்ல என்பதே என் எண்ணம்.

2026 லோக்சபா தேர்தலில் எமக்கான கிராக்கி மிக அதிகமாக இருக்கும்.  இதே கூட்டணி பிரிப்பு தொடரும். சட்டசபை தேர்தலில் நான்கு சீட்டுகளை பெற்ற பாரதிய ஜனதா 40 லோக்சபா சீட்டுகளில் 20 ஐ கேட்டாலும் ஆச்சரியமில்லை. ஆனால் நிச்சயம் நமது 7% வாக்கு வங்கி பல இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.

அதிமுக கூட்டணியில் அதிமுக 20 பாஜக 8 நாம் தமிழர் 8 பாமக 4 என்ற ரீதியில் தொகுதி பங்கீடு அமைந்தால், 8 லோக்சபா தொகுதிகளை சொல்லி அள்ளலாம்.

இது மோடி வென்றே ஆக வேண்டிய தேர்தல்.

இல்லாது போனால் அண்ணன் லோக்சபா தேர்தலில் போட்டியிடாது தவிக்குமாறும் கோரப்படலாம். 

நிச்சயம் அண்ணன் போன்ற ஒரு ஆக்சிறந்த  அரசியல் ஆளுமை இதை உணர்து காலம் கருதி முடிவெடுக்கும்.

அவர் எடுக்கும் முடிவை நாம் சமரசம் கேள்விகள் இன்றி ஆதரிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

வை கோபாலசாமி வீட்டில் தெலுங்குதான் பேச்சுமொழி. இதனை எங்களுக்குக் கூறியவர் அவரது குடும்ப உறுப்பினர். 

 

10 hours ago, தமிழகன் said:

விசயகாந்த் வீட்டில் கூட.

எனக்கு தெரிந்த தமிழ் தேசியம் பேசுபவர்கள் சிலர் வீட்டில் ஆங்கிலம் தான் அவர்கள் வீட்டு மொழி அவர்கள் ஆங்கிலேயர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 

எனக்கு தெரிந்த தமிழ் தேசியம் பேசுபவர்கள் சிலர் வீட்டில் ஆங்கிலம் தான் அவர்கள் வீட்டு மொழி அவர்கள் ஆங்கிலேயர்களா?

தினசரி வாழ்வில் தமிழ் பேசாதவர்கள் உள்ளார்ந்த தமிழ் தேசியவாதிகளாக இருக்க வாய்ப்பில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 

எனக்கு தெரிந்த தமிழ் தேசியம் பேசுபவர்கள் சிலர் வீட்டில் ஆங்கிலம் தான் அவர்கள் வீட்டு மொழி அவர்கள் ஆங்கிலேயர்களா?

சரியாகத்தான் பெயரை வைத்துள்ளீர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டேயிருப்பவன் என..🤦🏼‍♂️

நீங்கள் கற்பனையாக நினைத்துக் கொண்டேயிருப்பதெற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாதல்லவா.. 😀

அந்தக் கற்பனைக்கெல்லாம் ஒரு லைக் வேற 😏

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

சரியாகத்தான் பெயரை வைத்துள்ளீர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டேயிருப்பவன் என..🤦🏼‍♂️

நீங்கள் கற்பனையாக நினைத்துக் கொண்டேயிருப்பதெற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாதல்லவா.. 😀

அந்தக் கற்பனைக்கெல்லாம் ஒரு லைக் வேற 😏

 

***

கபிதன் என்பவரோ 
அவரோடு நெருங்கியவர்களோ 
அவரை பற்றி கூறமுடியாது 

கபிதன் 
இப்படித்தான் செய்வார் 
அப்படிதான் செய்வார் 
இங்குதான் செய்வார் 
அங்குதான் செய்வார் 
என்று ஒரு கற்பனை மனவாந்தி எடுப்பதும் 
அதை பலர் ஆஹா ஓஹோ என்று ஆதரிப்பதும் 
யாழ் களத்தில் வெகுவாக நடக்கிறது 

ஒரு தர்க்க வாதத்துக்கு எந்த இடமும் கொடுக்காது 
ஒரு கற்பனை வாதத்தை திரிக்கு திரி தொடர்வது என்பது 
நேரவிரயம் மட்டுமல்ல நீங்கள் தொடர்ந்து வாசித்தால் 
மூளை விரயம் கூட. 

இதில் ஒரு வேடிக்கையை இன்றுதான் பார்த்தேன் 
தலைப்பு  சார்ந்து இதுவரை ஒரு கருத்து கூட எழுதாதவர்கள் 
இங்கு தனிமனித தாக்குதலுக்கு என்றே வருகிறவர்கள் 
தனிமனித தாக்குதல் பற்றி அறிவுறுத்தி இருக்கிறார்கள்  

எல்லோரும் எல்லா இடத்திலும் 
எல்லா விடயங்களிலும் வல்லுனர்களாக இருக்க முடியாது 

சில இடங்களில் நாங்கள் எல்லோருமே 
சில தவறான எண்ணங்களையும் கருத்துக்களையும் கொண்டிருக்கிறோம் 
பின்னாளில் அல்லது இன்னொருவர் அதை இன்னொரு கோணத்தில் 
விபரிக்கும்போது நாம் தவறான எண்ணங்களுடன் இருந்து இருக்கிறோம் 
என்பதை உணர்ந்து இருக்கிறோம்.

சில விடயங்களை தெரிந்துகொள்ள முயற்சிப்பது 
பூமியே தட்டை என்று நம்புவது கூட எனக்கு தவறாக தெரியவில்லை 
அது ஒரு அடிப்படை நிலை அங்கிருந்துதான் எல்லோரும் வளர்க்கிறோம் 
ஆனால் பூமி உருண்டை என்ற எண்ணம் மீதே குழுவாக கூடி 
இந்த காலத்திலும் குழுவாதம் செய்வது என்பதுக்கான காரணம் புரியவில்லை 

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சரியாகத்தான் பெயரை வைத்துள்ளீர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டேயிருப்பவன் என..🤦🏼‍♂️

நீங்கள் கற்பனையாக நினைத்துக் கொண்டேயிருப்பதெற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாதல்லவா.. 😀

அந்தக் கற்பனைக்கெல்லாம் ஒரு லைக் வேற 😏

இது எமது இனத்தின் சாபக்கேடு

ஒருவர் கள்ளனாக இருக்கலாம்

அதை பரம்பரை பரம்பரையாக தொடரலாம். அவர் வீட்டு நாய்க்குட்டிக்கு கூட வாக்கு கேட்கலாம் வெல்லலாம்.

ஆனால் தேசியத்தை விரும்புபவராக இருந்தால் மட்டும் நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பம் மட்டும் அல்ல உங்கள் குழந்தைகள் பேரப் பிள்ளைகளும் தூயவர்களாக இனத்துக்காக உயிரைக் கூட கொடுக்கக்கூடிய தியாகம் உள்ளவராக வாழ்ந்தால் கூட போதாது நிரூபித்து காட்டணும்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழகன் said:

நேற்று வரை 5% என்று கூறப்பட்டது இன்று ஏறத்தாழ 7% என்றாகியது இனிப்பான செய்தி.

ஆனால் ஒரு கட்சி பாக்கி இல்லாமல் அனைத்து கட்சிகளும் ஏதாவது ஒரு கூட்டணியில் வாக்கு கேட்கும் போது, நாம் மட்டும் தொடர்ந்து தனித்தே போட்டி என்பது உசிதமான முடிவல்ல என்பதே என் எண்ணம்.

2026 லோக்சபா தேர்தலில் எமக்கான கிராக்கி மிக அதிகமாக இருக்கும்.  இதே கூட்டணி பிரிப்பு தொடரும். சட்டசபை தேர்தலில் நான்கு சீட்டுகளை பெற்ற பாரதிய ஜனதா 40 லோக்சபா சீட்டுகளில் 20 ஐ கேட்டாலும் ஆச்சரியமில்லை. ஆனால் நிச்சயம் நமது 7% வாக்கு வங்கி பல இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.

அதிமுக கூட்டணியில் அதிமுக 20 பாஜக 8 நாம் தமிழர் 8 பாமக 4 என்ற ரீதியில் தொகுதி பங்கீடு அமைந்தால், 8 லோக்சபா தொகுதிகளை சொல்லி அள்ளலாம்.

இது மோடி வென்றே ஆக வேண்டிய தேர்தல்.

இல்லாது போனால் அண்ணன் லோக்சபா தேர்தலில் போட்டியிடாது தவிக்குமாறும் கோரப்படலாம். 

நிச்சயம் அண்ணன் போன்ற ஒரு ஆக்சிறந்த  அரசியல் ஆளுமை இதை உணர்து காலம் கருதி முடிவெடுக்கும்.

அவர் எடுக்கும் முடிவை நாம் சமரசம் கேள்விகள் இன்றி ஆதரிக்க வேண்டும். 

ஏற்கனவே கூட்டணி வைத்தவர்கள் பெற்ற பாடங்கள் போதாதா?20 ஆசனங்களைப் பெற்ற பாமகவும்,29 ஆசனங்களைப்பெற்று எதிர்க்கட்சித் தலைவராகவும் வந்த விஜயகாந்தின் பாடம் வரலாறாக இருக்கிறது. அடுத்த தேர்தலில் சீமானுக்கு 60 இடங்களுக்கு மேல் சீற்றுக்களைக் கொடுத்து கூட்டணியில் சேர்த்துக் கொள்ள 2 பெரிய கட்சிகளுமே தயாராக இருப்பார்கள். ஆனால் அதன் பிறகு கழுiது தேயந்து கட்டெறும்பான கதைதான் நடக்கும்.மாற்றம் தேவை என்று வாக்களித்த வாக்காளர்கள் ஏமாற்றமடைய மாட்டார்களா?சீமான் தொடர்ந்து உறுதியாக நின்றால் பதவிகிடைக்கவில்லையே என்று கட்சி அமைப்பாளர்கள் வேறு கட்சிகளுக்குத் தாவலாம் .ஈது வழைமையானது. ஆனால் மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த மக்கள் மாற மாட்டார்கள். நாம் தமிழரின் படிப்படியான வளர்ச்சி அதைத்தான் காட்டுகிறது.இந்த வாக்குசதவீதம் வாக்களித்த மக்களித்த மக்களுக்கு உற்சாகத்தையும் புது வேகத்தையும் கொடுக்கும். தடம்மாறாத பயணம் வெற்றியைக் கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

ஏற்கனவே கூட்டணி வைத்தவர்கள் பெற்ற பாடங்கள் போதாதா?20 ஆசனங்களைப் பெற்ற பாமகவும்,29 ஆசனங்களைப்பெற்று எதிர்க்கட்சித் தலைவராகவும் வந்த விஜயகாந்தின் பாடம் வரலாறாக இருக்கிறது. அடுத்த தேர்தலில் சீமானுக்கு 60 இடங்களுக்கு மேல் சீற்றுக்களைக் கொடுத்து கூட்டணியில் சேர்த்துக் கொள்ள 2 பெரிய கட்சிகளுமே தயாராக இருப்பார்கள். ஆனால் அதன் பிறகு கழுiது தேயந்து கட்டெறும்பான கதைதான் நடக்கும்.மாற்றம் தேவை என்று வாக்களித்த வாக்காளர்கள் ஏமாற்றமடைய மாட்டார்களா?சீமான் தொடர்ந்து உறுதியாக நின்றால் பதவிகிடைக்கவில்லையே என்று கட்சி அமைப்பாளர்கள் வேறு கட்சிகளுக்குத் தாவலாம் .ஈது வழைமையானது. ஆனால் மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த மக்கள் மாற மாட்டார்கள். நாம் தமிழரின் படிப்படியான வளர்ச்சி அதைத்தான் காட்டுகிறது.இந்த வாக்குசதவீதம் வாக்களித்த மக்களித்த மக்களுக்கு உற்சாகத்தையும் புது வேகத்தையும் கொடுக்கும். தடம்மாறாத பயணம் வெற்றியைக் கொடுக்கும்.

இது எனது நிலைப்பாடு அல்ல. ஆனால் அதிமுக+பிஜேபி+அமமுக+பாமக கூட்டணியில் சேரும் நிலையை அண்ணன் எடுத்தால் அது ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை பாதிக்குமா? பாதிக்க கூடாது என்பதே என் வேண்டுதல்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'DMK தனித்து நின்று மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி 36.30% 33.29% 2.47% 2.45% 6.85% AIADMK INC AMMK PMK CPI MNM OMDK BJP NTK IJK CPI(M) SDPI TMC VCK AIS AIMIM PTMK MD MK TMJK GMK TMMK IUML JD(S) MSS MMK KMDK VTPK AIMMK mmK MAK PBK AIFB PDK TVK MVK aTp 888880'

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, விசுகு said:

இந்த தேர்தலில் நான் எதிர்பார்த்த பெறுபேறு இது தான்.

தேசிய கட்சிகள், பல காலாண்டு மக்களுக்கு பழக்கமான கட்சிகள் மற்றும் சாதிய கட்சிகள் அனைத்தையும் தாண்டி 3 இடத்துக்கு அதிலும் தனித்து பணம் மற்றும் இலவசங்களை பரிந்துரைக்காது 

படித்த பண்பான சமுதாய நலன் கொண்ட இளைஞர் இளைஞிகளை மட்டுமே களமிறக்கி இந்த நிலையை அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை. அதிலும் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி.

இவ்வளர்ச்சி எவரை கவருமோ மகிழ்ச்சி அளிக்கிறதோ நிச்சயமாக முதலாவது இரண்டாவது இடத்தில் உள்ளவர்களுக்கு பயத்தை உண்டு பண்ணும்.

https://photos.app.goo.gl/5qZDBUsEnfq52v9W8

டொட். 

வணக்கம் விசுகர்! உங்களிடம் ஒரு கேள்வி.
தமிழ் நாடு இலங்கையை விட பெரியது. சகல வளங்களும் உள்ள நாடு. அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லையென்றும் சொல்வதற்கில்லை.தமிழ்நாட்டில் இரு பெரும் முக்கிய கட்சிகள் பலத்துடன் இருக்கின்றன. அதை விட வடமாநிலத்து யானை பலம் கொண்ட இரு கட்சிகளும் கால் வைக்க எந்தவிலையும் கொடுக்க தயார் நிலையில் இருக்கின்றன.

அப்படியான நாட்டில் சீமான் எனும் மனிதனை அவர் சார்ந்த கட்சியை திட்டியவர்கள் அதிகம். வசைபாடியவர்கள் அதிகம்.அவதூறு பரப்பியவர்கள் அதிகம். .ஏன் யாழ்களத்தில் கூட சீமான் பற்றிய நக்கல் நளினங்களுக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொண்டார்கள். நாம் தமிழர் கட்சி முதுமையான கட்சியும் அல்ல.

அப்படியிருந்தும் நாம் தமிழர் கட்சி எப்படி மூன்றாம் இடத்தை கைப்பற்றியது?

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

நாம் தமிழர் கட்சி எப்படி மூன்றாம் இடத்தை கைப்பற்றியது?

மக்கள் நாங்கள் தமிழர்கள் என உணர்ந்து செயற்பட தொடங்கியுள்ளார்கள்.
திராவிடர்கள் நாங்கள்.... எங்கள் கொள்கை திராவிடக் கொள்கை...    எனக்கூறி... தமிழர்கள் மேலே சவாரி செய்யும் அரசியல் பல வருடங்களாக தொடர்ந்த நிலைமையில்....

சீமான்
தமிழர் நாம் எங்கள் தேசம் தமிழ்த் தேசம் என்ற கொள்கையுடன் வந்ததால் ஒரு தமிழ்த் தேசிய உணர்வு தமிழ் நாட்டில் வேரூன்ற ஆரம்பித்துள்ள நிலையில் இப்படியான மாற்றங்கள் வரும் ஐயா.

அந்த மாற்றம் நிலையெடுக்க பல அழுத்தங்கள் வருவதால்  கால அவகாசம் தேவை
ஆனால் சீமான் மாறாமல் இருக்க வேண்டுமல்லவா

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்! உங்களிடம் ஒரு கேள்வி.
தமிழ் நாடு இலங்கையை விட பெரியது. சகல வளங்களும் உள்ள நாடு. அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லையென்றும் சொல்வதற்கில்லை.தமிழ்நாட்டில் இரு பெரும் முக்கிய கட்சிகள் பலத்துடன் இருக்கின்றன. அதை விட வடமாநிலத்து யானை பலம் கொண்ட இரு கட்சிகளும் கால் வைக்க எந்தவிலையும் கொடுக்க தயார் நிலையில் இருக்கின்றன.

அப்படியான நாட்டில் சீமான் எனும் மனிதனை அவர் சார்ந்த கட்சியை திட்டியவர்கள் அதிகம். வசைபாடியவர்கள் அதிகம்.அவதூறு பரப்பியவர்கள் அதிகம். .ஏன் யாழ்களத்தில் கூட சீமான் பற்றிய நக்கல் நளினங்களுக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொண்டார்கள். நாம் தமிழர் கட்சி முதுமையான கட்சியும் அல்ல.

அப்படியிருந்தும் நாம் தமிழர் கட்சி எப்படி மூன்றாம் இடத்தை கைப்பற்றியது?

கேள்விக்கு நன்றி அண்ணா

இங்கே சிங்களத்தையே அவர்கள் நல்லவர்கள் தான் தமிழர்கள் தான் தேவையற்று சண்டைக்கு போய் அவர்களின் உறவை தடை செய்கிறார்கள் என்பவர்கள், நம்புபவர்கள் இருக்கிறார்கள்

அவர்களிடம் நான் சொல்லும் கருத்து எடுபடுமா? அதை நம்புகிறீர்களா?

ஆனாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.

பட்டறிவு தான் காரணம். ஈழத்து அனுபவம் (தலை வைக்க ஒட்டகத்துக்கு இடம் கொடுத்தது போல்)

தமிழகத்தின் சொந்த அனுபவம் (கன்னடம், பர்மா, பம்பாய் மற்றும் தமிழகத்தின் அனைத்து எல்லைகளிலும் அடி வாங்கியது. மாற்றாந்தாய் பிள்ளையாக நடாத்தப்பட்டது பழிவாங்கப்பட்டது)

இறுதியாக இருக்கும் இந்த ஒரேயொரு மண்ணையும் தமிழையும்    இழந்து விடக்கூடாது என்ற தீர்க்கமான முடிவு தான் காரணம்.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.