Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் சிங்கப்பூர் சிங்கம் பழனி அனந்தியை வசைபாடியது 2021.

சீமானுக்கு தங்கள் நட்பு வட்டத்தை இணைத்து 2010 - 2012 காலம் வரை சீமானுக்கு உயிர் உடல் ஆவி பொருள் என ஐரோப்பிய நாடொன்றில் இருந்து 2போராளிப்பெண்கள் மாதம் 10 பவுண்ஸ் 10 யூரோ என சேகரித்து அனுப்பிக் கொண்டு இருந்தார்கள்.

அந்தத் தோழிகள் இருவரும் அண்ணன் 🐢 மட்டுமே எங்களுக்கான விடிவெள்ளி சூரியன் என்று யெகோவா சகோதரிகள் போல உபதேசித்துக் கொண்டேயிருப்பார்கள்.

அண்ணன் சீமானுக்கு வேண்டியவர்கள் பலரும் ஐரோப்பாவுக்கு (கல்வி சார்ந்தும்) வரும் பலருக்கு தங்க இடம் சுற்ற பணச்செலவு எல்லாம் செய்தார்கள். 

இடையில் ஒரு தம்பி அண்ணனுக்கு  முகவரானார். 

அந்தத் தோழிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்ற தம்பி தோற்றுவிட்டார். 

உடனடியாக அண்ணனும் அந்த தம்பியும் அவ்விரு தோழிகளையும் விபச்சாரிகள் வரிசையில் சேர்த்து ஒலிப்பதிவு ஒன்றை அண்ணன் 🐢சீமான் குரலில் நண்பர்களுக்கும் பொது வெளியிலும் பகிர்ந்தார்கள். 

அவர்களில் ஒருத்தி 90 கோட்டை சமரில் காலொன்றை இழந்தவள். அவளது கால் பற்றியும் அண்ணன் ஒருபடி மேலே போய் பழனியை விஞ்சும் வகையில் பேசியிருந்தார். 

அதுமட்டுமல்ல அவர்களுக்கு பலருடன் கள்ளத் தொடர்பு என்று புரளியையும் பரப்பிய பெரு(சீ) மான். 

அனந்தி பற்றி பழனி பேசியதைக் கேட்டபோது, 

 சீமானை அண்ணை என்றும் கயலை அண்ணி என்று அழைத்து தன் உரிமை பேணும் தம்பி ஒருவரைக் கேட்டேன். ஏன்ரா தம்பி உன்ர கொண்ணன்ர ஆள் இப்படிக் கதைக்கிறார்? 

அந்தத் தம்பி சொன்னான் "அனந்தி கனபேரோடை கள்ளத்தொடர்பு இருக்கு" பழனி சொன்னது சரிதான். 

சீமான் எனும் பொய் மான் பற்றி கருத்துச் சொன்னால் இப்படித்தான் நடக்கும். 

இப்படி நிறைய கதைகள் இருக்கு. இத்தோடு சீமான் ஒலிபரப்பை நிறுத்திக் கொள்கிறேன். 

வாழ்க சீமான் புகழ்.

வளர்க சீமான் பெருமைகள். 

 

ஒருமாதிரி 7பக்கங்களை இழுத்து கொண்டு வந்தாச்சு. அப்பாடா. 😀

Edited by shanthy

  • Replies 275
  • Views 23.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

அவர்கள் ஏன் வாக்குமூலம் தரப்போகிறார்கள். கேபி போல் எல்லாம் முடிந்தபின் தெரியவரும். தெரிய வரமலே போகலாம்.

நீங்கள் போடவும் முடியாது தள்ளவும் முடியாது.

அண்ணை 
கே.பி யின் ஆப்புகளால் எமக்கு நேரிடையாகவே  ஏற்பட்ட ஈடுசெய்யமுடியாத இழப்புக்களை  காலங்கடந்து அறிந்து ஆற்றாமையில்  வருந்தியது போல், சீமான் RAW இன் கையாள் என்பதை காலங்கடந்து  அறிந்துகொள்ளும் ஒரு சாதாரண ஈழ சீமான் ஆதரவாளனுக்கு எவ்வகையான இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்...? 
வண்டிக்கணக்காக திராவிடிய  ஊழல் ஆதாரங்களை, பைல் கட்டுக்களை  சேர்த்துவைத்திருக்கும் இந்திய  மத்திய அரசு கட்டுக்களில் இருந்து  ஒரு பைலை தூக்கி மேசையில் போட்டு மாநில அரசினை ஒற்றை அசைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமளவு பலத்துடன் இருக்கும் போது சீமானை வைத்து தமிழ்நாட்டில் தேசியத்தை காயடிக்க வேண்டிய அவசியமென்ன..?       

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கந்தையா ஐம்பத்தியேழு உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

A,. B. ,என இரு யாழ்கள உறுப்பினர் உண்டு எனவைப்போம்.    இங்கே யாழ்களத்தில்  

திரிகளின் பெயர் மாறிச்செல்லும்போது. ...இந்த இரு கருத்தளாரின்  கருத்துக்களும் மாறிச் செல்ல வேண்டும்   அதாவது.  ஒரு திரியில்  ஒத்தகருத்து உடையவர்களாகவும்...மற்றத்திரியில்  எதிர் கருத்துடையவர்களாயும்  வரவேண்டும்...அல்லது  சில திரிகளில் ஒத்தகருத்துடனும்.  வேறு சில திரிகளில் எதிர்கருத்து  உடையவர்களாயும் வர வேண்டும்  இப்படி  எழுதும்போதுதான் கருதது எழுத சந்தர்ப்பம் கிடைக்கிறது புதிய கருத்துகளும் பிறக்கிறது..இவர்களிருவரும்  எல்லாத்திரிகளிலும்  ஒரே கருத்தை  எழுதுவாதால்  என்ன பயனுண்டு. ?உங்கள்  நிலைப்பாட்டை  வரவேற்கிறேன்.  காரணத்தை  எழுதானால். சரியாகத்தெரியுமிடத்து

எற்றுக்கொள்ள முடியும்..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

அவரை எழுத வேண்டாம் என்று நான் இங்கு எங்கும் எழுதவில்லை 
நான் எழுத மாட்டேன் என்றுதான் எழுதி இருக்கிறேன் 
வீணான பழி சுமத்தி வெறும் கம்பு சுற்றுகிறீர்கள். 

ஆம் நீங்கள் அப்படிக்கூறவில்லை.  அதாவது எழுத வேண்டாமென்று கூறவில்லை. ஆனால்  பொறுப்பிலுள்ளவர்கள்.  இப்படி எழுதுவது  சரியில்லை என்ற கருத்துப்பட  எழுதியுள்ளீர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

ஆம் நீங்கள் அப்படிக்கூறவில்லை.  அதாவது எழுத வேண்டாமென்று கூறவில்லை. ஆனால்  பொறுப்பிலுள்ளவர்கள்.  இப்படி எழுதுவது  சரியில்லை என்ற கருத்துப்பட  எழுதியுள்ளீர்கள்..

 

நான் உங்களுக்கு எனது அனுபவம் அதுவும்  யாழில் சொல்லலாம்

இங்கே சில தாயகத்துக்கான திட்டங்கள் உதவிகள் சார்ந்து

பொறுப்பெடுத்து  செய்ததுண்டு

அந்த நேரங்களில் நான்  எந்த  அரசியல்  விவாதங்களிலும்  ஈடுபட்டதில்லை

காரணம்

எடுத்த  முயற்சி வெற்றி  பெற

அதிகூடிய உதவிகள் பலன்கள் கிடைக்க

அனைவரையும்  உள்  வாங்கவேண்டுமாயின் ......????

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

அதில் ஒருவர் மட்டுஉறுத்தினர் இவர்கள் வாசிப்பு இந்த அளவில்தான் இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

மட்டுயுறுத்தினருக்கும்  கருத்துண்டு ...பச்சைப்புள்ளிகளுமுண்டு ...எனவே ..குத்த முடியும். .....மேலும்   யாராயினும் ஒரு மட்டுயுறுத்தினர்...ஒரு கள உறுப்பினரின்  கருத்தை விரும்பியிருத்து ...அத்தக்கருத்து யாழ்கள விதியை மீறுமாயின்  வெட்டத்  /நீங்க  தான்வேண்டும்...அதே நேரம்  ஒரு மட்டுயுறுத்தினர். ஒரு கள உறுப்பினரின்

கருத்தை  விருப்பியிராது.  அந்தக்கருத்து. களவிதிக்கு உள்பட்டுயிருப்பின்  வெட்ட/நீங்க முடியாது.  

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

 

நான் உங்களுக்கு எனது அனுபவம் அதுவும்  யாழில் சொல்லலாம்

இங்கே சில தாயகத்துக்கான திட்டங்கள் உதவிகள் சார்ந்து

பொறுப்பெடுத்து  செய்ததுண்டு

அந்த நேரங்களில் நான்  எந்த  அரசியல்  விவாதங்களிலும்  ஈடுபட்டதில்லை

காரணம்

எடுத்த  முயற்சி வெற்றி  பெற

அதிகூடிய உதவிகள் பலன்கள் கிடைக்க

அனைவரையும்  உள்  வாங்கவேண்டுமாயின் ......????

விசுகுயண்ணை  இது உங்கள் நிலைப்பாடு ...மேலும் இந்த யாழ்களத்திலுள்ள உறுப்பினர் யாரகிலும் அரசியல் விவாதங்களில். கலந்து கொள்ளாதேயெனக் உங்களைக்கேட்டார்காளா?.  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

விசுகுயண்ணை  இது உங்கள் நிலைப்பாடு ...மேலும் இந்த யாழ்களத்திலுள்ள உறுப்பினர் யாரகிலும் அரசியல் விவாதங்களில். கலந்து கொள்ளாதேயெனக் உங்களைக்கேட்டார்காளா?.  

 

இல்லை

அது நானாக  எடுத்தமுடிவு

உண்மையை சொன்னால்  உறவுகளுக்கே இன்று  நான் எழுதிய பின்னர் தான் தெரியக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 10 பக்கத்தை தான்டவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

இன்னும் 10 பக்கத்தை தான்டவில்லை.

எப்பிடியும்… வாற வெள்ளிக்கிழமைக்குள்ளை தாண்ட வைச்சிடலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

இதை யாரும் மறுக்கவில்லையே மருதர்?

😂 இதை யாரும்மறுப்பதில்லை என்பது மருது போன்றோருக்கும் தெரியும்!

ஆனால் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் மூலைக்குள் மாட்டிக் கொண்டால் உடனே போர்த்திக் கொள்கிற கவசம் தான் இந்த "மாவீரர், போராளி, புலிகளின் தியாகம் -அதைக் கொச்சைப் படுத்துறாங்கள்" என்ற கோசம்.

எனக்கு அமரர் கருணாநிதி "ஐயோ கொல்றாங்களே!" என்று கத்தியது தான் நினைவுக்கு வரும் இப்படியான கோஷங்களைக் கேட்கும் போது!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை 
கே.பி யின் ஆப்புகளால் எமக்கு நேரிடையாகவே  ஏற்பட்ட ஈடுசெய்யமுடியாத இழப்புக்களை  காலங்கடந்து அறிந்து ஆற்றாமையில்  வருந்தியது போல், சீமான் RAW இன் கையாள் என்பதை காலங்கடந்து  அறிந்துகொள்ளும் ஒரு சாதாரண ஈழ சீமான் ஆதரவாளனுக்கு எவ்வகையான இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்...? 
வண்டிக்கணக்காக திராவிடிய  ஊழல் ஆதாரங்களை, பைல் கட்டுக்களை  சேர்த்துவைத்திருக்கும் இந்திய  மத்திய அரசு கட்டுக்களில் இருந்து  ஒரு பைலை தூக்கி மேசையில் போட்டு மாநில அரசினை ஒற்றை அசைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமளவு பலத்துடன் இருக்கும் போது சீமானை வைத்து தமிழ்நாட்டில் தேசியத்தை காயடிக்க வேண்டிய அவசியமென்ன..?       

வணக்கம் அக்னி,

ஏனையோரை போல சீமான் ஒப்புதல் வாக்குமூலம் தரும் வரை பொறுப்போம் அதன் பின் அவருக்கு ஆப்படிப்போம் என்று எழுதாமல் தர்க ரீதியாக இந்த கேள்விகளை வைத்தமைக்கு நன்றி.

நீங்கள் இரு கேள்விகள் கேட்கிறீகள். இலகு கருதி அவற்றை முறை மாறி கையாள்கிறேன்.

மாநில அரசுகளை கையில் போட்டு கொள்ள முடியும் போது ரோவுக்கு தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை காயடிக்க வேண்டிய தேவை என்ன?

1. தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் இந்திய ஒருமைபாட்டுக்கு சார்பானவை. திராவிட நாடு கோரிய அண்ணாவை கூட, ஒரு கட்டத்தில் (சீனப்போர்) இந்திய புலனாய்வு தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து, அவர் மாநில சுயாட்சியில் சுருங்கி போனார்.  ஆகவே தமிழக கட்சிகள் எதையும் வழிக்கு கொண்டுவர எந்த பைலும் தேவைப்படாது, அவர்கள் ஏலவே றோவின் வழியில்தான் உள்ளார்கள்.

2. தமிழ் தேசியம் என்பது அப்படி அல்ல. காலத்துக்கு காலம் றோவின் கட்டுபாட்டுக்கு அப்பாற்பட்ட ஆயுத சக்திகளும், அரசியல் சக்திகளும் அதை முன்னெடுக்கிறன. றோ அதை ஆர்வமாக கவனிக்கும். தமிழரசன் போன்றோர் ஆபத்து என உணர்ந்து போட்டுத்தள்ளி விடும். ஐயா நெடுமாறன், மணியரசன் போன்றோரை உன்னிப்பாக கவனிக்கும் ஆனால் அவர்களில் கை வைக்க வேண்டிய தேவை வரவில்லை, ஏனெனில் அவர்கள் ஒரு சக்தியாக வளரவும் இல்லை, தேர்தல் அரசியலில் ஈடுபடவும் இல்லை, இந்திய ஒருமைப்பாட்டை எதிர்த்து ஒரு சக்தியாக வளரும் வாய்ப்பும் அவர்கள் அரசியலுக்கு இல்லை. ஆனால் கவனிப்பு தொடரும்.

3. இப்போ மே 2009 க்கு பின்னான தமிழகத்துக்கு போவோம். தமிழக்கதில் தமிழ் தேசிய உணர்வோடு எப்போதும் இருக்கும் 5% மக்கள் அதி கொதி நிலையில் இருக்கிறார்கள். காங்கிரஸ்காரர், சங்கிகள் தவிர, ஏனையோர் இலங்கையில் நடந்தது அநியாயம் என்றும். கருணாநிதி நடந்து கொண்ட விதம் பிழையானது என்றும் கருதுகிறார்கள். இந்த நீறு பூத்த நெருப்புக்கு மேலேதான் ஆரம்பகால நாம் தமிழர் எனும் பெற்றோல் ஊற்றபடுகிறது.

4. இந்த கட்டத்தில் நாம் தமிழரை சீமான் என்ற திரை பிரபலத்தை, மேடை பேச்சாளரை முன்னிறுத்தி, பின்னே நின்று இயக்குகிறார் முத்துகுமார் என்பார். இவர் ஆயுத வழி தமிழ் தேசிய முனைப்பு உடையவர். தமிழ் நாட்டில் தமிழ் ஆயுத குழுவில் இருந்து பின் வன்னி சென்று, அங்கே ஐந்து வருடம் இருந்து, சில வேலை திட்டங்களுடன் தமிழ்நாடு வருகிறார். அந்த வேலை திட்டம் - தமிழ் நாட்டில் ஒரு உண்மையான, றோவின் ஆழுகைக்கு அப்பாற்பட்ட, ஜன ரஞ்சக தமிழ் தேசிய அமைப்பை உருவாக்குவது. இந்த வேலை திட்டத்தை கொடுத்தவர்கள் அழிந்து போனாலும், திட்டத்தை நகர்த்த முனைகிறார் முத்துகுமார் (இங்கே தளபதி சூசையின் ஒலி நாடாவை பொருத்த புள்ளிகள் இணையும், படம் தெளிவாகும்).

5. இதை, இதனால் உருவாக கூடிய ஆபத்தை றோ உணர்ந்து கொள்கிறது. தமது கட்டுபாட்டில் இல்லாத ஒரு அமைப்பு 5% வாக்காளரில் தொடங்கி, தொடர்ந்து தூய அரசியல் செய்தால், தமிழ் நாட்டில் வாக்காளருக்கு ஏலவே இருக்கும் கட்சிகள் மீதான வெறுப்பு, ஊழல், இந்தி எதிர்ப்பு இவற்றை எல்லாம் வைத்து பார்த்தால் இந்த கட்சி ஒரு பெரும் சக்தியாக உருவாக அதிகம் வாய்ப்புகள் உள்ளது.

6. ஆகவே நாத வை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்றும் அதை வைத்தே இன்னுமொரு தூய தமிழ் தேசிய அரசியல் சக்தி தமிழ்நாட்டில் எழாதவாறு காயடிப்பது என்றும் முடிவெடுத்து நகர்கிறார்கள்.

7. இதற்கு சீமானும் முத்து குமாரும் ஆரம்பத்தில் ஒத்துகொள்ளவில்லை. வன்னியில் பயிற்றபட்ட முத்துகுமாரை வழிக்கு கொண்டுவர முடியாது என்பதை றோ புரிந்து கொள்கிறது. முத்துகுமாரின் பிரசன்னத்தை அகற்றிவிட்டால். அவரளவுக்கு உரமேறிப் போகாத சீமானை வழிக்கு கொண்டு வருவது இலகுவாகும். தவிரவும் சீமான் பிரபலம். முத்து குமார் ஏற்கனவே தேசத்துரோக வழக்கில் இருப்பவர். சாவை யாரும் கண்டு கொள்ள மாட்டர்கள்.

8. முத்துகுமாரை போட்டு - சீமானுக்கு பயத்தை கண்ணில் காட்டி - கட்சியையும் அவரையும் கட்டுப்பாட்டில் எடுக்கிறது றோ.

9. இப்போ றோவுக்கு ஒரு கவலையும் இல்லை. 2009 இல் மட்டுபட்ட அளவிலாவது கனன்ற தமிழ் தேசிய உணர்வுக்கு லாடம் கட்டியாயிற்று.வேறு எவர் தமிழ் தேசிய அரசியலை இனி கையில் எடுத்தும் தம் கட்டுப்பாட்டை மீறி போக முடியாது. அப்படி எழும் சக்திகளை சீமானை கொண்டு அடக்கி விடலாம். எப்படி திராவிட, கம்யூனிச கொள்கை கட்சிகளை தம் வழிக்கு கொண்டு வந்தார்களோ அப்படி தமிழ் தேசிய அரசியலையும் கொண்டு வந்தாயிற்று.  

இதுதான் ஏன் றோ சீமான் மூலம் தமிழ் நாட்டில் தமிழ் தேசிய அரசியலை காயடிக்கிறது என்பதற்கான பதில். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

மட்டுயுறுத்தினருக்கும்  கருத்துண்டு ...பச்சைப்புள்ளிகளுமுண்டு ...எனவே ..குத்த முடியும். .....மேலும்   யாராயினும் ஒரு மட்டுயுறுத்தினர்...ஒரு கள உறுப்பினரின்  கருத்தை விரும்பியிருத்து ...அத்தக்கருத்து யாழ்கள விதியை மீறுமாயின்  வெட்டத்  /நீங்க  தான்வேண்டும்...அதே நேரம்  ஒரு மட்டுயுறுத்தினர். ஒரு கள உறுப்பினரின்

கருத்தை  விருப்பியிராது.  அந்தக்கருத்து. களவிதிக்கு உள்பட்டுயிருப்பின்  வெட்ட/நீங்க முடியாது.  

 

 

2 hours ago, Kandiah57 said:

ஆம் நீங்கள் அப்படிக்கூறவில்லை.  அதாவது எழுத வேண்டாமென்று கூறவில்லை. ஆனால்  பொறுப்பிலுள்ளவர்கள்.  இப்படி எழுதுவது  சரியில்லை என்ற கருத்துப்பட  எழுதியுள்ளீர்கள்..

அந்த கருத்துப்பட நான் எழுதியதை ஒருக்கா குவாட் பண்ணுங்கள் ...

இனி என்ன மட்டுறுத்தினர்  பச்சை போட கூடாது 
கருத்து எழுத கூடாது ...

என்று நான் எழுதியதாக உறுட்ட போகிறீர்களா?

8 hours ago, shanthy said:

சீமானின் சிங்கப்பூர் சிங்கம் பழனி அனந்தியை வசைபாடியது 2021.

சீமானுக்கு தங்கள் நட்பு வட்டத்தை இணைத்து 2010 - 2012 காலம் வரை சீமானுக்கு உயிர் உடல் ஆவி பொருள் என ஐரோப்பிய நாடொன்றில் இருந்து 2போராளிப்பெண்கள் மாதம் 10 பவுண்ஸ் 10 யூரோ என சேகரித்து அனுப்பிக் கொண்டு இருந்தார்கள்.

அந்தத் தோழிகள் இருவரும் அண்ணன் 🐢 மட்டுமே எங்களுக்கான விடிவெள்ளி சூரியன் என்று யெகோவா சகோதரிகள் போல உபதேசித்துக் கொண்டேயிருப்பார்கள்.

அண்ணன் சீமானுக்கு வேண்டியவர்கள் பலரும் ஐரோப்பாவுக்கு (கல்வி சார்ந்தும்) வரும் பலருக்கு தங்க இடம் சுற்ற பணச்செலவு எல்லாம் செய்தார்கள். 

இடையில் ஒரு தம்பி அண்ணனுக்கு  முகவரானார். 

அந்தத் தோழிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்ற தம்பி தோற்றுவிட்டார். 

உடனடியாக அண்ணனும் அந்த தம்பியும் அவ்விரு தோழிகளையும் விபச்சாரிகள் வரிசையில் சேர்த்து ஒலிப்பதிவு ஒன்றை அண்ணன் 🐢சீமான் குரலில் நண்பர்களுக்கும் பொது வெளியிலும் பகிர்ந்தார்கள். 

அவர்களில் ஒருத்தி 90 கோட்டை சமரில் காலொன்றை இழந்தவள். அவளது கால் பற்றியும் அண்ணன் ஒருபடி மேலே போய் பழனியை விஞ்சும் வகையில் பேசியிருந்தார். 

அதுமட்டுமல்ல அவர்களுக்கு பலருடன் கள்ளத் தொடர்பு என்று புரளியையும் பரப்பிய பெரு(சீ) மான். 

அனந்தி பற்றி பழனி பேசியதைக் கேட்டபோது, 

 சீமானை அண்ணை என்றும் கயலை அண்ணி என்று அழைத்து தன் உரிமை பேணும் தம்பி ஒருவரைக் கேட்டேன். ஏன்ரா தம்பி உன்ர கொண்ணன்ர ஆள் இப்படிக் கதைக்கிறார்? 

அந்தத் தம்பி சொன்னான் "அனந்தி கனபேரோடை கள்ளத்தொடர்பு இருக்கு" பழனி சொன்னது சரிதான். 

சீமான் எனும் பொய் மான் பற்றி கருத்துச் சொன்னால் இப்படித்தான் நடக்கும். 

இப்படி நிறைய கதைகள் இருக்கு. இத்தோடு சீமான் ஒலிபரப்பை நிறுத்திக் கொள்கிறேன். 

வாழ்க சீமான் புகழ்.

வளர்க சீமான் பெருமைகள். 

 

ஒருமாதிரி 7பக்கங்களை இழுத்து கொண்டு வந்தாச்சு. அப்பாடா. 😀

இதுக்கு முன்னர் நீங்கள் சீமானை எதிர்க்கவில்லையா?
இப்போ இப்படி நடந்ததால்தான் சீமானை எதிர்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் முழு ஆப்பும் விளங்கும் போது அதனால் ஒரு ஈழத்தமிழன்னுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

1. இந்த கேள்வி என்னை சாத்திரம் கூறுமாறு கேட்கிறது. என்னிடம் கைவசம் கால இயந்திரம் ஏதும் இல்லை. ஆனால் சிலதை தர்க்க அடிப்படையில் முன்வைக்கிறேன்.

பாதிப்பு 1

2. தமிழ் தேசிய அரசியலின் தலைமையை தனது கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது அமிர் காலத்தில் இருந்து றோவின் எண்ணம். அதற்கு விலை போகாத ஒரே தலைமை தலைவர். மிகவும் பிரயத்தனப்பட்டு அவரை அழித்த பின் இன்னுமொரு சுயாதீனமான தமிழ் தேசிய தலைமை இந்தியாவில் மட்டும் அல்ல, இலங்கையிலும், புலம்பெயர் நாட்டிலும் உருவாக கூடாது என்பதிலும் றோ அக்கறையாக உள்ளது. ஆகவே தமிழ் தேசியத்தின் ஒற்றை தலைமையாக சீமானை முன்னிறுத்துகிறது றோ.

3. எதனால் தலைவர் 86 இல் தமிழ் நாட்டை வெளியேறினார்? இப்படி ஒரு அழுத்தத்தின் கீழ் இருந்து தான் இந்த இனத்திற்கு விசுவாசமாக தலைமை செய்ய முடியாது என்றுதானே?

4. ஒரு கூட்டமைவு பாதையை தெரிவு செய்யாமல் பல புலம்பெயர் அமைப்புகளுடன் சீமான் முரண்படவும் தன்னை உலக தமிழ் தேசியத்தின் ஏக தலைமையாக அவர் முன்னிறுத்துவதே காரணம். சீமான் உலக தமிழ் தேசிய தலைமையாக வேண்டும் என்பது சீமானின் ஆசை என்பதை விட றோவின் ஆசை. சீமானின் றோவின் திட்டம் unchecked ஆக நிறைவேறும் என்றால் -

5. உலக தமிழ் தேசிய தலைமையாக, தமிழ் நாட்டில் இருந்து இயங்கும், றோவின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு மனிதன்/அமைப்பு இருக்கும்.

6. இது சாதாரண ஈழத்தமிழனுக்கு, அவனின் நலனுக்கு ஏன் ஆப்பு என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

பாதிப்பு 2

1. திமுக நாடகம் ஆடினாலும். தமிழ் நாட்டில் ஈழ ஆதரவு நிலையில்தான் எப்போதும் திமுக அடிமட்டம் இருந்தது. அதே போலத்தான் நாயக்கர் உட்பட்ட தெலுங்கு பூர்வீக சாதிகளும். சீமான் கையில் எடுக்கும் அரசியல் இவர்களை 100% புலிகளுக்கும், போராட்டத்துக்கும், ஏன் ஈழத்தமிழருக்கே எதிராக திருப்புகிறது.

2. நன்றி கெட்ட ஈழ அகதிகள் என்று அவர்களும், அடிமைகள், வந்தேறிகள் என்று தம்பிகளும், சில புலம்பெயர் சொங்கிகளும் சமூக வலை எங்கும் அடித்து கொள்கிறார்கள். இப்படி ஒரு பெரும் பகுதியை தமிழ் நாட்டில் பகைத்து கொள்வது, அதுவும் சக தமிழனையே பகைத்து கொள்வது, ஈழத்தமிழனின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்பது என் துணிபு.

பாதிப்பு 3

1. முன்னர் பதிந்தது போல - திமுகவை வீணாக சீண்டி “ சீமானினை எதிர்க்க புலிகளை, போராட்டத்தின் இமேஜை தமிழகத்தில் சிதைப்பதுதான் ஒரே வழி” என்ற நிலைக்கு சீமான் திமுகவை தள்ளிவிட்டுள்ளர். இதுவும் தனது வேலையை திமுக மூலம் சாதிக்கும் றோவின் கைங்காரியமே. இது தனியே தி மு க மட்டும் அல்ல, காங்கிரஸ், பாஜக, அதிமுக, எல்லாரும் இதில் இணைந்து கொள்கிறார்கள். 5% தம்பிகள் எதிர் இத்தனை கட்சிகளின் கூட்டு பிரச்சார பலம். அத்தனை பலமும் ஈழ விடுதலை போராட்டம் வன்முறை விரும்பிகளால் நடத்தபட்ட வெறி ஆட்டம் என்ற பிரசாரத்தை தமிழ் நாட்டில் மூலை முடுக்கு எங்கும் கொண்டு சேர்க்கும். சேர்க்கத்தொடங்கி விட்டது. 1990 ஐ மையப்படுத்தி முஸ்லிம்களை தனியா கையாள்கிறார்கள்.

இதை எப்படி எதிர்ப்பது என்பது கூட பாவம் புது பேட்ஜ் தம்பிகளுக்கு தெரியவில்லை.

இதன் விளைவு? ஈழம் பற்றிய புரிதல் இல்லாத கோடிக்கணக்கான மக்களுக்கு மிக பிழையான விம்பம் பதிய வைக்கப்படுகிறது.

ஒரு சாதாரண ஈழத்தமிழனின் அரசியலுக்கு இதையும் பாதிப்பாகவே கருத முடியும்.

முடிவாக சீமானின் ஆப்பு விளங்கும் தறுவாயில் ஒரு சாதாரண ஈழத்தமிழனின் பெற்றோல், அரிசி விலையில் அது தாக்கத்தை ஏற்படுத்தாது போகலாம், காணி, குடியேற்றம், வேலை, இவற்றில் கூட அது பாதிப்பை ஏற்படுத்தாது போகலாம். ஆனால் ஈழத்தமிழரை “ஈழத்தமிழர்” ஆக அடையளப்படுத்தி வைத்திருக்கும் தமிழ் தேசிய அரசியலுக்கு இல்லை தமிழ் தேசியம் என்ற அரசியல் எண்ணகருவுக்கே அது ஒரு சாவு மணியாக அமையும்.

7 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை 
கே.பி யின் ஆப்புகளால் எமக்கு நேரிடையாகவே  ஏற்பட்ட ஈடுசெய்யமுடியாத இழப்புக்களை  காலங்கடந்து அறிந்து ஆற்றாமையில்  வருந்தியது போல், சீமான் RAW இன் கையாள் என்பதை காலங்கடந்து  அறிந்துகொள்ளும் ஒரு சாதாரண ஈழ சீமான் ஆதரவாளனுக்கு எவ்வகையான இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்...? 
வண்டிக்கணக்காக திராவிடிய  ஊழல் ஆதாரங்களை, பைல் கட்டுக்களை  சேர்த்துவைத்திருக்கும் இந்திய  மத்திய அரசு கட்டுக்களில் இருந்து  ஒரு பைலை தூக்கி மேசையில் போட்டு மாநில அரசினை ஒற்றை அசைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமளவு பலத்துடன் இருக்கும் போது சீமானை வைத்து தமிழ்நாட்டில் தேசியத்தை காயடிக்க வேண்டிய அவசியமென்ன..?       

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பெண்கள் உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் எழுதுவது - அதுவும் அரசியல் திரிகளில் எழுதுவது - குறைவாகவே இருக்கிறது (வேலைக்கும் போய் வீட்டில் இருக்கிறவர்களுக்கும் பராமரிப்பு வேலைகள் செய்யவே பெண்களுக்கு நேரம் சரியாக இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது).

இந்த நிலையில், "இங்கே வந்து எழுதாதீர்கள் என்று நேரடியாகச் சொல்லா விட்டாலும், "இது உங்களுக்கு நல்லதில்ல, சொல்லீட்டேன்!" என்பது   அன்பான patronizing ஆலோசனையா அல்லது இனிப்புத் தடவிய மிரட்டலா என்பது விளங்கவில்லை!🤔 .

இரண்டுமே தவறு தான் - சாந்தி, சகாரா போன்றோர் தொடர்ந்து எல்லாப் பகுதிகளிலும் எழுதுங்கள். ரதியும் மீண்டும் எழுத வேண்டும்! 

58 minutes ago, goshan_che said:

சீமானின் முழு ஆப்பும் விளங்கும் போது அதனால் ஒரு ஈழத்தமிழன்னுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

1. இந்த கேள்வி என்னை சாத்திரம் கூறுமாறு கேட்கிறது. என்னிடம் கைவசம் கால இயந்திரம் ஏதும் இல்லை. ஆனால் சிலதை தர்க்க அடிப்படையில் முன்வைக்கிறேன்.

பாதிப்பு 1

2. தமிழ் தேசிய அரசியலின் தலைமையை தனது கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது அமிர் காலத்தில் இருந்து றோவின் எண்ணம். அதற்கு விலை போகாத ஒரே தலைமை தலைவர். மிகவும் பிரயத்தனப்பட்டு அவரை அழித்த பின் இன்னுமொரு சுயாதீனமான தமிழ் தேசிய தலைமை இந்தியாவில் மட்டும் அல்ல, இலங்கையிலும், புலம்பெயர் நாட்டிலும் உருவாக கூடாது என்பதிலும் றோ அக்கறையாக உள்ளது. ஆகவே தமிழ் தேசியத்தின் ஒற்றை தலைமையாக சீமானை முன்னிறுத்துகிறது றோ.

3. எதனால் தலைவர் 86 இல் தமிழ் நாட்டை வெளியேறினார்? இப்படி ஒரு அழுத்தத்தின் கீழ் இருந்து தான் இந்த இனத்திற்கு விசுவாசமாக தலைமை செய்ய முடியாது என்றுதானே?

4. ஒரு கூட்டமைவு பாதையை தெரிவு செய்யாமல் பல புலம்பெயர் அமைப்புகளுடன் சீமான் முரண்படவும் தன்னை உலக தமிழ் தேசியத்தின் ஏக தலைமையாக அவர் முன்னிறுத்துவதே காரணம். சீமான் உலக தமிழ் தேசிய தலைமையாக வேண்டும் என்பது சீமானின் ஆசை என்பதை விட றோவின் ஆசை. சீமானின் றோவின் திட்டம் unchecked ஆக நிறைவேறும் என்றால் -

5. உலக தமிழ் தேசிய தலைமையாக, தமிழ் நாட்டில் இருந்து இயங்கும், றோவின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு மனிதன்/அமைப்பு இருக்கும்.

6. இது சாதாரண ஈழத்தமிழனுக்கு, அவனின் நலனுக்கு ஏன் ஆப்பு என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

பாதிப்பு 2

1. திமுக நாடகம் ஆடினாலும். தமிழ் நாட்டில் ஈழ ஆதரவு நிலையில்தான் எப்போதும் திமுக அடிமட்டம் இருந்தது. அதே போலத்தான் நாயக்கர் உட்பட்ட தெலுங்கு பூர்வீக சாதிகளும். சீமான் கையில் எடுக்கும் அரசியல் இவர்களை 100% புலிகளுக்கும், போராட்டத்துக்கும், ஏன் ஈழத்தமிழருக்கே எதிராக திருப்புகிறது.

2. நன்றி கெட்ட ஈழ அகதிகள் என்று அவர்களும், அடிமைகள், வந்தேறிகள் என்று தம்பிகளும், சில புலம்பெயர் சொங்கிகளும் சமூக வலை எங்கும் அடித்து கொள்கிறார்கள். இப்படி ஒரு பெரும் பகுதியை தமிழ் நாட்டில் பகைத்து கொள்வது, அதுவும் சக தமிழனையே பகைத்து கொள்வது, ஈழத்தமிழனின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்பது என் துணிபு.

பாதிப்பு 3

1. முன்னர் பதிந்தது போல - திமுகவை வீணாக சீண்டி “ சீமானினை எதிர்க்க புலிகளை, போராட்டத்தின் இமேஜை தமிழகத்தில் சிதைப்பதுதான் ஒரே வழி” என்ற நிலைக்கு சீமான் திமுகவை தள்ளிவிட்டுள்ளர். இதுவும் தனது வேலையை திமுக மூலம் சாதிக்கும் றோவின் கைங்காரியமே. இது தனியே தி மு க மட்டும் அல்ல, காங்கிரஸ், பாஜக, அதிமுக, எல்லாரும் இதில் இணைந்து கொள்கிறார்கள். 5% தம்பிகள் எதிர் இத்தனை கட்சிகளின் கூட்டு பிரச்சார பலம். அத்தனை பலமும் ஈழ விடுதலை போராட்டம் வன்முறை விரும்பிகளால் நடத்தபட்ட வெறி ஆட்டம் என்ற பிரசாரத்தை தமிழ் நாட்டில் மூலை முடுக்கு எங்கும் கொண்டு சேர்க்கும். சேர்க்கத்தொடங்கி விட்டது. 1990 ஐ மையப்படுத்தி முஸ்லிம்களை தனியா கையாள்கிறார்கள்.

இதை எப்படி எதிர்ப்பது என்பது கூட பாவம் புது பேட்ஜ் தம்பிகளுக்கு தெரியவில்லை.

இதன் விளைவு? ஈழம் பற்றிய புரிதல் இல்லாத கோடிக்கணக்கான மக்களுக்கு மிக பிழையான விம்பம் பதிய வைக்கப்படுகிறது.

ஒரு சாதாரண ஈழத்தமிழனின் அரசியலுக்கு இதையும் பாதிப்பாகவே கருத முடியும்.

முடிவாக சீமானின் ஆப்பு விளங்கும் தறுவாயில் ஒரு சாதாரண ஈழத்தமிழனின் பெற்றோல், அரிசி விலையில் அது தாக்கத்தை ஏற்படுத்தாது போகலாம், காணி, குடியேற்றம், வேலை, இவற்றில் கூட அது பாதிப்பை ஏற்படுத்தாது போகலாம். ஆனால் ஈழத்தமிழரை “ஈழத்தமிழர்” ஆக அடையளப்படுத்தி வைத்திருக்கும் தமிழ் தேசிய அரசியலுக்கு இல்லை தமிழ் தேசியம் என்ற அரசியல் எண்ணகருவுக்கே அது ஒரு சாவு மணியாக அமையும்.

 

. நன்றி கெட்ட ஈழ அகதிகள் என்று அவர்களும், அடிமைகள், வந்தேறிகள் என்று தம்பிகளும், சில புலம்பெயர் சொங்கிகளும் சமூக வலை எங்கும் அடித்து கொள்கிறார்கள். 

நாம் உங்கள் கருத்து களுடன் முரன்படுகின்றோன். ஏனெனில் சமூக வலைதளங்களில் கதைப்பதை ஒரு காரணம் ஆக கூறுவது ஏற்புடையது அல்ல. (முகம் காட்டாது நான் கூட வேறு பெயர்கள் மூலம் ஆதாரம் இல்லாமல் ஆதரவாகவும்      எதிராகவும் எழுத முடியும் ஆகவே உங்கள்  எதிர்ப்பு எப்படி என புரிந்து விட்டது. 200ரூபாக்கு இதைவிட வடிவாக 👂🐽வைத்து எழுதுவார்கள்)  

Edited by appan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, appan said:

. நன்றி கெட்ட ஈழ அகதிகள் என்று அவர்களும், அடிமைகள், வந்தேறிகள் என்று தம்பிகளும், சில புலம்பெயர் சொங்கிகளும் சமூக வலை எங்கும் அடித்து கொள்கிறார்கள். 

நாம் உங்கள் கருத்து களுடன் முரன்படுகின்றோன். ஏனெனில் சமூக வலைதளங்களில் கதைப்பதை ஒரு காரணம் ஆக கூறுவது ஏற்புடையது அல்ல. (முகம் காட்டாது நான் கூட வேறு பெயர்கள் மூலம் ஆதாரம் இல்லாமல் ஆதரவாகவும்      எதிராகவும் எழுத முடியும் ஆகவே உங்கள்  எதிர்ப்பு எப்படி என புரிந்து விட்டது) 

வணக்கம் அப்பன்,

இங்கே எதையும் ஆதாரம் என்று காட்டவில்லை. சமூகவலை குப்பைகளை இங்கே ஆதாரம் என நான் இணைக்கப்போவதுமில்லை.

சமூகவலைதத்தில் என்ன நடக்கிறது என்பதை அவரவர் போய் பார்த்துகொள்ளலாம்.

கோஷான் சொல்வது பொய்யா மெய்யா என்பதை அறியலாம்.

சமூகவலையில் மட்டுமா யாழில் அப்பனும்தான், கோஷானும்தான் ஒரு முகம்காட்டாத ஐடி🤣.

அக்னி சமூகவலையை அவதானிப்பவர் அவருக்கு நான் சொன்னது விளங்கும்.

அதே போல் உங்களுக்கும் என் எதிர்ப்பு எப்படி என (உங்கள் அளவில்) புரிந்து விட்டது என்கிறீகள். 

பிறகேன் மினகெடுவான். 

பிகு: நான் எழுதிய எந்த தர்கத்த்தையும் தர்கரீதியாக அணுகாமல், மூக்கு சொத்தி, நாக்கு சொத்தி என்று எழுதினாலும் பொறுமையாக உங்களுக்கு பதில் சொல்லியுள்ளேன்.

ஆனால் தொடர்ந்தும் இப்படி என் பொறுமையை சோதித்தால் “15 பச்சை புள்ளி எடுத்தவருக்கெல்லாம் பெற்றோல்மேக்ஸ் விற்பதில்லை” என்ற முடிவுக்கு நான் தள்ளப்படலாம் 🤣.

கோசான் என்னதான் வேலையில்லாத வீணண் என்றாலும் சிறுபிள்ளைதனமான கேள்விகளுக்கு ஒரு அளவுக்குத்தான் பதில் சொல்ல முடியும்.

நியாயமான கருத்தாடலுக்கு என் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். பந்தி, பந்தியாக பதிலும் கிடைக்கும்🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு (Research and Analysis Wing) (R&AW) (ISO: Anusandhān aur Viślēṣaṇ Viṅg), இதனை சுருக்கமாக ரா (R&AW) என்பர். இந்தியாவின் நலனனைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதிசெயல்களை கண்காணிப்பதற்கும், தடை செய்யவும், சதிகாரர்களை கண்டறிந்து கைது செய்தற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும். முன்னர் இந்திய உளவு அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உளவுப் பணி மேற்கொண்டிருந்தது. 1968 முதல் புதிதாக துவகக்ப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுபாய்வு அமைப்பு வெளிநாடுகளில் மட்டும் தனது உளவுப் பணியை மேற்கொள்கிற்து. இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. இதன் தற்போதைய தலைவர் சமந்த் கோயல் அவார்.[3]இந்திய அரசின் செயலாளர் பதவி தரத்தில் உள்ள ரா அமைப்பின் தலைவர், இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு தனது அறிக்கைகளை பிரதமருக்கு அனுப்புவர்.

https://ta.wikipedia.org/wiki/ஆராய்ச்சி_மற்றும்_பகுப்பாய்வு_அமைப்பு

இந்தியாவின் உள்ளேயும் R&AW செயற்படுமா?!
அதற்கு வேறு உளவுப் பிரிவுகள் உண்டெல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின் தமிழக முதல்வர். நரேந்திர மோடி இந்திய பிரதமர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (கோல்மால் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதுதான் உண்மை.

இவர்களை இந்திய குடிமக்கள் சந்திப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.

சீமான் தமிழக முதல்வரை சந்தித்தாரே தவிர, திமுக தலைவரை அல்ல. 😃

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு (Research and Analysis Wing) (R&AW) (ISO: Anusandhān aur Viślēṣaṇ Viṅg), இதனை சுருக்கமாக ரா (R&AW) என்பர். இந்தியாவின் நலனனைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதிசெயல்களை கண்காணிப்பதற்கும், தடை செய்யவும், சதிகாரர்களை கண்டறிந்து கைது செய்தற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும். முன்னர் இந்திய உளவு அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உளவுப் பணி மேற்கொண்டிருந்தது. 1968 முதல் புதிதாக துவகக்ப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுபாய்வு அமைப்பு வெளிநாடுகளில் மட்டும் தனது உளவுப் பணியை மேற்கொள்கிற்து. இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. இதன் தற்போதைய தலைவர் சமந்த் கோயல் அவார்.[3]இந்திய அரசின் செயலாளர் பதவி தரத்தில் உள்ள ரா அமைப்பின் தலைவர், இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு தனது அறிக்கைகளை பிரதமருக்கு அனுப்புவர்.

https://ta.wikipedia.org/wiki/ஆராய்ச்சி_மற்றும்_பகுப்பாய்வு_அமைப்பு

இந்தியாவின் உள்ளேயும் R&AW செயற்படுமா?!
அதற்கு வேறு உளவுப் பிரிவுகள் உண்டெல்லோ?

செயல்படும். நாங்கள் ஒரு உளவு அமைப்பை பற்றி கதைக்கிறோம் ஏராளன். அதன் செயல்பாடுகள் இந்தியாவில் ஏர்போர்ட்டில் இருந்து மட்டும்தான் தொடங்கும், நாட்டுக்குள் முடங்கி விடும் என்பதில்லை. இந்திய ஒருமைபாட்டுக்கு ஆபத்தை தரக்கூடிய வெளி அளுத்தங்கள் எல்லாவற்றையும் ரோவே கையாளும். அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்.

ஆனால் இந்திய உள்ளக, மாநில உளவுதுறைகள் எல்லாம் ஒரே நேர்கோட்டில் வருபவையே. 

றோ என்ற பெயர் தான் உங்களை உறுத்துகிறது என்றால். றோ என்று நான் எழுதிய ஒவ்வொரு இடத்திலும் “இந்திய உளவுத்துறை” என போட்டு வாசியுங்கள். 

“A rose by any other name would smell as sweet”.

-William Shakespeare-

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, இசைக்கலைஞன் said:

ஸ்டாலின் தமிழக முதல்வர். நரேந்திர மோடி இந்திய பிரதமர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (கோல்மால் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதுதான் உண்மை.

இவர்களை இந்திய குடிமக்கள் சந்திப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.

சீமான் தமிழக முதல்வரை சந்தித்தாரே தவிர, திமுக தலைவரை அல்ல. 😃

கண்டது சந்தோசம் இசை.

கனகாலம் காணவில்லை டங்குவார் ஏதும் பிய்ந்துவிடவில்லைதானே🤣.

அடிக்கடி வந்து போனால் நாமும் ஒரு உண்மையான நாம் தமிழர் ஆதரவாளரோடு கருத்தாடிய உணர்வை பெறுவோம் அல்லவா? 🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

அந்த கருத்துப்பட நான் எழுதியதை ஒருக்கா குவாட் பண்ணுங்கள் ...

இனி என்ன மட்டுறுத்தினர்  பச்சை போட கூடாது 
கருத்து எழுத கூடாது ...

என்று நான் எழுதியதாக உறுட்ட போகிறீர்களா?

மதிப்புகுரிய யாழகள உறுபபினர்  மருதர் அறிய. நான் எழுதியதில். எந்த மாற்றமுமில்லை. மேலும் உங்கள் கேள்விககு பதில் எழுத விரும்பவில்லை. கனவு உலகில்  வாழவும் விரும்பவில்லை  நீங்கள் எழுதியது  உஙகளுக்கே தெரியவில்லை  என்று  நீங்களே  சொன்னால்  அதன்  பொருள் என்னால்  கருத்தடமுடியாது. அல்லது என்னுடன்  கருத்தடாதே  என்பதாகும்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

ஸ்டாலின் தமிழக முதல்வர். நரேந்திர மோடி இந்திய பிரதமர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (கோல்மால் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதுதான் உண்மை.

இவர்களை இந்திய குடிமக்கள் சந்திப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.

சீமான் தமிழக முதல்வரை சந்தித்தாரே தவிர, திமுக தலைவரை அல்ல. 😃

தலைப்பை வாசித்து விட்டு பையன்கள் அதை பற்றித்தான் பேசுவான்கள் 
என்று எண்ணி வந்திருப்பீர்கள் போல?  யாழ் களம் அதை கடந்து பல வருடம் 

சக கருத்தாளர்களை வைச்சு செய்யணும் என்ற வக்கிரம் தவிர்த்து 
இங்கு எந்த திரியிலும் வேறெதுவும் இல்லை 

இப்போ பெண்களுக்கு  ஆமை சித்திரம் கீறுவதுக்கு 
போனஸ் அறிவித்து இருக்கிறோம் 
அதை ஏற்று அவர்கள் வருவார்கள் என்று மனதார நம்புகிறோம் 
காரணம் நாம்தான் பெண்கள் காவலர்கள் என்பதுதான்.
(தீர்க்கும் வக்கிரம் போதாது.. இனி ஒதுங்கி இருப்பவர்களும்  வந்து இந்த சகதிக்குள் இறங்க வேண்டும்)  

சித்திர திரிகள் எவ்வாறு போகும் என்று ........
இனி வரும் நாட்களில்தான் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

ஸ்டாலின் தமிழக முதல்வர். நரேந்திர மோடி இந்திய பிரதமர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (கோல்மால் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதுதான் உண்மை.

இவர்களை இந்திய குடிமக்கள் சந்திப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.

சீமான் தமிழக முதல்வரை சந்தித்தாரே தவிர, திமுக தலைவரை அல்ல. 😃

கண்டதில்  சந்தோசம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

மதிப்புகுரிய யாழகள உறுபபினர்  மருதர் அறிய. நான் எழுதியதில். எந்த மாற்றமுமில்லை. மேலும் உங்கள் கேள்விககு பதில் எழுத விரும்பவில்லை. கனவு உலகில்  வாழவும் விரும்பவில்லை  நீங்கள் எழுதியது  உஙகளுக்கே தெரியவில்லை  என்று  நீங்களே  சொன்னால்  அதன்  பொருள் என்னால்  கருத்தடமுடியாது. அல்லது என்னுடன்  கருத்தடாதே  என்பதாகும்..

இதுக்கு நான் எனது பதிலை எழுதினேன் 
நிர்வாகம் தூக்கி இருக்கிறது 

நான் எதாவது கள விதிகளை மீறி இருப்பின் 
என்ன என்று அறிய தரவும் ......

மேலே என் மீது தனிமனித தாக்குதல் ஒருவர் செய்து இருக்கிறார் 
உங்கள் கண்ணுக்கு அது தெரிகிறது ... இருந்தும் அது இருக்கிறது 

இந்த திரி பூராக தலைப்பு சம்மந்தம் இல்லாத அலப்பறைகள்தான் உண்டு 
ஆகாவே திரிக்கு சம்மந்தம் இல்லாதா என்ற புலுடா வேண்டாம் 

மதிப்புகுரிய யாழகள உறுபபினர்  மருதர் அறிய

Hello 

நான் எழுதியதில். எந்த மாற்றமுமில்லை.

ok

மேலும் உங்கள் கேள்விககு பதில் எழுத விரும்பவில்லை.

ok

கனவு உலகில்  வாழவும் விரும்பவில்லை

Great

நீங்கள் எழுதியது  உஙகளுக்கே தெரியவில்லை

அதனால்தான் அதை மேற்கோள் காட்டும்படி தங்களை கேட்டேன் 

 

நீங்களே  சொன்னால்  அதன்  பொருள் என்னால்  கருத்தடமுடியாது

நான் எழுதாததை எழுதவில்லை என்றுதானே சொல்ல முடியும்? 

அல்லது என்னுடன்  கருத்தடாதே  என்பதாகும்..

confused 

எல்லோருக்கும் 
எல்லா இடத்திலும் 
எழுத உரிமை வேண்டும் என்று நீங்கள்தான் எழுதினீர்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.