Jump to content

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

 

 

அட, விடுங்க பெருமாள்.... அவரை அவரது சொந்த மகிழ்வு வட்டத்தினுள் விட்டுவிடுங்கள். இரவு சந்தோசமாக நித்திரை கொள்ள, இங்கே தான் மாத்திரைக்கு வருவார்...  😁

😂 எல்லா இடமும் சுத்தி ஓடி அமெரிக்கா, உலகம், ஐரோப்பாவெல்லாம் போய் கடைசியில "பிறெக்சிற்றாகவும் இருக்கலாம்!" என்று போரிஸ் சொன்ன இடத்திற்கே வந்தாயிற்று!

ஆனால், இதை முதலே சுட்டியவன் வயசாளி என்ற எள்ளல்! இப்பவேனும் உங்களுக்கு உங்கள் நிலை பற்றிய கவலை வரவில்லையோ நாதம்? இனி நீங்கள் சொல்வதை பெருமாள் தவிரா யாரும் இங்க நம்புவினமே?🤣

Link to comment
Share on other sites

  • Replies 253
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தனிமனித தாக்குதல் செய்யாமல், ஒரு தெளிவான கருத்தாடல் இன்றி, எழுந்தமானமாக ஒரு முடிவுக்கு வர முடியாது.

பிபிசி இப்படி சொல்கிறது.

What caused the driver shortage? 
https://www.bbc.co.uk/news/explainers-58709456

1. There are a number of reasons - and many countries across Europe have been affected - but the UK has been especially badly hit.

ஆகவே, இது ஐரோப்பாவையும் பாதித்துள்ளது. பிரித்தானியாவில் அதிகம். இருப்பினும், இங்கிலாந்தினை பாதித்தது போல, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து பாதிக்கப்படவில்லை.

2. After Brexit, many European drivers returned to their home countries, or moved elsewhere, because working in the UK involved additional border bureaucracy which had an impact on their income.

The pandemic saw even more drivers return to their home countries, with few coming back.

இங்கே சிலருக்கு, IR35 பிரச்சனை கொடுத்துள்ளது.

மேலும் Furlough பலரை வீட்டில் இருக்க வைத்துள்ளது. கிழக்கு ஐரோப்பியர்கள் பலர் கூட, furlough இல் இருந்து கொண்டே, தமது நாடுகளுக்கு சென்று விட்டதும் இவர்கள் சொல்லாதது.

அதாவது, தமது சொந்த நாட்டுக்கு சென்று, அங்கிருந்த படியே furlough எடுத்துக் கொண்டு இருந்து இருக்கிறார்கள். அதில் தவறு இல்லை, ஆனால் அங்கே வேறு வேலை தேடிக்கொண்டு அல்லது, வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு போய் இருப்பார்கள்.

இவர்கள் செப்டம்பர் 30 பின்னர், வரலாம், வராமலும் போகலாம்.

3. Meanwhile, some older drivers have retired and there is a huge backlog in HGV driver tests due to Covid.

கோவிட் காரணமாக, HGV டிரைவர் test இல்லாமல் போனதும் ஒரு காரணம் என்கிறது.

ஆகவே, பிரெக்ஸிட் என்று ஒரே சொல்லில் முடித்து விடாமல், பல காரணங்கள் உள்ளன என்பதே நிதர்சனம். அதில் முக்கியமானது அரசின் திட்டமிடல் தவறும் கூட.

Rod McKenzie of the Road Haulage Association trade body accused ministers of "government by inertia", allowing the situation to get "gradually worse" in recent months. (https://www.scotsman.com/)

அட, விடுங்க பெருமாள்.... அவரை அவரது சொந்த மகிழ்வு வட்டத்தினுள் விட்டுவிடுங்கள். இரவு சந்தோசமாக நித்திரை கொள்ள, இங்கே தான் மாத்திரைக்கு வருவார்...  😁

பாஸ்,

இதில் பல காரணங்கள் சொல்லி இருக்கு. இவை எல்லாவற்றையும் கள உறவு புலவர் சில நாட்களுக்கு முன்பே இதே பி பி சி யில் இருந்து படம் போட்டும் எழுதி விட்டார் (இந்த 3 நாட்காளுக்கு முந்திய பிபிசி கட்டுரையை இன்று வரை வாசிக்காமல்தான் இத்தனை அலப்பரை செய்தீர்களா🤦‍♂️).

நீங்கள் சொன்னது உலக எண்ணை விலை ஏற்றத்தால் யூகேயில் கியூ நிக்குது எண்டு.

அப்படி இந்த பி பி சி கட்டுரையில் ஏதும் இல்லை.   

மாறாக நீங்கள் சொன்னதை மறுக்கும் விதமாக உள்ளது. (லாவகமக அதை வெட்டி ஒட்ட மறந்து விட்டீர்கள் - வழமையான பூச்சுத்தல்தான்). 

Is petrol in danger of running out?

No - oil companies have stressed there is plenty of fuel available. 

(👆🏼இது ரொம்ப முக்கியமான பகுதி🤣)

They say that the shortage is being caused by "temporary spikes in customer demand" - or as PRA chairman Brian Madderson put it, "panic buying, pure and simple".

The government has claimed media coverage has inflamed the situation. 

What's happening to fuel prices?

Petrol prices are at an eight-year high. The average petrol price at UK forecourts was 135.19p a litre on Monday, up from 134.86p a week earlier.

The price of a litre of diesel rose from 137.35p to 137.95p over the same period.

The RAC has said it's aware of a small number of retailers "hiking prices" in the current crisis.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யுகே இல் இருந்து வரும் பெரும்பாலான ஊடகங்கள' பிரெக்ஸிற்றை ஆதரித்தவை.(மிர்ரர்.கார்டியன் தவிர ஏனைய அச்சு ஊடகங்கள்)பெரும்பாலான தமிழர்களும் பிரிய வேண்டும் என்றே வாக்களித்தவர்கள். அத்தகையவர்கள் எப்படி உண்மையை ஒத்துக்கொள்வார்கள். இது வெறும் டடீசர்தான் இதற்கே இந்த நிலமை என்றால் போபபோக பிரெக்ஸிற் விளைவு தெரிவரும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:
யுகே இல் இருந்து வரும் பெரும்பாலான ஊடகங்கள' பிரெக்ஸிற்றை ஆதரித்தவை.(மிர்ரர்.கார்டியன் தவிர ஏனைய அச்சு ஊடகங்கள்)பெரும்பாலான தமிழர்களும் பிரிய வேண்டும் என்றே வாக்களித்தவர்கள். அத்தகையவர்கள் எப்படி உண்மையை ஒத்துக்கொள்வார்கள். இது வெறும் டடீசர்தான் இதற்கே இந்த நிலமை என்றால் போபபோக பிரெக்ஸிற் விளைவு தெரிவரும்.

டைம்ஸ்சும், பைனான்சியல் டைம்சும் கூட ரிமெயின்னை ஆதரித்தன.

ஆனால் இது மேர்டோக்கின் திட்டப்படி நடந்தது. சன்னும், டைம்சும், எவ்டி யும் அவரின் பத்திரிகைகள்.

இதில் white collar வேலை செய்யும், எக்கனோமிக்ஸ் புரிந்த நடுத்தர வர்க்கம் வாசிக்ககூடிய இரெண்டு broadsheet பத்திரிகைகளை ரிமெய்னுக்கும், உணர்சிவசப்படும், கிளுகிளுப்பை விரும்பும், மேலோட்டமாக செய்திகளை நுனிப்புல் மேயும், அதிகம் எக்கனோமிக்ஸ் புரியாத உழைக்கும் மக்களை ஏமாற்ற சன்னை பெரெக்சிற்றுக்கும் ஆதரவளிக்க வைத்தார்.

யார் வெண்டாலும் மேர்டொக்குக்கும் வெற்றிதான்😎.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:
யுகே இல் இருந்து வரும் பெரும்பாலான ஊடகங்கள' பிரெக்ஸிற்றை ஆதரித்தவை.(மிர்ரர்.கார்டியன் தவிர ஏனைய அச்சு ஊடகங்கள்)பெரும்பாலான தமிழர்களும் பிரிய வேண்டும் என்றே வாக்களித்தவர்கள். அத்தகையவர்கள் எப்படி உண்மையை ஒத்துக்கொள்வார்கள். இது வெறும் டடீசர்தான் இதற்கே இந்த நிலமை என்றால் போபபோக பிரெக்ஸிற் விளைவு தெரிவரும்.

புலவர் ஐயா, 2016 தேர்தலில் Brexit  வென்றது 1.2m வாக்குகள் வித்தியாசத்தால். பிரித்தானியாவில் தமிழர்கள் அண்ணளவாக 300,000 வரை இருக்கலாம். இவர்களில் வாக்களிக்கும் உரிமை உடையோர் எத்தனை வீதமோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2021 at 23:02, goshan_che said:

டைம்ஸ்சும், பைனான்சியல் டைம்சும் கூட ரிமெயின்னை ஆதரித்தன.

ஆனால் இது மேர்டோக்கின் திட்டப்படி நடந்தது. சன்னும், டைம்சும், எவ்டி யும் அவரின் பத்திரிகைகள்.

இதில் white collar வேலை செய்யும், எக்கனோமிக்ஸ் புரிந்த நடுத்தர வர்க்கம் வாசிக்ககூடிய இரெண்டு broadsheet பத்திரிகைகளை ரிமெய்னுக்கும், உணர்சிவசப்படும், கிளுகிளுப்பை விரும்பும், மேலோட்டமாக செய்திகளை நுனிப்புல் மேயும், அதிகம் எக்கனோமிக்ஸ் புரியாத உழைக்கும் மக்களை ஏமாற்ற சன்னை பெரெக்சிற்றுக்கும் ஆதரவளிக்க வைத்தார்.

யார் வெண்டாலும் மேர்டொக்குக்கும் வெற்றிதான்😎.

சண்>மெயில் கூடுதலான அடித்தட்டு நடுத்தர வர்க்கத்து மக்களால் வாசிக்கப்படும் பத்திரிகைகள்.ரைம்ஸ் கனவான் முகத்தைக் குறைந்த எண்ணிக்கையான வாசகர்களுக்குக் காட்ட அதன் சகோதரப்பத்திரிகையான சண்  உண்மை முகத்தைக்காட்டும்.பிரெக்ஸிற்றிற்கு மக்கள் ஆதரவளித்தற்கு இந்த ஊடகங்களும் பெரும்பங்கை வகித்திருக்கின்றன. இது பத்திரிகைகள் முன்பு ஐரோப்பி யூனியனுடன் இணைய வேண்டும் என்று பிரச்சாரம் செய்த ஊடகங்களே.இவர்கள் உண்மையில் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள்  இல்லை. ரைேhப்பிய ஒன்றயத்தில் ஜேரமன்>பிரான்சின் ஆதிக்கம் இருப்பதை இவர்கள் ரசிக்கவில்லை.அதன்வெளிப்பாடே இந்த வெறித்தனமான பிரச்சாரங்கள். தங்களை நியாயப்படுத்த விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்று புலம்புகிறார்கள்.

On 3/10/2021 at 23:05, MEERA said:

புலவர் ஐயா, 2016 தேர்தலில் Brexit  வென்றது 1.2m வாக்குகள் வித்தியாசத்தால். பிரித்தானியாவில் தமிழர்கள் அண்ணளவாக 300,000 வரை இருக்கலாம். இவர்களில் வாக்களிக்கும் உரிமை உடையோர் எத்தனை வீதமோ தெரியாது.

பெரும்பாலான தமிழர்களும் இந்தியர்களும்   வேண்டும் என்றே வாக்களித்தாரகள். இது உண்மை.இன்னும் கொஞ்ச காலத்தில் இவர்களே திட்டித் தீர்ப்பார்கள்.அத்துடன் வயதான வெள்ளைகளம் பிரிய வேண்டம் என்றே வாக்களித்தனர்.இளையதலை முறை பிரியக் கூடாது என்று வாக்களித்தன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2021 at 23:05, MEERA said:

புலவர் ஐயா, 2016 தேர்தலில் Brexit  வென்றது 1.2m வாக்குகள் வித்தியாசத்தால். பிரித்தானியாவில் தமிழர்கள் அண்ணளவாக 300,000 வரை இருக்கலாம். இவர்களில் வாக்களிக்கும் உரிமை உடையோர் எத்தனை வீதமோ தெரியாது.

பிரிய வேண்டும் என்று நாங்கள் வாக்களிக்காது விட்டாலும் பிரிந்திருக்கும். ஆகவே வாக்களித்தோம்  என்றுதான் இதனைப் பரிந்து கொள்ள வெண்டியிருக்கு. அப்போ பிரெக்ஸற் பிழையான முடிவுதான் என்ற நிலைக்கு நீங்கள் வந்த விட்டீர்கள்.p

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புலவர் said:

ரைேhப்பிய ஒன்றயத்தில் ஜேரமன்>பிரான்சின் ஆதிக்கம் இருப்பதை இவர்கள் ரசிக்கவில்லை.

இது தான் நூறுவீத உண்மை.

பிரிட்டிஷ் மன்னர்களிடம் நல்ல அரசியல் தலைமை இருந்திருந்தால் பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மனி என ஐரோப்பிய யூனியனில் மும் மூர்த்திகளாக இருந்திருக்கலாம்.

பெரிய பிரித்தானியா அரசியல்தலைவர்களும் பெரிய காசு பதுக்கல் கள்ளர் எண்டு செய்திகள் சொல்லுது. அதிலையும் ஈழத்தமிழர்களுக்கு தாலியறுத்த ரொனி பிளேயர் பச்சை கள்ளன் மட்டுமில்லை. பாலியல் பிரச்சனையிலும் நம்பர் வண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவனின் முகம் பார்க்கும்போதெல்லாம் எமது அவலங்கள்தான் நினைவில் வரும். கருங்காலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரஞ்சித் said:

இவனின் முகம் பார்க்கும்போதெல்லாம் எமது அவலங்கள்தான் நினைவில் வரும். கருங்காலி.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் எம்மவர்களுக்கு தடைச்சட்டம் கொண்டவர காரணமான பெருச்சாளி.....அதிலும் ஐரோப்பிய யூனியனுக்கு  அவர்களை தடைசெய்யுமாறு பிரத்தியேக பிரேரணணை செய்ததும் இந்த------ தான்.

நியாயத்திற்கு செய்த பாவம் கடைசி காலத்தில் உத்தரிக்காமல் விடாது. 
இது நியதி.

Link to comment
Share on other sites

5 ஆயிரம் பேர்(Truck Drivers) தேவைக்கு 27 விண்ணப்பங்கள் தான் கிடைக்க பெற்றுள்ளார்களாம்.  😵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

5 ஆயிரம் பேர்(Truck Drivers) தேவைக்கு 27 விண்ணப்பங்கள் தான் கிடைக்க பெற்றுள்ளார்களாம்.  😵

ஐரோப்பிய யூனியனிலிருந்தது பேச்சுவார்த்தையை முடிக்காமல் முறிச்சுக்கொண்டு போனதின்ரை பக்க விளைவு.....

கமரூன் விட்டுட்டு ஓடினதுக்கும் தெரேசா  முழி பிதுங்கி நிண்டதுக்கும் காரணம் போக போகத்தெரியும்.
பொறிஸ் ஜோன்சன் 100 வருசத்துக்கு முந்தினைய நினைப்பிலை தவழுறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புலவர் said:

பிரிய வேண்டும் என்று நாங்கள் வாக்களிக்காது விட்டாலும் பிரிந்திருக்கும். ஆகவே வாக்களித்தோம்  என்றுதான் இதனைப் பரிந்து கொள்ள வெண்டியிருக்கு. அப்போ பிரெக்ஸற் பிழையான முடிவுதான் என்ற நிலைக்கு நீங்கள் வந்த விட்டீர்கள்.p

எப்போ சரியானது என்று கூறினேன்??

காரை எடுத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு வெளிக்கிட்ட காலம் போய், கார் இன்சூரன்ஸ் தொடக்கம் கொண்டு பேற பொருட்கள் வரை கவனமாக பல காரியங்களை முற்கூட்டியே செய்ய வேண்டி உள்ளது.

5 hours ago, nunavilan said:

5 ஆயிரம் பேர்(Truck Drivers) தேவைக்கு 27 விண்ணப்பங்கள் தான் கிடைக்க பெற்றுள்ளார்களாம்.  😵

சிறு திருத்தம் அது 127ம்,😂😂😂

The Department for Transport (DfT) later clarified that of the visas issued, 27 were for fuel tanker drivers and the remaining 100 were for food hauliers.
 

https://inews.co.uk/news/boris-johnson-claims-127-visas-hgv-drivers-27-1234456

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

எப்போ சரியானது என்று கூறினேன்??

காரை எடுத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு வெளிக்கிட்ட காலம் போய், கார் இன்சூரன்ஸ் தொடக்கம் கொண்டு பேற பொருட்கள் வரை கவனமாக பல காரியங்களை முற்கூட்டியே செய்ய வேண்டி உள்ளது.

சிறு திருத்தம் அது 127ம்,😂😂😂

The Department for Transport (DfT) later clarified that of the visas issued, 27 were for fuel tanker drivers and the remaining 100 were for food hauliers.
 

https://inews.co.uk/news/boris-johnson-claims-127-visas-hgv-drivers-27-1234456

 

The PM also said on BBC Breakfast that only 127 HGV drivers had applied for temporary visas offered by the government to help tackle the shortage.

The department for business said 27 drivers had been identified, but have not confirmed what the prime minister's number of 127 was referring to.

The Road Haulage Association said a three month visa "simply wasn't attractive enough for European truckers to give up their current jobs for a short term contract - perhaps only weeks long - with all the hassle, including short term rents, that would be involved."

அங்கையும் பொய்தான் சொல்லுறார்.இதையும் BBC தான் போட்டிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புலவர் said:

The PM also said on BBC Breakfast that only 127 HGV drivers had applied for temporary visas offered by the government to help tackle the shortage.

The department for business said 27 drivers had been identified, but have not confirmed what the prime minister's number of 127 was referring to.

The Road Haulage Association said a three month visa "simply wasn't attractive enough for European truckers to give up their current jobs for a short term contract - perhaps only weeks long - with all the hassle, including short term rents, that would be involved."

அங்கையும் பொய்தான் சொல்லுறார்.இதையும் BBC தான் போட்டிருக்கு.

அப்பவே சொன்னாச்சு…. பொறிஸ் அடித்து விடுவதெல்லாம் பொய் என்று….

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Earlier, the prime minister denied there was a crisis in the UK, despite a shortage of HGV drivers disrupting fuel deliveries and leaving some shelves empty, and a range of industries warning there was a lack of skilled workers as a result of both the pandemic and Brexit.

He told BBC Radio 4's Today programme the country was at a "turning point" and the UK's "world leading" logistics industry would fix the issues.

அவரே ஒத்துக் கொள்கிறார்.ஆனால் டமில்ஸ்சுக்கு ஒத்துக் கொள்வது மானப்பிரச்சினை;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புலவர் said:

சண்>மெயில் கூடுதலான அடித்தட்டு நடுத்தர வர்க்கத்து மக்களால் வாசிக்கப்படும் பத்திரிகைகள்.ரைம்ஸ் கனவான் முகத்தைக் குறைந்த எண்ணிக்கையான வாசகர்களுக்குக் காட்ட அதன் சகோதரப்பத்திரிகையான சண்  உண்மை முகத்தைக்காட்டும்.பிரெக்ஸிற்றிற்கு மக்கள் ஆதரவளித்தற்கு இந்த ஊடகங்களும் பெரும்பங்கை வகித்திருக்கின்றன. இது பத்திரிகைகள் முன்பு ஐரோப்பி யூனியனுடன் இணைய வேண்டும் என்று பிரச்சாரம் செய்த ஊடகங்களே.இவர்கள் உண்மையில் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள்  இல்லை. ரைேhப்பிய ஒன்றயத்தில் ஜேரமன்>பிரான்சின் ஆதிக்கம் இருப்பதை இவர்கள் ரசிக்கவில்லை.அதன்வெளிப்பாடே இந்த வெறித்தனமான பிரச்சாரங்கள். தங்களை நியாயப்படுத்த விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்று புலம்புகிறார்கள்.

பெரும்பாலான தமிழர்களும் இந்தியர்களும்   வேண்டும் என்றே வாக்களித்தாரகள். இது உண்மை.இன்னும் கொஞ்ச காலத்தில் இவர்களே திட்டித் தீர்ப்பார்கள்.அத்துடன் வயதான வெள்ளைகளம் பிரிய வேண்டம் என்றே வாக்களித்தனர்.இளையதலை முறை பிரியக் கூடாது என்று வாக்களித்தன

புலவர்,நான்நினைக்கவில்லை பெரும்பாலான தமிழர்களும் இந்தியர்களும் பிரிய வேண்டும் என்று வாக்களித்திருப்பார்கள் என்று. ஏனென்றால் அவர்கள் பெரும்பானமையாக இருக்கும் பிரதேசங்கள் எல்லாம் சேர்ந்திருக்க வேண்டும் என்று தான் முடிவு வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருத்தினை வைக்க முடியாதவாறு, வேண்டுமென்றே,  தாக்குதல் நடத்துவது, அண்மைய நிர்வாக எச்சரிக்கையுடன் நிறுத்தப்படும் என்னும் எதிர்ப்பார்ப்புடன்...

1. பிரெக்ஸிட் என்பது, அமெரிக்காவின் ஒரு நுண்ணிய சதி என்பது எனது பார்வை. 5 எருமைகளும், சிங்கமும் கதைபோல, டொலருக்கு எதிராக, யூரோ பலம் பெறுவதை தடுக்க, பிரித்தானியாவை EU ல் இருந்து வெளியே வர வைக்க இரகசிய வேலைகள் செய்தார்கள்.

2. நைஜல் பராஜ் எனும் தீவிர பிரெக்ஸிட் காரர், டொனால்ட் ரம்புடன் மிக நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தார். இவருக்கு நிதியுதவி கொடுக்கப்பட்டிருக்கலாம். அமெரிக்கா, பிரிட்டனுடன் ஒரு வர்த்தக உடன் படிக்கை செய்யும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. 

3. இந்த உறுதியில் இருந்து ஜோ பைடன் நழுவுகிறார். அண்மையில் அவரை சந்தித்த, போரிஸ் இடம், தெளிவாக சொல்லபட்டுள்ளது.
https://www.bbc.co.uk/news/uk-politics-58646017

ஆக, அமெரிக்கா கொடுத்த இத்துப்போன கயிற்றினை பிடித்து, பிரிட்டன்,  EU ல் இருந்து வெளியே வந்து, மாட்டிக் கொண்டு விட்டதாகவே எனக்கு தெரிகிறது.

இன்னுமொரு தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளர், போரிஸ். இவர், நீண்டகாலம் பிரதமராக இருக்க, முடியாதவாறு, அவரது பழமைவாத கட்சிக்குள் தலைமைத்துவ போட்டிகள் வரும்.

ஆனால், அவரோ, தனக்கு போட்டியாக வரக்கூடிய வெள்ளைகளை ஓரம் கட்டி, முக்கியமான பதவிகளில், இந்தியர்களையும், ஆபிரிக்கர்களையும் வைத்துள்ளார்.

ஆனாலும், அவரது பழமைவாத கட்சி, பலம் மிக்க, மார்கிரெட் தாட்சரேயே தூக்கி எறிந்தது என்பது கவனிக்க தக்கது.

9 hours ago, குமாரசாமி said:

ஐரோப்பிய யூனியனிலிருந்தது பேச்சுவார்த்தையை முடிக்காமல் முறிச்சுக்கொண்டு போனதின்ரை பக்க விளைவு.....

கமரூன் விட்டுட்டு ஓடினதுக்கும் தெரேசா  முழி பிதுங்கி நிண்டதுக்கும் காரணம் போக போகத்தெரியும்.
பொறிஸ் ஜோன்சன் 100 வருசத்துக்கு முந்தினைய நினைப்பிலை தவழுறார்.

 

12 hours ago, குமாரசாமி said:

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் எம்மவர்களுக்கு தடைச்சட்டம் கொண்டவர காரணமான பெருச்சாளி.....அதிலும் ஐரோப்பிய யூனியனுக்கு  அவர்களை தடைசெய்யுமாறு பிரத்தியேக பிரேரணணை செய்ததும் இந்த------ தான்.

நியாயத்திற்கு செய்த பாவம் கடைசி காலத்தில் உத்தரிக்காமல் விடாது. 
இது நியதி.

President meets Tony Blair

ஒரு இலங்கை பிரதமரை அல்லது ஜனாதிபதியை, பிரிட்டிஷ் பிரதமர், தனது, அதிகாரபூர்வ டவுனிங் தெரு அலுவலகத்தில் இல்லாமல், தனது ஓய்வு இல்லமான, chequers ல் சந்தித்தது, மகிந்த - பிளேயர் சந்திப்பு மட்டுமே.

ரகசிய திட்டம் போட்டிருப்பார்கள்.  
 

https://www.bbc.com/sinhala/news/story/2006/08/060831_president_london

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

Earlier, the prime minister denied there was a crisis in the UK, despite a shortage of HGV drivers disrupting fuel deliveries and leaving some shelves empty, and a range of industries warning there was a lack of skilled workers as a result of both the pandemic and Brexit.

He told BBC Radio 4's Today programme the country was at a "turning point" and the UK's "world leading" logistics industry would fix the issues.

அவரே ஒத்துக் கொள்கிறார்.ஆனால் டமில்ஸ்சுக்கு ஒத்துக் கொள்வது மானப்பிரச்சினை;

புலவர் உங்கள் வாசிப்பில் தவறு உள்ளது. இங்கு ஒருத்தருமே பிரச்சனை இல்லை என்று கூறவில்லை.

பிகு: நீங்களும் டமில்ஸ் 

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

ஆக, அமெரிக்கா கொடுத்த இத்துப்போன கயிற்றினை பிடித்து, பிரிட்டன்,  EU ல் இருந்து வெளியே வந்து, மாட்டிக் கொண்டு விட்டதாகவே எனக்கு தெரிகிறது.

 

ஆக,

1. இங்கிலாந்து ஒரு கைப்புள்ளையாக இருந்திருக்கு !

2. எரிபொருள் உட்பட பல பிரச்சனைகளுக்கு பிரெக்ஸிட் முக்கிய காரணம் (தமிழர்களால் இதை நேரடியாக ஒத்துக்கொள்ள முடியாது) !

 

இந்த சின்னப் பிரச்சனைக்காக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு என்ற திரியில் தொடர்பில்லாமல் பிரெக்ஸிட் பற்றி உரையாட வேண்டுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இணையவன் said:

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு என்ற திரியில் தொடர்பில்லாமல் பிரெக்ஸிட் பற்றி உரையாட வேண்டுமா ?

நியாயம் தான், இணையவன்.... பலர் இது குறித்து பேசியதால்... பதில் கொடுக்க வேண்டி இருந்தது. நிறுத்தலாம். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ஒரு கருத்தினை வைக்க முடியாதவாறு, வேண்டுமென்றே,  தாக்குதல் நடத்துவது, அண்மைய நிர்வாக எச்சரிக்கையுடன் நிறுத்தப்படும் என்னும் எதிர்ப்பார்ப்புடன்

எங்கே இந்த நிர்வாக எச்சரிக்கை? கனவு கினவு ஏதும் கண்டனிங்களோ? இந்த கட்டுரையில் நான் எழுதிய அத்தனை கருத்தும் அப்படியே இருக்கு.

நீங்கள் ஒரு பிழையான கருத்தை முன்வைத்து, அதை நிறுவ 3 நாள் பழைய பிபிசி கட்டுரையை இணைத்து - அதில் கூட நீங்கள் சொன்னதுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதோடு, எதிரான கருத்துக்களும் இருந்ததை சுட்டி காட்டியதும், 3 நாள் எஸ் ஆகிவிட்டு, இப்ப வந்து நிர்வாக நடவடிக்கை என்று ஏதோ கதை விடுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வரும் பெரிய பிரச்சனையே, தொப்பியை தூக்கி, தமது தலையில் போட்டுக்கொள்பவர்களால்.....

நான் குறித்த ஒருவரை தவிர்க்கிறேன் என்று நேரடியாக பலமுறை, சொன்ன பின்னும், வந்து, தேவையில்லாமல் சீண்டுவது ஏன்?

ஐயா.... மீண்டும் தெளிவாக சொல்கிறேன். உங்களை முழுவதுமாக தவிர்க்க விரும்புவதால், நான் எழுதும் கருத்துக்கள், எக்காரணம் கொண்டும், உங்கள் மேலானதாக இருக்காது. ஆகவே... எனக்கு பதில் தனது, உங்கள், நேரத்தை வீணடிக்காதீர்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனம் ஐயா,

பலருக்கு அளவான தொப்பியை தூக்கி போட்டால் - சைஸ் பொருந்துபவர்கள் எல்லாம் பதில் சொல்லும் உரிமையை அடைவார்கள் ஐயா.

நீங்கள் என்னை சொல்கிறீர்களோ இல்லையோ - பெயர் குறிப்பிடாமல் எனக்கும் பொருந்தும்படி சொன்னால் - பதில் வரும் ஐயா.

பிகு

கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துகள் எல்லாம் சக கருத்தாளர்களால் கையாளப்பட கூடியனவே. ஒருவரின் கருத்தை அவரின் அனுமதியின்றி இன்னொருவர் மேற்கோள் காட்ட கூடாது என்றோ, பதில் சொல்ல கூடாது, விமர்சிக்ககூடாது, என்றோ எந்த விதியும் இல்லை.

 

2 hours ago, Nathamuni said:

இங்கே வரும் பெரிய பிரச்சனையே, தொப்பியை தூக்கி, தமது தலையில் போட்டுக்கொள்பவர்களால்.....

நான் குறித்த ஒருவரை தவிர்க்கிறேன் என்று நேரடியாக பலமுறை, சொன்ன பின்னும், வந்து, தேவையில்லாமல் சீண்டுவது ஏன்?

ஐயா.... மீண்டும் தெளிவாக சொல்கிறேன். உங்களை முழுவதுமாக தவிர்க்க விரும்புவதால், நான் எழுதும் கருத்துக்கள், எக்காரணம் கொண்டும், உங்கள் மேலானதாக இருக்காது. ஆகவே... எனக்கு பதில் தனது, உங்கள், நேரத்தை வீணடிக்காதீர்கள். நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தொடர்பான எனது நிலைப்பாட்டினை தெளிவாக சொல்லி விட்டேன்.

உங்களுக்கு நேரம் அதிகம் இருந்தால், யாருக்கோ கொடுத்த பதில்களை எடுத்து, உங்களுக்கானது என்று, மினக்கெட்டு பதிலலித்தால்.... நான் செய்வதுக்கு ஒன்றும் இல்லை.

ஒரு உறவு, சுட்டி காட்டிய பின்னர் தான், உங்களுடனான உரையாடல்களில் எவ்வளவு தூரம், கீழே தரம் இறங்கி விட்டேன் என்று புரிந்தது. அது தேவையில்லாதது.

எனக்கு இனிமேல் அதுக்கு நேரமும் இல்லை.

ஆகவே... அதனை தொடர விரும்பவில்லை. அதனை மதிப்பீர்கள் என்று கருதுகிறேன்.

அப்புறம் உங்கள் விருப்பம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.