Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது​​​​​​​

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சிலகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தது.இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த குழுவில் இரா சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ.சுமந்திரன் ஆகியோரும் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கடந்த தினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனடிப்படையில் எதிர்வரும் ஓரிரு தினங்களில் இரா.சம்பந்தன் தலைமையிலான தூதுக் குழுவொன்று இந்தியாவுக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.(15)

 


http://www.samakalam.com/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-41/

 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

இரா சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ.சுமந்திரன்

சூப்பர் ஆட்கள் இருக்கிறதையும்  அடைவு  வைத்துவிட்டு வரபோகினம் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சூப்பர் ஆட்கள் இருக்கிறதையும்  அடைவு  வைத்துவிட்டு வரபோகினம் .

அப்படி என்ன தான்யா வைத்திரக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இரா சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ.சுமந்திரன்

எல்லாமே தமிழனத்தை விலைபேசி விற்றதுகள். சிங்கள.. ஹிந்திய எஜமானர்களின் அடிமைகள்.. இதுகள் போய் பஜ்ஜியும் சாயாவும் குடிச்சிட்டு வர கணக்குச் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்

கடனிலும் பொருளாதர்ச் சிக்கல்களிலும் இடர்படும் சிங்களத்துக்கு இப்படி மாத்தி மாத்திப் பூச்சாண்டி காட்டி இந்தியாவிடமிருந்து பெரும்தொகை நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள உதவப்போகிறார்கள். ஐந்து அம்சத்திட்டத்துடனான நெருக்கடி நிலையைச் சமாளிக்கும் ஒரு நிதி உதவியை இந்தியா செய்ய ஆயத்தப்படுத்துவதாக அறியமுடிகிறது. அனேகமாக வடக்குக் கடலின் மீன்பிடுக்கும் உரிமை இந்தியாவின் கைகளுக்குப்போகும் (பகிர்ந்துகொடுக்கும்) ஒருவிடையமும் இத்திட்டத்தில் இருக்கலாம்.

இறுதியில் இந்தியாவே எங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வைப்பெற்றுத்தருமென சம்பந்தரின் பேரனும் சுமந்திரனின் மகனும் இன்னும் இருபதுவருடத்தில் அறிக்கை விடுவார்கள் அப்போது யாழ்கழத்தில் குந்தியிருக்கும் கிழடுகளாகிய நாம் செத்துச் சிவலோகம் போய்விடுவோம் எங்கட பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதையே மறந்திருப்பர் அல்லது இது எங்களது பிரச்சனை இல்லை எனச்சொல்லி அவர்களும் ஓய்வூதிய வயதை எதிர்பார்ப்பார்கள். அதோடு யாவும் நலம்.

  • கருத்துக்கள உறவுகள்

ம் ....போய்???????

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம யாழ்கள நொஸ்டிரடாமஸ் “தான் சொன்னது போல” இந்த விசயம் டெல்லியை விட்டு அமெரிக்காவின் கைக்கு போய்விட்டது என்று ஆரூடம் கூறி ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் இவர்கள் மீண்டும் டெல்லிக்கு காவடி எடுக்கிறார்கள்🤣.

அப்ப வட-கிழக்கில் அமெரிக்கா ஒரு ஹொங்கொங்கை நிறுவ மாட்டாதா கோபால்?

ஹொங்கொங் இல்லாவிட்டால் பரவாயில்லை ஒரு கிங்கொங் ஆவது கிடைக்காதா🤣.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

நம்ம யாழ்கள நொஸ்டிரடாமஸ் “தான் சொன்னது போல” இந்த விசயம் டெல்லியை விட்டு அமெரிக்காவின் கைக்கு போய்விட்டது என்று ஆரூடம் கூறி ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் இவர்கள் மீண்டும் டெல்லிக்கு காவடி எடுக்கிறார்கள்🤣.

அப்ப வட-கிழக்கில் அமெரிக்கா ஒரு ஹொங்கொங்கை நிறுவ மாட்டாதா கோபால்?

ஹொங்கொங் இல்லாவிட்டால் பரவாயில்லை ஒரு கிங்கொங் ஆவது கிடைக்காதா🤣.

அமெரிக்கா சொல்லியிருக்கும் எமக்கு குறைந்தது ஒரு உள்ளக சுயநிர்ணய உரிமையுடனான தீர்வை நோக்கிப் பேசவே விருப்பம். ஆனால் கிந்தியாவே தடையாக உள்ளதென்றிருப்பார்கள்போலும். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nochchi said:

அமெரிக்கா சொல்லியிருக்கும் எமக்கு குறைந்தது ஒரு உள்ளக சுயநிர்ணய உரிமையுடனான தீர்வை நோக்கிப் பேசவே விருப்பம். ஆனால் கிந்தியாவே தடையாக உள்ளதென்றிருப்பார்கள்போலும். 

இருக்கலாம். எமது காலை சுற்றிய பாம்பு இந்த இந்தியா. அமெரிக்கா கொஞ்சம் இளக்கம் காட்டினாலும் தம்மை மீறி எதுவும் நடந்து விட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.

சுமந்திரன் குழுவை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அமரிக்காவில் வைத்து சந்தித்தார் எனும் போது - இந்த நாடகத்தின் இணை இயக்குனர்கள் அவர்கள்தான் என்ற உங்கள் சந்தேகம் நியாயமானதே.

ஈழத்தமிழருக்காக அமெரிக்கா இந்தியாவை பகைக்கும், அமெரிக்கா இந்தியாவை மீறி இதில் இறங்கும் என்று இங்கே மனப்பால் ஊட்டிய கருத்தாளர்கள், சோதிடர்கள், யூடியூபர்களைத்தான் தேடி கொண்டிருக்கிறேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

இருக்கலாம். எமது காலை சுற்றிய பாம்பு இந்த இந்தியா. அமெரிக்கா கொஞ்சம் இளக்கம் காட்டினாலும் தம்மை மீறி எதுவும் நடந்து விட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.

சுமந்திரன் குழுவை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அமரிக்காவில் வைத்து சந்தித்தார் எனும் போது - இந்த நாடகத்தின் இணை இயக்குனர்கள் அவர்கள்தான் என்ற உங்கள் சந்தேகம் நியாயமானதே.

ஈழத்தமிழருக்காக அமெரிக்கா இந்தியாவை பகைக்கும், அமெரிக்கா இந்தியாவை மீறி இதில் இறங்கும் என்று இங்கே மனப்பால் ஊட்டிய கருத்தாளர்கள், சோதிடர்கள், யூடியூபர்களைத்தான் தேடி கொண்டிருக்கிறேன்🤣

சட்டம்படித்தவர்கள் சாதிப்பார்கள் என்று ஒரு 30 ஆண்டுகள் ஓடின. அபிவிருத்தியென்ற போர்வையில் சிங்களக்குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிப்பத் தொடர்ந்தது. தடுத்தாடிய மென்முறைகள் தோற்று வன்முறைப்போர் வெடித்து 33ஆண்டுகள் ஓடின. ஆனால் சிங்கள-கிந்திய எல்லைகளைக் கடந்து ஒரு அனைத்துலக பரிமாணத்தைத் தொட்டபோது வீழ்த்தப்பட்டோம். மீண்டும் சட்டம்படித்தவர்களின் கையில் தமிழரின் துயரமான வாழ்வு அல்லாடுகிறது. அவர்களுக்கென்ன நாடாளுமன்ற நடை முதல் நல்லுணவுவரை மக்கள் வரிப்பணத்தில், போதாதென்று வாகன பரிவாரங்களுடன் ஈரடுக்குப் பாதுகாப்பவேறு. ஈரவயிற்றுடன் எல்லைக் கிராமங்களில் அப்பாவி மக்கள் மும்முனைத் தாக்குதலை எதிர்கொள்ளும் துயரம் ஒருபுறம் போராடியதற்காகவே பழிவாக்கப்படும் தமிழரகளென மறுபுறம். இவர்களின் வலியறிந்தவர்களால் மட்டுமே நேர்மையான அரசியலைச் செய்யவும் செயற்படுத்தவும் முடியும்.ஒரு சில இளையோரைத் தவிர  இப்போதுள்ள அனைவரும் அது வீடோ இருசக்கர வண்டியோ வீணையோ எல்லாமே ஒன்றுதான்.

நேர்மையும் அர்பணிப்பும் உள்ள தலைமையொன்று உருவாகினால் மட்டுமே சுவாசிக்கமுடியும்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

எல்லாமே தமிழனத்தை விலைபேசி விற்றதுகள். சிங்கள.. ஹிந்திய எஜமானர்களின் அடிமைகள்.. இதுகள் போய் பஜ்ஜியும் சாயாவும் குடிச்சிட்டு வர கணக்குச் சரி. 

செல்வம் கொஞ்சம் முரண்டுபிடித்தவர், ஆனால் சின்ன மிரட்டலுடன் கப்சிப். அவரின் குடும்பம் இந்தியாவில் வசிப்பதால் அவரால் ஆடி அசைய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

ஈழத்தமிழருக்காக அமெரிக்கா இந்தியாவை பகைக்கும், அமெரிக்கா இந்தியாவை மீறி இதில் இறங்கும் என்று இங்கே மனப்பால் ஊட்டிய கருத்தாளர்கள், சோதிடர்கள், யூடியூபர்களைத்தான் தேடி கொண்டிருக்கிறேன்🤣

நான் எனது பதிவை வாபஸ் வாங்குகிறேன்..

 நான் முழுவதும் இந்த பக்கம் வாசிக்காமல் அவசரத்தில் எழுதிட்டன் கோசான் இங்கை யாரையோ குறிப்பட்டு இருக்கிறியள் நான் வெளீல எழுதுற ஊடகவியாதிகள் எண்டு நினைச்சு பதில் எழுதிட்டன்..🤭

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நம்ம யாழ்கள நொஸ்டிரடாமஸ் “தான் சொன்னது போல” இந்த விசயம் டெல்லியை விட்டு அமெரிக்காவின் கைக்கு போய்விட்டது என்று ஆரூடம் கூறி ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் இவர்கள் மீண்டும் டெல்லிக்கு காவடி எடுக்கிறார்கள்🤣.

அப்ப வட-கிழக்கில் அமெரிக்கா ஒரு ஹொங்கொங்கை நிறுவ மாட்டாதா கோபால்?

ஹொங்கொங் இல்லாவிட்டால் பரவாயில்லை ஒரு கிங்கொங் ஆவது கிடைக்காதா🤣.

வடக்கு கிழக்கு (அறிவிக்கப்படாத) இந்தியாவின் கட்டுப்பாட்டில். அவர்கள் மட்டுமே அங்கு அபிவிருத்தி திட்டங்கள், நிவாரணங்கள் எதனையும் வழங்க, செய்ய முடியும். வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய  பிரதேசங்களில் EU & US வின் கட்டுப்பாட்டில். 

இந்த  நடைமுறை குறிப்பிட்ட காலமாக அங்கு  உள்ளது.

5 hours ago, goshan_che said:

இருக்கலாம். எமது காலை சுற்றிய பாம்பு இந்த இந்தியா. அமெரிக்கா கொஞ்சம் இளக்கம் காட்டினாலும் தம்மை மீறி எதுவும் நடந்து விட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.

சுமந்திரன் குழுவை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அமரிக்காவில் வைத்து சந்தித்தார் எனும் போது - இந்த நாடகத்தின் இணை இயக்குனர்கள் அவர்கள்தான் என்ற உங்கள் சந்தேகம் நியாயமானதே.

ஈழத்தமிழருக்காக அமெரிக்கா இந்தியாவை பகைக்கும், அமெரிக்கா இந்தியாவை மீறி இதில் இறங்கும் என்று இங்கே மனப்பால் ஊட்டிய கருத்தாளர்கள், சோதிடர்கள், யூடியூபர்களைத்தான் தேடி கொண்டிருக்கிறேன்🤣

அவர்கள் இணை இயக்குனர்களா அல்லது பார்வையாளர்களா என்பது இன்னும் கொஞ்ச  நாட்களில் தெரியும். இந்தியாவை பகைக்கும் காலம் இன்னும் வரவில்லை. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nochchi said:

சட்டம்படித்தவர்கள் சாதிப்பார்கள் என்று ஒரு 30 ஆண்டுகள் ஓடின. அபிவிருத்தியென்ற போர்வையில் சிங்களக்குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிப்பத் தொடர்ந்தது. தடுத்தாடிய மென்முறைகள் தோற்று வன்முறைப்போர் வெடித்து 33ஆண்டுகள் ஓடின. ஆனால் சிங்கள-கிந்திய எல்லைகளைக் கடந்து ஒரு அனைத்துலக பரிமாணத்தைத் தொட்டபோது வீழ்த்தப்பட்டோம். மீண்டும் சட்டம்படித்தவர்களின் கையில் தமிழரின் துயரமான வாழ்வு அல்லாடுகிறது. அவர்களுக்கென்ன நாடாளுமன்ற நடை முதல் நல்லுணவுவரை மக்கள் வரிப்பணத்தில், போதாதென்று வாகன பரிவாரங்களுடன் ஈரடுக்குப் பாதுகாப்பவேறு. ஈரவயிற்றுடன் எல்லைக் கிராமங்களில் அப்பாவி மக்கள் மும்முனைத் தாக்குதலை எதிர்கொள்ளும் துயரம் ஒருபுறம் போராடியதற்காகவே பழிவாக்கப்படும் தமிழரகளென மறுபுறம். இவர்களின் வலியறிந்தவர்களால் மட்டுமே நேர்மையான அரசியலைச் செய்யவும் செயற்படுத்தவும் முடியும்.ஒரு சில இளையோரைத் தவிர  இப்போதுள்ள அனைவரும் அது வீடோ இருசக்கர வண்டியோ வீணையோ எல்லாமே ஒன்றுதான்.

நேர்மையும் அர்பணிப்பும் உள்ள தலைமையொன்று உருவாகினால் மட்டுமே சுவாசிக்கமுடியும்.  

எமக்கு வேறு வழியில்லை நொச்சி.

யூதர்களை நாம் உதாரணமாக கொள்ள ஆசைப்பட்டால் - அவர்கள் போல் நூற்றாண்டு கணக்கில் விடுதலைக்கு காத்திருக்கவும் தயாராக இருக்க வேண்டும்.

இப்போதைக்கு நிலம் பறிபோகாமல் இருக்கும் ஒரு வழிமுறையை கொண்ட தீர்வு வந்தாலே போதும். அதை வைத்து அடுத்து வரும் சந்ததிகள் மிகுதியை தருணம் கருதி சாதிக்கலாம்.

3 minutes ago, Kapithan said:

வடக்கு கிழக்கு (அறிவிக்கப்படாத) இந்தியாவின் கட்டுப்பாட்டில். அவர்கள் மட்டுமே அங்கு அபிவிருத்தி திட்டங்கள, நிவாரங்கள் எதனையும் வழங்க, ச்ர்ய்ய முடியும். வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய  பிரதேசங்களில் EU & US வின் கட்டுப்பாட்டில். 

அண்மையில் 3ம் நாடு ஒன்றின் கரிசனையை காரணம் காட்டி தீவு பகுதியில் 3 சீன மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் திட்டம் ரத்தாகியுள்ளது. 3ம் நாடு யாரென்பது தெரியும்தானே? (பானிபூரி).

அப்போ சீனாவை மொத்தமாக கைகழுவ இலங்கை ஒத்து கொண்டு விட்டதா?

அப்படி என்றால் எல்லாரும் சேர்ந்து எமக்கு மீளவும் நாமம் போட வாய்ப்பு அதிகம்?

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

அவர்கள் இணை இயக்குனர்களா அல்லது பார்வையாளர்களா என்பது இன்னும் கொஞ்ச  நாட்களில் தெரியும்.

இணை இயக்குனர் தரத்தில் இருந்து அவர்களை இறக்கி விட்டாச்சு என்றாலே அது பெரிய வெற்றிதான்.

ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. சீனாவை வெளியே தள்ள வேண்டும் என்பதால் அமெரிக்காவை உள்ளே விட்டுள்ளார்கள். ஆனால் வெறும் பார்வையாளர் நிலைக்கு போக அவர்களும் விரும்பமாட்டார்கள், அப்படி அவர்களை தரமிறக்கும் தேவை அமரிக்காவுக்கும் இல்லை.

பிகு

என்றாவது ஒரு நாள் இலங்கையில் அமெரிக்க படைகள் தரை இறங்கினால் (பேச்சுக்குத்தான்) அப்போதும் கூட இந்தியாவுடன் சேர்ந்தே இறங்குவார்கள் என்பது என் எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

எமக்கு வேறு வழியில்லை நொச்சி.

யூதர்களை நாம் உதாரணமாக கொள்ள ஆசைப்பட்டால் - அவர்கள் போல் நூற்றாண்டு கணக்கில் விடுதலைக்கு காத்திருக்கவும் தயாராக இருக்க வேண்டும்.

இப்போதைக்கு நிலம் பறிபோகாமல் இருக்கும் ஒரு வழிமுறையை கொண்ட தீர்வு வந்தாலே போதும். அதை வைத்து அடுத்து வரும் சந்ததிகள் மிகுதியை தருணம் கருதி சாதிக்கலாம்.

 

யூதரின் நிலை வேறு. ஈழத்தமிழரின் நிலை வேறு. அவர்கள் தமது இனத்துக்காக எந்த எல்லைவரையும் சென்றுவிடுவர். எம்மவர் அப்படியா?.................
சிங்களத்தின் அரசியல் மதிநுட்பவியூகம் சிறப்பானது. அவர்கள் இனமாகச் சிந்தித்து யால்ரா போடவேண்டிய இடத்தில் போட்டு தாயா பண்ண வேண்டிய இடத்தில் தாயா பண்ணி நகர்வார்கள். இதிலே வள ஆலோசனைகள் வழங்கும் தமிழர்களும் அடக்கம். நில இருப்பைக்கூடக் காப்பதற்கான ஒரு நடைமுறையையோ அல்லது மக்களை அணிதிரட்டிப் போராட்டங்களையோ முன்னெடுக்காது எப்படித் தடுப்பது. எப்படி அனைத்துலக கவனத்துக்குக் கொண்டு செல்வது. மக்களோடு மக்களாக நின்று மக்கள்அணியம் செய்து போராட்டங்களை செய்யாது வெறும் வாயைமென்று பயனில்லை.  

30 minutes ago, goshan_che said:

அண்மையில் 3ம் நாடு ஒன்றின் கரிசனையை காரணம் காட்டி தீவு பகுதியில் 3 சீன மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் திட்டம் ரத்தாகியுள்ளது. 3ம் நாடு யாரென்பது தெரியும்தானே? (பானிபூரி).

அப்போ சீனாவை மொத்தமாக கைகழுவ இலங்கை ஒத்து கொண்டு விட்டதா?

அப்படி என்றால் எல்லாரும் சேர்ந்து எமக்கு மீளவும் நாமம் போட வாய்ப்பு அதிகம்?

 

கிந்தியா தனது கட்டுக்குள் முழு இலங்கையும் இருக்கவேண்டுமென்றே நகர்கிறது. ஆனால் அதனை முதுகில் தடவி நடித்தவாறு மேற்குலகு கையாள்கிறது. அதனைப்புரிந்துகொண்டு வட-கிழக்கில் காலூன்ற முனைகிறது. படைபலப்பிரயோகம் தற்போதைய சூழலில் எடுபடாது. மாலைதீவுவிளையாட்டும் சாத்தியமில்லை. தனக்கு எதிரான சீனநகர்வுகளை இராயதந்திரமொழிகளின் வழியே அணுகி வெட்டக்கூடியதை வெட்டுகிறது. அப்படியே தமிழருக்கு என்பதுபோல் காட்டி நாமம் போட்டவாறே இருக்கிறது.  முன்பேசுட்டியதுபோன்று சரியாதொரு தலைமையும் மக்களின் பலமும் ஒருங்கேயிணைந்தால் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையலாம். ஆனால் பெருச்சாளிகள் விடுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இணை இயக்குனர் தரத்தில் இருந்து அவர்களை இறக்கி விட்டாச்சு என்றாலே அது பெரிய வெற்றிதான்.

ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. சீனாவை வெளியே தள்ள வேண்டும் என்பதால் அமெரிக்காவை உள்ளே விட்டுள்ளார்கள். ஆனால் வெறும் பார்வையாளர் நிலைக்கு போக அவர்களும் விரும்பமாட்டார்கள், அப்படி அவர்களை தரமிறக்கும் தேவை அமரிக்காவுக்கும் இல்லை.

பிகு

என்றாவது ஒரு நாள் இலங்கையில் அமெரிக்க படைகள் தரை இறங்கினால் (பேச்சுக்குத்தான்) அப்போதும் கூட இந்தியாவுடன் சேர்ந்தே இறங்குவார்கள் என்பது என் எண்ணம்.

அமெரிக்கப்படைகள்(சிறிய அளவில்) இறங்கி நிற்பதாக கேள்வி. விரைவில் IPKF (🤪) இறங்கும் என அங்குள்ளவர்களே எதிர்பார்க்கிறார்கள் (ஏதோ நடக்கப்போகிறது என்று அங்குள்ள எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் என்ன? என்றுதான் அவர்களுக்குப் புரியவில்லை. பதட்டமாக உணர்கிறார்கள்)

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

அமெரிக்கப்படைகள்(சிறிய அளவில்) இறங்கி நிற்பதாக கேள்வி. விரைவில் IPKF (🤪) இறங்கும் என அங்குள்ளவர்களே எதிர்பார்க்கிறார்கள் (ஏதோ நடக்கப்போகிறது என்று அங்குள்ள எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் என்ன? என்றுதான் அவர்களுக்குப் புரியவில்லை. பதட்டமாக உணர்கிறார்கள்)

உண்மையாகவா?

நீங்கள் சொல்வதை நம்பாமல் எண்டு இல்லை. ஆனால் சொல்லும் விடயம் நம்ப கடினமாகவே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

உண்மையாகவா?

நீங்கள் சொல்வதை நம்பாமல் எண்டு இல்லை. ஆனால் சொல்லும் விடயம் நம்ப கடினமாகவே இருக்கிறது.

😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உண்மையாகவா?

நீங்கள் சொல்வதை நம்பாமல் எண்டு இல்லை. ஆனால் சொல்லும் விடயம் நம்ப கடினமாகவே இருக்கிறது.

எனக்கும் நம்ப ஆசைதான்..😂

அங்குள்ளவர்களிடம் கேட்டால் அவர்களின் பதட்டத்தைக் கூறுவார்கள்.

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

எமக்கு வேறு வழியில்லை நொச்சி.

யூதர்களை நாம் உதாரணமாக கொள்ள ஆசைப்பட்டால் - அவர்கள் போல் நூற்றாண்டு கணக்கில் விடுதலைக்கு காத்திருக்கவும் தயாராக இருக்க வேண்டும்.

இப்போதைக்கு நிலம் பறிபோகாமல் இருக்கும் ஒரு வழிமுறையை கொண்ட தீர்வு வந்தாலே போதும். அதை வைத்து அடுத்து வரும் சந்ததிகள் மிகுதியை தருணம் கருதி சாதிக்கலாம்.

அண்மையில் 3ம் நாடு ஒன்றின் கரிசனையை காரணம் காட்டி தீவு பகுதியில் 3 சீன மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் திட்டம் ரத்தாகியுள்ளது. 3ம் நாடு யாரென்பது தெரியும்தானே? (பானிபூரி).

அப்போ சீனாவை மொத்தமாக கைகழுவ இலங்கை ஒத்து கொண்டு விட்டதா?

அப்படி என்றால் எல்லாரும் சேர்ந்து எமக்கு மீளவும் நாமம் போட வாய்ப்பு அதிகம்?

 

May be an image of map and text that says 'NEWS The Island epaper.island.lk Chinese firm denies reports it withdrew from green power project for northern islands Published 12 hours ago on 2021/12/4 Kankesanturai Point Pedro 5437 Graona Buraionu 8า97 Sirupiddy West Varani North AKS1 AS19 Jaffna Jafina Chavakachcheri Pungudutiva กัคมปน Pungudutivu Delft Delfs sst AA009 Pallai AAB32 Pooneryn China's SINOSOAR- Hybrid Technology had not withdrawn from the execution of northern power projects as reported by certain Sri Lankan and Indian media outlets, Project Manager, Paul Cao said yesterday.'

இப்படியும் செய்தி வந்துள்ளது .எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவுக்குப் பயந்து சீனா வெளியேறுகின்றது என்றது செய்தி இந்தியாவுக்கு கிளுகிளுப்பாய் இருந்தாலும் அது உண்மையில்லை.அங்குவாழும் மக்களை எதிர்த்துக்கொண்டு ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் வரும் என்று சீனா நினைததிருக்கலாம். அதனால் மாலைதீவில் உள்ள ஆளில்லா தீவுகளைப் பிடித்திருக்கலாம். தரமற்ற உரத்தை ஏற்றிய கப்பல் சிறிலங்கா வேண்டாம் என்று மறுத்த போதிலும் வெளியேறவில்லை. இலங்கை கடற்ப்பரப்பிலே சுற்றித் திரிகிறது என்பதையும் கவனிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

May be an image of map and text that says 'NEWS The Island epaper.island.lk Chinese firm denies reports it withdrew from green power project for northern islands Published 12 hours ago on 2021/12/4 Kankesanturai Point Pedro 5437 Graona Buraionu 8า97 Sirupiddy West Varani North AKS1 AS19 Jaffna Jafina Chavakachcheri Pungudutiva กัคมปน Pungudutivu Delft Delfs sst AA009 Pallai AAB32 Pooneryn China's SINOSOAR- Hybrid Technology had not withdrawn from the execution of northern power projects as reported by certain Sri Lankan and Indian media outlets, Project Manager, Paul Cao said yesterday.'

இப்படியும் செய்தி வந்துள்ளது .எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவுக்குப் பயந்து சீனா வெளியேறுகின்றது என்றது செய்தி இந்தியாவுக்கு கிளுகிளுப்பாய் இருந்தாலும் அது உண்மையில்லை.அங்குவாழும் மக்களை எதிர்த்துக்கொண்டு ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் வரும் என்று சீனா நினைததிருக்கலாம். அதனால் மாலைதீவில் உள்ள ஆளில்லா தீவுகளைப் பிடித்திருக்கலாம். தரமற்ற உரத்தை ஏற்றிய கப்பல் சிறிலங்கா வேண்டாம் என்று மறுத்த போதிலும் வெளியேறவில்லை. இலங்கை கடற்ப்பரப்பிலே சுற்றித் திரிகிறது என்பதையும் கவனிக்கவும்.

உண்மை 'இந்தியாவுக்குப் பயந்து சீனா வெளியேறுகின்றது என்றது செய்தி இந்தியாவுக்கு கிளுகிளுப்பாய் இருந்தாலும் அது உண்மையில்லை' சீனாவின் வியூகம் மக்களைப் பகைக்காத நகர்வாகவே கொள்ளமுடியும். அதேவேளை அவர்கள் இலங்கைத்தீவின் பெரும்பகுதியை(அம்பாந்தோட்டை முதல் கொழும்பு நடல் நகரம் மற்றும் நுரைச்சேலை மின்னிலையம் வீதி உட்கட்டுமானங்கள்...)  தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்தானே. அதனால் இந்தச் சின்ன விடயத்தில் முரண்படாது நகர்கிறது சீனா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

உண்மை 'இந்தியாவுக்குப் பயந்து சீனா வெளியேறுகின்றது என்றது செய்தி இந்தியாவுக்கு கிளுகிளுப்பாய் இருந்தாலும் அது உண்மையில்லை' சீனாவின் வியூகம் மக்களைப் பகைக்காத நகர்வாகவே கொள்ளமுடியும். அதேவேளை அவர்கள் இலங்கைத்தீவின் பெரும்பகுதியை(அம்பாந்தோட்டை முதல் கொழும்பு நடல் நகரம் மற்றும் நுரைச்சேலை மின்னிலையம் வீதி உட்கட்டுமானங்கள்...)  தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்தானே. அதனால் இந்தச் சின்ன விடயத்தில் முரண்படாது நகர்கிறது சீனா.

 

5 hours ago, புலவர் said:

May be an image of map and text that says 'NEWS The Island epaper.island.lk Chinese firm denies reports it withdrew from green power project for northern islands Published 12 hours ago on 2021/12/4 Kankesanturai Point Pedro 5437 Graona Buraionu 8า97 Sirupiddy West Varani North AKS1 AS19 Jaffna Jafina Chavakachcheri Pungudutiva กัคมปน Pungudutivu Delft Delfs sst AA009 Pallai AAB32 Pooneryn China's SINOSOAR- Hybrid Technology had not withdrawn from the execution of northern power projects as reported by certain Sri Lankan and Indian media outlets, Project Manager, Paul Cao said yesterday.'

இப்படியும் செய்தி வந்துள்ளது .எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவுக்குப் பயந்து சீனா வெளியேறுகின்றது என்றது செய்தி இந்தியாவுக்கு கிளுகிளுப்பாய் இருந்தாலும் அது உண்மையில்லை.அங்குவாழும் மக்களை எதிர்த்துக்கொண்டு ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் வரும் என்று சீனா நினைததிருக்கலாம். அதனால் மாலைதீவில் உள்ள ஆளில்லா தீவுகளைப் பிடித்திருக்கலாம். தரமற்ற உரத்தை ஏற்றிய கப்பல் சிறிலங்கா வேண்டாம் என்று மறுத்த போதிலும் வெளியேறவில்லை. இலங்கை கடற்ப்பரப்பிலே சுற்றித் திரிகிறது என்பதையும் கவனிக்கவும்.

நீங்கள் இருவரும் சொல்வதை வைத்து பார்த்தால் இலங்கையில் இன்னும் சீனா-இந்தியா/யூஎஸ் - இழுபறி நிலைதான் நீடிக்கிறது?

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2021 at 07:24, goshan_che said:

 

ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. சீனாவை வெளியே தள்ள வேண்டும் என்பதால் அமெரிக்காவை உள்ளே விட்டுள்ளார்கள். ஆனால் வெறும் பார்வையாளர் நிலைக்கு போக அவர்களும் விரும்பமாட்டார்கள், அப்படி அவர்களை தரமிறக்கும் தேவை அமரிக்காவுக்கும் இல்லை.

பிகு

என்றாவது ஒரு நாள் இலங்கையில் அமெரிக்க படைகள் தரை இறங்கினால் (பேச்சுக்குத்தான்) அப்போதும் கூட இந்தியாவுடன் சேர்ந்தே இறங்குவார்கள் என்பது என் எண்ணம்.

சீனா ....வடக்கு கிழக்கு,தென்னிலங்கை போன்றவற்றில் மாவோயிஸ்ட் கிளர்ச்சியை ஊக்கப்படுத்தும்...வடக்கு கிழக்கில் ஏற்கனவே ஒரு சில சிவப்பு தொப்பிகாரார் நிற்கினம்.....இவர்கள் தென்னிலங்கை சிவப்பு தொப்பியுடன் கூட்டு சேர்ந்து ....கேரளா தமிழ்நாடு போன்ற இடங்களில் கெரில்லா தாக்குதல் செய்ய வாய்ப்புண்டு ....சிங்கள அரசும் சில சமயத்தில் உதவி செய்ய வாய்புண்டு.....

தாய்வானில் இந்தியா அதிகம் மூக்கை நுழைப்பதால் சிறிலங்காவில் சீனா  பதிலடி கொடுக்க கெரில்லா முறைகளை பயன்படுத்தும் ....பினாமி யார் என்பது கேள்விக்குறி...

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2021 at 03:29, goshan_che said:

ஈழத்தமிழருக்காக அமெரிக்கா இந்தியாவை பகைக்கும், அமெரிக்கா இந்தியாவை மீறி இதில் இறங்கும் என்று இங்கே மனப்பால் ஊட்டிய கருத்தாளர்கள், சோதிடர்கள், யூடியூபர்களைத்தான் தேடி கொண்டிருக்கிறேன்

இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு கூடிப்போச்சுது 
ஈழத் தமிழர் அரசியல் பிரதிநிதிகள் என்ற பெயரில் வச்சிருக்கிறது பூரா Raw வின்  Proxy கூட்டம், இந்த லட்சணத்தில்  அமெரிக்க இறங்கிறதாவது, இந்தியா பிளக்கிறதாவது  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.