Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!

என்.கே.அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

spacer.png

எதிர்வரும்  பெப்ரவரி வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு 89 வயது கழிந்து, தனது 90வது ஆண்டில் அவர் அடியெடுத்து வைக்க இருக்கிறார். பிரித்தானிய முடியின் கீழான கொலனியாக இலங்கை இருந்தபோது பிறந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன். டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பிறந்தவர். இலங்கை 1948ல் சுதந்திரம் பெறும் போது அவருக்கு 15 வயது கழிய ஒரு நாள் குறைவு.

இலங்கைச் சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியாக பணிபுரிந்த அவர், 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனது 44 ஆவது வயதில், திருகோணமலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்கிறார். 1983 செப்டெம்பரில் பாராளுமன்ற ஆசனத்தை இழந்த இரா. சம்பந்தன், அதன் பின்னர் 1989, மற்றும் 1994 தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தார்.

1994 ஆம் ஆண்டு தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்த சட்டத்தரணி அருணாசலம் தங்கத்துரை, 1997 ஜூலை 5 ஆம் திகதி திருகோணமலை ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி நிகழ்வில் கலந்துகொண்டு வௌியேறும் போது அடையாளமறியா நபர்களினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள்தான் படுகொலை செய்தார்கள் என்று பொலிஸ் விசாரணைகள் குறிப்பிட்டிருந்தன. அருணாசலம் தங்கத்துரையின் படுகொலையின் பின், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு 1997ஆம் ஆண்டு சம்பந்தன் நியமிக்கப்பட்டார். 1983ஆம் ஆண்டு பாராளுமன்ற ஆசனத்தை இழந்த சம்பந்தன் 1997 ஆம் ஏறத்தாழ 14 ஆண்டுகளின் பின் பாராளுமன்றம் ஏகினார். மறுபடியும் 2000ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட சம்பந்தன், 2001ஆம் ஆண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் 2004, 2010, 2015, மற்றும் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். 2015 – டிசெம்பர் 2018 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததன் மூலம், அந்தப் பதவியை வகித்த இரண்டாவது தமிழர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார். தனது 89 வருட வாழ்வில் 29 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார் இரா. சம்பந்தன்.

இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றின் முக்கிய காலகட்டங்கள், திருப்பு முனைகள் என்பவற்றை நேரடியாகப் பார்த்த, அதில் பலவற்றில் பங்காளியாக இருந்த பழுத்த அனுபவம் மிக்க தலைவர் இரா. சம்பந்தன் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதுபோலவே பாராளுமன்ற மரபுகளை, நடைமுறைகளை நன்கறிந்த, அனுபவம் மிக்க சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுள் இரா. சம்பந்தன் முக்கியமானவர் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இன்று கூட அவர் பாராளுமன்றத்தில் எழுந்து உரையாற்றினால், அந்த உரை பெருமளவிற்கு அமைதியாக கேட்கப்படுமளவிற்கு மதிப்பு மிக்க மனிதராகவே அவர் பார்க்கப்படுகிறார். அண்மை ஆண்டுகளில் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சந்தர்ப்பங்கள் குறைவு என்றாலும், அவர் ஆற்றியிருந்த ஒரு சில உரைகள் கூட ஆழமானதாகவும், அர்த்தபுஷ்டியுள்ளவையாகவும் அமைந்திருந்தன.

அவரது சில பாராளுமன்ற உரைகள், இலங்கைப் பாராளுமன்றம் கண்ட ஆகச் சிறந்த உரைகள் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும் தகை மிக்கவை. ஆனால் தற்போது அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதில்லை என்பது மட்டுமல்ல, பாராளுமன்றத்திற்கு செல்வது கூட மிகக் குறைவு என்பது வருத்தத்திற்குரிய விடயமாக இருக்கிறது.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பை அளவிடும் சுயாதீன இணையத்தளமான மந்த்ரி.எல்கே பங்களிப்பு அளவீடுகளின் படி சம்பந்தன் அவர்களை 225 உறுப்பினர்களில், 219வது இடத்தில் தரமிட்டுள்ளது. இந்த முறை சம்பந்தன் அவர்கள் வெறும் 3 முறையே பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது.

கொவிட்-19 அபாயம், அவரது வயது மூப்பு, உடல்நிலை என சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காததற்கு பல நியாயங்களும், காரணகாரியங்களும் சொல்லப்படலாம். அவை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் முதற் கடமை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளுதலாகும். அதற்காகத்தான் அவர்கள் மக்கள் பணத்தில் ஊதியம் பெறுகிறார்கள். பாராளுமன்ற அமர்விலும், செயற்பாடுகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காவிட்டால், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதன் நோக்கமும், பயனும்தான் என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

பாராளுமன்ற உறுப்பினருக்கு சம்பளம், பலவகைமைப்பட்ட கொடுப்பனவுகள், தனிப்பட்ட ஊழியர்கள் சிலருக்கான சம்பளங்கள், ஒவ்வோர் அமர்விலும் கலந்துகொள்ள கொடுப்பனவு, குறைந்த விலையில் பாராளுமன்றத்தில் உணவு, அவர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என ஏகப்பட்ட சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அளவு போதுமானதா இல்லையா என்ற விவாதம் ஒருபுறமிருக்க, பெறும் சம்பளத்திற்கும், சலுகைகளுக்கும் ஏற்ற பங்களிப்பை அவர்கள் வழங்குகிறார்களா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. குறிப்பாக இரா. சம்பந்தன் அவர்களைப் போன்ற பழுத்த அனுபவமிக்க பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஒருவேளை பலர் சொல்வது போல அவர் வயத மூப்பின் காரணமாக, அல்லது உடல்நிலையின் காரணமாக கலந்துகொள்ள முடியாத நிலையிலிருக்கிறார் என்றால், அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற விரும்பாவிட்டாலும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ஓய்வுபெற்று திருக்கோணமலையில் இன்னொரு இளம் அரசியல்வாதிக்கு வாய்ப்பளித்தலே உசிதமான காரியம்.

44 வயதில் பாராளுமன்றத்திற்கு வந்த இரா. சம்பந்தன், 89 வயதிலும், தன்னால் திருகோணமலை மக்களுக்கு களத்தில் நின்று முழுமையாகப் பணி செய்ய முடியாத நிலையிலும் கூட தனது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இறுகப்பற்றிக் கொண்டிருப்பது நியாயமா என்ற கேள்வியை அவரும், அவரது ஆதரவாளர்களும் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

அண்மையில் சம்பந்தன் அவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்ற கருத்து அதிகமாகப் பேசப்படும் நிலையில், “வசதிகளை அனுபவிப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை பெறாமல் அரசியலில் இருந்து நான் விடைபெறப் போவதில்லை” என்ற பகட்டாரவாரப் பதிலை வழங்கியிருந்தார். அரசியலிலிருந்து விலகுவதும், விலகாமல் இருப்பதும் அவர் விருப்பத்தின் பாற்பட்டது. ஆனால், பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பங்குபற்ற முடியாத நிலையில்,  திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக மக்களை தொடர்ந்து சந்தித்து தனது கடமைகளை ஆற்ற முடியாத நிலையில் அவர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு விடயமல்ல.

அவரது அனுபவமும், அறிவும், அதன்பாலான ஆலோசனைகளும் தமிழர் அரசியலுக்கு தேவையான உரம். ஆனால் அவரது பங்களிப்பு அந்தளவில் அமைவதுதான் காலத்திற்கேற்றது. சம்பந்தன் அவர்களுக்கு பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடும் வாய்ப்புள்ளது, அவர் ஓய்வுபெற்றால் அடுத்த தலைவர் யாரென்ற பிரச்சினை வரும் போன்றவை சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பதற்கான நியாயமாக காரணங்கள் அல்ல. சம்பந்தன் அவர்கள் அரசியலில் தொடரும் வரைதான் மேற்சொன்ன பிரச்சினைகள் ஏற்படாது என்பது, மேற்சொன்ன பிரச்சினைகளுக்கு தீர்வல்ல, மாறாக பிரச்சினையின் தீவிரத்தை தள்ளிப்போடும் வழி மட்டும்தான்.

தனது மிகநீண்ட அரசியல் வாழ்வில் தமிழர் அரசியலுக்கு கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ள சம்பந்தன் அவர்களின் சிறப்பை வரலாறு சொல்லும், ஆனால் அந்த வரலாற்றில் அவர் இளைஞர்களுக்கு வழிவிடாது, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தானே தன் இறுதிவரை பற்றிக்கொண்டிருந்தார் என்பது ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிடக்கூடாது.

சம்பந்தன் ஐயா, நீங்கள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை அரசியலில் இருக்க விரும்பினால், கூட்டமைப்பின் தலைவராக, ஆலோசகராக, வழிகாட்டியாக இருங்கள். ஆனால் பாராளுமன்றத்திற்கே போகாமல் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது ஏற்புடையதல்ல. யாழ்ப்பாணத்திற்கு அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளை அறிமுகப்படுத்திய நீங்கள், திருகோணமலை யில் அதைச் செய்யவில்லை. இனியும் அந்த திருகோணமலை ஆசனத்தை நீங்கள் பற்றிக்கொண்டிருந்தால், திருகோணமலை மக்கள் வரும் தேர்தலில் உங்களைத் தோற்கடித்து அதை உங்களுக்குப் புரிய வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்படுவர். அது தமிழருக்கும், தமிழர் அரசியலுக்கும் அழகானதொன்றாக இருக்காது.

ஆகையால் ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஓய்வு-பெறுங்கள்-சம்பந்தன்-ஐயா/91-288032

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சம்பந்தர்…. 89 வயது மட்டும், தமிழ் இனத்திற்காக,

மாடாக உழைத்து… ஓடாக தேய்ந்து போனார். 🤪

மிச்சத்தை… சுமந்திரன் பார்த்துக் கொள்வான்(ர்) 😂

இனியாவது… நீங்கள்  ஒய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்?

- மாவை, சுமந்திரன், ஸ்ரீதரன் -

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்?

- மாவை, சுமந்திரன், ஸ்ரீதரன் -

மாவையும், சுமந்திரனும்… பென்சன் எடுக்கிற வயசு தானே…… 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

இப்ப கொஞ்ச நாளா தம்பி ஒரு மார்க்கமாத்தான் போறாரு.

49 minutes ago, தமிழ் சிறி said:

மாவையும், சுமந்திரனும்… பென்சன் எடுக்கிற வயசு தானே…… 😂🤣

போட்ட முதல இன்னமும் எடுக்கல.

1 hour ago, goshan_che said:

அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்?

- மாவை, சுமந்திரன், ஸ்ரீதரன் -

இவர்கள் அடிபட்டு சாகாமல் இருக்க வேண்டுமென்றால் அவர் இருந்தாகணும்.

5 hours ago, தமிழ் சிறி said:

பாவம் சம்பந்தர்…. 89 வயது மட்டும், தமிழ் இனத்திற்காக,

மாடாக உழைத்து… ஓடாக தேய்ந்து போனார். 🤪

மிச்சத்தை… சுமந்திரன் பார்த்துக் கொள்வான்(ர்) 😂

இனியாவது… நீங்கள்  ஒய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா. 🤣

அவருக்கும் விருப்பம் தான்.

ஆனாலும் மக்கள் தீக்குளித்தா என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மாவையும், சுமந்திரனும்… பென்சன் எடுக்கிற வயசு தானே…… 😂🤣

திமுகவில் இதுதான் இளைஞர் அணித்தலைவர் ஆக சரியான வயசு🤣.

ஆகவே ஆகலும் பிந்தி போடாமல், வயசு குறைவெண்டு பாக்காமல் மாவை ஐயா போன்ற துடிப்புள்ள இளைஞர்களிடம் தலைமை பொறுப்பை கொடுத்து சம்பந்தன் ஐயா இளம் தலைவர்களுக்கு வழி விட வேண்டும்.

29 minutes ago, Kapithan said:

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

சித்திர குப்தனின் அக்கவுண்டை hack பண்ணினால்தான் உண்டு 🤣.

18 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் அடிபட்டு சாகாமல் இருக்க வேண்டுமென்றால் அவர் இருந்தாகணும்.

இல்லை - பிரிஞ்சால் மூவருக்கும் ஆபத்து. மாவைக்கு பெயரளவில் அதிகாரத்தை கொடுத்து சும் பூந்து விளாடப்பாப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

அஷோக்பரன் நல்ல நோக்கத்தில் தான் சொல்கிறார். ஆனால், கூட்டமைப்பிற்குள் நிகழும் சாதாரண விடயங்களைக் கூட தங்கள் தீவிர தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்துவதற்குப் பாவிக்க ஒரு குழு எப்பவும் காத்திருக்கும்.

சம்பந்தர் பாராளுமன்றம் போய் பேசுவதால் மேலதிக நன்மைகள் எதுவும் கிடைத்துவிடாது, எனவே அதனால் இழப்பில்லை. ஆனால், ஒரு figurehead ஆக அவர் தான் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சிக்கு இருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆலோசகராக இருந்து செயற்படலாம். குகதாசனுக்கு(Canada) அப்பதவியை வழங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

கட்டுரையும். அரசியலில் இருக்கும்படி தான் சொல்லுது......பதில் எழுதும் போது நன்றாக வாசித்து விளங்கிய பின் எழுதவும்     பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கும்படி. கேட்கின்றார்கள்.   ...சரியான கேள்வி இல்லையா  ?

2 hours ago, Justin said:

ஒரு figurehead ஆக அவர் தான் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சிக்கு இருக்க வேண்டும். 

ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kandiah57 said:

 

ஏன்?

பிராண்ட் பெறுமதி. சம்பந்தர் விலகினால் அடுத்து கூட்டமைப்பு சார்பில் உலகத்திற்கு முகமாக இருக்கப் போகிறவர்கள் இரு வகையினர்: 1. முயற்சிகள் செய்து சர்ச்சைக்குள்ளாவோர், 2. முயற்சியெதுவும் செய்யாமல் சர்ச்சைக்குள்ளாகாமல் இருப்போர்.

இந்த இரு தரப்பினரையும் உலகம் தமிழர்களின் முகமாகப் பார்க்காமல் இருக்க, சம்பந்தரின் தலைமை அவசியம்! 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Justin said:

பிராண்ட் பெறுமதி. சம்பந்தர் விலகினால் அடுத்து கூட்டமைப்பு சார்பில் உலகத்திற்கு முகமாக இருக்கப் போகிறவர்கள் இரு வகையினர்: 1. முயற்சிகள் செய்து சர்ச்சைக்குள்ளாவோர், 2. முயற்சியெதுவும் செய்யாமல் சர்ச்சைக்குள்ளாகாமல் இருப்போர்.

இந்த இரு தரப்பினரையும் உலகம் தமிழர்களின் முகமாகப் பார்க்காமல் இருக்க, சம்பந்தரின் தலைமை அவசியம்! 

நீங்கள் ஒரு டொக்டர் இப்படி சொல்லக்கூடாது காரணம் உயிர் மரணம் அடையும் எனபது உங்களுக்கு ஐயம்திரிபுறத்தெரியும்.   அடிபாடு.  கருத்து வேறுபாடு   எங்கேயும் எப்போதும் இருக்கும் அதற்காக 89 வயோதிபரை  அவசியம் என்று கூறக்கூடாது.   தொடர்ச்சியாக இளம் தலைவர்களை உருவாக்குவது அவசியம் என்று கூறலாம் இல்லையா   ? ஜேர்மனியில் அடிக்கடி கூறுவது உண்டு பயிற்சி ஒருவரை திறமைசாலியாக மாற்றும்    உதாரணம் சொன்னால்   ஜேர்மனியில் முதலாவது பந்து அடி அணியில் 18 குறுப்புண்டு  இவ்வருடம் 15...16...17...18....ஆம் இடத்தில் உள்ளது அடுத்த வருடம் 1...2...3....என வரும்    காரணம் பயிற்ச்சியாளர் மற்றும் பயிற்சி ஆகும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பயிற்சி ஒருவரை திறமைசாலியாக மாற்றும்    உதாரணம் சொன்னால்   ஜேர்மனியில் முதலாவது பந்து அடி அணியில் 18 குறுப்புண்டு  இவ்வருடம் 15...16...17...18....ஆம் இடத்தில் உள்ளது அடுத்த வருடம் 1...2...3....என வரும்    காரணம் பயிற்ச்சியாளர் மற்றும் பயிற்சி ஆகும். 

திறமைகளை பயிற்சி செய்து மேலும் மேலும் மேம்படுத்த முடியும் கந்தையா அண்ணா  பயிற்சி பற்றி சொன்னதை முழுமையாக ஏற்று கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Justin said:

பிராண்ட் பெறுமதி. சம்பந்தர் விலகினால் அடுத்து கூட்டமைப்பு சார்பில் உலகத்திற்கு முகமாக இருக்கப் போகிறவர்கள் இரு வகையினர்: 1. முயற்சிகள் செய்து சர்ச்சைக்குள்ளாவோர், 2. முயற்சியெதுவும் செய்யாமல் சர்ச்சைக்குள்ளாகாமல் இருப்போர்.

இந்த இரு தரப்பினரையும் உலகம் தமிழர்களின் முகமாகப் பார்க்காமல் இருக்க, சம்பந்தரின் தலைமை அவசியம்! 

நான் நினைக்கின்றேன் என்னைப்போல் சம்பந்தரோடு பல மேடைகளில் நேருக்கு நேர் சந்தித்து கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்த மனிதர்கள் யாழ்களத்தில் இல்லை என்று.......

நான் என்றுமே அவர்களுக்கு ஆதரவாளானகாவே இருந்துள்ளேன். சம்பந்தன் அனுபவம் உள்ள அரசியல் தலைவர். சர்வதேச அரசியல் வட்டாரங்களில் தெரிந்த முகம்.2009க்கு பின்னர் ஈழத்தமிழர் பிரச்சனையென்றால் சர்வதேச வட்டாரத்திற்கு தெரிந்த ஒரே விலாசம் சம்பந்தன் மட்டுமே.அது மட்டுமில்லாமல் எதிர்க்கட்சி கதிரை கூட அவருக்கு வந்து போயுள்ளது. அதன் பலமோ கொஞ்ச நஞ்சமல்ல.....ஈழத்தமிழர் பிரச்சனை சம்பந்தமாக இவரை மட்டுமே சர்வதேசம் இது வரைக்கும் சந்தித்துள்ளது. இவர் நினைத்திருந்தால் சிங்கள இனவாத அரசிற்கு 2012லையே சர்வதேச ஆதரவுடன் பல முட்டுக்கட்டைகளை போட்டிருக்கலாம். இவர் நினைத்திருந்தால் நல்லாட்சி காலத்திலையே பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். 

புலிகளின் பயங்கரவாதத்தை அடக்குங்கள் அரசியல் ரீதியாக தீர்வு காண்போம். இந்த வசனம் யாருக்காவது ஞாபகம் இருக்கின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

கட்டுரையும். அரசியலில் இருக்கும்படி தான் சொல்லுது......பதில் எழுதும் போது நன்றாக வாசித்து விளங்கிய பின் எழுதவும்     பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கும்படி. கேட்கின்றார்கள்.   ...சரியான கேள்வி இல்லையா  ?

ஏன்?

உங்களுக்கு என்ன பிரச்சனை  கந்தையர்?

அடசியலில் இருப்பதற்கும்(😏) நாடாழுமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் இடையிலான வேறுபாடு தெரியாதா உங்களுக்கு? 

தெரியாவிட்டால் தெரிந்துகொள்ளுங்கள். 

15 hours ago, goshan_che said:

திமுகவில் இதுதான் இளைஞர் அணித்தலைவர் ஆக சரியான வயசு🤣.

ஆகவே ஆகலும் பிந்தி போடாமல், வயசு குறைவெண்டு பாக்காமல் மாவை ஐயா போன்ற துடிப்புள்ள இளைஞர்களிடம் தலைமை பொறுப்பை கொடுத்து சம்பந்தன் ஐயா இளம் தலைவர்களுக்கு வழி விட வேண்டும்.

சித்திர குப்தனின் அக்கவுண்டை hack பண்ணினால்தான் உண்டு 🤣.

இல்லை - பிரிஞ்சால் மூவருக்கும் ஆபத்து. மாவைக்கு பெயரளவில் அதிகாரத்தை கொடுத்து சும் பூந்து விளாடப்பாப்பார்.

பிரம்மச் சுவடி என்ர பரணிலதான் இருக்கு சோசான் 🤣🤣

16 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப கொஞ்ச நாளா தம்பி ஒரு மார்க்கமாத்தான் போறாரு.

ஏதோ ஒரு மாற்றம் வரப்போகின்றது என்கிற  நம்பிக்கைதான் பிரியன். வேறென்ன,சம்பந்தன் எனக்கு என்ன உறவு முறையானவரா...? 😀

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

ஏதோ ஒரு மாற்றம் வரப்போகின்றது என்கிற  நம்பிக்கைதான் பிரியன். 

கடல் வத்தும்…. என்று, குடல் வத்தி செத்துதாம்… கொக்கு. 😂 🐟  🦢 🦆 🦥

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கடல் வத்தும்…. என்று, குடல் வத்தி செத்துதாம்… கொக்கு. 😂🐟  🦢🦆🦥

நீங்கள் கூறுவதும் உண்மைதான்  சிறி. ஆனால் இறுதியில்  நாங்கள் எல்லோரும் மனிதர்கள்தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நீங்கள் கூறுவதும் உண்மைதான்  சிறி. ஆனால் இறுதியில்  நாங்கள் எல்லோரும் மனிதர்கள்தானே. 

சரி அப்ப நாங்களும் குடல் வற்றி சாவம் எண்டுறியள்! 

  • கருத்துக்கள உறவுகள்

//“வசதிகளை அனுபவிப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை பெறாமல் அரசியலில் இருந்து நான் விடைபெறப் போவதில்லை” என்ற பகட்டாரவாரப் பதிலை வழங்கியிருந்தார்.//

 

👆இது அதுல்ல..👇

எல்லா கோட்டையும் அழிங்க... நா முதல்ல இருந்து சாப்புடுரன்…😂😂

spacer.png

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

உங்களுக்கு என்ன பிரச்சனை  கந்தையர்?

அடசியலில் இருப்பதற்கும்(😏) நாடாழுமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் இடையிலான வேறுபாடு தெரியாதா உங்களுக்கு? 

தெரியாவிட்டால் தெரிந்துகொள்ளுங்கள். 

எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை இலங்கைப் பாராளுமன்றத்துக்கும்  வயோதிபர் இல்லத்திற்க்கும். வேறுபாடு தெரியவில்லை உங்களால் விளக்கம் தர முடியுமா  ?வழக்கம் போல அரைகுறையாக வாசித்து விட்டு  பதில் எழுதவும் 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை இலங்கைப் பாராளுமன்றத்துக்கும்  வயோதிபர் இல்லத்திற்க்கும். வேறுபாடு தெரியவில்லை உங்களால் விளக்கம் தர முடியுமா  ?வழக்கம் போல அரைகுறையாக வாசித்து விட்டு  பதில் எழுதவும் 🤣😂

என்னை அரை குறை என்று கூறுகிறீர்களா கந்தையர் ? யோசிக்காதீர்கள், நான் உங்களை அவ்வாறு கூறமாட்டேன். 😉

1) அடுத்த ஓரிரு வருடங்களுக்குள் இலங்கையில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கிறேன்.

2) அவ்வாறான சூழலில் முதிர்ந்த, எல்லாத் தரப்பினர்களினாலும் ( எங்களைத் தவிர 🤪) ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவராக உள்ள ஒருவர் எங்களுக்குத் தேவை என நம்புகிறேன். 

இந்தக் காரணங்களுக்காகத்தான் தற்சமயம் சம்பந்தன் அரசியலிலும் நாடாளுமன்றத்திலும் இருக்க வேண்டும்  என கூறுகிறேன். 

(அதுசரி, சம்பந்தன் அரசியலில் இருந்து விலகினால் சுமந்திரன்தான் அந்த இடத்தை நிரப்பப்போகிறார் என நம்புகிறேன். இது உங்களுக்கு உவப்பானதா கான்டியா ? [கான்டியா; கந்தையாவை ஆங்கிலத்தில் உச்சரித்துப் பார்த்தேன் அம்புட்டுதே 😉]

 

 

6 hours ago, Eppothum Thamizhan said:

சரி அப்ப நாங்களும் குடல் வற்றி சாவம் எண்டுறியள்! 

நிச்சயமாக 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, Kapithan said:

என்னை அரை குறை என்று கூறுகிறீர்களா கந்தையர் ? யோசிக்காதீர்கள், நான் உங்களை அவ்வாறு கூறமாட்டேன். 😉

1) அடுத்த ஓரிரு வருடங்களுக்குள் இலங்கையில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கிறேன்.

2) அவ்வாறான சூழலில் முதிர்ந்த, எல்லாத் தரப்பினர்களினாலும் ( எங்களைத் தவிர 🤪) ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவராக உள்ள ஒருவர் எங்களுக்குத் தேவை என நம்புகிறேன். 

இந்தக் காரணங்களுக்காகத்தான் தற்சமயம் சம்பந்தன் அரசியலிலும் நாடாளுமன்றத்திலும் இருக்க வேண்டும்  என கூறுகிறேன். 

(அதுசரி, சம்பந்தன் அரசியலில் இருந்து விலகினால் சுமந்திரன்தான் அந்த இடத்தை நிரப்பப்போகிறார் என நம்புகிறேன். இது உங்களுக்கு உவப்பானதா கான்டியா ? [கான்டியா; கந்தையாவை ஆங்கிலத்தில் உச்சரித்துப் பார்த்தேன் அம்புட்டுதே 😉]

 

சாகும் வரைக்கும் விசுவாசம்......வாழ்க வளர்க.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

சாகும் வரைக்கும் விசுவாசம்......வாழ்க வளர்க.

எதி விசுவாசம் என்று கூறுங்கள்  கு சாமியார்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Kapithan said:

எதி விசுவாசம் என்று கூறுங்கள்  கு சாமியார்? 

சாகும் வரைக்கும் ஐயாவின்ரை காலை சுத்தி சுத்தியே வருவம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சாகும் வரைக்கும் ஐயாவின்ரை காலை சுத்தி சுத்தியே வருவம்.

நான்  எழுதியதை திரும்பவும் ஒருமுறை  வாசியுங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.