Jump to content

ரூபாயின் பெறுமதி... மேலும் வீழ்ச்சி: டொலரின் பெறுமதி 282 ரூபாயாக அதிகரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எகிறியது அமெரிக்க டொலரின் பெறுமதி..!

ரூபாயின் பெறுமதி... மேலும் வீழ்ச்சி: டொலரின் பெறுமதி 282 ரூபாயாக அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 272 ரூபாயாகவும் விற்பனை விலை 282 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்முதல் விலை 359 ரூபாயாகவும் விற்பனை விலை 372 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

அவுஸ்ரேலிய டொலரின் விற்பனை விலை 210 ரூபாயாகவும் கனேடிய டொலரின் விற்பனை விலை 225 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பணம், அதி உச்சமாக வீங்கியது!

March 22, 2022

spacer.png

இலங்கை பொருளாதாரத்தில் இன்று அதிகூடிய பணவீக்க வீதம் பதிவாகியுள்ளது. முன்பு 16.8 சதவீதமாக இருந்த பணவீக்கமானது இன்று 17.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. இந்த அதிகரிப்பு, நாட்டில் பதிவு செய்யப்பட்ட பணவீக்கத்தின் உயர்ந்தபட்ச சதவீதமாகும்.

பணவீக்கத்தின் அடிப்படையில் ஆசிய பிராந்தியத்தில் இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

https://globaltamilnews.net/2022/174481

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

பணவீக்கத்தின் அடிப்படையில் ஆசிய பிராந்தியத்தில் இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

பயங்கரவாதத்தினை எப்படி முறியடிப்பது? என்று சர்வதேச நாடுகளுக்கு பாடம் நடத்திய நந்தன, இதற்கும் ஒரு பாடம் எடுக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதும் கள்ள சந்தையில் பணம் மாற்றலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போதும் கள்ள சந்தையில் பணம் மாற்றலாமா?

நாடு இருக்கிற நிலைமையை பார்க்க…. கள்ள சந்தையில்,
கழுத்தை வெட்டி அனுப்பி விடுவார்கள் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போதும் கள்ள சந்தையில் பணம் மாற்றலாமா?

அமெரிக்க டொலர் 305 போனதாம், 2/3 நாளுக்கு முன்னர்.
ஒவ்வொரு நாளும் விழுந்து கொண்டு போகுது அண்ணை. அவசிய/அத்தியாவசிய காரணங்களுக்காக அல்லாமல் இந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பவேண்டாம் என குணா கவியழகன் சொல்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஏராளன் said:

அமெரிக்க டொலர் 305 போனதாம், 2/3 நாளுக்கு முன்னர்.
ஒவ்வொரு நாளும் விழுந்து கொண்டு போகுது அண்ணை. அவசிய/அத்தியாவசிய காரணங்களுக்காக அல்லாமல் இந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பவேண்டாம் என குணா கவியழகன் சொல்றார்.

எல்லா பொருட்களுக்கும் அங்கு line ஆ, இல்லை ஒரு சில பொருட்களுக்கு மட்டுமா? மற்ற பொருட்கள் தாராளமாக கிடைக்கிறதா? உங்கள் பக்கங்களில் மக்கள் எப்பிடி சமாளிக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

எல்லா பொருட்களுக்கும் அங்கு line ஆ, இல்லை ஒரு சில பொருட்களுக்கு மட்டுமா? மற்ற பொருட்கள் தாராளமாக கிடைக்கிறதா? உங்கள் பக்கங்களில் மக்கள் எப்பிடி சமாளிக்கிறார்கள்?

நாட்டை விட்டு ஓடுகிறார்கள் அரசியல் வாதிகள் தொடங்கி சாதாரண மக்கள் வரை என்றால், சாதாரண தட்டுப்பாடு கிடையாது என்று சொல்வதற்கு எதுவுமே கிடையாது. எங்கள் பக்கத்தில் தண்ணீருக்கு தட்டுப்பாடு கிடையாது. காற்று, சூரிய வெளிச்சம் கடவுள் தந்தது தாராளமாக கிடைக்கிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நீர்வேலியான் said:

எல்லா பொருட்களுக்கும் அங்கு line ஆ, இல்லை ஒரு சில பொருட்களுக்கு மட்டுமா? மற்ற பொருட்கள் தாராளமாக கிடைக்கிறதா? உங்கள் பக்கங்களில் மக்கள் எப்பிடி சமாளிக்கிறார்கள்?

பெற்றோல் தொடக்கத்தில் தட்டுப்பாடு, இப்போ 254 ரூபாக்கு ஓரளவு கிடைக்கிறது. டீசல், மண்ணெண்ணெய், காஸ் கடும் தட்டுப்பாடு. அரிசி 160 இல் இருந்து 210 ஆகிவிட்டது. சீனி, பால்மா மிகக்குறைந்த அளவில் கூடிய விலைக்கு வாங்கலாம். நாளாந்தம் உழைக்கும் மக்கள் பாடு இனிமேல் கடினம்.
சேமிப்புப் பழக்கமும் சுயசார்பும் எங்கட மக்களை தப்ப வைக்கும் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பிரித்தானிய பவுண்ஸ் 398/= 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, MEERA said:

நேற்று பிரித்தானிய பவுண்ஸ் 398/= 

Euros = 323 Rupees

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎03‎-‎2022 at 08:46, MEERA said:

நேற்று பிரித்தானிய பவுண்ஸ் 398/= 

மீரா இப்ப ஊரிலையோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரதி said:

மீரா இப்ப ஊரிலையோ

ஓம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2022 at 08:46, MEERA said:

நேற்று பிரித்தானிய பவுண்ஸ் 398/= 

200 ரூபா போகையில் 10 லட்சம் பவுனை முதலீடு செய்தவர்களின் ஐந்து லட்சம் பவுன் காணாமல் போயிருக்கும் அவர்களின்  கண்ணுக்கு முன்னால் .

தமிழருக்கு நிரந்தர விடிவு இல்லாமல் கோத்தா என்ன உத்தரவாதத்தில் புலம்பெயர் தமிழரை கூப்பிடுகிறார் ரதி இதே களத்தில் சமீபத்தில் அவர்கள் ஒருபோதும் புலம்பெயர் தமிழரிடம் பிச்சை எடுக்கமாட்டினம் என்றவ முந்தாநாள் கோத்தா புலம்பெயர் தமிழரிடம் என்ன கேட்டவர் ?😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

200 ரூபா போகையில் 10 லட்சம் பவுனை முதலீடு செய்தவர்களின் ஐந்து லட்சம் பவுன் காணாமல் போயிருக்கும் அவர்களின்  கண்ணுக்கு முன்னால் .

தமிழருக்கு நிரந்தர விடிவு இல்லாமல் கோத்தா என்ன உத்தரவாதத்தில் புலம்பெயர் தமிழரை கூப்பிடுகிறார் ரதி இதே களத்தில் சமீபத்தில் அவர்கள் ஒருபோதும் புலம்பெயர் தமிழரிடம் பிச்சை எடுக்கமாட்டினம் என்றவ முந்தாநாள் கோத்தா புலம்பெயர் தமிழரிடம் என்ன கேட்டவர் ?😀 

முதலீடு செய்தவர்கள் நிலம் காணி போன்றவற்றில் முதலீடு செய்திருப்பின் 
அதன் பெறுமதி காலத்துக்கும் குறைய வாய்ப்பில்லை 
இலங்கையை பொருத்தவரை இன்னமும் 15-20 வருடத்தில்  600-800%  ரெட்டர்ன் 
கரண்டி என்றே நான் நம்புகிறேன் ..... ஒரு பெரிய இயற்கை அனர்த்தம் ஏற்படடால் அன்றி 
இலங்கையின் முதலீடு குட்டிகள் குட்டிகள் போடும் நிலைமைக்கே நிறைய சாத்தியம் உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

இன்னமும் 15-20 வருடத்தில்  600-800%  ரெட்டர்ன் 
கரண்டி என்றே நான் நம்புகிறேன் ..

மறுபடியும் வருகைக்கு கண்டதில்  சந்தோசம் இன்னும் 10 அல்லது 15 வருடம் இலங்கை இருக்குமா ?

சிங்களவர்களின் மண்டையை கழட்டி தமிழர்  இனவாதம் எனும் பகுதியை அகற்றமுடிந்தால் இலங்கை தப்பும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎27‎-‎03‎-‎2022 at 19:22, MEERA said:

ஓம்

நன்றி ...தற்போது அங்குள்ள உண்மையான நிலவரத்தை சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

நன்றி ...தற்போது அங்குள்ள உண்மையான நிலவரத்தை சொல்ல முடியுமா?

தற்போது திரும்பிவிட்டேன்..

மக்கள் பிளாஸ்ரிக் கான்களுடன் மண்ணெண்ணைக்கும் டீசலுக்கும் காத்திருந்தார்கள். அதிலும் சில பெண்கள் கைக் குழந்தைகளுடன். டீசலுக்காக சில இடங்களில் கிட்டத்தட்ட 2km வரை வரிசை நீண்டிருந்தது.

21ம் திகதி பெற்றோலுக்கான வரிசை நீண்டிருந்தது ஆனால் 25ம் திகதிக்கு பின்னர் ஓரளவு குறைந்து விட்டது. 

Food city இல் அரிசி சீனி விலை ஓரளவு குறைவு.

             21/03/22             23/03/22

நாட்டரிசி  140/=                 160/=
பருப்பு       363/=                 395/= 

இறக்குமதி செய்யப்பட்ட அரசியின் விலை சற்று குறைவு.

ஆனால் நாளுக்கு நாள் விலையேற்றம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

தற்போது திரும்பிவிட்டேன்..

மக்கள் பிளாஸ்ரிக் கான்களுடன் மண்ணெண்ணைக்கும் டீசலுக்கும் காத்திருந்தார்கள். அதிலும் சில பெண்கள் கைக் குழந்தைகளுடன். டீசலுக்காக சில இடங்களில் கிட்டத்தட்ட 2km வரை வரிசை நீண்டிருந்தது.

21ம் திகதி பெற்றோலுக்கான வரிசை நீண்டிருந்தது ஆனால் 25ம் திகதிக்கு பின்னர் ஓரளவு குறைந்து விட்டது. 

Food city இல் அரிசி சீனி விலை ஓரளவு குறைவு.

             21/03/22             23/03/22

நாட்டரிசி  140/=                 160/=
பருப்பு       363/=                 395/= 

இறக்குமதி செய்யப்பட்ட அரசியின் விலை சற்று குறைவு.

ஆனால் நாளுக்கு நாள் விலையேற்றம்.

 

உண்மை நிலவரம் அறிந்தாயிற்று, இனி பொருட்களெல்லாம் இறக்குமதியாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இல் அரிசி சீனி விலை ஓரளவு குறைவு.

             21/03/22             23/03/22

நாட்டரிசி  140/=                 160/=
பருப்பு       363/=                 395/= 

இறக்குமதி செய்யப்பட்ட அரசியின் விலை சற்று குறைவு.

ஆனால் நாளுக்கு நாள் விலையேற்றம்.

Food city  என்பது, அரசாங்கம் நடத்தும் கடையா?
இது... எல்லா நகரங்களிலும் உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Food city  என்பது, அரசாங்கம் நடத்தும் கடையா?
இது... எல்லா நகரங்களிலும் உள்ளதா?

சிறி அண்ணா, இது தனியார்  supermarket, நகரங்களில் மட்டுமே உள்ளது.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

சிறி அண்ணா, இது தனியார்  supermarket, நகரங்களில் மட்டுமே உள்ளது.  

 

நன்றி மீரா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.