Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலம்: டிசம்பர் 2026

இடம்: வெசாயில்ஸ், பிரான்சு

அன்பு நண்பன் அமுதனுக்கு,

உன் பால்ய நண்பன் உடான்ஸ்சாமியார் எழுதிக்கொள்வது.

மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா.

ரஸ்யாகாரன் போலந்துக்கால வந்து ஜேர்மனியில் பல பகுதியை பிடிச்சிட்டான்.

எங்கட சனம் கொஞ்சம் ஜேர்மனில இருந்து வெளிக்கிட்டு இஞ்ச ஒரு சேர்ச்சில வந்து அகதியளா இருக்குது. நல்லா வாழ்ந்த குடும்பங்கள்ஒரு டெண்டுக்குள்ள ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அடுத்தவன்கையை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் எல்லாம் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது மச்சான்.

 

என்ர மகனையும் பிரான்சு கட்டாய இராணுவ பணிக்கு எடுத்து கொண்டு போட்டாங்கள். போன கிழமைஉப்பிடிதான் ஒரு தமிழ்பிள்ளை, பெற்றாருக்கு ஒரே மகள் - ரொமேனியா போடரில் நிக்கேக்க ரஸ்யண்டபொஸ்பரஸ் குண்டு பட்டு ஆள் அந்த இடத்திலயே அவுட்.

மகனுக்கு என்ன நடக்குமோ எண்டு நாங்கள் பயந்து கொண்டு கிடக்கிறம் மச்சான். தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை.

லண்டன் பக்கம் நிலமை இன்னும் மோசம்.  லண்டனில அணுகுண்டு அடிச்ச பிறகு மிஞ்சின சனம் எல்லாம் ஸ்கொட்லாண்ட், வேள்ஸ் பக்கம் போய் வயல்களில நாட்கூலிக்கு நிக்குதாம். கோவில், கோபுரம் எண்டு இப்படி எங்கட தமிழ்ச் சனம் இருந்த ஊர் லண்டன்? இப்ப ஒரு புல் பூண்டு கூட இல்லையாம் மச்சான். கனடாவும் அதேநிலைமைதான்.

பார் மச்சான் எங்கட நிலமையை. ஊரில வந்து இருப்பம் எண்டால் ஐரோப்பிய அகதியளுக்கு இடம் இல்லைஎண்டு இலங்கை சொல்லி போட்டுது. இந்திய வம்சாவழி எண்டால் இந்தியா எடுக்குது. நாங்கள் என்ன செய்ய?

எல்லாம் ஊழ்வினையோ? எண்டும் யோசிக்க வருகுது மச்சான்.

ஊரில முதல் வெடிச்சத்தம் கேட்டதும் கிளம்பி ஐரோப்பா வந்த ஆள் நான். பிறகு சனம் அங்க சாகும் போதுகொஞ்சம் காசை அனுப்பி போட்டு, இரெண்டு போராட்டத்தில முகத்தை காட்டி போட்டு, மக்கள், போராளிகள்அழிவை ஏதோ கிரிகெட் ஸ்கோர் கேட்பது போல எல்லே கேட்டு கொண்டு இருந்ததான்.

இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் இந்த உலக மகா யுத்தம் தொடங்கேக்க, உக்ரேன் சனத்தின்ர சாவை கூடஇப்படிதானே சணல் அடி” “நல்ல வெளுவை எண்டு விசிலடிச்சு ரசிச்சனான்.

ரஸ்யா உக்ரேனை போட்டு வெளுத்த நேரம், வெளிநாட்டில் இருந்த உக்ரேன் சனம் எல்லாம் நாட்டுக்காக, இனத்துக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது. பொம்பிளையள், பிள்ளையளை போலந்துக்கு அனுப்பிபோட்டு, ஆம்பிளையள் நிண்டு சண்டை பிடிச்சவங்கள்.   

எங்கட ஊரில? 

நாங்கள் வெக்கம் கெட்டு கோழையள் மாரி ஓடி எல்லே வந்தனாங்கள். சனமும் போராளியளும் அங்க சாக, நாங்கள் கொழும்பிலயும், பரிசிலயும், லண்டனிலயும், டுசிள்டோபிலயும், டொராண்டோவிலயும் வீடு வாங்கிற, கடை வாங்கிற, பிள்ளையள டொக்டர் ஆக்கிற பிசியில எல்லே திரிஞ்சனாங்கள்?

எதோ சில இணைய தளங்களில் போய் பத்தி பத்தியா எழுதினத தவிர நாங்கள் வேற என்ன செய்தம் எங்கட இனத்துக்கு? புலம்பெயர் உக்ரேனியனிட்ட, புலம்பெயர் தமிழன் எதையோ வேண்டி குடிக்க வேணும் மச்சான்.

1985 க்கு பிறகு ஊருக்கு போராட போன, அல்லது பிள்ளையள போராட அனுப்பின புலம்பெயர் தமிழன் எண்டுயாரும் இல்லைத்தானே மச்சான்.

மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு விசுவாசம் மருந்துக்கும் இல்லை மச்சான்.

ஊரில சண்டை வந்த போது அங்க விசுவாசமா நிண்டு போராடாமல் மேற்கு நாட்டுக்கு ஓடி வந்து பிச்சைஎடுத்தம்.

ஆனால் பிச்சை போட்ட நாட்டுக்கும் நாம் விசுவாசம் காட்டேல்ல மச்சான்.

அந்த நாடுகளுக்கு ரஸ்யாவோட பிரச்சனை எண்டால் - நாங்கள் அதில நியாயம் பிளக்க எல்லோவெளிகிட்டனாங்கள்.

நாங்கள் இனத்தின் இருப்பு பற்றி யோசிக்கிற ஆக்கள் எண்டால், ரஸ்யாவோட நிற்பதை விட மேற்கோடு நிற்பதுபுலத்திலும், புலம் பெயர்ந்தும் வாழும் நாட்டிலும் தமிழர் நலனுக்கு ஒப்பீட்டளவில் நல்லது எண்டு உணர்ந்துநடந்திருப்பம் மச்சான்.

ஆனால் நாங்கள்தான் மந்தைகள் ஆச்சே மச்சான். எங்களுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை. ஸ்கோர் கேட்டு கைதட்ட மட்டும்தான் தெரியும்.

சரி மச்சான் கனக்க எழுதி போட்டன். 

இனி ஐரோப்பாவில்/கனடாவில் முன்னர் போல் தமிழர் பரம்பல் இராது. ஆகவே இந்த நாட்டு அரசுகளை நெருக்கி, நாட்டில உங்களுக்கு கொஞ்சம்தன்னும் விடிவை தர முயற்சிக்க கூட இனி முடியாது.

தவிரவும் ரஸ்யா, இந்தியா, இலங்கை இரெண்டுக்கும் நல்ல நண்பந்தானே. ஆகவே இனி இலங்கைக்கு வெளி அளுத்தம் எண்டு ஒண்டு மருந்துக்கும் இருக்கபோவதில்லை.

குறைந்த பட்சம் உங்களுக்கு உயிராவது மிஞ்சும் எண்டு சந்தோசப்படு மச்சான். இஞ்ச அதுவும் சந்தேகம்தான்.

அடுத்த முறை எழுத கிடைத்தால் - அதுவரை,

நட்புடன்,

 

உடான்ஸ் சாமியார்

(யாவும் கற்பனையாக இருக்கட்டும்)

 

  • Replies 57
  • Views 6.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    புட்டினும் புதுமாத்தளனும் II காலம்: புத்தாண்டு தினம் 2027 இடம்: பதுங்கு குழியாக மாறிய பாரிசின் சிறுநீர் நாற்றம் எடுக்கும் ஒரு நிலக்கீழ் இரயில் நிலையம்.   மச்சான் அமுதன், உன் க

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    உக்ரைனிலை ஒருத்தன்... ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை காக்க,  தன்னை வெல்ல வைக்கச் சொல்லி...  வாக்கு வாங்கி, வென்று... சும்மா இருக்க ஏலாமல்... வாயை குடுத்து,  உக்ரைனை... சல்லி, சல்லியாக நொருக்க  வைத்த

  • Sasi_varnam
    Sasi_varnam

    ஓணாண்டியார்... உங்களோடு எனக்கென்னய்யா வன்மம்... 🙏 "வெள்ளைத்தோல் அடிமை மோகம்" என்ற தடித்த எழுத்துக்கள் வரும் பொழுது இப்படியான பதில்கள் வாஸ்தவம் தானே.  உங்களுக்கு மேற்குலக (அமெரிக்க) வெளிவிகார கொ

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

லண்டன் பக்கம் நிலமை இன்னும் மோசம்.  லண்டனில அணுகுண்டு அடிச்ச பிறகு மிஞ்சின சனம் எல்லாம் ஸ்கொட்லாண்ட், வேள்ஸ் பக்கம் போய் வயல்களில நாட்கூலிக்கு நிக்குதாம். கோவில், கோபுரம் எண்டு இப்படி எங்கட தமிழ்ச் சனம் இருந்த ஊர் லண்டன்? இப்ப ஒரு புல் பூண்டு கூட இல்லையாம் மச்சான். கனடாவும் அதேநிலைமைதான்.

ஆகா ஆகா 

நல்லகாலம் அமெரிக்கா தப்பீட்டுது.

நகைச்சுவை நன்று.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ரஸ்யா உக்ரேனை போட்டு வெளுத்த நேரம், வெளிநாட்டில் இருந்த உக்ரேன் சனம் எல்லாம் நாட்டுக்காக, இனத்துக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது. பொம்பிளையள், பிள்ளையளை போலந்துக்கு அனுப்பிபோட்டு, ஆம்பிளையள் நிண்டு சண்டை பிடிச்சவங்கள். 

யூக்ரேன் இராணுவத்தில் 15% பெண்கள் என்று கூட தெரியாமல் என்ன பத்தி எழுத்தாளரப்பா இந்தாள்?😀

Quote

ஆனால் பிச்சை போட்ட நாட்டுக்கும் நாம் விசுவாசம் காட்டேல்ல மச்சான்.

பேச்சுவார்த்தைக்கு நோர்வேயை வைத்து கெடுத்துப்போட்டு சிறிலங்கா அரசுக்கு எல்லா விதமான ஆயுதங்களையும் கொடுத்து தமிழ் மக்களை அழிக்க சொன்னது இதே மேற்கு நாடு தானே.
முள்ளி வாய்காலில் நடந்தது இன்ப்படுகொலை இல்லையாம். ஆனால் யூக்ரேனில் நடந்தது இனப்படுகொலை போர் தொடங்கி 10ம் நாளில். ஏனய்யா இந்த  கிப்போகிறசி என சிந்திக்க கொஞ்ச மூளை போதும்.🤪

  • கருத்துக்கள உறவுகள்

உடான்ஸ் சாமியார் அடுத்த முறையும் வந்து எழுதட்டும்.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

Explosion GIFs | Tenor

உடான்ஸ் சாமியார், அடுத்த முறை இந்தப் பக்கம் வந்தால்,
இரண்டு காலுக்கும் இடையிலை.... கண்ணிவெடி, வைக்கப் படும். 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சேர்ந்துதான் எங்களை வேரோடு அறுத்தவர்கள்.

இதில் விசுவாசமாக இருக்க எந்தக் காரணமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

காலம்: டிசம்பர் 2026

இடம்: வெசாயில்ஸ், பிரான்சு

அன்பு நண்பன் அமுதனுக்கு,

உன் பால்ய நண்பன் உடான்ஸ்சாமியார் எழுதிக்கொள்வது.

மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா.

ரஸ்யாகாரன் போலந்துக்கால வந்து ஜேர்மனியில் பல பகுதியை பிடிச்சிட்டான்.

எங்கட சனம் கொஞ்சம் ஜேர்மனில இருந்து வெளிக்கிட்டு இஞ்ச ஒரு சேர்ச்சில வந்து அகதியளா இருக்குது. நல்லா வாழ்ந்த குடும்பங்கள்ஒரு டெண்டுக்குள்ள ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அடுத்தவன்கையை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் எல்லாம் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது மச்சான்.

 

என்ர மகனையும் பிரான்சு கட்டாய இராணுவ பணிக்கு எடுத்து கொண்டு போட்டாங்கள். போன கிழமைஉப்பிடிதான் ஒரு தமிழ்பிள்ளை, பெற்றாருக்கு ஒரே மகள் - ரொமேனியா போடரில் நிக்கேக்க ரஸ்யண்டபொஸ்பரஸ் குண்டு பட்டு ஆள் அந்த இடத்திலயே அவுட்.

மகனுக்கு என்ன நடக்குமோ எண்டு நாங்கள் பயந்து கொண்டு கிடக்கிறம் மச்சான். தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை.

லண்டன் பக்கம் நிலமை இன்னும் மோசம்.  லண்டனில அணுகுண்டு அடிச்ச பிறகு மிஞ்சின சனம் எல்லாம் ஸ்கொட்லாண்ட், வேள்ஸ் பக்கம் போய் வயல்களில நாட்கூலிக்கு நிக்குதாம். கோவில், கோபுரம் எண்டு இப்படி எங்கட தமிழ்ச் சனம் இருந்த ஊர் லண்டன்? இப்ப ஒரு புல் பூண்டு கூட இல்லையாம் மச்சான். கனடாவும் அதேநிலைமைதான்.

பார் மச்சான் எங்கட நிலமையை. ஊரில வந்து இருப்பம் எண்டால் ஐரோப்பிய அகதியளுக்கு இடம் இல்லைஎண்டு இலங்கை சொல்லி போட்டுது. இந்திய வம்சாவழி எண்டால் இந்தியா எடுக்குது. நாங்கள் என்ன செய்ய?

எல்லாம் ஊழ்வினையோ? எண்டும் யோசிக்க வருகுது மச்சான்.

ஊரில முதல் வெடிச்சத்தம் கேட்டதும் கிளம்பி ஐரோப்பா வந்த ஆள் நான். பிறகு சனம் அங்க சாகும் போதுகொஞ்சம் காசை அனுப்பி போட்டு, இரெண்டு போராட்டத்தில முகத்தை காட்டி போட்டு, மக்கள், போராளிகள்அழிவை ஏதோ கிரிகெட் ஸ்கோர் கேட்பது போல எல்லே கேட்டு கொண்டு இருந்ததான்.

இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் இந்த உலக மகா யுத்தம் தொடங்கேக்க, உக்ரேன் சனத்தின்ர சாவை கூடஇப்படிதானே சணல் அடி” “நல்ல வெளுவை எண்டு விசிலடிச்சு ரசிச்சனான்.

ரஸ்யா உக்ரேனை போட்டு வெளுத்த நேரம், வெளிநாட்டில் இருந்த உக்ரேன் சனம் எல்லாம் நாட்டுக்காக, இனத்துக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது. பொம்பிளையள், பிள்ளையளை போலந்துக்கு அனுப்பிபோட்டு, ஆம்பிளையள் நிண்டு சண்டை பிடிச்சவங்கள்.   

எங்கட ஊரில? 

நாங்கள் வெக்கம் கெட்டு கோழையள் மாரி ஓடி எல்லே வந்தனாங்கள். சனமும் போராளியளும் அங்க சாக, நாங்கள் கொழும்பிலயும், பரிசிலயும், லண்டனிலயும், டுசிள்டோபிலயும், டொராண்டோவிலயும் வீடு வாங்கிற, கடை வாங்கிற, பிள்ளையள டொக்டர் ஆக்கிற பிசியில எல்லே திரிஞ்சனாங்கள்?

எதோ சில இணைய தளங்களில் போய் பத்தி பத்தியா எழுதினத தவிர நாங்கள் வேற என்ன செய்தம் எங்கட இனத்துக்கு? புலம்பெயர் உக்ரேனியனிட்ட, புலம்பெயர் தமிழன் எதையோ வேண்டி குடிக்க வேணும் மச்சான்.

1985 க்கு பிறகு ஊருக்கு போராட போன, அல்லது பிள்ளையள போராட அனுப்பின புலம்பெயர் தமிழன் எண்டுயாரும் இல்லைத்தானே மச்சான்.

மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு விசுவாசம் மருந்துக்கும் இல்லை மச்சான்.

ஊரில சண்டை வந்த போது அங்க விசுவாசமா நிண்டு போராடாமல் மேற்கு நாட்டுக்கு ஓடி வந்து பிச்சைஎடுத்தம்.

ஆனால் பிச்சை போட்ட நாட்டுக்கும் நாம் விசுவாசம் காட்டேல்ல மச்சான்.

அந்த நாடுகளுக்கு ரஸ்யாவோட பிரச்சனை எண்டால் - நாங்கள் அதில நியாயம் பிளக்க எல்லோவெளிகிட்டனாங்கள்.

நாங்கள் இனத்தின் இருப்பு பற்றி யோசிக்கிற ஆக்கள் எண்டால், ரஸ்யாவோட நிற்பதை விட மேற்கோடு நிற்பதுபுலத்திலும், புலம் பெயர்ந்தும் வாழும் நாட்டிலும் தமிழர் நலனுக்கு ஒப்பீட்டளவில் நல்லது எண்டு உணர்ந்துநடந்திருப்பம் மச்சான்.

ஆனால் நாங்கள்தான் மந்தைகள் ஆச்சே மச்சான். எங்களுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை. ஸ்கோர் கேட்டு கைதட்ட மட்டும்தான் தெரியும்.

சரி மச்சான் கனக்க எழுதி போட்டன். 

இனி ஐரோப்பாவில்/கனடாவில் முன்னர் போல் தமிழர் பரம்பல் இராது. ஆகவே இந்த நாட்டு அரசுகளை நெருக்கி, நாட்டில உங்களுக்கு கொஞ்சம்தன்னும் விடிவை தர முயற்சிக்க கூட இனி முடியாது.

தவிரவும் ரஸ்யா, இந்தியா, இலங்கை இரெண்டுக்கும் நல்ல நண்பந்தானே. ஆகவே இனி இலங்கைக்கு வெளி அளுத்தம் எண்டு ஒண்டு மருந்துக்கும் இருக்கபோவதில்லை.

குறைந்த பட்சம் உங்களுக்கு உயிராவது மிஞ்சும் எண்டு சந்தோசப்படு மச்சான். இஞ்ச அதுவும் சந்தேகம்தான்.

அடுத்த முறை எழுத கிடைத்தால் - அதுவரை,

நட்புடன்,

 

உடான்ஸ் சாமியார்

(யாவும் கற்பனையாக இருக்கட்டும்)

 

உங்களை அங்கே பார்த்துவிட்டு, பதில் போட்டுவிட்டு இங்கே வந்தால், அட்டகாசமாக இருக்கு 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

வெளிநாட்டில் இருந்த உக்ரேன் சனம் எல்லாம் நாட்டுக்காக, இனத்துக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது. பொம்பிளையள், பிள்ளையளை போலந்துக்கு அனுப்பிபோட்டு, ஆம்பிளையள் நிண்டு சண்டை பிடிச்சவங்கள்.   

உக்ரேனிலிருந்து ஆண்கள் வெளியேற அனுமதியில்லை.

எழுந்தமானத்திலை எல்லாத்தையும் எடுத்து விடப்படாது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா.

ரஸ்யாகாரன் போலந்துக்கால வந்து ஜேர்மனியில் பல பகுதியை பிடிச்சிட்டான்.

எங்கட சனம் கொஞ்சம் ஜேர்மனில இருந்து வெளிக்கிட்டு இஞ்ச ஒரு சேர்ச்சில வந்து அகதியளா இருக்குது. 

புட்டினை அமுக்கினால்  சண்டை நிக்குமாம்
அடுத்த மாதம் ரஸ்யாவில் புதிய ஜனாதிபதி உருவாக்கப்படுவாராம். இதைப்பற்றி உடான்ஸ் சாமியாரின் கருத்து என்னவாம் 🤣👍

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

லண்டன் பக்கம் நிலமை இன்னும் மோசம்.  லண்டனில அணுகுண்டு அடிச்ச பிறகு மிஞ்சின சனம் எல்லாம் ஸ்கொட்லாண்ட், வேள்ஸ் பக்கம் போய் வயல்களில நாட்கூலிக்கு நிக்குதாம். கோவில், கோபுரம் எண்டு இப்படி எங்கட தமிழ்ச் சனம் இருந்த ஊர் லண்டன்? இப்ப ஒரு புல் பூண்டு கூட இல்லையாம் மச்சான். கனடாவும் அதேநிலைமைதான்.

எனக்கு ஒரு டவுட்டு கனடாவில் எங்கு அணுகுண்டு புட்டின் போட்டிருப்பார் என்று ?

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்களின் புரின், ரஷ்ய ஆதரவு என்ற மோசமான நிலைபாட்டை அப்படியே எடுத்து சொல்லும் மிகவும் சிறந்த கட்டுரை.💐

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மேற்குலக நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்களின் புரின், ரஷ்ய ஆதரவு என்ற மோசமான நிலைபாட்டை அப்படியே எடுத்து சொல்லும் மிகவும் சிறந்த கட்டுரை.💐

“You are either with us or against us”நினைவிற்கு வந்து தொலைக்கிறது. 

நீங்கள் புடினுக்கும் இரஸ்யாவுக்கும் ஏன் எதிராக இருக்கிறீர்கள் ? 

நீங்கள் மேற்குலகுக்கு ஏன் ஆதரவாக இருக்கிறீர்கள் ? 

விளக்கமாகக் கூற முடியுமா ? 

  • கருத்துக்கள உறவுகள்

ஐசே வா சரி சிரிப்பு..Epic வா. எங்களுக்கு பாக்கிஸ்தான் ஈக்கிவா..
அதிலும் முதல் வெடிசத்தம்......🤣

  • கருத்துக்கள உறவுகள்

Putin Boobs GIF - Putin Boobs Thumbs Up GIFs

Zelensky Zelenskiy GIF - Zelensky Zelenskiy Zelenskij - Discover & Share  GIFs

உக்ரைனிலை ஒருத்தன்... ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை காக்க, 
தன்னை வெல்ல வைக்கச் சொல்லி...  வாக்கு வாங்கி, வென்று...
சும்மா இருக்க ஏலாமல்... வாயை குடுத்து, 
உக்ரைனை... சல்லி, சல்லியாக நொருக்க  வைத்து விட்டு.. 
அழுது கொண்டு இருக்கிறான். 😂

  • கருத்துக்கள உறவுகள்

 உடான்ஸ் சாமியார்... கற்பனையிலும் கனதியான பல செய்திகள் சொல்லியிருக்கிறார். 👌
என்ன....  அதை வாசித்தது, கிரகிக்க எக்ஸ்டரா ஐகியூ தேவை. அது "டிக் டொக்கில்", "மீம்ஸ் கிளிப்பிங்கில்" 
கிடைக்கும் சமாச்சாரம் அல்லவே !! 

  • கருத்துக்கள உறவுகள்

காலம்: டிசம்பர் 2027

இடம்: பிராங்பேர்ட், ஜெர்மன்

அன்பு நண்பன் அமுதனுக்கு,

உன் பால்ய நண்பன் படான்ஸ் எழுதிக்கொள்வது. உனது மடல் கிடைத்தது. உடான்ஸ் சொன்னது ஒண்டையும் நம்பாத.. பூரா கற்பனை..

மச்சான் இப்ப நிலைமை அமெரிக்காவிலையும் அமெரிக்காவுக்கு வால்பிடிச்ச யுகேயிலும்தான் ரெம்ப மோசமடா… ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் நோக்கத்தை உணர்ந்து உசாராகி ரஷ்யாவுக்கு கண்டனத்துடன் நிறுத்திக்கொண்டு விட்டது.. ஆனா நம்ப யூகே வாயைக்குடுத்து சூ*ல சூடு வாங்கி இருக்கு…

ரஸ்யாகாரன் ரேடாரால கண்டுபுடிச்சு அழிக்கேலாத ballistic missiles இல அணுகுண்டை பூட்டி அடிச்சதில லணடனிலையும் அமெரிக்காவிலையும் சரியான சேதம்..

எங்கட சனம் கொஞ்சம் இங்க யுகே  இன்னும் கொஞ்சம் கனடால  இருந்து வெளிக்கிட்டு ஜரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அகதியளா வந்து கொண்டு இருக்கு... நல்லா வாழ்ந்த குடும்பங்கள்… இப்ப பிரான்ஸ் ஜேர்மன் சுவிஸ் நோர்வே எண்டு அரசாங்கம் குடுத்த முகாம்களில் ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அரசாங்க உதவியை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் யூகேயிலயும் அமெரிக்காலயும் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது.. ஜரோப்பிய ஒன்றியம் உக்ரேனைப்போல அமெரிக்காவை நம்பி முட்டாள்தனமா இருக்காமல் பின்விளைகளை சிந்திச்சு சமயோசிதமா செயற்பட்டதால அங்க இருக்கிற சனம்கள் சந்தோசமா நிம்மதியா இருக்குதுகள்..

நானும் இப்ப ஜெர்மனில அகதியா வந்து இருக்கிறன்.. ஊரில இருந்து யூகேக்கு அகதியா வந்து பிரிட்டிஸ் சிட்டிசன் ஆகி கெத்தா இருந்தனான்.. இப்ப மறுபடியும் ஜெர்மனுக்கு அகதியா போய் இருக்கிறன்.. இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம் எண்டுறது.. ஜேர்மன் நோர்வே பிரான்ஸ் சுவிஸ் எண்டு இரட்டை சிற்றிசன் வச்சிருந்தவை இப்ப அங்கபோய் நிம்மதியா வேலை செய்து கொண்டு இருக்கினம்.. இவன் மோடன் பொறிஸ் ஜரோப்பிய ஒன்றியத்தில இருந்து யுகேயை பிரிச்சதால விசாஇல்லாம இங்க ஜரோப்பிய ஒன்றியத்தில இருக்கேலா.. அதால நானும் அகதி எண்டு பதிஞ்சுபோண்டு இருக்கிறன்..

எல்லாம் ஊழ்வினையோ? எண்டும் யோசிக்க வருகுது மச்சான்.

சிங்களவனிட்ட இவ்வளவு அடிவேண்டியும் இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் இந்த உலக மகா யுத்தம் தொடங்கேக்க, உக்ரேனில சிறுபான்மை ரஷ்யா சனத்தின்ர அழிவைக்கூட அப்படி ஒண்டுமே இல்லை அப்படி ஒரு அழிவே அங்க நடக்கேல்ல எண்டு எழுதின்னான்.. அமெரிக்கா நேட்டோ நாலுபக்கமும் ரஷ்யாவை சுத்திவளைச்சு ஈரான் ஈராக் லிபியா சிரியா எண்டு பலநாடுகளில் செய்ததை ரஷ்யாக்கு உக்ரேனை வச்சு செய்ய நிண்டதை மனசாட்சியை பூட்டி வச்சிட்டு சரியெண்டு சொல்லி மேற்குக்கு முட்டு குடுத்தனான்.. இப்ப ரஷ்யாக்காரன் அடிபோட்டு அழிவெண்டா என்ன எண்டு மறுபடி எனக்கு காட்டுறான்.. இப்பவும் நான் திருந்தாட்டி நான் மனுசனே இல்ல…

உக்ரேனை ரஷ்யா சிறுபான்மை இனமக்களை போட்டு வெளுத்த நேரம், ரஷ்யாவில் இருந்து எல்லாம் புரட்சிக்காரர்களுக்கு உதவ ரஷ்யமொழிபேசும் இரத்தங்கள் எல்லாம் தம் சகோதர ஒரே மொழிபேசும் இரத்தங்களுக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது…

எங்கட தமிழ்மொழிபேசும் இரத்த உறவுகள் உலகத்தமிழர்கள்..? 

மற்றது மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு வெள்ளைத்தோல் மோக அடிமை விசுவாசம் ரெம்ப அதிகம் மச்சான்.

இங்கு பரம்பரையா வாழுற வெள்ளைக்காரனே தங்கட அரசுகள் ஈராக் ஈரான் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனம் எண்டு உலகம்பூரா செய்யும் அநியாயங்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடும்போது வெள்ளைக்காற இனவாதிக்கே வாந்தி வாற அளவுக்கு மேற்குலகின் அநியாயங்களுக்கு முட்டுகுடுத்து எழுதுகிறார்கள்டா மச்சான்..

நாங்கள் ஒடுக்கப்படும் இனத்து மக்கள் எண்டால், உலகம் எங்கும் ஏழைநாடுகளை ஒடுக்கும் மேற்குலகுக்கு எப்படி மச்சான் முட்டு குடுக்க முடியும்..? எங்கள் சுயநலனுக்காக எப்படி மச்சான் மேற்குலகின் அநியாயங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு முட்டுகுடுப்பது..?  

ஆனால் நாங்கள்தான் மந்தைகள் ஆச்சே மச்சான். எங்களுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை…

சரி மச்சான் கனக்க எழுதி போட்டன். 

அடுத்த முறை எழுத கிடைத்தால் - அதுவரை,

நட்புடன்,

 

படான்ஸ்..

(யாவும் கற்பனையாக இருக்கட்டும்)

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

😂 சுயமா எழுத தெரியாட்டிக்கி இது தான் பிரச்சினை.

அடுத்தவன் கற்பனையை ஆட்டையை போடுவது. ஆட்டுக்குள்ள வந்து மாட்டை போடுவது...🤣
"டிக் டொக் டிக்கிலோனாக்கள்" அசட்டுத்தனம் பெரும் அவஸ்தை தான் பாருங்கோ.
~~ இது கற்பனை அல்ல நிஜம் ~~ !!! 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரஸ்யாகாரன் ரேடாரால கண்டுபுடிச்சு அழிக்கேலாத ballistic missiles இல அணுகுண்டை பூட்டி அடிச்சதில லணடனிலையும் அமெரிக்காவிலையும் சரியான சேதம்..

யுகே ஆச்சு
ஐரோபபா ஆச்சு
ரசியா ஆச்சு

ஏனப்பா சும்மா இருக்கிற அமெரிக்காவை இழுக்கிறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

காலம்: டிசம்பர் 2027

இடம்: பிராங்பேர்ட், ஜெர்மன்

அன்பு நண்பன் அமுதனுக்கு,

உன் பால்ய நண்பன் படான்ஸ் எழுதிக்கொள்வது. உனது மடல் கிடைத்தது. உடான்ஸ் சொன்னது ஒண்டையும் நம்பாத.. பூரா கற்பனை..

மச்சான் இப்ப நிலைமை அமெரிக்காவிலையும் அமெரிக்காவுக்கு வால்பிடிச்ச யுகேயிலும்தான் ரெம்ப மோசமடா… ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் நோக்கத்தை உணர்ந்து உசாராகி ரஷ்யாவுக்கு கண்டனத்துடன் நிறுத்திக்கொண்டு விட்டது.. ஆனா நம்ப யூகே வாயைக்குடுத்து சூ*ல சூடு வாங்கி இருக்கு…

ரஸ்யாகாரன் ரேடாரால கண்டுபுடிச்சு அழிக்கேலாத ballistic missiles இல அணுகுண்டை பூட்டி அடிச்சதில லணடனிலையும் அமெரிக்காவிலையும் சரியான சேதம்..

எங்கட சனம் கொஞ்சம் இங்க யுகே  இன்னும் கொஞ்சம் கனடால  இருந்து வெளிக்கிட்டு ஜரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அகதியளா வந்து கொண்டு இருக்கு... நல்லா வாழ்ந்த குடும்பங்கள்… இப்ப பிரான்ஸ் ஜேர்மன் சுவிஸ் நோர்வே எண்டு அரசாங்கம் குடுத்த முகாம்களில் ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அரசாங்க உதவியை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் யூகேயிலயும் அமெரிக்காலயும் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது.. ஜரோப்பிய ஒன்றியம் உக்ரேனைப்போல அமெரிக்காவை நம்பி முட்டாள்தனமா இருக்காமல் பின்விளைகளை சிந்திச்சு சமயோசிதமா செயற்பட்டதால அங்க இருக்கிற சனம்கள் சந்தோசமா நிம்மதியா இருக்குதுகள்..

நானும் இப்ப ஜெர்மனில அகதியா வந்து இருக்கிறன்.. ஊரில இருந்து யூகேக்கு அகதியா வந்து பிரிட்டிஸ் சிட்டிசன் ஆகி கெத்தா இருந்தனான்.. இப்ப மறுபடியும் ஜெர்மனுக்கு அகதியா போய் இருக்கிறன்.. இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம் எண்டுறது.. ஜேர்மன் நோர்வே பிரான்ஸ் சுவிஸ் எண்டு இரட்டை சிற்றிசன் வச்சிருந்தவை இப்ப அங்கபோய் நிம்மதியா வேலை செய்து கொண்டு இருக்கினம்.. இவன் மோடன் பொறிஸ் ஜரோப்பிய ஒன்றியத்தில இருந்து யுகேயை பிரிச்சதால விசாஇல்லாம இங்க ஜரோப்பிய ஒன்றியத்தில இருக்கேலா.. அதால நானும் அகதி எண்டு பதிஞ்சுபோண்டு இருக்கிறன்..

எல்லாம் ஊழ்வினையோ? எண்டும் யோசிக்க வருகுது மச்சான்.

சிங்களவனிட்ட இவ்வளவு அடிவேண்டியும் இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் இந்த உலக மகா யுத்தம் தொடங்கேக்க, உக்ரேனில சிறுபான்மை ரஷ்யா சனத்தின்ர அழிவைக்கூட அப்படி ஒண்டுமே இல்லை அப்படி ஒரு அழிவே அங்க நடக்கேல்ல எண்டு எழுதின்னான்.. அமெரிக்கா நேட்டோ நாலுபக்கமும் ரஷ்யாவை சுத்திவளைச்சு ஈரான் ஈராக் லிபியா சிரியா எண்டு பலநாடுகளில் செய்ததை ரஷ்யாக்கு உக்ரேனை வச்சு செய்ய நிண்டதை மனசாட்சியை பூட்டி வச்சிட்டு சரியெண்டு சொல்லி மேற்குக்கு முட்டு குடுத்தனான்.. இப்ப ரஷ்யாக்காரன் அடிபோட்டு அழிவெண்டா என்ன எண்டு மறுபடி எனக்கு காட்டுறான்.. இப்பவும் நான் திருந்தாட்டி நான் மனுசனே இல்ல…

உக்ரேனை ரஷ்யா சிறுபான்மை இனமக்களை போட்டு வெளுத்த நேரம், ரஷ்யாவில் இருந்து எல்லாம் புரட்சிக்காரர்களுக்கு உதவ ரஷ்யமொழிபேசும் இரத்தங்கள் எல்லாம் தம் சகோதர ஒரே மொழிபேசும் இரத்தங்களுக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது…

எங்கட தமிழ்மொழிபேசும் இரத்த உறவுகள் உலகத்தமிழர்கள்..? 

மற்றது மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு வெள்ளைத்தோல் மோக அடிமை விசுவாசம் ரெம்ப அதிகம் மச்சான்.

இங்கு பரம்பரையா வாழுற வெள்ளைக்காரனே தங்கட அரசுகள் ஈராக் ஈரான் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனம் எண்டு உலகம்பூரா செய்யும் அநியாயங்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடும்போது வெள்ளைக்காற இனவாதிக்கே வாந்தி வாற அளவுக்கு மேற்குலகின் அநியாயங்களுக்கு முட்டுகுடுத்து எழுதுகிறார்கள்டா மச்சான்..

நாங்கள் ஒடுக்கப்படும் இனத்து மக்கள் எண்டால், உலகம் எங்கும் ஏழைநாடுகளை ஒடுக்கும் மேற்குலகுக்கு எப்படி மச்சான் முட்டு குடுக்க முடியும்..? எங்கள் சுயநலனுக்காக எப்படி மச்சான் மேற்குலகின் அநியாயங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு முட்டுகுடுப்பது..?  

ஆனால் நாங்கள்தான் மந்தைகள் ஆச்சே மச்சான். எங்களுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை…

சரி மச்சான் கனக்க எழுதி போட்டன். 

அடுத்த முறை எழுத கிடைத்தால் - அதுவரை,

நட்புடன்,

 

படான்ஸ்..

(யாவும் கற்பனையாக இருக்கட்டும்)

👏🏻 ஆகா…. உடான்ஸ் சாமியாருக்கு, “நொங்கு” எடுக்க வந்த,
படான்ஸ் சாமியாரின் ஆச்சிரமத்துக்கு… இராணுவ பாதுகாப்பு போடுங்க. 😁

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

யுகே ஆச்சு
ஐரோபபா ஆச்சு
ரசியா ஆச்சு

ஏனப்பா சும்மா இருக்கிற அமெரிக்காவை இழுக்கிறீங்க.

யோவ்…. சும்மா, இருக்கிற அமெரிக்காவோ….
இவ்வளவு பிரச்சினையும்… அமெரிக்காவாலைதான் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

😂 சுயமா எழுத தெரியாட்டிக்கி இது தான் பிரச்சினை.

அடுத்தவன் கற்பனையை ஆட்டையை போடுவது. ஆட்டுக்குள்ள வந்து மாட்டை போடுவது...🤣
"டிக் டொக் டிக்கிலோனாக்கள்" அசட்டுத்தனம் பெரும் அவஸ்தை தான் பாருங்கோ.
~~ இது கற்பனை அல்ல நிஜம் ~~ !!! 

""மற்றது மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு வெள்ளைத்தோல் மோகஅடிமை விசுவாசம் ரெம்ப அதிகம் மச்சான்.""

இதை சீரணிக்கிறது கஸ்ரம்தான். 

 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

""மற்றது மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு வெள்ளைத்தோல் மோகஅடிமை விசுவாசம் ரெம்ப அதிகம் மச்சான்.""

இதை சீரணிக்கிறது கஸ்ரம்தான். 

 

 ஓம் மச்சான்... புட்டின் ஆபிரிக்கா காட்டுக்குள்ள பிறந்த கருப்பு சொக்கத்தங்கம். என்டபடியால  நாங்கள் புலம்பெயர்ஸ் எல்லாம் அவருக்கு பின்னால அணிவகுக்கிறம். மற்றது நாங்கள் அசைலம் அடிக்கேக்க...அடிக்கும் முதல்ல...  ஓடோடி வந்து கேஸ் அக்செப்ட் பண்ணி எங்களை ஆப்பிரிக்காவில அந்த மாதிரி வாழ வச்ச மனிசன். நான் செய்யிற தொழில், அடிக்கிற கோட்டம் எல்லாம் கருவல்ஸ் புட்டின்  தந்த வரம்.  

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

யோவ்…. சும்மா, இருக்கிற அமெரிக்காவோ….
இவ்வளவு பிரச்சினையும்… அமெரிக்காவாலைதான் வந்தது.

போரைத் தீவிரமாக்கும் முயற்சிக்கு
ஐரோப்பா அடிபணிந்துவிட கூடாது 

பைடனின் போலந்துப் பேருரைக்கு
எதிராக மக்ரோன் ஆட்சேபக்கருத்து

போரை மேலும் தீவிரமாக்கத் தூண்டு
கின்ற "செயல்கள்", "வார்த்தைகள்" தவிர்க்கப்பட வேண்டும் என்று அதிபர் மக்ரோன் கூறியிருக்கிறார். ரஷ்ய அதி
பர் புடினை "சர்வாதிகாரி""கசாப்புக்கடை
க்காரர் "என்று வர்ணித்து ஜோ பைடன்
போலந்து நாட்டில் கூறிய வார்த்தைக
ளுக்கு எதிராகவே மக்ரோன் இவ்வாறு
கருத்து வெளியிட்டிருக்கிறார்.

" இதுபோன்ற வார்த்தைகளை நான்
பயன்படுத்தப் போவதில்லை. ஏனெ
னில் நான் புடினோடு தொடர்ந்தும்
பேச்சுக்களில் ஈடுபட்டுவருகிறேன்.."
என்றும் அவர் கூறியிருக்கிறார்.

"உக்ரைனில் ரஷ்யா தொடங்கியுள்ள போரை நாங்கள் போருக்குச் செல்லா மலேயே நிறுத்த விரும்புகிறோம். இதுவே எங்கள் குறிக்கோள்.நாம்
அதைச் செய்ய விரும்பினால், நமது வார்த்தைகளையோ செயலையோ தீவிரமாக்கக்கூடாது... "

 "ஐரோப்பியர்கள் சில விரிவாக்கங்
களுக்கு அடிபணியக் கூடாது.நமது புவியியல் மற்றும் நமது வரலாற்றை மறந்துவிடக் கூடாது. நாங்கள் ரஷ்ய மக்களுடன் போரில் ஈடுபடவில்லை" என்று அவர் வலியுறுத்தினார்,

" ஐரோப்பா இனிமேலும் மொஸ்கோவிற்
கும் வோஷிங்டனுக்கும் இடையிலான
பனிப் போர்க் காலச் சூழ்நிலைக்குள்
இருக்கப் போவதில்லை "-என்பதையும்
மக்ரோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலந்து தலைநகர் வார்ஸோவில்
ஜே பைடன் ஆற்றிய பேருரையில்
புடினின் அதிகாரத்தை நேரடியாகவும்
தகாத வார்தைகளாலும்" உணர்ச்சிவசப்
பட்டுச்" சாடியுள்ளார் என்று சர்வதேச
அவதானிகள் கருதுகின்றனர். அரசியல்
படைபலம், பொருளாதார நிலைகளில்
பார்த்தால் அமெரிக்க அதிபர் இவ்வாறு
தனக்கு நிகரற்ற ரஷ்யா மீது கருத்துக்
களால் தாக்குவதற்கு அருகதையுடை
யவர் என்று வேறு சில கொள்கை வகுப்
பாளர்கள் கூறுகின்றனர்.

புடினின் கோபத்தைக் கிளறாமல் அவரை
அணுகிப் போரை முடிவுக்குக் கொண்டு
வர விரும்புகின்ற ஐரோப்பியத் தலைவ
ரான மக்ரோனை அமெரிக்காவின் போர்
விரிவாக்கப் பேச்சுகள் பொறுமையிழக்
கச் செய்துள்ளன. புடினுடன் தொடர்பைப்
பேணக் கூடிய ஒரே தலைவராகவும் புடின் செவிமடுக்கக் கூடிய குரலுடைய
ஒரே நண்பராகவும் விளங்கும் மக்ரோன்
ஐரோப்பாவின் பாதுகாப்புத் தொடர்பான
"யதார்த்த நோக்கத்தில்" மொஸ்கோவை
வெளியே விலக்கி வைக்க விரும்பாதவர்.
தார்மீக ரீதியில் நேட்டோவுக்கு ஆதரவா
கச் செயற்பட்டாலும் புடினோடு சமாதான
முறையில் இணக்கம் காண்பதிலேயே
மக்ரோன் கவனம் செலுத்திவருகிறார். 
போருக்கு முன்னரும் பின்னருமான
அவரது பல செயற்பாடுகள் இதனையே
வெளிப்படுத்துவதாக அவதானிகள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
-------------------------------------------------------------------
             -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                 28-03-2022

https://www.facebook.com/1328781225/posts/10228838670214750/?d=n

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

போரைத் தீவிரமாக்கும் முயற்சிக்கு
ஐரோப்பா அடிபணிந்துவிட கூடாது 

பைடனின் போலந்துப் பேருரைக்கு
எதிராக மக்ரோன் ஆட்சேபக்கருத்து

போரை மேலும் தீவிரமாக்கத் தூண்டு
கின்ற "செயல்கள்", "வார்த்தைகள்" தவிர்க்கப்பட வேண்டும் என்று அதிபர் மக்ரோன் கூறியிருக்கிறார். ரஷ்ய அதி
பர் புடினை "சர்வாதிகாரி""கசாப்புக்கடை
க்காரர் "என்று வர்ணித்து ஜோ பைடன்
போலந்து நாட்டில் கூறிய வார்த்தைக
ளுக்கு எதிராகவே மக்ரோன் இவ்வாறு
கருத்து வெளியிட்டிருக்கிறார்.

" இதுபோன்ற வார்த்தைகளை நான்
பயன்படுத்தப் போவதில்லை. ஏனெ
னில் நான் புடினோடு தொடர்ந்தும்
பேச்சுக்களில் ஈடுபட்டுவருகிறேன்.."
என்றும் அவர் கூறியிருக்கிறார்.

"உக்ரைனில் ரஷ்யா தொடங்கியுள்ள போரை நாங்கள் போருக்குச் செல்லா மலேயே நிறுத்த விரும்புகிறோம். இதுவே எங்கள் குறிக்கோள்.நாம்
அதைச் செய்ய விரும்பினால், நமது வார்த்தைகளையோ செயலையோ தீவிரமாக்கக்கூடாது... "

 "ஐரோப்பியர்கள் சில விரிவாக்கங்
களுக்கு அடிபணியக் கூடாது.நமது புவியியல் மற்றும் நமது வரலாற்றை மறந்துவிடக் கூடாது. நாங்கள் ரஷ்ய மக்களுடன் போரில் ஈடுபடவில்லை" என்று அவர் வலியுறுத்தினார்,

" ஐரோப்பா இனிமேலும் மொஸ்கோவிற்
கும் வோஷிங்டனுக்கும் இடையிலான
பனிப் போர்க் காலச் சூழ்நிலைக்குள்
இருக்கப் போவதில்லை "-என்பதையும்
மக்ரோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலந்து தலைநகர் வார்ஸோவில்
ஜே பைடன் ஆற்றிய பேருரையில்
புடினின் அதிகாரத்தை நேரடியாகவும்
தகாத வார்தைகளாலும்" உணர்ச்சிவசப்
பட்டுச்" சாடியுள்ளார் என்று சர்வதேச
அவதானிகள் கருதுகின்றனர். அரசியல்
படைபலம், பொருளாதார நிலைகளில்
பார்த்தால் அமெரிக்க அதிபர் இவ்வாறு
தனக்கு நிகரற்ற ரஷ்யா மீது கருத்துக்
களால் தாக்குவதற்கு அருகதையுடை
யவர் என்று வேறு சில கொள்கை வகுப்
பாளர்கள் கூறுகின்றனர்.

புடினின் கோபத்தைக் கிளறாமல் அவரை
அணுகிப் போரை முடிவுக்குக் கொண்டு
வர விரும்புகின்ற ஐரோப்பியத் தலைவ
ரான மக்ரோனை அமெரிக்காவின் போர்
விரிவாக்கப் பேச்சுகள் பொறுமையிழக்
கச் செய்துள்ளன. புடினுடன் தொடர்பைப்
பேணக் கூடிய ஒரே தலைவராகவும் புடின் செவிமடுக்கக் கூடிய குரலுடைய
ஒரே நண்பராகவும் விளங்கும் மக்ரோன்
ஐரோப்பாவின் பாதுகாப்புத் தொடர்பான
"யதார்த்த நோக்கத்தில்" மொஸ்கோவை
வெளியே விலக்கி வைக்க விரும்பாதவர்.
தார்மீக ரீதியில் நேட்டோவுக்கு ஆதரவா
கச் செயற்பட்டாலும் புடினோடு சமாதான
முறையில் இணக்கம் காண்பதிலேயே
மக்ரோன் கவனம் செலுத்திவருகிறார். 
போருக்கு முன்னரும் பின்னருமான
அவரது பல செயற்பாடுகள் இதனையே
வெளிப்படுத்துவதாக அவதானிகள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
-------------------------------------------------------------------
             -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                 28-03-2022

https://www.facebook.com/1328781225/posts/10228838670214750/?d=n

பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் அணுகுமுறை… சரியான நகர்வாகவே தெரிகின்றது.
ஐரோப்பா…  அமெரிக்காவின் பின்னால் போவதை, நிறுத்தி…
சுய பாதையை தீர்மானிக்க வேண்டும்.
அதில்… ரஷ்யாவையும் இணைப்பதில் தவறே இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Sasi_varnam said:

😂 சுயமா எழுத தெரியாட்டிக்கி இது தான் பிரச்சினை.

அடுத்தவன் கற்பனையை ஆட்டையை போடுவது. ஆட்டுக்குள்ள வந்து மாட்டை போடுவது...🤣
"டிக் டொக் டிக்கிலோனாக்கள்" அசட்டுத்தனம் பெரும் அவஸ்தை தான் பாருங்கோ.
~~ இது கற்பனை அல்ல நிஜம் ~~ !!! 

அதுவொரு பதில் கடிதம். 

நீங்கள் ஒருவருக்கு பதில்கடிதம் எழுதுவதென்றால் எப்படி எழுதுவீர்கள்?

மனதில் வன்மத்தை வளர விட்டால் ஆசிரியரிடம் கற்றது கூட ஆட்டைய போட்டது மாதிரித்தான் தெரியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.