Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, அபராஜிதன் said:

ஒரு வழி பயணம் 44000 இரு வழி பயணம் 66000  ஆகுமாம்.  நான் சிங்கப்பூர் ல இருந்து சென்னை போய் யாழ் போவம் எண்டு பார்க்கிறேன் இன்னும் சில நாட்கள் போகட்டும் 

போய் வந்து விபரம் போடுங்கள்.

யாழ்களத்தில் முதல் முறையாக,  எண்டு போட்டு தாக்கிடலாம்.

@ஈழப்பிரியன் அண்ணா இன்னும் ஒன்லைனில் புக் பண்ண முடியாதாம். இப்போதைக்கு ஏஜென்ஸ் மூலம் மட்டுமே புக் பண்ணலாமாம்.

  • Replies 240
  • Views 16.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

Visa required days என்ற கேள்விக்கு, Drop down boxல் 30 நாள்கள், 180 நாள்கள் உள்ளது. 

 

 

தகவலுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

ஆமாம் சரி ஆனால் நீங்கள் வெட்டும் மொத்த எண்களின் கூட்டுத்தொகை 10 மட்டுமே 

2+4+4 =10      இது காணது    நிரல்கள். கூட்டப்படவும்.   அதன் மூலம் வெட்டும்  எண்கள் அதிகரிக்க படவும் வேண்டும்    

ஜேர்மனியில் புல் சிஸ்டம் 013 என்று ஒரு நிரலில்.  13 இலக்கங்கள் வெட்டலாம்.  ஒரு கிழமைக்கு இதன் விலை 2059 .யூரோ  20 சென்ற்   நான் வெட்டவில்லை.   ஆனால் வெட்டி வீட்டில் வைத்திருந்தேன். கடையில் கொடுக்கவில்லை     ஒரு வருடமாய் ஒவ்வொரு கிழமையும்  எடுத்து பார்ப்பேன் ...3....4...வந்துள்ளது 

5....6.    ஒருபோதும் வரவில்லை  

நீங்கள் குறுப்பு. A ...10. இலக்கம் கொண்டது 

குறுப்பு B...20 இலக்கம் கொண்டது” 

குறுப்பு C....30 இலக்கம் கொண்டது    

இப்படி வெட்டி   ஒவ்வொரு கிழமையும். எடுத்து பாருங்கள்    எத்தனை இலக்கம். வத்திருக்கிறது என்று.     நான் பார்த்ததில்.  30. இலக்கங்களில்.  ஒரு வருடத்தில்  7 அல்லது 8 தடவைகள்  6 வந்துள்ளது  ...20 இலக்களில்.  வருடத்தில் 3 தடவைகள்   6 வந்துள்ளது    10 இலக்களில்.   6 இலககம்.  வரவில்லை    

[எனக்கு ஒரு முறை   5 இலக்கம்  வந்தது   ஒரு. சில.  ஆயிரம் பெற்று கொண்டேன்     அந்த நேரம் ஆறு இலக்கம் சரி என்றால்   12 இலட்சம் யூரோ    பரிசு      ]

 

நன்றி அண்ணை.

இவ்வளவு காசு செலவழித்து லொத்தர் வெட்ட என்னால் முடியாது. அது முழு நேர சூதாட்டம் ஆகி விடும். என் பெற்றோர் ஆவியாக வந்து அடிப்பார்கள்🤣.

ஏதோ ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை, கிழைமைப்படி இல்லாமல் மாதம் இரு முறை £10 பவுணுக்கு ஒரே விளையட்டை வெட்டிப்பாப்போம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

[30 நாள்களுக்கும் சரி 180 நாள்களுக்கும் சரி கட்டணம் US$50தான்.]

இதுவும் ஒரு இலங்கையின் குழப்பமான செயலில் ஒன்று தான். தங்களது நாட்டிற்குள் உள்ளே வந்த திகதியில் இருந்து ஒன்று அல்லது மூன்று மாதம் நிற்கலாம் என்று தானே பொதுவாக சுற்றுலா விசாவுக்கான முறை. சிலர் 14 நாட்களும் நிற்பார்கள், சிலர் 21 நாட்களும் சிலர் அதிக நாட்களும் நிற்பார்கள். இலங்கைக்கு விசா தேவைபடும் நாட்கள் 30  அல்லது 180 என்ற கேள்வி ஆனால் இரண்டிற்கும் கட்டணம் 50 டொலர்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நம்ம வீக்னஸ் எல்லாருக்கும் தெரிஞ்சிட்டு போலயே🤣

எப்பவோ தெரிஞ்சு, ஒவ்வொரு பதிவிலும் தேடினேன். அகபட்டியள், இப்பதான் நெஞ்ச்சுக்கு ஆறுதலாயிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2022 at 15:18, நிழலி said:

எனக்கு மிகப் பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. சென்னையில் கால் வைத்தவுடன் ஒரு வாஞ்சை மனசில் ஒட்டிக் கொள்ளும். 2016 இன் பின் இது வரைக்கும் 3 முறை சென்று வந்துள்ளேன்.  

எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம், சாமத்திலும் வீதிகளை துப்பரவு செய்யும் தொழிலாளிகள், எங்கும் தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள், மெரீனா மீன் சந்தை, அடையார் ஆனந்தபவன், Phoenix shopping mall என்று மனசுக்கு பிடித்த விடயங்கள் ஏராளம் அங்கு. ஒரு மோசமான அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை (கடும் வெக்கையைத் தவிர)

அங்கு இருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடைக்காகவே சென்னைக்கு பல முறை போய் வரலாம்.

விமான நிலையத்தில் போய் இறங்கியவுடன் வந்து கூப்பிட ஆட்களும், அங்கு கூட்டி திரிய ஆட்களும் இருந்தால் சொர்க்கமாய்த் தான் தெரியும் 
ஊரில் இருந்து போன்றவர்கள் சொல்லினம் தங்கட தமிழ் தமிழ்நாட்டுக்காரரை விட கேரளா, கேரளா தமிழ்நாட்டு எல்லை கிராம மக்களுக்கு நன்றாக விளங்குதாம. தாங்கள் கதைப்பதும் அவர்களுக்கு விளங்குதாம்.
சென்னையில் எவன் தமிழ் கதைக்கிறான்?...ஆங்கிலமும் ,தமிங்கிலீசும் தானே கதைக்கிறார்கள்....இதை பார்த்தால் உங்களுக்கு தமிழரின் நாட்டுக்கு போன மாதிரி இருக்கு ...முடியலைடா சாமி ...எதுக்கும் ஒரு அளவு வேண்டாமா  

7 hours ago, ரதி said:

விமான நிலையத்தில் போய் இறங்கியவுடன் வந்து கூப்பிட ஆட்களும், அங்கு கூட்டி திரிய ஆட்களும் இருந்தால் சொர்க்கமாய்த் தான் தெரியும் 
ஊரில் இருந்து போன்றவர்கள் சொல்லினம் தங்கட தமிழ் தமிழ்நாட்டுக்காரரை விட கேரளா, கேரளா தமிழ்நாட்டு எல்லை கிராம மக்களுக்கு நன்றாக விளங்குதாம. தாங்கள் கதைப்பதும் அவர்களுக்கு விளங்குதாம்.
சென்னையில் எவன் தமிழ் கதைக்கிறான்?...ஆங்கிலமும் ,தமிங்கிலீசும் தானே கதைக்கிறார்கள்....இதை பார்த்தால் உங்களுக்கு தமிழரின் நாட்டுக்கு போன மாதிரி இருக்கு ...முடியலைடா சாமி ...எதுக்கும் ஒரு அளவு வேண்டாமா  

நீங்கள் இது வரைக்கும் எத்தனை தடவை, எந்த நோக்கத்துக்காக சென்னைக்கு சென்று இருக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

[30 நாள்களுக்கும் சரி 180 நாள்களுக்கும் சரி கட்டணம் US$50தான்.]

இதுவும் ஒரு இலங்கையின் குழப்பமான செயலில் ஒன்று தான். தங்களது நாட்டிற்குள் உள்ளே வந்த திகதியில் இருந்து ஒன்று அல்லது மூன்று மாதம் நிற்கலாம் என்று தானே பொதுவாக சுற்றுலா விசாவுக்கான முறை. சிலர் 14 நாட்களும் நிற்பார்கள், சிலர் 21 நாட்களும் சிலர் அதிக நாட்களும் நிற்பார்கள். இலங்கைக்கு விசா தேவைபடும் நாட்கள் 30  அல்லது 180 என்ற கேள்வி ஆனால் இரண்டிற்கும் கட்டணம் 50 டொலர்.

வெளிநாட்டவர் கூடுதல் நாட்கள் நிற்கும் போது

கூடுதல் பணம் செலவு செய்வார்கள் என்று எண்ணுகிறார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

வெளிநாட்டவர் கூடுதல் நாட்கள் நிற்கும் போது

கூடுதல் பணம் செலவு செய்வார்கள் என்று எண்ணுகிறார்களோ?

ஓம். 30 நாள் விசா என்றாலும், 180 நாள் விசா என்றாலும் 50 டொலர் தான் என்றால் 180 நாள்  விசாவை தான் ஆசைபட்டு எடுத்து வந்து 180 நாட்கள் இலங்கையில் தங்கி பணத்தை செலவு செய்வார்கள் என்று திட்டமிட்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

ஓம். 30 நாள் விசா என்றாலும், 180 நாள் விசா என்றாலும் 50 டொலர் தான் என்றால் 180 நாள்  விசாவை தான் ஆசைபட்டு எடுத்து வந்து 180 நாட்கள் இலங்கையில் தங்கி பணத்தை செலவு செய்வார்கள் என்று திட்டமிட்டிருப்பார்கள்.

ஆமாம் உண்மையும் அது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

[தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள்]

தமிழர்களுடைய தமிழ்நாட்டில் கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்காமல் குஜராத்திலா தமிழில் பெயர் வைப்பார்கள்.
அதுவும் இப்படி தான் கோப்பி கடைக்கு குமாரி காப்பி பார் என்று தமிழில் வைப்பார்களாம். தமிழில்  பெயர்கள் பொது இடங்களில் வைப்பதற்கு இலங்கை அதில் தமிழர்கள் பகுதிகள் தான் சிறந்தது.
தமிழ்நாட்டுக்கு சென்றவர்கள் தெரிவிக்கும்குறைகளில் ஒன்று மக்கள் பெருக்கம் கூடி எங்கு பார்த்தாலும் மோசமான மக்கள் நெரிசல். நிழலியோ அதை விரும்புகிறார்.
[எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம்]

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

[தமிழ் மொழி பேசும் மக்கள், தமிழில் பெயர் பலகை வைத்து இருக்கும் கடைகள்]

தமிழர்களுடைய தமிழ்நாட்டில் கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்காமல் குஜராத்திலா தமிழில் பெயர் வைப்பார்கள்.
அதுவும் இப்படி தான் கோப்பி கடைக்கு குமாரி காப்பி பார் என்று தமிழில் வைப்பார்களாம். தமிழில்  பெயர்கள் பொது இடங்களில் வைப்பதற்கு இலங்கை அதில் தமிழர்கள் பகுதிகள் தான் சிறந்தது.
தமிழ்நாட்டுக்கு சென்றவர்கள் தெரிவிக்கும்குறைகளில் ஒன்று மக்கள் பெருக்கம் கூடி எங்கு பார்த்தாலும் மோசமான மக்கள் நெரிசல். நிழலியோ அதை விரும்புகிறார்.
[எந்த நேரமும் நெரிசலான மக்கள் கூட்டம்]

அப்படியல்ல, ஐயா.

பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையில் நிச்சயம் மனதில் ஒரு சிலிர்ப்பும், புத்துணர்ச்சியும் இருக்கும்.

ஏனெனில், தமிழ் நம் இதயத்தோடும், உணர்வோடும் பிணைந்தது. இதை நான் ஒவ்வொரு முறையும் இங்கிருந்து தமிழ்நாடு சென்று கால் பதிக்கும்போது உணர்கிறேன். அவ்வளவு ஏன், இங்கிருக்கும் கடைகளில் தமிழில் எங்காவது எழுதியிருந்தால் அந்த கடைக்குதான் நான் முதலில் செல்வேன்..!

உதாரணத்துக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் இங்கே 23 வருடங்களாக இயங்கி வந்த தமிழ் முடி திருத்தும் கடை ஒன்று மூடப்பட்டுவிட்டது. வேறு வழியின்றி சில வீதிகளில் ஏதாவது தமிழ் தெரிந்த முடி திருத்துபவர் இருக்கிறாரா..? என தேடினேன்(முடி திருத்தப்படும்போது ஏதாவது தமிழில் உரையாடுவது வழக்கம்). எங்கும் அருகில் இல்லை. ஆனால் ஒரு கடையில் மற்ற மொழிகளோடு (அரபி, வங்காளம்) தமிழில் "சலூன்" என மேலே முதலில் எழுதியிருந்தது.

உள்ளே சென்று "தமிழா..?" என விசாரித்தேன்.

கடைக்காரர் "அண்ணே.." என என்னை தமிழில் விளித்துவிட்டு, ஆங்கிலத்தில் சொன்னார், "இங்கே தமிழர் ஒருவர் வேலை பார்த்து வந்தார், இப்பொழுது இங்கே இல்லை, ஆனால் அவரை தேடி தமிழ் வாடிக்கையாளர்கள் சிலர் வருவதுண்டு, அவர்தான் கடைக்கு வெளியே தமிழிலும் மேலே எழுத சொன்னார்".

இப்பொழுது அந்தக் கடையில் முழுவதும் பெங்காளிகளே வேலை செய்கிறார்கள். ஆனால் ஏனோ நான் இரண்டு மாதங்களாக அந்தக் கடையில்தான் முடி திருத்த செல்கிறேன். இது சிறு நிகழ்வாக இருக்கலாம், ஆனால் அக்கடையோடு பிணைப்பிற்கு தமிழே காரணம்.

இம்மாதிரி, நிழலி தமிழ்நாட்டில் இறங்கியவுடன், 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ் மட்டுமே' என்பதை புத்துணர்வோடு உணர்ந்திருக்கலாம், அவரின் உணர்வை புரிந்து, மனதார பாராட்டுகிறேன்..! 👍 💐

நன்றி, நிழலி..!

அடுத்தது 'தமிழ்நாட்டில் மக்கள் நெருக்கம்' பற்றியது.

நான் முதன் முதலில்(1998) துபைக்கு மதியம் வந்து இறங்கி, விமான நிலையத்திலிருந்து டாக்சியில் வெளியே வந்தால், சாலையில், தெருவில் ஒரு பயலையும் காணோம்..! 😲 🧐

'என்னடா நாடுதான் பொட்டல் என்றால், சனங்கள் இல்லாத பொட்டல் தெருக்களாக இருக்கிறதே..!' என மலைப்பும், உறுத்தலும் இருந்தன.

சில சமயம் ஈழத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வல்வட்டுத்துறை இன்னபிற காணொளிகளை காணும்போது, சில சனங்களே மிதிவண்டிகளில் அல்லது வாகனங்களில் செல்வதை பார்க்கையில் 'இப்படி அத்துவான காடாக இருக்கிறதே..!' என வியப்பதுண்டு. ஏனெனில், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் மக்கள் அடர்த்தி அதிகம். அதுவே எமக்கும் வாழ்ந்து பழகியது..!

வெளிநாடுகளிலிருந்து இங்கு வருபவர்களுக்கு மக்கள் நெருக்கம் என்பது ஆச்சரியம்தான், ஆனால், எங்களுக்கு அது மிகச் சாதாரணம்..! இது குளிர் மற்றும் வெப்ப நாடுகளில் வாழ்பவர்கள், ஒருத்தருக்கொருத்தர் 'எப்படி ஐயா இப்படிப்பட்ட சூழலில் வாழ்கிறீர்கள்..?' என சொல்லிக்கொள்வது போன்றதுதான்.

முடிவாக, தமிழர்களின் மக்கள் தொகை அதிகம் இருந்தால் நல்லதுதானே..? 😍

இல்லையெனில், இலங்கை மாதிரி சிறுபான்மை ஆகிவிடுவோம் ஐயா..! 😂

அதுவே உங்கள் விருப்பமா..? 😜 சொல்லுங்கள், கோப்பால்..!! 🤣

 

Edited by ராசவன்னியன்
எழுத்துப் பிழைகள்

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ராசவன்னியன் said:

அப்படியல்ல, ஐயா.

பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையில் நிச்சயம் மனதில் ஒரு சிலிர்ப்பும், புத்துணர்ச்சியும் இருக்கும்...

விரிவான விளக்கத்திற்கு நன்றி அய்யா.

16 hours ago, ராசவன்னியன் said:

அதுவே உங்கள் விருப்பமா..? 😜 சொல்லுங்கள், கோப்பால்..!! 🤣

 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2022 at 14:14, நிழலி said:

நீங்கள் இது வரைக்கும் எத்தனை தடவை, எந்த நோக்கத்துக்காக சென்னைக்கு சென்று இருக்கின்றீர்கள்?

இதற்கு நான் நேரடியான பதிலை சொல்ல வேண்டியதில்லை  ...கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று நீங்கள் தான் முந்தி ஒரு திரியில் எனக்கு எழுதி இருந்தீர்கள்...மறந்து இருக்க மாட்டடீர்கள் என்று நினைக்கிறேன்.
 

.வெளி நாட்டு கடவுசீட்டு,அந்திய செலாவணி போன்ற....காரணங்களால் அவர்கள் உங்களை விழுந்து ,விழுந்து மதிப்பார்கள்  ....போர் முடிந்து இவ்வளவு காலத்திற்கு பிறகும் இலங்கையில் இருந்து அங்கத்தைய கடவுசீட்டுடன் த /நா போய் ஹொட்டலில் அறை கேட்டால் கொடுக்க மாட்டார்கள் ...பாதுகாப்பு காரணமாம்...புலிகளில் இருந்தவர்களே யாழிலிருந்து கொழும்புக்கு போய் வருகிறார்கள் .அறை எடுத்து தங்குகிறார்கள் . சிங்களவர்கள் பேசாமல் இருக்கிறார்கள் ...ஏதோ இவர்களது நாட்டை ஈழத்து தமிழர்கள் அழித்து விடுவார்கள் என்பது மாதிரி இவர்களது நடவடிக்கைகள் எல்லாம் இருக்குது 
 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2022 at 09:44, தமிழ் சிறி said:

 

பருத்தித்துறை -  வடை, அப்பம்.
சாவகச்சேரி - பிலாப்பழம் 
பூநகரி - மொட்டைக்  கருப்பன் அரிசி 
ஆனைக் கோட்டை - செக்கில் ஆட்டின சுத்தமான நல்லெண்ணெய். .
உரும்பிராய் - மரவள்ளிக்கிழங்கு.
திருநெல்வேலி - கீரை.
வசாவிளான் - கப்பல் வாழைப்பழம்.
மட்டுவில் - கத்தரிக்காய்.
மானிப்பாய் - பனங்கிழங்கு 
கீரிமலை -  கூவில்  பனங்கள்ளு
யாழ்ப்பாணம் - மொக்கன் கடை புட்டு

தீவகத்து ஒடியல் கூழ்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, புலவர் said:

தீவகத்து ஒடியல் கூழ்!

புலவர், தீவகத்து ஒடியல் கூழ் நான்  இதுவரை குடித்துப் பார்த்ததில்லை.
அடுத்த முறை போனால் கட்டாயம் குடித்துப் பார்க்க வேண்டும். 

சென்னை -  பலாலி விமானம் தொடர்ந்து சேவையில் ஈடுபடுகின்றதா?
அல்லது முதல் வந்த, அந்த விமானத்துடன்...  நிறுத்தி விடடார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சென்னை -  பலாலி விமானம் தொடர்ந்து சேவையில் ஈடுபடுகின்றதா?
அல்லது முதல் வந்த, அந்த விமானத்துடன்...  நிறுத்தி விடடார்களா?

சேடம் இழுத்து இழுத்து ஓடுது.

இந்திய புலநாய்வுப் பிரிவு தான் வந்து போகுதோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

சேடம் இழுத்து இழுத்து ஓடுது.
இந்திய புலநாய்வுப் பிரிவு தான் வந்து போகுதோ?

பீதியை.. கிளப்புகிறீர்கள், ஈழப்பிரியன். 😂
நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

பீதியை.. கிளப்புகிறீர்கள், ஈழப்பிரியன். 😂
நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம். 

சிறி அதுக்கு வேற நீல பெயின்ற் அடித்து எனக்கு அடி வாங்கி தர போறீங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி அதுக்கு வேற நீல பெயின்ற் அடித்து எனக்கு அடி வாங்கி தர போறீங்கள்.

"கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் திரியில்"...  @satanனை,  ஸ்ரீலங்கா பொலிஸ் தேடுது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல்யம் ஆக கொஞ்ச நாள் ஆகும். மேலும் இந்தியாவில் இருந்து பதிவு செய்வதிலும் பார்க்க, கூடுதலாக இலங்கையில் இருந்து பதிவு செய்ய செலவாகிறது.

போனவாரம் e-Visa நடைமுறை வந்த பின்னர், பிரிட்டனில் விசா கட்டணம் $50 ஆகி உள்ளது. இதுநாள் வரை £153 ஆக இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

போனவாரம் e-Visa நடைமுறை வந்த பின்னர், பிரிட்டனில் விசா கட்டணம் $50 ஆகி உள்ளது. இதுநாள் வரை £153 ஆக இருந்தது. 

வரேவாவ். இந்த விசாவுக்கு எத்தனை தரம் எண்டிரி?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

வரேவாவ். இந்த விசாவுக்கு எத்தனை தரம் எண்டிரி?

Single

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

"கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் திரியில்"...  @satanனை,  ஸ்ரீலங்கா பொலிஸ் தேடுது. 🤣

காட்டிக் கொடுத்த @goshan_che க்கு சன்மானம் வழங்கபடுமா சிறி?

11 minutes ago, Nathamuni said:

போனவாரம் e-Visa நடைமுறை வந்த பின்னர், பிரிட்டனில் விசா கட்டணம் $50 ஆகி உள்ளது. இதுநாள் வரை £153 ஆக இருந்தது. 

 

10 minutes ago, goshan_che said:

வரேவாவ். இந்த விசாவுக்கு எத்தனை தரம் எண்டிரி?

இடைத் தங்கலுக்கு விசா தேவை இல்லை என்று எண்ணுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

காட்டிக் கொடுத்த @goshan_che க்கு சன்மானம் வழங்கபடுமா சிறி?

ஈழப்பிரியன்... சன்மானம் எல்லாம், ஏற்கெனவே வாங்கிய பின்தான் 
சாத்தானின் பெயரை, கோசான் வெளியிட்டவர்.  🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.