Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் வதியும் யாழ்.பெண்மணியால் காணியற்றோருக்கு காணிகள் பகிர்ந்தளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வதியும் யாழ்.பெண்மணியால் காணியற்றோருக்கு காணிகள் பகிர்ந்தளிப்பு

புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்பவர் யாழ்ப்பாணத்தில் அவருக்குச் சொந்தமான காணியை காணியற்றோருக்கு பகிர்ந்தளித்துள்ளார்.

kani-300x168.jpg

வேலணை – கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட திருமதி வரதா சண்முகநாதன் என்பவரே தனக்குச் சொந்தமான காணியை 9 குடும்பங்களுக்கு தலா இரண்டு பரப்பு வீதம் பகிர்ந்தளித்துள்ளார்.

பகிர்ந்தளிக்கப்பட்டோருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் அப்பகுதியின் கிராம சேவையாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருமதி வரதா சண்முகநாதனை பின்பற்றி புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் காணியற்றோருக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

https://thinakkural.lk/article/240992?fbclid=IwAR0wsyyRzs5HdrF3dvYS5AXlzxvIu_TuKDL1iyviL1w0Uhfbhp8VWiRaNrQ

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

kani-300x168.jpg

வேலணை – கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட திருமதி வரதா சண்முகநாதன் என்பவரே தனக்குச் சொந்தமான காணியை 9 குடும்பங்களுக்கு தலா இரண்டு பரப்பு வீதம் பகிர்ந்தளித்துள்ளார்.

பகிர்ந்தளிக்கப்பட்டோருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் அப்பகுதியின் கிராம சேவையாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருமதி வரதா சண்முகநாதனை பின்பற்றி புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் காணியற்றோருக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நன்றி அம்மா.
 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..நன்றி அம்மா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அம்மா ரொறன்றோ கல்விச் சபைக்குள் பணியாற்றும் பார்த்தி கந்தவேல் ஆசிரியரின் சிறியதாயார்.அந்த அம்மாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.🙏

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமாக் காணிகளை பராமரிக்கவோ.. பயன்படுத்தவோ முடியாதவர்கள்.. அந்நியர்களுக்கு அறா விலைக்கு விற்பதிலும்.. இப்படி சொந்த மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பது நல்லதே. 

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே உள்ள நிலத்தை வாங்குவதற்கு அங்கே உள்ளவர்கள் விலைக்கு கேட்டும் தாங்களும் பாவிக்க போவது இல்லை என்று தெரிந்தும் கொடுக்காமல் வைத்திருப்போர் மத்தியில் இப்படி ஒரு அம்மா 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம். 

அதே போல் ஊர்களில் இருக்கும் கோவில் காணிகளையும் காணியில்லாதவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள் தாயே.......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்    நல்ல பணி.    

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்ப மனித வடிவில் கடவுளைக் காண்கிறேன்.

வணங்குகிறேன் தாயே.

இணைப்புக்கு நன்றி நுணா.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன், சோனகன் வந்து இருக்க முதல்....
இப்படி பகிந்தளிப்பது முன்னுதாரணமான செயல்.
அந்த அம்மாவிற்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலரையும் வியக்கவைத்த கனடா வாழ் யாழ்ப்பாண பெண்மணி!

 

Background-2023-02-22T140107.966-300x200

கனடாவிற்கு புலம்பெயர்ந்து  வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் யாழில் அவருக்குச் சொந்தமாக உள்ள காணியை காணியற்றோருக்கு பகிர்ந்தளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் வேலணை – கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட வரதா சண்முகநாதன் என்பவரே தனக்கு சொந்தமான காணியை 9 குடும்பங்களுக்கு தலா 2 பரப்பு வீதம் பகிர்ந்தளித்துள்ளார்.

பகிர்ந்தளிக்கப்பட்டோருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (18-02-2023) மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் அப்பகுதியின் கிராம சேவையாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் வரதா சண்முகநாதனை பின்பற்றி புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் காணியற்றோருக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசித்துவரும் இலங்கையரான வரதா சண்முகநாதன் தமது 87வது வயதில் யோர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார்.

இதற்காக ஒன்டாறியோ மாகாண நாடாளுமன்றம் அவரை கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.netrigun.com/?p=319832&fbclid=IwAR39Vs-tF-db4pCazmWQCO2aFTJHwfbz7zfXeZiA_83qBVrMy79HjaAI6BA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.