Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் – யாரும் உரிமை கோர முடியாது : கம்மன்பில

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிதி வழங்கியது மத்திய வங்கி – எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு !

கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் – யாரும் உரிமை கோர முடியாது : கம்மன்பில

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை சிங்கள பௌத்த நாடு. இந்த நாட்டில் எந்த இடத்தையும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது.

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல. அங்கு மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்நிலையில், மூவின மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள். இதனால் தெற்கிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வடக்கு – கிழக்கில் விகாரைகளை நிறுவுதல் பௌத்த மயமாக்கல் எனில் தெற்கில் – கொழும்பில் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டமை இந்து மயமாக்கலா?

வடக்கு – கிழக்கில் சிங்களவர்கள் குடியேறுதல் சிங்கள மயமாக்கல் எனில் தெற்கில் – கொழும்பில் தமிழர்கள் குடியமர்ந்துள்ளமை தமிழர் மயமாக்கலா? தமிழ் அரசியல்வாதிகள் முதலில் வரலாற்றைப் படிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1346967

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப port city ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் – யாரும் உரிமை

அப்போ   இலங்கையின் தலைநகர் பெயர் என்ன?? இதுவரை நாடுகளுக்கு தான் தலைநகர் இருந்தது    இப்போது  மனித இனத்துக்கும். தலைநகர்    இருபதையும் அறிகிறேன்   முஸ்லிம் இனத்தின் தலைநகர் பெயர் என்ன???. தமிழனுக்கு உலகமே தலைநகர் தான்   🤣😁  உங்கள் கொழுப்பை  உங்களுடன் வைத்து கொள்ளுங்கள்   🤣

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலிக்கு அரசியல் கதிரை ஆசை வந்திட்டுது. இதன் கையில்  அரசியல் போனால், என்ன ஆகும்? எப்படியாவது ஒரு இனக்கலவரத்தை தூண்டி, தான் கதாநாயகன் ஆகவேண்டும் எனும் பழைய செயற்பாட்டு முறையில் கூவுகிறார். மக்கள் யாரும் எடுபடவில்லை, ஓசியில் வயிறு வளர்க்கும் கூட்டம் அலையுது,  தூண்டி விடுபவர்கள் சத்தம் மட்டுந்தான், பிரசன்னம் இல்லை. இதைப்பாத்து சில அரசியல்வாதிகள் தாங்களும் தமிழருக்கு யோசனை கூற வருகிறார்கள், தாங்கள் தேர்தலில் தோற்றுவிடுமோ என்கிற பயம் அவர்களுக்கு. இது அவர்களின் தேர்தல் பிரச்சார கலாச்சாரம். ரணிலாரும் இவர்களை கைது செய்யயாமல் கத்த விட்டு நோட்டம் பார்க்கிறார். இந்த அலப்பறைகளை கைது செய்தால், இவர்களுக்குப்பின்னால் ஒளிந்திருக்கும் பூதம் வெளியில் வரும். இப்போ அவர்களை இலகுவாக கைது செய்ய முடியும்.  மீண்டும் அவர்கள் அரசியல் கதிரை ஏறினால் விரட்டுவது கடினம். ரணிலின் அரசியல் ஆசை இதோடு நிறைவடையும். இதற்குப்பின்னால் பசிலும், நாமலும் இருப்பார்கள் என்பது எனது சந்தேகம். முந்திரிக்கொட்டை மாதிரி எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லும் நாமல் மௌனமாய் இருக்கிறார், சந்திரிக்கா வேற பேசாமல் இருக்கிறார். என்னவோ நடக்குது, மர்மமாய் இருக்குது. ஒண்ணுமே புரியல. 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

அப்ப port city ?

அது  சைனாக்காரன்ட 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களால் தான் கொழும்பு தலைநகரா இருக்குது. இல்லை பிச்சைக்காரக் குப்ப நரகமாத் தான் இருக்கும். அதை தான் வீரசேக.. பொன்சேகா.. கம்பன்பில.. விமல்.. போன்றோர் விரும்பினம் போல.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்த மனுஷன் அப்படி சொல்லி சந்தோசப்படட்டும். இவர்களுக்கு இப்படி எல்லாம் சொல்லி சொல்லி எதாவது செய்ய வேண்டிய நிலைமை. தேர்தலுக்கு முன்னர் யார் பெரிய இனவாதி என்ற போட்டி. இன்னும் நிறைய பேர் இதையும் விட பெரிய கதைகள் எல்லாம் சொல்ல போகின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஓடிய இரத்த ஆறுக்கு இந்த இனவாதிகள் தான் காரணம். மீண்டும் இவர்களை தலை தூக்காமல் சிங்கள மக்கள் இவர்களை ஓட ஓட விரட்டுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, nunavilan said:

ஓடிய இரத்த ஆறுக்கு இந்த இனவாதிகள் தான் காரணம். மீண்டும் இவர்களை தலை தூக்காமல் சிங்கள மக்கள் இவர்களை ஓட ஓட விரட்டுவார்களா?

அப்படிநடந்தால் ஈழத்தீவிலே ஒரு புதிய அரசியற் பண்பாடு தோன்றும். ஆனால் அதற்கான வாய்பில்லை என்பதே தற்கால நகர்வுகள் சுட்டிநிற்கின்றன.

வயிற்றுப்பசி குறைந்துள்ளதால் இனவாதப்பசியை அவர்கள் சுவைக்கவே காத்திருக்கிறார்கள். ஒரு முழுமையான தாக்குதல் நடக்குமாயின் அப்போதுதான் அவர்களது முகத்தை இனம்காட்டுவர். இப்போது இவர்கள் நடாத்துவது ஒத்திகை. 1983இலே கொள்ளை கொலையிலே ஈடுபட்டோரின் வாரிசுகள் பேரப்பிள்ளைகளோடு  அரங்கம் வருவதற்கான காலத்துக்காகக் காத்திருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

ஓடிய இரத்த ஆறுக்கு இந்த இனவாதிகள் தான் காரணம். மீண்டும் இவர்களை தலை தூக்காமல் சிங்கள மக்கள் இவர்களை ஓட ஓட விரட்டுவார்களா?

ஓட ஓட விரட்டுவதட்கு சிங்கள மக்கள் பக்குவப்பட்டு விடடார்கள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் இந்த முறை ஜேவிபி ஒரு திருப்பத்தை ஏட்படுத்தும்  என்று சொல்லலாம். அதனால் தமிழர்களுக்கு ஏதும் பெரிதாக கிடைக்கும் என்று சொல்ல முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

ஓட ஓட விரட்டுவதட்கு சிங்கள மக்கள் பக்குவப்பட்டு விடடார்கள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் இந்த முறை ஜேவிபி ஒரு திருப்பத்தை ஏட்படுத்தும்  என்று சொல்லலாம். அதனால் தமிழர்களுக்கு ஏதும் பெரிதாக கிடைக்கும் என்று சொல்ல முடியாது. 

ஆம் . கருத்து கணிப்பில் ஜே வி பி முன்னணியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஜே வி பியும் ஒரு இனவாத கூட்டமே.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Cruso said:

ஓட ஓட விரட்டுவதட்கு சிங்கள மக்கள் பக்குவப்பட்டு விடடார்கள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் இந்த முறை ஜேவிபி ஒரு திருப்பத்தை ஏட்படுத்தும்  என்று சொல்லலாம். அதனால் தமிழர்களுக்கு ஏதும் பெரிதாக கிடைக்கும் என்று சொல்ல முடியாது. 

ஒரு மாநிலமான வடகிழக்கை பிரித்ததே ஜேவிபி தான்.

இன்றுவரை தமிழர்களுக்கு என்ன தீர்வு என்று இவர்கள் சொல்லவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் இல்லையென்றால், 83 கலவரத்தில் எதற்கு தமிழர்களை அடித்து உதைத்து கப்பலில் ஏற்றி வடக்கு கிழக்குக்கு அனுப்பினீர்கள் என்று நமது அரசியல்வாதிகள் கம்மன்பிலவை கேட்கலாமே.

அதற்கு அவர் பதில் என்னவாக இருக்கும் என்பதை அறிய மிகுந்த ஆவல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28/8/2023 at 06:12, தமிழ் சிறி said:

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல. அங்கு மூவின மக்களும் வாழ்கின்றார்கள்.

மூவின மக்கள் வாழும் நாடு சரியானது என்றால் உரிமைகளில் ஏன் பாகுபாடு?
சிங்களப்பகுதிகளில் தமிழ் மொழி மருந்துக்கும் இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
On 29/8/2023 at 05:36, nedukkalapoovan said:

தமிழர்களால் தான் கொழும்பு தலைநகரா இருக்குது. இல்லை பிச்சைக்காரக் குப்ப நரகமாத் தான் இருக்கும். அதை தான் வீரசேக.. பொன்சேகா.. கம்பன்பில.. விமல்.. போன்றோர் விரும்பினம் போல.

அவங்களுக்கு அது விளங்காது சொல்லியும் புரியாது .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் இல்லையென்றால், 83 கலவரத்தில் எதற்கு தமிழர்களை அடித்து உதைத்து கப்பலில் ஏற்றி வடக்கு கிழக்குக்கு அனுப்பினீர்கள் என்று நமது அரசியல்வாதிகள் கம்மன்பிலவை கேட்கலாமே.

ஓர் தடவை விக்கினேஸ்வரன் ஐயா கேட்டதாக நினைவிருக்கிறது. கம்மன்பிலவையல்ல ஓர் அறிக்கையில் அல்லது பாராளுமன்றில்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

ஆம் . கருத்து கணிப்பில் ஜே வி பி முன்னணியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஜே வி பியும் ஒரு இனவாத கூட்டமே.

இனவாதி விமல் வீரவன்சவை உருவாக்கியது ஜேவிபி தான். ஜேவிபி இன் இனவாதம் போதாதென்றுதான் விமல் மேலே ஒரு படி போய் இனவாத கட்சியை ஆரம்பித்தான். உள்ளுக்குள் ஜேவிபி இட்கு இனவாதம் இருந்தாலும்வெளியில் பெரிதாக காட்டிக்கொள்ளமாடடார்கள். வீரவன்ச உள்ளேயும் வெளியேயும் அதை காட்டி கொள்ளுவான். அனபை போதிக்கும் சிங்கள மத தலைவர்களே (பவுத்த , கத்தோலிக்க ) இனவாதிகளாக இருக்கும்போது இவர்கள் எம்மாத்திரம். 

  • கருத்துக்கள உறவுகள்

ரோஹண விஜய வீர உயிரோடு இருந்தபோது, தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, தான் ஆட்சியை ஏற்றால் இருபத்துநான்கு மணித்தியாலத்தில் புலிகளை தூக்கில் ஏற்றுவேன் என்று கூறினாராம். அப்போ புலிகள் அவ்வளவு பிரபல்யம் அடைந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.