Jump to content

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.


Recommended Posts

காஸா மீது மேற்கொண்ட தாக்குதல்க்கள் மூலம் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதே காரணத்துக்காக காஸா தலைவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இஸ்ரேல் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

 

பிரெஞ்சுச் செய்தி மூலம் . https://www.lefigaro.fr/international/la-cour-penale-internationale-emet-un-mandat-d-arret-contre-netanyahu-pour-crimes-contre-l-humanite-20240520

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் காசா மீதான யுத்தம் நிறுத்தப்படுமா?!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

இதனால் காசா மீதான யுத்தம் நிறுத்தப்படுமா?!

இவர்களது பருப்பை சிறிலங்காவிலேயே அவிக்கமுடியவில்லை. பிறகெப்படி இஸ்ரேலில் சாத்தியம். அதேவேளை தாங்கள் கமாசை மட்டுமல்ல இஸ்ரேலரசையும் தண்டிக்கிறோம் என்று காட்டி, கமாசுக்கு ஒரு கிடுக்குப்பிடி போடுவதே நோக்கம். 

  • Like 1
Link to comment
Share on other sites

9 minutes ago, ஏராளன் said:

இதனால் காசா மீதான யுத்தம் நிறுத்தப்படுமா?!

போரின் வீச்சு குறையலாம்.

ரஸ்ய அதிபர் புதின் மீதும் இதேபோன்று பிடியாணை உள்ளது. அதனால் போர் நின்றுவிடவில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் வசிக்கும் நாடுகளுக்கு இவர் சென்றால் அந்த நாடு இவரைக் கைது செய்ய வேண்டும். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய பிரதமர் ஹமாஸ் தலைவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

Published By: RAJEEBAN

20 MAY, 2024 | 05:57 PM
image

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

யுத்த குற்றங்களிற்கா பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/184071

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சிறப்பான நடவடிக்கை.

நெரன்யாஹுவின் வெளிநாட்டுப் பயணங்கள் தடைப்பட்டு, தனிமைப் படுத்தப் படும் நிலை வர வேண்டும். உள்நாட்டு அரசியலில் , கோத்தாவிற்குக் கொடுத்தது போல, "பதவி விலகினால், பேசாமல் இருக்க விடுகிறோம்" என்ற டீலை தீவிர வலதுசாரிகள் அல்லாத எதிர் தரப்பினர் கொடுத்து, ஆட்சியை மாற்றி, இராணுவ நடவடிக்கையை நிறுத்த வைக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

மிகச் சிறப்பான நடவடிக்கை.

நெரன்யாஹுவின் வெளிநாட்டுப் பயணங்கள் தடைப்பட்டு, தனிமைப் படுத்தப் படும் நிலை வர வேண்டும். உள்நாட்டு அரசியலில் , கோத்தாவிற்குக் கொடுத்தது போல, "பதவி விலகினால், பேசாமல் இருக்க விடுகிறோம்" என்ற டீலை தீவிர வலதுசாரிகள் அல்லாத எதிர் தரப்பினர் கொடுத்து, ஆட்சியை மாற்றி, இராணுவ நடவடிக்கையை நிறுத்த வைக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

யாவும் கற்பனை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விசுகு said:

யாவும் கற்பனை....

கற்பனை என்பதை விட நப்பாசை என்று சொல்லலாம்😂.

இதைச் சுற்றி நடக்கும் சில விடயங்களைக் கவனியுங்கள் - போன வருடம் இருந்ததை விட தற்போது நிலை இஸ்ரேலுக்கு பாதகமாக மாறி விட்டது புலப் படும்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த ICC நீதி மன்றுக்குக் கட்டுப் படாதவை, எனவே நெரன்யாஹு அமெரிக்காவிற்கு வந்து போகலாம். ஆனால், ஏனைய 120 வரையான நாடுகள் - இவற்றுள் டசின் கணக்கான ஐரோப்பிய நாடுகள் - நெரன்யாகு இனி சாதாரணமாக வந்து போக முடியாத நிலை இருக்கும். அந்த நாட்டிற்கு  வருகிறார் என்று அறிவித்தல் வந்தாலே, ஏதாவது அமைப்பு உள்ளூர் கோர்ட்டில் இந்த ஆணையைக் காட்டி வழக்குப் போடும் நிலை இருக்கிறது. அந்த நாட்டு அரசு, "ராஜதந்திர பாதுகாப்பு -diplomatic immunity இருக்கிறது" என குத்தி முறிய வேண்டிய நிலை ஏற்படும்.

இதை விட, இந்த நகர்வில் "நெரன்யாஹுவின் குழுவும் ஹமாஸ் தலைவர்களும்" ஒன்றே என்ற செய்தியையும் இஸ்ரேலுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு அவமான முத்திரை இஸ்ரேலுக்கு.

அமெரிக்காவின் இதற்கான எதிர்வினை தீவிரமாக இல்லை. ஏன்? தேர்தல் வருகிறது. பைடன் நிர்வாகம் இதனை தீவிரமாக எதிர்த்தால், தற்போது சவர அலகு மெல்லிதாக இருக்கும் வெற்றி வாய்ப்பும் இஸ்ரேல் எதிர்ப்பு வாக்காளர்களினால் இல்லாமல் போய் விடும் ஆபத்து இருக்கிறது. இந்த இஸ்ரேல் எதிர்ப்பு வாக்காளர்கள் ட்ரம்புக்கு வாக்களிக்க மாட்டார்கள், ஆனால் வாக்களிக்கப் போகாமல் இருந்து விடுவர், அதுவே போதும் பைடன் தோற்க. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, Justin said:

கற்பனை என்பதை விட நப்பாசை என்று சொல்லலாம்😂.

இதைச் சுற்றி நடக்கும் சில விடயங்களைக் கவனியுங்கள் - போன வருடம் இருந்ததை விட தற்போது நிலை இஸ்ரேலுக்கு பாதகமாக மாறி விட்டது புலப் படும்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த ICC நீதி மன்றுக்குக் கட்டுப் படாதவை, எனவே நெரன்யாஹு அமெரிக்காவிற்கு வந்து போகலாம். ஆனால், ஏனைய 120 வரையான நாடுகள் - இவற்றுள் டசின் கணக்கான ஐரோப்பிய நாடுகள் - நெரன்யாகு இனி சாதாரணமாக வந்து போக முடியாத நிலை இருக்கும். அந்த நாட்டிற்கு  வருகிறார் என்று அறிவித்தல் வந்தாலே, ஏதாவது அமைப்பு உள்ளூர் கோர்ட்டில் இந்த ஆணையைக் காட்டி வழக்குப் போடும் நிலை இருக்கிறது. அந்த நாட்டு அரசு, "ராஜதந்திர பாதுகாப்பு -diplomatic immunity இருக்கிறது" என குத்தி முறிய வேண்டிய நிலை ஏற்படும்.

இதை விட, இந்த நகர்வில் "நெரன்யாஹுவின் குழுவும் ஹமாஸ் தலைவர்களும்" ஒன்றே என்ற செய்தியையும் இஸ்ரேலுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு அவமான முத்திரை இஸ்ரேலுக்கு.

அமெரிக்காவின் இதற்கான எதிர்வினை தீவிரமாக இல்லை. ஏன்? தேர்தல் வருகிறது. பைடன் நிர்வாகம் இதனை தீவிரமாக எதிர்த்தால், தற்போது சவர அலகு மெல்லிதாக இருக்கும் வெற்றி வாய்ப்பும் இஸ்ரேல் எதிர்ப்பு வாக்காளர்களினால் இல்லாமல் போய் விடும் ஆபத்து இருக்கிறது. இந்த இஸ்ரேல் எதிர்ப்பு வாக்காளர்கள் ட்ரம்புக்கு வாக்களிக்க மாட்டார்கள், ஆனால் வாக்களிக்கப் போகாமல் இருந்து விடுவர், அதுவே போதும் பைடன் தோற்க. 

இதுக்காகத்தான் அதை எழுதினேன். நெதன்யாகுவுக்கே இந்த நிலை என்றால் என்றாவது நம்ம ஊரில் வைத்திருக்கும் பொதியை திறக்க மாட்டார்களா என்ற அதே நப்பாசை தான் எனக்கும். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

போரின் வீச்சு குறையலாம்.

ரஸ்ய அதிபர் புதின் மீதும் இதேபோன்று பிடியாணை உள்ளது. அதனால் போர் நின்றுவிடவில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் வசிக்கும் நாடுகளுக்கு இவர் சென்றால் அந்த நாடு இவரைக் கைது செய்ய வேண்டும். 

அமெரிக்கா போகலாம்தானே...அப்ப அவருக்கு என்ன பயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இதை விட, இந்த நகர்வில் "நெரன்யாஹுவின் குழுவும் ஹமாஸ் தலைவர்களும்" ஒன்றே என்ற செய்தியையும் இஸ்ரேலுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இது ஒரு அவமான முத்திரை இஸ்ரேலுக்கு.

உண்மை, ஏதோ தாம் புனிதர்கள்போலவும், தாமே பலஸ்தீனர்களுக்குத் தீர்ப்பெழுதுபவர்போல் கொன்றொழித்தவாறு தம்மை அசைக்கமுடியாது என்ற சியோனிசவாதிகளுக்கு இந்தத் தீர்ப்பு சம்மட்டி அடிதான். அதேவேளை, அமெரிக்க பாதுகாப்பு அரண் இருக்கும்வரை இஸ்ரேலின் ஆட்டம் ஓயாது.  

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nochchi said:

 அமெரிக்க பாதுகாப்பு அரண் இருக்கும்வரை இஸ்ரேலின் ஆட்டம் ஓயாது.  

ச‌ரியா சொன்னீங்க‌ள்...............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இணையவன் said:

காஸா மீது மேற்கொண்ட தாக்குதல்க்கள் மூலம் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

எல்லாம் ஒருவித நாடகம்.

மேற்குலகின் நாடகங்கள் தெரியாதவன் வாயில் என்றுமே மண்.😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ் தலைவருக்கு எதிராக பிடியாணை - ஐசிசியின் வழக்குரைஞர் வேண்டுகோள்

Published By: RAJEEBAN   21 MAY, 2024 | 06:16 AM

image
 

2023 ஒக்டோபர் ஏழாம்; திகதிக்கு பின்னர் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக இஸ்ரேலிய பிரதமருக்கும் ஹமாஸ் தலைவருக்கும் எதிராக பிடியாணையை பிறப்பிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிஎன்என்னிற்கு வழங்கிய பேட்டியில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் கரிம்கான் இதனை தெரிவித்துள்ளார்.

பெஞ்சமின் நெட்டன்யாகு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட், ஹமாசின் தலைவர்கள் யஹ்யா சின்வர், முகமட் டெய்வ், இஸ்மாயில் ஹனியா ஆகியவர்களிற்கு எதிராக பிடியாணையை பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவிற்கு ஆதரவான அரசியல்வாதியொருவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல்முறை இலக்கு வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் உக்ரைன் யுத்தத்திற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்றவர்களின் பட்டியலில் பெஞ்சமின்நெட்டன்யாகு இணைந்துகொண்டுள்ளார்.

இந்த பிடியாணை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஆராயவுள்ளனர்.

https://www.virakesari.lk/article/184071

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல், ஹமாஸ் தலைவர்களிற்கு எதிராக பிடியாணை - வரவேற்கின்றது பிரான்ஸ்

Published By: RAJEEBAN   21 MAY, 2024 | 10:20 AM

image
 

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹமாஸ் தலைவர்களிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கவேண்டும் என ஐசிசியின் வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளதை பிரான்ஸ் வரவேற்றுள்ளது.

ஐசிசியின் வழக்குரைஞர் தனது வேண்டுகோளிற்கு ஆதரவாக சமர்ப்பிக்கும்  ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர் விசாரணைக்கு முந்தைய நீதிமன்றம் இஸ்ரேல் தொடர்பில் தனது முடிவை எடுக்கலாம் என பிரான்சின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் சுதந்திரம் தண்டனையிலிருந்து விலக்களித்தல் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை பிரான்ஸ் ஆதரிக்கின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பல மாதங்களாக சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இறுக்கமாக பின்பற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரான்ஸ், காசா பள்ளத்தாக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதையும் மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வேண்டுகோள் தொடர்பில் மேற்குலகின் ஏனைய நாடுகளின் நிலைப்பாட்டிற்கும்  பிரான்ஸ் நிலைப்பாட்டிற்கும் இடையில் பெரும் வேறுபாடு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/184108

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளுக்கு முன்னர் புட்டினுக்கு ICC பிடியாணை பிறப்பித்தபோது,.ஆகா,..ஓகோ,..அப்பிடிப் போடு,...இப்படிப் போடு என்று பாடிய மேற்கு, பெஞ்சமின் நத்தன்யாகு என்று வந்தவுடன் முகாரி ராகம் பாடுகிறது. 

😁

ஆனாலும் ICC யைப் பலப்படுத்தினால் நல்லது போலத் தோன்றுகிறது. 

  • Haha 1
Link to comment
Share on other sites

பைடன் , இஸ்ரேலால் நடாத்தப்படுவது இனப்படுகொலை இல்லையாம். அதனை அவர் நிராகரிக்கிறாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒன்று, icc சிலவற்றை வெளிப்படுத்துவது இல்லை.

குறிப்பாக, அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் குற்றசாட்டு, பிரதான குற்றச்சாட்டில் பங்கு போன்றவை.

எனவே, இஸ்ரேல் அதிகாரிகளுக்கும் icc என்ன அவர்களை பற்றி வைத்து இருக்கிறது, செய்யும்  என்ற நிச்சயம் அற்ற தன்மை.

அனால், icc  அரசியல் இல்லாமல் இதை நடத்துமா என்று பாரிய கேள்வி இருக்கிறது?


ஆயினும், மேற்கு என்ன செய்யும் என்றதை பிரான்ஸ் சொல்லி இருக்கிறது.

அதாவது, சந்தர்ப்பம் வந்தால், icc இன் பிடிவிறாந்தை மறுக்க இடம் இருக்கிறது என்பதை மறைமுகமாக சொல்லப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, அரசிய தொடங்கிவிட்டது.
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nochchi said:

 அதேவேளை, அமெரிக்க பாதுகாப்பு அரண் இருக்கும்வரை இஸ்ரேலின் ஆட்டம் ஓயாது.  

தவறு 

இஸ்ரேலின் (யூதர்களின்) தயவில் தான் அமெரிக்கா ஏன் உலகமே. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

தவறு 

இஸ்ரேலின் (யூதர்களின்) தயவில் தான் அமெரிக்கா ஏன் உலகமே. 

தங்களின் கூற்றுப்படி இஸ்ரேலின் (யூதர்களின்) தயவில் தான் அமெரிக்கா ஏன் உலகமேயென்றால் ஏன் துணிந்து பலஸ்தீனத்தை ஒருதேசமாக ஏற்றுச் சிங்கப்பூர்-மலேசியா போன்றோ அல்லது செக்-சிலவாக்கியா போன்றோ ஏன் வாழமுடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

தங்களின் கூற்றுப்படி இஸ்ரேலின் (யூதர்களின்) தயவில் தான் அமெரிக்கா ஏன் உலகமேயென்றால் ஏன் துணிந்து பலஸ்தீனத்தை ஒருதேசமாக ஏற்றுச் சிங்கப்பூர்-மலேசியா போன்றோ அல்லது செக்-சிலவாக்கியா போன்றோ ஏன் வாழமுடியவில்லை. 

மண்ணாசை தான் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

மண்ணாசை தான் ....

உலகப்பரப்பிலே மண்ணாசை கரணியமாகப் போரும் ஆக்கிமிப்பும் உயிர் உடமை அழிவுகளும் பெரும் பொருண்மிய நெருக்கடியுமாகச் சீனா-இந்தியா, இந்தியா-காஸ்மீர்-பாக்கிஸ்தான், ரஸ்யா-உக்ரேன், ஈராக்,துருக்கி,சிரியா-குர்திஸ்தான்,கதலோனியா-ஸ்பெயின்,பிரித்தானியா-வட-அயர்லாந்து, இஸ்ரவேல்-பலஸ்தீனம் மற்றும் சிறிலங்கா-தமிழீழம்.... எனச் சீரழிவும் பேரழிவும் தொடர்கிறது. ஏன் இந்த உலகு அமைதியைக்காண விரும்பாது வெற்று வீம்புப் போர்களை நடாத்தி எலும்புக்கூட்டு மேடுகளை உருவாக்குகின்றன. 

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nochchi said:

உலகப்பரப்பிலே மண்ணாசை கரணியமாகப் போரும் ஆக்கிமிப்பும் உயிர் உடமை அழிவுகளும் பெரும் பொருண்மிய நெருக்கடியுமாகச் சீனா-இந்தியா, இந்தியா-காஸ்மீர்-பாக்கிஸ்தான், ரஸ்யா-உக்ரேன், ஈராக்,துருக்கி,சிரியா-குர்திஸ்தான்,கதலோனியா-ஸ்பெயின்,பிரித்தானியா-வட-அயர்லாந்து, இஸ்ரவேல்-பலஸ்தீனம் மற்றும் சிறிலங்கா-தமிழீழம்.... எனச் சீரழிவும் பேரழிவும் தொடர்கிறது. ஏன் இந்த உலகு அமைதியைக்காண விரும்பாது வெற்று வீம்புப் போர்களை நடாத்தி எலும்புக்கூட்டு மேடுகளை உருவாக்குகின்றன. 

நன்றி!

மண்ணாசை இல்லை. எல்லாம் அரசியல் பயம் மற்றும் பலம் மட்டுமே.

 

42 minutes ago, விசுகு said:

மண்ணாசை தான் ....

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊடகத்துறை சார்ந்தவர்கள் அனேகமாக உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் பணிகளைச் செய்யும்போது, அந்த உண்மைகளின் சூட்டினால் அவர்களே தாக்கப்பட்டு அவதிப்படுவதைக் காண்கின்றோம். இதில் சாதாரண மக்களை விடவும் அதிகாரம் உள்ளவர்களால் தாக்கப்படும் போது உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடுவதையும் கண்டுள்ளோம். இங்கே துமிலன் அவர்களின் அறிக்கையால் உண்மைஅறிந்த காவல்துறை மன்னிப்புக் கேட்டாலும், இது தனக்கு நேர்ந்த ஒரு அவமானமாக, இழிவாக அந்தத்  துறையின் அதிகாரவர்க்கம் அதனை எண்ணவைத்து, துமிலன் தொடரப்போகும்  செய்திகளில் சிறு தவறு கண்டாலும் அதனை ஊதிப் பெருப்பித்து தனது சூட்டைத் தணிக்க முற்படலாம். ஆகவே துமிலன் தனது தொடரப்போகும் பணியை, மிகவும் அவதானமாகவும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகிறேன்.🙌  
    • ரஸ்யாவின் மற்றும் யூகோசிலாவியாவின் உடைவு(உடைப்பு) என ஒரு தொடர் செயற்பாட்டு நிரலுள் நடைபெறும் பூகோள மற்றும் கனியவளச் சுரண்டலாதிக்கக் கொள்கைகளே போருக்கான முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றமை யாவரும் அறிந்த ஒன்று. மிகையில் கோபர்சேவின் நடவடிக்கையால் உதிர்ந்த சோவியத் ஒன்றியமும் இணைந்த யேர்மனியும் புதின் போன்ற கடும் போக்குத் தலைமைகளால் சாத்தியமாகியிருக்காது அல்லது பழைய போக்கிலேயே ஒரு பனிப்போர்காலம் போல் தொடர்ந்திருக்கும். ஆனால் உலகம் மாற்றங்களை ஏதோ ஒரு வகையில் சந்தித்தே வருகிறது. அது(போர் அல்லது இராசதந்திரப்போர்) வன்வலு மற்றும் மென்வலு என அழைக்கப்படும் இரு வழிகளூடாகவும் உலகு தொடர் மனித உயிரிழப்பைச் சந்தித்தே வருகிறதென்று கொள்ளலாம். இதற்கு அடிப்படையாக இருப்பது உலகத் தலைவர்களின் நேர்மையீனமே.அவர்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களையோ வாக்குறுதிகளையோ கடைப்பிடித்துச் செல்பவர்களாக இல்லை. அதன் விளைவாகவே போர்கள் தோற்றம் பெறுகின்றன. போர் நாகரீகமற்றது என்று  போதித்தவாறு காசாவின் படுகொலைகளை இந்த உலகு பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகள், போர் நிறுத்தக் கோரல்கள், பயங்கரவாதத்தைத் தடுக்கும் உரிமை என்ற சொல்லாடல்கள் வழியாகப் போரைத் தொடர்கிறது. இதனையே முழு உலகிலும் தமது தேவைக்கேற்ப செய்கிறார்கள். ஆனால், ஒரு வல்லரசான ரஸ்யா ஏன் நேட்டோவைக் கண்டு அஞ்சுகிறது. அது தனது எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருக்கலாமே. இவளவு மனிதவள, பொருண்மிய இழப்புகள் தேவையா? தோல்வியை ஏற்காதுவிடின் வெற்றியைப் பெறும்வரை போரை நடாத்தி இன்னும் அழிவுகளை விதைத்து எதைக்காணப் போகிறார்கள்? அணுஆயுத வல்லரசு தோல்வியை ஏற்குமா என்பதை இனிவரும் நாட்களே முடிவுசெய்யும். எதற்காகப் புதின் திடீரென நிபந்தனைகளோடு போர்நிறுத்தத்தைக் கோருகிறார்?  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • வாறது தமிழனுக்கு அடுத்த ஆப்பைச் சொருக. அதனால இனி அடிக்க மாட்டாங்கள். 2005 இல இருந்து இண்டைக்கு மட்டும் இலங்கையின்ர உற்ற நண்பன் இந்தியாதானெண்டு சிங்களத்துக்குத் தெரியும். 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.