-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
0
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியாகும் - கல்வி அமைச்சர் Published By: DIGITAL DESK 3 14 SEP, 2024 | 03:50 PM 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படவுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ளது. நீண்ட காலதாமதத்தை எதிர்கொண்ட கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டில் பரீட்சைகள் காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் நடைபெறும் என உறுதியளித்துள்ளார். https://www.virakesari.lk/article/193678
-
By ஏராளன் · பதியப்பட்டது
பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். மதுரை மாவட்டம், பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் பெண்கள் விடுதி ஒன்றில் செப்டம்பர் 12, வியாழன், காலை 4.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியானோர் பிரமிளா சௌத்திரி (50), சரண்யா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட புகையில் மூச்சுத் திணறிய பெண்களை பத்திரமாக மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2022ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் ஏற்பட்ட இதேபோன்ற விபத்து ஒன்றில் சிக்கி இரண்டு பெண்கள் உட்பட மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளிர்சாதனப் பெட்டிகள் உட்பட மின்னணு இயந்திரங்கள் அனைத்துமே முறையாகப் பராமரிக்கப்படுகின்ற போது இத்தகைய விபத்துகள் பெருமளவில் தவிர்க்கப்படலாம். அதற்கு உங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளை எப்படிப் பராமரிப்பது எனத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதுபோன்ற விபத்துகளை தவிர்ப்பது எப்படி? குளிர்சாதனப் பெட்டியை புதிதாக வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன? ஏற்கெனவே பயன்படுத்திய ஒரு குளிர்சாதனப் பெட்டியை மற்றொருவர் வாங்கும்போது எதையெல்லாம் செய்ய வேண்டும்? இங்கு விரிவாகக் காண்போம். தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுவது என்ன? கோவை மாவட்டத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக குளிர்சாதனப் பெட்டிகள் தொடர்பான தொழில்நுட்ப பிரச்னைகளைக் கவனித்து வரும் ராஜேஷ், பெரும்பாலான சூழல்களில் முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என்று குறிப்பிடுகிறார். தனியார் நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வரும் அவர், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குளிர்சாதன பெட்டியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். "பொதுவாக நம் வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளை குளிர்சாதனப் பெட்டிகளாக, மின்னணு கருவியாகப் பார்ப்பதில்லை. மேலே துணியைப் போட்டு மூடி வைத்திருப்பது. சரியாக சுத்தம் செய்யாமல் வைத்திருப்பது, அதன் அருகிலேயே பழைய துணிகள், குப்பைகள், அட்டைப் பெட்டிகள் போன்று எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களைப் போட்டு வைத்திருப்பது போன்றவற்றை நாம் பார்த்திருப்போம். முதலில் இவற்றைத் தவிர்க்க வேண்டும்," என்கிறார் ராஜேஷ். "திடீரென மின் இணைப்பில் ஒரு பிரச்னை ஏற்பட்டு 'ஷார்ட் சர்க்யூட்' ஆகும் பட்சத்தில் வயரில் இருந்து தீப்பற்றிக் கொள்வது இத்தகைய பொருட்கள்தான். ஆனால் பொதுமக்கள், குளிர்சாதனப் பெட்டிதான் வெடித்து விபத்து ஏற்படுத்திவிட்டதாகக் கூறுவார்கள்," என்று மேற்கோள் காட்டினார். செய்யக் கூடாதவை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. மக்களுக்குத் தேவையான அனைத்து செய்திகளும் அவர்கள் கைகளுக்கே வந்துவிடுகிறது. அதனால்தான் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் மின்னணு கருவிகளில் ஏற்படும் பிரச்னைகளை பொதுமக்கள் தாங்களே சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் 'ரிப்பேர்' பணிகளை மேற்கொள்வதாகவும் கூறுகிறார் ராஜேஷ். "யூடியூப் போன்ற தளங்களுக்குச் சென்று அங்கே கிடைக்கும் லட்சக்கணக்கான வீடியோக்களில் ஒன்றைத் தேர்வு செய்து அதில் கூறியிருப்பது போன்றே, உதிரி பாகங்களை வாங்கி வைத்து ரிப்பேர் பார்க்கின்றனர். ஆனால் இவை பாதுகாப்பான முடிவுகளைத் தருவதில்லை," என்கிறார் அவர். மேலும் மின்னணு சாதனங்களைப் பொறுத்தவரை, என்னவெல்லாம் செய்யக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்துகிறார்: சுயமாக குளிர்சாதனப் பெட்டிகளை ரிப்பேர் செய்யும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விலை குறைவாகக் கிடைக்கிறது என்று போலியான உதிரிபாகங்களை வாங்கி அதை குளிர் சாதனப் பெட்டிகளில் பொருத்த வேண்டாம். கம்பிரஷர் அருகே இருக்கும் பகுதிகளில் உள்ள வயர்களின் இணைப்பைத் துண்டித்தல் அல்லது துண்டித்திருக்கும் இணைப்பை இணைத்தல் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். ஸ்டெபிலைசர்களை பொறுத்தவரை ஐ.எஸ்.ஓ தரச்சான்று இல்லாத தயாரிப்புகளை வாங்க வேண்டாம். துணி, அட்டைப் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை குளிர்சாதன பெட்டிகளுக்கு அருகே வைக்க வேண்டாம். என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கம்பிரஷர் அருகே இருக்கும் பகுதிகளில் உள்ள வயர்களின் இணைப்பைத் துண்டித்தல் அல்லது துண்டித்திருக்கும் இணைப்பை இணைத்தல் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் பழுது ஏற்பட்டுவிட்டால் உடனே அதை வாங்கிய ஏஜென்ஸிக்கு அழைப்பு விடுத்து புகாரைப் பதிவு செய்ய வேண்டும் என்கிறார் ராஜேஷ். தொழில்நுட்பப் பிரிவினர் பழுதைச் சரிபார்க்கும் வரை குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறிய ராஜேஷ் ஸ்டெபிலைசர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் வலியுறுத்துகிறார். "கூடுதலாகச் சிறிதளவு தொகை செலவானாலும், தரமான ஸ்டெபிலைசர்களை பயன்படுத்துவதே நல்லது. விலையைக் கருத்தில் கொண்டு சிலர் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் இல்லாமல் மலிவு விலையில் கிடைக்கும் ஸ்டெபிலைசர்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். சில நாட்களில் அது குளிர்சாதன பெட்டிக்குத் தேவையான பாதுகாப்பை வழங்காமல் போகும்போது விபத்தில் வந்து முடிகிறது," என்றும் அவர் விவரித்தார். ராஜேஷின் அறிவுறுத்தல்களின்படி, ஒற்றைக் கதவு கொண்ட குளிர்சாதன பெட்டிக்கு பொதுவாக 500 வாட் இருக்கும் ஸ்டெபிலைசர்களை பயன்படுத்துவது நல்லது இரட்டைக் கதவு கொண்ட குளிர்சாதன பெட்டிகளுக்கு ஒரு கிலோ வாட் வரை உள்ள ஸ்டெபிலைசர்களை பயன்படுத்தலாம் உணவகங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப ஸ்டெபிலைசர்களை தொழில்நுட்பப் பிரிவினரே பரிந்துரை செய்வார்கள் தூய்மையாக வைத்திருங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES விபத்துக்கும் குளிர்சாதனப் பெட்டியின் தூய்மைத்தன்மைக்கும் தொடர்பு இல்லை என்றாலும், அதைத் தூய்மையாக வைத்திருப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறார் ராஜேஷ். அமெரிக்காவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆய்வுச் சேவை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி குளிர்சாதனப் பெட்டியை 40 டிகிரி ஃபாரன்ஹீட்டில் வைத்திருக்க வேண்டும். சமைத்த உணவுப் பொருட்களை நான்கு நாட்கள் வரை மட்டுமே வைத்திருக்க வேண்டும். சமைக்கப்படாத பச்சை இறைச்சியை இரண்டு நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. வெளிப்புறத்தைத் துணி மற்றும் சோப் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கண்டென்சரில் காற்று எந்தத் தடையும் இன்றிச் செல்லும் வகையில் 'ஃபிரண்ட் கிரில்லை' தூசி படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு சில முறையாவது கண்டென்சர் சுருளைச் சுத்தம் செய்வது அவசியம் என்றும் அறிவுறுத்துகிறது அமெரிக்காவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆய்வுச் சேவை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6282pn3v6xo -
By ஏராளன் · பதியப்பட்டது
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்வேட்பாளருக்கு வாக்களிப்போம் - யாழ்பல்கலைக்கழக சமூகம் அறிக்கை Published By: DIGITAL DESK 3 14 SEP, 2024 | 02:46 PM (எம்.நியூட்டன்) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம் என அறைகூவல் விடுத்த யாழ். பல்கலைக்கழக சமூகம், மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என அறிக்கை வெளியீட்டுள்ளது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பேரன்புமிக்க தமிழ் மக்களிற்கு வணக்கம், நூற்றாண்டுகள் கடந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் எங்களின் அரசியல் விடுதலைப் பயணத்தில் தவிர்க்க முடியாதவொரு தேர்தலாக எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் மாறியுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமாக இம்மடலினை எங்கள் பேரன்புமிக்க தமிழ் மக்களை நோக்கி மாணவர்கள் நாங்கள் எழுதுகின்றோம். தமிழ் மக்கள் உதிரிகளாக்கப்படுதலும் கூட்டு மனவலு சிதைக்கப்படுதலும் 2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திப்பதிலிருந்தும், எழுச்சியடைவதிலிருந்தும் எங்களை விலகியிருக்கச் செய்வதில் சிங்கள - பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்திருக்கின்றது. சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளையும் உதிரிகளாக்கி, எங்களின் கூட்டு மனவலுவைத் தகர்த்தெறிந்து உளவியல் ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனோநிலையினை எங்கள் மக்களிடையே விதைப்பதனை சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனகச்சிதமாகச் செய்து முடித்துள்ளன. தமிழ் மக்களினது அரசியற் பலத்தினையும் எழுச்சியினையும் இல்லாதொழிப்பதற்காகச் சாணக்கியம், ராஜதந்திரம் என்று பெயரிட்டு தமிழ்த் தரப்புகளால் முன்னெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலை அரசியல் பயன்படுத்தப்பட்டது. அதன் விளைவே கடந்த 2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் தமிழ் இனப்படுகொலை பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் (Genocide) குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கு வாக்களித்தோம். பரிகார நீதியைக் கோர வேண்டிய நாம், எமது அரசியற் தலைமைகளினால் கண்மூடித்தனமாக வழிநடத்தப்பட்டோம். எம்மைச் சூழும் பொருளாதார நல்லிணக்க மாயைகள்! சிறிலங்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையைக் காரணங்காட்டி கவர்ச்சிகர வாக்குறுதிகளை முன்வைத்து வரும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்கள் நாட்டின் இந்நிலைக்குத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும், வலிந்து திணிக்கப்பட்ட போருமே அடிப்படைக் காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. அடிப்படையில் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அரசியல் உறுதித் தன்மை அவசியமாக உள்ள நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகளை நிறுத்தும் சித்தம் ஏதுமின்றி, தமிழ் மக்களின் உரிமைக்கான குரல்களை இனிப்புத் தடவிய வார்த்தை ஜாலங்களினால் அறுத்தெறியும் பணிகளிலேயே நாட்டமும் மும்முரமும் காட்டுகின்றனர். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அல்லது பௌத்தத்திற்கு முதன்மை வழங்கும் அதன் கட்டமைப்பையோ இவர்கள் எவரும் கேள்விக்குள்ளாக்காமல் நல்லிணக்கம் பேசுவதென்பது அற்ப வாக்குகளிற்காகவேயன்றி வேறெதற்காக? தமிழர் தேசமாய்த் திரள்வோம்! தொடர்ந்தும் தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கேற்ற பலமானதொரு திரளாக அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியாகத் தமிழ் மக்கள் நாங்கள் எழ முடியாது உதிரிகளாக்கப்பட்டு, கூட்டு மனவலு சிதைக்கப்பட்டுள்ளது. இக்கையறு நிலையாவது கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து, சுதாகரித்து முன்னகர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற ஒற்றையாட்சி, அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் தமிழரின் அரசியலை சுருக்கியது என்பது சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்பதோடு, தமிழ் மக்களிற்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளவல்ல திடசித்தமுள்ள தலைவர் ஒருவரையேனும் சிங்கள மக்கள் மத்தியில் காண முடியவில்லை என்பதும் நோக்கத்தக்கது. தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளில் பயணிப்போர்கள் அனைவரும் தமிழினத்தின் விடுதலைக்கு, மேன்மைக்கு உழைப்பவர்கள் என்று நம்பி ஏமாந்த எங்களுக்கு, புலித்தோல் போர்த்திய நரிகளின் ஊளையிடுதல்களையும் கூச்சல்களையும் உதறித்தள்ளி, தமிழர் தேசமாக, எங்கள் தலைவிதியை நாங்களே மாற்றி எழுதும் பெருவாய்ப்பு இனப்படுகொலை நிகழ்ந்து 15 ஆண்டுகளின் பின் கனிந்துள்ளது. தமிழரை அணிதிரட்டி வெல்லட்டும் தமிழ்ப் பொதுவேட்பாளர் ! தமிழ் மக்களைத் தேசமாய் அணி திரட்டுவதற்கும், பன்னாட்டுச் சமூகங்களிற்கு விடுதலைக்கான எங்களின் கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தினையும் வெளிப்படுத்துவதற்கும் எங்களிற்குள்ள ஒரேயொரு வாய்ப்பாகத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எண்ணக்கருவினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இது ஒரு காத்திரமான வழிமுறை. இது எமது வரலாற்றுக் கடமை. தமிழ்ப் பொதுவேட்பாளர் சிறிலங்காவின் அரச தலைவர் இருக்கையை வெல்லப் போகின்றவரல்ல ; மாறாக தமிழ் மக்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றவர். இனியாவது ஏமாற்றும் கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்று சேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களைத் தமிழ் மக்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். தவறுவோமேயானால் நாங்கள் அரசியல் பிழைத்த மக்களாக்கப்படுவோம். நாங்கள் மாறி மாறி சிங்கள ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க வழிநடத்தப்பட்டோம். இதனால் தமிழ் மக்களின் நிலை, அரசியல், சமூக ரீதியில் பரிதாபகரமாய்ப் போனதேயன்றி வேறேதும் நிகழவில்லை. உரிமைகளுற்கான தமிழரின் அரசியல் இன்று சலுகைகளுக்காகத் துவண்டு போயுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு.பா.அரியநேத்திரன் அவர்களுக்கு, அவரின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம். மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் - என்றுள்ளது. https://www.virakesari.lk/article/193674 -
By ஏராளன் · பதியப்பட்டது
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யாலா தேசிய பூங்காவில் பட்டாம்பூச்சிகளை கடத்த முயன்றதாக தந்தை-மகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் திறந்தவெளிப் பூங்கா ஒன்றில், உள்நாட்டில் மட்டுமே காணப்படும் 92 வகையான பட்டாம்பூச்சிகள் உட்பட நூற்றுக்கணக்கான பூச்சியினங்களைக் கடத்த முயன்றதாக, இத்தாலியை சேர்ந்த தந்தை-மகனுக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 60 மில்லியன் ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒரு கோடியே 67 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பூச்சிகளுடன் கூடிய ஜாடிகளை அவர்கள் வைத்திருந்ததைக் கண்டறிந்ததையடுத்து, லூயிஜி ஃபராரி (68), அவருடைய மகன் மட்டியா ஆகிய இருவரையும் கடந்த மே மாதம் 8ஆம் தேதி யாலா தேசிய பூங்காவின் பாதுகாவலர்கள் கைது செய்தனர். அவர்கள் இருவரும் பூச்சிகளைக் கவர்வதற்கான பொருட்களைப் பயன்படுத்தி அவற்றைப் பிடித்ததாகவும், மெழுகு பூசப்பட்ட பாக்கெட்டுகளை பயன்படுத்தி பூச்சிகளைப் பதப்படுத்த முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சட்ட விரோதமாக பூச்சிகளைப் பிடித்து, கடத்த முயன்றதாக, செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருவர் மீதான குற்றமும் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுயிர் தொடர்பான குற்றங்களில் மிகப்பெரும் அபராதம் இருவருக்கும் விதிக்கப்பட்டது. எப்படி சிக்கினார்கள்? பூங்காவின் பாதுகாவலர்களுள் ஒருவரான கே சுஜீவா நிஷாந்தா பிபிசி சிங்களா சேவையிடம் கூறுகையில், அன்றைய தினம் பூங்கா சாலையில் “சந்தேகத்திற்கிடமான கார்” ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக பூங்கா ஜீப் ஓட்டுநர் ஒருவர் பாதுகாவலர்களிடம் தெரிவித்ததாகக் கூறினார். அந்த காரில் இருந்த இருவரும் பூச்சிகளைப் பிடிக்கும் வலைகளுடன் வனத்திற்குள் நுழைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அந்த கார் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த பாதுகாவலர்கள், காரின் பின்பக்கத்தில் பூச்சிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான ஜாடிகளை கண்டுபிடித்தனர். “நாங்கள் அதைக் கண்டறிந்தபோது அனைத்து பூச்சிகளும் இறந்திருந்தன. அந்த பாட்டில்களில் அவர்கள் ரசாயனத்தை செலுத்தியுள்ளனர். அதில், முந்நூறுக்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் இருந்தன,” என நிஷாந்தா தெரிவித்தார். இருவர் மீதும் 810 குற்றச்சாட்டுகள் ஆரம்பத்தில் பதியப்பட்டன. ஆனால், பின்னர் 304 குற்றச்சாட்டுகளாகக் குறைக்கப்பட்டன. இந்த அபராதத் தொகையை செப்டம்பர் 24க்குள் செலுத்தாவிட்டால் இருவரும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். 'சிறந்த முன்னுதாரணம்' அந்த நேரத்தில் இருவரும் இலங்கையில் விடுமுறையைக் கழிக்கச் சென்றதாகவும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் இலங்கையில் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலி நாட்டு செய்திகள் கூறுகின்றன. இலங்கையின் தென்-கிழக்கு பகுதியில் அமைந்துள்ள யாலா தேசிய பூங்கா, அந்நாட்டின் பிரபலமான காட்டுயிர் பூங்காவாக உள்ளது. இங்கு அதிகளவிலான சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள் மற்றும் பிற விலங்குகளும் உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யாலா தேசிய பூங்கா இலங்கையின் பிரபலமான காட்டுயிர் பூங்காவாக உள்ளது (கோப்புப்படம்) எலும்பியல் நிபுணரான லூயிஜி ஃபராரி கால் மற்றும் கணுக்கால் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்றும் அவருடைய நண்பர்களால் பூச்சியின ஆர்வலர் என்றும் அழைக்கப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள மோடெனா நகரத்தில் உள்ள பூச்சியியல் சங்கத்திலும் அவர் உறுப்பினராக உள்ளார். இத்தாலியில் உள்ள அவருடைய நண்பர்கள் மற்றும் சகாக்கள், அபராதத் தொகையைக் குறைக்குமாறு கோரியுள்ளனர். அவர் பிடித்த பட்டாம்பூச்சிகளுக்கு எந்தவித வணிக மதிப்பும் இல்லை என இத்தாலிய தினசரி செய்தித்தாளான கோரியெர் டெல்லா சேரா ( daily Corriere della Sera) கூறுவதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழல் சட்டத்தில் நிபுணரான டாக்டர் ஜெகத் குணவர்த்தனா பிபிசி சிங்கள சேவையிடம் கூறுகையில், இந்த அபராதத் தொகை, குற்றவாளிகளுக்கு எச்சரிக்கையாகவும் சிறந்த முன்னுதாரணமாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqxjx7e4qxpo -
ஆமா.... இவர்கள் சுட்டிக்காட்டியவர்களுக்கு மக்கள் கடந்த காலத்தில் கேள்வி கேட்காமல் வாக்களித்தார்கள். காரணம், மக்கள் தமது மண்ணை, தேசத்தை நேசிக்கிறார்கள், அதன் பெயரில் போட்டியிட்ட பச்சோந்திகளை, தலைவர்கள் என நம்பி வாக்களித்தார்கள். ஆனால் தமிழரசு, தமிழ்த்தேசியம் எனும் குதிரையில் ஏறி சவாரி செய்தார்கள். இன்றும் அதேபோல் தொடர்ந்து சவாரி செய்யலாமென சுமந்திரன் கனவு காண்கிறார். அன்று, விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு இவர் ஒரு சவால் விட்டார். முடிந்தால், தமிழ் தேசியக்கூட்டமைப்பை விட்டு வெளியேறி இன்னொரு கட்சியில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்றார், விக்கினேஸ்வரன் வென்று காட்டினர். இவர்கள் வாக்குறுதி கொடுத்து யாருக்கு வாக்களிக்கும்படி கேட்டார்களோ, அவர்களுக்கு மக்கள் வாக்களித்து அதிகாரத்தில் அமர்த்தினார்கள். அதிகாரம் பெற்றவர்களும் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை, வாக்கு வாங்கி கொடுத்தவர்களும் சொன்ன வாக்கை பெற்றுக்கொடுக்கவுமில்லை, அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோரவுமில்லை, மக்களிடம் கேட்டு சஜித்துக்கு இவர் உத்தரவாதம் வழங்கவோ அல்லது மக்கள் இவருக்குத் தான் வாக்களிப்போம் என்று சுமந்திரனுக்கு சொல்லவுமில்லை. தமிழரசு கட்சிக்கு வாக்களித்த மக்களோடுசுமந்திரன் உடன்இருந்தாரா? அவர்களின் தேவை என்னவென்று கேட்டாரா? அவர்களுக்காக உழைத்தாரா? அவர்களது இழப்பில் பங்கு கொண்டு தேற்றினாரா? அல்லது விடுதலைக்காக உறவுகளை இழந்தாரா? போரட்ட மண்ணில் வாழ்ந்தாரா? இவர் எங்கோ இருந்து கொண்டு போடும் உத்தரவுகளுக்கு மக்கள் ஏன் அடிபணிய வேண்டும்? தமிழசுக்கட்சியே கேள்விக்குறியாக சேடம் இழுக்குது. இவரை நம்பி அந்தக் கட்சி இனிமேல் இல்லை என்பதை வெகு விரைவில் இவர் உணரும்போது இவரை விட்டு சிங்களம் வெகு தூரம் போய் விடும். மக்களை ஏமாற்றி, தான் சுகம் அனுபவித்ததை இனியும் தொடர முடியாது. இவர் அடித்தொண்டையால் கத்தட்டும், வெருட்டட்டும், சவால் விடட்டும், சபிக்கட்டும், ஏதும் ஆகப்போவதில்லை. யாரும் இவரை கேட்கவோ, தடுக்கவோ போவதில்லை. தமிழ்த்தேசியத்தை உடைத்தார், தமிழரசுக்கட்சியை இரண்டாக்கினார், இதற்காகவே களமிறக்கப்பட்டவர் இவர். அது கைகூடாமலேயே இவரது அரசியல் அஸ்தமனமாகப்போகிறது, இருந்த இடமும் தெரியாமல் போகப்போகிறார். தமிழ்த்தேசியம், தமிழரசு என்று இருந்ததனாலேயே இவருக்கு அரசியல் செய்ய ஒரு களம், காலம் கிடைத்தது. அதை இல்லாமல் செய்வதோடு அவரது அரசியலும் மறைந்து விடும். முன்பு யாரோ களத்தில் ஆரூடம் சொன்னார்கள்; சுமந்திரன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட்டால், வெற்றி பெறுவார் என்று. முடிந்தால் வெற்றி பெற்றுக்காட்டட்டும். இல்லையென்றால் இனி வருங்காலத்தில் டக்கிலசோடு கூட்டுசேரலாம். அவரும், வரும் தேர்தலோடு அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்திருந்தார். இவரது அறிவிப்பும் முன்பொரு தடவை வெளியாகியது. இருவரும் சேர்ந்து தொடர, இயங்க பொருத்தமாக இருக்கும்.
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 1 reply
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts