Jump to content

பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!

Vhg அக்டோபர் 02, 2024
1000344843.jpg

யாழ்ப்பாண பகுதியில் வசித்து வந்த 22 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவர் 47 வயதான கனடா தமிழ் குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் தலைமறைவான மாணவியின் தந்தையின் நெருங்கிய நண்பர் என தெரியவருகின்றது.

கனடா செல்வதற்கு முன்னரே வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இருவரும் பாடசாலை நண்பர்களாகவும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர்.

அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து சென்ற சந்தேக நபர் தனது பாடசாலை நணபனான மாணவியின் தந்தையுடன் பல இடங்களுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந் நிலையிலேயே சந்தேக நபர் தனது நண்பனின் மகளுடன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் காணாது தேடி மாணவியின் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதே மாணவி தான் சந்தேக நபருடன் குடும்பம் நடாத்திவருவதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னைத் தேட வேண்டாம் எனவும் தனது தாயாருக்கு கூறியதாகத் தெரியவருகின்றது.

சந்தேக நபரான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் தங்கியிருந்த அக்காவின் வீட்டுக்குச் சென்ற தந்தை அங்கு கலவரத்தில் ஈடுபட்டதுடன் சந்தேக நபரின் பொருட்களை அடித்து உடைத்து அட்டகாசம் செய்ய முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
 

 

https://www.battinatham.com/2024/10/blog-post_2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் நம்பிக்கைத் துரோகி இந்த நபர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறுத்து தொங்க விடணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாலி said:

பெரும் நம்பிக்கைத் துரோகி இந்த நபர்!

இவர் மட்டுமல்ல அந்த நண்பரின் மகளும் தான்   

தன்னுடைய பெற்றோருக்கும்.   

தகப்பனின். நண்பனின்   மனைவிக்கும்.  

நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

அறுத்து தொங்க விடணும். 

நீங்கள் எழுதலாம்  ஆனால் நடைமுறை சாத்தியமற்ற விடயம்  உங்களால் அந்த நபருடைய உடம்பில் கை வைக்க முடியாது 

இந்த பெண்  அதாவது அவரின் நண்பனின் மகள்  

ஒரு. பல்கலைக்கழக மாணவியர்  ...ஒன்றும் பால்குடி. பிள்ளை இல்லை. அந்த பல்கலைக்கழக மாணவி. 

பலாத்காரம் செய்யப்படவில்லை 

அவளுக்கு இந்த நபர்  ஏற்கனவே திருமணம் செய்து  மனைவி பிள்ளைகள் கனடாவில் இருப்பது நன்கு தெரியும்  

அவளது  பூரண விருப்பத்துடன் தான்  இந்த நிகழ்வுகள் நடந்து உள்ளது”  ஆகவே  நீங்கள் அறுக்கும் போது   அந்த பல்கலைக்கழக மாணவி.  உங்களை சும்மா விடப்போவதில்லை 🙏

எங்கள் சமூகத்தில்   சீதனம். சாதி ......போன்ற பிரச்சனையால்   குறிப்பிடதக்க  எண்ணிக்கை பெண்கள் 40 வயது 50வயது   திருமணம் செய்யமுடியவில்லை  

ஏழை குடும்பங்களில். வாழும் பெண்கள்  15. வயதிலேயே  எனக்கு திருமணம் நடக்குமா??   என்று சிந்திக்க தொடங்கி விடுவார்கள்  இதற்கான தீர்வு உங்களிடம் உண்டா ???

குறிப்பு,..நான் இதனை ஆதரிக்கவில்லை     2017. ஆம் ஆண்டு இலங்கையில் நின்ற போது  எனது மைத்துனர் முறையனவரின். மனைவியின் தமக்கை   வயது 45    திருமணம் செய்யவில்லை  வறுமைப்பட்ட குடும்பம்   அவள் சொன்னாளாம். நான் திருமணம் செய்யவில்லை  தங்கச்சிக்கு   திருமணத்தை செய்து வையுங்கள் என்று    🙏

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் செய்திக்கும், முக்கியமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமா? இப்படியான தனிப் பட்ட குடும்ப நிகழ்வுகளையெல்லாம் மெனக்கெட்டு கிசு கிசு பாணியில் செய்தியாக்கி, அதைப் பகிர்ந்து - தொழில் இல்லாமல் சும்மா நிறையப் பேர் இருக்கிறார்கள் போல இருக்கு😂!

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

- தொழில் இல்லாமல் சும்மா நிறையப் பேர் இருக்கிறார்கள் போல இருக்கு😂!

நான் அப்படி நினைக்கவில்லை இதற்கு முன் உங்களை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தாயகத்தில் செய்திக்கும், முக்கியமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமா? இப்படியான தனிப் பட்ட குடும்ப நிகழ்வுகளையெல்லாம் மெனக்கெட்டு கிசு கிசு பாணியில் செய்தியாக்கி, அதைப் பகிர்ந்து - தொழில் இல்லாமல் சும்மா நிறையப் பேர் இருக்கிறார்கள் போல இருக்கு😂!

செய்தியை,..இணைப்பை அகற்றி விடுங்கள்    பிரச்சனை இல்லை  

கவலையும் இல்லை 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

செய்தியை,..இணைப்பை அகற்றி விடுங்கள்    பிரச்சனை இல்லை  

கவலையும் இல்லை 🙏

நாங்க தப்பி வந்து விட்டோமா ஜஸ்ரின் சொல்வது போல் இந்த திரியை நிர்வாகம் நீக்கி விடுங்க புலம் பெயருக்கு தேவை அற்ற செய்தியா இது ? 😃

******

12 hours ago, Justin said:

தாயகத்தில் செய்திக்கும், முக்கியமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமா? இப்படியான தனிப் பட்ட குடும்ப நிகழ்வுகளையெல்லாம் மெனக்கெட்டு கிசு கிசு பாணியில் செய்தியாக்கி, அதைப் பகிர்ந்து - தொழில் இல்லாமல் சும்மா நிறையப் பேர் இருக்கிறார்கள் போல இருக்கு😂!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் யாரோடு ஓடிப்போனது என்பதெல்லாம் ஒரு செய்தி? 

🤮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகளை செய்தியாக்குவது, அந்தக் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கு இழுத்து தலைகுனிய வைப்பது எந்த வகையில் ஊடக தர்மம் ஆகும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோல் சில வாரங்களுக்கு முன் சுவிசை சேர்ந்த 52 வயது ஒரு நபர் ஒருவர் பணம் இழந்ததாக செய்தி வந்ததே.


இது சிரிக்க கூடிய ஒரு விடயமல்ல. சிந்திக்க வேண்டியது. நான் இதை பஸ்ஸிலும், இரயிலிலும் பயணிக்கும் போது இவ்வாறான நிறைய ஜோடிகளை நிறைய காண்கிறேன். இது தமிழர் மத்தியில் குறைவென்றாலும் சிங்களவர் மத்தியில் அதிகம். இது வீட்டில் துணையிடம் கிடைக்காத "ஏதோ" ஒன்று இந்த உறவுவின் மூலம் இவர்களுக்கு கிடைக்கின்றது.  

இதை பற்றி நான் இணயத்தில் தேடியபோது (The Psychology Behind Why Younger Women Prefer Older Men) சுவரஸ்யமான விடையங்களை அறிந்து கொண்டேன். 
முக்கியாமாக 50, 52 அஜித் வய‌தில் இருக்கும் ஆண்களிடம் இருக்கும் நிதானமும், பொறுமையும், முதிர்ச்சியும், நிதி நிர்வாகத்தில் இவர்கள் சுதந்திரமாக இருப்பதுமே இவ்வாறு  இருக்கும் ஆண்களை நோக்கி இந்த இளம் பெண்கள் ஈர்க்கப்பட காரணம்.   

ஆனாலும் ஒரு பெண்குழந்தையின் தகப்பனாக எனக்கு இதை ஏற்ற்றுக்கொள்ள முடிவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

தாயகத்தில் செய்திக்கும், முக்கியமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமா? இப்படியான தனிப் பட்ட குடும்ப நிகழ்வுகளையெல்லாம் மெனக்கெட்டு கிசு கிசு பாணியில் செய்தியாக்கி, அதைப் பகிர்ந்து - தொழில் இல்லாமல் சும்மா நிறையப் பேர் இருக்கிறார்கள் போல இருக்கு😂!

இது ஒரு சமூகச் சீரழிவை வெளிக்கொண்டுவரும் மஞ்சள் பத்திரிகைச் செய்தி. புலம்பெயர் நாடுகளில் இருந்து தாயகத்திற்கு விடுமுறையில் போகும் ஒரு சிலர் தமது பகட்டாலும், பணத்தை வீசிச் செலவழித்தும் இவ்வாறு நடப்பது தொடர் செய்திகளாக வருகின்றது. அடுத்த சம்மர் சீஸனிலும் இன்னும் அதிகரிக்கும்!

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கில், குறிப்பாக uk இல் (uk இப்போதும் பழமைசார் கலாசாரம்), ஆண் - பெண் நண்பர் இல்லாமல் இருப்பது மருத்துவ, வளர்ச்சி குறைபாடாக நோக்கப்படுகிறது.

ஆனால், ஓடிப்போவது (அதற்கான ஆங்கிலம், elope,  eloping) (எம்மைப்போல) இழிவு, இளக்ககரமாகவும், ஓடிப்போவரை மட்டும் அல்லாது, (எம்மை போல) முழுக்குடும்பத்தையும் இளக்ககரமாக தெரிந்தவர்கள், உள்ளூர் சமூகம் பார்க்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகள் வெளியே கொண்டுவரப்படாது என்பவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.😁 

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இப்படியான செய்திகள் வெளியே கொண்டுவரப்படாது என்பவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.😁 

நல்ல செ அடி🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இப்படியான செய்திகள் வெளியே கொண்டுவரப்படாது என்பவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.😁 

 

14 minutes ago, உடையார் said:

நல்ல செ அடி🤣🤣

முக்கியமான செய்திகள் இருக்கும் போது இது தேவையா என்பது தான் என் கேள்வி!

ஆனால், நேரடியாக பல இடங்களில் கருத்துக்களுக்கு முகம் கொடுக்காமல் ஓடும் "வீர தீரர்கள் " பெருமாளின் தலைமையில் திரண்டிருக்கிறார்கள் போல தெரிகிறதே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

 

முக்கியமான செய்திகள் இருக்கும் போது இது தேவையா என்பது தான் என் கேள்வி!

ஆனால், நேரடியாக பல இடங்களில் கருத்துக்களுக்கு முகம் கொடுக்காமல் ஓடும் "வீர தீரர்கள் " பெருமாளின் தலைமையில் திரண்டிருக்கிறார்கள் போல தெரிகிறதே😂

இள வயது பெண்ணை இந்த புழம் பெயர் கெழுப்பெடுத்த கிழடுகள் தங்கள் பண பலத்தின் வலையில் சிக்க வைத்து, அவர்களின் வாழ்கையே அழித்து நல்ல செயல், இதற்கு ஊடகங்கள் முக்கியம் கெடுத்து விழிப்புணர் செய்வது மிகவும் தவறு என்று செல்ல வருகின்றீர்களா Justin

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

 

முக்கியமான செய்திகள் இருக்கும் போது இது தேவையா என்பது தான் என் கேள்வி!

ஆனால், நேரடியாக பல இடங்களில் கருத்துக்களுக்கு முகம் கொடுக்காமல் ஓடும் "வீர தீரர்கள் " பெருமாளின் தலைமையில் திரண்டிருக்கிறார்கள் போல தெரிகிறதே😂

 

2 hours ago, குமாரசாமி said:

இப்படியான செய்திகள் வெளியே கொண்டுவரப்படாது என்பவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.😁 

நீங்கள் தான குசா சொன்ன ஆள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

தாயகத்தில் செய்திக்கும், முக்கியமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமா? இப்படியான தனிப் பட்ட குடும்ப நிகழ்வுகளையெல்லாம் மெனக்கெட்டு கிசு கிசு பாணியில் செய்தியாக்கி, அதைப் பகிர்ந்து - தொழில் இல்லாமல் சும்மா நிறையப் பேர் இருக்கிறார்கள் போல இருக்கு😂!

இப்படிப்பட்டவர்கள் எமது சமுதாயத்தை சீரழிக்கும் போது, உங்களின் கருத்து புல்லரிக்கின்றது அடக்கி வாசியுங்களென்று; 

இப்படி இன்னும் பல புலம் பெயர் பண கெழுப்பெடுத்த கிழடுகள் வருவார்கள், அவர்கள் இளவயதில் இருக்கும் பெண்களை  பணத்தையும்  காட்டி என்னவும் செய்யலாம் ஊடகங்களே அடக்கி வாசியுங்கள் என்று சொல்ல வருகின்றீர்களா,

முக்கியமான செய்திகளும் ஊர்புதினத்தில் இருப்பதும் உங்களுக்கு நன்றாக தெரியமென நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பகிடி said:

தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகளை செய்தியாக்குவது, அந்தக் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கு இழுத்து தலைகுனிய வைப்பது எந்த வகையில் ஊடக தர்மம் ஆகும்? 

நலிந்த ஒரு இனத்தின் பலவீனங்களை அதே இனத்தின் சுயநலக்கூட்டங்கள் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொண்டு ஆசை காட்டி மோசம் செய்வது உங்களுக்கு குடும்ப வரலாறா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இப்படிப்பட்டவர்கள் எமது சமுதாயத்தை சீரழிக்கும் போது, உங்களின் கருத்து புல்லரிக்கின்றது அடக்கி வாசியுங்களென்று; 

இப்படி இன்னும் பல புலம் பெயர் பண கெழுப்பெடுத்த கிழடுகள் வருவார்கள், அவர்கள் இளவயதில் இருக்கும் பெண்களை  பணத்தையும்  காட்டி என்னவும் செய்யலாம் ஊடகங்களே அடக்கி வாசியுங்கள் என்று சொல்ல வருகின்றீர்களா,

முக்கியமான செய்திகளும் ஊர்புதினத்தில் இருப்பதும் உங்களுக்கு நன்றாக தெரியமென நினைக்கின்றேன்

நிச்சயமாக இது தனி மனித ஒழுக்கப் பிரச்சினை தான், அதுவும் குடும்பப் பிரச்சினை.  பொதுவெளியில் செய்தி போட்டு யாரின் ஒழுக்கத்தையும் நெறிப்படுத்தலாம் என்று எனக்கு நம்பிக்கையில்லை, நீங்கள் நம்பினால் பாதகமில்லை,  ஆனால், இந்த ஒழுக்கக் காவலர்களாக கருத்து வைக்கிற ஆட்களின் ஏனைய கருத்துக்கள் அப்படி அவர்களைக் காட்டவில்லையே? "உக்ரைனில் எங்கள் ஆண் சிங்கங்கள் புலம்பெயர்ந்து வரும் வழியில் உக்ரைன் வெள்ளையினப் பெண்களை கர்ப்பமாக்கினர்" என்று புளகாங்கிதம் அடைந்தவரும் இங்க இப்ப "ஒழுக்கக் காவலர் சீருடையில்" நிற்கிறார்! நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள், அல்லது மொள்ளக் கடந்து போயிருப்பீர்கள்😂.

 

1 hour ago, உடையார் said:

 

நீங்கள் தான குசா சொன்ன ஆள்? 

ஓம். அவருக்கு அடியெடுத்துக் கொடுத்த பெருமாள் நேற்றிரவு "இதை செய்து விட்டு தப்பி வந்தவரே ஜஸ்ரின் தான்" என்று எழுதி, இப்போது அது அகற்றப் பட்டிருப்பதையும் கண்டேன்.

"சாக்கடை மணக்கிறது என்று முனிசிபாலிரியிடம் முறைப்பாடு செய்வது எவ்வளவு தூரம் உதவும்😂?" என்ற புரிதலால் பெருமாள் எழுதுவதை இப்போது நான் முறையிடுவதில்லை!

ஆனால், "காழ்ப்புணர்வு" என்ற ஒன்றினால், நீங்கள் மூன்று நாலு பேர் இப்படி ஒன்று சேர்ந்து நிற்பீர்கள் (இதற்குள் இன்னும் ஒரு கூச்ச நாச்சமில்லாமல் நிர்வாகம் என்ற badge சோடு திரியும் சில்லறை மனப் பாங்குள்ள ஒருவரும் கூட நிற்பார்😎!) அதற்கு "ஒழுக்கப் போதகம் செய்கிறோம்" என்று பெயின்ற் அடிக்காமல் உள்ளக நேர்மையையாவது பேணுங்கள், வயசு வந்து விட்டதல்லவா?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே உள்ள பலர் இன்னும் கற்காலத்தில் வாழ்வதாகத்  தெரிகிறது. 

உங்கள் குடும்பங்களில் இப்படி ஒரு  சம்பவம் இடம்பெற்றால் அதை செய்தியாக்கி பத்திரிகைகளில் வலம் வர எத்தனைபேர் விரும்புவர்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இது ஒரு சமூகச் சீரழிவை வெளிக்கொண்டுவரும் மஞ்சள் பத்திரிகைச் செய்தி. புலம்பெயர் நாடுகளில் இருந்து தாயகத்திற்கு விடுமுறையில் போகும் ஒரு சிலர் தமது பகட்டாலும், பணத்தை வீசிச் செலவழித்தும் இவ்வாறு நடப்பது தொடர் செய்திகளாக வருகின்றது. அடுத்த சம்மர் சீஸனிலும் இன்னும் அதிகரிக்கும்!

 

அண்ண போறீங்கலா

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவேன்ட‌ தொழிநுட்ப‌த்தை ஜ‌டோம்மை தான்டி போய் தான் இஸ்ரேலில் ஈரான் ஏவிய‌ மிசேல்க‌ள் விழுந்து வெடிச்ச‌து   ஈரான் ம‌ட்டும் தொழிநுட்ப‌த்தில் வ‌ள‌ர‌ வில்லையா......................ஈரானால் அணுகுண்டு செய்யும் திற‌மை அவ‌ர்க‌ளிட‌ம் இருக்கும் போது ஏன் அமெரிக்கா குறுக்க‌ ம‌றுக்க‌ போய் ஈரான் அணுகுண்டு செய்ய‌ கூடாது என்று ம‌ண்டியிடுகின‌ம்.....................................   ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நேர‌டி மோத‌ல் வ‌ந்தால் இஸ்ரேலும் பெருத்த‌ அழிவை ச‌ந்திக்கும்   போன‌ வ‌ருட‌ம் இஸ்ரேல் அர‌சிய‌ல் வாதி சொல்ல‌ வில்லையா அணுகுண்டு வீச‌னும் என்று.....................கோழைக‌ள் தான் அணுகுண்டை கையில் எடுப்பார்க‌ள்😁..................................
    • The Sun/Son shines                                                                                                        -  சுப.சோமசுந்தரம்                  திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றது தொடர்பாக எனது எண்ணவோட்டத்தைப் பதிவு செய்ய விழைவு. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தமட்டில் இது எப்போதோ எதிர்பார்த்த நிகழ்வோ, என்னவோ ! எனவே பெரிய அளவில் எவ்விதச் சலசலப்பும் பொதுவெளியில் நிகழவில்லை எனலாம் - ஏதோ ஒன்றிரண்டு எதிர்க்கட்சியினர் வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தமது வயிற்றெரிச்சலைக் கொட்டியது தவிர. அதுவும் இந்திய அரசியலில் வாரிசு அரசியல் என்பது ஏதோ இதற்கு முன் நிகழாத புதுமை போல.                 திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பொதுவாக வாரிசு அரசியலில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். அது ஒரு முதிர்ச்சியற்ற ஜனநாயகம் என்பதையே பிரதிபலிப்பதாக எண்ணுபவன் நான். அந்த முதிர்ச்சியின்மை அரசியல்வாதிகள் சார்ந்தது என்பதை விட மக்கள் சார்ந்தது என்பதுவே சாலப் பொருத்தம். ஒரு மருத்துவரின் மகனோ மகளோ மருத்துவர் ஆவதில் எனக்கு மாறுபாடு இல்லை. அதே போலவே ஒரு ஆசிரியருக்கும் இன்ன பிற தொழில் முனைவோருக்கும். இவ்வளவு ஏன், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தீவிர அரசியலில் இறங்குவதும் இயற்கையான ஒன்றே. ஆனால் ஒரு தலைமை மருத்துவரின் மகன் அல்லது மகள் மருத்துவரான கையோடு எடுத்த எடுப்பில் தலைமை மருத்துவர் ஆக்கப்படுவது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றோ, அவ்வாறே ஒரு ஆட்சியாளரின் மகன் அல்லது மகள் எத்தனையோ காலம் கொள்கை பிடிப்புடன் அக்கட்சியில் அல்லது ஆட்சியில் பணியாற்றியோரை ஓரங்கட்டி ஆட்சி பீடத்தில் அமர வைக்கப்படுவது ஏற்புடையதன்று. இவை எல்லாம் ஒரு முதிர்ந்த ஜனநாயகத்தில், அரசியல் முதிர்ச்சி பெற்ற மக்கள் சமூகத்தில், கொள்கைப் பிடிப்புடன் முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு கட்சிக்குப் பொருந்தி வருவது. இன்றைய அரசியல் சூழலில் நான் முன்னர் குறிப்பிட்ட பண்பட்ட அரசியல் பொருந்தி வருமா என்பது ஐயப்பாடே !                  திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டினை அநேகமாக அத்துணைத் துறைகளிலும் முன்னேற்றிக் காட்டியது தமிழ் நிலத்திற்கான பேறு. திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் பெருகியதாகவும், மாநிலம் சீர்கேடு அடைந்ததாகவும் மாற்றார் கூக்குரலிடலாம். பூமிதானில் யாங்கணும் துலங்கிய ஊழல் இந்தியத் துணைக்கண்டத்தில் பல்கிப் பெருகியமை உள்ளங்கை நெல்லிக்கனி. இதனால் எல்லாம் ஊழலை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது என்பது ஒரு புறம். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சீரழிந்ததாகச் சொல்வதெல்லாம் முழுப் பொய் அன்றி வேறென்ன ? தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இவ்விருவரையும் சிறந்த வழிகாட்டிகளாக எண்ணும் நான் பெரிய அளவில் திமுக வின் ஆதரவாளன் என்று சொல்வதற்கில்லை. எக்காலத்திலும் அதிமுகவின் ஆதரவாளனாய் இருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை. இருப்பினும் கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார், தளபதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரு வகையில் நன்றிக் கடன் பட்டுள்ளேன். சுமார் ஐம்பத்தைந்து வருடங்களாகத் தேசியக் கட்சி எதுவும் தமிழ் நிலத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்வதைக் கனவிலும் நினைக்க முடியாமல் செய்தார்களே ! தேசியக் கட்சிகள் இங்கு ஆட்சி செய்வதில் அப்படி என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் வந்தால் நான் தேசியம் எனும் நீரோட்டத்தில் கரைய வேண்டி இருக்குமே ! தேசிய நீரோட்டத்தில் நீந்துவது ஏற்படைத்து. கரைவதை எங்ஙனம் ஏற்பது ? நான் ஏன் எனது மொழி, பண்பாட்டு அடையாளங்களை இழந்து இந்தியன் எனும் ஒற்றைத் தன்மையில் நிற்க வேண்டும் ? உலக அரங்கில் பன்மைத்துவம்தானே இந்தியத் திருநாட்டின் தனித்துவமாக இருக்க முடியும் ? 'ஒற்றுமை உன்னதம், ஓர்மை பாசிசம்' என்பதே இந்திய அரசியலமைப்பு நமக்குச் சொல்லித் தருவது; உலகுக்கும் சொல்வது. வேற்றுமையிலேயே ஒற்றுமையை நிலை நாட்டுவதில் திமுகவும் அதிமுகவும் தம் பங்கினை நெடுங்காலம் செவ்வனே நிறைவேற்றின. ஆனால் அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவின் அனைத்து அணியினரும் தங்கள் சுயநலம் சார்ந்து ஒரு பாசிச அரசிடம் தம்மையும் நம்மையும் அடகு வைப்பதிலேயே குறியாய் இருப்பதாய்த் தெரிகிறது. இத்தகைய சூழலில் மதவாத, வகுப்புவாத பாசிசத்திடமிருந்து நம்மைக் காக்க மக்கள் ஆதரவுடன் உள்ள ஒரே கட்சி - நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் - திமுக என்றே தோன்றுகிறது. எனவே திமுக மேலும் உரம் பெற்றுத் திகழ்வது - அச்சங்கிலித் தொடர் தற்போது பாதகமின்றித் தொடர்வது -  தமிழினத்தைப் பொறுத்தமட்டில் காலத்தின் கட்டாயமாகிறது. அதனைத் தொடர திமுகவில் வேறு தலைவர்கள் இல்லையா என்ற கேள்விக்கு, மக்கள் ஆதரவு பெற்றோர் வேறு இல்லை என்று ஆணித்தரமாய்ச் சொல்வதைத் தவிர வேறு வழி, ஒளி தெரியவில்லையே ! தோழமைக் கட்சிகளில் திறமையானோர், நேர்மைத் திறமுடையோர் உண்டு. இடதுசாரிகளில் உண்டு; தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் உண்டு. ஆனால் அவர்களும் பெரும்பான்மை மக்களின் ஆதரவு என்ற ஒற்றைப் புள்ளியில் அடிபட்டுப் போகிறார்களே ! சாதி பேதம் இன்றி அனைத்து சமூகத்தினருக்கான தலைவர் தொல்.திருமா என்றே சொல்லலாம். அவரையெல்லாம் 'வையத் தலைமை கொள்' என்று அழைப்பதற்குத் தமிழ் மக்கள் தம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த நிதர்சனங்களைப் புரிந்து, மற்றுப்பற்று இல்லாத மக்கட் பற்றாளராய் தொல்.திருமாவளவன் மற்றும் இடதுசாரித் தோழர்கள் தமிழ் அரசியலில் வலம் வருவது நமக்கான பேறு.                  திமுக அரசியலில் இன்று முன்னணியில் உள்ள ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி இம்மூன்று கலைஞர் கருணாநிதி குடும்ப வாரிசுகளின் அரசியல் முகங்களும் பண்பட்டதாகவே தோன்றுகின்றன. உதயநிதி ஸ்டாலினிடம் அரசியல் முதிர்ச்சி இல்லை என்று சமீபத்தில் சங்கிகள் ஓலமிட்டது பெரும் நகைப்பானது. அவர் சநாதனம் பற்றிப் பேசியது ஒரு முதிர்ந்த திராவிட அரசியலே ? வெள்ள நிவாரணம் தொடர்பாகப் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு என்ன ஏடிஎம் மெஷினா, கேட்டவுடன் பணம் கொடுக்க ?" என்று தரம் தாழ்ந்து கூறியதற்குப் பதிலடியாக உதயநிதி, "அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் ? தமிழ் மக்கள் கொடுத்த வரிப்பணத்தைத்தானே கேட்கிறோம் ?" என்று கேட்டது கூட ஒரு அனுபவம் பெற்ற அரசியல்வாதியின் பதிலாகவே வெளிப்படுகிறது.             எனவே சூழல்களைக் கருத்தில் கொண்டு மாற்றார்தம் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள, எத்தனை குறை கொண்டிருந்தாலும் இன்றைக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் திராவிட முன்னேற்றக் கழகமே ! நம் நம்பிக்கை வானில் உள்ள ஒளிக்கீற்று உதயநிதி ஸ்டாலின் மட்டுமே ! போகிற வரை போகட்டும்; ஆகிற வரை ஆகட்டும்.              இதனை எழுதி முடித்து மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் எனக்கே நான் ஒரு திமுக காரனாகத் தோன்றுகிறேன். அதற்கு நான் என்ன செய்து தொலைக்க ?               
    • இங்கே உள்ள பலர் இன்னும் கற்காலத்தில் வாழ்வதாகத்  தெரிகிறது.  உங்கள் குடும்பங்களில் இப்படி ஒரு  சம்பவம் இடம்பெற்றால் அதை செய்தியாக்கி பத்திரிகைகளில் வலம் வர எத்தனைபேர் விரும்புவர்? 
    • இப்படியான "திட்ட வட்டமான அறிவிப்பு" எங்கே வெளியிடப் பட்டதாம்? யாராவது இணைப்பைத் தர முடியுமா?
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.