Jump to content

வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும், அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என்பதுடன், பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. மொழி ரீதியான பிரச்சினை அங்கு உள்ளது. அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தாம் விரும்பும் மொழியில் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளது. கொழும்பை மையப்படுத்தியுள்ள சில வசதி, வாய்ப்புகள் வடக்கிற்கு செல்வதில்லை.

யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள போதிலும் கிளிநொச்சி, வவுனியா அல்லது முல்லைத்தீவில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டமான வாழ்கையையே வாழ்கின்றனர். இங்குள்ளவர்கள் கல்வி முதல் அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

இந்த மக்கள் மிகவும் வறுமைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். தெற்கில் இருந்து வடக்கிற்கு செல்லும் பாதை அழகாக உள்ளது. பாதையின் இருபுறங்களிலும் கடைகள் உள்ளன.

ஆனால், பாதையை தாண்டி உள்ளே சென்றால் வீடுகள் இல்லை, மக்கள் வறுமையாகவும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதும் வாழ்கின்றனர். உள்பாதைகள் மிகவும் மோசமான முறையில் புனரமைக்கப்படாது புழுதிகளுடன் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் சிலர் வெளிநாடுகளில் இருப்பதால் ஓரளவு பொருளாதாரம் உள்ளது. ஆனால், வவுனியா அல்லது கிளிநொச்சி சென்றால் அங்கு பொருளாதார இல்லை. முல்லைத்தீவில் வாழும் மீனவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழங்களையும், மரக்கறிகளையும் விற்பனை செய்துக்கொள்ள உரிய சந்தை வாய்ப்புகள் இல்லை. வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.

தெற்கில் இருந்து அங்கு சென்று சுற்றுலாவில் நாம் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், அங்குள்ள மக்களின் வாழ்கை முள்ளின் மேல் உள்ளது.

பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி தேடுவதே அவசியமாக உள்ளது. காணி முரண்பாடுகள் நீண்டகாலமாக உள்ளன. யுத்தக்காலத்தில் தமது காணியை கைவிட்டு வெளியேறி மக்கள் யுத்தம் நிறைவடைந்து சென்ற போது அந்த காணிகளை வேறு நபர்கள் கைப்பற்றி குடியேறியுள்ளனர். அரசாங்கம் தலையீடு செய்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.

பிரச்சினைகள் அவ்வாறுள்ளன. ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காத வடக்கின் தமிழ் அரசியல் தலைவர்கள், தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அதிகாரப்பகிர்வு போன்ற வசனங்களை பயன்படுத்திக்கொண்டனர்.

ஆனால், வடக்கின் அடித்தட்டு மக்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டம் அவசியமில்லை. அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமில்லை. அவர்களுக்கு விசாயத்தை மேற்கொள்ள நீர் வசதிகளும், அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், கல்வியும், நல்ல வைத்தியசாலைகளுமே அவசியமாக உள்ளன.

எமது நாட்டில் ஒருவர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் கொழும்புக்கு கட்டாயம் வரவேண்டிய தேவையுள்ளது. கண் பரிசோதனைகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரவேண்டியுள்ளது. அனைத்தும் கொழும்பை மையப்படுத்தியுள்ளன. இவ்வாறு கொழும்பை மைப்படுத்தியுள்ள அனைத்து விடயங்களும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் செல்லும் போது மக்களின் பிரச்சினைகள் தீரும்.

குறிப்பாக எமது நாட்டில் உற்பத்தி பொருளாதார முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும். அந்தப் பொருளாதாரத்தின் பங்காளிகளாக அனைத்து பிரதேச மக்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதுடன், அந்த பொருளாதாரத்தின் பிரதிபலன்களும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

உற்பத்தி பொருளாதார்ததின் பயன்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் போது நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானவைக்கு தீர்வு கிடைத்துவிடும். அதன் ஊடாக அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.” என்றும் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/310789

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இவர்களது ஒரு சிறிய கூட்டம் எமது பகுதியில் ஒரு வீட்டில் கூடியபோது எனது நண்பரும் கலந்து கொண்டிருந்தார். நீங்கள் வாக்கு கேட்கத் தேவையில்லை!, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினாலே போதும் என தான் கூறியதாகக் கூறினார். அரசியலில் பெரிதாக ஆர்வம் காட்டாத பலர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

போறபோக்கைப் பார்த்தால் தமிழருக்கு ஒரு பிரச்சனையும் இல்லைப் போல தான் இருக்கு!

  • Confused 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

 

போறபோக்கைப் பார்த்தால் தமிழருக்கு ஒரு பிரச்சனையும் இல்லைப் போல தான் இருக்கு!

இங்கேயும் பலர் இதைத்தானே வலியுறுத்துகிறார்கள்.

மிகிந்த போய் மைத்திரி வந்ததே பெரிய சந்தோசம்.

இப்போ அதைவிட இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் என்றால் சந்தோசம் தானே.

எதுவானாலும் மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு.வரவேற்போம்.

மக்கள் பாவம் ரொம்ப களைத்து விட்டார்கள்.

உங்களுக்கும் ஊருக்குள் ஓரளவு செல்வாக்குகள் இருக்கும்.

இனிவரும் தேர்தல்களில் களமிறங்குங்கள்.

தொடர்ந்தும் மக்களுக்கு சேவை செய்யுங்கள் ஏராளன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவே செய்தாச்சு. வடக்கு மட்டும் என்று. யாழ்ப்பாணம் கிளிநொச்சி வவுனியா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கேயும் பலர் இதைத்தானே வலியுறுத்துகிறார்கள்.

மிகிந்த போய் மைத்திரி வந்ததே பெரிய சந்தோசம்.

இப்போ அதைவிட இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் என்றால் சந்தோசம் தானே.

எதுவானாலும் மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு.வரவேற்போம்.

மக்கள் பாவம் ரொம்ப களைத்து விட்டார்கள்.

உங்களுக்கும் ஊருக்குள் ஓரளவு செல்வாக்குகள் இருக்கும்.

இனிவரும் தேர்தல்களில் களமிறங்குங்கள்.

எனக்கு தேர்தலில் நிற்கும் எண்ணம் எப்போதும் இல்லை அண்ணை. நம்மட ஊருக்குள்ளயே என்னை எல்லோருக்கும் தெரியாது!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திலிருக்கும் சில உறவினர்களான இளையோருடன் தொடர்பிருக்கிறது. ஒருவர், தற்போது தேர்வுப் புள்ளிகள் வெளிவந்த பின்னர் பல்கலை அனுமதி கிடைக்காது எனத் தெரிந்த பின்னர் அடுத்த வாழ்வாதார முயற்சிகளில் கவலைகளுக்கு மத்தியிலும் ஈடுபட்டிருக்கிறார். இரவு 11 மணி வரை வேலை செய்து பெறும் ஊதியத்தை, அடுத்த வேலைக்கு நேர்முகம், பரீட்சை என்று செல்லப் பயன்படுத்துகிறார்.

இன்னொருவர், சில வருடங்களாக வங்கியில் வேலை. பொருளாதாரச் சரிவின் போது செலவுகள் சமாளிக்க இயலாத நிலையில், ரியூசனும் கொடுத்து உழைத்து பெற்றோரின் மருத்துவச் செலவு, படிப்புக் கடன் என்பவற்றை அடைத்து வருகிறார். இதனால் திருமணப் பேச்சையும் 2 வருடம் தள்ளிப் போட்டு விட்டு உழைக்கிறார்.

ஓரளவு படித்த, இளவயதினருக்கே இவ்வளவு சுமைகள் இலங்கையில் இருக்கும் போது , ஏனைய தற்காலிக தொழில்கள் செய்யும் குடும்ப காரர்களின் நிலையை ஊகிக்க முடிகிறது. இவர்களிடம் போய் "தமிழ் தேசியத்திற்காக கொஞ்சம் பொறுத்துக் கொள், அதற்கேற்ப வாக்குப் போடு" என்று யாரும் கேட்க முடியுமென நினைக்கவில்லை.

பொருளாதாரம், அடிப்படை வசதிகள் இவை இந்த தேர்தலில் முக்கியமான காரணிகள். இவற்றை தமிழ் அரசியல் தலைமைகள் கவனிக்காமல் இருந்தது பாரிய தவறு, விளைவுகள் இருக்கும். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்   வேதம் ஓதுகின்றது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஏராளன் said:

எனக்கு தேர்தலில் நிற்கும் எண்ணம் எப்போதும் இல்லை அண்ணை. நம்மட ஊருக்குள்ளயே என்னை எல்லோருக்கும் தெரியாது!

உங்கள் தம்பியை இறக்குங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கள் தம்பியை இறக்குங்கள்.

அவர் முதலே உள்ளூராட்சி சபை உறுப்பினராக இருந்தவர் தானே அண்ணை. அப்பவே வீட்டில சொல்லித்தான் விட்டது, தொடர்ந்து இருக்கக் கூடாது, மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேணும்.

தன்னுடைய சம்பளப்பணம் 15000*60 மாதம் முழுவதும் பல்ப் போடவும் 2 இலட்சம் ரூபா பெறுமதியில் கற்றல் செயற்பாடுகளுக்கு கொட்டகை போடவும் பயன்படுத்தினவர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

தாயகத்திலிருக்கும் சில உறவினர்களான இளையோருடன் தொடர்பிருக்கிறது. ஒருவர், தற்போது தேர்வுப் புள்ளிகள் வெளிவந்த பின்னர் பல்கலை அனுமதி கிடைக்காது எனத் தெரிந்த பின்னர் அடுத்த வாழ்வாதார முயற்சிகளில் கவலைகளுக்கு மத்தியிலும் ஈடுபட்டிருக்கிறார். இரவு 11 மணி வரை வேலை செய்து பெறும் ஊதியத்தை, அடுத்த வேலைக்கு நேர்முகம், பரீட்சை என்று செல்லப் பயன்படுத்துகிறார்.

இன்னொருவர், சில வருடங்களாக வங்கியில் வேலை. பொருளாதாரச் சரிவின் போது செலவுகள் சமாளிக்க இயலாத நிலையில், ரியூசனும் கொடுத்து உழைத்து பெற்றோரின் மருத்துவச் செலவு, படிப்புக் கடன் என்பவற்றை அடைத்து வருகிறார். இதனால் திருமணப் பேச்சையும் 2 வருடம் தள்ளிப் போட்டு விட்டு உழைக்கிறார்.

ஓரளவு படித்த, இளவயதினருக்கே இவ்வளவு சுமைகள் இலங்கையில் இருக்கும் போது , ஏனைய தற்காலிக தொழில்கள் செய்யும் குடும்ப காரர்களின் நிலையை ஊகிக்க முடிகிறது. இவர்களிடம் போய் "தமிழ் தேசியத்திற்காக கொஞ்சம் பொறுத்துக் கொள், அதற்கேற்ப வாக்குப் போடு" என்று யாரும் கேட்க முடியுமென நினைக்கவில்லை.

பொருளாதாரம், அடிப்படை வசதிகள் இவை இந்த தேர்தலில் முக்கியமான காரணிகள். இவற்றை தமிழ் அரசியல் தலைமைகள் கவனிக்காமல் இருந்தது பாரிய தவறு, விளைவுகள் இருக்கும். 

இல்லை உண்மையா கேட்கிறேன் மாகாணசபைக்கு சில் அதிகாரங்களை கொடுத்து அதை இயங்க வைத்தால் அதிகாரம் பகிரப்படுமல்லவா....பிறகு ஏன் பயப்படுகிறார்கள்...


மகிந்தா ,விமல் வீரவம்ச போன்றவர்கள் இந்த தேர்தலில் அமைதியாக இருப்பதும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடாமல் இருப்பதும் பொதுதேர்தலின் பின் ஏதாவது அரச கவிழ்ப்புக்கே ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா/அப்படி என்றால் அரகலய போராட்டத்தில் ஏன் தமிழ்மக்கள் பங்குபற்றவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இல்லை உண்மையா கேட்கிறேன் மாகாணசபைக்கு சில் அதிகாரங்களை கொடுத்து அதை இயங்க வைத்தால் அதிகாரம் பகிரப்படுமல்லவா....பிறகு ஏன் பயப்படுகிறார்கள்...


மகிந்தா ,விமல் வீரவம்ச போன்றவர்கள் இந்த தேர்தலில் அமைதியாக இருப்பதும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடாமல் இருப்பதும் பொதுதேர்தலின் பின் ஏதாவது அரச கவிழ்ப்புக்கே ....

பயப்படக் காரணம், இங்கே கொஞ்ச அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால் அதை வைத்து கிடைக்கும் சுதந்திரத்தில் இந்தியாவின் உதவியுடன் மீண்டும் இங்கே ஒரு தமிழ் கிளர்ச்சிக் குழு உருவாகும் என்ற பயம் தான். 

நாம் தமிழர்களாக இருக்கும் அதே நேரம் இந்தியாவுக்கு செம்படிக்காத நல்ல இலங்கையர்களாகவும் இருப்பதை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு உறுதிப் படுத்த வேண்டும். அப்பொழுது பெரும்பான்மை மக்களுக்கு எமக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க விருப்பம் வரலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

அப்படியா/அப்படி என்றால் அரகலய போராட்டத்தில் ஏன் தமிழ்மக்கள் பங்குபற்றவில்லை.

அவர்கள், தாங்கள் தெரிந்தெடுத்து அழகு பாத்த தங்கள்  தலைவனை விரட்ட எடுத்த முயற்சியது. அதில் நமக்கு பங்குமில்லை பாகமுமில்லை. தமிழீழ போராட்டம் நடக்கும்போது அவர்கள் பங்குபற்றவில்லையே. 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.